புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள். அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள். எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.
கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (திருக்குறள் 414) எனத் தெய்வப்புலவர் கேட்டலைச் சிறப்பிக்கின்றார். அப்படியாயின் கல்வியின் ஒரு பகுதியாகிய கேள்வியறிவு இன்னும் இன்றியமையாதது அன்றோ! கேள்வியறிவு தாய்மொழியில் இருந்தால்தான் கல்வி சிறக்கும். இல்லையேல் கருத்தைப் புரிந்து கொள்வதற்குச் செலவிடும் நேரத்தை விட அதை வெளிப்படுத்தும் மொழியைப் புரிந்து கொள்ள மிகு நேரம் வீணாகும். எனவேதான் கல்வி என்பது தாய்மொழி வாயிலாக அமைய வேண்டும் என்றே அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உலக மக்கள் தத்தம் தாய்மொழியில் கற்றுச் சிறந்திடும் வேளையில் தமிழ்நாட்டு மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழ்வழியில் கற்கும் வாய்ப்பு அருகிக் கொண்டே போகும் அவலம் கொடுமையன்றோ!
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதாகத் தமிழ் ஆர்வம் மிக்கக் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு நலன்களுக்கு இணையாக உள்ளாட்சிப்பள்ளிகளையும் அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் என்றல்லவா அமைச்சர் அறிவித்து இருக்க வேண்டும்? மாறாகக் கல்வி வணிகர்கள் வழியில் அரசும் செல்லும் என்பது எவ்வாறு முறையாகும்?
ஆங்கிலவழிக் கல்வியை அரசே தரலாம் என்னும் தலைப்பில் ஒருவர் தினமணியில் (மே10.2013) கட்டுரை எழுதியுள்ளார். “திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து பணியமர்த்தும் இவ்வேளையில், தமிழை வளர்ப்போம் எனக் கூறி தமிழனின் வளர்ச்சிக்குத் தடைபோடும் போலி முகமூடியை அணிதல் கூடாது” என அதில் பிதற்றி உள்ளார். தமிழால்தானே தமிழன் அடையாளம் காணப்படுகின்றான். அவ்வாறிருக்க தமிழை வளர்ப்போம் எனக்கூறித் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை போடுவதாக எங்ஙனம் கூறுகின்றார்? “தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள். அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும். ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்2 இதழ்18): ஆவணி16,1996: 1.9.65], தமிழ் உரிமையே தமிழர் உரிமை என்பதை உணர்த்தி உள்ளாரே!
தமிழை அழிப்பதன் மூலம் அல்லவா தமிழனின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் தடை போடுகின்றனர். கட்டுரையாளரே, “இதனால் தமிழ் தாழ்ந்துவிடாது. ஏனெனில் தமிழும் ஒரு மொழிப் பாடமாக இருக்கத்தான் போகிறது ” என்று முத்து உதிர்த்துள்ளார். தமிழ்வழிக் கல்வியிலும் ஆங்கிலம் மொழிப்பாடமாகத் தானே இருக்கின்றது. அவ்வாறு இருக்க ஆங்கிலத்திற்குத் தடை எங்கே வந்தது? ஆங்கிலவழிக்கல்வியில் பயின்று தமிழைப் படிக்கலாம் என்னும் பொழுது, தமிழ்வழிக்கல்வியில் பயின்று ஆங்கிலம் முதலான பிற மொழிகளைப் படிக்கலாம் என்பதில் என்ன தவறு உள்ளது?
இதற்கு ஓர் அறிவாளி, பின்னூட்டம் என்ற பெயரில், “குடிகாரன் மற்றும் பொறுப்பற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் வேறு வழியின்றி அரசு தமிழ்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள்” எனத் தமிழ்வழி பயிலச் செய்யும் பெற்றோரை இழிவுபடுத்தி உள்ளார். இதனை எப்படி தினமணி வெளியிட்டது என்றும் தெரியவில்லை. “தமிழ் மொழிக்கு எதிரான கட்டுரை தினமணியில் வந்திருப்பது வருத்தமளிக்கிறது” எனப் பாலகிருட்டிணன் என்பவர் பதிந்ததே பெரும்பாலோர் கருத்து.
“நீங்கள் கூறுவது போல் வைத்துக்கொள்வோம். ஆங்கில வழிக் கல்வியில் படித்த மாணவனைக் கேளுங்கள் ‘ உனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? உன் தாய்மொழி நன்றாகத் தெரியுமா? நீ படித்த பாடத்தின் அடிப்படை நன்றாகத் தெரியுமா? அதை எதற்காகப் படிக்கிறாய்? ஏன் படித்தாய்? நன்றாகப் புரியுமா பாடம் நடத்துவது? உன் திறமை எதுவென்று உனக்குத் தெரியுமா?’ என்று கேளுங்கள். அனைத்திற்கும் தெரியாது என்றுதான் பதில் வரும். இசுரேல் நாடு 55 ஆண்டுகளுக்கு முன்னாள்தான் உருவானது. நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல் வேலை அவர்கள் தாய் மொழியில் அறிவியல் மருத்துவம் அனைத்தையும் மொழிபெயர்த்துக் கல்வி முறையை அவர்கள் தாய் மொழியில் கொடுத்தார்கள் அதனால்தான் கடந்த 50 வருடங்களுள் அவர்கள் நாட்டில் நோபெல் பரிசு அறிவியலில் பெற்றவர்கள் மட்டும் 10 பேர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நம்மால் அவர்களுக்கு இணையாக வளர முடியவில்லை. காரணம், ஆங்கிலக் கல்வி முறை. பிறமொழியில் உள்ள அறிவியல் களஞ்சியங்களை நம் மொழியில் பெயர்த்துக் கொண்டுவரவேண்டும். அதுவே பாரதியின் கனவு. ஆங்கில மொழி தேவைதான் ஆனால் ஆங்கிலத்தில்தான் அறிவு என்பது அறிவீனம்” என இதற்குத் திருச்செந்தூர் விவேக் தமிழ்க்குமரன், சரியான மறுமொழி அளித்துள்ளார். சமச்சீர் கல்வியை ஒருபுறம் நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலவழிக் கல்வியைத் திணிப்பது முறையற்ற செயல்மட்டுமல்ல அறமற்ற செயலுமாகும்.
தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதால் மாணாக்கர் களிடையே பிளவு எண்ணத்தையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கித் தன்னம்பிக்கையற்ற தலைமுறைகளை உருவாக்கப் போவதை அரசு ஏன் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.
இதனை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அமைதிகாக்கின்றன. சட்டப்படி எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் மிகுதியான வாக்குகள் அடிப்படையில் தி.மு.க. தான் செல்வாக்கான எதிர்க்கட்சியாகும். ஆனால், அதன் தலைவருக்கே தமிழ்வழிக்கல்வியில் நாட்டமில்லாததால் அக்கட்சி இதனை எதிர்க்கவில்லை. தமிழ்வழிக்கல்வியில் நாட்டமிருந்தால் கல்லூரியில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இதற்கு வாழ்நாளெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்த மருத்துவர் ஏ.எல்.இலக்குமணசாமியை ஓராள் குழுவாக அமர்த்தி அதற்குத் தடை விதித்திருப்பாரா? தமிழ்ச்சான்றோர்களின் பட்டினிப் போரை நிறுத்துவற்கு அளித்த அறிக்கையில்கூட, ஆங்கில வழிக்கல்வி வணிகர்களின் வாதுரைஞர்போல்தான் கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த சமச்சீர்க்கல்வி அறிக்கையில் தமிழ்வழிக்கல்வி வலியுறுத்தப் பட்டிருப்பினும் அதனை ஒதுக்கி வைத்திருப்பாரா?
ஆட்சியில் இரு்ந்த பொழுது சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்க வித்திட்டிருப்பாரா? பல கோடி உரூபாய்ச் செலவில் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் சில கோடி உரூபாய் ஒதுக்கித் தரமான தமிழ்வழிக்கல்விக்கு வழி அமைத்திரு்க்க மாட்டாரா? எனவே, பிற எதிர்க்கட்சிகளும் தமிழ் நல அமைப்புகளும் அரசிடம் ஆங்கில வழிக்கல்விக்கு முற்றுப்புள்ளி இட நெருக்கடி அளிக்க வேண்டும். இருக்கின்ற ஆங்கிலவழிப்பள்ளிகள் அனைத்தும் படிப்படியாகத் தமிழ் வழிப்பள்ளிகளாக மாற நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
“நம் தமிழ் வழிக் கல்விக்கான உரிமைப்போர் முதலில் தமிழக அரசிற்கு எதிராகத்தான் அமைய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே தமிழின எழுச்சிக்கு அடிப்படையாகும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். . . . . ‘தமிழ்வழியாகப் படித்தலே தலைவர்களை உருவாக்கும். உயர்கல்வி ஓங்கிட ஒண்டமிழ் வழியே கற்போம்’ என்பனவே நம் குறிக்கோளாகும். இதனை வலியுறுத்தியே நம் அறப்போர் இருக்க வேண்டும்” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [ குறள்நெறி (மலர்2 இதழ்8): சித்திரை 19,1996: 1.05.1965] அன்று கூறி்யது இன்றைக்கும் தேவையானதாகக் கல்விநிலை இழிவாகவே உள்ளது.
“வேற்று நாட்டார் ஆட்சியினால் உண்டான பல தீமைகளுள் மிகக் கொடியது இந்திய இளைஞர்கள்மீது அழிவைக் கொடுக்கும் அயல்மொழியைப் பாடமொழியாகச் சுமத்தியதே என வரலாறு கூறும். அது நாட்டின் ஆற்றலை உறிஞ்சி விட்டது. மாணவர்களின் வாணாளைக் குறைத்து விட்டது. அவர்களை நாட்டு மக்களினின்றும் வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விட்டது. அதனால் கல்வி வீணான செலவு மிகுந்த ஒன்றாகிவிட்டது. இது தொடர்ந்து நீடிக்குமேயானால் நமது நாட்டின் ஆன்மாவையே கொள்ளை கொண்டு போய்விடும். அயல் பாட மொழியின் மயக்கத்திலிருந்து கல்வி கற்ற இந்தியர்கள் எவ்வளவு விரைவில் விடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கட்கும் மக்கட்கும் நல்லதாகும்” என அண்ணல் காந்தியடிகள்(Young India 5.7.1929) கூறியதை அவரைப் போற்றுவோர் மறப்பது ஏன்?
தாய்மொழிவழிக்கல்விக்கு எதிரான போக்கிற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சிதானா என்றால் அதுதான் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி செய்த பொழுது, மேற்கத்திய முறைகளைப் புகுத்துவதற்காகவும் சமயப் பரப்புரைக்காகவும் அலுவல் தொடர்பிற்காகவும் ஆங்கிலத்தைக் கற்பித்தனர். இருப்பினும் அவர்கள், தாய்மொழிவழிக்கல்வியையே ஊக்கப்படுத்தினர். மார்ச்சு 4, 1835 இல்பிரித்தானிய இந்தியாவின்அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆனது. எண்ணத்திலும் செயலிலும் இந்தியர்கள் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்ற மெக்காலே, ஆங்கிலக்கல்விக்குக் கால்கோள் இட்டாலும் மேல்தட்டு மக்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற்று அதனைத் தத்தம் தாய்மொழிவாயிலாக மக்களுக்கு அளிக்க வேண்டும் எனத் தாய்மொழிவழிக்கல்விக்குச் சார்பாகவே வலியுறுத்தி உள்ளார். ஆங்கிலேய ஆட்சியில் அமர்த்தப்பட்ட கல்விக் குழுக்கள் அல்லது ஆணையங்கள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியையே வலியுறுத்தியுள்ளன. அங்ஙனமே ஆங்கிலேய அரசும் நடவடிக்கை எடுத்தது.
1882 ஆம் ஆண்டு அண்டர் ஆணையம் (Hunter Commission of 1882) மக்களுக்கான தொடக்ககக்கல்வி என்பது தாய்மொழிவாயிலாகவே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. [(a) Policy : (i) Primary education should be regarded as the instruction of the masses. It should be closely related to the practical aspect of the life of the masses. (ii) Primary education should be imparted through the medium of mother tongue.]
1854 இல் அறிக்கை அளித்த சார்லசு உட்டு(Charles Wood) கலை , அறிவியல், மெய்யியல், ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றிற்கு ஆங்கிலப்பயிற்சிக்கு முதன்மை அளித்தாலும் உயர்நிலைப்பள்ளி வரை தாய்மொழிக்கல்வி தேவை என்பதை வலியுறுத்தினார்.
இந்தியப் பகர ஆளுநர் கர்சன் பெருமகன், (Lord Curzon, Viceroy of India)செப்தம்பர் 2, 1901 இல் சிம்லாவில் ஆங்கிலேயக் கல்வியாளர்களை மட்டும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இங்கும் தாய்மொழிவழிக்கல்வியே வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தாமசு இராலேயின் (Thomas Raleigh) தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழக ஆணையம், இந்தியச் செம்மொ ழிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அப்பொழுது செம்மொழி என்றால் சமசுகிருதமும் அரபியும் பெர்சியனும் என எண்ணப்பட்டது. காலத்தே மூத்த உயர்தனிச் செம்மொழியான செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்த பின்பும் மாநாடுதான் நடத்த முடிந்ததே தவிர, முழுமையான கல்வி மொழியாக நம்மால் ஆக்க இயலவில்லை.
1917இல் அமைக்கப்பட்ட சடுலெர் ஆணையம் (Saddler Commission) எனப்படும் கல்கத்தா பல்கலைக்கழக ஆணையம், உயர்நிலைப்பள்ளியின் கல்விமொழி தாய்மொழியே எனப் பரிந்துரைத்தது. இவ்வாறு, ஆங்கிலேயர்கள் தம் தொடர்பிற்காகவும் பரப்புரைக்காகவும் ஆங்கிலமொழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினாலும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாமோ – குறிப்பாகத் தமிழ் மக்களோ – ஆங்கிலச் சுமையை இறக்கி வைக்க மனமின்றி இருக்கின்றோம்.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965] கேட்ட வினா இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது நம் தாழ்நிலையாகும்.
தமிழ்நல நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர், தான் அறிவித்தது தவறு என்றால் அதனை நீக்கத் தயங்காதவர் எனப் பெயர் எடுத்த முதல்வர், உடனே மழலை நிலையில் இருந்து ஆய்வு நிலை முடிய எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்விக்கு ஆவன செய்ய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே நம்மைத் தரணியில் உயர்த்தும். தலைநிமிரச் செய்யும்.
நன்றி இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள். அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள். எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.
கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (திருக்குறள் 414) எனத் தெய்வப்புலவர் கேட்டலைச் சிறப்பிக்கின்றார். அப்படியாயின் கல்வியின் ஒரு பகுதியாகிய கேள்வியறிவு இன்னும் இன்றியமையாதது அன்றோ! கேள்வியறிவு தாய்மொழியில் இருந்தால்தான் கல்வி சிறக்கும். இல்லையேல் கருத்தைப் புரிந்து கொள்வதற்குச் செலவிடும் நேரத்தை விட அதை வெளிப்படுத்தும் மொழியைப் புரிந்து கொள்ள மிகு நேரம் வீணாகும். எனவேதான் கல்வி என்பது தாய்மொழி வாயிலாக அமைய வேண்டும் என்றே அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உலக மக்கள் தத்தம் தாய்மொழியில் கற்றுச் சிறந்திடும் வேளையில் தமிழ்நாட்டு மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழ்வழியில் கற்கும் வாய்ப்பு அருகிக் கொண்டே போகும் அவலம் கொடுமையன்றோ!
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதாகத் தமிழ் ஆர்வம் மிக்கக் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு நலன்களுக்கு இணையாக உள்ளாட்சிப்பள்ளிகளையும் அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் என்றல்லவா அமைச்சர் அறிவித்து இருக்க வேண்டும்? மாறாகக் கல்வி வணிகர்கள் வழியில் அரசும் செல்லும் என்பது எவ்வாறு முறையாகும்?
ஆங்கிலவழிக் கல்வியை அரசே தரலாம் என்னும் தலைப்பில் ஒருவர் தினமணியில் (மே10.2013) கட்டுரை எழுதியுள்ளார். “திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து பணியமர்த்தும் இவ்வேளையில், தமிழை வளர்ப்போம் எனக் கூறி தமிழனின் வளர்ச்சிக்குத் தடைபோடும் போலி முகமூடியை அணிதல் கூடாது” என அதில் பிதற்றி உள்ளார். தமிழால்தானே தமிழன் அடையாளம் காணப்படுகின்றான். அவ்வாறிருக்க தமிழை வளர்ப்போம் எனக்கூறித் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை போடுவதாக எங்ஙனம் கூறுகின்றார்? “தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள். அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும். ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்2 இதழ்18): ஆவணி16,1996: 1.9.65], தமிழ் உரிமையே தமிழர் உரிமை என்பதை உணர்த்தி உள்ளாரே!
தமிழை அழிப்பதன் மூலம் அல்லவா தமிழனின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் தடை போடுகின்றனர். கட்டுரையாளரே, “இதனால் தமிழ் தாழ்ந்துவிடாது. ஏனெனில் தமிழும் ஒரு மொழிப் பாடமாக இருக்கத்தான் போகிறது ” என்று முத்து உதிர்த்துள்ளார். தமிழ்வழிக் கல்வியிலும் ஆங்கிலம் மொழிப்பாடமாகத் தானே இருக்கின்றது. அவ்வாறு இருக்க ஆங்கிலத்திற்குத் தடை எங்கே வந்தது? ஆங்கிலவழிக்கல்வியில் பயின்று தமிழைப் படிக்கலாம் என்னும் பொழுது, தமிழ்வழிக்கல்வியில் பயின்று ஆங்கிலம் முதலான பிற மொழிகளைப் படிக்கலாம் என்பதில் என்ன தவறு உள்ளது?
இதற்கு ஓர் அறிவாளி, பின்னூட்டம் என்ற பெயரில், “குடிகாரன் மற்றும் பொறுப்பற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் வேறு வழியின்றி அரசு தமிழ்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள்” எனத் தமிழ்வழி பயிலச் செய்யும் பெற்றோரை இழிவுபடுத்தி உள்ளார். இதனை எப்படி தினமணி வெளியிட்டது என்றும் தெரியவில்லை. “தமிழ் மொழிக்கு எதிரான கட்டுரை தினமணியில் வந்திருப்பது வருத்தமளிக்கிறது” எனப் பாலகிருட்டிணன் என்பவர் பதிந்ததே பெரும்பாலோர் கருத்து.
“நீங்கள் கூறுவது போல் வைத்துக்கொள்வோம். ஆங்கில வழிக் கல்வியில் படித்த மாணவனைக் கேளுங்கள் ‘ உனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? உன் தாய்மொழி நன்றாகத் தெரியுமா? நீ படித்த பாடத்தின் அடிப்படை நன்றாகத் தெரியுமா? அதை எதற்காகப் படிக்கிறாய்? ஏன் படித்தாய்? நன்றாகப் புரியுமா பாடம் நடத்துவது? உன் திறமை எதுவென்று உனக்குத் தெரியுமா?’ என்று கேளுங்கள். அனைத்திற்கும் தெரியாது என்றுதான் பதில் வரும். இசுரேல் நாடு 55 ஆண்டுகளுக்கு முன்னாள்தான் உருவானது. நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல் வேலை அவர்கள் தாய் மொழியில் அறிவியல் மருத்துவம் அனைத்தையும் மொழிபெயர்த்துக் கல்வி முறையை அவர்கள் தாய் மொழியில் கொடுத்தார்கள் அதனால்தான் கடந்த 50 வருடங்களுள் அவர்கள் நாட்டில் நோபெல் பரிசு அறிவியலில் பெற்றவர்கள் மட்டும் 10 பேர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நம்மால் அவர்களுக்கு இணையாக வளர முடியவில்லை. காரணம், ஆங்கிலக் கல்வி முறை. பிறமொழியில் உள்ள அறிவியல் களஞ்சியங்களை நம் மொழியில் பெயர்த்துக் கொண்டுவரவேண்டும். அதுவே பாரதியின் கனவு. ஆங்கில மொழி தேவைதான் ஆனால் ஆங்கிலத்தில்தான் அறிவு என்பது அறிவீனம்” என இதற்குத் திருச்செந்தூர் விவேக் தமிழ்க்குமரன், சரியான மறுமொழி அளித்துள்ளார். சமச்சீர் கல்வியை ஒருபுறம் நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலவழிக் கல்வியைத் திணிப்பது முறையற்ற செயல்மட்டுமல்ல அறமற்ற செயலுமாகும்.
தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதால் மாணாக்கர் களிடையே பிளவு எண்ணத்தையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கித் தன்னம்பிக்கையற்ற தலைமுறைகளை உருவாக்கப் போவதை அரசு ஏன் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.
இதனை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அமைதிகாக்கின்றன. சட்டப்படி எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் மிகுதியான வாக்குகள் அடிப்படையில் தி.மு.க. தான் செல்வாக்கான எதிர்க்கட்சியாகும். ஆனால், அதன் தலைவருக்கே தமிழ்வழிக்கல்வியில் நாட்டமில்லாததால் அக்கட்சி இதனை எதிர்க்கவில்லை. தமிழ்வழிக்கல்வியில் நாட்டமிருந்தால் கல்லூரியில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இதற்கு வாழ்நாளெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்த மருத்துவர் ஏ.எல்.இலக்குமணசாமியை ஓராள் குழுவாக அமர்த்தி அதற்குத் தடை விதித்திருப்பாரா? தமிழ்ச்சான்றோர்களின் பட்டினிப் போரை நிறுத்துவற்கு அளித்த அறிக்கையில்கூட, ஆங்கில வழிக்கல்வி வணிகர்களின் வாதுரைஞர்போல்தான் கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த சமச்சீர்க்கல்வி அறிக்கையில் தமிழ்வழிக்கல்வி வலியுறுத்தப் பட்டிருப்பினும் அதனை ஒதுக்கி வைத்திருப்பாரா?
ஆட்சியில் இரு்ந்த பொழுது சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்க வித்திட்டிருப்பாரா? பல கோடி உரூபாய்ச் செலவில் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் சில கோடி உரூபாய் ஒதுக்கித் தரமான தமிழ்வழிக்கல்விக்கு வழி அமைத்திரு்க்க மாட்டாரா? எனவே, பிற எதிர்க்கட்சிகளும் தமிழ் நல அமைப்புகளும் அரசிடம் ஆங்கில வழிக்கல்விக்கு முற்றுப்புள்ளி இட நெருக்கடி அளிக்க வேண்டும். இருக்கின்ற ஆங்கிலவழிப்பள்ளிகள் அனைத்தும் படிப்படியாகத் தமிழ் வழிப்பள்ளிகளாக மாற நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
“நம் தமிழ் வழிக் கல்விக்கான உரிமைப்போர் முதலில் தமிழக அரசிற்கு எதிராகத்தான் அமைய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே தமிழின எழுச்சிக்கு அடிப்படையாகும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். . . . . ‘தமிழ்வழியாகப் படித்தலே தலைவர்களை உருவாக்கும். உயர்கல்வி ஓங்கிட ஒண்டமிழ் வழியே கற்போம்’ என்பனவே நம் குறிக்கோளாகும். இதனை வலியுறுத்தியே நம் அறப்போர் இருக்க வேண்டும்” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [ குறள்நெறி (மலர்2 இதழ்8): சித்திரை 19,1996: 1.05.1965] அன்று கூறி்யது இன்றைக்கும் தேவையானதாகக் கல்விநிலை இழிவாகவே உள்ளது.
“வேற்று நாட்டார் ஆட்சியினால் உண்டான பல தீமைகளுள் மிகக் கொடியது இந்திய இளைஞர்கள்மீது அழிவைக் கொடுக்கும் அயல்மொழியைப் பாடமொழியாகச் சுமத்தியதே என வரலாறு கூறும். அது நாட்டின் ஆற்றலை உறிஞ்சி விட்டது. மாணவர்களின் வாணாளைக் குறைத்து விட்டது. அவர்களை நாட்டு மக்களினின்றும் வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விட்டது. அதனால் கல்வி வீணான செலவு மிகுந்த ஒன்றாகிவிட்டது. இது தொடர்ந்து நீடிக்குமேயானால் நமது நாட்டின் ஆன்மாவையே கொள்ளை கொண்டு போய்விடும். அயல் பாட மொழியின் மயக்கத்திலிருந்து கல்வி கற்ற இந்தியர்கள் எவ்வளவு விரைவில் விடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கட்கும் மக்கட்கும் நல்லதாகும்” என அண்ணல் காந்தியடிகள்(Young India 5.7.1929) கூறியதை அவரைப் போற்றுவோர் மறப்பது ஏன்?
தாய்மொழிவழிக்கல்விக்கு எதிரான போக்கிற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சிதானா என்றால் அதுதான் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி செய்த பொழுது, மேற்கத்திய முறைகளைப் புகுத்துவதற்காகவும் சமயப் பரப்புரைக்காகவும் அலுவல் தொடர்பிற்காகவும் ஆங்கிலத்தைக் கற்பித்தனர். இருப்பினும் அவர்கள், தாய்மொழிவழிக்கல்வியையே ஊக்கப்படுத்தினர். மார்ச்சு 4, 1835 இல்பிரித்தானிய இந்தியாவின்அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆனது. எண்ணத்திலும் செயலிலும் இந்தியர்கள் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்ற மெக்காலே, ஆங்கிலக்கல்விக்குக் கால்கோள் இட்டாலும் மேல்தட்டு மக்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற்று அதனைத் தத்தம் தாய்மொழிவாயிலாக மக்களுக்கு அளிக்க வேண்டும் எனத் தாய்மொழிவழிக்கல்விக்குச் சார்பாகவே வலியுறுத்தி உள்ளார். ஆங்கிலேய ஆட்சியில் அமர்த்தப்பட்ட கல்விக் குழுக்கள் அல்லது ஆணையங்கள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியையே வலியுறுத்தியுள்ளன. அங்ஙனமே ஆங்கிலேய அரசும் நடவடிக்கை எடுத்தது.
1882 ஆம் ஆண்டு அண்டர் ஆணையம் (Hunter Commission of 1882) மக்களுக்கான தொடக்ககக்கல்வி என்பது தாய்மொழிவாயிலாகவே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. [(a) Policy : (i) Primary education should be regarded as the instruction of the masses. It should be closely related to the practical aspect of the life of the masses. (ii) Primary education should be imparted through the medium of mother tongue.]
1854 இல் அறிக்கை அளித்த சார்லசு உட்டு(Charles Wood) கலை , அறிவியல், மெய்யியல், ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றிற்கு ஆங்கிலப்பயிற்சிக்கு முதன்மை அளித்தாலும் உயர்நிலைப்பள்ளி வரை தாய்மொழிக்கல்வி தேவை என்பதை வலியுறுத்தினார்.
இந்தியப் பகர ஆளுநர் கர்சன் பெருமகன், (Lord Curzon, Viceroy of India)செப்தம்பர் 2, 1901 இல் சிம்லாவில் ஆங்கிலேயக் கல்வியாளர்களை மட்டும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இங்கும் தாய்மொழிவழிக்கல்வியே வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தாமசு இராலேயின் (Thomas Raleigh) தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழக ஆணையம், இந்தியச் செம்மொ ழிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அப்பொழுது செம்மொழி என்றால் சமசுகிருதமும் அரபியும் பெர்சியனும் என எண்ணப்பட்டது. காலத்தே மூத்த உயர்தனிச் செம்மொழியான செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்த பின்பும் மாநாடுதான் நடத்த முடிந்ததே தவிர, முழுமையான கல்வி மொழியாக நம்மால் ஆக்க இயலவில்லை.
1917இல் அமைக்கப்பட்ட சடுலெர் ஆணையம் (Saddler Commission) எனப்படும் கல்கத்தா பல்கலைக்கழக ஆணையம், உயர்நிலைப்பள்ளியின் கல்விமொழி தாய்மொழியே எனப் பரிந்துரைத்தது. இவ்வாறு, ஆங்கிலேயர்கள் தம் தொடர்பிற்காகவும் பரப்புரைக்காகவும் ஆங்கிலமொழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினாலும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாமோ – குறிப்பாகத் தமிழ் மக்களோ – ஆங்கிலச் சுமையை இறக்கி வைக்க மனமின்றி இருக்கின்றோம்.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965] கேட்ட வினா இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது நம் தாழ்நிலையாகும்.
தமிழ்நல நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர், தான் அறிவித்தது தவறு என்றால் அதனை நீக்கத் தயங்காதவர் எனப் பெயர் எடுத்த முதல்வர், உடனே மழலை நிலையில் இருந்து ஆய்வு நிலை முடிய எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்விக்கு ஆவன செய்ய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே நம்மைத் தரணியில் உயர்த்தும். தலைநிமிரச் செய்யும்.
நன்றி இலக்குவனார் திருவள்ளுவன்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
இந்திக் காரர்களுக்கு உழைக்க தெரியம் சிந்திக்க தெரியாது. காரணம் இதுவே.ராஜு சரவணன் wrote:முட்டாள்களாக இருப்பதிற்கு இதுவெல்லாம் காரணமாக சொல்லும் மூடர்கள் நாம். ஹிந்தி தெரிந்த வடநாட்டுகாரங்க எல்லாம் அறிவாளிகள், ஹிந்தி தெரியாத நாமெல்லாம் முட்டாள்கள். ஏன் ஹிந்தி தெரிந்த பிகாரி, வங்காளி எல்லாம் இங்கு வந்து வேலை செய்கிறான், நம்மாட்களை ஏன் வடநாட்டு நிறுவனங்கள் வலைவீசி இழுக்கிறார்கள்.ராஜு சரவணன் wrote:நண்பர் சொல்வது புரியவில்லை இந்தியை பற்றி தெரியாமல் போனதால் தான் நாம் இன்னமும் முட்டாளகவே இருக்கிறோம் என்று எடுத்துக்கொள்ளலாமா ?positivekarthick wrote:இந்தி+யா=இந்தியா இதை உணராமல் போனதால் தான் இன்னமும் முட்டாளகவே இருக்கிறோம்.
கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போடுபவர்கள், நம்மை பற்றி தெரியாத நம் மொழியை பற்றி தெரியாதவர்கள் பித்தரும் பிதறல்கள் இது.
ஆங்கில வழி கல்வியை ஆதரிக்கவும், எதிர்க்கவும் நியாயமான கோரிக்கைகைகளை அல்லது உதாரணங்களை முன் வையுங்கள்,நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அதை விடுத்து, என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவன், ஆங்கிலம் புரியாமல் தன் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவிட்டான், அதற்கு காரணம் அவன் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் வழி கல்வி கற்றதனால் தான் என்று அவதூறு எழுதாதீர்கள்.
சென்னையில் பொறியியல் படித்த ஒரு சில முதலாமாண்டு மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால், தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கு காரணம் அவர்கள் தாய்மொழி வழி கல்வி தான் என்று தமிழ் வழி கல்வியை அவமானம் செய்யாதீர்கள்.
நீங்கள் சொல்வதை போன்ற குற்றசாட்டுக்களை ஆங்கில வழி கல்வியில் படித்தவர்கள் மீதும் வைக்க இயலும்.
பள்ளி கல்வியை ஆங்கில வழியில் படித்து,பொறியியல் கல்லூரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களையும், அதை போலவே பட்டப்படிப்பை ஒழுங்காக முடிக்காமல்,கல்லூரியை விட்டு விலகி சென்ற மாணவர்களையும் நாம் அறிவோம். அப்படியானால் ஆங்கில வழி கல்வி தவறு என்று சொல்லி விடலாமா?
ஆங்கிலம் புரியாமல், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தடுமாறும் மாணவர்கள் அதற்காக தற்கொலை செய்வது என்பது பயித்தியக்காரத்தனம்.
இந்த மாதிரி மாணவர்களின், அடிப்படை சிக்கல் என்னவென்றால் மொழி என்ற சிக்கலை தாண்டி, சின்ன சின்ன தோல்விகளை எதிர்கொள்ளும் திராணி இல்லாதததும்,வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றிய சரியான புரிதல் இல்லாததும்,தன்னம்பிக்கை இல்லாததும் தான்.
ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்த மாணவன்,தான் விரும்பிய மருத்துவம் கிடைக்காது என்பதற்காக தற்கொலை செய்து கொள்வதும் இந்த ரகம் தான்.
பள்ளிகல்வியை தாண்டாத பல சாதனையாளர்களை குறித்து படித்திருக்கிறோம்(காமராசர்), தொடர் தோல்விகளை சந்தித்த அறிவியலாளர்கள்(எடிசன்) பின்னாளில் வெற்றி பெற்ற எண்ணற்ற சம்பவங்கள் குறித்து படித்திருக்கிறோம்.
விரும்பிய பாடம் கிடைக்காமல், கிடைத்த பாடத்தை விரும்பி படித்து சாதனைகள் நிகழ்த்திய பலரின் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.
ஆனால் வெற்றியாளர்களின்,சாதனைகளையும்,சோதனைகளையும் படித்த நம் மாணவர்கள்,அதே தோல்விகள் தங்கள் வாழ்வில் வரும் போது மட்டும், அதை எதிர் கொள்வதற்கு பதிலாக,தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள்.
ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு பதிலாக், தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு, அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை தான் நாம் வளர்க்க வேண்டுமேயன்றி, ஒட்டு மொத்த ஆங்கிலமும் தவறு என்றும், ஆங்கிலமே வேண்டாம் என்றும் வாதிட இயலாது.
மருத்துவம் கிடைக்கவில்லையா, பரவாயில்லடா தம்பி மருத்துவம் சார்ந்த வேறு துறைகளோ, அல்லது அதற்கு அடுத்த படியாக உனக்கு பிடித்த பாடங்களையோ எடுத்து படிக்கலாம்,இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று ஆறுதல் சொல்லி, அவனை பக்குவப்படுத்த வேண்டுமேயன்றி,அதையும் மீறி தற்கொலை செய்த மாணவனுக்காக ஒட்டுமொத்த பாடத்திட்டத்தையும் குறை சொல்ல முடியாது.
மாணவர்களை பக்குவப்பட்டவர்களாக மாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.ஆனால் பல நேரங்களில் பெற்றோர்களுக்கே,தங்கள் பிள்ளைகளின் சின்ன சின்ன தோல்விகளை ஏற்கும் பக்குவம் இல்லை. மன அழுத்தமானது, பல நேரங்களில் பெற்றோர்களிடம் இருந்தே பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றது.
என்னைப் போலவே பள்ளிகல்வியை தமிழ் வழி கல்வியில் படித்த பல நண்பர்கள், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிரமப்பட்டோம். மறுக்கவில்லை. ஆசிரியர்கள் பேசுவதை புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. காரணம் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ் வழி கல்வியில் படித்துவிட்டு, திடீரென்று ஆங்கில வழி என்றதும் கொஞ்சம் சிரமம் தான்.
ஆனால் அதற்கு காரணம் எங்களின் ஆங்கில மொழி புலமையில் இருந்த குறைபாடு தானேயன்றி,ஆங்கில வழி கல்வி என்று ஒருபோதும் சொல்ல முடியாது. ஆனால் இரண்டாம்,மூன்றாம் ஆண்டுகளில் அந்த சிரமம் இல்லை. ஆங்கில மொழிப் புலமையை வளர்க்க, தொடர்ந்து கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும் அவ்வளவே. எந்த அளவு சிரத்தை என்பது ஒவ்வொருவரின் தேவையை பொறுத்தது.
இன்றைக்கு தமிழ்வழியில் படித்த நண்பர்களும்,ஆங்கில வழி கல்வி படித்த மற்றவர்களோடு போட்டி போட்டு கொண்டு, உலகின் முன்னணி நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். ஜெயித்திருக்கிறார்கள்.
தமிழ் வழியில் படித்த அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பெரிய பெரிய உதாரணங்களை விட, நம்மோடு கூடவே இருந்து வெற்றியை தொட்டவர்களின் உதாரணங்கள் என்றுமே நெகிழ்வானவை.
வளர்ச்சி என்பது பல நேரங்களில் தகவல் தொழில் நுட்ப துறையில் பெற்ற வெற்றியையும், அமெரிக்காவில் வேலை செய்கிறார்களா என்பதையும் பொறுத்தே பலரால் பார்க்கப்படுகிறது(எனக்கு உடன்பாடு இல்லை). அதற்காக சொல்கிறேன்.
இன்று மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆப்பிள் என்று எந்த முன்னணி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எடுத்துக்கொண்டாலும்,தமிழ் வழியில் படித்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தில்,ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறார்கள்.
இந்திய அரசு துறையை பொருத்தவரை இஸ்ரோ, டி.ஆர்.டி.ஒ என்று முன்னணி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.
ஏன் அவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்து சாதிக்கவில்லையா?
அரசு கொண்டு வரும் ஆங்கில வழி கல்வி தேவை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அதற்காக தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் எல்லோருமே தோற்றுப்போகிறார்கள் அல்லது தோற்று போன பலரின் பின்னால் தாய் மொழி கல்வி தான் என்ற மாயத் தோற்றத்தை மட்டும் உருவாக்காதீர்கள். தமிழ் வழி கல்வியில் படித்து வாழ்க்கையில் வெற்றிபெற்ற பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்றி
- நண்பர் ஆன்டனி வளன் (முகனூலிலிருந்து)
அதை விடுத்து, என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவன், ஆங்கிலம் புரியாமல் தன் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவிட்டான், அதற்கு காரணம் அவன் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் வழி கல்வி கற்றதனால் தான் என்று அவதூறு எழுதாதீர்கள்.
சென்னையில் பொறியியல் படித்த ஒரு சில முதலாமாண்டு மாணவர்கள் ஆங்கிலம் புரியாததால், தற்கொலை செய்து கொண்டார்கள், அதற்கு காரணம் அவர்கள் தாய்மொழி வழி கல்வி தான் என்று தமிழ் வழி கல்வியை அவமானம் செய்யாதீர்கள்.
நீங்கள் சொல்வதை போன்ற குற்றசாட்டுக்களை ஆங்கில வழி கல்வியில் படித்தவர்கள் மீதும் வைக்க இயலும்.
பள்ளி கல்வியை ஆங்கில வழியில் படித்து,பொறியியல் கல்லூரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களையும், அதை போலவே பட்டப்படிப்பை ஒழுங்காக முடிக்காமல்,கல்லூரியை விட்டு விலகி சென்ற மாணவர்களையும் நாம் அறிவோம். அப்படியானால் ஆங்கில வழி கல்வி தவறு என்று சொல்லி விடலாமா?
ஆங்கிலம் புரியாமல், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தடுமாறும் மாணவர்கள் அதற்காக தற்கொலை செய்வது என்பது பயித்தியக்காரத்தனம்.
இந்த மாதிரி மாணவர்களின், அடிப்படை சிக்கல் என்னவென்றால் மொழி என்ற சிக்கலை தாண்டி, சின்ன சின்ன தோல்விகளை எதிர்கொள்ளும் திராணி இல்லாதததும்,வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றிய சரியான புரிதல் இல்லாததும்,தன்னம்பிக்கை இல்லாததும் தான்.
ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்த மாணவன்,தான் விரும்பிய மருத்துவம் கிடைக்காது என்பதற்காக தற்கொலை செய்து கொள்வதும் இந்த ரகம் தான்.
பள்ளிகல்வியை தாண்டாத பல சாதனையாளர்களை குறித்து படித்திருக்கிறோம்(காமராசர்), தொடர் தோல்விகளை சந்தித்த அறிவியலாளர்கள்(எடிசன்) பின்னாளில் வெற்றி பெற்ற எண்ணற்ற சம்பவங்கள் குறித்து படித்திருக்கிறோம்.
விரும்பிய பாடம் கிடைக்காமல், கிடைத்த பாடத்தை விரும்பி படித்து சாதனைகள் நிகழ்த்திய பலரின் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.
ஆனால் வெற்றியாளர்களின்,சாதனைகளையும்,சோதனைகளையும் படித்த நம் மாணவர்கள்,அதே தோல்விகள் தங்கள் வாழ்வில் வரும் போது மட்டும், அதை எதிர் கொள்வதற்கு பதிலாக,தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்கள்.
ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு பதிலாக், தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு, அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை தான் நாம் வளர்க்க வேண்டுமேயன்றி, ஒட்டு மொத்த ஆங்கிலமும் தவறு என்றும், ஆங்கிலமே வேண்டாம் என்றும் வாதிட இயலாது.
மருத்துவம் கிடைக்கவில்லையா, பரவாயில்லடா தம்பி மருத்துவம் சார்ந்த வேறு துறைகளோ, அல்லது அதற்கு அடுத்த படியாக உனக்கு பிடித்த பாடங்களையோ எடுத்து படிக்கலாம்,இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று ஆறுதல் சொல்லி, அவனை பக்குவப்படுத்த வேண்டுமேயன்றி,அதையும் மீறி தற்கொலை செய்த மாணவனுக்காக ஒட்டுமொத்த பாடத்திட்டத்தையும் குறை சொல்ல முடியாது.
மாணவர்களை பக்குவப்பட்டவர்களாக மாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.ஆனால் பல நேரங்களில் பெற்றோர்களுக்கே,தங்கள் பிள்ளைகளின் சின்ன சின்ன தோல்விகளை ஏற்கும் பக்குவம் இல்லை. மன அழுத்தமானது, பல நேரங்களில் பெற்றோர்களிடம் இருந்தே பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றது.
என்னைப் போலவே பள்ளிகல்வியை தமிழ் வழி கல்வியில் படித்த பல நண்பர்கள், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிரமப்பட்டோம். மறுக்கவில்லை. ஆசிரியர்கள் பேசுவதை புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. காரணம் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ் வழி கல்வியில் படித்துவிட்டு, திடீரென்று ஆங்கில வழி என்றதும் கொஞ்சம் சிரமம் தான்.
ஆனால் அதற்கு காரணம் எங்களின் ஆங்கில மொழி புலமையில் இருந்த குறைபாடு தானேயன்றி,ஆங்கில வழி கல்வி என்று ஒருபோதும் சொல்ல முடியாது. ஆனால் இரண்டாம்,மூன்றாம் ஆண்டுகளில் அந்த சிரமம் இல்லை. ஆங்கில மொழிப் புலமையை வளர்க்க, தொடர்ந்து கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும் அவ்வளவே. எந்த அளவு சிரத்தை என்பது ஒவ்வொருவரின் தேவையை பொறுத்தது.
இன்றைக்கு தமிழ்வழியில் படித்த நண்பர்களும்,ஆங்கில வழி கல்வி படித்த மற்றவர்களோடு போட்டி போட்டு கொண்டு, உலகின் முன்னணி நிறுவனங்களில் பணி புரிகிறார்கள். ஜெயித்திருக்கிறார்கள்.
தமிழ் வழியில் படித்த அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பெரிய பெரிய உதாரணங்களை விட, நம்மோடு கூடவே இருந்து வெற்றியை தொட்டவர்களின் உதாரணங்கள் என்றுமே நெகிழ்வானவை.
வளர்ச்சி என்பது பல நேரங்களில் தகவல் தொழில் நுட்ப துறையில் பெற்ற வெற்றியையும், அமெரிக்காவில் வேலை செய்கிறார்களா என்பதையும் பொறுத்தே பலரால் பார்க்கப்படுகிறது(எனக்கு உடன்பாடு இல்லை). அதற்காக சொல்கிறேன்.
இன்று மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆப்பிள் என்று எந்த முன்னணி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எடுத்துக்கொண்டாலும்,தமிழ் வழியில் படித்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தில்,ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறார்கள்.
இந்திய அரசு துறையை பொருத்தவரை இஸ்ரோ, டி.ஆர்.டி.ஒ என்று முன்னணி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.
ஏன் அவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்து சாதிக்கவில்லையா?
அரசு கொண்டு வரும் ஆங்கில வழி கல்வி தேவை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அதற்காக தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் எல்லோருமே தோற்றுப்போகிறார்கள் அல்லது தோற்று போன பலரின் பின்னால் தாய் மொழி கல்வி தான் என்ற மாயத் தோற்றத்தை மட்டும் உருவாக்காதீர்கள். தமிழ் வழி கல்வியில் படித்து வாழ்க்கையில் வெற்றிபெற்ற பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்றி
- நண்பர் ஆன்டனி வளன் (முகனூலிலிருந்து)
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
'ஹிந்தி தெரிந்த பிகாரி, வங்காளி எல்லாம் இங்கு வந்து வேலை செய்கிறான், நம்மாட்களை ஏன் வடநாட்டு நிறுவனங்கள் வலைவீசி இழுக்கிறார்கள்.'
ஹிந்தி தெரிந்த பிகாரி, வங்காளி களுக்கு சிந்திக்க தெரியாது காரணம் உழைப்பு .
நம்மாட்களை ஏன் வடநாட்டு நிறுவனங்கள் வலைவீசி இழுக்கிறார்கள்.' காரணம் நம் ஆட்களுக்கு நன்றாக வேலை வாங்க தெரியும்.
இந்த காணோளியையும் கவனமாக பாருங்கள் .
ஹிந்தி தெரிந்த பிகாரி, வங்காளி களுக்கு சிந்திக்க தெரியாது காரணம் உழைப்பு .
நம்மாட்களை ஏன் வடநாட்டு நிறுவனங்கள் வலைவீசி இழுக்கிறார்கள்.' காரணம் நம் ஆட்களுக்கு நன்றாக வேலை வாங்க தெரியும்.
இந்த காணோளியையும் கவனமாக பாருங்கள் .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|