புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_m10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_m10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10 
3 Posts - 8%
heezulia
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_m10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_m10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_m10சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க...


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 8:09 pm

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Tamil-Daily-News_59323847294

மனித வாழ்வில் வீடு கட்டுவதற்கும், திருமணம் நடத்துவதற்கும்தான் மிகப் பெரும் செலவும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் திருமணத்தையும் வீட்டையும் சமமாக வைத்துப் பேச முடியாது. திருமணம் என்பது சட்ட ரீதியாக ஒரு கையெழுத்துடன் முடிந்துவிடக்கூடியது. மற்ற செலவுகள் அனைத்தும் நம்பிக்கைகளுக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும், சமுதாய அந்தஸ்தைப் பறைசாற்றிக்கொள்ளவும் செய்யப்படுபவை.

ஆனால் சொந்த வீடு வாங்குவதற்கான செலவு அப்படியல்ல. அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளின் விலை விண்ணைத் தொடுகிறது. ஒரு சொந்த வீடாவது வாங்கிவிட நினைக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. வீடு வாங்குவதற்காக பல தியாகங்களைச் செய்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. இருக்கும் உறுப்பினர்களைத் தவிர வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களுக்காகவும், இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் வீட்டின் அளவு தீர்மானிக்கப்படும்.

தினமும் அலுவலகத்துக்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். தினமும் அரக்கோணத்திலிருந்தும், செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்து போகும் பலருக்கு அவ்வாறான நெடும் பயணங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வாக மாற, சொந்த வீடும் ஒரு முக்கியக் காரணம். நகரம் விரிவடைந்திருப்பது வீடு வாங்கும் ஆசையின் மற்றொரு விளைவு. இருக்கும் விலைவாசியில் நகரத்தின் மையத்தில் வீடு வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனி. எனவே புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் வாங்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் கிராமம் போல் இருந்த வேளச்சேரி இன்று சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்று.

ஆனால் எத்தனையோ மாற்றங்களையும் இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சொந்த வீட்டில் வசிக்கப் பலர் விரும்புகிறார்கள். ‘‘சொந்த வீடு வாங்கத் தூண்டும் முதல் காரணம் வாடகை வீடுகளில் வீட்டு ஓனர் பிரச்னை. மூன்று ரூம்கள் இருக்கும் வீட்டுக்கு சென்னையில் இன்று மினிமம் 12,000 வாடகை தர வேண்டி இருக்கிறது, அவ்வளவு வாடகை கொடுத்தாலும், அந்த வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கக் கூடாது. சொந்தக்காரர்கள் வரவே கூடாது. வந்தாலும் இரவில் தங்கக் கூடாது போன்ற கண்டிஷன்கள் போடப்படுகின்றன.

அடிக்கடி வீடு மாற்றத் தேவைப்படும் உழைப்பும் அதற்கான செலவுகளும் சொந்த வீடு வாங்கத் தூண்டும் காரணங்களில் முக்கியமானது. சமுதாய அந்தஸ்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், திருமணம் பேச ஆரம்பிக்கும்போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா?‘ என்பதுதான். இவை எல்லாவற்றுக்கும் மேல், வீடு என்பது அதிக லாபம் தரும் முதலீடாக இருக்கிறது. அதிக வருவாய் தரும் முதலீடுகள் தங்கமும் வீடு / நிலமும்தான்.

நாட்டில் பொதுவாகவே விலைவாசி உயர்ந்தாலும் வீட்டின் விலை உயர்வு மட்டும் ஏன் மிக அதிகமாக இருக்கிறது? ‘‘நிலப் பற்றாக்குறை நிலத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. இதுவே வீடுகளின் விலை உயர்வுக்குக் காரணம்‘‘ என்று விளக்குகிறார் வீடு கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ள நிறுவன அதிகாரி ஒருவர்.

தொடரும் ........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 8:09 pm

சிறந்த கட்டுனர் விருது

அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் திருவள்ளூர் கட்டுனர் விருது வழங்கு விழாவும், சர்வதேச கட்டுனர் சங்கத்தின் அமைப்பான மிதிகிகீறிசிகி பீஸ்மா விருது பெற்ற, அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திருவள்ளூர் மையத்தின் சார்பில் நடந்தது.

இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் திரு.என்.சுவாமிநாதன் மற்றும் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் திரு.வி.ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கட்டுனர்களுக்கான விருதை திரு.எம்.நாகபூஷனம் லோகோஸ் கன்ஸ்ட்ரக்ஷன், கல்பனா கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பிரவன் டிசைனர்ஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் மையத் தலைவர் கே.குமார், மைய நிறுவன தலைவர் கே.ஜி.ஜானகிராமன்.

ஹோம் லோன் வாங்க...

ஹோம் லோன் வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னால கொஞ்சம் ஹோம் வொர்க் செய்யலாமா...?
இன்னொரு முக்கியமான விஷயம்... உங்களுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் மிகவும் அவசியம்.
ஏதேனும் ஒரு பேங்க்குல அக்கவுன்ட் வச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப முக்கியமுங்க.

வங்கி மேலாளரை அணுகும்போது இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டுன்னு எதையாச்சும் காண்பிச்சே ஆகணும். வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா..? அதையும் மறக்காம கொண்டு போங்க. மாத வருமானம் பெறுவதற்கான சேலரி ஸ்லிப் இருந்தால் உத்தமம்.

விவசாயம் செய்யறது. விசைத் தறி ஓட்டறதுன்னு ஏதோ பொழப்பு ஓடிட்டிருக்கு. இதுல நிலையான மாத வருமானத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியாதே...? உங்களின் கவலை நியாயமானதுதான். ஆனா, அதுக்கும் வழி இருக்கே... ஏதேனும் ஒரு வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் தொடர்ந்து சேமிப்பவராக இருந்தால் அதையே நிலையான வருமானமாக காட்ட முடியும்.

ஃபாரின் வங்கி, தனியார் வங்கி, தேசிய வங்கின்னு இப்படி ஏகப்பட்ட வங்கிகள்... என்னங்க தலை சுத்துதா..? தடுமாறாம யோசிங்க. எந்த பேங்க்குல வட்டி விகிதம் குறைவு? தவணை முறை சுலபமாக இருக்கிறதா...? இதையெல்லாம் கொஞ்சம் நிதானமாத்தான் அலசணும். ஒவ்வொரு பேங்க்குலயும் இவ்வளவு நாளைக்குள் பணம் கட்டலாம்ன்னு ஒரு லிமிட் இருக்கு. ஐந்து வருடங்களில் ஆரம்பித்து, பதினைந்து, இருபது வருடங்கள் வரை காலக்கெடுவை நீட்டிப்பார்கள். இதுவும் கூட உங்கள் சாய்ஸ்தான்.

காலி நிலத்துல வீடு கட்டப் போறீங்களா...? அது உங்களோட சொந்த நிலம்தான் என்பதற்குரிய அத்தனை அத்தாட்சிகளும் வேண்டும். கார்ப்பரேஷன் அனுமதி, கிராமமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முறையான சான்றுன்னு இதையெல்லாம் வாங்கி வைச்சுக்கோங்க. நீங்க வீடு கட்டப்போகிற இடமானது விளைச்சல் நிலமாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமானதாகவோ இருக்கக் கூடாதில்லையா..? அதனால, நிலத்திற்குரிய பத்திரங்கள். வில்லங்கச் சான்றிதழ்கள் கட்டாயம் கவனிக்கப்படும்.

உடனே கடன் கிடைச்சுடுமா....? அதான் நடக்காது. வங்கியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் வருவார். எல்லா சான்றிதழ் சமாச்சாரங்களையும் அலசிவிட்டு வில்லங்கம் ஏதுமில்லை என்று அவர் விளக்கம் கொடுத்தால்தான் மேற்படி வேலைகள் நடக்கவே ஆரம்பிக்கும். தொகையை நீங்களே நிர்ணயித்தால் போதுமா..? போதாது. வங்கியின் சார்பில் ஒரு இன்ஜினீயரை அனுப்புவார்கள். அவர் வந்து பார்வையிட்டு இடத்தின் அளவு, மதிப்பு விவகாரங்களை ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில் உங்களின் கடன் தொகையை, சம்பந்தப்பட்ட வங்கி பரிசிலிக்கும்.

ஏற்கனவே கட்டப்பட்ட வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதேனும் ஒரு ஃப்ளாட்டை வாங்குவதானாலும் இதே விதிமுறைகள்தான். ஃப்ளாட்டின் சதுர அடி, அது அமைந்திருக்கும் இடம். தற்போதைய விலை மதிப்பு, முறையான அனுமதி என அத்தனையும் பரிசோதிக்கப்படும்.

எனக்குன்னு சொந்தமா நிலமும் இல்லை... வீடும் கிடையாது வாடகை வீட்டுலதான் வாழ்ந்திட்டிருக்கேன்... அடடா எதுக்குங்க இந்தப் புலம்பல்..? உங்களுக்கும் வங்கிக் கடன் பெற வழி இருக்கே. முறையான, அரசு அனுமதிபெற்ற காலி நிலத்தை விலைக்கு வாங்க தாராளமாக கடன் தரப்படுகிறது. அப்படியே அதில் ஒரு வீடும் கட்டிக்கொள்ளலாம்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 16, 2013 8:47 pm

ரொம்ப சரிம்மா வீடு கட்டினா அதன் மதிப்பு உயர்ந்துட்டே போகும் ஆனால்
கல்யாணம் பண்ணினா எங்க மதிப்பு குறைஞ்சிட்டே வரும் சிரிப்பு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 16, 2013 8:49 pm

இன்றைய காலத்தில் பலருக்கும் வழி காட்டும் பதிவுக்கு நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 9:07 pm

யினியவன் wrote:ரொம்ப சரிம்மா வீடு கட்டினா அதன் மதிப்பு உயர்ந்துட்டே போகும் ஆனால்
கல்யாணம் பண்ணினா எங்க மதிப்பு குறைஞ்சிட்டே வரும் சிரிப்பு

அட கிருஷ்ணா............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 9:07 pm

Muthumohamed wrote:இன்றைய காலத்தில் பலருக்கும் வழி காட்டும் பதிவுக்கு நன்றி அம்மா

நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 16, 2013 9:49 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:ரொம்ப சரிம்மா வீடு கட்டினா அதன் மதிப்பு உயர்ந்துட்டே போகும் ஆனால்
கல்யாணம் பண்ணினா எங்க மதிப்பு குறைஞ்சிட்டே வரும் சிரிப்பு

அட கிருஷ்ணா............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னம்மா உங்க கிருஷ்ணாவும் அதேதான் சொல்றாரா? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 16, 2013 10:24 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:[quote="யினியவன்" ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு

அட கிருஷ்ணா.............
என்னம்மா உங்க கிருஷ்ணாவும் அதேதான் சொல்றாரா? புன்னகை [/quote]

உஷ்..............பப்ளிக்.................. கூடாது கூடாது ஆர்த்தி.............புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 17, 2013 10:50 am

பதிவிற்கு நன்றி அம்மா....ஒரு சில கருத்துகள் கூற விழைகிறேன்.

வீடு கட்டுவது அவசியம், வீட்டின் விலை உயர்வுக்கு காரணம், நம்மை கடனாளியாக்கும் வங்கிகளும் நம் அறியாமையும் தான்.

10 வருடம் முன்பும், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும், வீட்டுக்காரர் தொல்லையும் இருந்தது. ஆனால் வீடுகள் விலைபோகவில்லை, காரணம் ஒரு வீடு வாங்க கணிசமான தொகை கையிருப்பும், கடன் வாங்கி வட்டி கட்டும் திறனும் இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் அவசிய தேவைகளைப் பார்த்த பிறகே அதாவது, 40-50 வயதில் வீடு வாங்குவதை பற்றி அன்றைய சமூகம் சிந்தித்தது. ஆனால் இன்று EMI என்ற மாய வலை அனைவரையும் மாட்டி, நிரந்தரக் கடனாளி ஆக்குகிறது. இது மட்டுமல்லாமல் சிறிய வருமான வரியை மிச்சம் செய்ய பெரிய வட்டியை கட்டும் முட்டாளாகப் பார்க்கிறது.

இன்றைக்கு சென்னையில் இருக்கும் வீட்டின் விலை உலக நாடுகளின் தலைநகரில் இருக்கும் வீடுகளின் விலைக்கு நிகராகி வருகிறது. ஆனால் உள் கட்டமைப்பு படு கேவலமாக உள்ளது.
வாங்கும் விலைக்கு அந்த இடம் தகுதியாக உள்ளதா என்பதை நாம் யோசிப்பதில்லை. அவன் அன்று வாங்கினான், விலை எங்கோயோ போய்விட்டது, ஆகையால் குருடோ செவிடோ பணத்தை முதலீடு செய்யலாம் என்ற நிலை இங்குள்ளது.

ஆயிரம் ரூபாய் பொருள் வாங்கும் பொழுது கூட, நம்மை வாடிக்கையாளர் என்ற மரியாதையோடு நடத்துகின்றனர். ஆனால் பல லட்சம் கொடுத்து வாங்கும் இடத்திற்கு விற்பவரும், தரகரும், வங்கியும் நம்மை எத்தனை அலைகழிக்க முடியுமோ அத்தனை அலைகழிக்கிறது. இது நம் முட்டாள்தனம். வாங்குபவர் ஆர்வத்தை காட்டாமல், தேவையை அறிந்து தெளிவுடன் இருந்தால் தகுதியான விலைக்கு இச்சந்தை வந்துவிடும்.

வங்கிக்கு தூபம் போடும் பத்திரிக்கைகளின் தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்.












சதாசிவம்
சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 17, 2013 10:59 am

பெரிய வீடா, அல்லது சின்ன வீடா, எனக்கு என்னமோ சின்ன வீடுதான் சிறப்பா இருக்கும்னு தோனுது. இதுக்காக யாரும் என்ன அடிக்க வந்திடாதீங்க. மனசில பட்டத சொன்னேன், சரியா?


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக