புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேஷம்: பிரச்னைகளை சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கோபப்படுத்தி, டென்ஷனாக்கிய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி 2ல் நுழைந்திருப்பதால் முன்கோபம் நீங்கும். உஷ்ணத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவுகள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள்.
உங்களின் தனாதிபதியான சுக்கிரன் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 21ந் தேதி முதல் செவ்வாயும், சூரியனும் ஒன்று சேர்வதால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். 28ந் தேதி முதல் கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும், செல்வாக்கையும் தந்த குருபகவான் 3ம் வீட்டில் சென்று மறைவதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும். வேலைச்சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். சிலரை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். கண்டகச்சனி நடைபெறுவதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். உரிமையுடன் மனைவி ஏதேனும் பேசினால் அதற்காக கோபப்படாதீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேரும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, மருந்து, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். கரும்பு, சவுக்கு லாபம் தரும். கனவுகள் நனவாகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 20, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 8, 9, 10, 11, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 24ந் தேதி மாலை 5.30 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி இரவு 8 மணி வரை எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
உங்களின் தனாதிபதியான சுக்கிரன் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 21ந் தேதி முதல் செவ்வாயும், சூரியனும் ஒன்று சேர்வதால் லேசாக கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். 28ந் தேதி முதல் கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும், செல்வாக்கையும் தந்த குருபகவான் 3ம் வீட்டில் சென்று மறைவதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல் வரும். வேலைச்சுமையும் அதிகமாகிக் கொண்டே போகும். சிலரை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்திலும் கவனமாக இருங்கள். கண்டகச்சனி நடைபெறுவதால் தூக்கமின்மை, மனஇறுக்கம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். உரிமையுடன் மனைவி ஏதேனும் பேசினால் அதற்காக கோபப்படாதீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேரும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, மருந்து, துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். கரும்பு, சவுக்கு லாபம் தரும். கனவுகள் நனவாகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 20, 21, 22, 23, 29, 30, 31 ஜூன் 1, 8, 9, 10, 11, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 24ந் தேதி மாலை 5.30 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி இரவு 8 மணி வரை எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிஷபம்: நீங்கள் உங்கள் திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த மாதம் பிறப்பதால் உங்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பல மாதங்களாக பாதியிலேயே நின்ற வேலைகள் முடிவடையும். காது வலி, கழுத்து வலி, முதுகு வலி என்று முனகிக் கொண்டிருந்த நீங்கள் ஆரோக்யமடைவீர்கள். 30ந் தேதி முதல் சுக்கிரன் 2ல் அமர்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
உங்களை தவறாகப் புரிந்து கொண்டு பேசாமலிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
21ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ற இடமும் அமையும். மனைவிக்கு அலைச்சல், வேலைச்சுமை, முன்கோபம் நீங்கும். கடந்த ஓராண்டு காலமாக ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக இருந்து உங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் ராசியை விட்டு விலகி தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி கிட்டும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியினராலும் அமுக்கப்பட்டிருந்த நீங்கள் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பெருமையாக பேசப்படுவீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களே! நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த மாதத்தின் பிற்பகுதியில் முக்கியத்துவம் கிடைக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள பாக்கியும் கைக்கு வரும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! பாராட்டுகள் உண்டு. விவசாயிகளே! பூச்சித் தொல்லை, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த தகராறுகள் நீங்கும். முற்பகுதியில் அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 22, 23, 25, 29, 30, 31 ஜூன் 1, 2, 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 26ந் தேதி இரவு 8 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்:
கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலிலுள்ள வீணையை ஏந்திய அனுமனை தரிசித்து வாருங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்.
உங்களை தவறாகப் புரிந்து கொண்டு பேசாமலிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
21ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால் சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். அவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ற இடமும் அமையும். மனைவிக்கு அலைச்சல், வேலைச்சுமை, முன்கோபம் நீங்கும். கடந்த ஓராண்டு காலமாக ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக இருந்து உங்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் ராசியை விட்டு விலகி தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி கிட்டும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியினராலும் அமுக்கப்பட்டிருந்த நீங்கள் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கட்சியிலும், மக்கள் மத்தியிலும் பெருமையாக பேசப்படுவீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களே! நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த மாதத்தின் பிற்பகுதியில் முக்கியத்துவம் கிடைக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள பாக்கியும் கைக்கு வரும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! பாராட்டுகள் உண்டு. விவசாயிகளே! பூச்சித் தொல்லை, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த தகராறுகள் நீங்கும். முற்பகுதியில் அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 22, 23, 25, 29, 30, 31 ஜூன் 1, 2, 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 26ந் தேதி இரவு 8 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்:
கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலிலுள்ள வீணையை ஏந்திய அனுமனை தரிசித்து வாருங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிதுனம்: பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டீர்கள். 25ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்வதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணப் பற்றாக்குறையை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். 20ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
21ந் தேதி முதல் 12ல் செவ்வாய் மறைவதால் உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் இருந்தாலும் பாசம் குறையாது. சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். கடந்த ஓராண்டு காலமாக 12ல் அமர்ந்து அலைச்சல், செலவுகள், ஏமாற்றங்களை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் ஏமாற்றங்கள், வீண் பழி விலகும். ஆனால், ஜென்ம குருவாக வருவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளை பாக்யம் உண்டு. 5ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து பேசுவார்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். போராட்டங்கள், உண்ணாவிரதங்களை தலைமை தாங்கி வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம் கூடி வரும். மாணவர்களே! உங்களின் பொது அறிவுத்திறன் வளரும். கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரம் தழைக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலை களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். விவசாயிகளே! தோட்டப் பயிர்கள், காய், கனிகள் மூலமாக லாபம் வரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 20, 21, 25, 26, 27, 28 ஜூன் 3, 4, 5, 6, 8, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 29, 30 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
21ந் தேதி முதல் 12ல் செவ்வாய் மறைவதால் உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் இருந்தாலும் பாசம் குறையாது. சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். கடந்த ஓராண்டு காலமாக 12ல் அமர்ந்து அலைச்சல், செலவுகள், ஏமாற்றங்களை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் ஏமாற்றங்கள், வீண் பழி விலகும். ஆனால், ஜென்ம குருவாக வருவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளை பாக்யம் உண்டு. 5ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து பேசுவார்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். போராட்டங்கள், உண்ணாவிரதங்களை தலைமை தாங்கி வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம் கூடி வரும். மாணவர்களே! உங்களின் பொது அறிவுத்திறன் வளரும். கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரம் தழைக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலை களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். விவசாயிகளே! தோட்டப் பயிர்கள், காய், கனிகள் மூலமாக லாபம் வரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 20, 21, 25, 26, 27, 28 ஜூன் 3, 4, 5, 6, 8, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 29, 30 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடகம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களை கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் வகைகளால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு, பாகப்பிரிவினையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் 12ல் மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கட்டிட வரைபட அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாநில அளவில் ஒருசிலருக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொகுதி மக்களுக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்களே! பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி உண்டு. உயர்கல்வி ஸ்தானத்தில் சனியும், ராகுவும் நிற்பதால் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கட்டிட உதிரி பாகங்கள், உணவு, துணி, வாகன வகைகளால் லாபமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்று அதன்மூலமாக கூடுதல் கல்வித் தகுதி கிடைத்து பதவி உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். பழைய பெரிய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தருவார்கள். விவசாயிகளே! கிணற்றை தூர்வாருவீர்கள். வற்றிய கிணறில் நீர் சுரக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19, 20, 21, 22, 23, 27, 28, 30 ஜூன் 5, 6, 8, 9, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் 12ல் மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கட்டிட வரைபட அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாநில அளவில் ஒருசிலருக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொகுதி மக்களுக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்களே! பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி உண்டு. உயர்கல்வி ஸ்தானத்தில் சனியும், ராகுவும் நிற்பதால் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கட்டிட உதிரி பாகங்கள், உணவு, துணி, வாகன வகைகளால் லாபமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்று அதன்மூலமாக கூடுதல் கல்வித் தகுதி கிடைத்து பதவி உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். பழைய பெரிய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தருவார்கள். விவசாயிகளே! கிணற்றை தூர்வாருவீர்கள். வற்றிய கிணறில் நீர் சுரக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19, 20, 21, 22, 23, 27, 28, 30 ஜூன் 5, 6, 8, 9, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிம்மம்: போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள் உடைபடும். இழுபறியாக இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். உடன் பிறந்தவர்கள் தேடி வருவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். புது வீட்டிற்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி நல்ல விதத்தில் முடியும். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்து உங்களை பலவிதத்திலும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 11ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் பணவரவு உண்டு.
எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான சூரியன் 10ம் வீட்டில் கேந்திர பலம்பெற்று நுழைந்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் கூடி வரும்.
அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் கூடி வரும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். திருமணம் கூடி வரும். எதிர்ப்புகள் விலகும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சனியும், ராகுவும் 3ல் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கூடி வரும். புது முதலீடுகள் லாபம் தரும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள்.
சந்தையில் மதிக்கப்படுவீர்கள். கண்ணாடி, சிமென்ட், பூ வகைகளால் லாபமடைவீர்கள். 28ந் தேதி முதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டு. வேலைச்சுமை குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கும். விவசாயிகளே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புது நிலம் கிரயம் செய்வீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், யோகங்களும் தொடங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 20, 21, 22, 23, 24, 29, 30 ஜூன் 1, 7, 8, 9, 11.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 2, 3 மற்றும் 4ந் தேதி மதியம் 1.30 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாகி முடியும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு குடையும், காலணியும் வாங்கிக் கொடுங்கள்.
எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதனான சூரியன் 10ம் வீட்டில் கேந்திர பலம்பெற்று நுழைந்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இளைய சகோதரிக்கு திருமணம் கூடி வரும்.
அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் கூடி வரும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். திருமணம் கூடி வரும். எதிர்ப்புகள் விலகும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சனியும், ராகுவும் 3ல் வலுவாக நிற்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கூடி வரும். புது முதலீடுகள் லாபம் தரும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள்.
சந்தையில் மதிக்கப்படுவீர்கள். கண்ணாடி, சிமென்ட், பூ வகைகளால் லாபமடைவீர்கள். 28ந் தேதி முதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டு. வேலைச்சுமை குறையும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கும். விவசாயிகளே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். புது நிலம் கிரயம் செய்வீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், யோகங்களும் தொடங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 20, 21, 22, 23, 24, 29, 30 ஜூன் 1, 7, 8, 9, 11.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 2, 3 மற்றும் 4ந் தேதி மதியம் 1.30 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாகி முடியும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு குடையும், காலணியும் வாங்கிக் கொடுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னி: கல் நெஞ்சக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைக்கும் நீங்கள், எங்கு தட்டினால் எங்கு விழும் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள். 20ந் தேதி வரை ராசிக்கு 8ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சின்னச் சின்ன விபத்துகள், ஏமாற்றங்கள் வரக்கூடும். 21ந் தேதி முதல் செவ்வாய் 9ல் நுழைவதால் மனப் போராட்டங்கள் ஓயும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும்.
தந்தையாருடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். தந்தைவழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். உங்களின் ராசிநாதன் புதன் 25ந் தேதி முதல் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். குருபகவான் 27ந் தேதி வரை 9ம் வீட்டில் தொடர்வதால் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். ஏழரைச்சனி நடைபெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். கை வலி, கழுத்து வலி மற்றும் மூட்டு வலி வந்துபோகும்.
சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்கத்தால் ஓரளவு ஆதரவு உண்டு. ஆனால், தந்தைக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமைக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம். கன்னிப் பெண்ளே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யப் பாருங்கள்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். 28ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளால் தொந்தரவுகள் இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படப் பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! அரிசி, எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 19, 23, 25, 26, 28, 31 ஜூன் 1, 2, 3, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 4ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்:
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
தந்தையாருடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். தந்தைவழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். உங்களின் ராசிநாதன் புதன் 25ந் தேதி முதல் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். குருபகவான் 27ந் தேதி வரை 9ம் வீட்டில் தொடர்வதால் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். ஏழரைச்சனி நடைபெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். கை வலி, கழுத்து வலி மற்றும் மூட்டு வலி வந்துபோகும்.
சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்கத்தால் ஓரளவு ஆதரவு உண்டு. ஆனால், தந்தைக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமைக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம். கன்னிப் பெண்ளே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யப் பாருங்கள்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். 28ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளால் தொந்தரவுகள் இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படப் பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். புது ஒப்பந்தம் வரும். விவசாயிகளே! அரிசி, எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிட்டும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 19, 23, 25, 26, 28, 31 ஜூன் 1, 2, 3, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 4ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பயணங்களின் போது கவனம் தேவை.
பரிகாரம்:
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துலாம்: தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படிதான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். 8ல் மறைந்து நிற்கும் உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 30ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உங்களின் பாக்யாதிபதியான புதன் 25ந் தேதி முதல் 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் பணப் பற்றாக்குறை தீரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த தொகை வரும். செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டு. சொத்துப் பிரச்னை, பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.
ஆனால், 21ந் தேதி முதல் செவ்வாய் 8ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், ஈகோ பிரச்னைகள் வரும். ஏழரைச் சனியும் நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகளையும், சிக்கல்களையும் தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் அலைச்சல் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லது நடக்கும். பிள்ளை களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலை கிடைக்காமல் இருந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மாணவர்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் ஏழரைச்சனி நடைபெறுவதால் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் உங்களின் கடின உழைப்பால் மூத்த அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையைத் தவிர்க்கப் பாருங்கள். முற்பகுதியில் செலவுகள், அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 18, 19, 25, 26, 27, 28, 30 ஜூன் 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 7, 8 மற்றும் 9ந் தேதி காலை 10 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டையில் அருளும் குருபகவானை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
ஆனால், 21ந் தேதி முதல் செவ்வாய் 8ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், ஈகோ பிரச்னைகள் வரும். ஏழரைச் சனியும் நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகளையும், சிக்கல்களையும் தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் அலைச்சல் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லது நடக்கும். பிள்ளை களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலை கிடைக்காமல் இருந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மாணவர்களே! நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் ஏழரைச்சனி நடைபெறுவதால் வேலைச்சுமை ஒருபக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் உங்களின் கடின உழைப்பால் மூத்த அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டையைத் தவிர்க்கப் பாருங்கள். முற்பகுதியில் செலவுகள், அலைச்சல் இருந்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 18, 19, 25, 26, 27, 28, 30 ஜூன் 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 7, 8 மற்றும் 9ந் தேதி காலை 10 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டையில் அருளும் குருபகவானை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருச்சிகம்: விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் வலுவாக காணப்படுவதால் தைரியம் கூடும். சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு காலி இடத்தை விற்று புதுவீடு, மனை வாங்குவீர்கள். உங்கள் ராசிக்குச் சாதகமான வீடுகளில் சுக்கிரனும், புதனும் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளை பாக்யம் கிட்டும்.
குடும்பத்தினரோடு நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஏழரைச்சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். 27ந் தேதி வரை குருபகவான் 7ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கையும், கௌரவத்தையும் தரும். 28ந் தேதி முதல் குருபகவான் 8ல் மறைவதால் செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கேது வலுவாக இருப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
மாணவர்களே! உங்களின் அறிவுத்திறன் கூடும். சமயோசித புத்தியால் முன்னேறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள், சிக்கல்கள் நீங்கும்.
நல்ல வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களுடன் போராட வேண்டியது வரும். ஏற்றுமதி, இறக்குமதி, ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு தரப்படும். தள்ளிப்போன இடமாற்றம் கிடைக்கும். சூழ்ச்சிகளை வென்று முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை இருக்கும். மரப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19,20, 21, 22, 27, 28, 29, 30, 31 ஜூன் 1, 5, 6, 7, 8, 14
சந்திராஷ்டம தினங்கள்:
மே 15ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் ஜூன் 9ந் தேதி காலை 10 மணி முதல் 10, 11 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
பழநி முருகனின் ராஜ அலங்காரத்தை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
குடும்பத்தினரோடு நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஏழரைச்சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். 27ந் தேதி வரை குருபகவான் 7ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கையும், கௌரவத்தையும் தரும். 28ந் தேதி முதல் குருபகவான் 8ல் மறைவதால் செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கேது வலுவாக இருப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
மாணவர்களே! உங்களின் அறிவுத்திறன் கூடும். சமயோசித புத்தியால் முன்னேறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள், சிக்கல்கள் நீங்கும்.
நல்ல வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களுடன் போராட வேண்டியது வரும். ஏற்றுமதி, இறக்குமதி, ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தொல்லை கொடுத்து வந்த அதிகாரி மாற்றப்படுவார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு தரப்படும். தள்ளிப்போன இடமாற்றம் கிடைக்கும். சூழ்ச்சிகளை வென்று முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விவசாயிகளே! எலித் தொல்லை, பூச்சித் தொல்லை இருக்கும். மரப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19,20, 21, 22, 27, 28, 29, 30, 31 ஜூன் 1, 5, 6, 7, 8, 14
சந்திராஷ்டம தினங்கள்:
மே 15ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் ஜூன் 9ந் தேதி காலை 10 மணி முதல் 10, 11 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
பழநி முருகனின் ராஜ அலங்காரத்தை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனுசு: இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்த நீங்கள், தனக்குக் கீழே இருப்பவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்களின் ராசிநாதன் குருபகவான் 6ம் வீட்டில் அமர்ந்து உங்களை அலைக்கழித்தார். கடன் பிரச்னையை ஏற்படுத்தினார். மே 28ந் தேதி முதல் ராசிக்கு 7ம் வீட்டில் வந்தமர்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் அமைப்பு உண்டாகும்.
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 29ந் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் நிற்பதால் கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவி வழியிலும் செலவு, அலைச்சல் இருக்கும். மனைவிக்கு முதுகு வலி, கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் ஆரோக்யம் கூடும்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சூரியன் 6ம் வீட்டில் தொடர்வதால் அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கும் உங்களுக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தவர்களின் சூழ்ச்சிகளைத் தாண்டி நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். மாணவர்களே! படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். ஆசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும்.
வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். அதிக முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் இதுவரை சந்தித்த அவமானங்கள், திடீர் இடமாற்றங்கள், வேலைச்சுமைகள் இவையெல்லாம் 28ந் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை, இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! நீர் வரத்து அதிகரிக்கும். மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். தடைகளைத் தாண்டி ஒருபடி முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 20, 21, 22, 23, 24, 30, 31, ஜூன் 1, 2, 7, 8, 9, 10, 11, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 15ந் தேதி மதியம் 2 மணி முதல் 16, 17 மற்றும் ஜூன் 12, 13, 14ந் தேதி காலை 8 மணி வரை எதிலும் ஒருவித படபடப்பும், வீண் அலைச்சலும் வந்துபோகும்.
பரிகாரம்:
திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 29ந் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் நிற்பதால் கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவி வழியிலும் செலவு, அலைச்சல் இருக்கும். மனைவிக்கு முதுகு வலி, கழுத்து வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் ஆரோக்யம் கூடும்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சூரியன் 6ம் வீட்டில் தொடர்வதால் அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கும் உங்களுக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தவர்களின் சூழ்ச்சிகளைத் தாண்டி நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். மாணவர்களே! படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். ஆசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும்.
வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். அதிக முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் இதுவரை சந்தித்த அவமானங்கள், திடீர் இடமாற்றங்கள், வேலைச்சுமைகள் இவையெல்லாம் 28ந் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை, இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! எண்ணங்கள் ஈடேறும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! நீர் வரத்து அதிகரிக்கும். மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். தடைகளைத் தாண்டி ஒருபடி முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 20, 21, 22, 23, 24, 30, 31, ஜூன் 1, 2, 7, 8, 9, 10, 11, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 15ந் தேதி மதியம் 2 மணி முதல் 16, 17 மற்றும் ஜூன் 12, 13, 14ந் தேதி காலை 8 மணி வரை எதிலும் ஒருவித படபடப்பும், வீண் அலைச்சலும் வந்துபோகும்.
பரிகாரம்:
திண்டிவனம் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம்: பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களான நீங்கள், 29ந் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். 30ந் தேதி முதல் சுக்கிரனும், 25ந் தேதி முதல் புதனும் 6ம் வீட்டில் மறைவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். சூரியன் 5ம் வீட்டிலேயே இந்த மாதம் முழுக்க தொடர்வதால் அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்து நீங்கும்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 6ல் சென்று மறைவதால் சிறு சிறு அவமானங்கள், வீண் பழிகள் வந்துநீங்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களின் நட்பை தவிர்த்துவிடுவது நல்லது. செவ்வாய் 20ந் தேதி வரை ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று தொடர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால், வக்ரமாகி ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யோசிக்காமல் திடீரென்று முடிவெடுத்து விட்டோமோ என்றெல்லாம் அவ்வப்போது குழம்புவீர்கள்.
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். தலைமையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்களே! தொடக்கத்திலேயே கல்விப் பிரிவை தெளிவாக தேர்ந்தெடுங்கள். இப்போது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு, அந்த கோர்ஸ் பிடிக்கவில்லையென்று மற்றொரு பிரிவில் சேர வேண்டாம். வியாபாரத்தில் மாதத்தின் முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஆனால் பிற்பகுதியில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.
உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருக்குமென்றாலும் மதிப்பும் மரியாதையும் குறையாது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
கலைத்துறையினரே! மாதத்தின் முற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பிற்பகுதியில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். குறுகியகாலப் பயிர்களை தவிர்க்கப் பாருங்கள். ராஜதந்திரத்தால் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 23, 24, 25, 26, 27 ஜூன் 3, 4, 5, 6, 8, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 18, 19, 20ந் தேதி காலை 8.30 மணி வரை மற்றும் ஜூன் 14ந் தேதி காலை 8 மணி முதல் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
பரிகாரம்:
வேலூருக்கு அருகேயுள்ள பள்ளூர் வராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு பானகம் கொடுங்கள்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்து கொண்டிருக்கும் குருபகவான் 28ந் தேதி முதல் 6ல் சென்று மறைவதால் சிறு சிறு அவமானங்கள், வீண் பழிகள் வந்துநீங்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களின் நட்பை தவிர்த்துவிடுவது நல்லது. செவ்வாய் 20ந் தேதி வரை ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று தொடர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால், வக்ரமாகி ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யோசிக்காமல் திடீரென்று முடிவெடுத்து விட்டோமோ என்றெல்லாம் அவ்வப்போது குழம்புவீர்கள்.
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். தலைமையைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்களே! தொடக்கத்திலேயே கல்விப் பிரிவை தெளிவாக தேர்ந்தெடுங்கள். இப்போது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு, அந்த கோர்ஸ் பிடிக்கவில்லையென்று மற்றொரு பிரிவில் சேர வேண்டாம். வியாபாரத்தில் மாதத்தின் முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஆனால் பிற்பகுதியில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.
உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருக்குமென்றாலும் மதிப்பும் மரியாதையும் குறையாது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
கலைத்துறையினரே! மாதத்தின் முற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பிற்பகுதியில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். குறுகியகாலப் பயிர்களை தவிர்க்கப் பாருங்கள். ராஜதந்திரத்தால் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 15, 16, 17, 23, 24, 25, 26, 27 ஜூன் 3, 4, 5, 6, 8, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 18, 19, 20ந் தேதி காலை 8.30 மணி வரை மற்றும் ஜூன் 14ந் தேதி காலை 8 மணி முதல் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
பரிகாரம்:
வேலூருக்கு அருகேயுள்ள பள்ளூர் வராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு பானகம் கொடுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|