புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..6..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu May 16, 2013 8:19 am

நண்பர்களே,
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!

என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!

மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .

உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !

பாடலுக்கு வருவோமே...

தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.

" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !

இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :


நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.


காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!

[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!

மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!

இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !

நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!

அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்

அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்

அன்பன்,
சுந்தரம்

The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'

The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .


குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 16, 2013 10:35 am

அழகான விளக்கம், அருமையான புகைப்படத் தேர்வு...பதிவிற்கு மிக்க நன்றி.

காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 1:31 pm

சிறப்பான பதிவு ..

தொடருங்கள் சுந்தரம் அவர்களே சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக