புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
1 என்னுடைய பசி இந்தியாவின் பசி
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
1 என்னுடைய பசி இந்தியாவின் பசி
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
52. நாம் எல்லோரும் தர்மகர்த்தாக்கள்
1936 - ஆம் ஆண்டுத்தொடக்கத்தில் சேவாகிராம ஆசிரமத்தில் நல்ல உடற்கட்டுள்ள இளைஞன் ஒருவன் காந்தியடிகளிடம் வந்து, ”தாங்கள் என்னை வேலைக்கு எடுத்துகொள்ளுங்கள்” என்று முறையிட்டார்.
வினோபாஜியைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தில் அவன் வேலைசெய்துகொண்டிருந்தான். ஆகையால் காந்தியடிகள் அவன் வேண்டுகோளை மறுக்க முடியாதிருந்தார். உன்னை நம் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொள்வோம். வேலைக்காரனாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம் யாரையும் வேலைக்கு வைத்துகொள்வதில்லை. வேறு எங்காவது இருந்தால் கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகமாகவே இங்கு கொடுப்போம்.
தவிர சாப்பாடு தனி. நம் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நீ வேலை செய்ய வேண்டும் - சட்டதிட்டங்கள் இவ்வளவுதான்” என்றார் காந்தியடிகள்.
சில மாதங்கள் வரை மிகுந்த நம்பிக்கையுடம் வேலை செய்துவந்தான். சிறிதும் சலிப்படையாமல் மகிழ்ச்சியாகவே வேலை செய்து வந்தான். தன் வேலை தவிர பன்சாலிஜி அவர்களுக்கு உதவுவது இதுபோன்ற வேறு சில வேலைகளையும்தானே விரும்பி ஏற்றக்கொண்டு செய்து வந்தான். தினமும் தவரறாமல் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்துகொள்வான். வேலை அதிகமிருந்தாலும் என்றும் போல் மகிழ்ச்சியாகவே செய்து வந்தான்.
ஆனால் அப்படியிருந்தும், பேராசை காரணமாக அவன் திருட்டுத் தொழில் இறங்கினான். முதலில் திருடிபோதுயாருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது தடவை திருடும்போது பிடிபட்டான். குற்றத்தை ஒப்புகொள்ள அவனுக்குத் துணிவு இல்லை. அனால் காந்தியடிகளோ தம்முடைய அன்பின் ஆற்றலால் அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்தார். அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டதனது எல்லோருடைய மனக்கண் முன்பாக ஓர் துக்ககரமான ஓவியத்தைத் தீட்டியது. நம் நாட்டிலுள்ள ஏழைகள் இழி நிலையிலிருந்து கொண்டு எப்படி வறுமையால் கஷ்டப்படுகிறார்கள் !
அந்த இளைஞன் முதல் தடவை தன் பசுவுக்குத் தீனி போடக்கொஞ்சம் கோதுமைத் தவிடு திருடினான். இந்தத்தடவை தன் தகப்பனாருக்காகச்சிறிது கோதுமையைத் திருடினான். பாவம், அவனுடைய கிழட்டுத் தந்தையோ நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரால் வேலை செய்ய முடியாது. வீட்டில் மனைவியும் நிறையக் குழந்தைகளும் இருந்தனர். வேறுவழியின்றி, மனைவி எங்கோ கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் பேணி வந்தாள். இதுதவிர இளைஞனுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். ஆனால் வீட்டில் சம்பாதிப்பவர்கள் இரண்டே பேர்கள் - இளைஞனும் அவனுடைய தாயாரும்தான். இளைஞனின் மனைவி வியாதிக்காரி.
கிழவர் பத்து மைல் தூரத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார். ஆசிரமத்துப்பகத்திலுள்ள சிறுவீட்டில் இளைஞன் இருந்தான். வீட்டிற்கு வாடகை மாதம் ஒன்றரை ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இது அவன் சம்பளத்தில் பத்து சதவீதத்திற்கு அதிகம்.
இளைஞன் மிகவும் வருத்தமுற்றிருந்தான். தன் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு நற்குணங்களைப் படைத்த அவன் திருட்டுத் தொழிலில் இறங்க வேண்டியிருந்தது. இதை நினைத்தபோது ஆசிரமவாசிகளுக்கு வருத்தம் ஏறபடத்தான் செய்த்து. இளைஞன் காந்தியடிகளிடம் கூறினான்: ‘தாங்கள் வரும்பும் தண்டனையை என்க்கு அளியுங்கள் தங்கள் முன்வரக்கூட எனக்குத் துணிவு இல்லை. எங்காவது ஓடிப்போய் விடலாமா என்றே நினைத்தேன். யாரிடமும் என் முகத்தை காட்ட விரும்பவில்லை. தாங்கள் என்மீது மிகுந்த அன்புசெலுத்தினீர்கள். தங்கள் வீட்டில் ஒருவனாகவே நினைத்தீர்கள் ஆனால் நான் தங்கள் அன்பைப்பெறத் தகுதியற்றவனாய் விட்டேன்.”
அதற்குக் காந்தியடிகள் கூறினார் - ”நான் உனக்கு எந்தத் தண்டைனையும் கொடுக்க விரும்பவில்லை. இங்கிருந்து வெளியேற்றவும் முடியாது. இனிமேலும் இம்மாதிரி தவற்றை மீண்டம் செய்ய வேண்டாம் என்று மட்டும் கூறுவேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேட்டு எடுத்துக்கொள்; திருடாதே. இங்கு இருப்பவைகள் எல்லாம் மக்களின் உடமை நாம் எல்லோரும் அதன் தர்மகர்த்தாக்கள். வேண்டுமானால், உன்னுடைய தகப்பனார் இந்தக் கோதுமையை எடுத்துக்கொண்டு போகலாம்.”
கிழவர் அங்குதான் நின்றுக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு கந்தலைக்காட்டி, ”இதையும் நான் எடுத்துப்போக அனுமதி அளியுங்கள்” என்றார்.
”எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பையன் ஒரு போதும் இப்படித் தலைகுனியும்படி செய்யக்கூடாது” என்றார் காந்தியடிகள்.
1936 - ஆம் ஆண்டுத்தொடக்கத்தில் சேவாகிராம ஆசிரமத்தில் நல்ல உடற்கட்டுள்ள இளைஞன் ஒருவன் காந்தியடிகளிடம் வந்து, ”தாங்கள் என்னை வேலைக்கு எடுத்துகொள்ளுங்கள்” என்று முறையிட்டார்.
வினோபாஜியைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தில் அவன் வேலைசெய்துகொண்டிருந்தான். ஆகையால் காந்தியடிகள் அவன் வேண்டுகோளை மறுக்க முடியாதிருந்தார். உன்னை நம் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொள்வோம். வேலைக்காரனாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம் யாரையும் வேலைக்கு வைத்துகொள்வதில்லை. வேறு எங்காவது இருந்தால் கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகமாகவே இங்கு கொடுப்போம்.
தவிர சாப்பாடு தனி. நம் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நீ வேலை செய்ய வேண்டும் - சட்டதிட்டங்கள் இவ்வளவுதான்” என்றார் காந்தியடிகள்.
சில மாதங்கள் வரை மிகுந்த நம்பிக்கையுடம் வேலை செய்துவந்தான். சிறிதும் சலிப்படையாமல் மகிழ்ச்சியாகவே வேலை செய்து வந்தான். தன் வேலை தவிர பன்சாலிஜி அவர்களுக்கு உதவுவது இதுபோன்ற வேறு சில வேலைகளையும்தானே விரும்பி ஏற்றக்கொண்டு செய்து வந்தான். தினமும் தவரறாமல் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்துகொள்வான். வேலை அதிகமிருந்தாலும் என்றும் போல் மகிழ்ச்சியாகவே செய்து வந்தான்.
ஆனால் அப்படியிருந்தும், பேராசை காரணமாக அவன் திருட்டுத் தொழில் இறங்கினான். முதலில் திருடிபோதுயாருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது தடவை திருடும்போது பிடிபட்டான். குற்றத்தை ஒப்புகொள்ள அவனுக்குத் துணிவு இல்லை. அனால் காந்தியடிகளோ தம்முடைய அன்பின் ஆற்றலால் அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்தார். அந்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டதனது எல்லோருடைய மனக்கண் முன்பாக ஓர் துக்ககரமான ஓவியத்தைத் தீட்டியது. நம் நாட்டிலுள்ள ஏழைகள் இழி நிலையிலிருந்து கொண்டு எப்படி வறுமையால் கஷ்டப்படுகிறார்கள் !
அந்த இளைஞன் முதல் தடவை தன் பசுவுக்குத் தீனி போடக்கொஞ்சம் கோதுமைத் தவிடு திருடினான். இந்தத்தடவை தன் தகப்பனாருக்காகச்சிறிது கோதுமையைத் திருடினான். பாவம், அவனுடைய கிழட்டுத் தந்தையோ நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரால் வேலை செய்ய முடியாது. வீட்டில் மனைவியும் நிறையக் குழந்தைகளும் இருந்தனர். வேறுவழியின்றி, மனைவி எங்கோ கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் பேணி வந்தாள். இதுதவிர இளைஞனுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். ஆனால் வீட்டில் சம்பாதிப்பவர்கள் இரண்டே பேர்கள் - இளைஞனும் அவனுடைய தாயாரும்தான். இளைஞனின் மனைவி வியாதிக்காரி.
கிழவர் பத்து மைல் தூரத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார். ஆசிரமத்துப்பகத்திலுள்ள சிறுவீட்டில் இளைஞன் இருந்தான். வீட்டிற்கு வாடகை மாதம் ஒன்றரை ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இது அவன் சம்பளத்தில் பத்து சதவீதத்திற்கு அதிகம்.
இளைஞன் மிகவும் வருத்தமுற்றிருந்தான். தன் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு நற்குணங்களைப் படைத்த அவன் திருட்டுத் தொழிலில் இறங்க வேண்டியிருந்தது. இதை நினைத்தபோது ஆசிரமவாசிகளுக்கு வருத்தம் ஏறபடத்தான் செய்த்து. இளைஞன் காந்தியடிகளிடம் கூறினான்: ‘தாங்கள் வரும்பும் தண்டனையை என்க்கு அளியுங்கள் தங்கள் முன்வரக்கூட எனக்குத் துணிவு இல்லை. எங்காவது ஓடிப்போய் விடலாமா என்றே நினைத்தேன். யாரிடமும் என் முகத்தை காட்ட விரும்பவில்லை. தாங்கள் என்மீது மிகுந்த அன்புசெலுத்தினீர்கள். தங்கள் வீட்டில் ஒருவனாகவே நினைத்தீர்கள் ஆனால் நான் தங்கள் அன்பைப்பெறத் தகுதியற்றவனாய் விட்டேன்.”
அதற்குக் காந்தியடிகள் கூறினார் - ”நான் உனக்கு எந்தத் தண்டைனையும் கொடுக்க விரும்பவில்லை. இங்கிருந்து வெளியேற்றவும் முடியாது. இனிமேலும் இம்மாதிரி தவற்றை மீண்டம் செய்ய வேண்டாம் என்று மட்டும் கூறுவேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேட்டு எடுத்துக்கொள்; திருடாதே. இங்கு இருப்பவைகள் எல்லாம் மக்களின் உடமை நாம் எல்லோரும் அதன் தர்மகர்த்தாக்கள். வேண்டுமானால், உன்னுடைய தகப்பனார் இந்தக் கோதுமையை எடுத்துக்கொண்டு போகலாம்.”
கிழவர் அங்குதான் நின்றுக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு கந்தலைக்காட்டி, ”இதையும் நான் எடுத்துப்போக அனுமதி அளியுங்கள்” என்றார்.
”எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பையன் ஒரு போதும் இப்படித் தலைகுனியும்படி செய்யக்கூடாது” என்றார் காந்தியடிகள்.
53.அதை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகத் தேவையில்லை
அந்நாட்களில் (அக்டோபர், 1935) மீரா பென்னுடைய பெரும்பகுதி நேரம் கிராமங்களில் குடிசைகள் தோறும் சென்று நோயாளிகளை விசாரித்து சிகிச்சையளிப்பதில் கழிந்தது. காந்தியடிகளின் கட்டளைப்டி நோயாளிகளுக்கு உள் நாட்டு மருந்துகளையே உபயோகிக்கும்படி ஆலோசனை கூறிவந்தார். தாகடரடைய பரிசோதனையும் கட்டாயமாகத் தேவைப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். நோயாளிகளின் பட்டியலில் ஒரு பசுவும் இருந்தது. மீராபென் தன் வேலையில் மிகவும் ஈடுபட்டிருந்தார். ஏதாவது பேசவேண்டியிந்தால் நோயாளிகளைப் பற்றித்தான் பேசுவார். ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து, ”பாபுஜி, அங்கு ஒரு பசுவின் கால்முறிந்து விட்டது. நன்கு பால் கறக்கக்கூடியது. சரியான முறையில் சிகிச்சை செய்யாவிட்டால் பால் முற்றிலும் வற்றிவிடும். டாக்டருக்குச்சொல்லி அனுப்பியதில் அவர் பசுவை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். அங்க தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியுமாம். எப்படி அதை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவ்வளவு தூரம் கொண்டு போவது என்றே தெரியவில்லை. அப்படிச்செய்யும்போது பசுவுக்கு மிகுந்த துன்பம் ஏற்படுமே” என்று தன்னுடைய அங்கலாய்ப்பை வெளிப்படுத்திக் கொண்டார்.
‘அதை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தேவையில்லை. நீ உடனே கால்நடை டாக்டரிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறு. அவரே கிரமத்திற்கு வந்து சிகிச்சையளிக்க வேண்டுமென்று அவரிடம் கூறு. இது அவருடைய கடமையும் கூட. பசுவைத் தூக்கி எழுப்பி வண்டியில் ஏற்றுவது கஷ்டம்தான். அதை தவிர ஆஸ்பத்திரி வரை எடுத்துக்கொண்டு போகும் வண்டிச்சத்தம் ஓர் ஏழையினால் எப்படிக் கொடுக்கமுடியும்?’ என்றார் காந்தியடிகள்.
காந்தியடிகளின் கருத்தை ஆமோதித்துவிட்டு அடுத்த நோயாளி பற்றி மீராபென் சொன்னாள்:- சில நாட்களுக்கு முன் ஒரு ஏழைப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. சத்துள்ள உணவு கிடைக்காத்தால் அவளுக்கு உடம்பில் இரத்தம் குறைந்துவிட்டது.’
காந்தியடிகள் சில மாத்திரைகளை மீரா பென்னிடம் கொடுத்துக்கொண்டே, ‘நீ இந்த மாத்திரைகளை அவளுக்குக்கொடுத்துக் ஒரு வாரத்திற்க்ப் பின் நிலைமை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிவி’ என்றார்.
அந்தப்பையனை என்ன செய்வது? அவன் புண்மீது ஈக்கள் மொய்த்து அதானல் அவன் மிகவும் கஷ்தப்படுகிறான் என்று மீராபென் அடுத்த படியாகக் கேட்டார்.
அதற்கு அடிகள், ‘எலுமிச்சம் பழத்தை இளம் வெந்நீரில் பிழிந்து புண்களை அதனால் நன்றாக்க் கழுவி விட்டு, போரிக்பவுடர் போட்டுக் கட்டிவிடு, போதும்’ என்றார்.
அந்நாட்களில் (அக்டோபர், 1935) மீரா பென்னுடைய பெரும்பகுதி நேரம் கிராமங்களில் குடிசைகள் தோறும் சென்று நோயாளிகளை விசாரித்து சிகிச்சையளிப்பதில் கழிந்தது. காந்தியடிகளின் கட்டளைப்டி நோயாளிகளுக்கு உள் நாட்டு மருந்துகளையே உபயோகிக்கும்படி ஆலோசனை கூறிவந்தார். தாகடரடைய பரிசோதனையும் கட்டாயமாகத் தேவைப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். நோயாளிகளின் பட்டியலில் ஒரு பசுவும் இருந்தது. மீராபென் தன் வேலையில் மிகவும் ஈடுபட்டிருந்தார். ஏதாவது பேசவேண்டியிந்தால் நோயாளிகளைப் பற்றித்தான் பேசுவார். ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து, ”பாபுஜி, அங்கு ஒரு பசுவின் கால்முறிந்து விட்டது. நன்கு பால் கறக்கக்கூடியது. சரியான முறையில் சிகிச்சை செய்யாவிட்டால் பால் முற்றிலும் வற்றிவிடும். டாக்டருக்குச்சொல்லி அனுப்பியதில் அவர் பசுவை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். அங்க தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியுமாம். எப்படி அதை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவ்வளவு தூரம் கொண்டு போவது என்றே தெரியவில்லை. அப்படிச்செய்யும்போது பசுவுக்கு மிகுந்த துன்பம் ஏற்படுமே” என்று தன்னுடைய அங்கலாய்ப்பை வெளிப்படுத்திக் கொண்டார்.
‘அதை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தேவையில்லை. நீ உடனே கால்நடை டாக்டரிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறு. அவரே கிரமத்திற்கு வந்து சிகிச்சையளிக்க வேண்டுமென்று அவரிடம் கூறு. இது அவருடைய கடமையும் கூட. பசுவைத் தூக்கி எழுப்பி வண்டியில் ஏற்றுவது கஷ்டம்தான். அதை தவிர ஆஸ்பத்திரி வரை எடுத்துக்கொண்டு போகும் வண்டிச்சத்தம் ஓர் ஏழையினால் எப்படிக் கொடுக்கமுடியும்?’ என்றார் காந்தியடிகள்.
காந்தியடிகளின் கருத்தை ஆமோதித்துவிட்டு அடுத்த நோயாளி பற்றி மீராபென் சொன்னாள்:- சில நாட்களுக்கு முன் ஒரு ஏழைப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. சத்துள்ள உணவு கிடைக்காத்தால் அவளுக்கு உடம்பில் இரத்தம் குறைந்துவிட்டது.’
காந்தியடிகள் சில மாத்திரைகளை மீரா பென்னிடம் கொடுத்துக்கொண்டே, ‘நீ இந்த மாத்திரைகளை அவளுக்குக்கொடுத்துக் ஒரு வாரத்திற்க்ப் பின் நிலைமை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிவி’ என்றார்.
அந்தப்பையனை என்ன செய்வது? அவன் புண்மீது ஈக்கள் மொய்த்து அதானல் அவன் மிகவும் கஷ்தப்படுகிறான் என்று மீராபென் அடுத்த படியாகக் கேட்டார்.
அதற்கு அடிகள், ‘எலுமிச்சம் பழத்தை இளம் வெந்நீரில் பிழிந்து புண்களை அதனால் நன்றாக்க் கழுவி விட்டு, போரிக்பவுடர் போட்டுக் கட்டிவிடு, போதும்’ என்றார்.
54. அந்தப் பையன் என்ன ஆனான்?
தென்னிந்தியாவில் மிக தூரத்திலுள்ள கிராமத்திலிருந்து ஹரிஜனப் பையன் ஒர்வன் பயிற்சிக்காக ஆசிரமத்திற்கு வர விருந்தான். ஒரு நண்பர் அவன் வருகையைத் தெரிவித்து, யாராவது ஒருவர் அவனை ரயிலடிக்குச் சென்று அழைத்துவர வேண்டுமெனவும் கேட்டுகொண்டிருந்தார். மகாதேவதேசாய் இதைத் தன்குறிப்பில் எழுதிக்கொண்டார். ஆனால் ரயிலடிக்கு ஆளை அனுப்ப மறந்துவிட்டார். பொதுவாக அவரே ரயிலடி செல்ல வேண்டியவர். ஆனால் வேலை மிகுதியும் பற்பல எண்ணங்களின் பளுவும் சேர்ந்து அவரை வேறு வேலை ஏதும் செய்யமுடியாதபடி தடுத்து விட்டன. அன்று காந்திஜிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகியிருந்தது. மறுநாள் டாக்டர்களின் ஆலோசனைக்கிணங்க அடிகள் பேசா நோன்பு மேற்கொண்டிருந்தார். வெகு நேரம் வரை மாகதேவ தேசாய் அங்குமிங்கும் பல வேலைகளைக் கவனித்துக்கொண்டிர்ந்தார். அவர் காந்தியடிகளிடம் சென்றபோது அடிகள் ‘அந்தப்பையன் என்ன ஆனான்? யாராவது ரயிலடிக்குப் போனார்களா? ‘ என ஒரு காகித்தில் எழுதி விசாரித்தார்.
இதைக்கேட்டு மாகதேவ பாயி (தேசாய்) மிகவும் வெட்கிப்போனார். அவரால் பதில் ஒன்றும் பேச முடியவில்லை. பையன் வந்துவிட்டானா இல்லையா என்பதை அறிய அவர் முனைந்தார். பையன் வந்து சேர்ந்திருந்தான். அவனுடைய தாய்மொழி தெரிந்த நண்பர் ஒருவரையும் கண்டுகொண்டிருந்தான். உணவு அருந்தி முடித்துவிட்டு ஆசிரம உறுப்பினருள் ஒருவனாகவும் சேர்ந்துவிட்டிருந்தான். காந்தியடிகள் அவனைக் கூப்பிடவிட்டார். அவனும் வந்து நின்றான். பின்னர் மாகதேவிடம் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி விசாரிக்கச் சொன்னார்.
காந்தியடிகள்: ‘அவனிடம் எப்போது வந்தானென்று கேள்’
பையன்: ‘இன்று காலை’
காந்தியடிகள்: ‘அவனிடம் எத்தனை மணிக்கு வந்து சேர்ந்தானென்று கேள்’
பையன்: ‘இன்று காலை’
காந்தியடிகள்: ‘காலை எத்தனை மணிக்கு? இங்கு வருவதில் எவ்வளவு நேரம் செலவழிந்துது? யார் வழி காண்பித்தார்கள்?
பையன்: ‘ரயிலடியிலிருந்து நேராக இங்கு தான் வந்து சேர்ந்தேன்’
காந்தியடிகள்: ‘இடம் தெரிந்து கொள்வதில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டதா?’
பையன்: ‘இல்லை, ஒருவர் வழி காட்டினார்’
காந்தியடிகள்: ‘யார் உனக்கு வழி காட்டியது? அவரிடம் நீ எப்படிப் பேசினாய்? உனக்கு இந்தி தெரியுமா?’
பையன்:’ஆம்,ஏதோ கொஞ்சம் தெரியும்’
காந்தியடிகள்: ஏதாவது கடிதம் கொண்டுவந்திருக்கிறானா இல்லையா என்ற அவனிடம் கேள்.’
அப்பொழுது அந்தப் பையன் தான் கொண்டு வந்த கடிதம், பழம், தேன் முதலியலைகளைக்காந்தியடிகள் முன் வைத்து வணங்கினான். ‘இப்பொழுது இவனை…ரிடம் அழைத்துச் செல்லவும். இவனைச் சேர்த்துகொ கொள்ளலாம் என அவரிடம் சொல்லவும். இவனூடைய தேவைகளைக் கவனித்து கொள்ளவும் சொல்வீர்கள்’ என்று காந்தியடிள் எழுதிக் கொடுத்தார்.
அதன் பின் அடிகள் பேசாமலிருந்து விட்டார். மகாதேவுக்கு உயிர்போன மாதிரி தத்தளித்தார். அடிகள் பேசியிருந்தாலும் கூட இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்ல. தேசாயின் அசட்டைத்தனம் அடிகளை மிகவும் வருத்திவிட்டது. ‘திருமதி சேங்கர் அல்லது சர்தார் படேல் போன்றவர்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு போவார். அவர்களைவிட இவன் முக்கியமானவன். இவன் ஹரிஜனப் பையன், அதிலும் சிறு பையன், தெலுங்கு தவிர இவனுக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தானிருந்த் இடத்திலிருந்து இது வரை வெளியே கிளம்பியதில்லை.’ இதையெல்லாம் இது வரை வெளியே கிளம்பியதில்லை.’ இதையெல்லாம் நினைத்துகொ காந்தியடிகளுக்கு இன்னும் ரத்த அழுத்தம் அதிகமாகி இருக்கும் என்றெல்லாம் நினைத்து மகாதேவ தேசாய் மனம் வருந்தினார்.
தென்னிந்தியாவில் மிக தூரத்திலுள்ள கிராமத்திலிருந்து ஹரிஜனப் பையன் ஒர்வன் பயிற்சிக்காக ஆசிரமத்திற்கு வர விருந்தான். ஒரு நண்பர் அவன் வருகையைத் தெரிவித்து, யாராவது ஒருவர் அவனை ரயிலடிக்குச் சென்று அழைத்துவர வேண்டுமெனவும் கேட்டுகொண்டிருந்தார். மகாதேவதேசாய் இதைத் தன்குறிப்பில் எழுதிக்கொண்டார். ஆனால் ரயிலடிக்கு ஆளை அனுப்ப மறந்துவிட்டார். பொதுவாக அவரே ரயிலடி செல்ல வேண்டியவர். ஆனால் வேலை மிகுதியும் பற்பல எண்ணங்களின் பளுவும் சேர்ந்து அவரை வேறு வேலை ஏதும் செய்யமுடியாதபடி தடுத்து விட்டன. அன்று காந்திஜிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகியிருந்தது. மறுநாள் டாக்டர்களின் ஆலோசனைக்கிணங்க அடிகள் பேசா நோன்பு மேற்கொண்டிருந்தார். வெகு நேரம் வரை மாகதேவ தேசாய் அங்குமிங்கும் பல வேலைகளைக் கவனித்துக்கொண்டிர்ந்தார். அவர் காந்தியடிகளிடம் சென்றபோது அடிகள் ‘அந்தப்பையன் என்ன ஆனான்? யாராவது ரயிலடிக்குப் போனார்களா? ‘ என ஒரு காகித்தில் எழுதி விசாரித்தார்.
இதைக்கேட்டு மாகதேவ பாயி (தேசாய்) மிகவும் வெட்கிப்போனார். அவரால் பதில் ஒன்றும் பேச முடியவில்லை. பையன் வந்துவிட்டானா இல்லையா என்பதை அறிய அவர் முனைந்தார். பையன் வந்து சேர்ந்திருந்தான். அவனுடைய தாய்மொழி தெரிந்த நண்பர் ஒருவரையும் கண்டுகொண்டிருந்தான். உணவு அருந்தி முடித்துவிட்டு ஆசிரம உறுப்பினருள் ஒருவனாகவும் சேர்ந்துவிட்டிருந்தான். காந்தியடிகள் அவனைக் கூப்பிடவிட்டார். அவனும் வந்து நின்றான். பின்னர் மாகதேவிடம் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி விசாரிக்கச் சொன்னார்.
காந்தியடிகள்: ‘அவனிடம் எப்போது வந்தானென்று கேள்’
பையன்: ‘இன்று காலை’
காந்தியடிகள்: ‘அவனிடம் எத்தனை மணிக்கு வந்து சேர்ந்தானென்று கேள்’
பையன்: ‘இன்று காலை’
காந்தியடிகள்: ‘காலை எத்தனை மணிக்கு? இங்கு வருவதில் எவ்வளவு நேரம் செலவழிந்துது? யார் வழி காண்பித்தார்கள்?
பையன்: ‘ரயிலடியிலிருந்து நேராக இங்கு தான் வந்து சேர்ந்தேன்’
காந்தியடிகள்: ‘இடம் தெரிந்து கொள்வதில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டதா?’
பையன்: ‘இல்லை, ஒருவர் வழி காட்டினார்’
காந்தியடிகள்: ‘யார் உனக்கு வழி காட்டியது? அவரிடம் நீ எப்படிப் பேசினாய்? உனக்கு இந்தி தெரியுமா?’
பையன்:’ஆம்,ஏதோ கொஞ்சம் தெரியும்’
காந்தியடிகள்: ஏதாவது கடிதம் கொண்டுவந்திருக்கிறானா இல்லையா என்ற அவனிடம் கேள்.’
அப்பொழுது அந்தப் பையன் தான் கொண்டு வந்த கடிதம், பழம், தேன் முதலியலைகளைக்காந்தியடிகள் முன் வைத்து வணங்கினான். ‘இப்பொழுது இவனை…ரிடம் அழைத்துச் செல்லவும். இவனைச் சேர்த்துகொ கொள்ளலாம் என அவரிடம் சொல்லவும். இவனூடைய தேவைகளைக் கவனித்து கொள்ளவும் சொல்வீர்கள்’ என்று காந்தியடிள் எழுதிக் கொடுத்தார்.
அதன் பின் அடிகள் பேசாமலிருந்து விட்டார். மகாதேவுக்கு உயிர்போன மாதிரி தத்தளித்தார். அடிகள் பேசியிருந்தாலும் கூட இவ்வளவு கவலைப்பட வேண்டியதில்ல. தேசாயின் அசட்டைத்தனம் அடிகளை மிகவும் வருத்திவிட்டது. ‘திருமதி சேங்கர் அல்லது சர்தார் படேல் போன்றவர்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு போவார். அவர்களைவிட இவன் முக்கியமானவன். இவன் ஹரிஜனப் பையன், அதிலும் சிறு பையன், தெலுங்கு தவிர இவனுக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தானிருந்த் இடத்திலிருந்து இது வரை வெளியே கிளம்பியதில்லை.’ இதையெல்லாம் இது வரை வெளியே கிளம்பியதில்லை.’ இதையெல்லாம் நினைத்துகொ காந்தியடிகளுக்கு இன்னும் ரத்த அழுத்தம் அதிகமாகி இருக்கும் என்றெல்லாம் நினைத்து மகாதேவ தேசாய் மனம் வருந்தினார்.
55. சீசாவைக்கொண்டு நன்றாகச் சப்பாத்தி உருட்ட முடியும்.
எரவாடா சிறையில் மகாதேதேசாய் காந்தியடிகளுடன் இருந்தார். ஒரு தடவை சப்பாத்தி செய்வதற்காக உருளை ஒன்று தேவைப்பட்டது. இரண்டு மூன்று தடவை கேட்டும் உருளை கிடைக்கவில்லை. கடைசியாக வார்டர் வந்து, ‘இன்று மட்டும் சீசாவை வைத்துக் கொண்டு சப்பாத்தி தயாரித்துக் கொள்ளுங்கள். நாள அவசியம் உருளையை வரவழைத்துத் தருகிறேன்.” என்றார்.
‘இங்கு சீசாவைக் கொண்டே ரொட்டி தயாரிக்கும் ஆட்களும் இருக்கிறார்களோ!’ என வல்லபாய் வேடிக்கையாக கேட்டார்.
‘ஆமாம், வல்லபாய், சீசாவின் உதவியால் சப்பாத்தியை நன்றாக உருட்டலாமே’ என்றார் காந்தியடிகள்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இம் முறையைத் தான் கையாண்டிருந்தார். விவாதித்துக் கொண்டிருக்கும்போது தாங்கள் போனிக்கஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது சமையல்காரன் இருந்தான் அல்லவா?’ என வினவினார் மகாதேவ தேசாய்.
பழைய நினைவுகளில் ஈடுபட்டவராய்க் காந்தியடிகள்தம் அனுபவங்களைக்கூறலானார். ‘நான் போனிக்ஸ் பண்ணைக்கு போய்ச் சேருவதற்கு முன்பே சமையற்காரன் போய்விட்டிருந்தான்; முதலில் ஒரு பிராமணன் சமைத்துகொ கொண்டிருந்தான். அவன் மிகவும் நல்லவன். அவன் போன பிறகு வந்தான் ஒருவன். இவன் மிகந்த பிடிவாதக்காரன். மிளகாந்க்காரம் முதலானவறைறை சேர்க்காவிட்டால் சமையலே நடக்காது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான்: நீ தாராளமாகப்போய்விடலாம் என்று கூறி அனுப்பிவிட்டேன். அதன்பிறகு சமையலுக்கு என்று ஆள் இல்லாமலே எல்லா வேலைகளும் நடைபெறலாயின உணவு சமைப்பது, துணிகளைத்துவைப்பது மல மூத்திர விடுதிகளைத் துப்பரவு செய்வது ஆகிய எல்லா வீட்டு வேலைகளையும் நாங்களே செய்யத் தொடங்கிவிட்டோம் . மாவரைப்பதற்கு என்று ஆறுபவுன் விலையில் ஒரு இரும்புச் ‘சக்கி’ வாங்கியிருந்தோம். ஒருவரால் அந்தச்சக்கியை ஆட்ட முடியாது இரண்டுபேர் சேர்ந்து களிப்புடன் அரைத்துவிடுவார்கள். விடியற்காலையில் எழுந்ததும் என் முதல் வேலை மாவரைப்பதுதான்: விருப்பமுள்ள யாராவது என்னுடன் சேர்ந்து கொள்வார்கள். 15 நிமிடங்களில் தேவையான மாவை அரைத்துவிடுவோம்.
எரவாடா சிறையில் மகாதேதேசாய் காந்தியடிகளுடன் இருந்தார். ஒரு தடவை சப்பாத்தி செய்வதற்காக உருளை ஒன்று தேவைப்பட்டது. இரண்டு மூன்று தடவை கேட்டும் உருளை கிடைக்கவில்லை. கடைசியாக வார்டர் வந்து, ‘இன்று மட்டும் சீசாவை வைத்துக் கொண்டு சப்பாத்தி தயாரித்துக் கொள்ளுங்கள். நாள அவசியம் உருளையை வரவழைத்துத் தருகிறேன்.” என்றார்.
‘இங்கு சீசாவைக் கொண்டே ரொட்டி தயாரிக்கும் ஆட்களும் இருக்கிறார்களோ!’ என வல்லபாய் வேடிக்கையாக கேட்டார்.
‘ஆமாம், வல்லபாய், சீசாவின் உதவியால் சப்பாத்தியை நன்றாக உருட்டலாமே’ என்றார் காந்தியடிகள்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இம் முறையைத் தான் கையாண்டிருந்தார். விவாதித்துக் கொண்டிருக்கும்போது தாங்கள் போனிக்கஸ் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது சமையல்காரன் இருந்தான் அல்லவா?’ என வினவினார் மகாதேவ தேசாய்.
பழைய நினைவுகளில் ஈடுபட்டவராய்க் காந்தியடிகள்தம் அனுபவங்களைக்கூறலானார். ‘நான் போனிக்ஸ் பண்ணைக்கு போய்ச் சேருவதற்கு முன்பே சமையற்காரன் போய்விட்டிருந்தான்; முதலில் ஒரு பிராமணன் சமைத்துகொ கொண்டிருந்தான். அவன் மிகவும் நல்லவன். அவன் போன பிறகு வந்தான் ஒருவன். இவன் மிகந்த பிடிவாதக்காரன். மிளகாந்க்காரம் முதலானவறைறை சேர்க்காவிட்டால் சமையலே நடக்காது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான்: நீ தாராளமாகப்போய்விடலாம் என்று கூறி அனுப்பிவிட்டேன். அதன்பிறகு சமையலுக்கு என்று ஆள் இல்லாமலே எல்லா வேலைகளும் நடைபெறலாயின உணவு சமைப்பது, துணிகளைத்துவைப்பது மல மூத்திர விடுதிகளைத் துப்பரவு செய்வது ஆகிய எல்லா வீட்டு வேலைகளையும் நாங்களே செய்யத் தொடங்கிவிட்டோம் . மாவரைப்பதற்கு என்று ஆறுபவுன் விலையில் ஒரு இரும்புச் ‘சக்கி’ வாங்கியிருந்தோம். ஒருவரால் அந்தச்சக்கியை ஆட்ட முடியாது இரண்டுபேர் சேர்ந்து களிப்புடன் அரைத்துவிடுவார்கள். விடியற்காலையில் எழுந்ததும் என் முதல் வேலை மாவரைப்பதுதான்: விருப்பமுள்ள யாராவது என்னுடன் சேர்ந்து கொள்வார்கள். 15 நிமிடங்களில் தேவையான மாவை அரைத்துவிடுவோம்.
56. நம்பிக்கை என்பது பெரியவிஷயம்
எரவாடா சிறையில் காந்தியடிகள் மகன் சர்க்காவைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். நூற்று நூற்று வலது கை பழக்கப்பட்டு விட்டதால் காந்தியடிகளுக்கு ஆர்வம் அதிகமாயிற்று. ஆனால் மறுநாள் ஏதோ கோளாறினால் சர்க்கா நின்றுவிட்டது. ஒன்பது- பத்து மணிவரை அதில் நூற்றார். ஆனால் பஞ்சுப்பட்டைகள் வீணானதே தவிர பயன் ஒன்றுமில்ல்ஐ. பிற்பகலிலும் இப்படியே ஆயிற்று. செய்த எல்லா முயற்சிகளும் வீணாயின. வல்லபாய் படேல் அப்பொழுதான் தூங்கி எழுந்திருந்தார். அவருக்கு காந்தியடிகளின் கஷ்டம் முழுவதும் தெரிந்திருக்கவில்லை. எனவே ஏராளமாய் நூற்றாய் விட்டது. மூடி வையுங்கள் போதும்’
‘ஆமாம். ஏராளமாக நூற்றுவிட்டேன். ஆனால் நமது நூற்போர் சங்கம் மூடப்பட்டுவிடாது’ என்றார் காந்திஜி.
‘தாங்கள் நூற்றிருக்கும் லட்சணத்தைக்கீழே பார்த்தாலே தெரிகிறதே’ என்று கேலியாக்க கூறினார் வல்லபாய்.
ஆனால் பொழுது சாய சாய தொடர்ந்து கேலி செய்ய முடியவில்லை வல்லபாய்க்கு.
காந்தியடிகள் இடது கையால் ஆரம்பித்தார். ஐந்து மணி நேரம் விடாமல் முயன்றிருப்பார். எனவே மாலையில் மிகவும் களைத்துப் போய் உடனே தூங்கச் சென்றுவிட்டார். போகும் போது வல்லபாயிடம், ”பாருங்கள், நாளை காலை சர்க்கா கட்டாயம் நன்றாக வேலை செய்யும். நம்பிக்கை என்பது பெரிய விஷயம்’ என்றார் அடிகள்.
வல்லபாய்: ”இதிலும் நம்பிக்கையா?”
காந்தியடிகள்: ”ஆம், ஆம், கட்டாயம் நம்பிக்கை வேண்டும்.”
மறுநாள் அவர் எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றி கண்டார். மூன்று மணி நேரம் நூற்று 131 சுற்றி நூற்றார். வல்லபாயிடம் ”பாருங்கள், இன்று பலன் எப்படி?” என்று அடிகள் கேட்டார்.
வல்லபாய்: ஆம், பார்த்துக்கொண்டிருக்கிறேன். கீழே வேண்டிய அளவு கிடக்கிறது.”
காந்தியடிகள்: இந்தக் கதிர் முழுவதும் நிரம்பியதும் நீங்களே மனநிறைவு கொள்வீர்கள்.”
மூன்றாம் நாள் நூற்றுக்கொண்டே, ”இது ஒரு நல்ல பாடமாகும்.” என்றார் அடிகள்.
”இது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோமே” என்று பதிலளித்தார், மகாதேவ தேசாய்.
”இல்லை, நான் இந்தப் பொருளில் கூறவில்லை. 63 வயதில் நான் இவ்வளவு உழைக்கிறேன், இது உங்களுக்கு படிப்பினையாக இருக்கும். ஆனால், எனக்கு இந்த வயதிலும் இப்படிப்பட்ட வேலை செய்வதில் தனித்த ஆர்வம் இருக்கிதென்றே கூறுகிறேன். உழைப்பின் பெருமையே தனி. பிள்ளைய்ப் பெற பிரசவ வேதனையை அனுபவிக்கும் பெண் தான் தன்னுடைய கஷ்டத்தின் பெருமையை உணர்வாள்’ என்று காந்தியடிகள் கூறினார்.
எரவாடா சிறையில் காந்தியடிகள் மகன் சர்க்காவைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். நூற்று நூற்று வலது கை பழக்கப்பட்டு விட்டதால் காந்தியடிகளுக்கு ஆர்வம் அதிகமாயிற்று. ஆனால் மறுநாள் ஏதோ கோளாறினால் சர்க்கா நின்றுவிட்டது. ஒன்பது- பத்து மணிவரை அதில் நூற்றார். ஆனால் பஞ்சுப்பட்டைகள் வீணானதே தவிர பயன் ஒன்றுமில்ல்ஐ. பிற்பகலிலும் இப்படியே ஆயிற்று. செய்த எல்லா முயற்சிகளும் வீணாயின. வல்லபாய் படேல் அப்பொழுதான் தூங்கி எழுந்திருந்தார். அவருக்கு காந்தியடிகளின் கஷ்டம் முழுவதும் தெரிந்திருக்கவில்லை. எனவே ஏராளமாய் நூற்றாய் விட்டது. மூடி வையுங்கள் போதும்’
‘ஆமாம். ஏராளமாக நூற்றுவிட்டேன். ஆனால் நமது நூற்போர் சங்கம் மூடப்பட்டுவிடாது’ என்றார் காந்திஜி.
‘தாங்கள் நூற்றிருக்கும் லட்சணத்தைக்கீழே பார்த்தாலே தெரிகிறதே’ என்று கேலியாக்க கூறினார் வல்லபாய்.
ஆனால் பொழுது சாய சாய தொடர்ந்து கேலி செய்ய முடியவில்லை வல்லபாய்க்கு.
காந்தியடிகள் இடது கையால் ஆரம்பித்தார். ஐந்து மணி நேரம் விடாமல் முயன்றிருப்பார். எனவே மாலையில் மிகவும் களைத்துப் போய் உடனே தூங்கச் சென்றுவிட்டார். போகும் போது வல்லபாயிடம், ”பாருங்கள், நாளை காலை சர்க்கா கட்டாயம் நன்றாக வேலை செய்யும். நம்பிக்கை என்பது பெரிய விஷயம்’ என்றார் அடிகள்.
வல்லபாய்: ”இதிலும் நம்பிக்கையா?”
காந்தியடிகள்: ”ஆம், ஆம், கட்டாயம் நம்பிக்கை வேண்டும்.”
மறுநாள் அவர் எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றி கண்டார். மூன்று மணி நேரம் நூற்று 131 சுற்றி நூற்றார். வல்லபாயிடம் ”பாருங்கள், இன்று பலன் எப்படி?” என்று அடிகள் கேட்டார்.
வல்லபாய்: ஆம், பார்த்துக்கொண்டிருக்கிறேன். கீழே வேண்டிய அளவு கிடக்கிறது.”
காந்தியடிகள்: இந்தக் கதிர் முழுவதும் நிரம்பியதும் நீங்களே மனநிறைவு கொள்வீர்கள்.”
மூன்றாம் நாள் நூற்றுக்கொண்டே, ”இது ஒரு நல்ல பாடமாகும்.” என்றார் அடிகள்.
”இது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோமே” என்று பதிலளித்தார், மகாதேவ தேசாய்.
”இல்லை, நான் இந்தப் பொருளில் கூறவில்லை. 63 வயதில் நான் இவ்வளவு உழைக்கிறேன், இது உங்களுக்கு படிப்பினையாக இருக்கும். ஆனால், எனக்கு இந்த வயதிலும் இப்படிப்பட்ட வேலை செய்வதில் தனித்த ஆர்வம் இருக்கிதென்றே கூறுகிறேன். உழைப்பின் பெருமையே தனி. பிள்ளைய்ப் பெற பிரசவ வேதனையை அனுபவிக்கும் பெண் தான் தன்னுடைய கஷ்டத்தின் பெருமையை உணர்வாள்’ என்று காந்தியடிகள் கூறினார்.
57. எரவாடா உடன்படிக்கையின் நிபந்தனைகள் சரிவர நிறைவேறியாக வேண்டும்
காந்தியடிகள் தென்னிந்திய யாத்திரையில் இருந்தபோது ஒருவாரத்திற்கு நல்ல ஓய்வு எடுத்துகொண்டார். யாத்திரை சிறிது ஒத்திப்போடப்பட்டது. ஆனால் குழுக்களாக வரும் பிரிதிநிதிகளைச் சந்தித்து வந்தார். ஹரிஜனங்களின் இரு பிரதிநிதிக் குழுவினர் அவரை சந்தித்தனர். முதலாவது குழு மலைவாழ் மக்களுடையது. இந்த இயக்கத்தினால் அப்பிரதிநிதிகளுக்கு மிகுந்து மகிழ்ச்சி ஏற்ப்பட்டது. அவர்களுடைய முக்கிய குறை ஹிந்துக்ககளுக்கெதிராக்க்கூட அல்ல; ஆனால் தங்களுடைய பொருளாதார நிலைமையை சீர்படுத்திக்கொள்வதில் தான் மிக்க கவலை கொண்டிருந்தனர். இதற்கு நேர் எதிரிடையானது கோயமுத்தூரிலிருந்து வந்திருந்த வேறொரு பிரதிநிதிக்குழு. அவர்களிடம் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு பெரும் குற்றச்சாட்டு மனு இருந்தது. ”தங்களைப் போன்ற மகான்கள் ஆதித்திராவிடர்களான எங்கள் குலத்தில் தோன்றி இச்சமூகத்தில் உள்ள கஷ்டநஷ்டங்களைத் தாங்கள் அனுபவிக்கவில்லையே என்பது தான் வருத்தம்’ என்ற அளவிற்கும் அவர்கள் பேசி விட்டார்கள்.
காந்தியடிகள் அவர்களுக்கு ஆறுதலளித்தார். ஒருமணி நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். வந்திருப்பவர்களில் ஒருவர், பார்வைக்காக ஒதுக்கப்பட்டிருந்த குறித்த நேரம் முடிவடைந்து விட்டது என நினைவூட்டியபோது காந்தியடிகள் சொன்னார். ”என்னுடைய முழுமனதைய்மு இவர்களுக்குத் திறந்து காட்டினாலொழிய இச்சகோதர்ர்களை இங்கிருந்து போகச்சொல்ல முடியாது. எரவாடா உடன்படிக்கையின் நிபந்தனைகள் சரிவர நிறைவேறியாக வேண்டும். அதற்கு நான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஆகையால்தான் நான் ‘எரவாடா மந்திரின்’ அமைதியை விட்டு விட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பியிருக்கிறேன்.’
இந்த நீண்ட உரையாடலின் முடிவில் பிரதிநிதிக்குழுவைச் சேர்ந்த முதிய அம்மையார் ஒருவர் காந்தியடிகளுக்கு இரண்டு ஆரஞ்சுப் பழங்களை அன்பளிப்பாக வழங்கினார். அன்புடன் அளித்த அப்பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டே காந்தியடிகள், ”நண்பர்கறே இப்பழங்களுள் உங்களுடைய பூரண அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பியிருக்கும்போது இவற்றை நான் ஏற்காமலிருப்பது எங்ஙனம்?” என்றார்.
காந்தியடிகள் தென்னிந்திய யாத்திரையில் இருந்தபோது ஒருவாரத்திற்கு நல்ல ஓய்வு எடுத்துகொண்டார். யாத்திரை சிறிது ஒத்திப்போடப்பட்டது. ஆனால் குழுக்களாக வரும் பிரிதிநிதிகளைச் சந்தித்து வந்தார். ஹரிஜனங்களின் இரு பிரதிநிதிக் குழுவினர் அவரை சந்தித்தனர். முதலாவது குழு மலைவாழ் மக்களுடையது. இந்த இயக்கத்தினால் அப்பிரதிநிதிகளுக்கு மிகுந்து மகிழ்ச்சி ஏற்ப்பட்டது. அவர்களுடைய முக்கிய குறை ஹிந்துக்ககளுக்கெதிராக்க்கூட அல்ல; ஆனால் தங்களுடைய பொருளாதார நிலைமையை சீர்படுத்திக்கொள்வதில் தான் மிக்க கவலை கொண்டிருந்தனர். இதற்கு நேர் எதிரிடையானது கோயமுத்தூரிலிருந்து வந்திருந்த வேறொரு பிரதிநிதிக்குழு. அவர்களிடம் ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு பெரும் குற்றச்சாட்டு மனு இருந்தது. ”தங்களைப் போன்ற மகான்கள் ஆதித்திராவிடர்களான எங்கள் குலத்தில் தோன்றி இச்சமூகத்தில் உள்ள கஷ்டநஷ்டங்களைத் தாங்கள் அனுபவிக்கவில்லையே என்பது தான் வருத்தம்’ என்ற அளவிற்கும் அவர்கள் பேசி விட்டார்கள்.
காந்தியடிகள் அவர்களுக்கு ஆறுதலளித்தார். ஒருமணி நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். வந்திருப்பவர்களில் ஒருவர், பார்வைக்காக ஒதுக்கப்பட்டிருந்த குறித்த நேரம் முடிவடைந்து விட்டது என நினைவூட்டியபோது காந்தியடிகள் சொன்னார். ”என்னுடைய முழுமனதைய்மு இவர்களுக்குத் திறந்து காட்டினாலொழிய இச்சகோதர்ர்களை இங்கிருந்து போகச்சொல்ல முடியாது. எரவாடா உடன்படிக்கையின் நிபந்தனைகள் சரிவர நிறைவேறியாக வேண்டும். அதற்கு நான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஆகையால்தான் நான் ‘எரவாடா மந்திரின்’ அமைதியை விட்டு விட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பியிருக்கிறேன்.’
இந்த நீண்ட உரையாடலின் முடிவில் பிரதிநிதிக்குழுவைச் சேர்ந்த முதிய அம்மையார் ஒருவர் காந்தியடிகளுக்கு இரண்டு ஆரஞ்சுப் பழங்களை அன்பளிப்பாக வழங்கினார். அன்புடன் அளித்த அப்பழங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டே காந்தியடிகள், ”நண்பர்கறே இப்பழங்களுள் உங்களுடைய பூரண அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பியிருக்கும்போது இவற்றை நான் ஏற்காமலிருப்பது எங்ஙனம்?” என்றார்.
58. நேராக வைப்பதில் தான் சிறப்பு இருக்கிறது.
எரவாடா சிறையில் காந்தியடிகள் பின்னால் சாய்ந்து கொள்ளப்பலகை ஒன்றை வைத்துக்கொண்டு உட்காருவது வழக்கம். ஆனால் அவர் அந்தப் பலகையைச் சுவற்றுடன் நேராகவே நிமிர்ந்து வைப்பார்; சாய்வாக வைப்பதில்லை. மகாதேவ தேசாய் சொன்னார், ‘பாபு, தாங்கள் பலகையைச் சற்று சாய்வாக வைத்தால் அது விழாது; சாய்ந்து கொள்ளவும் வசிதியாயிருக்கும்’ என்றார்.
‘வசதி என்னமோ கிடைக்கும். ஆனால் நேராக வைப்பதில் தான் சிறப்பு இருக்கிறது. இதனால் இடுப்பும் முதுகெலும்பும் நேராக இருக்கும்; இல்லையென்றால் அவைகூனிவிடும். உலக வழக்கு என்னவெனில் ஒரு பொருளை நேராக வைத்தால் அதை ஒட்டி வைக்கப்படும் எல்லாமே நேராகவே இருக்க வேண்டும். சாய்வாக அல்லது கோணலாக வைத்தால் அதற்கிடையில் பலமாசிகள் படிந்துவிடும்’ என்று பதிலளித்தார் காந்தியடிகள்.
எரவாடா சிறையில் காந்தியடிகள் பின்னால் சாய்ந்து கொள்ளப்பலகை ஒன்றை வைத்துக்கொண்டு உட்காருவது வழக்கம். ஆனால் அவர் அந்தப் பலகையைச் சுவற்றுடன் நேராகவே நிமிர்ந்து வைப்பார்; சாய்வாக வைப்பதில்லை. மகாதேவ தேசாய் சொன்னார், ‘பாபு, தாங்கள் பலகையைச் சற்று சாய்வாக வைத்தால் அது விழாது; சாய்ந்து கொள்ளவும் வசிதியாயிருக்கும்’ என்றார்.
‘வசதி என்னமோ கிடைக்கும். ஆனால் நேராக வைப்பதில் தான் சிறப்பு இருக்கிறது. இதனால் இடுப்பும் முதுகெலும்பும் நேராக இருக்கும்; இல்லையென்றால் அவைகூனிவிடும். உலக வழக்கு என்னவெனில் ஒரு பொருளை நேராக வைத்தால் அதை ஒட்டி வைக்கப்படும் எல்லாமே நேராகவே இருக்க வேண்டும். சாய்வாக அல்லது கோணலாக வைத்தால் அதற்கிடையில் பலமாசிகள் படிந்துவிடும்’ என்று பதிலளித்தார் காந்தியடிகள்.
59. சிறை ஊழியர்கள் கைதிகளின் உதவிக்காக இருக்கிறார்கள்.
காந்தியடிகளை சந்திப்பதற்காக அன்று எரவாடா சிறைக்கு வந்த பல அன்பர்களில் ஜம்னாதாஸ், ப்ரேல்வி ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து மிகந்த நகைச் சுவையுடன் அடிகள் பேசிக்கொண்டிருந்தார். சிறை ஊழியர்கள் இவர்களின் மீது பல கட்டு திட்டங்களைச் சுமத்தியிருந்தனர். இதனால் இவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எதையும் தைரியமாக்க் கேட்ட முடியவில்லை. ‘உங்கள் கருத்துக்கள் எதையும் தெரிவிக்க மாட்டேன் என்கிறீர்களே’ கட்டாயமாக இவர்களை பேச வைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு அடிகள்.
‘நாசிக்கில் நிலைமை இதைவிட சீராக இருந்ததா அல்லது மோசமாக இருந்தது?’ இவ்வாறு வேறு பல கேள்விகளையும் காந்தியடிகள் கேட்டார்.
இதறகுச் சூப்பரின்டெண்ட் பதில் அளித்தார். ‘இவர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு மணிக்கே கைதிகளை அடைத்துவிடுகிறார்கள். இவர்களுக்கு இது வசதியில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறை ஊழியர்களை அதிக நேரம் தங்க வைதப்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது’ என்றார் சிறை அதிகாரி. ‘இதைத் தவிர்க்க முடியாது. ஊழியர்கள் கைதிகளுக்காகவு அல்லது கைதிகள் ஊழியர்களுக்காகவா?’ என்று காந்தியடிகள் கேட்டார்.
சிறை அதிகாரிக்கு இக் கேள்வி பிடிக்கவில்லை. ‘இது எப்படி? சிறை ஊழியர்கள் கைதிகளுக்காக எப்படி இருக்கமுடியும்? ஊழியர்கள் கைதிகளை சிறைக்குள் அடைத்து வைப்பதற்காக இருக்கின்றனர்’ என அவர் விடையளித்தார்.
‘அப்படியென்றால் கைதிகளுக்குத் தண்டனை கொடுப்பதற்காகவே சிறை ஊழியர்கள் இருக்கிறார்களா என்ன? கைதிகளுக்கு உதவி செய்வதற்காகத் தான் ஊழியர்கள் இருக்கின்றார்கள். கைதிகளின் உடல் நலத்தைப் பேனுவதுகட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு எவ்வளவு வசதிகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதற்காகவுமே ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்’ என்று சொன்னால் காந்தியடிகள்.
இதற்குச் சிறை அதிகாரி பதில் என்ன பேசமுடியும்?
காந்தியடிகளை சந்திப்பதற்காக அன்று எரவாடா சிறைக்கு வந்த பல அன்பர்களில் ஜம்னாதாஸ், ப்ரேல்வி ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து மிகந்த நகைச் சுவையுடன் அடிகள் பேசிக்கொண்டிருந்தார். சிறை ஊழியர்கள் இவர்களின் மீது பல கட்டு திட்டங்களைச் சுமத்தியிருந்தனர். இதனால் இவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எதையும் தைரியமாக்க் கேட்ட முடியவில்லை. ‘உங்கள் கருத்துக்கள் எதையும் தெரிவிக்க மாட்டேன் என்கிறீர்களே’ கட்டாயமாக இவர்களை பேச வைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு அடிகள்.
‘நாசிக்கில் நிலைமை இதைவிட சீராக இருந்ததா அல்லது மோசமாக இருந்தது?’ இவ்வாறு வேறு பல கேள்விகளையும் காந்தியடிகள் கேட்டார்.
இதறகுச் சூப்பரின்டெண்ட் பதில் அளித்தார். ‘இவர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு மணிக்கே கைதிகளை அடைத்துவிடுகிறார்கள். இவர்களுக்கு இது வசதியில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறை ஊழியர்களை அதிக நேரம் தங்க வைதப்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது’ என்றார் சிறை அதிகாரி. ‘இதைத் தவிர்க்க முடியாது. ஊழியர்கள் கைதிகளுக்காகவு அல்லது கைதிகள் ஊழியர்களுக்காகவா?’ என்று காந்தியடிகள் கேட்டார்.
சிறை அதிகாரிக்கு இக் கேள்வி பிடிக்கவில்லை. ‘இது எப்படி? சிறை ஊழியர்கள் கைதிகளுக்காக எப்படி இருக்கமுடியும்? ஊழியர்கள் கைதிகளை சிறைக்குள் அடைத்து வைப்பதற்காக இருக்கின்றனர்’ என அவர் விடையளித்தார்.
‘அப்படியென்றால் கைதிகளுக்குத் தண்டனை கொடுப்பதற்காகவே சிறை ஊழியர்கள் இருக்கிறார்களா என்ன? கைதிகளுக்கு உதவி செய்வதற்காகத் தான் ஊழியர்கள் இருக்கின்றார்கள். கைதிகளின் உடல் நலத்தைப் பேனுவதுகட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு எவ்வளவு வசதிகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வதற்காகவுமே ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்’ என்று சொன்னால் காந்தியடிகள்.
இதற்குச் சிறை அதிகாரி பதில் என்ன பேசமுடியும்?
60. மனிதன் எவ்வளவு பலவீனமாக இருக்கிறான்
1933 ம் வருடம் எரவாடா சிறையில் காந்தியடிகள் உண்ணாவிரதம் ஆரம்பிக்கவிருந்தார். அப்பொழுது ராஜாஜியும் திரு. சங்கர்லால் காகரும் உண்ணாவிரதம் மேற்கொள்ளு முன் உடம்பை டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ளமாறு காந்தியடிகளிடம் யோசனைக் கூறினார்கள். ‘உண்ணா நோன்புக்கு முன்னால் டாக்டரிடம் நான் பரிசோதித்துக் கொள்ளமாட்டேன். இவ்வாறு செய்வதானது என்னுடைய நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டுவதாகும்’ என்றார் காந்தியடிகள்.
‘நாங்கள் கூறும் யோசனையை எப்பொழுதுமே தாங்கள் ஏற்பதில்லை; மேலும் தாங்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்றும் உரிமை கொண்டாடுகிறீர்கள்’ என்றார் இராஜாஜி
இதைக்கேட்டு காந்தியடிகள் சற்று வேகமாகவே பேசினார்; ‘என் நம்பிக்கையை நீங்கள் இம்மாதிரி பழிக்கக்கூடாது. உண்ணா நோன்பு முடிந்து, உயிருடன் பிழைத்தெழுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்த எனது உறுதியே உங்களுக்கும் எனக்கும் போதுமானதாக இருக்கவேண்டும். என்னுடைய நம்பிக்கையைப்பலவீனப்படுத்தாமலிருப்பது உங்களைப் போன்ற நண்பர்களின் கடமையாகும். ஆகவே உண்ணாநோன்பை மேற்கொள்ளுமுன் டாக்டரிம் சென்று என்உடம்பை சோதித்துக் கொள்வதை நான் ஒப்புக் கொள்ளமுடியாது.’
காந்தியடிகளின் மனம் புண்பட்டதைக் கண்ட நண்பர்கள் இருவரும் வருத்தமடைந்து அங்கிருந்து சென்றுவிட்டனர். மாலையில் உலாவிக்கொண்டிருக்கும்போது தாம் நண்பர்களிடம் பேசியது தவறு எனக் காந்தியடிகளுக்குத தோன்றியது. ‘நான் அவர்களிடம் நடந்துகொண்டது மிகவும் முறையற்றதாகும். மனிதன் எவ்வளவு பலவீனமாய் இருக்கிறான்! எத்தனை தவறுகள் செய்கிறான்! உள்ளத்தூய்மைக்காக உண்ணா நோன்பு மேற்கொள்ளவிருக்கும் நான் நண்பர்களிடம் சினம் கொண்டேன். எனவே அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தமக்குள் பேசிக்கொண்டார் காந்தியடிகள்.
மறுநாள் காலை ராஜாஜிக்கு ஒருகடிதம் மூலம் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தார்.
‘என்னுடைய உயிரினும் மேலாக நீங்கள் என்பால் அன்புசெலுத்துகிறீர்கள். உங்களையும் திரு. சங்கர்லால் அவர்களையும் மிகுந்த வேதனை அடையச் செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று கேட்கும் அவசியமே எனக்கு இல்லை. ஏனென்றால் நான் கேட்பதற்கு முன்பே நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள். எந்தக் காரியத்தை நான் முட்டாள்தனமாக நேற்று ஏற்றுக்கொள்ள மறுத்தேனோ, அதை இன்று ஏற்றுக்கொள்கிறேன். இப்பொழுதேயோ அல்லது தாங்கள் விரும்பும் எந்நேரத்திலும் டாகடரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அரசாங்க ஒப்புதலும் பெறுதல் வேண்டுமென்பதுதான் ஒரு நிபந்தனை டாக்டரின் பரிசோதனை முடிவைப் பிரசுரிக்கக் கூடாது; ஏனென்றால் இதை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறேன். டாக்டரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவதால் உண்ணாநோன்று மேற்கொளவது நிற்காது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சந்திக்கும்போது மீண்டும் பேசுவோம் நேற்று என் மனதில் புகுந்த களங்கத்தை களையவே இன்று இக்கடிதம் எழுதுகிறேன்.’
1933 ம் வருடம் எரவாடா சிறையில் காந்தியடிகள் உண்ணாவிரதம் ஆரம்பிக்கவிருந்தார். அப்பொழுது ராஜாஜியும் திரு. சங்கர்லால் காகரும் உண்ணாவிரதம் மேற்கொள்ளு முன் உடம்பை டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ளமாறு காந்தியடிகளிடம் யோசனைக் கூறினார்கள். ‘உண்ணா நோன்புக்கு முன்னால் டாக்டரிடம் நான் பரிசோதித்துக் கொள்ளமாட்டேன். இவ்வாறு செய்வதானது என்னுடைய நம்பிக்கையின்மையை எடுத்துக் காட்டுவதாகும்’ என்றார் காந்தியடிகள்.
‘நாங்கள் கூறும் யோசனையை எப்பொழுதுமே தாங்கள் ஏற்பதில்லை; மேலும் தாங்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை என்றும் உரிமை கொண்டாடுகிறீர்கள்’ என்றார் இராஜாஜி
இதைக்கேட்டு காந்தியடிகள் சற்று வேகமாகவே பேசினார்; ‘என் நம்பிக்கையை நீங்கள் இம்மாதிரி பழிக்கக்கூடாது. உண்ணா நோன்பு முடிந்து, உயிருடன் பிழைத்தெழுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்த எனது உறுதியே உங்களுக்கும் எனக்கும் போதுமானதாக இருக்கவேண்டும். என்னுடைய நம்பிக்கையைப்பலவீனப்படுத்தாமலிருப்பது உங்களைப் போன்ற நண்பர்களின் கடமையாகும். ஆகவே உண்ணாநோன்பை மேற்கொள்ளுமுன் டாக்டரிம் சென்று என்உடம்பை சோதித்துக் கொள்வதை நான் ஒப்புக் கொள்ளமுடியாது.’
காந்தியடிகளின் மனம் புண்பட்டதைக் கண்ட நண்பர்கள் இருவரும் வருத்தமடைந்து அங்கிருந்து சென்றுவிட்டனர். மாலையில் உலாவிக்கொண்டிருக்கும்போது தாம் நண்பர்களிடம் பேசியது தவறு எனக் காந்தியடிகளுக்குத தோன்றியது. ‘நான் அவர்களிடம் நடந்துகொண்டது மிகவும் முறையற்றதாகும். மனிதன் எவ்வளவு பலவீனமாய் இருக்கிறான்! எத்தனை தவறுகள் செய்கிறான்! உள்ளத்தூய்மைக்காக உண்ணா நோன்பு மேற்கொள்ளவிருக்கும் நான் நண்பர்களிடம் சினம் கொண்டேன். எனவே அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தமக்குள் பேசிக்கொண்டார் காந்தியடிகள்.
மறுநாள் காலை ராஜாஜிக்கு ஒருகடிதம் மூலம் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தார்.
‘என்னுடைய உயிரினும் மேலாக நீங்கள் என்பால் அன்புசெலுத்துகிறீர்கள். உங்களையும் திரு. சங்கர்லால் அவர்களையும் மிகுந்த வேதனை அடையச் செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று கேட்கும் அவசியமே எனக்கு இல்லை. ஏனென்றால் நான் கேட்பதற்கு முன்பே நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள். எந்தக் காரியத்தை நான் முட்டாள்தனமாக நேற்று ஏற்றுக்கொள்ள மறுத்தேனோ, அதை இன்று ஏற்றுக்கொள்கிறேன். இப்பொழுதேயோ அல்லது தாங்கள் விரும்பும் எந்நேரத்திலும் டாகடரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அரசாங்க ஒப்புதலும் பெறுதல் வேண்டுமென்பதுதான் ஒரு நிபந்தனை டாக்டரின் பரிசோதனை முடிவைப் பிரசுரிக்கக் கூடாது; ஏனென்றால் இதை அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறேன். டாக்டரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவதால் உண்ணாநோன்று மேற்கொளவது நிற்காது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சந்திக்கும்போது மீண்டும் பேசுவோம் நேற்று என் மனதில் புகுந்த களங்கத்தை களையவே இன்று இக்கடிதம் எழுதுகிறேன்.’
61. என்னிடமிருந்து இலவசமாக ஆசி கிடைக்காது
ஒருநாள் சரோஜினி நாயுடு திருமணமான புது தம்பதிகளை அழைத்துக்கொண்டு புது தம்பதிகள் காந்தியடிகளிடம் ஆசீர்வாதம் பெறவிரும்பினர். காந்தியடிகள் ‘திலக் சுவராஜ்ய நிதி’ சேர்க்கும் காலத்திலிருந்தே அந்த மணமகளை அறிவார். அவள் அப்போது நிறைய ரூபாய் திரட்டிக் கொடுத்தாள். தான் அணிந்திருந்த நகைகளையும் கொடுத்திருந்தாள். காந்தியடிகள் அவளிடம் கேட்டார், ”உனக்கு அந்நாட்கள் நினைவிருக்கிறதா? உனக்கு திருமணமாவது எனக்கு மிக்க மகிழச்சி; ஆனாலும் உனக்கு என்னிடமிருந்து இலவசமாக ஆசி கிடைக்காது. நீ முதலில் ஹரிஜனங்களுக்கு ஆசி வழங்கவேண்டும்.’
நான் எவ்வாறு வழங்குவது? தாங்கள் விரும்பியதைத் கேளுங்கள்” என்றாள் மணப்பெண்.
காந்தியடிகள்: ”நான் எப்படி கேட்பேன்? நீ, உன் கணவரின் அனுமதி பெறவேண்டுமல்லவா? உங்கள் இருவருக்குள் என்னால் மனத்தாங்கல் ஏற்படுவதை விரும்பவில்லை.”
மணப்பெண்: ”நம் இருவருக்குள் மனத்தாங்கல் ஏற்படுவதற்கே இடமில்லை.”
இதைச் சொல்லிக்கொண்டே, தான் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி காந்தியடிகள் முன் வைத்து வணங்கினாள். அருகிலிருந்த அனைவரும் கல கல வென்று சிரத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சரோஜினி நாயுடு திருமணமான புது தம்பதிகளை அழைத்துக்கொண்டு புது தம்பதிகள் காந்தியடிகளிடம் ஆசீர்வாதம் பெறவிரும்பினர். காந்தியடிகள் ‘திலக் சுவராஜ்ய நிதி’ சேர்க்கும் காலத்திலிருந்தே அந்த மணமகளை அறிவார். அவள் அப்போது நிறைய ரூபாய் திரட்டிக் கொடுத்தாள். தான் அணிந்திருந்த நகைகளையும் கொடுத்திருந்தாள். காந்தியடிகள் அவளிடம் கேட்டார், ”உனக்கு அந்நாட்கள் நினைவிருக்கிறதா? உனக்கு திருமணமாவது எனக்கு மிக்க மகிழச்சி; ஆனாலும் உனக்கு என்னிடமிருந்து இலவசமாக ஆசி கிடைக்காது. நீ முதலில் ஹரிஜனங்களுக்கு ஆசி வழங்கவேண்டும்.’
நான் எவ்வாறு வழங்குவது? தாங்கள் விரும்பியதைத் கேளுங்கள்” என்றாள் மணப்பெண்.
காந்தியடிகள்: ”நான் எப்படி கேட்பேன்? நீ, உன் கணவரின் அனுமதி பெறவேண்டுமல்லவா? உங்கள் இருவருக்குள் என்னால் மனத்தாங்கல் ஏற்படுவதை விரும்பவில்லை.”
மணப்பெண்: ”நம் இருவருக்குள் மனத்தாங்கல் ஏற்படுவதற்கே இடமில்லை.”
இதைச் சொல்லிக்கொண்டே, தான் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி காந்தியடிகள் முன் வைத்து வணங்கினாள். அருகிலிருந்த அனைவரும் கல கல வென்று சிரத்துக் கொண்டிருந்தார்கள்.
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|