புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
30 Posts - 54%
heezulia
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
30 Posts - 54%
heezulia
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதத்தின் மாண்பு


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Apr 27, 2013 4:48 am

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் !
வீணில் உண்டு களிப்போரை
நிந்தனை செய்வோம் !
இது பாரதி பாடல் !
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றையவர்
தொழுதுண்டு பின் செல்பவர் !
இது வள்ளுவன் வாக்கு !

உழவன் உழுகிறான் !
அங்கு நெல் மட்டுமா விளைகிறது ?
அவனது உழைப்பும் அல்லவா
விதை போடுகிறது !
மருத நிலம் அவனது கூடு !
வயல்கள் அவனது வீடு !
கயல்விழியார் கடைக்கண்ணுக்கு
காத்திருப்பார் பலர் !
வயல்வெளியே உலகம் என்று
விழித்திருப்பார் உழவர் !
அவன் அதிகாலை விழிக்காவிட்டால்
பலரது இரவு உறக்கம் பாதியிலேயே போய்விடும் !
அவன் விதையை மட்டுமா தூவுகிறான் ?
பலரது வாழ்க்கையின் பாதையை அல்லவா போடுகிறான் !
அவன் பாடும் பாட்டு களைப்பு தீரமட்டும் அல்ல !
பலரது வயிற்றுப்பாட்டையும் அல்லவா பாதுகாக்கிறது !
தலையில் அவன் கட்டும் முண்டாசு !
பலரது தலைவிதியை மாற்றுகிறதோ?
ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லையென்றால்
நம் வீட்டில் ஏஸி ஓடாது !
அதனால் நமக்கு வேலையும் ஓடாது !
மருத நில மன்னவனோ
வெயிலில் கால்பதித்து காய்கிறான் !
பொழுது சாயும் வரையில்
வயல்வெளியில் நிற்கிறான் !
அவனது கடமையால் தான்
நமது உடைமை உயிர் வாழ்கிறது !
உப்பு குறைவென்று
உணவை கொட்டுகிறோம் !
ஒரு மணி அரிசிக்கு அவன்
ஓராயிரம் தடவை உழுகிறான் !
வள்ளுவப் பெருந்தகை
ஒரு மணி அரிசியைக்கூட வீணாக்காதவராம் !
ஆம் !
அவர் ஊசியால் அரிசியை மட்டும் கோற்கவில்லை !
உழவனது உழைப்பையும் அல்லவா சேர்த்துக் கோற்கிறார் !
பலரது வயிற்றுக்கு பாலை வார்க்கிறான் உழவன் !
அவனது வீட்டிலோ வெறும் கப்பங்கூழுதான் !
அவன் சேற்றில் காலை வைத்தால்தான்
நமக்கு வயிற்றிலே சோறு கிடைக்கும் !
மருத நிலம் நமக்கு மாதா !
உணவு அருந்த மட்டும் அல்ல !
அவளை வணங்கவும் கூடத்தான் !
அதனால் தான் பொய்யாப்புலவன்
தொழுதுண்டு பின்செல்லப் பணித்தான் !
உணவை அருந்தும் முன்
உழவனை தொழவேண்டும் !
உழவன் மழை வேண்டி மன்றாடுகிறான் !
வருண பகவானே பொய்யாமல் பெய்து விடு !
இல்லையென்றால்
உனக்கு உண்ண உணவு (அவி) கிடைக்காது !
பொன்னி நதியே வயலுக்கு வேண்டிய நீரைக்கொடு !
இல்லையென்றால் உனக்கு
பொழுது விடிந்ததும் பூஜை கிடைக்காது !

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

ஆடிபண்டிகையில்
ஆகாரம் பல உண்டு,
பாடிக்கொண்டு பல பலகாரம்
செய்துவைத்து,
காக்கைக்கு கூட இன்றி
மூக்கை பிடிக்க உண்ணும்
நாமா ?

யார் உயர்ந்தோர் ?
சிறிதேனும் சிந்திப்போம் !

மருதநிலம் மற்றய நிலங்களில் சிறந்தது !
ஏனென்றால் குறிஞ்சி மலைக்கு எப்போதாவதுதான் செல்வோம் !
பாலைக்கும் காலம் உண்டு !
முல்லைகாட்டுக்கு மனம் வந்தபோதுதான் செல்வோம் !
நெய்தல் கடலோ ஓரத்தில்தான் உள்ளது !
ஆனால் மருதமோ வயலும் வயல் சார்ந்த நிலமும் !
அங்கே (உழவன்) நித்தமும் போகாவிட்டால்
நமக்கேது நிதம் சோறு?

அகத்திணையில் மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும் !
ஊடல் காதலுக்கு உயிர் போன்றது !
உழவன் உயிர் காக்கிறான் !
ஊடல் உணர்வைக் காக்கிறது !

ஒரு உழவன் பட்டணம் சென்றான் !
அங்கு ஒரு உணவகம் சென்றான் !
பக்கத்தில் பகட்டாக பலர் !
உணவு வந்தது !
உழவனுக்கு மிகுந்த பசி !
கையால் பிசைந்து களைப்பாற உண்டான் !
பகட்டான பட்டணத்தார்
பரிகசித்தார் அவன் உண்ணும் பாங்கைக்கண்டு !
பட்டாடை உடுத்தும் பகட்டான அவர்க்கு
வேர்வை தெரியாது !
விதைதூவத் தெரியாது !
காத்திருந்து களைபரிக்கத்தெரியாது !
நீர்பாய்ச்சி நிரவத் தெரியாது !
அறுப்பறுத்து கட்டத்தெரியாது !
ஆனால் தட்டில் விழுந்த உணவை
கைபடாது உண்ணமட்டும் தெரியும் !
அந்த உழவனுக்கோ !
அந்த அரிசியின் தோற்றத்துக்கு வேண்டிய
அனைத்து நிலையும் தெரியும் !
ஆனால் அவனுக்கு அந்த அரிசி உணவை
உண்ண தெரியாதாம் ! பரிகாசம் செய்கிறார் பகட்டுக்காரர் !
உழவன் கணக்குப்பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது என்பது சரிதான் போலும் !
உண்ணும் முன் உழவைத்தொழுங்கள் !
இந்திரனைத் தொழும் மருத நில மன்னவர்கள்
சிந்தனையில் நல்லவர்கள் !
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை !
நல்லவராய் நாமிருப்போம் !
மருதத்தில் மழை பெய்தால்தான்
விருந்து வைக்கக்கூட வகை பிறக்கும் !
உழவைப்போற்றுவோம் !
உண்மையாய் நடப்போம் !
மருதா நல்லூரில் மருதப்பூங்கா அமைக்கையிலே
மருத நில உழவனுக்கு மனதாற நன்றி சொல்வோம் !
பரிகாசம் செய்யாமல்
பரிசுத்தம் ஆகிடுவோம் !
வாழ்க மருதம் ! வளர்க நெற்பயிர் !




Uploaded with ImageShack.us
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 27, 2013 8:32 am

நல் வளர்ச்சி... கவிதையும் நடையும் வளர்ச்சி பெறுகிறது.... பாராட்டுகள் சூப்பருங்க



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 8:03 pm

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

மருதம் கண்முன் கொண்டுவந்தது
மருதத்தின் மாண்பு .....

கவிதை அழகு ,அருமை அய்யா ... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக