புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_lcapமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_voting_barமஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்


   
   
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Fri Apr 19, 2013 11:32 am

மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Mahabharathamwrapper1

முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவில் நான் மொழி பெயர்த்து வைத்திருக்கும் பகுதிகளின் பிடிஎஃப் வடிவ மின்னூலை நான் இங்கு விருப்பமுள்ளோர் படிப்பதற்காக பதிவிறக்கத்திற்காகத் தருகிறேன்.

இந்த மின்னூலை மூன்று வடிவங்களில் தருகிறேன்.

இந்த கோப்பு படங்களுடன் கூடிய பதிப்பு, கோப்பு நிறை அதிகமாக (7 MB) இருக்கும். கணினி மற்றும் இணைய வேகம் குறைந்தோர், இதைப் பதிவிறக்க சிரமமாக இருக்கும். ஆனால் இதைப் பதிவிறக்கம் செய்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

படங்களுடன் கூடிய, நிறை அதிகமான - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (7 MB)

இணைய வேகம் குறைந்தோர் கீழ்க்கண்ட இரு லிங்குகளில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

i. படங்களற்ற, நிறை குறைந்த - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (542 KB).
படங்களற்ற, நிறை குறைந்த - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (542 KB)

ii. கருப்பு வெள்ளையாக அச்செடுத்துப் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மின்நூல் A4 தாளில் இரண்டாகப் பிரித்து அச்சடிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இருபக்கமாக அடுக்கப்பட்ட - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (509 KB)
இருபக்கமாக அடுக்கப்பட்ட - ஆதிபர்வம் பகுதி 1 முதல் 61 வரை (509 KB)மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Mahabharatham+Wrapper1

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 12:15 pm

வருக வருக அரசன் - வரவேற்கிறோம் ஈகரைக்கு

நல்ல பகிர்வு சூப்பருங்க




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Apr 19, 2013 10:04 pm

பதிவேற்றத்துக்கு நன்றி தோழரே, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். முடிந்தால் நான்கு வேதங்களையும் மொழிபெயர்த்துத் தாருங்கள்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 11:31 pm

நன்றி நண்பரே ! ஆனால் படிப்பவர்கள் மகா பாரதத்தை தொடர்ச்சியாக படிக்க கூடாது , குறைந்த பக்ஷம் சர்கமாவது மாற்றி மாற்றி படிக்கணும் என்பார்கள். இல்லாவிட்டால் யுத்தம் வரும் என்பது பெரியவர்கள் வாக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 20, 2013 1:10 am

தரவிறக்கம் செய்து கொண்டேன் நண்பரே! மிக்க நன்றி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



மஹாபாரதம் - ஆதிபர்வம் 1 முதல் 61 இலவச பதிவிறக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Sat Apr 20, 2013 10:26 am

@Krishnaamma : நண்பரே, எது மூட நம்பிக்கை என்பதைப் பகுத்தறிந்து படிப்பதே நலம். நீங்கள் குறிப்பிடும் இந்த வரிகள் மூடநம்பிக்கை என்பது எனது நம்பிக்கை. தொடர்ச்சியாக படிப்பதே சிறந்தது.

@சிவா, ரங்கராஜன், யினியவன், கிருஷ்ணாம்மா: பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நண்பர்களே!

@ரங்கராஜன்: நண்பரே, இந்த மொழிபெயர்ப்பை முடிப்பதே பெரிய பணி என்று நினைக்கிறேன். நான் பதிவிறக்கத்திற்குக் கொடுத்திருக்கும் இந்தக் கோப்பு, முழு மகாபாரதத்தில் 5%தான். முழு மஹாபாரதத்தை மொழிபெயர்க்க எவ்வளவு நாள் ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். மேலும் நான் மொழிபெயர்ப்பது பாமர மொழியில். வேதங்களை மொழிபெயர்க்க சிறந்த இலக்கியவாதிகளால்தான் முடியும் என்று நினைக்கிறேன்.





javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 20, 2013 10:30 am

நல்ல முயற்சி அரசன் - தொடருங்கள் உங்கள் பணியை. சூப்பருங்க




arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Thu May 02, 2013 9:54 pm

தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு | ஆதிபர்வம் - பகுதி 85


(சம்பவ பர்வ தொடர்ச்சி)



வைசம்பாயணர் சொன்னார், "அந்த சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, புருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, மிகவும் திருப்தி கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களை காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான். ஆகையால் பெரும் இன்பத்தை பெற்றான். ஓ மன்னா, அறத்திற்கெதினான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை. தேவர்களையும், பித்ரிக்களையும் தனது வேள்விகளாலும் சிரதங்களாலும் மகிழ்வித்தான், ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லா குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டைகளைக் கொடுத்தான். யயாதி, குடிமக்களின் எல்லா பகுதிகளையும் திருப்திப்படுத்தி அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான். சிம்மத்தின் வீரத்தைக் கொண்ட அந்த ஏகாதிபதி, தனது இளைமையைக் கொண்டு தனது கட்டுக்குள் இருக்கும் எல்லா இன்பங்களையும் அனுபவித்தான், அறம் சார்ந்து எல்லையற்ற மகிழ்வை அடைந்தான்.
தனது விருப்பதுக்குட்பட்ட அனைத்தையும் அவன் அனுபவித்தான். அவன் எப்போது தனது ஆயிரம் வருட நிறைவு வரப்போகிறது என்று நினைத்தானோ அப்போதே துன்பப்பட்டான். காலத்தின் மர்மங்களை அறிந்த அந்த மன்னன், தகுந்த காலங்களையும் கஷ்தங்களையும் கவனித்து வைத்து, சில நேரங்களில் விஸ்வச்சியுடன் இந்திரனின் அழகிய நந்தவனத்திலும், சில நேரங்களில் அலகாவிலும் (குபேரனின் நகரத்தில்), சில நேரத்தில் வடக்கே இருக்கும் மேரு மலையின் உச்சியிலும் விளையாடினான். அந்த அறம் சார்ந்த மன்னன் எப்போது ஆயிரம் வருடங்கள் நிறைந்தது என்று நினைத்தானோ அப்போது புருவை வரவழைத்து அவனிடம், "ஓ எதிரிகளை அடக்குபவனே, ஓ மகனே, உனது இளமையைக் கொண்டு, எனது சக்திக்குட்பட்டு, வாழ்வின் இன்பங்களை அதனதன் காலத்தில் எனது முழு விருப்பம் ஈடேற அனுபவித்தேன். இருந்தாலும், நம் விருப்பங்கள் எப்போதும் அதை அனுபவித்துவிடுவதனால் திருப்திகொள்வதில்லை. ஆனால், அதை அனுபவிப்பதனால், நெருப்பில் நெய் ஊற்றப்படட்டால் வளர்வது போல அது வளர்கிறது. ஒரு தனி மனிதன் நெல், கோதுமை, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், மிருகங்கள், பெண்கள் என அனைத்தும் கொண்ட இந்த முழு உலகத்துக்கே தனி அதிபதியாக இருந்தாலும், அவன் திருப்தி கொள்ள மாட்டான். ஆகையால், இன்பத்திற்கான தாகம் என்பது கைவிடப்பட வேண்டியது.



உண்மையான மகிழ்ச்சி என்பது, எவரொருவர் இந்த உலகப்பொருட்களின் மீதிருக்கும் தாகத்தைக் கைவிடுகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும். அந்த தாகம் என்பதைத் தீயவர்களாலும், பாவிகளாலும் கைவிட முடியாது. நாம் வாழ்வில் தோல்வியுறும்போதும் அந்த தாகம் தோல்வியுறுவதில்லை. அந்த தாகம் என்பது மனிதனின் மரணத்திற்கான நோயாகும். இந்த ஆயிரம் வருடமும் எனது இதயம் எனது விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே நிலைத்திருந்தது. இருப்பினும், அவற்றின் மீது எனக்கிருந்த தாகம், ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வந்தது. ஆகையால், வருங்காலங்களில் கானகத்திற்குச் சென்று அங்கு இருக்கும் மானின் மருட்சியுடன் அமைதியாக உலகப் பொருட்களின் மீது எனது இதயத்தைச் செலுத்தாமல் பிரம்மனின் மீது செலுத்தி அந்த தாகத்தைக் கைவிடப்போகிறேன். ஓ புரு, உன்னிடம் நான் மிகுந்த திருப்திகொண்டேன்! வளமை உனதாகட்டும்! இந்த உனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொள்! எனது அரசாங்கத்தையும் பெற்றுக் கொள். நிச்சயமாக நீயே எனக்குப் பெரும் சேவையைச் செய்த எனது மகனாவாய்." என்றான்.



வைசம்பாயணர் தொடர்ந்தார், "பிறகு, நகுஷ மைந்தனான யயாதி, தனது பலவீனத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அவனது மகன் புரு தனது இளமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். யயாதி தனது இளைய மகனான புருவை அரியணையில் அமற்ற விருப்பங்கொண்டான். ஆனால் பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட நான்கு வகையினரும் மன்னனிடம், "ஓ மன்னா, தேவயானியின் மூலம் உனக்குப் பிறந்த மூத்த மகனும், பெரும் சுக்ரனின் பேரனுமான யது இருக்கும்போது, நீர் எப்படி உமது அரசாங்கத்தை புருவுக்குக் கொடுப்பீர்? நிச்சயமாக யதுவே உமது மூத்த மைந்தன்; அவனுக்குப் பிறகு துர்வசுவும், அதற்குப் பிறகு சர்மிஷ்டைக்குப் பிறந்த மைந்தர்கள் திரஹ்யுவும் அனுவும் இருக்கிறார்கள். அதன்பிறகே புரு இருக்கிறான். மூத்தவர்கள் இருக்கும்போது இளையவன் எப்படி அரியணைக்கு அருகதையாவான்? இதை நாங்கள் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீர் தர்மம் எதுவோ அதைச் செய்யும்." என்றனர்.



யயாதி, "பிராமணர்களை முதன்மையாகக் கொண்ட நால்வகை மக்களே, நான் என் அரசாங்கத்தை எனது மூத்த மகன் யதுவுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பதைக் கேளுங்கள். தனது தந்தைக்குக் கீழ்ப்படியாதவன் மகனாகமாட்டான் என்பது ஞானமுள்ளோர் வாக்கு. தனது பெற்றோர்கள் சொல்வதை ஏற்று நடந்து, அவர்களின் நல்லதில் ஆர்வம் கொண்டு, அவர்களால் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே சிறந்த மைந்தர்களாவர். யதுவாலும், ஏன் துர்வசுவாலும் நான் அலட்சியம் செய்யப்பட்டேன். திரஹ்யு மற்றும் அனுவாலும் நான் அலட்சியமே செய்யப்பட்டேன். புரு ஒருவனே எனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவனாலேயே நான் பெரிதும் மதிக்கப்பட்டேன்.



ஆகையால், எல்லோருக்கும் இளையவனே எனது வாரிசாவான். அவன் எனது பலவீனத்தை ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக புரு எனது நண்பனாவான். என்னால் பெரிதும் ஏற்றுக் கொள்ளும் செயலை அவன் செய்தான். எனக்குக் கீழ்ப்படிந்த நடக்கும் எனது மகனே எனக்கு அடுத்த மன்னனாகி, இந்த முழு உலகத்தையும் அவன் கட்டுக்குள் கொண்டு வருவான் என்பது கவியின் மகனான சுக்ரனின் கட்டளையும் ஆகும். ஆகையால், நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், புரு இந்த அரியணையை அலங்கரிக்கட்டும் என்பதுதான்." என்றான்.



அதன் பிறகு அந்த மக்கள், "அது உண்மைதான். ஓ மன்னா, பெற்றோரின் நன்மையில் விருப்பம் உள்ள மகனே, அவன் இளையவனாக இருந்தாலும் வளமாக இருக்க அருகதையுள்ளவன். ஆகையால், உமக்கு நன்மையைச் செய்த புரு உமது முடியைத் தாங்க தகுதி வாய்ந்தவனே. சுக்ரனே இக்காரியத்தில் கட்டளையிட்டிருப்பதால், நாங்கள் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை." என்றனர்.



வைசம்பாயணர் தொடர்ந்தார், "மக்களால் இப்படிச் சொல்லப்பட்ட நகுஷ மைந்தன், அரியணையில் புருவை அமர்த்தினான். உரிய சடங்குகளுடன் அரசாங்கத்தை புருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு பிராமணர்களுடனும் துறவிகளுடனும் கானகமேகினான்.



யதுவின் மைந்தர்கள் யாதவர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்; துர்வசுவின் மைந்தர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; திரஹ்யுவின் மைந்தர்கள் போஜர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், அனுவின் மைந்தர்கள் மிலேச்சர்களாக இருந்தார்கள். புருவின் வம்சம், பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ ஏகாதிபதி, நீ அந்த வழியிலேயே (பௌரவர்கள்) ஆயிரம் வருடங்கள் உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து அரசாளப் பிறந்திருக்கிறாய்." என்றார்.

விடுபட்ட பதிவுகளுக்கும், இதற்கடுத்த பதிவுகளுக்கும் முழு மஹாபாரதம் என்ற எனது வலைப்பூவிற்கு வந்து படியுங்கள்.



javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Mon May 06, 2013 10:51 am

மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான் யயாதி | ஆதிபர்வம் - பகுதி 93
(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வசுமத், "ஓ மன்னா, நான் ஓஷதஸ்வாவின் மகன் வசுமத், எனது அறத்தகுதிகளின் கனிகளை நான் அனுபவிக்க எனக்கு ஏதாவது உலகங்கள் சொர்க்கத்திலோ அல்லது அந்தரத்திலோ இருக்கின்றனவா என்று நான் உம்மைக் கேட்கிறேன். ஓ உயர் ஆன்மாவே, நீர் அனைத்து நல்லுலகங்களையும் அறிந்தவராயிற்றே." என்றான்.

யயாதி, "அந்தரத்தில் எத்தனை பகுதிகள் இருக்கின்றனவோ அத்தனை பகுதிகளுடன் சேர்த்து, பூமி, மற்றும் சூரியனால் ஒளியூட்டப்படும் பிரபஞ்சத்தின் பத்து புள்ளிகள் அளவு உலகங்கள் உனக்கு சொர்க்கத்தில் உள்ளன." என்றான்.


வசுமத், "அவற்றை நான் உமக்குத் தருகிறேன். எனக்கான அந்தப் பகுதிகள் அனைத்தும் உமதாகட்டும். ஆகையால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், மொத்தமாக விழ மாட்டீர். ஓ ஏகாதிபதி, அவற்றைப் பரிசாகப் பெறுவது உமக்குச் சரியாக படவில்லையெனில், ஒரு புல்லைக் கொடுத்து (புல்லை விலையாகக் கொடுத்து) வாங்கிக் கொள்ளலாமே?" என்றான்.

யயாதி, "நான் எதையும் வாங்கியதாகவோ, அநியாயமாக விற்றதாகவோ எனக்கு நினைவில்லை. இப்படி எந்த மன்னர்களாலும் செய்யப்பட்டதில்லை. அகையால், நான் எப்படி அதைச் செய்ய முடியும்?" என்றான்.

வசுமத், "ஓ மன்னா, நீர் அப்படி விலை கொடுத்து வாங்குவது சரியல்ல என்று கருதினால், என்னுடைய பரிசாக அதை ஏற்றுக் கொள்ளலாமே. நான் எக்காரணம் கொண்டும் அந்த உலகங்களுக்குச் செல்ல மாட்டேன். ஆகையால், அவை உமதாகட்டும்." என்றான்.

அதன்பிறகு, சிபி என்பவன் மன்னனிடம் பேசினான், "ஓ மன்னா, நான் உசினராவின் மைந்தன். எனது பெயர் சிபி. ஓ தகப்பனா, நான் மகிழ சொர்கத்திலோ, அந்தரத்திலோ உலகங்கள் இருக்கின்றனவா? ஒருவன், தனது அறத்தகுதிகளின் கனியால் மகிழக்கூடிய அனைத்து உலகங்களையும் அறிந்தவர் நீர்." என்றான்.

யயாதி, "நீ உனது பேச்சாலோ எண்ணத்தாலோ, நேர்மையானவர்களையும் அறம்சார்ந்தவர்களையும் அவமதித்ததில்லை. நீ மகிழ்வதற்காக எண்ணற்ற மின்னல் போல ஒளிரும் உலகங்கள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றன." என்றான். சிபி, "அவற்றை விலை கொடுத்த வாங்குவது தவறு என்று நீர் கருதினால், அவற்றை நானே கொடுக்கிறேன். அவற்றையெல்லாம் நீரே எடுத்துக் கொள்ளும். ஓ மன்னா, நான் அவற்றை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஞானமுள்ளோர் அமைதியாக இருக்க முடியாத அந்த உலகங்களை நான் விரும்ப மாட்டேன்." என்றான்.

யயாதி, "ஓ சிபி, இந்திரனின் வீரத்தைப் போல வீரமாக இருந்து, அந்த கணக்கற்ற உலகங்களை நிச்சயமாக நீயே அடைந்தாய். ஆனால், நான் மற்றவர்களால் கொடுக்கப்படும் உலகங்களை விரும்பவில்லை. ஆகையால், நான் பரிசுகளை ஏற்பதில்லை." என்றான்.

அஷ்டகன், "ஓ மன்னா, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் அறங்களால் அடைந்த நல்லுலகங்களை விருப்பப்பட்டு உமக்கு கொடுக்க முன்வந்தோம். நீர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவற்றை உமக்கே அதை அளித்துவிட்டு, பூமி நரகிற்குள் இறங்கப் போகிறோம்." என்றான்.

யயாதி, "உண்மை விரும்பும் ஞானமுள்ளவர்களே, எனக்குத் தகுதியானதை எனக்குக் கொடுங்கள். நான் இதுவரைச் செய்யாததை என்னால் செய்ய இயலாது." என்றான்.

அஷ்டகன், "நாங்கள் காணும் அந்த ஐந்த தங்க ரதங்களும் யாருடையவை? அந்த உலகங்களுக்குச் சென்று வரும் மனிதர்கள் அதில் பயணப்படுவார்களா?" என்று கேட்டான்.

யயாதி, "நெருப்பைப் போலப் பளபளக்கும் புகழ்வாய்ந்த அந்த ஐந்து தங்க ரதங்களும் உங்களை நிரந்தர அருள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றன." என்றான்.

அஷ்டகன், "ஓ மன்னா, அந்த தங்க ரதங்களில் நீரே சவாரி செய்து சொர்கத்தை அடைந்து கொள்ளும். எங்களால் காத்திருக்க முடியாது. நாங்களும் உம்மைப் பின்தொடர்கிறோம்." என்றான்.

யயாதி, "நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செல்லலாம். நிச்சயமாக நாம் அனைவரும் சொர்க்கத்தை வென்றுவிட்டோம். சொர்கத்திற்கான புகழ்வாய்ந்த வழி கண்ணுக்குப் புலப்படுவதைப் பாருங்கள்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "பிறகு அந்த அனைத்து ஏகாதிபதிகளும் அந்த ரதங்களில் ஏறி சொர்கத்திற்குச் சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டு, முழு அந்தரத்தையும் தங்கள் அறத்தின் புகழால் ஒளிரச் செய்தனர்.

அஷ்டகன், அமைதியைக் கலைத்து, "நான் எப்போதும் இந்திரனை எனது சிறந்த நண்பனாக கருதினேன். ஆகையால், நான் மற்றவர்களுக்கு முன் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், எப்படி உசினராவின் மைந்தன் சிபி, நம்மைப் பின்தங்க வைத்து சென்றுவிட்டான்?" என்று கேட்டான்.

யயாதி, "உசினராவின் மைந்தன் அவனுக்கான எல்லாவற்றையும் துறந்து பிரம்மனின் உலகை அடைந்துவிட்டான். ஆகையால், அவனே நம்மில் முன்னவன். அதுபோக, சிபியின் ஔதாரியம், துறவு, உண்மை, அறம், அடக்கம், மன்னிக்கும் தன்மை, இனிமை, நல்லெண்ணம் செய்வதில் விருப்பம், ஆகியவை எவராலும் அளக்கமுடியாத மிகப் பெரும் செயல்களாகும்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அஷ்டகன், தனது ஆர்வ மேலீட்டால், மற்றுமொறு இந்திரனைப் போன்ற தனது தாய்வழி பாட்டனானவனிடம், "ஓ மன்னா, நான் கேட்கிறேன். உண்மையைச் சொல்லும். எங்கிருந்து நீர் வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? வேறு யாரேனும் பிராமணரோ க்ஷத்திரியரோ, பூமியில் நீர் செய்ததைப் போல செய்திருக்கிறார்களா?" என்று கேட்டான். யயாதி, "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் நகுஷனின் மைந்தன் யயாதி. நான் புருவின் தந்தை. நான் முழு பூமியின் தலைவனாக இருந்தேன். நான் உடைகளையும், வேள்விக்கான நூறு அழகான குதிரைகளையும் பிராமணர்களுகுக் கொடுத்தேன். அவற்றைப் போன்ற அறச்செயல்களுக்காக தேவர்கள் மகிழ்ந்து நன்மை செய்தனர். மேலும், இந்த முழு பூமியையும், அதன் குதிரைகள், யானைகள், பசுக்கள், தங்கள், அனைத்து விதமான செல்வங்கள் நூறு அற்புதங்களையுடைய பசுக்கள் ஆகியவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்தேன். பூமியும் அந்தரமும் எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே நிலைத்திருக்கின்றன. எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே மனிதர்களின் உலகில் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு போதும் பொய் பேசியதில்லை. இதன் காரணமாகவே ஞானுமுள்ளோர் வாய்மையைப் புகழ்கின்றனர். ஓ அஷ்டகா, நான் உனக்கும், பிரதரதனாவுக்கும் வசுமத்துக்கும் சொன்னதெல்லாம் உண்மையே. தேவர்கள் முனிவர்கள் ஆகியோர் இந்த வாய்மையின் காரணமாகவே புகழப்படுகிறார்கள் என்பதை நிச்சயமாக அறிவேன். எவனொருவன், நல்ல பிராமணர்களிடம் நாம் சொர்கத்திற்கு உயர்ந்ததைப் பற்றிக் களங்கமில்லாமல் உரைக்கின்றானோ அவன் நாம் செல்லும் உலகங்களையே நம்முடன் அடைவான்." என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காக சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு, பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்து சொர்கத்திற்கு உயர்ந்தான்.

விடுபட்ட பதிவுகளுக்கும், இதற்கடுத்த பதிவுகளுக்கும் முழு மஹாபாரதம் http://mahabharatham .arasan .info என்ற எனது வலைப்பூவிற்கு வந்து படியுங்கள்.



javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக