புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
Page 1 of 1 •
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பல்கலை நிர்வாகத்தை, ஒட்டு மொத்தமாக,அரசு தன் வசம் கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப, சட்ட திருத்த மசோதாவில், வழி வகை செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், பல்கலையின், வரவு - செலவு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை, அரசின் தணிக்கைக் குழு ஆய்வு செய்தது."பல்கலையில் முறைகேடுகள் நடந்துள்ளது' என, தணிக்கைக் குழு, அரசுக்கு அறிக்கையை அளித்தது. இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ்தாஸ் மீனாவை, சிறப்பு அலுவலராக, தமிழக அரசு நியமித்தது. மேலும், முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, அண்ணாமலை பல்கலையின் துணைவேந்தர் ராமநாதனை, கவர்னர், "சஸ்பெண்ட்' செய்தார்.இந்த நிலையில், அண்ணாமலை பல்கலையை அரசு ஏற்க, சட்டசபையில் நேற்று சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கொண்டு வந்துள்ள அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
1928ல் துவங்கியது
சிதம்பரம் அருகே கல்லூரிகளை நிறுவி, அண்ணாமலை செட்டியார் நடத்தி வந்தார். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில், உயர்கல்வி போதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களை, அதனுடன் சேர்ந்த சொத்துக்களுடன் உள்ளாட்சி அமைப்பிடம், 1928ல், அண்ணாமலை செட்டியார் ஒப்படைத்தார்.அண்ணாமலை நகருக்குள், கற்பிக்கும் மற்றும் தங்கி படிக்கும் பல்கலைக் கழகத்தை நிறுவி, பராமரிக்க, 20 லட்சம் ரூபாயையும் வழங்க சம்மதித்து, அவருடைய வாரிசுகள், சில அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெற உரிமை உடையவர்கள் என, ஒப்புக் கொண்டுள்ளார்.
தனி சட்டம் :
தமிழகத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, தமிழக சட்டத்தின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. அதன் தோற்றுனரான, அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டார். அண்ணாமலை செட்டியாரும், அவரது வாரிசுகளும், அண்ணாமலை பல்கலையில், அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை பெற்று வந்தனர். நிறுவனர், பல்கலையின் இணை வேந்தராகவும், அலுவலராகவும் செயல்படுகிறார்.
நியமனங்கள் :
பல்கலையின் துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று பெயர்களை, கவர்னருக்கு நிறுவனர் பரிந்துரைக்கிறார்; அவர்களில் ஒருவர், துணை வேந்தராக நியமிக்கப்படுகிறார். பல்கலையின், எழுத்தர் மற்றும் பிற ஊழியர்களை, துணை வேந்தர் நியமிக்கிறார். ஆசிரியர், பதிவாளர் போன்ற பதவிகளுக்கு தேர்வு செய்ய, தேர்வு வாரியம் உள்ளது. இதில், நிறுவனர் மற்றும் துணை வேந்தர் உறுப்பினர்கள், நிறுவனரின் விருப்பத்தை நிறைவேற்றும் நபராகவே, துணை வேந்தர் உள்ளார்.நிறுவனர் பதவி, வாரிசு அடிப்படையில், வாழ்நாள் முழுவதும் வகிக்கக் கூடிய பதவியாக உள்ளது. பல்கலைக் கழகம், நிறுவனர் என்ற தனி நபர் பரிந்துரை செய்யும் துணை வேந்தரால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சலுகையை, அனைவருக்கும் உரிமை என்ற கொள்கை படி ஏற்க இயலாது; சிறந்த நிர்வாகத்துக்கும் இது, எதிராக உள்ளது.
முறைகேடு :
பல்கலைக் கழகத்தில், 2012 நவம்பரில், ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. பல்கலையில் நிலவிய அமைதியின்மையால், தேர்வுகள் தள்ளி போயின. பல்கலைக்கு ஆண்டுதோறும், பல கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கியும், எப்போதும் இல்லாத, நிதிச் சுமையை சந்தித்து வருகிறது.தேவைக்கு அதிகமான ஊழியர்களை நியமித்தது; பிற நோக்கங்களுக்காக, பல்கலை நிதியை பயன்படுத்தியது; சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது ஆகியவையே, இதற்குக் காரணம். மாணவர்கள், பணியாளர்கள் நலனை பாதுகாக்க, பல்கலையின் நிதி மற்றும் பிற முறைகேடுகளை தணிக்கை செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஒரு நபர் உள்ளாட்சி நிதி தணிக்கைக் குழுவை, அரசு அமைத்தது. தணிக்கைக் குழுவின் அறிக்கை அடிப்படையில், உரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க, உயர்மட்டக்குழுவையும், அரசு அமைத்தது.
சட்ட திருத்தம்:
அண்ணாமலை பல்கலை சட்டம், மாநிலத்தில் உள்ள, பிற பல்கலைக் கழகங்களின் சட்டங்களுடன் ஒத்திருக்கவில்லை. பல்கலையின், நிறுவனருக்கு அதிக அதிகாரங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. பல்கலையின் சீர்கேடான நிர்வாகத்துக்கு, இதுவே காரணம். பல்கலையின், பிற அதிகார அமைப்புகளுக்கு உரிய பங்களிப்பு தேவைப்படுகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் வாழ்வாதாரங்களை, பாதுகாக்கும் சமுதாய கட்டுப்பாடு, அரசுக்கு உள்ளது. மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலையின், சட்டத்தை, பிற பல்கலைக் கழகங்களுக்கு இணையாக மாற்ற முடிவு செய்து, சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு, பழனியப்பன் கூறியுள்ளார்.
குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது :
அண்ணாமலை செட்டியார் குடும்ப வாரிசுகள், 85 ஆண்டுகளாக அனுபவித்து வந்த, பல்கலை இணை வேந்தர் பதவி பறிக்கப்படுகிறது.சட்ட திருத்தத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:பல்கலையின் வேந்தராக கவர்னரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பர். துணை வேந்தரை தேர்வு செய்யும் குழு, பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, துணை வேந்தராக, கவர்னர் நியமிப்பார். பல்கலையின், அதிகார அமைப்புகள் எதிலும், உறுப்பினராக அவர் இருக்கக் கூடாது.துணை வேந்தர், பல்கலையின் கல்வித் தலைவராகவும், முதன்மை நிர்வாக அலுவலராகவும் செயல்படுவார். கல்வி மன்றம், நிதிக் குழு, ஆட்சிக் குழு ஆகியவற்றின் தலைவராகவும் இருப்பார். இக்குழுக்களின் அனுமதிப்படி, பல்கலையின் நியமனங்களை, துணை வேந்தர் மேற்கொள்வார்.இவ்வாறு, சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பல்கலையின் நிறுவனர் என்ற அடிப்படையில், அண்ணாமலை செட்டியார் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள், சலுகைகள் பறிக்கப்படுகின்றன.
"ஜாக்' கூட்டமைப்பு வரவேற்பு :
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றுள்ளதற்கு, இப்பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) வரவேற்பு தெரிவித்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) தலைவர் மதியழகன்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றுள்ளதற்கு, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, பல்கலைக் கழகத்தில் பணிபுரியும், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட, 12,500 பணியாளர்களுக்கும், முழு பணி பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும்.அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையையும் அரசு ஏற்க வேண்டும். அதை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க மாநில செயலர் பிச்சாண்டி:தனியார் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது இதுவே முதல் முறை. அரசின் முற்போக்கான முடிவு வரவேற்கத்தக்கது. அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக, சில அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இக்கல்லூரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயலர் ஜெயகாந்தி:அரசின் முடிவை, நாங்கள் ஒருமனதாக வரவேற்கிறோம். சரியான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு. ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் உள்ள குறைபாடுகளை களையும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
"பிளீஸ் வேண்டாம் சார்...!' நிர்வாகம் தரப்பில் கலக்கம்:
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட, நிதி நெருக்கடி காரணமாக உண்டான குளறுபடியைத் தொடர்ந்து, பல்கலையை, அரசு பல்கலையாக மாற்ற, சட்டசபையில், சட்ட திருத்த மசோதாவை, உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன், தாக்கல் செய்தார். இது, அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக் கழகத்தில் நிர்வாக தரப்பில் உள்ள அதிகாரிகள், பதிவாளர், துறை முதல்வர்கள், துணைப் பதிவாளர், உதவி பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட, நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் சோகமாக காணப்பட்டனர்.அரசின் நடவடிக்கை குறித்து, நிர்வாக தரப்பில், "தினமலர்' நாளிதழ் நிருபர் பேட்டி காண அணுகிய போது, "பிளீஸ் வேண்டாம் சார்...' என, மறுத்து விட்டனர்.
பல்கலை ஊழியர்கள், மாணவர்கள் வரவேற்பு :
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு பல்கலைக் கழகமாக மாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார்.இதுகுறித்து பல்கலை ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்து இதோ...அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) உதய சந்திரன்: வரலாறு துறை உதவி பேராசிரியர், பேராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை, அரசு பல்கலைக் கழகமாக மாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை, பல்கலைக் கழக ஆசிரியர்,ஊழியர் சங்கம் வரவேற்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் படித்து முன்னேற்றமடைய உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம் சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மதியழகன், போராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர், பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர் சங்கத் தலைவர்:அரசு நடவடிக்கை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம். ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரவி, பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் : கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்திற்கு நிம்மதி இழந்து வீதியில் நின்று போராடினோம். அதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. அரசு சரியான முடிவை எடுத்துள்ளதற்கு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்கிறோம். ஆள் குறைப்பு, ஊதியம் குறைப்பு இல்லை என அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் பேட்டி..:
இமயன், 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., : அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அரசு பல்கலைக்கழகமாக மாற்றினால் அரசு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கும். எங்களுக்கும் கட்டணம் கட்ட வசதியாக இருக்கும். கல்வியும் தரமாக இருக்கும். சமூகத்தில் எங்களுக்கும் சம அந்தஸ்து கிடைக்கும். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரி நல்ல முறையில் செயல்படும் என நம்புகிறோம்.
பிரசாந்த், 3ம் ஆண்டு இன்ஜினியரிங்:அரசு பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியாது. அரசு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டால் அதனை அனைவரும் வரவேற்போம். இதனை கேள்வி பட்டவுடன் மகிழ்ச்சியாக உள்ளது. கட்டணம் குறையும், தரமான கல்வி கிடைக்கும்.
சின்ன துரை, 3ம் ஆண்டு இன்ஜினியரிங்:அரசின் முடிவுக்கு மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களுக்கும். பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. இதனால் பாடங்கள் முடிக்க முடியாமல் மாணவர்கள் கல்வியில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கையால் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு நிகரான அந்தஸ்தை ஏற்படுத்தும்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
PRAKASH - chennai,இந்தியா
நல்லது முதல பி எச் டி குடுக்குறத நிறுத்துங்க ... வெங்காயம் தக்காளி மாதிரி வாங்கிட்டு போறாங்க
sami - tirupur,இந்தியா
இனி அரசின் செயலற்ற நிர்வாகம் இங்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆசிரியர்களும், மாணவர்களும் தன இஷ்டம் போல திரியலாம். கேள்வி கேட்க ஆளுமில்லை. அப்படியே கேட்டுவிட்டாலும், கட்சி சங்கங்கள் இருக்க என்ன பயம். இதுதானே நம்ம ஊரு நிலைமை. புலம்பல் தவிர்த்து புதிது ஏது இங்கே.
அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
திருட்டு ரயில் ஏறி வந்தவருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தபோதே இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டது .முழுக்க முழுக்க நிறுவனர் குடும்பத்தின் சுயநல நிறுவனமாகி அவர்கள் தொழில் சிறக்க உதவிய //பெருமை//வேறு நோய் முற்றியபின் சிகிச்சை ஆரம்பம் நடத்துங்க நடத்துங்கம்மா நடத்துங்க
Seema - bali,இந்தோனேசியா
அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த பல்கலையில் இதுவரை நடந்த நியமனங்கள் முறையாக நடந்துள்ளனவா? உதாரணத்திற்கு, உதவி பேராசிரியராக நியமிக்கப்படுபவர் முனைவர் பட்டம் அல்லது குறைந்தபட்சம் பட்டமேற்படிப்பை முடித்து, யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்விலோ, அல்லது மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்விலோ தேர்வு பெற்றிருக்க வேண்டும். அண்ணாமலை பல்கலையில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களை புரட்டிப்பாருங்கள் - எத்தனை பேர் நெட் அல்லது ஸ்லெட் தேர்வு பெற்றுள்ளனர் என்று? அவர்களை முறைப்படுத்தாமல், பல்கலையை அரசு பல்கலையாக மாற்றினால், இந்த உதவிப் பேராசிரியர்களும் மற்ற பல்கலைகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களும் ஒரே தரத்தில் அல்லவா கருதப்படுவர்? இது தகுமா? மேலும், ஒவ்வொரு துறையிலும் அளவுக்கதிகமான மாணவர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு வேளாண் புலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கை இடங்கள் சில நூறுகளே ஆனால், இன்றைக்கு அதில் பயிலும் மாணவர் இடங்களைக் கணக்கெடுத்துப் பாருங்கள் - சில ஆயிரங்கள் இருக்கும். அவர்கள் ஒழுங்காக வகுப்புகளுக்குக் கூட செல்ல வேண்டியதில்லை. தேர்வு எழுதினால் போதும். இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களிலிருந்து ஆள்பிடிக்கும் வேலையை பல்கலை ஊழியர்கள் சிலரே செய்வதுதான் வேதனை. இதற்காக அவர்களுக்குக் கமிஷனும் உண்டு. அரசு இவை அனைத்தையும் முறைப்படுத்துமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனியார் துறையில் முறை கேடு, அரசுத் துறையில் முறை கேடு
தனியார் தப்புன்னு அரசு எடுத்துகிச்சு இதே போல அரசு தப்புன்னு
தனியார் வசம் ஒப்படைக்கற சட்டமும் கொண்டு வரணும் சீக்கிரம்.
தனியார் தப்புன்னு அரசு எடுத்துகிச்சு இதே போல அரசு தப்புன்னு
தனியார் வசம் ஒப்படைக்கற சட்டமும் கொண்டு வரணும் சீக்கிரம்.
யினியவன் wrote:தனியார் துறையில் முறை கேடு, அரசுத் துறையில் முறை கேடு
தனியார் தப்புன்னு அரசு எடுத்துகிச்சு இதே போல அரசு தப்புன்னு
தனியார் வசம் ஒப்படைக்கற சட்டமும் கொண்டு வரணும் சீக்கிரம்.
நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்கbalakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.
இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமா நீங்க யாரை சொல்றீங்க ??யினியவன் wrote:நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்கbalakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.
இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?
பாஸ் சென்னையிலையே பாக்கலாமுன்னு பார்த்தா நீங்க நெட்ச்னல் லேவலுல தில்லிவரை பாயுரிங்களேயினியவன் wrote:நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்கbalakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.
இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் wrote:ஆமா நீங்க யாரை சொல்றீங்க ??
பாலா அசுரனை சிபிஐ ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிடலாம் - இதுகூட தெரியல அவருக்கு!!!balakarthik wrote:பாஸ் சென்னையிலையே பாக்கலாமுன்னு பார்த்தா நீங்க நெட்ச்னல் லேவலுல தில்லிவரை பாயுரிங்களே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|