புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
11 Posts - 4%
prajai
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
2 Posts - 1%
jairam
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_m10அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 16, 2013 12:01 pm

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  Annamalai-University-Exam-result-2011

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பல்கலை நிர்வாகத்தை, ஒட்டு மொத்தமாக,அரசு தன் வசம் கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப, சட்ட திருத்த மசோதாவில், வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், பல்கலையின், வரவு - செலவு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை, அரசின் தணிக்கைக் குழு ஆய்வு செய்தது."பல்கலையில் முறைகேடுகள் நடந்துள்ளது' என, தணிக்கைக் குழு, அரசுக்கு அறிக்கையை அளித்தது. இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ்தாஸ் மீனாவை, சிறப்பு அலுவலராக, தமிழக அரசு நியமித்தது. மேலும், முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, அண்ணாமலை பல்கலையின் துணைவேந்தர் ராமநாதனை, கவர்னர், "சஸ்பெண்ட்' செய்தார்.இந்த நிலையில், அண்ணாமலை பல்கலையை அரசு ஏற்க, சட்டசபையில் நேற்று சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கொண்டு வந்துள்ள அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

1928ல் துவங்கியது

சிதம்பரம் அருகே கல்லூரிகளை நிறுவி, அண்ணாமலை செட்டியார் நடத்தி வந்தார். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருத மொழிகளில், உயர்கல்வி போதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களை, அதனுடன் சேர்ந்த சொத்துக்களுடன் உள்ளாட்சி அமைப்பிடம், 1928ல், அண்ணாமலை செட்டியார் ஒப்படைத்தார்.அண்ணாமலை நகருக்குள், கற்பிக்கும் மற்றும் தங்கி படிக்கும் பல்கலைக் கழகத்தை நிறுவி, பராமரிக்க, 20 லட்சம் ரூபாயையும் வழங்க சம்மதித்து, அவருடைய வாரிசுகள், சில அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெற உரிமை உடையவர்கள் என, ஒப்புக் கொண்டுள்ளார்.

தனி சட்டம் :

தமிழகத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, தமிழக சட்டத்தின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. அதன் தோற்றுனரான, அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டார். அண்ணாமலை செட்டியாரும், அவரது வாரிசுகளும், அண்ணாமலை பல்கலையில், அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை பெற்று வந்தனர். நிறுவனர், பல்கலையின் இணை வேந்தராகவும், அலுவலராகவும் செயல்படுகிறார்.

நியமனங்கள் :

பல்கலையின் துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று பெயர்களை, கவர்னருக்கு நிறுவனர் பரிந்துரைக்கிறார்; அவர்களில் ஒருவர், துணை வேந்தராக நியமிக்கப்படுகிறார். பல்கலையின், எழுத்தர் மற்றும் பிற ஊழியர்களை, துணை வேந்தர் நியமிக்கிறார். ஆசிரியர், பதிவாளர் போன்ற பதவிகளுக்கு தேர்வு செய்ய, தேர்வு வாரியம் உள்ளது. இதில், நிறுவனர் மற்றும் துணை வேந்தர் உறுப்பினர்கள், நிறுவனரின் விருப்பத்தை நிறைவேற்றும் நபராகவே, துணை வேந்தர் உள்ளார்.நிறுவனர் பதவி, வாரிசு அடிப்படையில், வாழ்நாள் முழுவதும் வகிக்கக் கூடிய பதவியாக உள்ளது. பல்கலைக் கழகம், நிறுவனர் என்ற தனி நபர் பரிந்துரை செய்யும் துணை வேந்தரால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சலுகையை, அனைவருக்கும் உரிமை என்ற கொள்கை படி ஏற்க இயலாது; சிறந்த நிர்வாகத்துக்கும் இது, எதிராக உள்ளது.

முறைகேடு :

பல்கலைக் கழகத்தில், 2012 நவம்பரில், ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. பல்கலையில் நிலவிய அமைதியின்மையால், தேர்வுகள் தள்ளி போயின. பல்கலைக்கு ஆண்டுதோறும், பல கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கியும், எப்போதும் இல்லாத, நிதிச் சுமையை சந்தித்து வருகிறது.தேவைக்கு அதிகமான ஊழியர்களை நியமித்தது; பிற நோக்கங்களுக்காக, பல்கலை நிதியை பயன்படுத்தியது; சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது ஆகியவையே, இதற்குக் காரணம். மாணவர்கள், பணியாளர்கள் நலனை பாதுகாக்க, பல்கலையின் நிதி மற்றும் பிற முறைகேடுகளை தணிக்கை செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஒரு நபர் உள்ளாட்சி நிதி தணிக்கைக் குழுவை, அரசு அமைத்தது. தணிக்கைக் குழுவின் அறிக்கை அடிப்படையில், உரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க, உயர்மட்டக்குழுவையும், அரசு அமைத்தது.

சட்ட திருத்தம்:

அண்ணாமலை பல்கலை சட்டம், மாநிலத்தில் உள்ள, பிற பல்கலைக் கழகங்களின் சட்டங்களுடன் ஒத்திருக்கவில்லை. பல்கலையின், நிறுவனருக்கு அதிக அதிகாரங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. பல்கலையின் சீர்கேடான நிர்வாகத்துக்கு, இதுவே காரணம். பல்கலையின், பிற அதிகார அமைப்புகளுக்கு உரிய பங்களிப்பு தேவைப்படுகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் வாழ்வாதாரங்களை, பாதுகாக்கும் சமுதாய கட்டுப்பாடு, அரசுக்கு உள்ளது. மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அண்ணாமலை பல்கலையின், சட்டத்தை, பிற பல்கலைக் கழகங்களுக்கு இணையாக மாற்ற முடிவு செய்து, சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு, பழனியப்பன் கூறியுள்ளார்.

குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது :

அண்ணாமலை செட்டியார் குடும்ப வாரிசுகள், 85 ஆண்டுகளாக அனுபவித்து வந்த, பல்கலை இணை வேந்தர் பதவி பறிக்கப்படுகிறது.சட்ட திருத்தத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:பல்கலையின் வேந்தராக கவர்னரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பர். துணை வேந்தரை தேர்வு செய்யும் குழு, பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, துணை வேந்தராக, கவர்னர் நியமிப்பார். பல்கலையின், அதிகார அமைப்புகள் எதிலும், உறுப்பினராக அவர் இருக்கக் கூடாது.துணை வேந்தர், பல்கலையின் கல்வித் தலைவராகவும், முதன்மை நிர்வாக அலுவலராகவும் செயல்படுவார். கல்வி மன்றம், நிதிக் குழு, ஆட்சிக் குழு ஆகியவற்றின் தலைவராகவும் இருப்பார். இக்குழுக்களின் அனுமதிப்படி, பல்கலையின் நியமனங்களை, துணை வேந்தர் மேற்கொள்வார்.இவ்வாறு, சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பல்கலையின் நிறுவனர் என்ற அடிப்படையில், அண்ணாமலை செட்டியார் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள், சலுகைகள் பறிக்கப்படுகின்றன.

"ஜாக்' கூட்டமைப்பு வரவேற்பு :

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றுள்ளதற்கு, இப்பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர் - ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) தலைவர் மதியழகன்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றுள்ளதற்கு, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, பல்கலைக் கழகத்தில் பணிபுரியும், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட, 12,500 பணியாளர்களுக்கும், முழு பணி பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும்.அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையையும் அரசு ஏற்க வேண்டும். அதை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க மாநில செயலர் பிச்சாண்டி:தனியார் பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது இதுவே முதல் முறை. அரசின் முற்போக்கான முடிவு வரவேற்கத்தக்கது. அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக, சில அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இக்கல்லூரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகில இந்திய பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயலர் ஜெயகாந்தி:அரசின் முடிவை, நாங்கள் ஒருமனதாக வரவேற்கிறோம். சரியான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு. ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் உள்ள குறைபாடுகளை களையும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

"பிளீஸ் வேண்டாம் சார்...!' நிர்வாகம் தரப்பில் கலக்கம்:

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட, நிதி நெருக்கடி காரணமாக உண்டான குளறுபடியைத் தொடர்ந்து, பல்கலையை, அரசு பல்கலையாக மாற்ற, சட்டசபையில், சட்ட திருத்த மசோதாவை, உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன், தாக்கல் செய்தார். இது, அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக் கழகத்தில் நிர்வாக தரப்பில் உள்ள அதிகாரிகள், பதிவாளர், துறை முதல்வர்கள், துணைப் பதிவாளர், உதவி பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட, நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் சோகமாக காணப்பட்டனர்.அரசின் நடவடிக்கை குறித்து, நிர்வாக தரப்பில், "தினமலர்' நாளிதழ் நிருபர் பேட்டி காண அணுகிய போது, "பிளீஸ் வேண்டாம் சார்...' என, மறுத்து விட்டனர்.

பல்கலை ஊழியர்கள், மாணவர்கள் வரவேற்பு :

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு பல்கலைக் கழகமாக மாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார்.இதுகுறித்து பல்கலை ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்து இதோ...அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) உதய சந்திரன்: வரலாறு துறை உதவி பேராசிரியர், பேராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை, அரசு பல்கலைக் கழகமாக மாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை, பல்கலைக் கழக ஆசிரியர்,ஊழியர் சங்கம் வரவேற்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் படித்து முன்னேற்றமடைய உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம் சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதியழகன், போராட்டக் குழு துணை ஒருங்கிணைப்பாளர், பல்கலைக் கழக ஆசிரியர், ஊழியர் சங்கத் தலைவர்:அரசு நடவடிக்கை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம். ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு ஏற்பாடாமல் இருக்க எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரவி, பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் : கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்திற்கு நிம்மதி இழந்து வீதியில் நின்று போராடினோம். அதற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. அரசு சரியான முடிவை எடுத்துள்ளதற்கு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்கிறோம். ஆள் குறைப்பு, ஊதியம் குறைப்பு இல்லை என அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பேட்டி..:

இமயன், 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., : அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அரசு பல்கலைக்கழகமாக மாற்றினால் அரசு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கும். எங்களுக்கும் கட்டணம் கட்ட வசதியாக இருக்கும். கல்வியும் தரமாக இருக்கும். சமூகத்தில் எங்களுக்கும் சம அந்தஸ்து கிடைக்கும். எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரி நல்ல முறையில் செயல்படும் என நம்புகிறோம்.

பிரசாந்த், 3ம் ஆண்டு இன்ஜினியரிங்:அரசு பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியாது. அரசு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டால் அதனை அனைவரும் வரவேற்போம். இதனை கேள்வி பட்டவுடன் மகிழ்ச்சியாக உள்ளது. கட்டணம் குறையும், தரமான கல்வி கிடைக்கும்.

சின்ன துரை, 3ம் ஆண்டு இன்ஜினியரிங்:அரசின் முடிவுக்கு மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களுக்கும். பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. இதனால் பாடங்கள் முடிக்க முடியாமல் மாணவர்கள் கல்வியில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கையால் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு நிகரான அந்தஸ்தை ஏற்படுத்தும்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

PRAKASH - chennai,இந்தியா
நல்லது முதல பி எச் டி குடுக்குறத நிறுத்துங்க ... வெங்காயம் தக்காளி மாதிரி வாங்கிட்டு போறாங்க

sami - tirupur,இந்தியா
இனி அரசின் செயலற்ற நிர்வாகம் இங்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆசிரியர்களும், மாணவர்களும் தன இஷ்டம் போல திரியலாம். கேள்வி கேட்க ஆளுமில்லை. அப்படியே கேட்டுவிட்டாலும், கட்சி சங்கங்கள் இருக்க என்ன பயம். இதுதானே நம்ம ஊரு நிலைமை. புலம்பல் தவிர்த்து புதிது ஏது இங்கே.

அறிவாலயம் c / o போயஸ் - chennai,இந்தியா
திருட்டு ரயில் ஏறி வந்தவருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தபோதே இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டது .முழுக்க முழுக்க நிறுவனர் குடும்பத்தின் சுயநல நிறுவனமாகி அவர்கள் தொழில் சிறக்க உதவிய //பெருமை//வேறு நோய் முற்றியபின் சிகிச்சை ஆரம்பம் நடத்துங்க நடத்துங்கம்மா நடத்துங்க

Seema - bali,இந்தோனேசியா
அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த பல்கலையில் இதுவரை நடந்த நியமனங்கள் முறையாக நடந்துள்ளனவா? உதாரணத்திற்கு, உதவி பேராசிரியராக நியமிக்கப்படுபவர் முனைவர் பட்டம் அல்லது குறைந்தபட்சம் பட்டமேற்படிப்பை முடித்து, யு.ஜி.சி. நடத்தும் நெட் தேர்விலோ, அல்லது மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்விலோ தேர்வு பெற்றிருக்க வேண்டும். அண்ணாமலை பல்கலையில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களை புரட்டிப்பாருங்கள் - எத்தனை பேர் நெட் அல்லது ஸ்லெட் தேர்வு பெற்றுள்ளனர் என்று? அவர்களை முறைப்படுத்தாமல், பல்கலையை அரசு பல்கலையாக மாற்றினால், இந்த உதவிப் பேராசிரியர்களும் மற்ற பல்கலைகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களும் ஒரே தரத்தில் அல்லவா கருதப்படுவர்? இது தகுமா? மேலும், ஒவ்வொரு துறையிலும் அளவுக்கதிகமான மாணவர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு வேளாண் புலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கை இடங்கள் சில நூறுகளே ஆனால், இன்றைக்கு அதில் பயிலும் மாணவர் இடங்களைக் கணக்கெடுத்துப் பாருங்கள் - சில ஆயிரங்கள் இருக்கும். அவர்கள் ஒழுங்காக வகுப்புகளுக்குக் கூட செல்ல வேண்டியதில்லை. தேர்வு எழுதினால் போதும். இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களிலிருந்து ஆள்பிடிக்கும் வேலையை பல்கலை ஊழியர்கள் சிலரே செய்வதுதான் வேதனை. இதற்காக அவர்களுக்குக் கமிஷனும் உண்டு. அரசு இவை அனைத்தையும் முறைப்படுத்துமா?




ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 16, 2013 12:06 pm

தனியார் துறையில் முறை கேடு, அரசுத் துறையில் முறை கேடு சூப்பருங்க

தனியார் தப்புன்னு அரசு எடுத்துகிச்சு இதே போல அரசு தப்புன்னு
தனியார் வசம் ஒப்படைக்கற சட்டமும் கொண்டு வரணும் சீக்கிரம்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 16, 2013 12:09 pm

யினியவன் wrote:தனியார் துறையில் முறை கேடு, அரசுத் துறையில் முறை கேடு சூப்பருங்க

தனியார் தப்புன்னு அரசு எடுத்துகிச்சு இதே போல அரசு தப்புன்னு
தனியார் வசம் ஒப்படைக்கற சட்டமும் கொண்டு வரணும் சீக்கிரம்.

நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா



ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 16, 2013 12:19 pm

balakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்க புன்னகை

எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.

இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 16, 2013 2:36 pm

யினியவன் wrote:
balakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்க புன்னகை

எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.

இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?
ஆமா நீங்க யாரை சொல்றீங்க ?? உடுட்டுக்கட்டை அடி வ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 16, 2013 3:28 pm

யினியவன் wrote:
balakarthik wrote:நாமளும் ஒரு காலேஜ் தொடங்கலாமா
நான் ரெடி பாலா - ஏதாவது நல்லதா விலைக்கு வருதா பாருங்க புன்னகை
எனக்கு தெரிந்த ஒருவர் - அபார குறுக்கு புத்தி உள்ளவர் - அவரை சேர்மனா போட்டுடலாம்.
இனைய தளங்களில் அவர் கில்லி - அதையே பாட திட்டத்தில் வச்சிடலாம் - என்ன சொல்றீங்க?
பாஸ் சென்னையிலையே பாக்கலாமுன்னு பார்த்தா நீங்க நெட்ச்னல் லேவலுல தில்லிவரை பாயுரிங்களே




ஈகரை தமிழ் களஞ்சியம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 16, 2013 6:38 pm

அசுரன் wrote:ஆமா நீங்க யாரை சொல்றீங்க ?? உடுட்டுக்கட்டை அடி வ
balakarthik wrote:பாஸ் சென்னையிலையே பாக்கலாமுன்னு பார்த்தா நீங்க நெட்ச்னல் லேவலுல தில்லிவரை பாயுரிங்களே
பாலா அசுரனை சிபிஐ ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிடலாம் - இதுகூட தெரியல அவருக்கு!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக