புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
6 Posts - 4%
viyasan
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_m10திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோயில் கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 12, 2013 9:50 pm

சைவப் பெரியோர்கள் இயற்றிய அருள் நூல்கள் திருமுறைகளாகும். இன்பம் வரினும் துன்பம் வரினும் ஒன்றாகக் கருதும் மனச் செம்மையே `திரு' என்னும் சொல்லுக்குப் பொருள் என்றார் பேராசிரியர்.

உலக வாழ்க்கையில் ஆக்கங்களையெண்ணிக் களிப்படைதலும், கேடுகளை நினைந்து கலக்கமுறுதலும் அனைவரிடத்தும் பொதுவாகக் காணப்பெறும் இயல்பாகும். இரு நிலைகளையும் ஒன்றாகக் கருதுவோரைச் சேக்கிழார் `கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்' என்று போற்றுவார்.

எத்தகைய பேரிடர்கள் அடுக்கி வந்தாலும் அவற்றைக் கண்டு ஒரு சிறிதுங் கலங்காத உள்ள உறுதியுடையராய் விளங்குவர். இப்படிப்பட்ட நிலையைத் தந்தவர் யார்? அவரே நடனசபேசர்.

திருப்பதியம் (தேவாரம்) விண்ணப்பம் செய்தல்: மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கி.பி. 825இல் திருப்பதியம் விண்ணப்பம் செய்வோர்க்கு நிவந்தங்கள் வழங்கப் பெற்றதைக் கல்வெட்டால் அறிகிறோம்.

நந்திவர்மனைச், `சிவனை முழுதும் மறவாத சிந்தையன்' என்று நந்திக் கலம்பகம் எனும் நூல் நவிலும். சிவனது அடையாளமாகிய `திருநீறு நெற்றியில் கொண்ட நந்திவர்மன்' என்று வேலூர்ப் பாளையம் செப்பேடு செப்பும்.

இவனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருவல்லம் கோயிலுக்கு மூன்று ஊர்களை `விடேல் விடுகு விக்கிரமாதித்தச் சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டுத் தேவதானமாக்கினான்.

கி.பி. 943இல் திருத்தவத்துறையாகிய இலால்குடியில் உள்ள மகாதேவர் திருமுன் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் இருவர் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர். அதற்காகச் சிவகோசரி பிடாரன் தேசவிடங்கன் என்பார் நிலத்தானம் செய்தார் என்று முதற்பராந்தகனின் 37-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இன்றும் காட்டுகின்றது.

இந்நிவந்தம் போதாமையால், 16 ஆண்டுகள் சென்ற கி.பி. 959இல் மேலும் சில நிலங்களை அவனே அறக்கொடையாக நல்கினான். நிலத்தினின்றும் பெறும் எள்ளுக்கு உரிய எண்ணெயில் குடிவாரப் பகுதி கோயிலுக்கும், நிலத்துக்குரிய செவ்வாரப் பகுதி திருப்பதியம் விண்ணப்பம் செய்வார்க்கும் தரப் பெறல் வேண்டும் என்று கல்வெட்டு மெய்ப்பிக்கிறது. சிவகோசரியார் என்பதால் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பதும், பிடாரன் என்பதால் இவரே தேவாரம் பாடுவார் என்பதும் அறியலாம்.

திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்வதற்காகவும், பாடியும் நடித்தும் தொண்டு செய்து வந்த 22 தளிச் சேரிப் பெண்டிர்க்கும் ஆடல் ரசன் ஒருவனுக்கும், அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யவும் 16 தேவரடியார்களுக்கும் நில அறக் கொடையளித்தனர். அக மார்க்கமாதல், தேவாரம் பாடும்போது அபிநயத்தோடு பாடினர் என்பது தெரிகிறது.

திருவரம்பூர் ஆதித்தீசுவரர் சந்நிதியில் நான்கு வேளையும் திருப்பதியம் விண்ணப்பித்தனர். திருவாடுதுறை, அந்த நல்லூர் கோயில்களிலும் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

திருவக்கரையில் முதல் இராசராசன் காலத்தில் திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிசதம் நெல்லு பதக்கு அளித்துள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம்.

செஞ்சிப் பகுதியில், மேல் சேவூரில், சோழன் மூவேந்த வேளாண் என்பவன் திருப்பதியம் இருவர் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ.1904, எண் 212) (கி.பி. 1008)

திருவலஞ்சுழியில், திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிவந்தம் அளித்துள்ளனர். (ஆ.அ. 1902 எண் 633)
உடையாலூர் இறைவனுக்கு கி.பி. 1119இல் முதற்குலோத்துங்கன் காலத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ததை அறிகிறோம். (ஆ.அ. 1927 எண் 306)

கோனேரி ராசபுரம் கோயில் இறைவனுக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்துள்ளனர். (ஆ.அ. 1909 எண் 624)
விருத்தாசலம் வட்டம் நல்லூரில், வில்வாரன்னேசுவரர் கோயில் இறைவனுக்கு, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1200இல் `ஆழ்விமழகியாள் பதினெண்பூமி நங்கை' எனும் பெயருடைய தேவரடியாள் திருவெம்பாவையில் இரண்டாம் திருப்பத்தைப் பாடி ஆடினாள். அவளுக்கு மூன்று கழஞ்சு பொன் கொடையாக அளிக்கப்பெற்றது. (ஆ.அ. 1940 எண் 160)
அதே கோயிலில், கி.பி. 1202இல் பூமி ஆள்வி மகள் பொற்கோயிற் நங்கை, விழா நாட்களில் சாக்கை எனும் ஆட்டத்தைத் திருவெம்பாவையில் கடைக்காப்புப் பகுதியைப் பாடி ஆடினாள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவாமாத்தூர் கோயிலில் 2-ஆம் குலோத்துங்கன் காலத்தில் கி.பி.1133 இறைவன் முன்பு 16 குருடர்கள் நாள்தோறும் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பிக்கவும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவர் வழித்துணையாக அவர்களைக் கைப்பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப் பெற்றதைக் கல்வெட்டு இன்றளவும் மெய்ப்பிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் இருக்க இடமும் உண்ண உணவும், அணி ஆடையும் வழங்கியுள்ளனர். (தெ.க.தொ. க்ஷிமிமிமி எண் 749) சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பைச் செய்து உதவியைப் பெறுகின்ற செயல் போற்றுதற்குரியதாகும்.

வழுவூர், வீரட்டானேசுவரர் கோயிலில், இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் கி.பி. 1127இல் மார்கழியில் திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை இசையுடன் இசைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக் குறிச்சியில் - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1224) நாகேசுவரர் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பித்தனர்.

திருவிடைவாயிலில் மூன்றாம் இராஜேந்திர சோழனின் காலமாகிய கி.பி. 1249இல் திருப்பதியத்தில் திருப்பத்து இசைக்கப்பெற்றது.

திருவீழிமிழலையில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1285) திருமுறை விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்வாறு எண்ணற்றக் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் பாடப்பெற்றதைக் கல்வெட்டு வழியாக அறிகிறோம்.
கல்வெட்டில் திருக்கைக்கோட்டியும், தேவாரமும்:

திருமுறைகள் வைத்துப் பூசிக்கப்பெற்ற கோயில் மண்டபம் `திருக்கைக் கோட்டி' என்று சொல்லப் பெறும்.
சீர்காழியில் உள்ள திருஞான சம்பந்தர் கோயிலில் தென்புறத்தில் உள்ள கல்வெட்டு வாசகம் நம் கவனத்தைக் கவர்கின்றது.
`திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிறீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு... ஆவது இராசராச வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப்பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக ஞாயிற்று முதல் கிராமகாரியஞ் செய்கிற பெருமக்களோம். ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத்தமிழ் விரகர் கண்டு இக்கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி...' என்று வருகின்றது.

முதல் இராசராசன் கோயில்களில் நடைபெறும் விழாக்களையும் பூசை முறைகளையும் நெறிப்படுத்தினான். அக்காலம் முதல் தேவாரத்தை இருபாலரும் ஓதியிருக்கின்றனர். ஆண் ஓதுவார்களைக் `கந்தருவர்' என்றும், பெண் ஓதுவார்களைக் `கந்தர்வி' என்றும் அழைத்தனர். தேவாரம் ஓதுபவர்களைப் பார்வையிட `தேவார நாயகம்' எனும் அலுவலர் நியமிக்கப் பெற்றிருந்தனர்.

தமிழ்க் கல்வெட்டு இருக்கும் கோயிலை யாரும் உரிமை கொண்டாட உரிமை இல்லை.

நன்றி-தேவாரம் வெப்சைட்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக