புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
61 Posts - 45%
heezulia
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
4 Posts - 3%
prajai
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
9 Posts - 2%
prajai
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10கீதை 10 விபூதி யோகம் !! Poll_m10கீதை 10 விபூதி யோகம் !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 10 விபூதி யோகம் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Apr 11, 2013 11:27 pm

கீதை 10 : 1 உன்னதமான இறைவனின் தூதுவர் கூறினார் : வலிமையான புஜங்களையுடைய அர்ச்சுணா ! நீ என் மனங்கவர்ந்த சிநேகிதன் ஆதலால் உனக்கு மேலும் நன்மை விரும்பி இதுவரை நான் உனக்கு விளக்கியதைக்காட்டிலும் சிறந்ததை உணர்த்துகிறேன் !!

கீதை 10 : 2 தேவதூதர்களும் மகா மகரிஷிகளும் ஒவ்வொரு சிறு விசயங்களுக்கும் ஆதாரமாய் என்னையே சார்ந்திருந்தாலும் அவர்கள் கூட என் தோன்றலின் மூலத்தையும் என் மகிமையையும் முழுமையாய் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !!

கீதை 10 : 3 யாறொருவன் என்னை பிறக்காதவனாகவும் உருவாக்கப்படாதவனாகவும் பிரபஞ்சத்தின் அதிபதியாகவும் அறிந்து உணர்கிறானோ அவன் மட்டுமே அசுரர்களால் கலப்படமடையாமல் பாவங்களிலிருந்து விடுபடத்தகுதியடைவான் !!

கீதை 10 : 4 புத்திக்கூர்மை , ஞானம் , சந்தேகத்திலிருந்தும் குழப்பத்திலிருந்தும் தெளிவுறுதல் , மண்ணிக்கும் மாண்பு , உண்மை , புலணடக்கம் , மனக்கட்டுப்பாடு ,பேரானந்தம் , அஹிம்சை , எதிலும் சமநிலையடைதல் , நிறைவு , புண்ணியம் , செழிப்பு , மங்காத புகழ் ஆகிய அனைத்தும் ஒருவனில் என்னாலேயே உருவாக்கப்படுகிறது ; மாறுபாடான மகிழ்ச்சி துக்கம் , பிறப்பு இறப்பு ,பயம் பயமின்மை , புகழ் இகழ் ஆகிய சுழலுக்குள்ளும் ஒருவன் என்னாலேயே அமிழ்த்தப்படுகிறான் !!

கீதை 10 : 5 சப்த (ஏழு) மகாரிஷிகளும் ; அவர்களுக்கு முந்தய நாலு ரிஷிகளும் ; மனித இனங்களின் மூதாதைகளான மணுக்களும் என்னிலிருந்தே வந்தனர் !!

கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !! அதாவது எனது சித்தத்தாலேயே உறுவாக்கப்பட்டவை !!

கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!

கீதை 10 : 9 தூய்மையான எனது சீடர்களின் சிந்தை எப்போதும் என்னிலேயே நிலைத்திருக்கிறது ! அன்றாட வாழ்வையே பக்திதொண்டாக வேள்வியாக்கி ஒருவரை ஒருவர் உபதெசித்துக்கொள்ளுவதிலும் என்னைப்பற்றியே பேசிக்கொள்வதிலும் பேரானந்தமும் பரம திருப்தியும் அடைகிறார்கள் !!

கீதை 10 : 10 உள்ளார்ந்த அன்புடன் அத்தகைய பக்திதொண்டாற்றுபவர்களுக்கு நானே என்னை அடைவதற்கு உணர்வை அருளுகிறேன் ! எங்களுக்கிடையிலான புரிதலை அதிகப்படுத்துகிறேன் !!

கீதை 10 : 11 எனது தனிப்பட்ட கருணையை காட்ட நானே அவர்களுக்குள் வாசமாகி ; அவர்களின் இதயத்தில் பிரகாசிக்கும் ஞான சுடர் விளக்காகி அறியாமையின் இருளை அகற்றுகிறேன் !!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சகலங்களின் ஆதாரம் நானே ! சகலமும் என்னிலிருந்தே வந்தவை என்கிறார் கிரிஸ்ணர் ! பக்தர்களின் இதயத்தில் வாசமாகி ஞான சுடர் விளக்காகவும் பிரகாசிக்கிறேன் என்கிறார் ! இக்குணங்களெல்லாம் கடவுளின் குணமாகவும் அவரது இயல்பாகவுமல்லவா இருக்கிறது !!

சகல பவ்தீகமும் வெளிப்பாடுகளும் படைக்கப்பட்டவை அனைத்தும் அவரிலிருந்தே வந்தவை ! அப்படியாயின் படைத்தவர் அவர்தானே ! மேலோட்டமாக பார்த்தால் அது சரியே ! ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக நிதானித்தால் படைப்பின் ரகசியம் புரியும் ! ஒன்றுமேயில்லாத வெற்றிடத்தில் படைக்கப்பட்டது ! அப்படியாயின் படைப்புக்கு முன்பு படைத்த ஒருவர் அங்கிருந்திருக்க வேண்டும் ! அவர் அரூபமாகவும் இருந்திருக்க வேண்டும் ! அவர்தான் கடவுள் ! ஆதிமூலம் !


சரி அவர் படைப்பிற்கு என்ன செய்தார் ?

படைப்பிற்கு தெவையான மூலக்கூறுகளை தயார் செய்து அவற்றை கலந்து ஒன்றை உறுவாக்கினாரா ? கடவுள் மனிதர்களைப்போல அப்படி செய்யவேண்டியதில்லை ! அவர் செய்வதெல்லாம் `` ஆகுக `` என பேசினால்போதும் ! அது ஆகிவிடும் !

குர்ஆன் 36:82. எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ஆய்விடுக என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

2:117. வானங்களையும், பூமியையும் இல்லாமையிலிருந்து உண்டாக்கினான்; அதனிடம் ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

உலகில் வந்த எந்த வேதங்களும் நிலை பெற்றுள்ள மதங்களும் கடவுள் அருளில்லாமல் வந்தவையல்ல ! மனித முயற்சியாலும் அசுர ஆவிகளாலும் வந்தவை நிலைப்பதில்லை நிலைத்துள்ளவை அனைத்தும் கடவுளால் வந்தவையே !

ஆனால் இந்திய வேதங்களை அப்படியே புறந்தள்ளி பைபிளை தூக்கிவைத்து ஆடுவதும் ; பைபிளை புறந்தள்ளி குரானை தூக்கிவைத்து ஆடுவதும் ; இரண்டையும் ஓரக்கண்ணால் கூடப்பார்க்காமல் இந்திய வேதங்களை தூக்கிவைத்து ஆடுவதுமான மனித தவறுகள் தவறான வியாக்கியாணங்கள் பகையை தூண்டி விடுகின்றான !

ஆனால் வர உள்ள சமரச வேதம் எல்லா வேதங்களின் சரியான உண்மைகளை மட்டும் சுவீகரித்து அவைகளின் அடிப்படைகள் ஒன்றிற்கு ஒன்று ஒத்தே இருப்பதை நிலைனாட்டி முழுமையான ஞானத்தை எட்டுவதுவே !

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது !

ஆக அரூபமான கடவுள் வெற்றிடமும் இருளுமான இடத்தில் முதலாவதாக பேசினார் ! முதல் வெளிப்பாடு சத்தம் ! அந்த சத்தமே நாராயணன் !

நரல் என்றால் சத்தம் ! நரல்+ ஆய +நன்= நாராயணன் !

நரணாய் ஆன அதாவது அருப இறைவனிடமிருந்து பௌதீகமாக வெளிப்பட்டவர் நாராயணன் -- நரணாய் ஆனவன் !

அதனால்தான் சங்கை கையில் போட்டார்கள் ஆக்கமும் அழிவும் அவருக்கள்ளிருந்து தோன்றி அவருக்குள் மறைவதால் சக்கரத்தை போட்டார்கள் !

இந்த நாராயணனே கடவுளிடமிருந்து முதலாவது வெளிப்பட்டவர் ! அந்த ஆதாரத்தின் மீது ஆதாரத்திலிருந்து சகல படைப்புகளும் வெளிபட்டு அவருக்குள்ளேயே அழிந்தும் விடுகின்றன !

அதாவது கடவுள் சகலவற்றையும் நாராயணனுக்குள் நாராயணனிலிருந்தே படைக்கிறார் ! ஆனாலும் நாராயணன் பிறக்காதவர் உறுவாக்கவும் படாதவர் ! ஏனென்றால் அவர் கடவுளின் வார்த்தையாய் கடவுளிடமே இருந்தவர் ! குரானின் பைபிளின் வெளிச்சத்தில் இந்த உண்மையை உணரவேண்டும் ! (கீதை 10 : 1 - 8)

அதனால்தான் நாராயணனுக்கு கடவுளின் குணாதிசயங்கள் உள்ளன ! ஆனாலும் ஆழமாக படைப்பு நாராயணன் என்றால் அந்தப்படைப்பையும் விஞ்சி வெளியேயும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை !!

நரன் + ஆயணன் படைக்கப்படவைகளை தேற்றுகிறவன் ! (கீதை 10 : 9 - 11)

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். !

மீண்டும் இந்த நாராயணனும் அமானுஸ்யமே ! அதாவது மாயோன் ! அவர் யுகங்கள் தோறும் பூமிக்கு இறங்கி அவதரிப்பது சேயோன் அல்லது குமாரன் அல்லது இறைதூதன் !

அவ்வாறு அவதரித்த திரேதா யுக ராமனும் துவாபர யுக கிரிஸ்ணனும் கலியுக இயேசுவும் ஒருவரே !! -- நாராயணனே !

குர்ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். கடவுளைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் கடவுளின் தூதர் தான்; இன்னும் ஆகுக என்ற கடவுளின் வாக்காகவும் அதனால் உண்டானவராகவும் இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, கடவுளின் மீதும் அவன் தூதர்கள் மீதும் பக்தி கொள்ளுங்கள்;

சடங்காச்சார முஸ்லீம்கள் குரானின் வசணத்தையே சரியாக புரிந்துகொள்ளாமல் இயேசுவை வழிபடும் கிரிஸ்தவர்களை கொண்றொழித்தது கொஞ்சநஞ்சமல்ல ! ஆனாலும் குரான் அவரை கடவுளின் வார்த்தையானவர் அதாவது நாராயணன் என்றுதான் குறிப்பிடுகிறது ! பைபிளும் அதைதான் குறிப்பிடுகிறது !!

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம் !

யோவான் 12:44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

ராமர் , கிரிஸ்ணர் , இயேசு அல்லது நாராயணன் மூலமாக கடவுளை வழிபடுவதே வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டது !

யோவான் 16:23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். !!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீதை 10 : 12 அர்ச்சுணன் கூறினார் : நீரே அரூப கடவுளின் உயர்தரமான முதல் வெளிப்பாடானவர் ! மனிதர்கள் அடையக்கூடிய உன்னதமான பரமபதமும் நீரே ! பரிசுத்தரும் பரிபூரண உண்மையும் நீரே ! அழிவற்றவரும் நித்திய ஜீவனும் வழிகாட்டியும் நீரே ! சகல ஆத்துமாக்களுக்கும் மூலமான பரமாத்துமாவும் , அதிபதியும் , பிறப்பிறப்பை கடந்தவரும் நீரே !

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் கடவுளிடத்தில் வரான். என்றார் !


யோவான் 10:7 இயேசு அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.


யோவான் 10:14 நானே நல்ல மேய்ப்பன்; கடவுள் என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் கடவுளை அறிந்திருக்கிறதுபோலவும்,


யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீதை 10 : 13 நாரதர் , அசிதர் தேவலர் மற்றும் வியாசர் போன்ற மாமகரிஷிகளும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர் ! இப்போதோ தங்களைப்பற்றி தாங்களே எனக்கு உணர்த்தும் பாக்கியத்தைப்பெற்றேன் !!

கீதை 10 : 14 கிரிஸ்ணா ! நீர் கூறிய யாவையும் சத்தியமானவை என அப்படியே ஏற்றுக்கொள்ளூகிறேன் ! சற்குருவே ! இவ்வுண்மையை - உமது இயல்பை மகிமையை தேவதூதர்களும் அசுரர்களும் கூட முழுமையாக புரிந்திருக்கமாட்டார்கள் !!

கீதை 10 : 15 பரமாத்மனே ! சகல படைப்புகளுக்கும் மூலமே ! சகலவற்றின் அதிபதியே ! பிரபஞ்சத்தின் தலைவனே - ஜகநாதரே ! தேவதூதர்களுக்கும் அதிபதியே !

கீதை 10 : 16 இந்த அகிலம் முழுமையும் நீர் விரவி நிற்கும் உமது அமானுஸ்ய மகிமையை -- தெய்வீக இயல்பை அடியேனுக்கு உணர்த்துவீராக !!

கீதை 10 : 17 உன்னதமான கடவுளின் பிரதினிதியே ! அதிசயத்தின் உச்சமே ! உம்மை நான் எவ்வாறு உணர்ந்தறிவது ? உமது பல்வேறான படிமானங்கள் எவற்றையெல்லாம் நினைவுகூற வேண்டுவது ? சதா உம்மையே சிந்தித்து உம்மிலே முழ்கித்திளைப்பது எங்கனம் ?

கீதை 10 : 18 ஓ ஜனார்த்தனா ! உமது மகிமையின் அமானுஸ்ய சக்திகளைப்பற்றி விபூதிகளைப்பற்றி மீண்டும் எனக்கு உணர்த்தியருளுவீராக ! கிரிஸ்ணா ! உம்மைப்பற்றி எவ்வளவுதான் அறிந்தாலும் போதுமென்று தோன்றவில்லை ! அமுதம் போன்ற தெவிட்டாத விசயங்களால் இன்னுமின்னும் என உந்தப்படுகிறேன் !!

கீதை 10 : 19 கடவுளின் உன்னதமான வெளிப்பாடாகிய கிரிஸ்ணர் கூறிணார் : குரு குலத்தில் சிறந்தவனே ! நூதனமான எனது வெளிபாடுகள் உனக்கு அறியத்தக்கனவே ! இருப்பினும் எனது அமானுஸ்ய மஹிமைகள் கணக்கிலடங்காதவை ஆதலால் முக்கியமான சிலவற்றை விவரிக்கிறேன் !!

கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் !

கீதை 10 : 21 ஆதித்தியர்களில் நானே விஸ்ணு ! சுடர்களில் நானே ஒளிவீசும் சூரியன் ! வாயுபுத்ரர்களில் மாருதி ! கிரகங்களில் நான் சந்திரன் !!

கீதை 10 : 22 வேதங்களில் நான் சாமவேதம் ! இந்திரலோக வாசிகளில் நான் இந்திரன் ! புலன்களில் நான் மனம் ! எல்லா உயிரினங்களிலும் நான் உணர்வுகளாக - இயல்பூக்கமாக இருக்கிறேன் !!

கீதை 10 : 23 ருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன் ! யக்ஸரர்களிலும் ரக்ஸரர்களிலும் நான் குபேரன் ! வசுக்களில் அக்னி ! மலைகளில் நான் மேருமலை !!

கீதை 10 : 24 ஆசாரியர்களில் நான் பிரஹஷ்பதி ! போர்த்தளபதிகளில் நான் கார்த்திகேயன் ! நீர் நிலைகளில் நான் சமுத்திரம் !!

கீதை 10 : 25 மாகரிஷிகளில் நான் பிருஹு ! மந்திரங்களில் ஜீவனுள்ள ஓம் ! ( ஓரிறைவனையே துதிக்கிறோம் ) யாகங்களில் நான் மகாமந்திர ஜபம் ! ( சொடுக்கவும் மகாமந்திரம் ) அசையாப்பொருட்களில் நான் இமயமலை !!

கீதை 10 : 26 மரங்களில் நான் ஆலமரம் ! தேவதுதர்களில் ரிஷி அந்தஸ்து உள்ளவர்களில் நான் நாரதர் ! கந்தர்வர்களுள் நான் சித்ராரதா ! சுயஒழுங்கில் நான் கபிலமுணிவர் !

கீதை 10 : 27 குதிரைகளில் அமுதத்துடன் தோன்றிய உச்சைஸ்ரவா ! யானைகளில் நான் ஐராவதம் ! மனிதர்களில் நான் பேரரசன் !

கீதை 10 : 28 ஆயுதங்களில் நான் வஜ்ஜிராயுதம் ! பசுக்களில் சுரபி ! இனப்பெருக்கத்தில் நான் மன்மதன் ! சர்ப்பங்களில் நான் வாசுகி !

கீதை 10 : 29 நாகங்களில் நான் ஆதிசேஷன் ! கடல்வாழ்வனவுக்கு நான் வருணன் ! பித்ருக்களில் நான் அர்யமா !சட்டஒழுங்கை நிலை நாட்டுபவர்களில் நான் யமன் !

கீதை 10 : 30 தைத்திரியர்களுல் நான் பிரகலாதன் ! அடக்கத்தில் நான் காலம் ! விலங்குகளில் நான் சிங்கம் ! பறவைகளில் நான் கருடன் !

கீதை 10 : 31 தூய்மையாக்குபவைகளில் நான் பரிசுத்தஆவி ! ஆயுதம் தரித்தவர்களில் நான் ராமன் ! மீன்களில் நான் சுரா ! நதிகளில் நான் கங்கை !

கீதை 10 : 32 ஓ அர்ச்சுணா ! சகல படைப்புகளுக்கும் துவக்கமும் முடிவும் ஏன் திருப்புமுனையும் நானே என்பதை உணரக்கடவாய் ! விஞ்ஞானங்களில் நான் தன்னை உணரும் ஆத்ம ஞானம் ! தர்க்கவியலில் நான் உண்மையை கண்டடைதல் !

கீதை 10 : 33 எழுத்துகளில் நான் அகரம் ! அடுக்குத்தொடரில் நான் இரட்டைகிளவி ! அத்தோடு நில்லாது ஓடும் காலமும் நானே ! படைப்பாளிகளில் உயிரிணங்களை உருவாக்கும் பிரம்மனும் நானே !

கீதை 10 : 34 எல்லாவற்றையும் அழிக்கும் மரணமும் நானே ! உண்டாகப்போகிறவைகளுக்கு காரணகர்த்தாவும் நானே ! பெண்களுள் அழகு , ஐசுவரியம் , இனிய பேச்சு , நினைவு கூறல் , புத்தி , புத்திசாதுரியம் , அடக்கம் மற்றும் பொறுமையாகவும் நானே மிளிர்கிறேன் !

கீதை 10 : 35 கானம் இசைத்தலில் நான் ப்ரஹத்சாமம் என்னும் சாமவேதம் ! கவிதைகளில் நான் காயத்ரி ! மாதங்களில் நான் மார்கழி ! பருவத்தில் நான் மலர்கள் பூத்து குலுங்கும் வசந்த காலம் !

கீதை 10 : 36 வஞ்சகர்களுள் பித்தலாட்டமாகவும் ; திறமைகளில் நான் சாதனையாகவும் ; வெற்றியாளர்களின் வெற்றிவாகையாகவும் ; திருப்புமுனை செய்வோரின் தீர்மானிக்கும் மதினுட்பமாகவும் ; சாதுக்களின் சத்துவ குணமாகவும் நானே வெளிப்படுகிறேன் !

கீதை 10 : 37 விர்ஷினி குலத்தோன்றல்களில் நான் வாசுதேவன் ! பாண்டவர்களுள் நானே அர்ச்சுணன் ! மாமுணிவர்களில் நான் வியாசர் ! தத்துவவியலில் நான் சுக்ராச்சாரியார் !

கீதை 10 : 38 அடக்குமுறைகளில் நான் தண்டனை ! நியாயங்களில் நான் வெற்றி ! ரகசியங்களில் நான் மௌனம் !அறிஞர்களின் ஞானமாகவும் நானே விளங்குகிறேன் !

கீதை 10 : 39 மேலும் அர்ச்சுணா ! இருப்பவைகள் எவைகளோ அவைகளின் இனப்பெருக்க வித்தாகவும் நானே இருக்கிறேன் 1 என்னாலேயன்றி அசைவனவும் அசையாதவனவும் நிலைப்பதில்லை !

கீதை 10 : 40 எதிரிகளை வெல்வோனே ! எனது தெய்வீக வெளிப்பாடுகளுக்கு - விபூதிகளுக்கு எல்லையே இல்லை ! எனது முடிவற்ற மஹிமைகளில் கொஞ்சம் வெளிப்பாடுகளையே கூறியுள்ளேன் !

கீதை 10 : 41 எவைகள் சிறப்புள்ளவையோ ; அழகுள்ளவையோ ; மிளிர்பவையோ சக்திபடைத்தவையோ அவைகளெல்லாம் எனது தேஜசின் ஒரு மின்னலே என்பதை அறிவாய் !

கீதை 10 : 42 அனைத்துலகையும் எனது மஹிமையின் எந்த ஒரு அம்சம் தாங்கிக்கொண்டுள்ளதோ அதை நீ உணர்ந்துவிட்டாயானால் இவ்வளவு விரிவான விளக்கங்களும் உனக்கு அவசியமேயில்லை அர்ச்சுணா !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக