புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_m10ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும்


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Apr 08, 2013 6:43 pm

http://3.bp.blogspot.com/-fco26zeUp54/UWKoWVKhx7I/AAAAAAAABmw/9S9D4OoxiQo/s1600/pavijay-karunanidhi.jpg

ஈழம்...

இது வெறும் வார்த்தையல்ல. எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் இடைவெளிகள் இன்றி நிறைந்து, மயானமாய் மாறிப்போன மாகாணம். விளைந்த பயிர்களிலும் ரத்தக்கறை வீசும் குட்டி தேசம். உலக வரைபடத்தில் சாத்தான் கைகளில் சிக்கித் தவிக்கும் புண்ணிய பூமிகளுள் ஒன்று. ஊமையைப் போன ஒரு இனத்தின் ஒட்டுமொத்த உணர்வு.

இப்படியான இனத்திற்கு விடுதலைவேண்டி, ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்த உணர்வின் ஆழத்தையும், விவரிக்க இயலாத வலியையும் உள்ளூர புரிந்துகொண்டு, தன்னலமற்ற போராட்டத்தை அரசியல் சாயங்கள் பூசப்படமால் தமிழகத்தில் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் இத்தகைய எழுச்சியை இந்திய வரலாறு ஒரு சில முறையே கண்டிருக்கும்.

மாணவர்களோடு சேர்ந்து, ஓவியம், இசை, கவிதைகளின் வாயிலாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பலர் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான பங்களிப்பில் பாடலாசிரியர் பா.விஜயும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆம், ஆட்டோகிராப் படத்தில் வரும் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற உணர்ச்சி மயமான பாடலை எழுதி தேசிய விருதை தட்டிச் சென்ற கவிதை நாயகன். அந்த பாடலுக்குப் பிறகு அவர் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை தான் "ரத்தக் காட்டேரி ராஜபக்சே". அருமையான கவிதை. ராஜபக்சே, கொத்தயா போன்ற தமிழின எதிரிகளை\ ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக கொலை வெறியோடு எழுதி தனது கணீர் குரலில் சாடி இருப்பார்.

அந்த கவிதையின் காணொளி இங்கே



சோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை, துரோகம் செய்த அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கூர்மையான வார்த்தைகளை அம்பாய்த் தொடுத்து குறி வைத்து தாக்கி இருப்பார். இந்தக் கவிதை ஒரு இனத்தின் ஒட்டுமொத்த கோபமாக ஒலித்தது. கண்களில் நீரை வரவழைத்தது. கவிஞர்கள் பெரும்பாலும் நேரடியான கெட்டவார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆதங்கத்தில் அதையும் பயன்படுத்தி இருப்பார் பா.விஜய்.

இது ஒரு உணர்ச்சி பூர்வமான வரிகளின் தொகுப்பு. உறங்கிக் கிடந்த தமிழர்களின் உணர்வுகளை கட்டாயம் தட்டி எழுப்பியிருக்கும். இக்கவிதையை படித்துவிட்டு முகநூல் போன்ற வலை சமூக தளங்களில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் பகிர்ந்து கொண்டனர். நானும் படித்து பகிர்ந்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சிந்தித்தேன்.

அது உணர்ச்சி மிகு உண்மை வரிகள் தான். ஆனால் நமது அறிவை மழுங்கச் செய்யும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆம், நமது தமிழ் கவிஞர்களால் நாம் ரசிக்கும் வரிகள் மட்டுமல்ல, உணர்ச்சிமிக்க வரிகளை எழுதி நமது அறிவின் மீது ஏறி அமர்ந்துகொண்டு சிந்திக்க விடாமல் சாவரி செய்யவும் முடியும் என்பதற்கு ஒரு அத்தாச்சியாக அவரது கவிதை எனக்கு தெரிந்தது.

அப்படி என்ன அந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது ?. சொல்லப் படவேண்டியது சொல்லப் படவில்லை என்பதே என் வேதனை. இந்த கட்டுரை முளைக்கக் காரணம்.

நான் முன்பே கூறியதுபோல், சோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை அவர்களின் துரோகத்தை சுட்டிக்காட்டிய திரு பா.விஜய் அவர்களுக்கு, தமிழினத்தலைவர் கலைஞர் மட்டும் கண்ணில் படாமல் போனது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. தேடித்தேடிப் பார்த்தும் அவரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் அந்தக் கவிதையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈழத்தமிழர்களின் அழிவிற்கு ஈழத்தமிழர்கள் செய்த துரோகத்தைவிட, இந்திய அரசு செய்த துரோகத்தைவிட, உலக நாடுகள் செய்த துரோகத்தைவிட, இந்த தமிழினத் தலைவர் செய்த துரோகம்தான் கொடியது என்பதை நேற்று பால்க்குடி மறந்த பிள்ளையும் அறிந்திருக்கும். ஆனால் யார் யாரையோ சாடிய பா.விஜய், தமிழினத் தலைவரை மட்டும் கவிதையில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டார். இதற்கு என்ன காரணம் ?

கலைஞரின் வசனத்தில் இன்னுமொரு "இளைஞன்" படத்தில் கதாநாயகனாக முடியாது என்ற பயமா ? அரசியல் மிரட்டல் வரும் என்ற அச்சமா ? கலைஞர் மீது கொண்ட காதலா ? பா.விஜய் அமைதியாக இருந்துவிட்டாரே என்று தமிழர்கள் சொல்லிவிடுவார்கள் என்ற ஆதங்கமா ? கலைஞர் கையால் "வித்தகக் கவிஞர்" பட்டம் போல் இன்னொரு பட்டம் கிடைக்காது என்ற சுயநலவாதமா ? எது தடுத்தது ?

சுயநலமின்றி நடுநிலையாக எழுத இயலாத நீங்கள் கவிதை எழுதவில்லை என்று எந்த ஈழத்தமிழன் அழுதான் ? ஒரு பானை பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுதும் விஷமாகும்போது, தமிழினத்தின் துரோகியை மறைக்க முயலும் நீங்களும் துரோகி இல்லையா ? சுயநலவாதி இல்லையா ? சோற்றில் முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல, துரோகிகளையும் மறைக்க இயலாது என்பது பா.விஜய்க்கு தெரியாதா ?

பா.விஜயை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தவர் காப்பியக் கவிஞர் வாலி. வாலி கூட கலைஞரின் பிரியர் தான் என்றாலும், ஈழத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதையில், தமிழகம் செய்த துரோகத்தை இவ்வாறு இலைமறைக் காயாய் சொல்லி இருப்பார்.

"அங்கே முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை
இல்லை இதற்கிணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப் பிழையானால் அதை திருத்தலாம்
இது அச்சப்பிலை. யார் இதை திருத்துவது ?"


அவரின் சிஷ்யன், தமிழகத்தை மட்டும் விட்டு விட்டு எங்கொங்கோ ஓடி துரோகத்தை தேடிப்பிடித்து ஈழத்தமிழர் மீது நீங்கள் காட்டிய பரிவு வேதனையளிக்கிறது. பல கவிஞர்கள் நடு நிலை வகிக்க முடியாது என்கிற காரணத்தினாலோ என்னவோ ஈழத்தைப் பற்றி எதையும் எழுதாமல் அமைதியாக இருக்கிறார்கள். உண்மையை மறைப்பதற்கு பதிலாக அவ்வாறு இருந்து விடுவதே உத்தமம்.

பா.விஜய் அவர்களே, கலைஞர் ஒரு தமிழ் இலக்கிய மாமேதை என்பதை உங்களைப் போல் நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். அதேபோல், அவர் தமிழ் இனத்தின் துரோகி என்பதை சுயநலமில்லாமல் எங்களைப் போல் நீங்களும் ஒத்துக் கொள்ள முயற்சியுங்கள். இல்லை என்றால், மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், உங்கள் சுயநலவாதக் கவிதைகளை நீங்களே எழுதி படித்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், அதை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பிரபலத்தை விமர்சித்து பெயர் தேடிக்கொள்ளும் நோக்கில் இதை எழுதியதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பிரபலங்கள் உண்மையாக எழுதுவதாய் பார்க்கப்படும் எழுத்துக்களில் உள்ள உண்மை நிலையை சுட்டிக் காட்டும் படியாகவே எழுதியுள்ளேன்.

நன்றி !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_8.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 08, 2013 7:53 pm

இவருக்கும் கூடிய விரைவில் நடிகர் வடிவேலுக்கு ஆனா கதை போல் ஆகப்போகிறது.

தாத்தா ஒரு சுயநலவாதி, நேரத்திற்கு நேரம் காயை நகர்த்துவதில், நிறங்களை மாற்றிக்கொள்ளுவதிலும், பல்டி அடிப்பதிலும் அவரை போல் உலகிலேயே யாரும் இருக்கமாட்டார்கள்.

விரைவில் இவரை பற்றி அவர் தெரிந்துகொள்ளும் காலம் வரும். அப்போது என்ன கவிதை பாடுவார் என்று பார்ப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 10:17 pm

நடுநிலை கவிஞர் இல்லை என உணர இந்த வாய்ப்பை வழங்கிய விஜயை பாராட்டுவோம்.

இப்படி எழுதலேன்னா வேஷம் கலஞ்சிருக்காதே - நன்று அகல்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 09, 2013 10:55 am

வித்தியாசமான பார்வை .... வேஷம் களையவைத்ததற்கு நன்று அகல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 09, 2013 11:43 am

உண்மையை மறைப்பதற்கு பதிலாக அவ்வாறு இருந்து விடுவதே உத்தமம்.

சூப்பருங்க

கலைஞர் ஒரு தமிழ் இலக்கிய மாமேதை என்பதை உங்களைப் போல் நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். அதேபோல், அவர் தமிழ் இனத்தின் துரோகி

சோகம் என்ன கொடுமை சார் இது அருமையிருக்கு


ஒரு பிரபலத்தை விமர்சித்து பெயர் தேடிக்கொள்ளும் நோக்கில் இதை எழுதியதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல்



ஈழத்தமிழர்களின் அழிவிற்கு ஈழத்தமிழர்கள் செய்த துரோகத்தைவிட, இந்திய அரசு செய்த துரோகத்தைவிட, உலக நாடுகள் செய்த துரோகத்தைவிட, இந்த தமிழினத் தலைவர் செய்த துரோகம்தான் கொடியது

ஆமோதித்தல்

அருமையான பார்வை அகல் உங்களுடையது.நிறைய இடங்களில் உங்களுடன் ஒத்துப்போகிறேன்...உண்மையைத் தாங்காது இற்றுப்போகவும் செய்கிறது இருதயம்...

என்னவோ...மொழி ஆளுமை இல்லாத சிலரை கவிஞராக ஏற்க மனம் இயலவில்லை...
(பிரபல்யம்-விளம்பர வெளிச்சம்-விருதுகள் இருந்தும் கூட...)



ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் 224747944

ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Rஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Aஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Emptyஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் Rஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 09, 2013 12:48 pm

யினியவன் wrote:நடுநிலை கவிஞர் இல்லை என உணர இந்த வாய்ப்பை வழங்கிய விஜயை பாராட்டுவோம்.

இப்படி எழுதலேன்னா வேஷம் கலஞ்சிருக்காதே - நன்று அகல்.
அதுவும் உண்மைதான் அண்ணா...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 09, 2013 12:48 pm

ராஜா wrote:வித்தியாசமான பார்வை .... வேஷம் களையவைத்ததற்கு நன்று அகல்
நன்றிகள் ராஜாண்ணா...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 09, 2013 12:49 pm

ரா.ரா3275 wrote:
உண்மையை மறைப்பதற்கு பதிலாக அவ்வாறு இருந்து விடுவதே உத்தமம்.

சூப்பருங்க

கலைஞர் ஒரு தமிழ் இலக்கிய மாமேதை என்பதை உங்களைப் போல் நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். அதேபோல், அவர் தமிழ் இனத்தின் துரோகி

சோகம் என்ன கொடுமை சார் இது அருமையிருக்கு


ஒரு பிரபலத்தை விமர்சித்து பெயர் தேடிக்கொள்ளும் நோக்கில் இதை எழுதியதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல்



ஈழத்தமிழர்களின் அழிவிற்கு ஈழத்தமிழர்கள் செய்த துரோகத்தைவிட, இந்திய அரசு செய்த துரோகத்தைவிட, உலக நாடுகள் செய்த துரோகத்தைவிட, இந்த தமிழினத் தலைவர் செய்த துரோகம்தான் கொடியது

ஆமோதித்தல்

அருமையான பார்வை அகல் உங்களுடையது.நிறைய இடங்களில் உங்களுடன் ஒத்துப்போகிறேன்...உண்மையைத் தாங்காது இற்றுப்போகவும் செய்கிறது இருதயம்...

என்னவோ...மொழி ஆளுமை இல்லாத சிலரை கவிஞராக ஏற்க மனம் இயலவில்லை...
(பிரபல்யம்-விளம்பர வெளிச்சம்-விருதுகள் இருந்தும் கூட...)
கட்டுரையை எவ்வளவு ஈடுபாட்டோடு படித்தீர்கள் என்பது உங்கள் மேற்கோள்களில் தெரிகிறது புன்னகை மிக்க நன்றிகள் அண்ணே...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:22 pm

ராஜு சரவணன் wrote:விரைவில் இவரை பற்றி அவர் தெரிந்துகொள்ளும் காலம் வரும். அப்போது என்ன கவிதை பாடுவார் என்று பார்ப்போம்.
வேறென்ன வருத்தப்பா தான் அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக