புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - பாரதி உரைத்தாரா?
Page 1 of 1 •
‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று பாரதியார் கூறவில்லை என்பதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” எனும் இவ்வாக்கியம் யாருக்குச் சொந்தமானது என்று கேட்டால் பெரும்பாலானவரின் பதில் அது மகாகவி பாரதியார் கூறியது என்பதே. இந்த நான்கு சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு அவ்வாக்கியம் மகாகவி பாரதியாரின் சிந்தனைக்கு உரித்தானது என்றும் அவரது பல தீர்க்கதரிசன கூற்றுகளுடன் இதுவும் உண்மையாகின்றது என்றும் நம்புவோர் பலர். இவ்வாறு நிலவி வரும் கருத்து தவறானது என்று இக்கட்டுரை முடிவில் அறிந்துகொள்ளலாம்.
பாரதியார் கூற்றுக்களை மெய்ப்பிப்பதோ அல்லது குறை கூறுவதோ இவ்வெழுத்தின் நோக்கமல்ல. தமிழராகிய நாம் எந்தவொரு விடயத்தையும் பற்றி தீர்க்கமாக ஆராயாமல் உடனேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது எவ்வளவு தீங்கானது என்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
இவ்வாக்கியத்துக்கான பாரதியாரின் பாடலை முழுவதும் அறியாமல் எம்மவரில் சிலர் பாரதியார் சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது மிகவும் வேதனைக்குரியது. இதனைப் பற்றி அறியாதவருக்கு இக்கட்டுரை உதவும் என்று நம்பிக்கை உள்ளது. எனினும், சிலர் அறிந்தே எழுதி வருவது வருத்தத்துக்குரியது. பெரும் எழுத்தாளர்களாக இருப்பினும் உண்மையைக் கூறுவதன்றோ தமிழின் வளர்ச்சிக்கு முக்கியம்.
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு” துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதை “(21) தமிழ்த்தாய்”. இது தேசீய கீதங்கள் தொகுப்பில் 21வது ஆக உள்ளது.
“தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்”, “தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்” என்று இக்கவிதையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் தன்னைப்பற்றி உரைப்பது போல வரிகள் அமைகின்றன.
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
இக்கவிதை வரிகளை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொண்டால் இவ்வாக்கியத்தை யாரோ ஒருவர் பாரதியாருக்குக் கூறியுள்ளார் என்பது விளங்கும். தமிழ்த்தாய் தன்மையில் உரைப்பது போன்று அமைந்துள்ள இக்கவிதையின் சாராம்சம் வருமாறு:
சிவனால் தமிழ் மொழி உருவாக்கப்பட்டது; அதற்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார். சேரன், சோழன், பாண்டியன் எனும் மூன்று மாவேந்தர்கள் தமிழை வளர்த்தனர். தமிழ்ப் புலவர்கள் காவியம் இயற்றினர். சாத்திரங்கள் பல உருவானது. தரணியில் தமிழ் புகழ் பெற்றது. ‘காலனால்’ பல மொழிகள் அழிந்தன, ஆனால் தமிழைப் படைத்த தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இன்று மட்டும் தமிழை காலன் ஏறிட்டுப் பார்க்க அஞ்சி இருக்கின்றான்.
இந்த நிலையில், இன்று ஒரு சொல்லைக் கேட்டேன். கொல்வதற்கு ஒப்பான ஒரு வார்த்தையை தமிழைப் பற்றி கூறுவதற்குத் தகுதியில்லாத ஒருவன் உரைத்தான்.
இயற்கையின் பல் நுட்பங்களை வெளிப்படுத்தும் புதிய கலைகள் மேற்கே வளர்கின்றது. அத்தகைய கலைகள் தமிழில் இல்லை; அதைத் தமிழில் எவரும் படைப்பதும் இல்லை; அதைத் தமிழில் சொல்லுவதற்கு தமிழில் வளமும் இல்லை, என்று அந்தப் பேதை மாந்தன் உரைத்தான். இதை அவன் எனக்கு உரைத்தல் தகுமோ? எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர். தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இந்தப் பழி தீரும். என்றுமே தமிழ் புவியில் புகழுடன் திகழும்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார் என்று சில இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கேனும் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று பாரதி பாடினான் எனும் முழுமையற்ற வார்த்தைகளால் பாரதியாரை மறைமுகமாகக் குற்றம் சாற்றுபவருக்கு இக்கட்டுரையைப் படித்தவர்கள் விளக்கம் தெரிவித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பாரதியார் கூற்றுக்களை மெய்ப்பிப்பதோ அல்லது குறை கூறுவதோ இவ்வெழுத்தின் நோக்கமல்ல. தமிழராகிய நாம் எந்தவொரு விடயத்தையும் பற்றி தீர்க்கமாக ஆராயாமல் உடனேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது எவ்வளவு தீங்கானது என்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
இவ்வாக்கியத்துக்கான பாரதியாரின் பாடலை முழுவதும் அறியாமல் எம்மவரில் சிலர் பாரதியார் சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது மிகவும் வேதனைக்குரியது. இதனைப் பற்றி அறியாதவருக்கு இக்கட்டுரை உதவும் என்று நம்பிக்கை உள்ளது. எனினும், சிலர் அறிந்தே எழுதி வருவது வருத்தத்துக்குரியது. பெரும் எழுத்தாளர்களாக இருப்பினும் உண்மையைக் கூறுவதன்றோ தமிழின் வளர்ச்சிக்கு முக்கியம்.
சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு” துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதை “(21) தமிழ்த்தாய்”. இது தேசீய கீதங்கள் தொகுப்பில் 21வது ஆக உள்ளது.
“தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்”, “தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்” என்று இக்கவிதையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் தன்னைப்பற்றி உரைப்பது போல வரிகள் அமைகின்றன.
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
இக்கவிதை வரிகளை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொண்டால் இவ்வாக்கியத்தை யாரோ ஒருவர் பாரதியாருக்குக் கூறியுள்ளார் என்பது விளங்கும். தமிழ்த்தாய் தன்மையில் உரைப்பது போன்று அமைந்துள்ள இக்கவிதையின் சாராம்சம் வருமாறு:
சிவனால் தமிழ் மொழி உருவாக்கப்பட்டது; அதற்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார். சேரன், சோழன், பாண்டியன் எனும் மூன்று மாவேந்தர்கள் தமிழை வளர்த்தனர். தமிழ்ப் புலவர்கள் காவியம் இயற்றினர். சாத்திரங்கள் பல உருவானது. தரணியில் தமிழ் புகழ் பெற்றது. ‘காலனால்’ பல மொழிகள் அழிந்தன, ஆனால் தமிழைப் படைத்த தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இன்று மட்டும் தமிழை காலன் ஏறிட்டுப் பார்க்க அஞ்சி இருக்கின்றான்.
இந்த நிலையில், இன்று ஒரு சொல்லைக் கேட்டேன். கொல்வதற்கு ஒப்பான ஒரு வார்த்தையை தமிழைப் பற்றி கூறுவதற்குத் தகுதியில்லாத ஒருவன் உரைத்தான்.
இயற்கையின் பல் நுட்பங்களை வெளிப்படுத்தும் புதிய கலைகள் மேற்கே வளர்கின்றது. அத்தகைய கலைகள் தமிழில் இல்லை; அதைத் தமிழில் எவரும் படைப்பதும் இல்லை; அதைத் தமிழில் சொல்லுவதற்கு தமிழில் வளமும் இல்லை, என்று அந்தப் பேதை மாந்தன் உரைத்தான். இதை அவன் எனக்கு உரைத்தல் தகுமோ? எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர். தந்தை சிவனின் அருளாலும் புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இந்தப் பழி தீரும். என்றுமே தமிழ் புவியில் புகழுடன் திகழும்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார் என்று சில இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கேனும் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று பாரதி பாடினான் எனும் முழுமையற்ற வார்த்தைகளால் பாரதியாரை மறைமுகமாகக் குற்றம் சாற்றுபவருக்கு இக்கட்டுரையைப் படித்தவர்கள் விளக்கம் தெரிவித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|