புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

First topic message reminder :

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 11, 2013 3:03 pm

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-6

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-1
அந்த ஊர் ஒரு அத்துவானக் காடு. ஊர் பெயர் சொல்லவிரும்பவில்லை. அங்கே பார்த்தால் திடீரென ஒரு கிறித்தவக் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார்கள். அங்கே ஒரு கிறித்தவ சகோதரர் கூட கிடையாது.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-2
தெருக்குத் தெரு அல்லது தெருமுனையில் பிள்ளையார் கோயில் பார்த்திருப்போம். இப்போது தெருக்குத் தெரு கிறித்தவர்களின் சிறிய கோயில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்டப்பட்டு வருகிறது.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-3
வழக்கமாக இந்துக் கோயில்களில் கொடிமரம் வைக்கப்பட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். இப்போது சில கிறித்தவக் கோயில்களில் கொடிமரம் போலவே “ஸ்தூபி” வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பவம்-4
பல காலி மனைகள், இடங்கள் கிறித்தவ சகோதரர்களாலும் கிறித்தவ அமைப்புகளாலும் வாங்கப்பட்டு வருகிறது.

இதைப்பற்றியெல்லாம் அவர்களிடமும் மற்றவர்களிடமும் கேட்டு அறிந்த தகவல்:

யாருமே இல்லாத ஊரில், அத்துவானக்காட்டில் கிறித்தவக்கோயில் கட்டுகிறார்களே. எதுக்கு? என்று அந்த ஊர்க்காரர் ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார்.

“வியாபாரம் பண்ணனும்னு முடிவு பண்ணா கடை அல்லது ஆபிஸ் வெச்சாதானே முடியும். இப்ப கடை கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. வியாபாரம் கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பிச்சுருவாங்க” என்றார்.

தெருவுக்கு தெரு சிறிய கோயிலைக் கட்டி கிறித்தவக் கோயில்களை மற்றவர்களின் மனதில் கிறித்தவக் கோயில்களை சகஜமாக ஆக்க வேன்டியது.

புதுக்குடித்தனம் வந்த இந்து மதத்தார்களுக்கும் வரப்போகிறவர்களுக்கும் “உங்க பழைய கோயிலுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது” என்று காட்டுவதற்காக கொடிமரம் போன்ற ஸ்தூபி வைக்கப்படுகிறது.

சரி இதனால என்ன நடந்திடப்போகுது என்று கேட்கும் நம்ம பயபுள்ளைகளுக்கு.
நடந்த சம்பவத்தை சொல்றேன். கேளுங்கள்!

நடந்த சம்பவம்
ஆப்பிரிக்க பழங்குடியில் நடந்த சம்பவம் இது. அவங்களும் ரொம்ப அப்பாவியா இருந்திருக்கானுங்க. எல்லாம் முடிஞ்ச பின்னால் ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்திருக்கிறார். அவங்க சொன்ன ஸ்டேட்மென்ட்.

“வெள்ளைக்காரங்க ரொம்ப பேர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க வந்திருந்தாங்க. உங்களுக்கு நாகரீகம், வாழ்க்கை முறை எல்லாம் கத்துக் கொடுக்கிறோம். இங்க வாங்க”ன்னு சொன்னாங்க. நாங்களும் போனோம்.

“எல்லோர் கையிலேயும் பைபிளைக் கொடுத்தாங்க. கண்ணை மூடிக்கிட்டு நாங்க சொல்றதை அப்படியே ஓதுங்க”ன்னு சொன்னாங்க. நாங்களும் அதே மாதிரி பல நாள் செஞ்சோம்.

“ஓதி ஓதி ஒரு நாள் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்க கையில பைபிள் இருந்தது. அவங்க கையிலே எங்கள் நிலங்கள் எல்லாம் இருந்தன”
.

(மனிதம் வளரும்)

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Apr 11, 2013 5:06 pm

சரி சரி மதர் தெரசா மாதிரி நல்லது செய்தவர்களை மறந்துராதிங்க. கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் இரட்டை கிளாஸ் சிஸ்டம் பாலோ செய்வதும் நம் இந்து மதத்திலும் இருக்கிறது. வர்ணாசிரமம் செய்து செருப்பு தைப்பவன் பிள்ளை கடைசி வரை செருப்பு தைக்க வேண்டும் என்று எந்த தர்மம் சொல்கிறதோ அதை படிக்க சொல்கிறீர்களா. குறை சொல்லி கொண்டே இருக்கலாம் அதை அந்த மதத்தினரை புண் படுத்தாதவரை. நாம் என்ன செம்மறி ஆடுகளா அப்படியே அவர்கள் சொன்னவுடன் போய் சேர. அப்படி இருந்தால் முகலாயர்கள் காலத்திலே நடந்த மத மாற்றத்தில் நாம் அனைவரும் முஸ்லிம்கள் ஆகி இருப்போம். குறை கூறி கொண்டே இருந்தால் வாழ்வு நிறைவே இருக்காது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 11, 2013 11:33 pm

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

சில விளக்கங்கள்:

மதம் என்பது ஒரு மனிதனின் அல்லது ஒரு குழுவின் நம்பிக்கை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியை அடைவதின் வழி அல்லது இறைவனை அடையும் பல வழிகளில் ஒன்று.

உலகம் தோன்றியதில் இருந்து பல அருளாளர்கள் இறைவனை அடையும் வழிகளை அவரவர்கள் வழியில் கண்டு பிறருக்கும் அறிவுறுத்தினர்.

கிறித்து, அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்னார். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவரைப் போன்று தோன்றிய அருளாளர்கள் அவரவர் சார்ந்த கூட்டத்திற்குச் சொன்னார்கள்.

கிறித்து, அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்ன ஒன்றை வைத்து இந்த உலகத்தையே அவரின் கூட்டமாக மாற்றப்போகிறோம் என்பது எப்படிச் சரி? அல்லது விவேகானந்தர், அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்திற்கு சொன்ன ஒன்றை வைத்து இந்த உலகத்தையே விவேகானந்தரின் கூட்டமாக மாற்றப்போகிறோம் என்றால் எப்படிச் சரியாகும்?

அவரவரை அவர்அவர் வழியில் விடுவதுதானே ஜனநாயகம், பண்பாடு, மனிதத்தனம்…. அடுத்தவரை வஞ்சகத்தால் தம் வலைக்குள் விழவைப்பது கேவலமான செயல் அல்லவா? அந்த கேவலத்தைத்தான் இந்த திரியில் நான் விமர்சிக்கிறேன். மற்றபடி நல்ல மனிதராக இருக்கும் நல்ல கிறித்தவர்களை அல்ல.

பென்னிகுயிக்:
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்த ராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அதன்பின், இந்தியாவுக்கு ராணுவப் பொறியாளராக வந்தார் கிறித்தவரான கர்னல் ஜான் பென்னிகுயிக். அணை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து ஆங்கில அரசின் அனுமதியையும் பெற்றார். ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப் பட்டது.அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக் கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார். கிறித்தவராக இந்தியாவிற்கு வந்த பென்னிகுயிக் இந்தச் செயலால் மனிதனாக உயர்ந்தார். மனிதனாக பார்க்க வேண்டியவரை ஒரு மதத்திற்குள் அடக்கக்கூடாது.

அன்னை தெரசா:
கடவுளின் காலடியில் "பட்டு துணியாய் "இருப்பதை விட ஏழையின் கண்ணீர் துடைக்கும் "கை குட்டையாக" இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் அன்னை தெரசாவை கிறித்தவராக பார்க்கமுடியாது; மனிதராகத்தான் பார்க்கமுடியும்.

இதைப்போலவே ஒவ்வொரு மதத்திலும், சாதியிலும், நாட்டிலும், குலத்திலும், குடியிலும் மனிதர்கள் இருந்தார்கள்; இருப்பார்கள். இவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது.

இதைத்தான் நம் அய்யன் சொன்னார் “உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப் படுவான் என்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வருணாச்சிரம் தமிழன் ஏற்படுத்தியது அல்ல. தமிழனுக்குச் சாதியில்லை. மதமுமில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் அறம்தான். இல்வாழ்க்கையில் அறம், பொருளை சம்பாதிப்பதில் அறம், களவியலிலும் அறம், கற்பியலிலும் அறம், கடவுளை அடைவதிலும் அறம்.

ஒன்றும் தெரியாமல் ஜாலிக்காக இந்தக் கட்டுரை எழுதவில்லை. இந்த வஞ்சக வலையில் சிக்கியவர்களில் எனது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உள்ளார்கள். சிக்கியவர்களால் அவர்கள் குடும்பம் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து அனுபவித்தபின்தான் எழுதுகிறேன். இதைப் படித்து, படித்தவர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தி, வஞ்சக வலையில் சிக்காமல் யாராவது ஒருவர் தப்பினாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

(மனிதம் வளரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 11, 2013 11:40 pm

ஆரூரன் wrote:

பென்னிகுயிக்:

கிறித்தவராக இந்தியாவிற்கு வந்த பென்னிகுயிக் இந்தச் செயலால் மனிதனாக உயர்ந்தார். மனிதனாக பார்க்க வேண்டியவரை ஒரு மதத்திற்குள் அடக்கக்கூடாது.

அன்னை தெரசா:

கடவுளின் காலடியில் "பட்டு துணியாய் "இருப்பதை விட ஏழையின் கண்ணீர் துடைக்கும் "கை குட்டையாக" இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் அன்னை தெரசாவை கிறித்தவராக பார்க்கமுடியாது; மனிதராகத்தான் பார்க்கமுடியும்.

இதைப்போலவே ஒவ்வொரு மதத்திலும், சாதியிலும், நாட்டிலும், குலத்திலும், குடியிலும் மனிதர்கள் இருந்தார்கள்; இருப்பார்கள். இவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது.

இதைத்தான் நம் அய்யன் சொன்னார் “உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப் படுவான் என்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வருணாச்சிரம் தமிழன் ஏற்படுத்தியது அல்ல. தமிழனுக்குச் சாதியில்லை. மதமுமில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் அறம்தான். இல்வாழ்க்கையில் அறம், பொருளை சம்பாதிப்பதில் அறம், களவியலிலும் அறம், கற்பியலிலும் அறம், கடவுளை அடைவதிலும் அறம்.

சூப்பருங்க

மதத்தினை மதமாகக் கொண்டு மனிதத்தை மறந்தவர்கள் இதனை
புரிந்துகொண்டு நடந்தால் இந்த கட்டுரை எழுதும் நிலை வந்திருக்காது.




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 12, 2013 10:16 am

ஆரூரன் wrote:கடவுளின் காலடியில் "பட்டு துணியாய் "இருப்பதை விட ஏழையின் கண்ணீர் துடைக்கும் "கை குட்டையாக" இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் அன்னை தெரசாவை கிறித்தவராக பார்க்கமுடியாது; மனிதராகத்தான் பார்க்கமுடியும்.

இதைப்போலவே ஒவ்வொரு மதத்திலும், சாதியிலும், நாட்டிலும், குலத்திலும், குடியிலும் மனிதர்கள் இருந்தார்கள்; இருப்பார்கள். இவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது.

இதைத்தான் நம் அய்யன் சொன்னார் “உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப் படுவான் என்று.

அருமை ஆரூரன்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 11:49 am

தொடருங்கள் ஆரூரன் அவர்களே




உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Apr 12, 2013 2:33 pm

இங்கு சொல்லி இருக்கும் விடயங்கள் போலவே எங்கள் தெருவிலும் ஒன்று நடந்துகொண்டு இருகின்றது இப்போது........

எங்கள் தெருவில் மிக பெரிய சர்ச் ஒன்று உள்ளது, அதிலிருந்து இப்போதெல்லாம் சில பெண் மனிகள் ஞாயிற்று கிழமையானால் சில அச்சடித்த தாள்களை எடுத்து கொண்டு வந்து வீடு வீடாக சென்று பேசியும் ஜெபம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். எங்கள் வீட்டுக்கு வந்த போது நாங்கள் எங்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று சொல்லி அனுப்பிவிட்டோம். ஆனால் மற்ற வீடுகளுக்கு அவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர். அதில் சிலருக்கு நானஸ்நானம் எடுக்க சொல்லி இருகின்றனரம்.

எங்கு சென்று சொல்வது இந்த கொடுமையை...............


redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Fri Apr 12, 2013 2:42 pm

Kuzhali wrote:இங்கு சொல்லி இருக்கும் விடயங்கள் போலவே எங்கள் தெருவிலும் ஒன்று நடந்துகொண்டு இருகின்றது இப்போது........

எங்கள் தெருவில் மிக பெரிய சர்ச் ஒன்று உள்ளது, அதிலிருந்து இப்போதெல்லாம் சில பெண் மனிகள் ஞாயிற்று கிழமையானால் சில அச்சடித்த தாள்களை எடுத்து கொண்டு வந்து வீடு வீடாக சென்று பேசியும் ஜெபம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். எங்கள் வீட்டுக்கு வந்த போது நாங்கள் எங்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று சொல்லி அனுப்பிவிட்டோம். ஆனால் மற்ற வீடுகளுக்கு அவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர். அதில் சிலருக்கு நானஸ்நானம் எடுக்க சொல்லி இருகின்றனரம்.

எங்கு சென்று சொல்வது இந்த கொடுமையை...............

Kuzhali wrote:இங்கு சொல்லி இருக்கும் விடயங்கள் போலவே எங்கள் தெருவிலும் ஒன்று நடந்துகொண்டு இருகின்றது இப்போது........

எங்கள் தெருவில் மிக பெரிய சர்ச் ஒன்று உள்ளது, அதிலிருந்து இப்போதெல்லாம் சில பெண் மனிகள் ஞாயிற்று கிழமையானால் சில அச்சடித்த தாள்களை எடுத்து கொண்டு வந்து வீடு வீடாக சென்று பேசியும் ஜெபம் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். எங்கள் வீட்டுக்கு வந்த போது நாங்கள் எங்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று சொல்லி அனுப்பிவிட்டோம். ஆனால் மற்ற வீடுகளுக்கு அவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளனர். அதில் சிலருக்கு நானஸ்நானம் எடுக்க சொல்லி இருகின்றனரம்.

எங்கு சென்று சொல்வது இந்த கொடுமையை...............

இதற்காகத்தானே இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாகப் பணம் வழங்கப்படுகிறது, இவர்களின் முழுநேர வேலையே மதமாற்றக் கருத்துக்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 10:48 pm

redindian wrote:

இதற்காகத்தானே இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாகப் பணம் வழங்கப்படுகிறது, இவர்களின் முழுநேர வேலையே மதமாற்றக் கருத்துக்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

நானும் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்




உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 15, 2013 12:08 am

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-7
வார இறுதி நாட்களில் தொலைக்காட்சியில் சிக்காமல், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அளவளாவதற்காக நானும் என் நண்பர்களும் ஓரிடத்தில் கூடுவது உண்டு. ஈகரையில் இந்த பதிவு வரத் தொடங்கிய பின்னர் ஒருநாள், எனது நண்பர் ஒருவர் இந்தப் பதிவைப் பற்றி அளவளாவினார்.

பேச்சு சுவாரஸ்யமாக போய்க் கொன்டிருந்த போது நான் கேட்டேன். “{நமக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு மதமும் மற்ற மதத்தாரை மாற்ற மெனக்கெடுவதில்லை. ஆனால் கிறித்தவ மதம் மட்டும் ஏன் இந்த கொலைவெறியுடன் செயல்படுகிறது?” என்றேன்.

அதற்கு வந்த பதில்கள் ‘பகீர் ரகம்”. அதை அப்படியே தருகின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.

பிஸினெஸ் செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார். “ஏம்ப்பா! தொழில்ல பணத்தைப் போட்ட முதலாளி சும்மா இருப்பானா? TARGET வெச்சுருப்பான் இல்ல. நினச்ச ரிசல்ட் வரலன்னா பென்டை கழட்ட மாட்டான். TARGET ஐ முடிக்க வேலைக்காரன் என்னவெல்லாம் வழியிருக்கோ அதெல்லாம் யோசிப்பானா இல்லையா? அதுதான் இங்க நடக்குது.” என்றார்.

“அதுமட்டுமில்ல. ஏற்கனவே கையிலெ இருக்குற கஸ்டமர்லாம் பழைய பாதைக்கே போயிட்டான்னா என்ன பண்றதுன்னு பல செக்பாயிண்ட் வச்சிருக்காங்க. இப்படியிருந்தும் சில பேர் அப்பா சாமி விட்டா போதும் அப்படின்னு ஓடிடறாங்க. பணத்தை போட்ட முதலாளி என்ன கேக்குறான் , “ஏண்டா உங்களால புது கஸ்டமரைதான் கொண்டுவரமுடியல... அட்லீஸ்ட், இருக்குறவனையாவது விடாம இருக்கலாமே” அப்படீங்கறான். இதுதான் காரணம்.

பத்திரிக்கை துறையைச்சார்ந்த இன்னொரு நண்பர் சொன்னார்.
நீங்க காமெடியா சொல்றீங்க. அது உண்மைதான். கி.பி.2050 க்குள்ள தென்னிந்தியாவை கிறித்தவர்கள் அதிகமுள்ள பகுதியாக ஆக்க முடிவெடுத்திருக்காங்க.

அதுக்கு பல ஸ்ட்ரேட்டஜி பண்ணியிருக்காங்க. அதுல ஒண்ணு MEDIA. பல ஊடகங்கள், பத்திரிக்கைகள் அவங்களோட கண்ட்ரோல்லதான் இருக்கு. ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஒண்ணு அவங்கள்தா இருக்கும். அல்லது அவங்களோட ஷேர் அதிகமா இருக்கும். அல்லது அவங்களோட ஆளுங்க முக்கியமான இடத்தில இருப்பாங்க. அதனால எந்த ஒரு ஊடகமும், பத்திரிக்கையும் இந்த மதமாற்றத்தைப் பத்தி தீர்க்கமாக துணிச்சலாக எழுதமாட்டாங்க” என்றார்.

மேலும் அவர் சொன்னது:
இப்படி அவங்க வெறி எடுத்து திரிஞ்சாலும் அவங்களை ரொம்ப டிஸ்டெர்ப் பண்ற விஷயங்கள் என்ன தெரியுமா?

அவர் சொன்ன சில டிஸ்டெர்ப் செய்திகள்:

1) கிட்டத்தட்ட ஐநூறு வருசமா வெறியெடுத்துத் திரிஞ்சும் பலப்பல ஏமாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியும் மிகப்பெரிய அளவில தமிழ்நாட்டுல தங்களால மாற்றத்தைக் கொண்டுவர முடியலங்கற ஆதங்கம்.

2) கிறித்தவ மதத்தில பல போஸ்டிங்... பலகட்ட HIERARCHY. ஆனால் இது எதுவுமேயில்லாத இந்துமதம் எப்படி இப்படி ஸ்ட்ராங்கா நிக்குது? அப்படீங்கற குடைச்சல்.

3) ஒரு கும்பல் பச்சைகலர் ஜிங்குசா… ஜிங்குசா… அப்படீன்னு பழனிக்கு மாலை போட்டுடறான். போறவன் சும்மா போறானா. அடுத்த வருசமே புது ஆளை சேர்த்துக்குடறான். கார்த்திகை மாசம் வந்துட்டா சபரிமலைக்கு கிளம்பிடறான். கருப்பு, காவி, நீலம் கட்டிக்கிட்டு கன்னிசாமி…. குருசாமி… அப்படின்னு SELF PROMOTION கொடுத்துக்கறான். பெருமாளைக் கும்பிடறேன்னு வருசம் முழுக்க திருப்பதிக்கு ஓடிடறான். பெருமாள் கேக்காமாலேயே பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுறான் (இங்கே சர்ச்ல நம்ம கண்கானிப்பு வேலையெல்லாம் பார்த்து அடாவடி பண்ணி பணம் வாங்க வேண்டியிருக்கு!). சிவப்பு துணியைக் கட்டிக்கிட்டு மருவத்தூர் கிளம்பிடுறானுங்க. வயசானா ஒஞ்சுடுவானுங்கன்னு பார்த்தா காசி ராமேசுவரம் கிளம்பிடுறானுங்க.

4) அவங்க மதத்தில போஸ்டர் அடிச்சு ஒட்டி, பலவிதமான அட்வர்டைசிங் டெக்னிக் பயன்படுத்தி பல எழுப்புதல் கூட்டங்களை நடத்தினாத்தான் ஏதோ கும்பல் கூடுது. இங்க இப்படியா? ஒருத்தன் கருப்புக்கலர் டிரஸ்ஸ போட்டுக்கிட்டு “சாமியே....” அப்பன்னா. அந்த ஊர்ல இருக்குற மத்தவங்களுக்கு செலவேயில்லாம மார்க்கெட்டிங் பண்றானே?

5) ஏதோ ஒரு சாமியைக் கும்பிட்டா பரவாயில்ல. கடவுள்ன்றான்... பார்த்தா யானையைக் கும்பிடறான், காளையைக் கும்பிடறான், எலியைக் கும்பிடறான், நாயைக் கும்பிடறான், குரங்கு, பன்னியைக் கூட விட்டுவைக்கல.

6) எத்தனைக் கோயில்கள்? கண்ணில படற இடங்களெல்லாம் கணபதி, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் அது இல்லாம அறுபடை வீடு, சிவனுக்கு 267 பாடல்பெற்ற தலம், அம்மனுக்கு தனிக் கோயில்கள், பெருமாளுக்கு 108 திவ்ய தேசம், சித்தர்கள் தங்கின மலைகள், பாடல் பெறாத கோயில்கள், இது இல்லாம புதுசா முளைக்கிற கோயில். அப்பப்பா…

7) இந்தக் கோயில்கள்ள நடக்குற விழாக்கள். சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, நல்லநாள், பெரிய நாள் எத்தனை எத்தனை? வெள்ளிக்கிழமைன்னா தானாக் கூடுற கூட்டம்!

8) நாலு பேர் சேர்ந்தான்னா யாரோட பணத்தையும் எதிர்பார்க்காம புதுசா கோயில கட்ட ஆரம்பிச்சுடறான். சரச் கட்டறதுன்னா அப்படியா?

9) சாமியார்ன்னு ஒருத்தன் வந்தான்னா அவன்பின்னாடி ஏகப்பட்டக் கூட்டம். எத்தனை சாமியார் ஏமாத்துனாலும் அதைப்பத்தி கவலைப்படாத கும்பல். கார்ப்பொரேட் சாமியாருங்க எத்தனை பேர்? எத்தனை மடம்?

10) வீட்டுல ஒரு விஷேசம் நடந்தா உடனே கோயிலுக்குப் போயிடறது. கும்பல கூட்டிடறது. விதவிதமான விரதம்...ஏகாதசிக்கு விரதம்,... சனிக்கிழமை விரதம்,... வியாழக்கிழமை விரதம்....சோம வார விரதம்...

11) நாமம் போடறவன் சிவன் கோயிலுக்கும் போறான். விபூதிப்பட்டை போடறவன் பெருமாளைத் தேடியும் ஓடறான். பல கடவுள்ன்னு நாம என்னதான் பொய் பிரச்சாரம் பண்ணினாலும் அவங்ககிட்ட எந்த வித்தியாசமும் இல்ல.

12) வெளிநாட்டுல போய் செட்டிலானவன் சும்மா இருக்கானா? அங்க போய் கோயிலைக் கட்ட ஆரம்பிச்சுடறான்?

இப்படியெல்லாம் எந்த ஒரு வழி நடத்துபவனும், மார்க்கெட்டிங்கும் இல்லாம தானா நடந்தா அவங்களுக்கு எரிச்சல் வருமா? வராதா? வயிறு பத்திக்கிட்டு எரியத்தானே செய்யும்?

இதைக்கேட்ட ஒரு நண்பர் சொன்னார்.

வயிறு மட்டுமா எரியும்?
???????????????????????????
உடம்பு முழுக்க சேர்ந்துல்ல எரியும்!

(மனிதம் வளரும்)

Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக