புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
44 Posts - 44%
heezulia
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
43 Posts - 43%
prajai
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_m10விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:25 pm

First topic message reminder :


"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!

1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.

சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.




விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:35 pm


தடியை ஓங்கினால் தானம்..

அல்மோராவிலிருந்து கர்ண பிரயானை, ருத்u பிரயாகை வழியாக சுவாமிஜி, சாரதானந்தர், அகண்டானந்தர், கிருபானந்தர் ஆகியோர் ஸ்ரீநகரை அடைந்தனர். அளகானந்தா நதிக்கரையில் துரியானந்தர் ஒரு சமயம் வாழ்ந்த குடிசையில் அனைவரும் தங்கினர். இங்கே சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கி, பிச்சையுணவு ஏற்று வாழ்ந்தனர். முழு நேரமும் பிரார்த்தனை, தியானம், சாஸ்திரப் படிப்பு என்று நாட்கள் கழிந்தன.

ஸ்ரீநகரில் தமது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். சுவாமிஜி அவரிடம் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட ஆசிரியர், தாம் மதத்திற்கு வர ஏங்கினார். பின்னாளில் துறவியரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவராக வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர்களைத் தம் வீட்டில் அழைத்து உபசரித்தார்.

அங்கிருந்து அனைவரும் ஸ்ரீநகர் வழியாக டெஹ்ரியை அடைந்தனர். ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு கவியத் தொடங்கியது. பசியால் அவர்கள் மிகவும் களைப்புற்றிருந்தனர். பாழடைந்த ஒரு சத்திரத்தில் சாமான்களை வைத்துவிட்டு பிச்சைக்காக வெளியில் சென்றனர். வீடுகளில் கேட்டும் எதுவும் கிடைக்கவில்லை. யாரும் இவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. 'இமயப் பகுதி இல்லை. ஆனால் அவர்கள் தானம் தர வேண்டுமானால் நாம் தடியை ஓங்க வேண்டும்' என்ற பழமொழி ஒன்று உள்டு. அதனை நினைவுகூர்ந்தார் அகண்டானந்தர். எனவே எல்லோரும் கைத்தடிகளை ஓங்கி, 'உணவு தராவிட்டால் கிராமத்தையே சூறையாடி விடுவோம்' என்று உரத்த குரலில் ஆவேசமாகக் கூறி அனைவரையும் பயமுறுத்தினர். அவ்வளவுதான், உணவும் தேவையான அனைத்தும் அவர்கள் இருந்த இடத்திற்குத் தானாக வந்து சேர்ந்தன. வேண்டியவற்றைக் கொடுத்துவிட்டு பயபக்தியுடன் கைகட்டி நின்றனர் அந்தக் கிராம மக்கள்!



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:36 pm


சுவாமிஜியை மாற்றிய சகோதரியின் மரணம்!

1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமிஜியும், அகண்டானந்தரும் அல்மோராவை அடைந்தனர். அங்கே அம்பா தத் என்வரின் தோட்ட வீட்டில் தங்கினர்.

சில நாட்கள் அங்கே தங்கிய சுவாமிஜி தனிமை வாழ்வை நாடி ஏங்கலானார். எனவே ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சில மைல் தொலைவில் இருந்த குகை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். அந்தக் குகை காஸார் தேவி கோயிலுக்கு அருகில் இருந்தது. அடர்ந்த காட்டுப்பகுதி அது. சில காலம் அங்கே தங்கிய சுவாமிஜி ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவர்போல் மீண்டும் திரும்பி லாலாவின் வீட்டிற்கே வந்தார்.

தீவிர தவ வாழ்வின் விளைவாக சில நாட்கள் லாலாவின் வீட்டில் தங்கிய சுவாமிஜியை அதிர்ச்சியில் உறைய வைத்த செய்தி ஒன்று வந்தது. அவரது சகோதரிகளுள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மட்டுமல்ல, சுவாமிஜியைத் தீவிர சிந்தனையிலும் ஆழ்த்தியது இந்தச் சோக சம்பவம். சுவாமிஜியுடன் ஓடியாடிக் களித்தவர் அவர். சிம்லாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த அவரது திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. சிறுவயதிலேயே அவரது திருமணம் நடைபெற்றது. ஆசாரமிக்க புகுந்த வீட்டினருடன் அவரால் அனுசரித்துப் போக இயலவில்லை. திருமண நாள் முதலே கவலையையும் கண்ணீரையுமே அவர் கண்டிருந்தார். எல்லைமீறிய சோகம் ஆட்கொண்ட போது தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

'பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இமயமலைக்குச் சென்றேன். இனி திரும்பி வரக்கூடாது என்ற முடிவுடன்தான் சென்றேன், ஆனால் என் சகோதரி தற்கொலை செய்து கொண்டு இறந்தாள். அந்தச் செய்தி அங்கே என்னை வந்தடைந்தது. என் பலவீன இதயம், நான் அமைதியை எதிர்நோக்கிய நிலையிலிருந்து என்னைத் தூர விட்டெறிந்து விட்டது என்று எழுதினார் சுவாமிஜி. 'பெண்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்குமாறு செய்ய வேண்டும்' என்று சுவாமிஜி பெண்கள் முன்னேற்றத்திற்காகத் கதறியதன் அடிப்படையை இந்தச் சோக சம்பவத்தில் நாம் காண முடியும்.



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:36 pm


சுவாமிஜியும் அகண்டானந்தரும்...

வைத்தியநாதத்திலிருந்து காஜிபூர் வழியாக இருவரும் காசியை அமைந்தனர். காசியில் பிரமத தாஸின் வீட்டில் தங்கினர். காசியில் வாழ்ந்தாலும் இமயத்தின் பனிமலைச் சிகரங்களைக் காண்பதற்கான ஆர்வமே சுவாமிஜியின் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது. ஒருநாள் சுவாமிஜியைச் சந்திக்கப் பலர் வந்திருந்தனர். அப்போது சுவாமிஜி ஏதோ ஆவேசம் வந்தவர்போல் பிரமத தாஸிடம், 'இப்போது நான் காசியிலிருந்து புறப்படுகிறேன். சமுதாயத்தின்மீது ஒருநாள் வெடிகுண்டுபோல் வெடிப்பேன். இந்தச் சமுதாயம் ஒரு நாய்போல் என்னைப் பின்தொடரும். அதுவரை இந்த நகரத்திற்கு வர மாட்டேன்' என்று கூறினார். பின்னர் அங்கிருந்து சுவாமிகள் இருவரும் கிளம்பினர்.

பத்ரி நாத் செல்வது அவர்களின் திட்டம். காசியிலிருந்து புறப்பட்ட அவர்கள் அயோத்தி, நைனிடால் வழியாக அல்மோரா சென்றனர். வழியில் காக்ரிகாட் என்ற இடத்தை அடைந்தனர். கோசி, சூயல் என்ற இரண்டு சிற்றாறுகள் சங்கமிக்கின்ற அழகிய மலைப் பகுதி அது. சங்கமத் தலத்திற்கு அருகில் பெரியதோர் அரச மரம். சுற்றிலும் உயர்ந்த மலைச் சிகரங்கள். 'இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது. தியானத்திற்கு ஏற்ற இடம் இது' என்றார் சுவாமிஜி. சொன்னது மட்டுமல்ல, ஆற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கவும் செய்தார்.

சுவாமிஜியின் வாழ்க்கையில் அது முக்கியமானதொரு நாளாக இருந்தது. அவரது பின்னாள் வாழ்க்கையிலும் சொற்பொழிவுகளிலும் திட்டங்களிலும் காணப்படுகின்ற ஓர் அற்புதமான கருத்தை அன்றைய தியானத்தில் ஓர் அனுபூதியாகப் பெற்றார் அவர். தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அகண்டானந்தரிடம், 'என் வாழ்க்கையில் மகோன்னதமான கணங்களுள் ஒன்றை இப்போது நான் கடந்து வந்தேன். வாழ்க்கைப் புதிர்களுள் மிகவும் முக்கிமான ஒன்றிற்குரிய தீர்வு இந்த அரச மரத்தின் அடியில் எனக்குக் கிடைத்தது. ஒற்றுமை நிலவுவதை நான் கண்டேன். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனித உடம்பிலும் உள்ளது. பிரபஞ்சம் முழுவதையும் நான் ஓர் அணுவில் கட்டேன்' என்று கூறினார்.



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:37 pm


சன்னியாசத்துக்கு இலக்கணம்!

ஒரு நாள் சுவாமிஜியை அந்த ஊர் செல்வந்தர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதாக மன்மதநாத் தெரிவித்தார். 'எனது வண்டியிலேயே போய்விடலாம் உங்களுக்குச் சிரமம் இருக்காது' என்றும் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி அதனை மறுத்து, 'அது சன்னியாச தர்மம் அல்ல. செல்வந்தவர்களை நாடுவது துறவு நெறிக்குப் புறம்பானது' என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மன்மதநாத்தின்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுவாமிஜி பாகல்பூரிலிருந்து புறப்பட பல முறை முயற்சித்த போதும் மன்மாநாத் அவரை விடவில்லை. எனவே ஒருநாள் சுவாமிஜியும் அகண்டானந்தரும் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு இமயத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். மன்மத நாத் வீட்டிற்குத் திரும்பி வந்து விவரம் அறிந்து மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். பத்ரிநாத்திற்குப் போக வேண்டும் என்று சுவாமிஜி ஒருமுறை சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்த அவர் அல்மோராவரை சென்று சுவாமிஜியைத் தேடினார். ஆனால் அதற்குள் சுவாமிஜி அங்கிருந்து சென்று விட்டிருந்தார்.

அடுத்து இருவரும் வைத்தியநாதத்தில் தங்கினர். அங்கே பாபு ராஜ் நாராயண் போஸ் என்பவரைச் சந்தித்தனர். அவர் பிரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இளமை நாட்களில் ஆங்கிலேய மோகத்தால் இந்தியாவையும் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெறுத்த வேர் பெற்றோரின் மறைவிற்குப் பின்னர், மேலைநாட்டு மோகத்தை விட்டு இந்தியாவையும் அதன் பெருமையையும் போற்றத் தொடங்கினார். மேலைநாட்டு மோகத்தில் இருந்த அதே தீவிரத்தை இப்போது மேலை நாடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் எதிர்ப்பதில் காட்டினார். ஆங்கிலேய நடை, உடை, கலாச்சாரம் ஆங்கில வார்த்தையைப் பயன்படத்தினால் கூட ஒரு வார்த்தைக்கு ஒரு காசு அபராதம் விதிப்பாராம்.

வயது முதிர்ந்தவரான ராஜ் நாராயன் போஸின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக சுவாமிஜியும் தமக்கு ஆங்கில வாசனையே இல்லாததுபோல் காட்டிக்கொண்டார். அகண்டானந்தரிடமும் அவ்வாறே பழகுமாறு கூறினார். தூய வங்க மொழியிலேயே உரையாடல் நடைபெறும். சுவாமிஜிக்கு ஆங்கிலம் சிறிதும் தெரியாது என்றே ராஜ் நாராயண் நம்பியிருந்தார். ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது அவசரத்தில் ராஜ் நாராயண் 'ப்ளஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார். அது சுவாமிஜிக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் விரல்களைக் கூட்டல் குறிபோல் வைத்துக் காட்டினாராம். பின்னாளில் சுவாமிஜியின் பெயர் நாடெல்லாம் பரவியபோது அவர் அடைந்த பிரமிப்புக்கு எல்லையே இல்லை. 'சுவாமிஜி ஒரு விசித்திரமான மனிதர் என்றாராம்!



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:37 pm


அன்னையின் ஆசிகள்...

மடம் வளர வேண்டும், கோயில் எழ வேண்டும் இவையெல்லாம் சுவாமிஜியை அலைக்கழித்த எண்ணங்கள் தான். ஆனால் இவை அனைத்தையும் மீறி அவரது மனம் தனிமை வாழ்க்கைக்காக ஏங்கியது. இமயப் பகுதிகளில் சில காலம் செலவழித்திருந்த அகண்டானந்தர் அப்போதுதான் திரும்பியிருந்தார். அவர் கூறிய வர்ணனைகளும் யாத்திரைக் கதைகளும் சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தூபமிட்டன.

அகண்டானந்தரை உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்து, அவருடன் சென்று அன்னை ஸ்ரீ சாரதா தேவியைத் தரிசித்தார். அம்மா மிக மேலான அனுபூதியை அடையாமல் நான் திரும்ப மாட்டேன்' என்று அன்னையிடம் கூறினார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரால் அன்னை அவரை ஆசிர்வதித்தார். பிறகு அகண்டானந்தரிம், 'மகனே, என் செல்வத்தையே (சுவாமிஜி) உன்னிடம் ஒப்பமடைக்கிறேன். உனக்கு இமய மலைப் பகுதியைப்பற்றி நன்றாகத் தெரியும். நரேன் உணவிற்குத்திண்டாடாமல் பார்த்துக்கொள்' என்று கூறினார். இவ்வாறு அன்னையின் ஆசிகள் பெற்று 1890 ஜூலை இறுதியில் புறப்பட்டார் சுவாமிஜி. 'நான் ஒருமுறை தொட்டால் ஒருவனது வாழ்க்கை மாற்றம் காண வேண்டும். அத்தகைய ஆற்றலைப் பெறாமல் திரும்ப மாட்டேன்' என்று தமது சகோதரத் துறவிகளிடம் தெரிவித்துவிட்டு, நீண்ட பயணத்திற்காகப் புறப்பட்டார் சுவாமிஜி.

கங்கைக் கரை வழியா நடந்தே செல்ல எண்ணினார் சுவாமிஜி. ஆகஸ்ட் மாதம் சுவாமிஜியும் அகண்டானந்தரும் பாகல்பூரை அடைந்தனர். அந்த ஊரில் பிரபலமான குமார் நித்தியானந்த சிங் தனது நண்பரான மன்மதநாத் சௌதுரி என்பவரின் வீட்டில் சுவாமிஜியும் அகண்டானந்தரும் தங்க ஏற்பாடு செய்தார்.

இந்த இரண்டு துறவிகளையும் பற்றி ஆரம்பத்தில் மன்மத நாத் பெரிதாக எண்ணவில்லை. எத்தனையோ துறவிகள் வந்து போகின்றனர், அவர்களைப்போல் இருவர் என்று தான் நினைத்தார் அவர். ஒருநாள் மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர். மன்மத நாத் அவர்களிடம் பேசவே விரும்பாததுபோல் சற்று தள்ளி அமர்ந்து புத்த மதம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை வாசிக்கலானார். சிறிதுநேரம் கழிந்தது. சுவாமிஜி அவரிடம், 'அது என்ன புத்தகம்?' என்று கேட்டார். அதற்கு மன்மத நாத் புத்தகத்தின் பெயரைக் கூறிவிட்டு, 'உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி,'ஏதோ கொஞ்சம் தெரியும்' என்றார். உரையாடல் தொடர்ந்தது. ஆங்கில இலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கொள் காட்டி தடையின்றிப் பேசலானார் சுவாமிஜி. பிரமித்துப் போனார் மன்மத நாத். ஒரு துறவி ஆங்கிலத்தில், அதுவும் இவ்வளவு சரளமாகப் பேசுவது என்பது அந்த நாளில் அபூர்வம்! சிறிது நேரத்திற்குள் சுவாமிஜியின் புலமையையும் அறிவின் ஆழத்தையும் புரிந்து கொண்டார் மன்மத நாத் யோகம், உபநிஷதம் போன்ற பல விஷயங்களில் சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவும் தொடர்ந்த நாட்களில் அவருக்குப் புலப்பட்டது.



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 6:30 pm

ஒவ்வொரு நிகழ்வுகளும் ஓராயிரம் கருத்துள்ள விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா




விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Mவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Uவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Tவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Hவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Uவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Mவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Oவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Hவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Aவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Mவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Eவிவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 12:30 am

என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது

சுவாமிஜி வாழ்ந்தபோது ராஜபுதனத்தின் மிகப்பெரிய சம்ஸ்கிருதப் பண்டிதரான நாராயன் தாசைச் சந்தித்தார். இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சம்ஸ்கிருத இலக்கணப் படிப்பைத் தொடர்ந்தார் சுவாமிஜி. பாணினியின் இலக்கண சூத்திரங்களுக்கு பதஞ்ஜலி எழுதிய மகாபாஷ்யத்தைக் கற்கத் தொடங்கினார் சுவாமிஜி. சில நாட்கள் கற்பித்த உடனேயே பண்டிதருக்கு சுவாமிஜியின் அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்ளைப் போன்ற ஒரு மாணவன் கிடைப்பது அரிது. நான் சொல்லித் தந்து நீங்கள் கற்பதற்கு இனி எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்துவிட்டேன். நீங்களும் அவற்றைப் புரிந்துகொண்டீர்கள்' என்றார். சுவாமிஜி அவருக்குப் பல முறை வணக்கமும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.

மன்னரும் சுவாமிஜியும் பல நேரங்களில் குதிரை சவாரி செய்து அருகிலுள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் காட்டில் ஒரு குறுகலான பாதை வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்ற முட்செடிகள் சுவாமிஜியின்மீது குத்திவிடக் கூடாது என்பற்காக மன்னர் தமது கைகளால் அவற்றை ஒதுக்கிப் பிடித்தார். அப்போது முட்கள் குத்தி மன்னரின் கைகளிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. நெகிழ்ந்து போனார் சுவாமிஜி. சுவாமிஜியின் உணர்ச்சியைப் புரிந்து கொண்ட மன்னர் சிரித்தபடியே, 'விடுங்கள் சுவாமிஜி, நாங்கள் க்ஷத்திரியர்கள் அல்லவா?தர்மத்தைக் காப்பது எங்கள் கடமை அல்லவா?' என்று கேட்டார்.

மற்றொரு நாள் மன்னரும் சுவாமிஜியும் பரிவாரங்களுமாக வேட்டைக்குச் சென்றனர்.எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தது. சுவாமிஜியுடம் கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்தனர். சுவாமிஜி சற்று தொலைவில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். திடீரென்று ஒரு புலி அந்த மரத்தின் பக்கமாகப் பாய்ந்து சென்றது. சுதாரித்துக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் சுவாமிஜியின் அருகில் விரைந்தனர். அதற்குள் புலி மறைந்து விட்டிருந்தது. ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு அப்போது மன்னர் சுவாமிஜியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, 'பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை எதுவும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது என்றார்.




விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 2:31 pm

நீ அடிமையாக இருக்க நீயே காரணம்

கணிசமான சம்பளம் கிடைக்கின்ற வேலையில் இருந்தார் ஹரிபாதர். அவரது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள். அவர்கள் தம்மைக் கடிந்து கொள்வது ஹரிபாதருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே காட்டுவார். இதைப்பற்றி அறிந்த சுவாமிஜி கூறினார்.

'இதோ பார், பணத்திற்காக நீதான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாய். உனக்குரிய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்துவிடுகிறார்கள். "ஓ! இவர்கள் என்னை அடிமைபோல் நடத்துகின்றனர்" என்று ஏன் புலம்புகிறாய்? சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிதுபடுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. நீ அடிமையாக இருப்பதற்கு நீயே காரணம். இப்போது நினைத்தாலும் நீ வேலையை ராஜினாமா செய்யலாமே! அதிகாரிகளை ஏன் குறைகூற வேண்டும்? இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறைகூறாதே; உன்னையே குறை கூறு. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டு என்றா நினைக்கிறாய்? நீ விலகினால் அந்த இடத்தில் வேலை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். உன்னைப்பற்றி கவலைப்படு உனது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைத்துப் பார். அத்துடன் நிறுத்திக்கொள். முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே நல்லதாக உனக்குத் தெரியும். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே அப்போது நீ காண்பாய். நாம் காணும் புறவுலகம் நமது பிரதிபிம்பமே. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய். ஆச்சரியத்திற்குரிய விஷயம் இது, ஆனால் உண்மை. நமது மனநிலைக்கு ஏற்பவே பிறர் நம்மிடம் பழகுவார்கள். பிறர் நம்மிடம் நடந்து கொள்வதை வைத்து நமது மனநிலையை, நமது மனப்பக்குவத்தை அறிந்து கொள்ளாம்.'

சுவாமிஜியின் இந்த அறிவுரை ஹரிபாதரின் வாழ்க்கையில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. சுவாமிஜியின் வழிகாட்டுதலில் பகவத் கீதையைப் படித்தார் ஹிரிபாதர். இதுவரை புரியாத பல உண்மைகள் அவருக்குப் புரிந்தன.



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Sat May 04, 2013 6:36 pm

நன்றி நல்ல கட்டுரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 2:41 am


"தேவாமிர்தத்தை விட சுவையான சப்பாத்தி!"

கேத்ரியில் நடந்த ஒரு சம்பவம். ஓர் ஊரில் மக்கள் சுவாமிஜியிடம் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். சுவாமிஜி அவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே அந்த நிகழ்ச்சியைப்பற்றி கேட்போம். 'நம்புவதற்கே கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு கணம்கூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எதுவும் கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள், நானும் பேசிக் கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்.

அப்போது தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். 'சுவாமிகளே மூன்று நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை நான் பார்க்கிறேன். என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்!" என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என்னை நெகிழச் செய்தது. "சாப்பிட ஏதாவது நீ தருவாயா?" என்று அவனிடமே கேட்டேன். "தர வேண்டும் என்று தான் என் இதயம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. மாவும் மற்ற பொருட்களும் கொண்டு தருகிறேன். நீங்களே செய்து சாப்பிடுங்கள்" என்றான் அவன். அதற்கு நான், 'வரவாயில்லை. நீயே செய்து கொண்டு வா. நான் சாப்பிடுகிறேன்" என்றேன். அவன் நடுங்கிப் போனான். செருப்பு தைப்பவனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது தெரிந்தால் தண்டிக்கப்படுவான் ஏன், நாடுகடத்தவே செய்வார்கள். ஆனால் நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். "தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாகச் நம்பவில்லை, இருந்தாலும் என்மீதுள்ள அன்பு காரணமாகச் சப்பாத்தி கொண்டு வந்தான். நானும் சாப்பிட்டேன். தேவர் தலைவனான இந்திரன் ஒரு தங்கக் குவளையில் தேவாமிர்தத்தைத் தந்திருந்தால், அதுகூட இவ்வளவு ருசித்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் நெஞ்சம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

'கேத்ரி மன்னருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவரிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக அவனை வரவழைத்தார். தனது தவறுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று அவன் நடுங்கியபடியே வந்தான். மன்னர் அவனைப் புகழ்ந்ததுடன் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகக் கொடுத்து அனுப்பினார்.



விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக