புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
51 Posts - 43%
heezulia
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
2 Posts - 2%
prajai
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
417 Posts - 49%
heezulia
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
28 Posts - 3%
prajai
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_m10தினமணி-ஒன்ஸ்மோர்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி-ஒன்ஸ்மோர்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 12:51 pm

http://media.dinamani.com/article1524315.ece/ALTERNATES/w460/k10.jpg
கோபத்தைப் போலவே அச்சம் என்ற உணர்ச்சிக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும். அச்சத்துக்கா என்று அஞ்ச வேண்டாம். நம்மைப் படைத்துப் பரிபாலித்துக் காக்கும் கடவுளுக்குப் பயந்தால் போதுமானது. பயத்தைவைக்க மிக உயர்ந்த, சரியான இடம் அதுதான். இறைவனுக்கு உண்மையிலேயே மனிதன் அஞ்சினால் இந்த உலகில் அநியாயங்கள் நடக்க வாய்ப்பில்லை. வன்முறையும் வஞ்சமும் இவ்வுலகில் தலைவிரித்தாடுவதன் காரணம் மனிதர்களுக்கு உண்மையான இறையச்சம் இல்லாமல் போனதுதான்.
-
காதலும் காமமும் வருகிறதா?அதற்கு வடிகால் உண்டு. சட்டப்பூர்வமாக அதற்கு முறையான வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் காதலையும் காமத்தையும் மனைவியிடம்தான் காண்பிக்க வேண்டும்.
-
உணர்ச்சியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சுலபமான காரியமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு மனைவி இரவில் கொஞ்சம் தாமதமாக வீடு திரும்பினாள். தனது படுக்கைஅறைக்குள் வந்தபோது போர்வைக்குள்ளிலிருந்து நான்கு கால்கள் தெரிந்தன. உடனே கோபமாக உள்ளே சென்று கிரிக்கெட் மட்டையை எடுத்து கை வலிக்கும் வரை போடு போடென்று போட்டு விட்டு சமையல் கட்டுக்குச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பினாள். அவள் கணவன் நின்று கொண்டிருந்தான்.
-
""என்ன டியர்...இன்னைக்கும் லேட்டா உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க. நான்தான் நம்ம பெட்ரூம்லயே படுத்துக்கச் சொன்னேன். நீ அவுங்களுக்கு ஹலோ சொன்னியா?'' என்றான்.
-
நமது நிலையும் அந்த மனைவியைப் போன்றதுதான். என்றாலும் உணர்ச்சியோடு அறிவைக் கலக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது கனவுகள் நம்மை நோக்கி நகர்ந்து வரும்.
("மந்திரக்காரி (சீக்ரெட் ஆஃப் த மைன்ட்)' என்ற
புத்தகத்தில் பேராசிரியர் நாகூர் ரூமி)
-
தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் தாலுகாவில் உள்ள போலகம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் பாபநாசம் சிவன்.பெற்றோர் இட்ட பெயர் ராமசர்மா. செல்லமாக ராமய்யா. சொந்த ஊர் போலகம் என்றாலும் ராமய்யாவுக்கு "பாபநாசம் சிவன்' என்ற பெயர் வந்தது எப்படி?
-
கொஞ்ச காலம் (11 வருஷம்) திருவனந்தபுரம் பக்கமாய்ப்போய் இருந்துவிட்டு தஞ்சாவூருக்கே திரும்பி வந்தார் சிவன். அப்போது ஒவ்வொரு கோயில் உற்சவமாகச் சென்று பாடிக்கொண்டு நாடோடி போல் திரிந்தார் அவர்.
-
ஒருமுறை கணபதி அக்ரஹாரத்தில் நான்கு முழ வேஷ்டியைக் கட்டிக்கொண்டு சிவன் வருவதைப் பார்த்தார்கள் பக்தர்கள். நெற்றியிலும், தோள்பட்டையிலும் மார்பிலும் பட்டை பட்டையாக விபூதி. கழுத்தில் ருத்ராட்ச மாலை. "அரும் பொன்னே, மணியே...' என்ற தாயுமானவர் பாடலை பக்தி மணம் கமழ அவர் பாடிக் கொண்டிருக்க அதில், லயித்துப் போனார்கள் பக்தகோடிகள்.
-""கைலாசத்திலிருந்து அந்தப் பரமசிவனே நேரடியாக வந்து தரிசனம் தந்தது போல் இருக்கிறது'' என்று உணர்ச்சிவசப்பட்டார் சாம்பசிவ ஐயர் என்ற பக்தர்.
இப்படிச் சிவனாக மாறிய ராமய்யா, பாபநாசத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய தன் சகோதரருடன் சிறிது காலம் தங்கினார். அப்போதிலிருந்து போலகம் ராமய்யா, "பாபநாசம் சிவன்' என்று அழைக்கப்பட்டார்!
("பாபநாசம் சிவன்' என்ற நூலில் வீயெஸ்வி)
-
காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் சாமர்த்தியமாகப் பேசுவதில்வல்லவர். ஒருமுறை நண்பர் ஒருவருடன் உலாவச் சென்றபோது நடுவழியில் சற்றுப் பின் தங்கிவிட்டார். முன்னால் சென்ற நண்பர் தாமதமாகப் பின்னால் வந்த ரெட்டியாரிடம் காரணம் கேட்டார். ""முட்டாளுடன் வந்ததால் தாமதமாகிவிட்டது''என்றார். நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. முட்டாள் என்று ரெட்டியார் யாரைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தார். ரெட்டியார் சிரித்துக் கொண்டே,""நண்பரே...முள்தாளுடன், அதாவது முள் தைத்த காலுடன் வந்ததால் தாமதமாகிவிட்டது என்றேன்'' என்றார்.
-
மற்றொரு சமயம் ஓர் அரண்மனையில் பொன்னிறமான சிவந்திப் பூக்களைத் தட்டில் வைத்துக் கொண்டு முன்பின் அறிந்திராத, பெண்ணொருத்தி வர, அவளைப் பார்த்து""தங்கச்சிவந்தியா?'' என்று ரெட்டியார் கேட்டாராம். அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. "யாரென்று தெரியாத என்னை தங்கச்சி என்கிறார்' என அவள் திகைத்தாள். உடனே ரெட்டியார், ""இவை தங்கச் சிவந்தியா?'' என்று பதம் பிரித்துத் திகைப்பைப் போக்கினார்!
("சான்றோர் வாழ்வில் நடந்தவை' என்ற புத்தகத்தில்பேராசிரியை- முனைவர் எஸ்.சந்திரா)
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 08, 2013 9:27 am

http://media.dinamani.com/article1533606.ece/ALTERNATES/w460/6kd10.jpg
அது ஆளுமைத்திறன் மேம்பாடு குறித்த ஒரு பயிற்சி வகுப்பு. என் நண்பர் ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். 1000ரூபாய் ஒன்றை எடுத்துக்காட்டி, ""இது யாருக்கு வேண்டும்?'' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.
""நிச்சயம் தருகிறேன்'' எனச்சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்தப் புதிய 1000 ரூபாய் நோட்டைக் கொச கொசவெனக் கசக்கி குப்பைக் காகிதம் போல் மேடையின் மூலையில் வீசிவிட்டு,""இப்போது இந்த கசங்கிய 1000 ரூபாய் யாருக்கு வேண்டும்?''என்றார்.
-
மறுபடியும் எல்லோரும் கையைத் தூக்கினார்கள்.
""ஓ அப்படியா!'' என்றபடி அந்தநண்பர் அடுத்து செய்த செயல்அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்ஸியை நசுக்கித் தரையில் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார். ""யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?'' கூட்டத்தில் இருந்த எல்லோரும் அப்போதும் கூட வேகமாகக் கையை உயர்த்தினார்கள்.
-
நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்,""இந்த 1000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்கள் இந்த 1000 ரூபாய் நோட்டு மாதிரித்தான்! இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களினால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்திருக்கலாம். ஏளனம் செய்யப்பட்டிருக்கலாம். நசுக்கப்பட்டிருக்கலாம். கசக்கித் தூக்கி எறியப்பட்டிருக்கலாம். ஆனால் என்ன நடந்தாலும் சரி, எனக்கு மதிப்புப் போய்விட்டது. நான் எதற்கும்பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!'' என்றார் புன்னகையுடன்.
-
""1000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், அழுக்காக்கப்பட்டாலும் அதுதன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் அந்த கசக்கிய 1000 ரூபாய் நோட்டையும் கூட வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும், ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்'' என்பதுதான் நண்பரின் செய்தி.
("நீயும் நானும்' என்ற நூலில் "நீயா நானா' கோபிநாத்)
-
சாதாரணமாகவே சில சினிமாக்காரர்கள்""ஹாலிவுட் ரேஞ்சே வேறப்பா''என்று பேசுவதைக் கேட்டிருப்போம். அங்கே படம்தயாரிப்பது மட்டுமல்ல, அதை வியாபாரப்படுத்தும் முறையும் மிக வித்தியாசமானதுதான். ஹாலிவுட் சினிமா வியாபாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?
-
மொத்தம் 10,80,000 அமெரிக்கர்கள் நேரடியாகவும் 2,30,000 பேர் ஃப்ரீ லேன்சர்களாகவும் (நடிகர்-நடிகைகளைச் சேர்த்து) வேலை செய்யும் இன்டஸ்ட்ரி இது. இங்கே வருடத்துக்குச் சராசரியாய்9.5 பில்லியன் டாலர்கள் வசூல் ஆகிறது. (பில்லியன்- நூறு கோடி)
பொது இடங்களில் படம் பிடிக்க வசூல் செய்யும் வரியாக மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று லட்சம் டாலர் அரசுக்கு வருமானமாக வருகிறது.
ஹாலிவுட்டில் இருப்பவர்களின் சராசரி வருமானம் 73,000 டாலர். (சராசரி அமெரிக்கர்களின் வருமானத்தைவிட 80 சதவீதம் அதிகம் இது.)
ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் சம்பளமாக/ கூலியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
30.2 பில்லியன் டாலர் தொழிற்சார்ந்த நிறுவனங்களுக்கு ஆண்டு வருமானமாகக் கிடைக்கிறது.
-
அமெரிக்க பொருளாதாரத்தால் ஹாலிவுட் தன் பங்காகக் கொடுக்கும் தொகை 60 பில்லியன் டாலர்கள்.
இன்றும் 1 கோடி பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகள் இதன் மூலமாகக் கிடைக்கின்றன. ஒரு லட்சத்து60 ஆயிரம் துணை நிறுவனங்கள்இதன் மூலம் இயங்குகின்றன.
இப்படி அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் மந்திரத் தொழில் ஹாலிவுட் சினிமா. மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் எல்லாம் 2005-ஆம் ஆண்டுக் கணக்கு! இப்போது 2013-ல் நிலைமை இன்னும் எத்தனைப் பன்மடங்கு பெருகியிருக்கிறதோ...தெரியாது!
("சினிமா வியாபாரம்' என்ற நூலில் சங்கர் நாராயண்)
-
தினமணி




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக