புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Kavithai:::Kavithai
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
"தா... டீ "
அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,
உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?
.......
இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!
எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.
அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!
முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!
..........................................................
விழாக்காலம்
அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!
'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட
கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,
ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.
உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!
..............................................................
வழித்துணை
என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்
எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....
மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?
ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.
உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...
உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!
இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,
நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!
..........................................................
புரியாத புதிர்
கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது
ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
................................................................
ஏன் ?
உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை
என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?
................................................
உதிரும் மேகம்
மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது
உன்
நினைவுகள் ...!
.............................................
மழை
பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை
மழை ...!
...................................................
மீள்பார்வை
உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்
பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!
..........................................
கனவு
எந்தத் தடயமும்
விட்டுச் செல்லாமல்
எப்படி முடிகிறது உன்னால் ...?
எந்தன்
இரவுகளுக்குள்
வந்துச் செல்ல...!
.................................................
காதலும் கல்யாணமும்
இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.
இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?
..................................................
குழந்தைக் காதலி
உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி
கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்
காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!
கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!
.................................................
என்ன இது?
உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.
விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)
முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !
என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்
"என்ன இது ?" ,எனக் கேட்டு.
'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?
.............................................
அமுத கனி
காதல் தோல்வி
கசப்பானதொரு
அனுபவம் தான்.
ஆனாலும்
சுகமானது.
உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!
...............................................
அவளுக்குத் திருமணம்
உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?
உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.
உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .
என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .
..................................................
யாரேனும் சொல்லுங்கள் ...
எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,
விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?
அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !
யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.
நியாயத்தை !
...................................................
அந்த நாள் முதல்...
காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்
இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!
மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...
மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...
உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...
எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!
...........................................
ஏன்?
"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.
நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்
நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!
.............................................
ஞாபகங்கள் ...
சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.
காதருகில் வந்து
நாயே என்றாய்.
அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.
முறைத்துச்
சிரித்தாய்.
மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!
...................................................
என்ன இது ?
வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.
பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.
எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?
.........................................................
நெடுங்காதல்
ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.
சிறகு உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்
எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!
அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,
உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?
.......
இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!
எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.
அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!
முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!
..........................................................
விழாக்காலம்
அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!
'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட
கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,
ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.
உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!
..............................................................
வழித்துணை
என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்
எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....
மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?
ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.
உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...
உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!
இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,
நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!
..........................................................
புரியாத புதிர்
கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது
ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
................................................................
ஏன் ?
உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை
என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?
................................................
உதிரும் மேகம்
மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது
உன்
நினைவுகள் ...!
.............................................
மழை
பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை
மழை ...!
...................................................
மீள்பார்வை
உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்
பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!
..........................................
கனவு
எந்தத் தடயமும்
விட்டுச் செல்லாமல்
எப்படி முடிகிறது உன்னால் ...?
எந்தன்
இரவுகளுக்குள்
வந்துச் செல்ல...!
.................................................
காதலும் கல்யாணமும்
இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.
இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?
..................................................
குழந்தைக் காதலி
உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி
கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்
காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!
கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!
.................................................
என்ன இது?
உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.
விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)
முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !
என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்
"என்ன இது ?" ,எனக் கேட்டு.
'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?
.............................................
அமுத கனி
காதல் தோல்வி
கசப்பானதொரு
அனுபவம் தான்.
ஆனாலும்
சுகமானது.
உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!
...............................................
அவளுக்குத் திருமணம்
உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?
உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.
உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .
என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .
..................................................
யாரேனும் சொல்லுங்கள் ...
எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,
விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?
அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !
யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.
நியாயத்தை !
...................................................
அந்த நாள் முதல்...
காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்
இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!
மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...
மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...
உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...
எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!
...........................................
ஏன்?
"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.
நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்
நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!
.............................................
ஞாபகங்கள் ...
சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.
காதருகில் வந்து
நாயே என்றாய்.
அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.
முறைத்துச்
சிரித்தாய்.
மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!
...................................................
என்ன இது ?
வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.
பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.
எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?
.........................................................
நெடுங்காதல்
ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.
சிறகு உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்
எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!
எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.
அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!
வலிகளை மிக உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறது. பதிவிற்கு நன்றி மீனு!
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!
எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.
அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!
வலிகளை மிக உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறது. பதிவிற்கு நன்றி மீனு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Kavithai:::Kavithai Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...
மீனு, இந்த கவிதைகள் அனைத்துமே வெகு சிறப்பு. நன்றி.
..........கா.ந.கல்யாண்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...
மீனு, இந்த கவிதைகள் அனைத்துமே வெகு சிறப்பு. நன்றி.
..........கா.ந.கல்யாண்
![Kavithai:::Kavithai 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![Kavithai:::Kavithai 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![Kavithai:::Kavithai 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mdkhan wrote:மீனு. வாழ்த்துக்கள்....... இவ்வளவு அழகான கவிதையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா
ஆமா..இவளவு அழகான கவிதைகளை..தேடு போயி ..அழகா சுடுவதால்..இவளவு அழகான கவிதைகள் கிடைக்கிறது கான்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|