புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
7 Posts - 64%
heezulia
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 4:36 pm

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களக் கொடியோருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று, அக்கிரமமான ஆலகால விடம் தோய்ந்த ஒரு அறிக்கையை, மார்ச் 19 ஆம் தேதி தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி உள்ளார்.

அதில், சிங்களவர்கள் இந்தியாவின் கலிங்கம், வங்கம் பகுதிகளின் பூர்வீக மக்கள் என்றும், சிங்கள மொழி, சமஸ்கிருதம், இந்தி மொழியோடு தொடர்பு உள்ளது என்றும், ஈழத்தமிழர்கள் வெறும் 12 சதவீதம்தான் என்றும், அவர்களின் பயங்கரவாதத்தை ஒடுக்கிய இராஜபக்சே அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சிங்கள அரசன் ஸ்ரீ விஜயன், ஒரிசாவில் இருந்து வந்தவன் என்றும், இந்தியாவின் புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றுவதாகவும் எனவே தமிழ்நாடு தவிர்த்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம், தன் அதிகார வரம்பை மீறி, இராஜீய உறவுகளின் எல்லைகளைத் தாண்டி, இந்தியாவில் வாழ்கிற ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில மக்களிடம் தமிழர்களுக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில், நச்சுக் கருத்துகளை விதைத்து உள்ளார். சிங்களர்களின் அரசனான ஸ்ரீ விஜயன் கலிங்கம் எனும் ஒரிசாவில் இருந்து வந்தவன் என இலங்கையின் மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது என்கிறார். இந்த மகாவம்சம் எனும் நூல், அபாண்டப் பொய்களும், அருவறுக்கத்தக்க ஆபாசக் கற்பனைக் கதைகளும் கொண்டது ஆகும்.

குறிப்பிடப்படும் ஸ்ரீ விஜயனின் தாயும் தகப்பனும், கதையின்படி உடன் பிறந்த அண்ணன் தங்கை ஆவார்கள். அவர்களின் தந்தை தாய் இருவரும், காட்டில் இருந்த ஒரு சிங்கத்திற்கும் கலிங்க தேசத்து அரச குமாரிக்கும் பிறந்தவர்கள் என்பதுதான் கரியவாசம் சுட்டிக்காட்டும் பூர்வீகம் ஆகும்.

ஆனால், இலங்கைத் தூதர் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத் தீவில் தமிழர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் எனும் உண்மை ஆகும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் வைகறை முதல் சுதந்திரமான அரசுகள் அமைத்து, உயர்ந்த நாகரிகத்துடன் வளமாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், ஐரோப்பியர் வருகையால் ஆட்சியை இழந்தனர். பிரித்தானியர் 1948 இல் வெளியேறியபோது, சிங்கள இனவாத அரசின் கீழ் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்தனர்.

ஈழத் தமிழ் மக்களை சிங்கள இராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்வதற்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உதவியும் தந்து உடந்தையாகச் செயல்பட்டது.

ஈழத் தமிழருக்கு நீதி கேட்க, வீரமிக்க 22 தமிழ் இளைஞர்கள் நெருப்பில் குளித்து மரணத் தீயை அரவணைத்து உயிர்த் தியாகம் செய்து பற்ற வைத்தத் தணல் இன்று தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சத்தில் அணைக்க முடியாத கிளர்ச்சித் தீயாகக் கொளுந்துவிட்டு எரிகிறது.

சிங்கள மொழி, சமஸ்கிருதம் இந்தி மொழி வழி வந்தது என்றும், இந்த உறவோடு, இந்திய மக்கள் தமிழ்நாடு தமிழர் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, சிங்களருக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார். எவ்வளவு அகம்பாவத்தோடும், திமிரோடும் இலங்கைத் தூதர், தமிழருக்கு எதிராக வட இந்திய மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறார்?

சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்துக்கு ஆயுத உதவி செய்ததை இந்தியப் பிரதமரே குறிப்பிட்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்திய அரசு, சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்தது என்று ஒப்புக்கொண்டு எழுதி இருந்தீர்கள்.

2004 ஆம் ஆண்டு முதல், உங்களிடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் பலமுறை மிகுந்த கவலையோடும், அச்சத்தோடும் தெரிவித்ததை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். சிங்களனுக்கு உதவியாக, ஈழத் தமிழருக்கு எதிராக இந்த இந்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்தால், தமிழகத்தின் இளைஞர்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் விபரீதத்தைத் தடுக்கவே முடியாது.

இன்று அத்தகைய நியாயமான கோபமும், ஆவேசமும்தான் தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளம் தலைமுறையினர் இதயங்களில் நெருப்பைக் கக்கும் கேள்விகளாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

கேரளக் கடலில் இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, இரண்டு இத்தாலியக் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை என்பதற்காக, இத்தாலித் தூதர் டேனியல் மன்சினியை இந்தியாவுக்குள் சிறை வைப்பதுபோல் நடவடிக்கை எடுத்தீர்கள்.

ஏறத்தாழ 584 தமிழக மீனவர்களை நமது கடலிலும், பன்னாட்டுக் கடலிலும் தாக்கிப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை, இலங்கை அரசைக் கண்டித்து, இந்திய அரசு ஒரு வார்த்தைகூட முனு முனுக்காதது ஏன்?

தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இன்னும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனும் கேள்விகள் பூதாகாரமாக தமிழ் மக்கள் மனதில் எழுந்துவிட்டன.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதனால் ஆபத்து தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு எச்சரிக்க வேண்டியது எனது கடமை ஆகும்.

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்து உள்ளதால், இந்தியக் குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் இலங்கைத் தூதர் மீது உடனடியாக வழக்குப்போட்டு கைது செய்து, சிறையில் அடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், இந்திய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுதான், நாட்டின் ஒற்றுமைக்கு, காலம் விடுத்து உள்ள அறைகூவலுக்குப் பதிலாக அமையும் என்பதை வரலாறு பதிவு செய்யும்.

- இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nandri - dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக