புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
9 Posts - 60%
heezulia
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
4 Posts - 27%
mruthun
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
79 Posts - 50%
ayyasamy ram
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
2 Posts - 1%
mruthun
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
அமிலமும் ஆண்களும் Poll_c10அமிலமும் ஆண்களும் Poll_m10அமிலமும் ஆண்களும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிலமும் ஆண்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 23, 2013 12:59 pm



எத்தனையோ பெண்களைத் தினமும் சந்திக்கிறேன். கிராமத்துப் பெண், நகரத்துப் பெண், மஞ்சள் பூசிய பெண், "மாய்ஸ்சரைசர்' பூசிய பெண், வெற்றிலை உதட்டுப் பெண், "லிப்ஸ்டிக்' பெண், தாவணிப் பெண், சிற்றாடைப் பெண், பட்டிக்காட்டுப் பெண், நவநாகரிகப் பெண், வயல் பெண், பூக்காரப் பெண், படிக்கும் பெண், நடிக்கும் பெண், பாடும் பெண், ஆடும் பெண், கவிதைப் பெண், பேச்சுப் பெண், எழுத்துப் பெண், அரசியல் பெண், காதலிக்கும் பெண், காதலை மறுக்கும் பெண், கூட்டுக் குடும்பத்துப் பெண், தனித்த பெண், காதலைக் காதலிக்கும் பெண், காதலை வெறுக்கும் பெண் - எல்லோரையும் நிறையவே சந்திக்கிறேன் பலப்பலப் பொழுதுகளில், பலப்பல நிகழ்வுகளில்.

எல்லோருக்குள்ளும் நான் புரிந்துகொள்வது ஒன்றுதான்; எல்லோருக்குள்ளும் நான் உணர்வது ஒன்றுதான் - எப்படியேனும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும், எப்படியேனும் தனது புன்னகையைத் தக்கவைக்க வேண்டும் என்பதே அது.

எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஒரு பொதுவான அம்சம் - அவர்கள் பெண்கள் என்பதே; கறுப்போ, சிவப்போ, மாநிறமோ, வெளுப்போ, குள்ளமோ, உயரமோ, நடுத்தரமோ, உயர்தரமோ, சிறுவயதோ, பெருவயதோ, சிறுமியோ, முதியவளோ என்னவானால் என்ன? எல்லோருக்கும் பொதுவான அம்சம் அவர்கள் "பெண்' என்பதே.

அது மட்டுமே போதுமானதாக இருக்கிறது ஆண்களுக்கு, ஆண்களின் வக்கிரத்துக்கு, ஆண்களின் ஆதிக்கத்துக்கு, ஆண்களின் "சனாதனத்துக்கு'.

தன் காதலுக்கு, தன் மோகத்துக்கு, தன் இச்சைக்கு, தன் காமத்துக்கு, தன் வேட்கைக்கு, தன் வேட்டைக்கு அடிபணிய வேண்டியதே பெண்ணின் கடமை என்பதே ஆண்களின் நினைப்பு. இத்தனை நூற்றாண்டாகப் பெண்களின் காதுகளில் அமில வார்த்தையை ஊற்றினார்கள். பெண்களின் இதயத்தில் அமிலக் கத்திகளைச் சொருகினார்கள். பெண்களின் கனவுகளில் அமிலக்குத்தீட்டியை நுழைத்தார்கள். இப்போது பெண்கள்மீது அமிலத்தையே ஊற்றுகிறார்கள்.

என்ன காரணம்? அவனின் இச்சையை, அவனின் காதல் என்னும் வக்கிரத்தை, ஒருதலை மோகத்தை அவள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்பதால். இன்றைய பெண்களின் கனவுகள் ஆண்களைத் தாண்டி வளர்ந்துவிட்டது. கல்யாணத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டது. குடும்பத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டது.

தனக்கெனக் கல்வி, தனக்கென வேலை, தனக்கெனச் சம்பாத்தியம், தனக்கெனச் சுதந்திரம் என்று தெளிவாக இருக்கிறார்கள் பெண்கள்.

படித்தும் படிக்காமலும், திருமணம் செய்து அஞ்சுக்கும் பத்துக்கும் புருஷன் கையை எதிர்பார்க்கும் பிச்சைப்பிழைப்பு பெண்களுக்குப் பிடிக்கவில்லை.

சின்ன வயதிலேயே தாலி வாங்கிக்கொண்டு, வதவதவென்று குழந்தை குட்டியோடு, சமையலறைக்கும் கட்டிலறைக்கும் நடையாய் நடந்து செத்துப்போக இன்றைய பெண்கள் தயாராக இல்லை.

எல்லோர் கண்ணிலும் ஒரு கனவு குடியிருக்கிறது. எல்லோர் கண்ணிலும் ஒரு தாகம் குடியிருக்கிறது. எல்லோர் நெஞ்சிலும் ஒரு சுதந்திரம் குடியிருக்கிறது. இத்தனையும் நிறைவேற்ற ஒரு "ராஜகுமாரன்' வருவான். ஒரு "புருஷன்' வருவான். அவன் - தனது கனவெல்லாம் நிறைவேற்றுவான். நனவாக்குவான்.

இப்படியாக பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டிபோல நம்பி நம்பியே கிள்ளுக்கீரையாக இன்றைய பெண்கள் தயாராக இல்லை.

அவர்களே போருக்குத் தயாராகிவிட்டார்கள். அவர்களே போர்வீரனாகத் தயாராகிவிட்டார்கள். அவர்களே களம் இறங்கத் தயாராகிவிட்டார்கள். அவர்களே விழுப்புண் ஏற்கவும் தயாராகிவிட்டார்கள்.

அதனால், தாமதித்த திருமணம் வழக்கமாகி வருகிறது. தாமதித்த காதல் வழக்கமாகி வருகிறது. தாமதித்த குழந்தைப்பேறும் வழக்கமாகி வருகிறது.

படிப்பு முக்கியம், வேலை முக்கியம், சம்பளம் முக்கியம், சுதந்திரம் முக்கியம், தெளிவு முக்கியம், நிம்மதி முக்கியம் என்பதே இன்றைய பெண்களின் வாழ்க்கை முறை. தெளிவும் நிம்மதியும் கணவனால்தான் வரும், திருமணத்தால்தான் வரும் என்கிற தவறான கணிப்பும் பெண்களிடம் இல்லை. தானே தனது விடியலைத் தேடிக் கொள்கிறார்கள்.

அப்பா, அண்ணன், தம்பி, மாமா தவிர தான் சந்திக்கும் முதல் ஆண் மகனையே புருஷனாக நினைத்து ஏங்கி, உருகிப் பசலையில் கரைந்த பசலைப் பெண்கள் இன்று இல்லை. திருமணம் ஒரு சிகரம் என நினைத்துப் புதைமணலில் சிக்கிக்கொண்ட கவலைப்பெண்கள் இன்று இல்லை.

தனக்கெனச் சிந்தனை இல்லாமல், புருஷனின் "ம்' என்ற ஒற்றைச் சொல்லுக்காகத் தவமிருந்த மண்ணாந்தைப் பெண்கள் இன்று இல்லை. சவலைப் பெண்கள் இன்று இல்லை. அபலைப் பெண்களும் இன்று இல்லை.

தாலிக் கயிறே தூக்குக் கயிறானது நேற்று. தன்னைக் காதலிப்பவனுக்குக் கழுத்தை நீட்டியது நேற்று. அவன் காதலித்தால் மட்டும் போதாது. தானும் காதலிக்க வேண்டும். தானும் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். தனக்கும் நேசத்துக்கான உரிமை உண்டு என்று நினைக்கிறாள் இன்றைய பெண். தான் அவனைக் காதலிக்காவிட்டால் - விலகிச் செல்லும் உரிமை உண்டு என உறுதியாக எண்ணுகிறாள். தான் அவனைக் காதலிக்காவிட்டால் - தெளிவாக விலகிச் செல்கிறாள் அவள்.

அது பொறுக்கவில்லை நம் சகோதரர்களுக்கு. அடிமையாக இருந்தவள் அரசியாவதா என்கிற பொருமல். பிணவாழ்க்கை வாழ்ந்தவள் - உயிர்ப்போடு உலவுவதா என்கிற ஆங்காரம். பிறப்புக்கும், இருப்புக்கும் தன்னிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவள் - இன்று தானாகவே அமுதசுரபி ஏந்துவதா என்கிற பொச்சரிப்பு.

ஒருதலையாகக் காதலிக்கும் தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் - தன் ஆண்மைக்கு இழுக்கு, தன் ஆண்மைக்குத் தலைகுனிவு என்கிற அவமானம். எல்லாம் சேர்ந்து அவனை அமிலம் வீச வைக்கிறது. அவளைக் கருக வைக்கிறது. அவனை மதியிழக்க வைக்கிறது. அவனை மிருகமாக்க வைக்கிறது. அவளைச் சாக வைக்கிறது. அவனுக்குத் தெரிவதேயில்லை. பேரன்பும் பெருங்காதலும் யாரையும் காயப்படுத்தாது. யாரையும் நோகடிக்காது. யாரையும் சாகடிக்காது.

இதுதெரியாமல், இச்சைகொண்டு அலைவது காதலாகுமா? காமம்கொண்டு அலைவது நேசமாகுமா? வெறுப்புகொண்டு அலைவது தோழமையாகுமா?

நேற்று - ஆண்களும் அமிலச்சிந்தனையுமாக இருந்தார்கள். ஆண்களும் அமிலப் பார்வையுமாக இருந்தார்கள். ஆண்களும் அமிலச் செயலுமாக இருந்தார்கள். ஆண்களும் அமில வக்ரமுமாக இருந்தார்கள்.

இன்று ஆண்களும் அமிலமுமாகவே இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு அமிலத்தோடு அலைவார்கள்? இன்னும் எத்தனை பெண்களுக்கு அமில அபிஷேகம் செய்வார்கள்? இன்னும் எத்தனைப் பெண்களை உருக்குலைப்பார்கள்?

ஆண்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பெண்கள் வாழட்டும் - அடிமையாக இல்லை, அரசியாக.
பெண்கள் வாழட்டும் - இரவல் சுவாசத்தோடு இல்ல, சொந்த சுவாசத்தோடு.
பெண்கள் வாழட்டும் - மண்ணாந்தையாக இல்லை. ரோஷத்தோடு.
பெண்கள் வாழட்டும் - ஆண்களின் இரவாக இல்லை. பகல் வெளிச்சமாக.
பெண்கள் வாழட்டும் - இரவல் ஒளிநிலாவாக இல்லை. சுய சூரியனாக.

ஆணின் சந்தோஷத்துக்காக, கௌரவத்துக்காக, பெருமைக்காக, உற்சாகத்துக்காக, மோகத்துக்காக, காமத்துக்காக, மையலுக்காக, சமையலுக்காக, உறக்கத்துக்காக, கிறக்கத்துக்காக, பெண்கள் வாழ்ந்தது போதும். பெண்கள் தங்களை உணரும் காலம் இது. பெண்கள் தாங்களே உயரும் காலம் இது. பெண்கள் தாங்களே சிகரம் எட்டும் காலம் இது. பெண்கள் தாங்களே சிகரமாகும் காலம் இது.

ஆண்களே - கொஞ்சம் எட்டி நில்லுங்கள்; அமிலம் வீசுவதாக இருந்தால் - உங்களைப் பெற்ற உங்கள் தாயின் வயிற்றில்தான் வீசவேண்டும்.

கட்டுரையாளர்: கவிஞர், கோவை தொலைக்காட்சி நிலையத் தலைவர்.



அமிலமும் ஆண்களும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Mar 23, 2013 1:02 pm

ஆண்களே - கொஞ்சம் எட்டி நில்லுங்கள்; அமிலம் வீசுவதாக இருந்தால் - உங்களைப் பெற்ற உங்கள் தாயின் வயிற்றில்தான் வீசவேண்டும்.
இனியாவது திருந்துவானுகலானு தெரியல
இவனுகள கொல்லனும் முதலில் கோபம்

chinnavan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் chinnavan




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 23, 2013 1:06 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 1:16 pm

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ன்னு பாடிய காலம் போய்

செந்தமிழ் நாடெனும் போதினிலே
துன்ப அமிலம் வந்து பாயுது முகத்தினிலே ன்னு பாடும் நிலைக்கு

ஆக்கிட்டானுங்களே சில மிருகங்கள் - அமிலத்தில் கரைக்க வேண்டும் இவர்களை.




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 1:41 pm

நல்ல பதிவு தான் ஆனால் தவறு ஆண்கள் மட்டும் தான் செய்கிறார்களா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 1:42 pm

mbalasaravanan wrote:நல்ல பதிவு தான் ஆனால் தவறு ஆண்கள் மட்டும் தான் செய்கிறார்களா சோகம்
சில பெண்களுக்கு அமிலம் என்பது நாவினில் சுரக்கிறது - என்ன பண்றது?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 1:54 pm

யினியவன் wrote:செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ன்னு பாடிய காலம் போய்

செந்தமிழ் நாடெனும் போதினிலே
துன்ப அமிலம் வந்து பாயுது முகத்தினிலே ன்னு பாடும் நிலைக்கு

ஆக்கிட்டானுங்களே சில மிருகங்கள் - அமிலத்தில் கரைக்க வேண்டும் இவர்களை.

நல்ல கருத்து உங்களது கோபம் தெரிகிறது அவர்களாக பார்த்து திருந்தும் வரை தவறு குறையாது




அமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Uஅமிலமும் ஆண்களும் Tஅமிலமும் ஆண்களும் Hஅமிலமும் ஆண்களும் Uஅமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Oஅமிலமும் ஆண்களும் Hஅமிலமும் ஆண்களும் Aஅமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Eஅமிலமும் ஆண்களும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 1:54 pm

mbalasaravanan wrote:நல்ல பதிவு தான் ஆனால் தவறு ஆண்கள் மட்டும் தான் செய்கிறார்களா சோகம்

கூடுதலும் ஆண்கள் தானே தவறு செய்கிறார்கள்




அமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Uஅமிலமும் ஆண்களும் Tஅமிலமும் ஆண்களும் Hஅமிலமும் ஆண்களும் Uஅமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Oஅமிலமும் ஆண்களும் Hஅமிலமும் ஆண்களும் Aஅமிலமும் ஆண்களும் Mஅமிலமும் ஆண்களும் Eஅமிலமும் ஆண்களும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 23, 2013 2:01 pm

ஆண்களே - கொஞ்சம் எட்டி நில்லுங்கள்; அமிலம் வீசுவதாக இருந்தால் - உங்களைப் பெற்ற உங்கள் தாயின் வயிற்றில்தான் வீசவேண்டும்.

ரொம்ப கொடூரமா இருக்கு இந்த வார்த்தைகள் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 2:10 pm

Muthumohamed wrote:
mbalasaravanan wrote:நல்ல பதிவு தான் ஆனால் தவறு ஆண்கள் மட்டும் தான் செய்கிறார்களா சோகம்

கூடுதலும் ஆண்கள் தானே தவறு செய்கிறார்கள்
புரிய வில்லை நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக