புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
6 Posts - 20%
viyasan
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு முறை தான் பூக்கும் Poll_c10ஒரு முறை தான் பூக்கும் Poll_m10ஒரு முறை தான் பூக்கும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறை தான் பூக்கும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 16, 2013 4:55 pm



பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல... மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை.

வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள். தோட்டத்தில் இருபது ஆடுகள் பட்டியிலும், எருமைகள் ஐந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அம்மா மேல் உலகத்துக்கு டிக்கெட் எடுத்து போய் வருடம் நான்கு போய்விட்டது.

ஊதாரி அண்ணன் ஒருவன் ஸ்டீல் கம்பெனிக்கு வேலைக்கு போவதும் டாஸ்மாக்கில் குடியிருப்பதையுமே வழக்கமாய் கொண்டிருந்தான். மனியன் எங்கேப்பா? என்றால் கோயிலில் இருந்தானே என்பார்கள். டாஸ்மாக் கடையை கோயில் என்கிறார்கள். மணியனுக்கு தனக்கு மூத்தவள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கிறாள் என்ற எண்ணம் துளி அளவேனும் இல்லாதவன். மணியனின் அக்கா தேவிகாவுக்கு வயது இருபத்தாறு நடக்கிறது. ஈங்கூர் பள்ளியில் மேல் படிப்பான ஐந்தாவது பாஸ் செய்தவள். வீட்டு வேலைகளிலும், காட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி. வசந்தாமணிக்கு வீட்டில் வேலை செய்வதோ தோட்டத்தில் வேலை செய்வதோ அலர்ஜியான விஷயம். எருமை சாணத்தை தேவிகா கூடையில் அள்ளி எடுத்து போய் குப்பையில் கொட்டுவதை முகம் சுளித்தபடி பார்ப்பாள். அக்காவுக்கு சமையலில் கூட உதவ மாட்டாள் வசந்தாமணி. போதாதற்கு இவளின் துணிமணிகளைக்கூட தேவிகா தான் சர்ப் எக்ஸல் போட்டுத் துவைத்துக் காய வைப்பாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக தேவிகா மாறிப்போயிருந்தாள்.

வசந்தாமணியின் அப்பா பிள்ளைப்பூச்சி. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார். அவரது வருத்தமெல்லாம் மணியன் இப்படி மொடாக்குடிகாரணாக போய்விட்டானே என்று தான். ஈங்கூரில் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கும் அவர் அதிகம் வருவதில்லை. தோட்டத்திலேயே மோட்டார் ரூமில் படுத்து கொள்வார். தேவிகா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவாள்.

சுதாகரன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கீழே போட்டு செருப்பால் அதன் தீக்கங்கை அழுத்தி அணைத்தான். புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. சுதாகரன் கொங்கு கல்லூரியில் ஆபீஸ் பியூனாக இருக்கிறான். இதோ இப்போது தான் வேலையில் சேர்ந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது. ஆசைத் தங்கையை சேலத்துல கட்டிக்கொடுத்து வருடம் இரண்டு போய் விட்டது. அவளைக் கட்டி கொடுத்து தாட்டி விட்ட நாளில் இருந்து வீட்டில் அப்பாவும் அம்மாவும் இவன் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு பெண் பார்த்துடலாம். பெண் பார்த்துடலாம் என்று கீழல் விழுந்த டிவிடி தட்டு போல கத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களாகவே சோதிடரை தேடிப்போய் ஜாதகத்தை கொடுத்து ரிசல்ட் பார்த்தார்கள்.

இந்த ஜாதகக்காரனுக்கு குரு பலன் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கே வயது என்ன இருபத்தி ஒன்பதா? முப்பது பிறந்ததும் குரு பார்க்கிறான். அப்புறம் நீங்க நினைச்சால கூட பையன் திருமணத்தை நிறுத்த முடியாது என்ற தகவலை சோதிடர் சொன்னதும் நிம்மதியாக வீடு வந்தவர்கள் ஒரு வருடம் இவன் திருமணம் பற்றி இவனிடம் வாயைத் திறக்கவில்லை.

இதோ சுதாகரனிடம் குரு வந்து விட்டான். வந்ததும் அவசரப்படாமல் முப்பது நாள் தங்க வைத்து சுதாகரனின் பெற்றோர் அதே டிவிடி தட்டை போட்டார்கள். சுதாகரன் இந்த முறை பெற்றோரிடம் கோபிக்கவில்லை. ஒரு வாரத்தில் சொல்றேன்ப்பா என்று அப்பாவிடம் சொல்லிவிட்டான். அதோ வசந்தாமணி காலையிலிருந்து கால் கடுக்க நின்று வேலை செய்த களைப்பில் துவண்டு போய் வந்து கொண்டிருந்தாள். சுதாகரனை பார்த்ததும் வழக்கமாக வீசும் புன்னகையை வீசினாள். அருகே வந்தவள், ஐயா இன்னிக்கு கோபமோ முகம் ஏனோ உம்முன்னு இருக்கே என்றாள். மூன்று வருட பழக்கத்தில் சரளமாக பேசும் குண்ம் மட்டுமே அவளிடம் மிஞ்சியிருந்தது.

ரொம்ப பசிக்குதுப்பா, அக்கா டிபன்ல நாலு இட்லி வச்சி அனுப்பி விட்டுட்டா கம்பெனில இன்னிக்கு அக்கட்ட இக்கட்ட துளி நகர முடியாத அளவுக்கு வேலை. சூப்பர்வைசர் வேற கழுகு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அவள் பேசிக்கொண்டே யிருக்க சுதாகர் ஹோட்டலை நோக்கி நடந்தான். பின்னால் வந்தவள் இன்று ஏனோ புதிதாய் ஒரு பேச்சு பேசாமல் நகர்கிறானே என்று யோசித்தபடி சுதாகரின் பின்னால் செல்லாமல் நின்று கொண்டாள்.

ஹோட்டலின் அருகாமை சென்ற சுதாகர் திரும்பி பார்த்து வா என்று கையசைத்து கூப்பிட்டான். மக்கள் கூட்டம் பேருந்தை பிடிக்க அலைமோதிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் எப்போதும் இப்படித்தான். கோபித்து கொண்டு நிற்பவளை சமாதானப்படுத்த சுதாகரன் திரும்பவும் அவளிடம் வந்தான். இவர்களின் நாடகத்தை கவனிப்பாரின்றி எல்லோரும் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள். என்னம்மா சின்னப்பிள்ளையாட்டம் பிடிவாதம்...

பின்ன நான் என்ன கிழவியா? பசிக்குதுன்னு சொன்னேன். சரி வா போகலாம்னுஒரு வார்த்தை பேசாமல் முன்னாடி போனல் என்ன அர்த்தம்? என் கிட்ட காசு இல்லாமல் தான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா? நீங்க உம்முன்னு முகத்தை வெச்சுட்டு முன்னாடி போனால் நான் பின்னாடி வரணுமா?

சாரி வசந்தாமணி மேடம். எனக்கும் கூட பசிக்குது. நீங்களும் பெரிய மனசு பண்ணி இந்த ஏழையோட அழைப்பை நிராகரிக்காம வாங்க என்றான்.

கொஞ்சம் நக்கல் தான். இருந்தாலும் எனக்கு பசி என்றவள் சுதாகரனுடன் இணைந்து ஹோட்டலுக்குள் வந்தாள். இருவரும் பூரி இரண்டு செட் ஆர்டர் செய்து விட்டு டேபிளில் அமர்ந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியில் வுந்ததும் சுதாகரன் ஆரம்பித்து கொண்டான்.

நான் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் வசந்தா. இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது. குருபலன் வேற பிறந்துடுச்சாம். அப்பா அம்மா ஆரம்பிச்சுட்டாங்க...

என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க கூட ஓடிவரச் சொல்றீங்களா? அது முடியாது. என் அக்கா பாவம் சுதாகர். அப்புறம் அவளுக்கு காலம் பூராவும் கல்யாணமே நடக்காம போயிடும். இப்பவே அவளை நாங்க வீட்டுல வேலைக்காரி மாதிரி வச்சுட்டு இருக்கோம். உங்க கூட இப்பவே நான் ஓடி வந்துடலாம். ஓடிப்போன பெண் குடும்பத்துல பெண் எடுக்க யாரும் வரமாட்டார்கள். அக்காவுக்கு வயசு இருபத்தி ஆறு பிறந்தாச்சு. அவள் சாதகத்துலயும் குருபலன் வந்தாச்சு. இருபத்தி ஆறுல நிச்சயம் மேரேஷ் முடிஞ்சிடும்னு சோதிடர் சொல்லிட்டாரு. அதும் இனி பார்க்கிற முதல் ஜாதகமே அக்காவுக்கு பொருத்தமா ஆயிடுமாம். இத்தனை நாள் பொறுத்தவரு எனக்காக கொஞ்சம் நாள் ப்ளீஸ்ப்பா... என்றாள்.

இல்ல வசந்தா... உன்னை கட்டிக்க நான் எப்பவும் தயார் தான். வீட்டுல அம்மாவுக்கு முன்னை போல முடியறதில்லை. அப்பாவுக்கும் சர்க்கரை பிரஷர்னு வியாதிகள். எனக்கும் முப்பது ஆயிடிச்சு. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு வசந்தா. நானும் மனுசன் தான். எப்போ நான் இந்த விசயத்தை கேட்டாலும் அக்கா அக்கான்னு அக்கா பாட்டே பாடுறே. அப்பா வாய்விட்டே கேட்டுட்டாருமம்மா... இந்த வாரத்துல நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றான்.

நீங்க பேசறதை பார்த்தால் உங்க அப்பாவுக்காக ஒரே வாரத்தில் ஒரு பெண்ணோட போய் நிற்கணும்ங்ற மாதிரி இருக்கே. நீங்க கேட்குறப்பா எல்லாம் நான் ஒரே மாதிரி சொல்றேன்னா எனக்கு என் அக்கா பெருசுதான். அவளோட திருமணத்தை கெடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கவோ, வாழவோ முடியாதுங்கறதுனாலதான். ஒரே பதிலை நீங்க கேட்குறப்ப எல்லாம் சொல்றேன். என்க்கு நீங்க வேணும் சுதாகர். அது என் மனசுல ஆழமா இருக்கு... என்று வசந்தாமணி பேசத் தொடங்கி விட்ட சமயம் சுதாகரன் திருப்பூர் பேருந்து வர ஓடிப்போய் ஏறிக்கொண்டான். வசந்தாமணிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது.

ö சன்னிமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவளுக்கு சுதாகரன் ஓடிப்போய் பேருந்து ஏறிகொண்ட காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. இனிமேல் தன்னிடம் பேசுவானோ? மாட்டானோ என்று பயமாய் இருந்தது. அவுன் இல்லாத வாழ்வை நினைக்கையில் அது வெறுமையாய் கண்களுக்கு முன் தெரிந்தது. இரவு உணவு தொண்டைக்கும் கீழ் இழங்க மறுத்தது. நடு இரவு வரை உறக்கம் வராமல் பாயில் கிடந்தாள். தூக்கம் வந்த போது வந்த கனவில் சுதாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாய் நின்றான். அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை இவள் எவ்வளவோ உற்று பார்த்தும் அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தாமணிக்கு மதியம் போல தலைவலி ஆரம்பித்து விட்டது. மாலை நேரம் வரவர உடல் சூடாய் இருப்பதை உணர்ந்தாள். கண்களில் எரிச்சல் கூடி போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் சுதாகரனை காணாமல் டைபாய்டு ஜுரம் வந்தவள் போல, தான் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் மாற்றம் தெரிந்தது. சித்தியும், சித்தப்பனும், அப்பாவும், அண்ணனும் இருந்தார்கள். அக்கா தீபாவளிக்கு புதிதாய் எடுத்திருந்த பிங்க் கலர் சேலை கட்டியிருந்தாள். அவள் முகம் பிரகாசமாய் இருந்தது. அக்காவை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். இவர்களின் முகப்பூரிப்பை வைத்து பார்த்தால் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டதை யூகித்து விட்டாள்.

சுதாகரனின் செல்போனுக்கு இந்த தகவலை உடனே சொல்லி விட வேண்டும் என்று மனது சந்தோஷ பாட்டு பாடியது. சமையல் கட்டு சென்று பஜ்ஜி கடித்துக்கொண்டே காபி குடித்தாள். அக்காவை பார்த்து கண் சிமிட்டினாள். அக்கா, போடி என்று செல்லமாக சிணுங்கினாள். வெட்கப்பட்டால் அக்கா அழகு தான் என்று நினைத்தாள் வசந்தா மணி.

மாப்பிள்ளை எந்த ஊர்? என்ன வேலையில இருக்காராம்? என்றாள். மாப்பிள்ளை ஊர் விசயமங்கலமாம். தங்கச்சியை சேலத்துல கட்டிகொடுத்து ரெண்டு வருஷம் ஆயிடிச்சாம்.

பேர் என்ன? என்ன வேலையின்னு கேட்டால் ஊர் உலகம் சுத்தறியேக்கா.

பேர் சுதாகரனாம். கொங்குகாலேஜில பியூனா இருக்காராம். சம்பளம் மாசம் எட்டாயிரமாம். சாதகத்துல எட்டு பொருத்தமும் கூடி வந்தது. சென்னிமலை ஈஸ்வரன் கோயில்ல சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. என்று தேவிகா சொல்ல, காபிடம்ளரை தவற விட்டாள் வசந்தாமணி.

வா.மு.கோமு





ஒரு முறை தான் பூக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 16, 2013 5:16 pm

பாதி படிச்சேன் வேலை வந்துருச்சு அப்புறமா படிக்கிறேன் பெருசா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 16, 2013 7:19 pm

ஒரு முறை தான் பூத்தது மனதில் கதை , மனதை பறித்தது அருமை சூப்பருங்க ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 16, 2013 7:34 pm

அடடா கதை கடைசியில் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 16, 2013 9:33 pm

நல்ல கதை பகிர்வு சிவா அண்ணா




ஒரு முறை தான் பூக்கும் Mஒரு முறை தான் பூக்கும் Uஒரு முறை தான் பூக்கும் Tஒரு முறை தான் பூக்கும் Hஒரு முறை தான் பூக்கும் Uஒரு முறை தான் பூக்கும் Mஒரு முறை தான் பூக்கும் Oஒரு முறை தான் பூக்கும் Hஒரு முறை தான் பூக்கும் Aஒரு முறை தான் பூக்கும் Mஒரு முறை தான் பூக்கும் Eஒரு முறை தான் பூக்கும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 16, 2013 10:53 pm

கதைகளில் வரும் பல இடங்களை நேரடியாக பார்த்து இருத்தால் இதில் வரும் நிகழ்வுகளை கதையாக உணரமுடியாமல் தகவலை போல படித்து முடித்தேன்...
ஈங்கூர் பள்ளியில் ஒரு வாரம் நாட்டுநல பணி திட்டத்திற்காக சென்ற நினைவுகளும்,உள்ளூர் கதை என்பதால் உண்மை சம்பவமோ என்றே நினைக்கவைத்து விட்டது... சூப்பருங்க




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக