புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்த சஸ்டி
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்தசஸ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் இம்மாதம் 18ம் திகதி (நேற்று) தொடக்கம் இம்மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை வரை கந்தசஸ்டி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதாவது அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டு ள்ளன.[/color]
சிவன், திருமால், பிரம்மன், சரஸ்வதி, இலக்குமி, பார்வதி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக சக்திவேல் ஷன்முகமாக விளங்குவதால், ஆறுமுகத்துடன் உள்ள திரு முருகன் முன் அமர்ந்து படிக்கவேண்டிய கவசமே இதுவாகும். மேலும் செவ்வாய்கிழமைகளிலும் படிப்பது நன்மையாகும். பயன் வம்ச விருத்தி ,காரியவெற்றி ,நோய் நீக்கம் ,கிரகதோஷம் போகும், அறிவு - செல்வவளர்ச்சி, திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கைகளும் இவ்விரதத்தின் பலன்களாக கூறப்படுகின்றது.
கந்தர் சஸ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண் கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக !
வருக ! வருக! மயிலோன் வருக!
இந்திரன் வடிவேல் வருக! வருக!
வாசவன் மருகா! வருக! வருக!
நேச குறமகள் நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறு இடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண பவனார் சடுதியில் வருக!
ரஹண பவச, ரரரர ரரர
ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ,வீரா நமோ நம!
நிபவ சரஹண நிற நிற நிர்றென
வசர ஹணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை ஆளும் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து என்னை காக்க வேலோன் வருக !
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடி ஆறும்
நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும், முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,
துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,
நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,
இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,
திருவடி யதனில் சிலம் பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொககென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர,ரரரர ரரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி
டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து
முந்து முந்து,முருகவேள் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று,
உந்திரு வடியை உருதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!
முப்பத்து இருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!
மார்பை இரத்ந வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!
ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!
நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,
நாபிக் கமலம், நவ்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,
பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுதும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,
ஆனை அடியினில், அரும்பா வைகளும்
பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,
நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே, பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,
காசும், பணமும், காவுடன் சோறும்,
ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,
ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,
வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,
படியினில் முட்டப், பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறியக்
கட்டு கட்டு, கதறிடக் கட்டு!
முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;
குத்துக் குத்து கூர்வடி வேலால்;
பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;
தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;
விடுவிடு வேலை, வெருண்டது ஒட;
புலியும் , நரியும், புன்னரி நாயும்
எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,
தேளும், பாம்பும், செய்யான் பூரான்,
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,
பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,
எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்
நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,
உன்னைத் துதிக்க, உன் திருநமம்
சரஹண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவன் ஓழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா ! குகனே! கதிர் வேளவனே!
கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,
இடும்பனை அழித்த இனியவேள் முருகா
தணிகாசலனே ! சங்கரன் புதல்வா!
கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,
பழநி பதிவாழ் பால குமாரா!
அவினனகுடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!
காரார் குழலாள் கலைமகள், நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப் பாட,
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;
ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை
நேசமுடம் யான் நெற்றியில் அணியப்,
பாச வினைகள் பற்றது நீங்கி,
உன்பதம் பெறவே, உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக, வேலா யுதனார்
சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,
எத்தனை அடியென் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:
பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!
பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,
மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்
கலையில் மாலையில் கருத்துடன், நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,
ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,
அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்ல்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்;
சர்வ சத்துரு சங்கா ரத்து அடி
அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்
சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,
இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த
குருபரன் , பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே, இடும்பா போற்றி!
கட்மபா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கி கனக சபைக்கும் ஓர் போற்றி!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;
சரணம் சரணம் சரஹண பவஓம்,
சரணம் சரணம் சண்முக சரணம்.
சிவன், திருமால், பிரம்மன், சரஸ்வதி, இலக்குமி, பார்வதி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக சக்திவேல் ஷன்முகமாக விளங்குவதால், ஆறுமுகத்துடன் உள்ள திரு முருகன் முன் அமர்ந்து படிக்கவேண்டிய கவசமே இதுவாகும். மேலும் செவ்வாய்கிழமைகளிலும் படிப்பது நன்மையாகும். பயன் வம்ச விருத்தி ,காரியவெற்றி ,நோய் நீக்கம் ,கிரகதோஷம் போகும், அறிவு - செல்வவளர்ச்சி, திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கைகளும் இவ்விரதத்தின் பலன்களாக கூறப்படுகின்றது.
கந்தர் சஸ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போக்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண் கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக !
வருக ! வருக! மயிலோன் வருக!
இந்திரன் வடிவேல் வருக! வருக!
வாசவன் மருகா! வருக! வருக!
நேச குறமகள் நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறு இடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண பவனார் சடுதியில் வருக!
ரஹண பவச, ரரரர ரரர
ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ,வீரா நமோ நம!
நிபவ சரஹண நிற நிற நிர்றென
வசர ஹணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை ஆளும் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து என்னை காக்க வேலோன் வருக !
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடி ஆறும்
நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாய்யும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் , பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும், முத்து அணி மார்பும்
செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,
துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,
நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,
இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,
திருவடி யதனில் சிலம் பொலி முழங்க
செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொககென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர,ரரரர ரரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி
டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து
முந்து முந்து,முருகவேள் முந்து
என்றனை ஆளும் ஏரகச் செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று,
உந்திரு வடியை உருதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!
முப்பத்து இருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!
மார்பை இரத்ந வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம்பெற்க் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!
ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைகால் , முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!
நாவில் , சரஸ்வதி நல்துணை யாக,
நாபிக் கமலம், நவ்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,
பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுதும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் , இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட,
ஆனை அடியினில், அரும்பா வைகளும்
பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,
நகமும் , மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே, பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,
காசும், பணமும், காவுடன் சோறும்,
ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,
ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,
வாய்விட்டு அலறி, மதிகெட்டு ஓட,
படியினில் முட்டப், பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறியக்
கட்டு கட்டு, கதறிடக் கட்டு!
முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;
குத்துக் குத்து கூர்வடி வேலால்;
பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;
தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;
விடுவிடு வேலை, வெருண்டது ஒட;
புலியும் , நரியும், புன்னரி நாயும்
எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,
தேளும், பாம்பும், செய்யான் பூரான்,
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,
பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,
எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்
நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,
உன்னைத் துதிக்க, உன் திருநமம்
சரஹண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவன் ஓழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா ! குகனே! கதிர் வேளவனே!
கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,
இடும்பனை அழித்த இனியவேள் முருகா
தணிகாசலனே ! சங்கரன் புதல்வா!
கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,
பழநி பதிவாழ் பால குமாரா!
அவினனகுடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!
காரார் குழலாள் கலைமகள், நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப் பாட,
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;
ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை
நேசமுடம் யான் நெற்றியில் அணியப்,
பாச வினைகள் பற்றது நீங்கி,
உன்பதம் பெறவே, உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக, வேலா யுதனார்
சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,
எத்தனை அடியென் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:
பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!
பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,
மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்
கலையில் மாலையில் கருத்துடன், நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,
ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,
அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்ல்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்;
சர்வ சத்துரு சங்கா ரத்து அடி
அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்
சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,
இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த
குருபரன் , பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே, இடும்பா போற்றி!
கட்மபா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கி கனக சபைக்கும் ஓர் போற்றி!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;
சரணம் சரணம் சரஹண பவஓம்,
சரணம் சரணம் சண்முக சரணம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|