புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
44 Posts - 41%
heezulia
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
3 Posts - 3%
prajai
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
2 Posts - 2%
Barushree
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
21 Posts - 5%
prajai
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_m10வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 17, 2013 9:25 am

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்...

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Baby_hand_by_adela4


கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

என்று தன் தந்தையின் ஒழுக்கத்தைப் பார்த்து அறிந்து கொண்ட அறியாத பிள்ளை ஒன்று கூறுவதாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் திரு. இரா.எட்வின். இது இன்றைய சமுதாயத்தில் ஆண்களின் சுதந்திரத்தை, நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள கவிதை என்று கூறுவதை விட வளரும் குழந்தைகளின் மனத்தில் ஆண்களின் படிமம் எப்படி பதிந்துள்ளது என்பதை உணர்த்தும் கவிதையாகப் பார்ப்பதே சரியான கோணம். அம்மா என்றால் சரியாக வீட்டுக்கு வர வேண்டும். அப்பா என்றால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குப் வரலாம் என்னும் சமுதாய நிலைப்பாடு குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. குழந்தைகளின் இப்படிப் பட்ட புரிதலுக்குக் காரணம் யார் என்று வினா எழுப்பி உரிய விடையைப் பார்த்துக் கொள்வது இன்றைய பெற்றோர்களின் தேவை.

கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறான். அதிகாலையில் வெளியில் செல்பவன் இரவும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறான். பொழுது புலர்ந்ததும் அவன் அப்பெண் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். இத்தகவல் மனைவிக்கு வந்து விடுகிறது. அந்தத் தகவலை எடுத்து வருபவள் அவளது தோழி. உடனே தலைவிக்குக் கோபம் வருகிறது. கோபத்தையும் விட அழுகை வருகிறது. அதையும் விட அச்சம் வருகிறது. என்ன அச்சம்? வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனும் தந்தை உள்ளே நுழையும்போது வீட்டுக்குள்ளே சேர்ந்து வந்து விடுவானோ. அப்படி வருவானானால் கணவனை வைய முடியாது. ஏனெனில் குழந்தை முன்பு கணவனை வைதால் குழந்தைக்குத் தந்தை மீது இருக்கும் மதிப்பு குறைந்து விடும். வையாமல் விட்டால் இரவு முழுவதும் வேற்று இல்லத்தில் தங்கி வரும் இத்தீய ஒழுக்கத்தைப் பிற்காலத்தில் குழந்தையும் தவறான ஒழுக்கம் என்று அறியாது பின்பற்ற வாய்ப்பாக அமைந்து விடும். என்ன செய்வது என்று சிந்தித்தவளாக இருக்கிறாள்.
அவள் எண்ணம் போலவே நல்ல வேளையாகத் தந்தையுடன் மகன் சேர்ந்து வரவில்லை. தனயன் தனியாக வருகிறான். தலைவன் தனியாக வருகிறான். மகிழ்கிறாள் தலைவி. கணவனின் பரத்தையர் ஒழுக்கத்தைத் தன் தோழியிடம் கூட நேரிடையாகக் கூறாத நாகரிக இனம் தமிழினம். ஆகவே அந்தச் சங்கத் தலைவி இவ்வாறு கூறுகிறாள்.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே”.

வெள்ளைக் கொக்கின் பிள்ளை இறந்து விட்டது. அதற்குத் துட்டிக் கேட்பதற்காகக் (துக்கம் விசாரிக்க) காலை செல்லும் நாரை மாலையும் அங்கேயே தங்கி விடுகின்றதாம். நல்ல வேளையாக அப்படிப் பட்ட நீர்த்துறையின் தலைவனோடு வராமல் தனியே வந்தான் என் மகன் என்கிறாள். தன் கணவனின் தீய ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி தோழியிடம் கூறுவது இவ்வளவுதான்.

கொக்கு வயல்வெளியில் வசிக்கும் பறவை, நாரை நீர்நிலைகளில் வாழ் பறவை. நாரை என்பது உயரமான கால்களை கொண்டது. நன்கு பறக்கும் தன்மையது. வெள்ளைக் குருகுக்கு (வெள்ளைக் கொக்கு) கால்கள் குட்டையாக இருக்கும். அவ்வளவாகப் பறக்க முடியாது. ஆனால் எளிதில் மாட்டிக் கொள்ளாது. மறைவாக வாழும் தந்திரம் கற்றது. அதுபோல தலைவன் மறைவாக வாழும் தந்திரம் நிறைந்த பரத்தையுடன் இருந்து விட்டு வருகிறான் என்பது இதில் மறைந்துள்ள பொருள். ஐந்தே அடிகளில் தன் கணவனின் ஆகாய அளவு தவறை மறைபொருளாகக் கூறும் நுட்பத்தை வியக்காமல் இருக்க இயலுமா? கல்வியறிவு கிஞ்சித்தும் இல்லாத சங்கத் தமிழச்சி இவ்வாறு சிந்திக்கிறாள்.

குழந்தை வளர்ப்பின் நுட்பம் அறிந்தவள் அவள். அதனால்தான் குழந்தை முன் எதைப் பேசக்கூடாது என்னும் தெளிவுடன் பேசுகிறாள். அவள் வளர்த்த குழந்தைகள் பண்பாட்டை மீறாமல் ஒழுக்கத்தில் மாறாமல் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் இந்நிலை இருக்கிறதா?

பார்க்க, கேட்க, பேசக் கூடாத அனைத்துத் தகவல்களும் ஊடகங்கள் வாயிலாக நம் வீட்டு வரவேற்பறைக்கு வந்து விடுகின்றன. அவற்றை ஒன்று விடாமல் நாமும் பார்த்து விடுகின்றோம். அத்துடன் போகிறதா? நம் குழந்தைகளையும் பார்க்க விடுகின்றோம். நமக்குத் தேவை நம் குழந்தை நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பிஞ்சுகளின் மென்மையான இளம் மனதில் தேவையற்ற ஆபாச, வன்முறைக் காட்சிகள் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் பதிந்து விடும் என்பதை பெற்றோர்கள் அறிந்தாலும் அதைச் செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இவை தவிர கணினியைப் பயன்படுத்தத் தருகின்ற பெற்றோர்கள் அக்குழந்தையைக் கண்காணித்துக் கொண்டு இருத்தல் மிக அவசியம். குழந்தையின் முன் பெற்றோர் ஃபேஸ் புக்கைத் திறந்து வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜொல்லுவது கவனமாகக் களையப் பட வேண்டிய ஒன்று. இதனால் குழந்தைக்கு பெற்றோர் மீது உள்ள மரியாதை குறைவதோடு அதுவும் நட்பு விண்ணப்பம் கொடுக்கத் தொடங்கி விடும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு நல்லது இது தீயது இது என்று பகுத்துணரும் பக்குவம் வரும் வரை குழந்தைகள் முன்பு எவற்றை செய்யக் கூடாது என்பதில் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பிறரைப் பற்றி கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் குறிப்பிட்ட நபர் மீது குழந்தைக்கு மரியாதை இல்லாது போகும். பெற்றோர்களைப் போலவே பிறரைப் பழிப்பதை பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்ளும். அதனால் இடம் பொருள் ஏவல் தெரியாமல் எங்கேனும் வகையாய் மாட்டிக்கொண்டு அல்லல் படும். உங்கள் குழந்தைக்கு இந்நிலை தேவையா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. குழந்தைகள்தான் தவறு செய்யும். குழந்தைகள் தவறு செய்யும் போது குழந்தையைத் திருத்தும் சொற்கள் கூட திருவள்ளுவர் சொல்வது போல அன்பு கலந்த கனிச்சொற்களாக இருக்கவேண்டும். நீங்கள் கனிச்சொற்களை விடுத்து காய்ச்சொற்களைப் பயன்படுத்தினால் குழந்தைக்கும் காய்ச்சொற்களே கனியாக இனிக்கும். எனவே சனியனே, மூதேவி, பேய், பிசாசு முதலிய சொற்கள் உங்கள் குழந்தைகளின் நாவில் நர்த்தனமாட வேண்டுமா என்பதைத் தீர்மானத்தால் உங்கள் வாயில் இது போன்ற சொற்கள் அறவே வராது.

குழந்தை முன்னிலையில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது முதலியவற்றைச் செய்தல் குழந்தையிடம் மோசமான மன நிலையை உருவாக்கும். அது திருட்டுத் தம் அடிக்கலாமா என்று வாய்ப்பைத் தேடத் தொடங்கும். இளம்பருவத்தில் ஏற்படும் இது போன்ற பழக்கங்கள் இறுதிவரை இறுகப் பற்றிக் கொள்ளு(ல்லு)ம் இரும்புக்கரமாகிக் குழந்தையை இறுக்கும்.

வார்ததைகளால் கற்றுக் கொடுப்பது பாடமாகிப் போகும். வாழ்ந்து கற்றுக்கொடுப்பது அக்குழந்தைகளின் மனத்தில் படமாகிப் பதியும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அதற்காக குழந்தையை வளர்ப்பது தாயின் கடமை என்று கூறி தந்தைமார்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இனிய இல்லறத்தை மேற்கொண்டு ஒழுகும் பெற்றோர்களின் வாழ்க்கை அவர்களின் வாரிசுக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள். வாழ்ந்து கற்றுக்கொடுங்கள்!


முனைவர். ப. பானுமதி(ஆதிரா)

(இக்கட்டுரை இம்மாத பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)



வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Tவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Hவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Iவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Rவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Aவாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 17, 2013 1:41 pm

மிக சிறப்பான கட்டுரை அக்கா!
பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே ஒழுக்கத்தை பெற்றோர்கள் கற்று கொடுத்துவிட்டால். அவர்கள் இறுதி வரை கண்டிப்பாக கடை பிடிப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றும் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் தீய வழியில் கண்டிப்பாக இட்டு செல்லாது. சூப்பருங்க

பெண்மணி இதழில் சிறப்பான கட்டுரை சமர்பித்து வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள் அக்கா.!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:33 pm

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதை நினைக்கிறேன்.

நல்ல பிரயோசனமான கட்டுரை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:41 am

அருமையான பகிர்வு நண்பரே


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 18, 2013 3:56 pm

மிகச் சிறப்பான கட்டுரை அக்கா ....தொடர்ந்து எழுதுங்கள் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 18, 2013 4:06 pm

மிக அருமை! என் மனைவியிடம் காணப்படும் பெருங்குறை. அருமையான விளக்கம் நன்றிகள்!!


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 18, 2013 4:10 pm

kirikasan wrote:மிக அருமை! என் மனைவியிடம் காணப்படும் பெருங்குறை. நாலுபேர்ருக்கு முன்னிலையில் பிள்ளைகளின் நிறைவைவிட்டு குறையைமட்டும் பேசுதல். போலப் பல தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் அருமையான விளக்கம் நன்றிகள்!!


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 18, 2013 5:19 pm

அருமையான கட்டுரை,,

ஆயினும் இவற்றை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் ஆராயப்படவேண்டும்.

இன்றைய சமூகத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழல் நிலவுகிறது. தனிக் குடும்பத்தையே தலைவிகள் விரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசுவதற்கு ஒரு ஆள் இருந்தாலே அவர்கள் டி‌வி, மற்ற பொழுது போக்கு சாதனங்களை நாடுவது குறையும். ஆரம்பம் முதல் தங்களை தொந்தரவு செய்யக்கூடாதென்று இது போன்ற சாதனங்கள் குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது. பெற்றவரும் பிள்ளைகள் ரோபட் மாதிரி தாங்கள் விரும்பும் போது ஆட வேண்டும், வேலையாய் இருக்கும் போது தொந்தரவு செய்யக்கூடாது என்பதையே விரும்புகின்றனர். இது நடைமுறையில் சாத்தியப்படாத போது பிற சாதனங்கள் பிள்ளைகளிடம் நுழைகிறது...தாயும் கற்பமாய் இருக்கும் காலம் முதல் வேலைப்பளு, போட்டி, பொறாமை ஆகிய சூழல் நிறைந்த உலகத்தில் வாழும் பொழுது விளையும் பயிரும் முளையிலே மாசடைகிறது...நம் சமூகத்தில் இருந்த பஞ்ச தந்திர கதைகள், புராணக் நீதிக் கதைகள், சமூக அக்கறை நிறைந்த மா மனிதர்களின் வரலாறுகள் மழுங்கி விட்டன.

நம் சமூகத்தில் தான் குழந்தைகளை 30 வயதை கடந்தாலும் பிள்ளைகளாகப் பார்க்கும் மனநிலை நிலவுகிறது..வளரும் பருவத்திலே அவர்களை சுயத்திறன் படைத்தவர்களாக படைப்பதில்லை....கல்விக்கூடங்களும் பட்டத்தை கொடுக்கிறது பட்டறிவை உருவாக்குவதில்லை..













சதாசிவம்
வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்... ஆதிரா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக