புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_m10பங்குனி மாத ராசி பலன்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி மாத ராசி பலன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:14 pm

மேஷம்பங்குனி மாத ராசி பலன்கள் Aries02

மேஷம்: படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களே! சுக்கிரனும் புதனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதத்தில் தைரியம் கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களைகட்டும். உங்களின் பூர்வ புண்ணி யாதிபதி சூரியன் 12ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டுமே என்ற ஒரு பயமும் இருக்கும்.

சூரியனும் செவ்வாயும் 12ல் மறைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி சின்னச் சின்ன வேனல் கட்டி, கண் எரிச்சல் வரக்கூடும். லேசாக பல் வலிக்கும். உங்கள் ராசியில் கேது அமர்ந்து உங்கள் ராசியை சனிபகவானும் பார்த்துக் கொண்டிருப்பதால் ஒரே நேரத்தில் அதிக உணவுகள் உட்கொள்ள வேண்டாம். சிறுகச் சிறுக உண்பது நல்லது. சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக இருப்பதால் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கோதுமை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு என்றாலும் 7ம் வீட்டிலேயே ராகுவும் நிற்பதால் வீண் சந்தேகங்கள், ஈகோ பிரச் னைகள் வந்துசெல்லும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். பிரபல யோகாதிபதியான குருபகவான் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியுடன் பேசி பல நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகளால் அலைச்சல், செலவி னங்கள் இருக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் தலையிடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் கூடும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும்.

வியாபார விஷயமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும்.

கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் நிறை வேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 18, 19, 21, 26, 27, 28, 29, 30, ஏப்ரல் 4, 5, 6, 7.

சந்திராஷ்டம தினங்கள்:

31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

சென்னை-குன்றத்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:14 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Taurus02

ரிஷபம்: இலக்கை எட்டிப் பிடிக்கும் வரை இடைவிடாமல் உழைப்பவர்களே! முக்கியமான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் முழுக்க எல்லா வகையிலும் சாதித்துக் காட்டுவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சாதுர்யமாகப் பேசும் சாமர்த்திய த்தை கற்றுக் கொள்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். செவ்வாயும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு.

முன் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளால் பண உதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு தள்ளிப்போன திருமணம் கூடிவரும். மக ளுக்கும் நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். கல்யாணம், காது குத்து, சீமந்தம் என வீடு களைக்கட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

12ல் கேது நிற்பதால் அவ்வப்போது தூக்கமில்லாமல் போகும். அயல்நாட்டுப் பயணங் கள் வரும். சனியும் ராகுவும் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் ஷேர் மூலமாக பணம் வரும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். தீர்ப்பு சாதகமாக வரும். ராசிக்குள்ளேயே குரு நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் யோசிப்பீர்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

மாணவர்களே! கணக்குப் பாடத்திலிருந்த பிணக்கு தீரும். அரசுத் தேர்வுக்கு ஆயத்தமாவீர்கள்.

முக்கியமான கிரகங்கள் 11ம் வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். வேறு சில பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
கலைத்துறையினரே! உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். நிலத்தகராறுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவதுடன் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 20, 22, 23, 25, 29, 31, ஏப்ரல் 1, 7, 8, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:15 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Gemini02

மிதுனம்: முன்னெச்சரிக்கை உணர்வுடைய நீங்கள், காலத்தை பொன்னாக மதிப்பவர்கள்! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்தி, உங்களின் சேமிப்புகளையும் கரைத்துக் கொண்டு, தந்தையாருடன் மனவருத்தங்களையும் ஆரோக்கிய குறை வையும் தந்து கொண்டிருந்த சூரியன் 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சவாலான காரி யங்களை முடிக்கக் கூடிய தைரியம் வரும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. நாடாளுபவர் களின் நட்பு கிடைக்கும்.

வழக்குகள் சாதகமாக முடியும். இளைய சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். பெரிய நோய் இருப்பது போல நினைத்து பயந்தீர்களே! அந்த பயம் இனி நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஒரு சொத்தை தந்து விட்டு மற்றொரு சொத்து வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். கேது வலுவாக இருப்பதால் ஆன்மிகப் பெரியோர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 5ம் வீட்டிலேயே சனியும் ராகுவும் தொடர்வதால் சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப்பற்றி விமர்சித்தால் அதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இ ருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத் தியில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! முகப்பரு, சரும நமைச்சல் வந்து நீங்கும்.

மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். மெடிக்கல், மளிகை, தானிய வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

உத்யோகத்தில் உங்களை குறை சொன்னவர்களெல்லாம் இப்பொழுது நட்புறவாடுவார்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைத்துறையினரே!வேற்றுமொழிவாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை விலகும். சமயோஜித புத்தியாலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 22, 23, 24, 25, ஏப்ரல் 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

4, 5 மற்றும் 6ந் தேதி காலை 9 மணி வரை பயணங்களின்போது கவனம் தேவை.

பரிகாரம்:

நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:16 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Cancer02

கடகம்: உன்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் கடவுள் உன்னிடம் ஒப் படைப்பதில்லை என்ற சூட்சுமத்தை அறிந்த நீங்கள், சுற்றியிருப்பவர்கள் சுகப்படவும் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு பல முக்கிய காரியங்களை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ல் அமர்ந்து அலைச்சலை தந்து வந்த சூரியன் இப்போது 9ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கொஞ்சம் டென்ஷன் குறை யும். என்றாலும் தந்தையாருக்கு வீண் டென்ஷன், கை, கால் மற்றும் நெஞ்சு வலி வரக்கூடும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயும் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீண் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். எதையுமே சிக்கனமாக செய்யப் பாருங்கள். 10ந் தேதி முதல் யோகாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் நுழைவதால் உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
திடீர் பணவரவு உண்டு. சுக ஸ்தானமான 4ல் ராகுவும் சனியும் நிற்பதால் கால், கழுத்து, முதுகு மற்றும் உடல்வலி வந்துபோகும். வாகனத்தை வேக மாக இயக்க வேண்டாம். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம்.

சொத்துகள் வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள். பணப்பட்டுவாடா விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமான விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று செய்து முடிப்பது நல்லது. விலை உயர்ந்த ஆபரணங்கள், வாகனத்தை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.

கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களோடு பழகிய வர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புது வேலை அமையும்.

மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

குரு சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். செங்கல் சூளை, இரும்பு, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயி ருக்கும். 10ந் தேதி முதல் டென்ஷன் குறையும். உங்களுக்கு எதிராக இருந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்.

கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். வற்றிய கிணற்றை தூர்வாரி நீர் சுரக்க வைப்பீர்கள். நிம்ம தியும் வசதி, வாய்ப்பும் கூடும் காலமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28, ஏப்ரல் 2, 3, 4, 5, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

ஏப்ரல் 6ந் தேதி காலை 9 மணி முதல் 7 மற்றும் 8ந் தேதி மதியம் 2:30 மணி வரை முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்:

சிதம்பரம் தில்லை காளியை தரிசித்து வாருங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:17 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Leo02

சிம்மம்: உன்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அமைதி தர முடியாது என்ற கீதை மொழி அறிந்த நீங்கள், தன் பிரச்னை களை தானே எதிர்கொண்டு தீர்த்துக் கொள்வதில் வல்லவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்களின் ராசிநாதனான சூரியன் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கோபப்பட்டீர்கள். காது வலி, கண் எரிச்சல் எல்லாம் வந்தது. இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். ஆனால், சூரியனுடன், யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்திருப்பதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் இருக்கும்.

நீங்கள் எதிர்பார்த்திருந்த தொகை தாமதமாகக் கிடைக்கும். மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சைகள், மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் வீட்டுப் பத்திரங்கள், தங்க ஆபரணங்களை பத்திரப்ப டுத்தி வையுங்கள். கவனக் குறைவால் களவுபோக வாய்ப்பிருக்கிறது.

குருவும் 10ல் தொடர்வதால் உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள் அல்லது உங்கள் பெயரை தவறாக சிலர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் யாரையும் தாக்கிப் பேசுவதோ, தூக்கிப் பேசுவதோ வேண்டாம். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் புதனும் சென்று கொண்டிருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல் லாம் எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு.

அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும்.

வியாபாரிகளே! சனியும் ராகுவும் 3ம் வீட்டிலேயே நீடிப்பதால் வியா பாரத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆனால், பெரிய முதலீடுகள் எதையும் இந்த மாதத்தில் செய்ய வேண்டாம். பங்குதாரர்க ளால் பிரச்னைகள் வரும். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். இடமாற்றம் உண்டு. நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். முற்பகுதி முரண்டு பிடித்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 18, 19, 20, 21, 22, 27, 28, 29, ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 14ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் ஏப்ரல் 8ந் தேதி மதியம் 2:30 மணி முதல் 9, 10 ஆகிய தேதிகளில் எதிலும் நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:18 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Virgo02


கன்னி: தினை விதைத்தவன் தினையைத் தான் அறுவடை செய்ய முடியும் என்ற அனுபவ மொழியை அறிந்த நீங்கள், நாம நாலு பேருக்கு நல்லது செய்தா, நமக்கு யாராவது உதவுவாங்க என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 6ல் அமர்ந்து கொண்டு சேமிப்புகளை கரைத்துக் கொண்டு, கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுக்கிரன் 18ந் தேதி முதல் 7ம் வீட்டில் உச்சம் பெற்று முழுபலத்துடன் அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீடு அமையும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உங்கள் ராசிநாதன் புதன் சற்றே பலவீனமாக இருப்பதால் கழுத்து வலி, தொண்டை வலி வரக்கூடும்.

உங்கள் ராசியை சூரியனும் செவ்வாயும் பார்த்துக் கொண்டேயிருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். தினமும் தியானம் செய்யப் பாருங்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் புதிய முயற்சிகள், புது முதலீடுகளில் கவனம் தேவை. லேசாக காது வலிக்கும். ஆனால், பெரிய பாதிப்புகள் இருக்காது.

அரசியல்வாதிகளே! தலைமையைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள்.

மாணவர்களே! விடைகளை எழுதிப் பாருங்கள். சில நேரங்களில் மறதி, தூக்கம் வரக்கூடும்.

கன்னிப் பெண்களே! இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு உதவிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் கடைக்காரருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.

உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால், விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடிவரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். நெருக்கடியிலிருந்து நீந்தி, அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 21, 22, 23, 24, 25, 29, 31, ஏப்ரல் 1, 2, 3, 4, 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 14ந் தேதி மதியம் 2 மணி முதல் 15, 16 மற்றும் ஏப்ரல் 11, 12, 13ந் தேதி காலை 8 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம்:

வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:18 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Libra02

துலாம்: சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள், யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களையும் கோபத்தையும் பிள்ளைகளால் பிரச்னைகளையும் தந்த சூரியன் இப்போது 6ல் நுழைந் திருப்பதால் பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். அயல்நாட்டு வேலை, உயர்கல்வி போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான புதன் 5ம் வீட்டிலேயே 3ம் தேதி வரை இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.

ஆனால், ஏழரைச் சனி நடைபெறு வதால் எதிர்பாராத அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். பெரிய நோய் இருப்பது போல அறிகுறிகள் தெரியும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 18ந் தேதி முதல் 6ம் வீட்டில் சென்று மறைவதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்களை பற்றிய விமர்சனங் கள் அதிகரிக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.

எனவே, கவனமாக மற்றவர்களுடன் பேசு வது, பழகுவது நல்லது. 9ந் தேதி வரை செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். மனைவிவழியில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்துசெல்லும். 10ந் தேதி முதல் செவ்வாய் வலுவடைவதால் மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்கு வது விற்பதில் அலட்சியம் வேண்டாம். குரு 8ல் மறைந்து கிடப்பதால் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங் கள். பெற்றோரின் ஆலோசனையின்றி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் சந்தேகங்களை ஆசிரியரிடம் உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வியாபாரம் சுமார்தான், போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். ஆனால் புதன் 3ந் தேதி வரை சாதகமாக இருப்பதால் தள்ளுபடி விற்பனை மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவார்கள்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கனிவாக பேசுங்கள். வேலை யில் அலட்சியம் வேண்டாம்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்னதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

விவசாயிகளே! பருப்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். பம்பு செட் பழுதாகும். அக்கம்-பக்கம் பார்த்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 22, 23, 24, 25, 31,ஏப்ரல் 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 17, 18, 19ந் தேதி நண்பகல் வரை மற்றும் ஏப்ரல் 13ந் தேதி காலை 8 மணி முதல் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசியுங்கள். துப்புரவு பணியாளர்களுக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:19 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Scorpio02

விருச்சிகம்: போர்குணம் கொண்ட நீங்கள், நினைத்ததை அடையும்வரை அதே நினைப்பாக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் புதனும் சுக்கி ரனும் செல்வதால் தடைகள் உடைபடும். சுறுசுறுப்பாவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகளை எளிதாக முறியடிப்பீர்கள். பணவரவு திருப்திக ரமாக இருக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் 9ந் தேதி வரை பலவீனமாக இருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். முதுகு வலி, மூ ட்டு வலி வரக்கூடும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையக் கூடும். எனவே இரும்புச் சத்து, நார்ச் சத்துள்ள காய், கனிகளை உணவில் சேர் த்துக் கொள்ளுங்கள்.

சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். சிறு காயங்கள் ஏற்படக்கூடும். 10ந் தேதி முதல் ராசிநாதன் ஆட்சிபெற்று 6ல் அமர்வதால் ஓரளவு நிம்மதி உண்டாகும். சூரியன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். அவர்களால் மருத்துவச் செல வுகள் ஏற்படக்கூடும். அவர்களிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். அவர்கள் உங்களிடம் எதிர்மறையாக கேள்வி கேட்டாலும் நீங்கள் பொறுத்துக் கொள் வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து செல்லும். 6ல் நிற்கும் கேதுவும் 7ல் அமர்ந்திருக்கும் குருவும் உங்களுடைய திறமையை அதிகப்படுத்துவார்கள்.

உங்களுடைய தகுதியும் கூடும். அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் புதிய திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், ஏழரைச் சனி நடப்பதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய காரி யங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்ல வரனும் அமையும்.

மாணவர்களே! நண்பர்களுடன் வீண் பேச்சைத் தவிர்த்து தேர்வில் கவனம் செலுத்துங்கள். கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

வியாபாரம் செழிக்கும். பற்று வரவு கணிசமாக உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டிட உதிரி பாகங்கள், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனையை உயரதிகாரிகள் ஏற்பார்கள். சிலருக்கு புது வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் நடந்தேறும். பிரபலங்களின் ஆதரவால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 15, 16, 24, 25, 26, 27, 28, ஏப்ரல் 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 19ந் தேதி நண்பகல் முதல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்:

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஆழத்துப் பிள்ளையாரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:20 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Sagittarius02

தனுசு: அதர்மத்திற்கு வளைந்து கொடுக்காத நீங்கள், எதிலும் நியாயத்தின் பக்கம் நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனியும் ராகுவும் நிற்பதால் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வேற்று மொழிக்காரர்கள்,வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

கௌரவப் பதவிகள் வரும். வழக்குகள் சாதகமாகும். வங்கிக் கடனின் உதவி கிடைக்கும். செவ்வாயும் 4ம் வீட்டில் நிற்பதால் பூர்வீகச் சொத் தில் ஒருபகுதியை விற்று பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதர வகையில் சின்னச் சின்ன அலைச்சல், செலவினங்கள் இருக் கும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள் புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. ஷேர் மூலமாகவும் கணிசமான பணம் வரும். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். புது வேலை அமையும்.

கேது 5ம் வீட்டிலேயே நீடிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் ந ட்பை இழக்க நேரிடும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் ராசிநாதனான குரு 6ம் வீட்டிலேயே வலுவி ழந்து காணப்படுவதால் சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்கள், குடும்ப அந்தரங்கங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

மாணவர்களே! உங்களுடைய பொது அறிவுத்திறன் வளரும். படிப்பி லும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பாக்கிகளில் ஒன்று, இரண்டு வசூலாகும். வியாபாரத்தை விரிவுப டுத்துவதற்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். ஆனாலும் அடிமனதில் ஒருவித பயம் இருக்கும். இந்த வேலையில் தொடருவோமோ, இல்லையோ என்றெல்லாம் அவ்வப்போது குழம்புவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! காய்கறி, பழ வகைகளால் லாபமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 17, 18, 19, 20, 21, 27, 28, 29,ஏப்ரல் 5, 6, 7, 8, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 22, 23 மற்றும் 24ந் தேதி காலை 9 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்:

அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 07, 2013 9:21 pm

பங்குனி மாத ராசி பலன்கள் Capricorn02

மகரம்: காலத்திற்கேற்ப கோலத்தை மாற்றிக் கொண்டா லும் கொள்கை கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! கடந்த ஒருமாத காலமாக 2ம் வீட் டில் அமர்ந்துகொண்டு சேமிப்புகளை கரைத்து, வேகமாகவும் கோபமாகவும் பேச வைத்து, குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்திய சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.

வீடு, மனை போன் றவை உங்களின் ரசனைக்கேற்ப அமையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருக்கு இருந்து வந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்ப வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். அரசியலில் செல்வாக்கு உயரும். குரு 5ல் நீடிப்பதால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகள £ல் அந்தஸ்து உயரும்.

மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்களின் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று காணப்படுவதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், சனியோடு ராகுவும் சேர்ந்திருப்பதால் சோர்வு, களைப்பு, தோலில் அலர்ஜி வந்து செல்லும். கேது 4ம் வீட்டிலேயே தொடர்வதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் தனித் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், பெட்ரோல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகும்.

உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள்.

விவசாயிகளே! கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து புது நிலத்தை கிரயம் செய்வீர்கள். புது பம்பு செட் வாங்குவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமிது.

ராசியான தேதிகள்:

மார்ச் 14, 15, 16, 20, 21, 22, 29, 30, 31, ஏப்ரல் 1, 3, 7, 8, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

மார்ச் 24ந் தேதி காலை 9 மணி முதல் 25 மற்றும் 26ந் தேதி மாலை 4:30 மணி வரை பழைய சிக்கல்கள் தலைதூக்கும்.

பரிகாரம்:

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள பழைய சீவரம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக