புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
1 Post - 1%
viyasan
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
19 Posts - 3%
prajai
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_m10சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 4:23 pm

இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு.இதன் சிறப்பும் உண்மைப் பொருளும் ஏற்கனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்துவிட்டது என்பதை வாசகர்கள் அறிவர்.எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்யவேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்!

மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்யவேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது. இதை நன்கு சிந்தித்து கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நூல் சிவநாம மகிமை. வடிவில் சிறியது; முடிவில் பெரியது. பத்தே பாடல்கள்.

இதனை அன்பர்கள் ஆர அமர ஓதி சிவனிரவை வழிபட உதவியாக பொருளுடன் அந்நூல் கீழே தரப்படுகிறது.

இந்த சிவநாம மகிமையை 16 முறை ஓதி மலர்தூவி சிவலிங்க வழிபாட்டினைச் சிவனிரவில் செய்வோர்க்கு பாடலில் சொல்லப்பட்ட எல்லா நற்பலன்களும் வழாமல் வாய்ப்பதோடு பேரா இயற்கைப் பேரின்பமும் பிறவி முடிவில் வாய்க்கும்.

(செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதி ‘தெய்வமுரசு’ ஆன்மிக இதழில் வெளியிடப்பட்டது.)

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 4:29 pm

பாடல் மட்டும்:

வேதம் ஆகமம் வேறும் பலப்பல
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடும்
தீதெலாமும் சிவசிவ என்மினே. 1

புல்ல ராயினும் போதக ராயினும்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகும் நவையென் றகற்றியும்
செல்லல் தீரும் சிவசிவ என்மினே. 2

நாக்கி னானும் நயனங்க ளானுமிவ்
வாக்கை யானும் அருஞ்செவி யானுநம்
மூக்கி னானும் முயங்கிய தீவினை
தீர்க்க லாகும் சிவசிவ என்மினே. 3

சாந்தி ராயணம் ஆதி தவத்தி னால்
வாய்ந்த மேனி வருந்த இறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகும் சிவசிவ என்மினே. 4

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்கும் கருத்து மகிழ்வுறும்
செல்வம் நல்கும் சிவசிவ என்மினே. 5

தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடும் நூறெனக் கூறிய
ஆயுள் பல்கும் அறம்வளர்ந் தோங்குறும்
தீய தீரும் சிவசிவ என்மினே. 6

வருந்தி ஆற்றி வளர்த்த கதிர்த்தனை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
திரிந்து காப்பன் சிவசிவ என்மினே. 7

முந்தையோர் சொல்மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்திலும்
வந்த தீவினை மாற்றுவன் ஆதலால்
சிந்தை யோடு சிவசிவ என்மினே. 8

நீச ரேனும் ஈசன் நிகழ்த்தில் வான்
ஈச ரேனும் சிவசிவ என்கிலார்
நீசரே என்று இயம்புறு நின்றுஉப
தேச நூல்கள் சிவசிவ என்மினே. 9

எண்ணி நெஞ்சிற் சிவசிவ என்பவர்
வண்ண மென்பதம் கிட்டி வணங்கவும்
உண்ண டுங்குவன் ஒண்திறல் கூற்றுவன்
திண்ணம் ஈது சிவசிவ என்மினே. 10


(இனி பாடலும் விளக்கங்களும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 08, 2013 10:25 pm

பாடலும் விளக்கமும்:
வேதம் ஆகமம் வேறும் பலப்பல
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடும்
தீதெலாமும் சிவசிவ என்மினே.
1


(இ-ன்) வேதம் ஆகமம் என்றும் வேறுள்ள புராணம், உபநிடதம் என்று நாளும் ஓதி, ஐயோ! இவற்றின் கரை காணுவது எந்நாள் என்று உள்ளத்திலே தடுமாற்றம் கொள்ளுதல் வேண்டாம். சிவ சிவ என்று இருமுறை செபியுங்கள். அதுவே அதிசூக்கும ஐந்தெழுத்து. அதை ஓதினால் ஒளியைக் கண்ட இருள் அக்கணமே தொலைந்தோடுவது போல உமக்கு வரும் தீமையெல்லாம் ஓடிப்போகும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 09, 2013 9:59 am

புல்ல ராயினும் போதக ராயினும்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகும் நவையென் றகற்றியும்
செல்லல் தீரும் சிவசிவ என்மினே.
2

(இ-ன்) புன்மையே வடிவெடுத்தவரானாலும் பிறர்க்கு உபதேசம் செய்து தான் கடைப்பிடிக்காத பேதையாயினும் சிவசிவ என்று சொல்லிவிட்டால் தமிழ் வேதங்கள் கூறும் நல்லன எல்லாம் கூடும்; குற்றங்கள் என்பனவற்றை அகற்றி துன்பங்களை எல்லாம் ஓடச் செய்துவிடும்.

நாக்கி னானும் நயனங்க ளானுமிவ்
வாக்கை யானும் அருஞ்செவி யானுநம்
மூக்கி னானும் முயங்கிய தீவினை
தீர்க்க லாகும் சிவசிவ என்மினே.
3

(இ-ன்) நாக்கினால், கண்களால், இந்த உடம்பால், செவியால், மூக்கினால் இவ்வாறு பலவகையாலும் தீவினையை திளைத்துச் செய்திட அத்தீவினைப் பயன் சிவசிவ என்று செபிப்பதால் ஒழியும்.


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Mar 09, 2013 10:19 am

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய






அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 09, 2013 10:19 am

இன்று மகா சிவராத்திரி , காலையில் உங்கள் பதிவை பார்த்தது மிக்க மகிழ்ச்சி சாமி அவர்களே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 09, 2013 10:27 am

செம்மொழியான் பாண்டியன் wrote:ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய


ந ம சி வ ய - இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில்
ந - நடப்பைக் குறிக்கும்,
ம - மறைப்பைக் குறிக்கும்.
சி - சிறப்பைக் குறிக்கும்
வ - வனப்பைக் குறிக்கும்
ய - யாப்பைக் குறிக்கும்.

ம - மறைப்பைக் குறிப்பதால் வை மறைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Mar 09, 2013 10:40 am

சாமி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய
ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய ஓம் நச்சிவாய


ந ம சி வ ய - இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில்
ந - நடப்பைக் குறிக்கும்,
ம - மறைப்பைக் குறிக்கும்.
சி - சிறப்பைக் குறிக்கும்
வ - வனப்பைக் குறிக்கும்
ய - யாப்பைக் குறிக்கும்.

ம - மறைப்பைக் குறிப்பதால் வை மறைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.
ஆமாம் அய்யா மந்திரங்களை சரியாக உச்சரித்தால் மட்டுமே பயனுண்டு
இப்போது மாற்றிவிட்டேன் நன்றி அய்யா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 09, 2013 2:53 pm

சாந்தி ராயணம் ஆதி தவத்தி னால்
வாய்ந்த மேனி வருந்த இறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகும் சிவசிவ என்மினே
4

(இ-ன்) சாந்திராயனம் முதலிய தவச் செயல்களால் சரீரத்தை வாட்டினாலும், அழியாது தொடரும் பாதகம் எதுவாயினும் சிவசிவ என்று செபிப்பதால் பொருக்கென்று உடனே தீர்ந்து போகும்.

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்கும் கருத்து மகிழ்வுறும்
செல்வம் நல்கும் சிவசிவ என்மினே 5 [

(இ-ன்) புருவம் ஒருவில் என்பது போல விளங்கும் நெற்றியை உடைய உமையம்மையின் கூறு இடப்பக்கத்தில் உள்ள சிவபெருமானின் திருவடிகளைக் கண்டவனுக்கு எப்படி எல்லாம் வந்து சேருமோ அது போல, சிவசிவ என்று செபித்தவனுக்கு மிகச் சீரிய கல்வியும் கருதியதைக் கருதியவாறே அளித்து மகிழ்ச்சியைத் தவறாது நல்கும் செல்வமும் வந்து சேரும். எனவே சிவசிவ என்று செபியுங்கள்!

தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடும் நூறெனக் கூறிய
ஆயுள் பல்கும் அறம்வளர்ந் தோங்குறும்
தீய தீரும் சிவசிவ என்மினே.

(இ-ன்) சிவசிவ என்று செபித்தால் தீமையைத் தரும் நட்சத்திரங்களோடு தீமையைத் தரும் கோள்களும் ஆகிய இவ்விரண்டும் தரும் தீங்குகள் அகலும்; பிறவி என்னும் பெருநோய் உட்பட எல்லா நோயும் அகன்று போகும்; நூறு வயது என்று கூறும் வண்ணம் ஆயுளும் பெருகும்; அறம் வளர்ந்து அதன் நற்பலன்கள் ஓங்கும். எவ்வகையில் தீங்குகள் வந்தாலும் அவை உடனே தொலைந்து போகும். எனவே சிவசிவ என்று செபியுங்கள்!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக