புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
21 Posts - 70%
heezulia
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
6 Posts - 20%
viyasan
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
213 Posts - 42%
heezulia
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
21 Posts - 4%
prajai
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_m10அவர் பொருட்டு எல்லோர்க்கும்…. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் பொருட்டு எல்லோர்க்கும்….


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Wed Mar 06, 2013 12:26 pm

அவர் பொருட்டு எல்லோர்க்கும்….
(சிறுகதை)

காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நான் சிறிது நேரத்திலேயே அதுவும் சலித்துப் போய் விட அந்தப் பெட்டியில் என்னோடு பயணம் செய்யும் சக பயணிகளை ஆராய ஆரம்பித்தேன்.

எதிர் இருக்கைக்காரர் என்னை நேருக்கு நேர் பார்க்க ஒரு நேசப் புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவரும் புன்னகைக்க,

'சார;..எங்க…கோயமுத்தூருக்கா?” கேட்டேன்.

'ஆமாங்க”

'சார் என்ன உத்தியோகம் பார்க்கிறாப்பல?”

'பள்ளிக் கூட ஆசிரியர்”

'நெனச்சேன்…உங்களைப் பார்த்தப்பவே நெனச்சேன்…நீங்க நிச்சயம் ஸ்கூல் டீச்சராத்தான் இருப்பீங்கன்னு…” சொல்லிவிட்டு நான் சிரிக்க,

அந்த ஆசிரியருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த ஒரு காட்டான்,

'நீங்க…கோயமுத்தூரா சார்?” என்று தன் தகர டப்பா குரலில் என்னைப் பார்த்துக் கேட்டான்.

முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு 'ஆமாம்;…” என்றேன். ஏனோ எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவேயில்லை. அவன் தோற்றமும் மீசையும் 'கர..கர” குரலும் எனக்குள் ஒரு எரிச்சலைத்தான் மூட்டினவே தவிர ஒரு தோழமை உணர்வைத் தோற்றுவிக்கவே இல்லை.

நான் அந்த நபரைத் தவிர்த்து விட்டு எதிர் இருக்கை ஆசிரியரிடம் 'கோயமுத்தூர்ல எந்த ஸகூல்ல சார் வொர்க் பண்ணறீங்க?” கேட்டேன்.

'கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்….”

'ஓ…நல்லாத் தெரியும்…நல்ல பேர் வாங்கின ஸ்கூலாச்சே”

அந்தக் 'கர…கர” குரல் மறுபடியும் இடையில் புகுந்து 'சார் கோயமுத்தூர்ல என்ன தொழில் பண்ணறாப்ல?” என்று என்னிடமே கேட்க,

பற்களைக் கடித்தபடி 'ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன்” என்றேன்.

'எந்தக் கம்பெனி?”

'நான் எந்தக் கம்பெனில வேலை பார்த்தா உனக்கென்னடா?' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு 'எமரால்டு என்ஜினியர்ஸ்”

'எமரால்டு என்ஜினியர்ஸா?…கேள்விப்பட்ட மாதிரிதான் இருக்குது…ஆனா எந்த ஏரியான்னுதான் தொpயல…”

'அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே?”…நினைத்துக் கொண்டவன் 'சிட்கோ இண்டஸ்ட்ரியல்ஸ் எஸ்டேட்” என்று வேகமாய்ச் சொல்லி விட்டு மீண்டும் அந்த ஆசிரியர் பக்கம் திரும்பி 'உங்க ஸ்கூல்ல ரிசல்ட்டெல்லாம் எப்படி சார்?”

'ம்ம்ம்…கடந்த மூணு வருஷமாவே….டென்த்ல நூத்துக்கு நூறு சதவீதம் பாஸ்”

அந்தக் 'கர…கர” குரல் வேறு ஏதோ கேட்க வாயெடுக்கும் போது,

'சார்...புக்…புக்..”என்று சன்னமாய்க் கூவிக் கொண்டே தட்டுத் தடுமாறி வந்தான் ஒரு இளைஞன். வயது…இருபது…இருபத்திரெண்டு இருக்கும்…வலது கையில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருந்தான். இடது பாதியாய்ச் சூம்பிப் போயிருக்க பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் அதன் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன.

'பாவம்…சின்ன வயசு…த்சொ…த்சொ..” நான் அங்கலாய்த்தபடி அவனைக் கூர்ந்து பார்த்து அதிர்ச்சி வாங்கினேன். ஆம்…அவன் கால்களிலும் ஒன்று சூம்பிப் போய் முக்கால் வாசிதானிருந்தது.

அவன் யாரிடமும் எதுவம் பேசாது கையில் அணைத்துப் பிடித்திருந்த புத்தகங்களை காலியாயிருந்த ஒரு இருக்கையின் மீது வைத்து வி;ட்டு நகர பயணிகள் ஆளுக்கொன்றாய் எடுத்துப் பிரித்துப் பார்த்தனர்.

தன் இருக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்தும் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை அந்தக் 'கர…கர” குரல்.

'எடுத்துப் பார்த்தா என்ன காசா கேட்டிடுவாங்க?..பாரு…எப்படி எருமை மாடாட்டம் உட்கார்ந்திட்டிருக்கான்னு”

அதே நேரம் அந்த ஆசிரியரானவர் அதில் நாலைந்து புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க,

'இதான்…இதான் படிச்ச வாத்தியாருக்கும் படிக்காத காட்டானுக்கும் உள்ள வித்தியாசம்”

கால் மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த அந்த மாற்றுத் திறனாளிக்கு எல்லாப் புத்தகங்களும் சரியானபடி திருப்பித் தரப்பட்டனவே தவிர ஒன்று கூட விற்பனையாகவில்லை.

அவன் முகம் வாடிப்போனது அப்பட்டமாய்த் தொpந்தது.

அப்போது….

'தம்பி….இங்க வாப்பா” அந்தக் 'கர…கர” குரல் ஆசாமி அவனை அழைக்க எனக்கு எரிச்சல் வந்தது. 'க்கும்…எல்லா புத்தகமும் இத்தனை நேரம் அவன் பக்கத்திலேதான் கெடந்தது..அப்ப அதுகளைச் சீண்டவேயில்லை…பெரிய இவனாட்டம் இப்பக் கூப்பிட்டுக் கேக்கறான் பாரு…”

'இதுல மொத்தம் எத்தனை புத்தகம் இருக்கு தம்பி?”

'ம்ம்ம்…ஒரு இருபத்தியஞ்சு..இருக்கும்”

'தோள்ல தொங்க விட்டிருக்கியே அந்த பேக்குல?”

'ஒரு அறுபது இருக்கும்”

'மொத்தமாச் சேர்த்து எல்லாத்துக்கும் என்ன வெலை ஆகுது?”

அவர் நிஜமாகவே கேட்கிறாரா?…இல்லை தமாஷ் செய்கிறாரா?…என்பது புரியாமல் அந்த இளைஞன் மலங்க மலங்க விழிக்க,

'அடச் சும்மா சொல்லுப்பா…நானே வாங்கிக்கறேன் எல்லாத்தையும்” என்றார் அந்தக் 'கர…கர” குரல்.

'ம்ம்ம்…ரெண்டாயிரத்து நூறு ஆவும் சார்….நீங்க ரெண்டாயிரம் குடுங்க சார் போதும்”

தன் பனியனுக்குள் கையை விட்டு, காக்கி நிற கவரை எடுத்து அதிலிருந்து இருபது நூறு ரூபாய்த் தாள்களை உருவி புத்தகக்காரனிடம் நீட்டினார் 'கர..கர” குரல்.

முகம் முழுவதும் சந்தோஷம் கொப்பளிக்க வாங்கிக் கொண்டு நடந்தான் அந்த மாற்றுத் திறனாளி.

அவன் சென்ற சிறிது நேரத்தில் ஜீன்ஸ், பேண்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்து கண்களில் ஸ்டைலான கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு இளைஞன் பெட்டிக்குள் பிரவேசித்தான.; அவன் கையில் அழகிய சிறிய சூட்கேஸ்!.

பயணிகள் மத்தியில் நின்று அவன் அதைத் திறந்து காட்ட உள்ளே ஏராளமாய் சி.டி.க்கள்.

'ஒண்ணு இருவது ரூபாதான் சார்…என்ன படம் வேணுமானாலும் எடுத்துக்கலாம்…புதுப்படம்…பழையபடம்…இங்கிலீஸ் படம்..எல்லாம் இருக்கு..”

ஸ்டைலாக அவன் சொல்ல பாய்ந்தது கூட்டம். சில நிமிடங்களில் அது மொத்தமாய் தீர்ந்து விட பணத்தை எண்ணியபடியே நகர்ந்தான் அவன்.

என் எதிரில் அமர்ந்திருந்த ஆசிரியரின் கை நிறைய சி.டி.க்கள். சுமார் பதினைந்திலிருந்து இருபது இருக்கும்.

'வாத்தியாருக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம் போல…” அந்தக் கர…கர…குரல் ஆசிரியரைக் காட்டி என்னிடம் சொல்ல

'ஹி…ஹி..”என்று அசடு வழிந்த ஆசிரியர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு 'ஆமாம்..நீங்க எப்படி புத்தகப் பைத்தியமோ…அப்படித்தான் நான் சினிமா பைத்தியம்” சமாளித்தார்.

'அட நீங்க வேற ஏன் சார்….எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது…மழைக்குக் கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத ஆளு நான்” சற்றும் லஜ்ஜையில்லாமல் அந்தக் கர…கர…குரல் சொன்ன பொது குழம்பிப் போனேன் நான்.

'என்னது,..எழுதப் படிக்கத் தெரியாதவரா நீங்க?…அப்புறம் எதுக்கு அத்தனை புத்தகங்களை…”

'ஓ…அதுவா,…சார்….இந்தக் காலத்துல கையும் காலும் நல்லா இருக்கறவங்களே பல பேர் உழைச்சுச் சம்பாதிக்க சோம்பேறித்தனப் பட்டுக்கிட்டு…பிச்சையெடுக்கறாங்க……திருடறாங்க….தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விக்கறாங்க… ஆனா தனக்கு ஊனம் இருந்தும் அதையே சாக்கா வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம…ஏதோ தன்னால் முடிஞ்ச புத்தக வியாபாரத்தைப் பண்ணறானே அந்த இளைஞன்…அவனோட அந்தத் தன்னம்பிக்கைக் குணத்துக்கு நான் குடுத்த பரிசுதான் சார் அந்தப் பணம்..அதையே நான் 'சும்மா…வெச்சுக்கப்பா”ன்னு குடுத்திருந்தா நிச்சயம் அந்த இளைஞன் அதை வாங்கிக்க மாட்டான்னு எனக்குத் தெரியும் அதனாலதான் அந்தப் பணத்துக்கு மொத்த புத்தகங்களையும் வாங்கினேன்”

'சரி….படிக்காத நீங்க இதுகளை வெச்சுக்கிட்டு என்ன பணணுவீங்க?” அந்த ஆசிரியர் தான் பெரிய படிப்பாளி என்கிற தெனாவெட்டில் கேட்டு விட்டு என்னைப் பார்த்து இளித்தார்.

'நம்ம ஏரியாவுல இளைஞர்களெல்லாம் சேர்ந்து ஒரு சின்ன நூலகம் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்காங்க…யார் வேணாலும் போய் இலவசமாப் படிக்கலாம்….அந்த நூலகத்துக்கு இதுகளையெல்லாம் குடுத்திடுவேன்”

படு யதார்த்தமாய்ச் சொல்லி விட்டு அந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்த அந்த மனிதரை ஏனோ எனக்கு இப்ப பிடிக்க ஆரம்பித்தது. அவருடைய அந்தத் தோற்றத்தையும்…மீசையையும்….கர…கர…குரலையும் என்னையே அறியாமல் நான் ரசிக்கத் துவங்கிய போது,

என் எதிரே அமர்ந்திருந்த சினிமாப் பைத்திய ஆசிரியர் அந்த சி.டி.கவர் மீதிருந்த நடிகையின் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.


(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்












chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 06, 2013 12:51 pm

உருவத்தை வைத்தோ, நிறத்தை வைத்தோ யாரையும் எடை போடாதீர்கள் என்பதை அருமையாக உணர்த்தும் கதை, பகிர்வுக்கு நன்றி




அன்புடன்
சின்னவன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 06, 2013 1:35 pm

'பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை'

ஏனோ இது தான் ஞாபகம் வருகிறது
உங்கள் கதைகள் அருமை தொடருங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக