புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இனி நோ டென்ஷன்! Poll_c10இனி நோ டென்ஷன்! Poll_m10இனி நோ டென்ஷன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி நோ டென்ஷன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 11:18 am

டென்சன் ஆகாதீங்கண்ணே... லெஸ் டென்சன்... மோர் வொர்க்!''- ஒரு படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். இன்றைய காலகட்டத்தில் இது எல்லோருக்கும் பொருந்தும். ''டென்ஷனா இருக்கு'' என்ற சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
-
போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில், வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்றஇன்றைய இளைஞர்களுக்கு, 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு, சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து, கார்ப்பரேட் களத்தில் இறங்கும் நமக்கு, சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன? அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்னைகள். அலுவலக வேலைச் சூழலில் தங்களது வாழ்க்கையைச் சிக்கவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் டென்ஷன்! விளைவு, ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
-
கஷ்டமான அலுவலக வேலைகளையும்எளிதாக, சந்தோஷமாக மாற்றிக்கொள்ளும் நான்கு வித்தைகளைச் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள் அசோகன் மற்றும் தியாகராஜன் இருவரும்.
http://www.thedipaar.com/new/pictures/resize_20130228200821.jpg
தெளிவாகத் திட்டமிடலாம்!
-
மன அழுத்தம் என்பது வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு விஷயம். மனஅழுத்தம் வந்தாலும், மூளை தன்னைத் தயார்படுத்திக்கொண்டு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச் செய்து முடிக்க முடியாத நிலையில்தான் ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, நேர நிர்வாகம் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்பு, அதை எப்போது, எப்படி முடிக்கப்போகிறோம் என்று திட்டமிடுங்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து பணியைத் தொடங்குங்கள். டென்ஷன் நெருங்கவே நெருங்காது.
-
மன அழுத்தம் ஏற்பட்டால், முன்பு இதேபோன்ற சூழ்நிலையை எப்படிவெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதட்டம் விலகி தைரியம் பிறக்கும்.
அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ, பலருக்கு மன அழுத்தம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்கேற்ப முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
மன அழுத்தம் இருந்தால், அந்த விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்யவேண்டும். அதையே யோசித்து, விளைவுகளை எண்ணி, இன்னும் மன அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளக் கூடாது. தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம், நம்குறிக்கோள்களைச் சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்
நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங்களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காகத் தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதும் தவறு. இதனால், குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.
நாம் இல்லாத நேரத்தில், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்து, அதை நாம் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இருப்பார்கள். இதுவும் தவறு.நீங்கள் இல்லை என்றாலும், உங்களின் பணி வேறு ஒருவரால்செய்யப்படும் என்பதை மனதில்வைத்துக்கொள்ளுங்கள்.
-
'உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதன்படி யார் எந்த உதவி கோரினாலும், கூடுதல் பணியைக் கொடுத்தாலும், அது நம் கடமையாக இல்லாதபோதும், மரியாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்காதீர்கள். அந்த வேலையை உரிய நேரத்தில்செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந்தால், 'மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை’ என்று சொல்லுங்கள்.
பணியில் இருக்கும்போது,கூடுமானவரை அடிக்கடி டீ, காபி குடிப்பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னும்பதட்டப் பேர்வழியாக மாற்றுவதோடு, உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.
-
அடுத்தவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிலருக்கு அலாதியான சந்தோஷம். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். இதனால், நாம்செய்யவேண்டிய வேலைகள் மீது கவனம் திரும்பும். மனம் லேசாகும். தங்களுடைய திறமைக்குறைவினால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையின் விளைவாகச் சிலர் வேண்டும் என்றே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து விலகி இருப்பது நல்லது.
-
உற்சாகமாக உழைக்கலாம்!
ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பு உணர்வுடன், கூர்மையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் ஒருவித த்ரில் நம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லேஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மனநிலைக்கு நம்மை மாற்றும்.
-
சக மனிதர்களுடன் அன்புடன் பழகுங்கள். இதனால்,மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்துத் தீயகுணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக, பொழுதுபோக்காகச் செய்யுங்கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலைகள்கூட எளிதாக மாறும். வேலை செய்யும் சோர்வே இருக்காது.
சிலர் இயல்பிலேயே சின்னவிஷயத்துக்கும் அதிகமாகப் பதட்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள், தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பதட்டம் குறைந்து, எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற முடியும்.
'எதிலும் மீண்டு வருவோம்’ என்று எவ்வளவுக்குஎவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கி றோமோ, அந்த அளவுக்கு மன அழுத்தம் குறையும்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 11:22 am

வேலையில் வெற்றி காணலாம்!
-
சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனப் போட்டியிடுவது நல்ல விஷயம்தான். இதற்கு ஒரே வழி,நாம் நம் தகுதியை வளர்த்துக்கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதும், அவர்களை மட்டம்தட்டும் விதத்திலும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.
எந்தக் காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப்போடாதீர்கள். அந்த வேலை பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக முடித்துக் கொடுங்கள். 'ஐயோ... இந்த வேலை செய்யவே எனக்கு பிடிக்கலை...’என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்துகொள்ளும்.
-
மன அழுத்தத்தைக் குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால், நிலைதடுமாறுதல், தரம் தாழ்ந்துபோதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.
மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். 'நான் இப்படித்தான் இருப்பேன்...’ என்று வறட்டுப்பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.
-
குறுகிய வழிகளை யோசிக்கக் கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால், 'நம்மால் வாங்க முடியவில்லையே’ என்று வருத்தப்படலாம். ஆனால், 'வேறு ஒருவர் வாங்கிவிட்டார், அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது’ என்கிற ரீதியில் யோசிக்கக் கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
-
நன்றி-தேடிப்பார்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக