புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...
தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350
கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்
கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:
ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)
உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000
உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)
கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)
ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650
வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150
ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500
ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375
லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100
தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.
ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.
எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.
இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).
இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.
இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?
இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.
குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html
http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg
அன்புடன்,
அகல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நண்பர்களே.
அவசியமான வேலை செய்யும் அனைவரும் உயர்ந்தவர்களே, இதில் விவசாயி விதிவிலக்கல்ல.
விவசாயம் எண்ணை வளமில்லாத ஜப்பான் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது, ஆனாலும் உயர்ந்த நிலையில் இருக்கிறது.
புள்ளி விவரங்களின் படி விவசாயி வறுமை நிலையில் இருப்பது எப்படி உண்மையோ, அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை. இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான். இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
இங்கு விவசாயத்துக்கு எதிராகவும், விவசாயிக்கு எதிராகவும் வாதங்களை வைப்பது என் நோக்கமல்ல. விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே.
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது. காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை, வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம். இத்தொழிலிலும் வரவை எதிர்பார்த்து தான் காலை வைக்கின்றனர், ஆனால் இன்றைய சூழலில் இது குதிரைக் கொம்பாக இருப்பதால் தங்களுக்குத் தெரிந்ததை தொடர்கின்றனர்.
அவசியமான வேலை செய்யும் அனைவரும் உயர்ந்தவர்களே, இதில் விவசாயி விதிவிலக்கல்ல.
விவசாயம் எண்ணை வளமில்லாத ஜப்பான் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது, ஆனாலும் உயர்ந்த நிலையில் இருக்கிறது.
புள்ளி விவரங்களின் படி விவசாயி வறுமை நிலையில் இருப்பது எப்படி உண்மையோ, அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை. இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான். இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
இங்கு விவசாயத்துக்கு எதிராகவும், விவசாயிக்கு எதிராகவும் வாதங்களை வைப்பது என் நோக்கமல்ல. விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே.
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது. காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை, வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம். இத்தொழிலிலும் வரவை எதிர்பார்த்து தான் காலை வைக்கின்றனர், ஆனால் இன்றைய சூழலில் இது குதிரைக் கொம்பாக இருப்பதால் தங்களுக்குத் தெரிந்ததை தொடர்கின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே
எந்த விதத்திலும் விவசாயி உயர்ந்தவன் என எண்ணியது இல்லை அப்படி எண்ணுபவன் விவசாயியும் இல்லை நண்பரே , அவர் தன்னலம் கருதாது உழைக்கிறார் என்பது மட்டும் என் கருத்தும் இல்லை விவசாயி உழைப்பில் பிறர் நலம் உள்ளதால் தான் உழைக்கிறார் ..என்று சொல்கிறேன் அவருக்கு என்ன என்று சோளம் அல்லது வேறு எதாவது பணபயிர்களை விதைக்கலாம் ஆனாலும் எந்த நிலையிலும் அவர் நெல்லை விததித்து கஷ்ட படவேண்டிய அவசியம் என்ன இதான் பிறர்நலம் ...
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது. காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை, வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம். இத்தொழிலிலும் வரவை எதிர்பார்த்து தான் காலை வைக்கின்றனர், ஆனால் இன்றைய சூழலில் இது குதிரைக் கொம்பாக இருப்பதால் தங்களுக்குத் தெரிந்ததை தொட்ர்கின்றனர்.
வரவை எதிர்பார்த்து என்பது ஏற்று கொள்ளமுடியாத கருத்து , வரவு என்றால் எத்தனையோ பயிர்களை விவசாயம் செய்யலாம் எதற்கு நஷ்டம் தரும் நெல் , கரும்பு ,
பயறுவகைகள் விதைத்து கஷ்டபடனும் , வருட வெள்ளாமை எத்தனையோ இருக்கு அதை பயிரடலாம் ....
கொஞ்சம் எண்ணி பாருங்கள் புரியும் வருட வெள்ளாமை தென்னை , மா , கொய்யா இப்படி நிறைய உள்ளன இவைகளுக்கு செலவும் குறைவு , வரவும் அதிகம் ....
அவசியமான வேலை செய்யும் அனைவரும் உயர்ந்தவர்களே, இதில் விவசாயி விதிவிலக்கல்ல.
இதை யாரும் மறுக்கவில்லை. இருந்தாலும் விவசாயியை ஒரு படி மேலே பார்பதற்கு காரணம் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை இவற்றைப் பூர்த்தி செய்பவன் அவன் தான். மற்ற துறையில் இருப்போர் வேலை செய்வதை நிறுத்தினால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டுமே பாதிப்பு. ஆனால் விவசாயி நிறுத்தினால் யாரும் உயிர்வாழவே இயலாது !
இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான். இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
இதை நீங்கள் பொதுப்படையாக்க முடியாது. நான் விவரம் அறிந்த நாள் முதல் எந்த காடும் எங்கள் ஊரிலோ பக்கத்து கிராமத்திலோ அழிக்கப் படவில்லை.
அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை.
இன்று அந்த விவசாய நிலத்தையும் அழித்து வீடு கட்டுகிறார்களே அதையும் கேளுங்கள். வீடு கட்டாமல் காட்டுகுள்ளாவகே இருக்கலாம் அல்லவா ? காடு அழிவதைப் பற்றி அக்கறை கொள்ளும் நாம் இதையும் கருத்தில் கொள்ளலாமே !
விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே.
வெளியுலகுக்கு எப்படியோ தெரியவில்லை விவசாயம் செய்வோருக்கு கண்டிப்பாக தெரியும் இதற்கான பதில். மேலும் விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவனாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எந்த விவசாயிக்கும் இல்லை. மாறாக மற்றவர்களை விட தாழ்ந்தவனாக பார்க்காதீர்கள் என்பதே இன்றைய நிலை.
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது.
அரசு மின்சாரம் கொடுக்காமல் காய்ந்து போனவன் நஷ்ட ஈடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு அரசு மக்களுக்கு தரவேண்டிய மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருளை தந்தால் எதற்காக போராடப் போகிறான் விவாசாயி. இது அவனுக்கு ஒன்றும் வேலையல்லவே. இதுவரை விவசாயத்தினால் நஷ்ட ஈடு என்ற பெயரில் ஒரு ரூபாய் கூட நாங்கள் வாங்கியதில்லை. இதுபோல் மின்சாரம் இல்லாமல் கருகிப்போன லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்களுக்கு யார் பதில் சொல்வார் ?
காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை,
இதில் சிலவற்றை ஒப்புக்கொள்கிறேன்.
வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம்.
எந்த அடிபடையில் பொதுப்படையாக இப்படி ஒரு குற்றச் சாட்டை விவசாயிகள் மீது வைகிறீர்கள் என்று தெரியவில்லை. மன்னிக்கவும் நண்பரே இதற்கு எனது கண்டனத்தைத் பதிவு செய்கிறேன்.
அதிரடியான சில அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை பொதுப்படையாக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
இதை யாரும் மறுக்கவில்லை. இருந்தாலும் விவசாயியை ஒரு படி மேலே பார்பதற்கு காரணம் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை இவற்றைப் பூர்த்தி செய்பவன் அவன் தான். மற்ற துறையில் இருப்போர் வேலை செய்வதை நிறுத்தினால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டுமே பாதிப்பு. ஆனால் விவசாயி நிறுத்தினால் யாரும் உயிர்வாழவே இயலாது !
இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான். இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
இதை நீங்கள் பொதுப்படையாக்க முடியாது. நான் விவரம் அறிந்த நாள் முதல் எந்த காடும் எங்கள் ஊரிலோ பக்கத்து கிராமத்திலோ அழிக்கப் படவில்லை.
அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை.
இன்று அந்த விவசாய நிலத்தையும் அழித்து வீடு கட்டுகிறார்களே அதையும் கேளுங்கள். வீடு கட்டாமல் காட்டுகுள்ளாவகே இருக்கலாம் அல்லவா ? காடு அழிவதைப் பற்றி அக்கறை கொள்ளும் நாம் இதையும் கருத்தில் கொள்ளலாமே !
விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே.
வெளியுலகுக்கு எப்படியோ தெரியவில்லை விவசாயம் செய்வோருக்கு கண்டிப்பாக தெரியும் இதற்கான பதில். மேலும் விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவனாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எந்த விவசாயிக்கும் இல்லை. மாறாக மற்றவர்களை விட தாழ்ந்தவனாக பார்க்காதீர்கள் என்பதே இன்றைய நிலை.
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது.
அரசு மின்சாரம் கொடுக்காமல் காய்ந்து போனவன் நஷ்ட ஈடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு அரசு மக்களுக்கு தரவேண்டிய மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருளை தந்தால் எதற்காக போராடப் போகிறான் விவாசாயி. இது அவனுக்கு ஒன்றும் வேலையல்லவே. இதுவரை விவசாயத்தினால் நஷ்ட ஈடு என்ற பெயரில் ஒரு ரூபாய் கூட நாங்கள் வாங்கியதில்லை. இதுபோல் மின்சாரம் இல்லாமல் கருகிப்போன லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்களுக்கு யார் பதில் சொல்வார் ?
காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை,
இதில் சிலவற்றை ஒப்புக்கொள்கிறேன்.
வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம்.
எந்த அடிபடையில் பொதுப்படையாக இப்படி ஒரு குற்றச் சாட்டை விவசாயிகள் மீது வைகிறீர்கள் என்று தெரியவில்லை. மன்னிக்கவும் நண்பரே இதற்கு எனது கண்டனத்தைத் பதிவு செய்கிறேன்.
அதிரடியான சில அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை பொதுப்படையாக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அது ஒரு சில சதவீதமே, இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ள தானே கொடுக்கிறோம், இதில் உள் /வெளி நோக்கங்கள் இல்லவே இல்லை என்பதை எப்படி நம்புவது.
லாபம் பகிர்ந்து கொடுத்தால் இருப்பவரை தக்க வைத்து கொள்ள ( வெளிநோக்கம் ) என கூறுகிறீர்கள் ,
லாபம் இல்லை என கூறினால் உள்நோக்கம் என கூறுகிறீர்கள் ...
இதில் எதை தான் நோக்கனும் முதலில் சொல்லுங்கள் நண்பரே ...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இப்போது நாம் இருக்கும் இடம் கூட ஒருகாலத்தில் காடு தான் நண்பரே, பழைய சென்னை படங்களை பாருங்கள் தெரியும் உண்மை என்னவென்று,இங்கு என்ன உழவா நடக்கிறது.இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான்.
தெரிந்து பேசுகிறீர்களா இல்லையா என தெரியவில்லை, காடுகளை அழிக்காமல் விவசாயம் செய்யா முடியாது என சொல்கிறீர்களா, இருக்கிற நிலங்கள் போதும் விவசாயம் செய்ய. விவசாய நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குவது நம் போன்ற படித்தவர்கள் தான்.அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை
வீடு கட்ட வரட்சியான இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கி கட்ட வேண்டியது தானே. விவசாய நிலம் என்றால் எளிதில் தண்ணீர் கிடைக்கும், மற்ற நிலங்களை போல அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை அல்லவா.
சிறு உதாரணம் நான் கல்லூரியில் படித்த பொது மதுரவயல் அருகே ஏராளமான வயல்கள் தான் இப்போது பார்த்தல் எல்லாம் கட்டிடங்கள். ஏன் பூந்தமல்லி அடுத்து வெளியே ஏராளமான காலி நிலங்கள் இருந்தன. வயல்களை விடுத்து அங்கு கட்டிருக்கலாமே.
என் நண்பனிடம் கேட்டேன் ஏன் உழவை நிறுத்திவிட்டீர்கள் என்று,
விவசாயம் செய்ய பாதுகாப்பில்லை, நஷ்டம் வருகிறது. நிறுத்திவிட்டோம் என.
மேலும் முதலில் அவர்களையும் மனிதர்களாக பாருங்கள், உண்மையில் அவர்களை யாரும் சக மனிதராக பார்ப்பதில்லை, நானே நேரில் பார்த்திருக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பூவன் wrote:விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே
எந்த விதத்திலும் விவசாயி உயர்ந்தவன் என எண்ணியது இல்லை அப்படி எண்ணுபவன் விவசாயியும் இல்லை நண்பரே , அவர் தன்னலம் கருதாது உழைக்கிறார் என்பது மட்டும் என் கருத்தும் இல்லை விவசாயி உழைப்பில் பிறர் நலம் உள்ளதால் தான் உழைக்கிறார் ..என்று சொல்கிறேன் அவருக்கு என்ன என்று சோளம் அல்லது வேறு எதாவது பணபயிர்களை விதைக்கலாம் ஆனாலும் எந்த நிலையிலும் அவர் நெல்லை விததித்து கஷ்ட படவேண்டிய அவசியம் என்ன இதான் பிறர்நலம் ...விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது. காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை, வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம். இத்தொழிலிலும் வரவை எதிர்பார்த்து தான் காலை வைக்கின்றனர், ஆனால் இன்றைய சூழலில் இது குதிரைக் கொம்பாக இருப்பதால் தங்களுக்குத் தெரிந்ததை தொட்ர்கின்றனர்.
வரவை எதிர்பார்த்து என்பது ஏற்று கொள்ளமுடியாத கருத்து , வரவு என்றால் எத்தனையோ பயிர்களை விவசாயம் செய்யலாம் எதற்கு நஷ்டம் தரும் நெல் , கரும்பு ,
பயறுவகைகள் விதைத்து கஷ்டபடனும் , வருட வெள்ளாமை எத்தனையோ இருக்கு அதை பயிரடலாம் ....
கொஞ்சம் எண்ணி பாருங்கள் புரியும் வருட வெள்ளாமை தென்னை , மா , கொய்யா இப்படி நிறைய உள்ளன இவைகளுக்கு செலவும் குறைவு , வரவும் அதிகம் ....
நண்பரே நெல்லும் கரும்பும் விலை நிர்ணய உறுதி உள்ள பயிர்கள், இந்த மகசூல் இல்லையென்றாலும் அடுத்த மகசூலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் உண்டு. தென்னை, மா போன்றவைகள் ஒரு சில வருடம் முதல் 5 வருடம் வரை காத்திருக்க வேண்டும். காய்கறிப் பயிர்களின் விலை ஒவ்வொரு வருடமும் மாறி இருக்கிறது. இதை விளைப்பவர் கடவுளை நம்பித் தான் விளைக்கிறார். நெல், கரும்பை விட இதில் இடைத் தரகர்களும், விலை வீழ்ச்சி வாய்ப்பும் அதிகம். மக்காசோளம் நிலை சொல்ல இயலாது, கிலோ 5 ரூபாய் விற்ற கதையும் உண்டு...கரும்பு நடவு முதல் கொள்முதல் வரை உறுதி செய்யப்படுகிறது. ....இதனால் நெல்லையும் கரும்பையும் விளைக்கின்றனர். வாழையின் வரவு செலவு பல சறுக்கல்களை உடையதால் பல விவசாயிகள் அதில் இறங்குவதில்லை.
மேலும் விளைத்து ஒரு சில மாதங்களில் பணம் பார்க்கும் பயிர்களில் நெல் முக்கியமானது. இதனால் தான் ஆடியில் விதைத்து தையில் அறுவடை செய்யும் மரபு வழிப் பயிர் போய் , 90, 60 நாள் பயிர் வகைகள் விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்ல கரும்பு கொள்முதல் பக்கத்தில் உள்ள ஆலைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது.....நெல் மாநில எல்லைகளை கடப்பதில் பல வழிமுறை சிக்கல்கள் உள்ளது. ஆததால் அந்த அந்த மாநிலத்தில் விளையும் நெல் அந்த மாநிலத்தில் விலை போகும் உறுதி உள்ளது...இதை வாங்கி வியாபாரிகள் லாபம் பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும்,,,,நெல் விளைந்தால் லாபம் தரும் பயிர் தான் என்பதை எந்த விவசாயியும் மறுக்க இயலாது....விளையாமல் போவது காலத்தின் கோலம்,,நீர் வரத்தை பெருக்குவதற்கு நாம் ஒன்றும் செய்ய முயுலுவதில்லை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சதாசிவம் wrote:undefinedஅகல் wrote:அவசியமான வேலை செய்யும் அனைவரும் உயர்ந்தவர்களே, இதில் விவசாயி விதிவிலக்கல்ல.
இதை யாரும் மறுக்கவில்லை. இருந்தாலும் விவசாயியை ஒரு படி மேலே பார்பதற்கு காரணம் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை இவற்றைப் பூர்த்தி செய்பவன் அவன் தான். மற்ற துறையில் இருப்போர் வேலை செய்வதை நிறுத்தினால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டுமே பாதிப்பு. ஆனால் விவசாயி நிறுத்தினால் யாரும் உயிர்வாழவே இயலாது !
விவசாயம் தோன்றுவதற்கு முன்னரே மனித குலம் தோன்றி பல் நூறு ஆண்டுகள் உருண்டோடியது என்று மானுடவியல் கூறுகிறது..அவசியமானத் துறைகள் அனைத்தும் அவசியமே....இது போன்ற துறைகள் மனிதனின் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது, உணவை மட்டுமல்ல...
இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான். இந்தியாவின் இன்றைய விவசாய சூழலுக்கு காரணம் பல.
இதை நீங்கள் பொதுப்படையாக்க முடியாது. நான் விவரம் அறிந்த நாள் முதல் எந்த காடும் எங்கள் ஊரிலோ பக்கத்து கிராமத்திலோ அழிக்கப் படவில்லை.
அய்யா அது உங்கள் ஊரில்,, உங்களில் மூத்தவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்..நான் பார்த்து அழிந்த காடுகளில் செங்கோட்டை முதல் பாலருவி உள்ள நிலங்களை சென்று பாருங்கள் கேரளா பார்டர் வந்தவுடன் ரிமோட் கண்ட்ரோலில் சேனல் மாறுவது போல் சமதளம் காடாக இருக்கும்...தமிழக எல்லைகள் மரங்கள் வெட்டப்பட்டு , வயல்களாகி, இப்போது நடு கற்களை நட்ட வியாபார நிலமாக உள்ளது....ஊட்டியில் காடுகள் டீ எஸ்டேட்டாக மாறியுள்ளது...
அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை.
இன்று அந்த விவசாய நிலத்தையும் அழித்து வீடு கட்டுகிறார்களே அதையும் கேளுங்கள். வீடு கட்டாமல் காட்டுகுள்ளாவகே இருக்கலாம் அல்லவா ? காடு அழிவதைப் பற்றி அக்கறை கொள்ளும் நாம் இதையும் கருத்தில் கொள்ளலாமே !
கண்டிப்பாக விவசாயம் அழிந்து விடக்கூடாது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. விவசாயம் மேம்பட என்ன செய்ய வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும்....நாங்கள் நஷ்டம் வந்தாலும் அடுத்தவருக்காகத் தான் விளைவிக்கிறோம் என்ற வாதம் தான் விதண்டாவாதமாக உள்ளது.
விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவர், நஷ்டப்பட்டாலும் அடுத்தவருக்காகவே தன்னலம் கருதாது உழைக்கிறார், அவர் மேலானவர் என்ற நிலைப்பாடு சரியா என்பது மட்டுமே.
வெளியுலகுக்கு எப்படியோ தெரியவில்லை விவசாயம் செய்வோருக்கு கண்டிப்பாக தெரியும் இதற்கான பதில். மேலும் விவசாயி மற்றவர்களை விட உயர்ந்தவனாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எந்த விவசாயிக்கும் இல்லை. மாறாக மற்றவர்களை விட தாழ்ந்தவனாக பார்க்காதீர்கள் என்பதே இன்றைய நிலை.
விவசாயப் போராட்டங்கள் கடன் தள்ளுபடி, நஷ்ட ஈடு நோக்கித் தான் உள்ளது.
அரசு மின்சாரம் கொடுக்காமல் காய்ந்து போனவன் நஷ்ட ஈடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு அரசு மக்களுக்கு தரவேண்டிய மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருளை தந்தால் எதற்காக போராடப் போகிறான் விவாசாயி. இது அவனுக்கு ஒன்றும் வேலையல்லவே. இதுவரை விவசாயத்தினால் நஷ்ட ஈடு என்ற பெயரில் ஒரு ரூபாய் கூட நாங்கள் வாங்கியதில்லை. இதுபோல் மின்சாரம் இல்லாமல் கருகிப்போன லட்சக்கணக்கான விவசாயிகளின் பயிர்களுக்கு யார் பதில் சொல்வார் ?
இந்த நிலைக்கு விவசாயிகளின் பங்கும் இருக்கிறது....தேவைகள் அனைத்து தரப்பிலும் கூடுகிறது. நாட்டில் உள்ள ஊழல்களில் பாதிக்கப்படும் பலரில் விவசாயியும் ஒருவர், அவர் மட்டும் அல்ல.
காடுகளை வளமாக்குங்கள், மழையை பெருக்குங்கள், ஏரியை தூர் வாருங்கள், நீர வளத்தை பெருக்குங்கள் என்ற கோஷங்கள் இல்லை. அது மட்டுமல்லாது, இன்றைக்கு லாபமான முறையில் விவசாயம் செய்து பலன் பார்க்கும் விவசாயிகள் இருக்கத்தான் செய்கின்றனர். விவசாயிகளின் இன்றைய நிலைக்கு புதிய முயற்சிகளைச் செய்யாமை, நீண்ட காலத் திட்டமின்மை,
இதில் சிலவற்றை ஒப்புக்கொள்கிறேன்.
வருவாய்க்கு மிஞ்சிய செலவீனம், வரட்டு கௌரவம், ஒற்றுமையின்மை ஆகியவையும் காரணம்.
எந்த அடிபடையில் பொதுப்படையாக இப்படி ஒரு குற்றச் சாட்டை விவசாயிகள் மீது வைகிறீர்கள் என்று தெரியவில்லை. மன்னிக்கவும் நண்பரே இதற்கு எனது கண்டனத்தைத் பதிவு செய்கிறேன்.
அதிரடியான சில அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை பொதுப்படையாக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
நண்பரே, உங்கள் கண்டனத்தை ஏற்கிறேன்....இந்தியாவில் விவசாயிகள் கூட்டாக பயிர் செய்வதில்லை....ஒவ்வொருவரும் அவர்களின் நிலங்களில் தான் தனியாக விவசாயம் செய்ய முயலுகின்றனர்...வளர்ந்த நாடுகளில் இந்நிலை வேறு...லாபம் பொய்த்துப் போகும் என்ற நிலையிலும் கடன் மேல் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்...இது இயல்பில் இருக்கும் நிலைதானே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பரே உங்களுக்கு தெரியாத ஒரு வருடத்தில் காய்க்கும் தென்னைகள் உள்ளன அதிக மகசூல் கிடைக்கும் , அதுமில்லாமல் மக்கா சோளம் அதிக மகசூல் கொண்ட ஒன்று அதுவும் தெரியாதநண்பரே நெல்லும் கரும்பும் விலை நிர்ணய உறுதி உள்ள பயிர்கள், இந்த மகசூல் இல்லையென்றாலும் அடுத்த மகசூலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் உண்டு. தென்னை, மா போன்றவைகள் ஒரு சில வருடம் முதல் 5 வருடம் வரை காத்திருக்க வேண்டும். காய்கறிப் பயிர்களின் விலை ஒவ்வொரு வருடமும் மாறி இருக்கிறது.தை விளைப்பவர் கடவுளை நம்பித் தான் விளைக்கிறார். நெல், கரும்பை விட இதில் இடைத் தரகர்களும், விலை வீழ்ச்சி வாய்ப்பும் அதிகம். மக்காசோளம் நிலை சொல்ல இயலாது, கிலோ 5 ரூபாய் விற்ற கதையும் உண்டு...கரும்பு நடவு முதல் கொள்முதல் வரை உறுதி செய்யப்படுகிறது. ....இதனால் நெல்லையும் கரும்பையும் விளைக்கின்றனர். வாழையின் வரவு செலவு பல சறுக்கல்களை உடையதால் பல விவசாயிகள் அதில் இறங்குவதில்லை.
கோழி தீவனத்தில் கலக்கப்படும் மூலபொருள் இது அதனால் அதிக வருவாயும் கூட ,வாழை கூட ஆடி மாதம் தவிர அடி முதல் இலை வரை உதவும் ஒரு விவசாயம் , நெல் ,கரும்பு அப்படி இல்லை நெல் ஒருமுறை கதிர் சாய்ந்தால் வைக்கோல் கூட உதவாது இருந்த போதும் தான் மனம் தளராது வழிவழியாக தன் குடும்பம் விளைவித்த ஒன்றை விடாமல் விவசாயி விதைக்கிறான் ....
மேலும் விளைத்து ஒரு சில மாதங்களில் பணம் பார்க்கும் பயிர்களில் நெல் முக்கியமானது. இதனால் தான் ஆடியில் விதைத்து தையில் அறுவடை செய்யும் மரபு வழிப் பயிர் போய் , 90, 60 நாள் பயிர் வகைகள் விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்ல கரும்பு கொள்முதல் பக்கத்தில் உள்ள ஆலைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது.....நெல் மாநில எல்லைகளை கடப்பதில் பல வழிமுறை சிக்கல்கள் உள்ளது. ஆததால் அந்த அந்த மாநிலத்தில் விளையும் நெல் அந்த மாநிலத்தில் விலை போகும் உறுதி உள்ளது...இதை வாங்கி வியாபாரிகள் லாபம் பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும்,,,,நெல் விளைந்தால் லாபம் தரும் பயிர் தான் என்பதை எந்த விவசாயியும் மறுக்க இயலாது....விளையாமல் போவது காலத்தின் கோலம்,,நீர் வரத்தை பெருக்குவதற்கு நாம் ஒன்றும் செய்ய முயுலுவதில்லை....
நீங்கள் சொல்கிறீர்களே இந்த கூட்டுறவு ஆலையை பற்றி தெரியுமா ?
உங்களுக்கு இந்த வருடம் கரும்பு வெட்ட போனவருடமே பதிந்து வைக்கணும் , அடுத்த வருடம் கரும்பு தொகை வரும் ....
இதை விட தனியார் ஆலைகள் எவளவோ இருந்த போதிலும் விவசாயி அதை நாடி போவதில்லை ...
நெல் பற்றி சொன்னீர்களே யார் சொன்னது வெளிமாநிலம் போகவில்லை என்று எவளவோ தனியார் ஆலைகள் போட்டி போட்டு விலை கொடுத்து அள்ளி செல்கின்றன , அது மட்டுமின்றி சில நிறுவனங்கள் அவர்களாகவே நெல்லையும் தந்து அவர்களே ஏற்றுமதியும் செய்கின்றன ..
உங்களுக்கு தெரியாத அந்த நிறுவனத்தை பற்றி ....
இப்படி தொடர்ந்து கொண்டே செல்லலாம் ...எந்த விவசாயியும் லாப நோக்கோடு விவசாயம் புரிவதில்லை இது முற்றிலும் உண்மையே ....
அப்படி வாழ நினைத்து இருந்தால் இன்று அவர்கள் வளர்ந்து வேறு துறையை நாடி சென்று இருக்க கூடும் , இன்னும் சேற்றிலே இருக்க தேவை இல்லை ....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
chinnavan wrote:இப்போது நாம் இருக்கும் இடம் கூட ஒருகாலத்தில் காடு தான் நண்பரே, பழைய சென்னை படங்களை பாருங்கள் தெரியும் உண்மை என்னவென்று,இங்கு என்ன உழவா நடக்கிறது.இன்றைக்கு யானை மிரட்டுகிறது, எருமை தின்னுகிறது என்று நாம் புலம்பும் வயற்பரப்புகள் அனைத்தும் உண்மையில் அவைகளுக்கு சொந்தமான காடுகளை அழித்து செய்த நிலப் பரப்புகள் தான்.தெரிந்து பேசுகிறீர்களா இல்லையா என தெரியவில்லை, காடுகளை அழிக்காமல் விவசாயம் செய்யா முடியாது என சொல்கிறீர்களா, இருக்கிற நிலங்கள் போதும் விவசாயம் செய்ய. விவசாய நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குவது நம் போன்ற படித்தவர்கள் தான்.அது போல் காட்டுருகே உள்ள மரங்களை அழித்து விவசாயம் வளர்ந்ததும் உண்மை
வீடு கட்ட வரட்சியான இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கி கட்ட வேண்டியது தானே. விவசாய நிலம் என்றால் எளிதில் தண்ணீர் கிடைக்கும், மற்ற நிலங்களை போல அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை அல்லவா.
சிறு உதாரணம் நான் கல்லூரியில் படித்த பொது மதுரவயல் அருகே ஏராளமான வயல்கள் தான் இப்போது பார்த்தல் எல்லாம் கட்டிடங்கள். ஏன் பூந்தமல்லி அடுத்து வெளியே ஏராளமான காலி நிலங்கள் இருந்தன. வயல்களை விடுத்து அங்கு கட்டிருக்கலாமே.
என் நண்பனிடம் கேட்டேன் ஏன் உழவை நிறுத்திவிட்டீர்கள் என்று,
விவசாயம் செய்ய பாதுகாப்பில்லை, நஷ்டம் வருகிறது. நிறுத்திவிட்டோம் என.
மேலும் முதலில் அவர்களையும் மனிதர்களாக பாருங்கள், உண்மையில் அவர்களை யாரும் சக மனிதராக பார்ப்பதில்லை, நானே நேரில் பார்த்திருக்கிறேன்
விளைநிலங்கள் விலைபோவதில் எனக்கும் உடன்பாடில்லை..நன்கு வருவாய் தரும் நிலங்களும் பிற மாநிலங்களில் நகரம் விரிவாகும் பொழுது சுருங்குகிறது பெங்களூரை சுற்றி இருந்த விவசாய நிலங்களுக்கும் இந்த கதி தான். இது அனைத்து நாடுகளிலும் நடைபெறுகிறது...விவசாயிகள் காலத்தின் வேகத்தை உணர வேண்டும். அவர்களை மனிதர்களாகத் தான் பார்க்கிறோம்..பிழைக்கத் தெரியாத நிலையில் பொய்த்துப் போகும் போது கட்டிய மனைவியும் மதிக்க மாட்டாள். இதை நாம் உணர வேண்டும். நீர் வரத்து, மாற்று வழி பாசனம், நவீன உக்திகள், இயந்திரமாக்கல், இயற்கை விவசாயம் கடைபிடிக்க வேண்டும்...குறு சிறு விவசாயிகளாக இல்லாமல் குழுக்களாக செயல்படும் விவசாய முறை வளர வேண்டும்...இன்று உலகமயமாக்களில் சிறு குறு வணிகர்கள் பாதிக்கபடுவதை நம்மால் ஏற்க இயலவில்லை, ஆனால் இந்த வணிகக் கூட்டம் தான் விவசாயிகளை பல்லாண்டுகளாக சுரண்டுகிறது....என்பதை நாம் உணரவே இல்லை..
பெட்ரோலை பெட்ரோல் நிறுவனம் விலை நிர்ணயம் செய்வதைப் போல் விவசாய விலை பொருள்களை விவசாயிகள் நிர்ணயம் செய்ய வேண்டும்...இதற்கு ஒற்றுமையும், உலகச் சந்தைமயமாக்கலும் கைப்பட வேண்டும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விளைநிலங்கள் விலைபோவதில் எனக்கும் உடன்பாடில்லை..நன்கு வருவாய் தரும் நிலங்களும் பிற மாநிலங்களில் நகரம் விரிவாகும் பொழுது சுருங்குகிறது பெங்களூரை சுற்றி இருந்த விவசாய நிலங்களுக்கும் இந்த கதி தான். இது அனைத்து நாடுகளிலும் நடைபெறுகிறது...விவசாயிகள் காலத்தின் வேகத்தை உணர வேண்டும். அவர்களை மனிதர்களாகத் தான் பார்க்கிறோம்..பிழைக்கத் தெரியாத நிலையில் பொய்த்துப் போகும் போது கட்டிய மனைவியும் மதிக்க மாட்டாள். இதை நாம் உணர வேண்டும். நீர் வரத்து, மாற்று வழி பாசனம், நவீன உக்திகள், இயந்திரமாக்கல், இயற்கை விவசாயம் கடைபிடிக்க வேண்டும்...குறு சிறு விவசாயிகளாக இல்லாமல் குழுக்களாக செயல்படும் விவசாய முறை வளர வேண்டும்...இன்று உலகமயமாக்களில் சிறு குறு வணிகர்கள் பாதிக்கபடுவதை நம்மால் ஏற்க இயலவில்லை, ஆனால் இந்த வணிகக் கூட்டம் தான் விவசாயிகளை பல்லாண்டுகளாக சுரண்டுகிறது....என்பதை நாம் உணரவே இல்லை..
நண்பரே ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை நீங்கள் கூறுவது நேற்று விவசாயி உள்நோக்கம் கொண்டு விவசாயம் செய்கிறார் என்று சொன்னீர்கள் . அப்புறம் லாப நோக்கோடு செய்கிறார் என்று சொன்னீர்கள் , இப்போதோ விவசாயி அறியா நிலையில் தான் உள்ளார் என நீங்களாகவே ஒப்பு கொண்டீர் ....
விவசாயி இன்னும் சேவை என்ற ஒன்றை மனதில் கொண்டு தான் விவசாயம் புரிகிறார் என்பதற்கு உங்கள் வரிகளே சான்று மிக்க நன்றி .....
பெட்ரோலை பெட்ரோல் நிறுவனம் விலை நிர்ணயம் செய்வதைப் போல் விவசாய விலை பொருள்களை விவசாயிகள் நிர்ணயம் செய்ய வேண்டும்...இதற்கு ஒற்றுமையும், உலகச் சந்தைமயமாக்கலும் கைப்பட வேண்டும்...
இவ்வாறெல்லாம் எண்ணி விவசாயம் செய்து இருந்தால் நேற்று நீங்கள் கூறிய விவசாயி ஆகி இருப்பார் இப்படிஎல்லாம் இல்லாமல் இருப்பதால் தான் விவசாயி சேவை செய்கிறார்
தன் உழைப்பை மட்டும் தந்து உணவளிக்கிறார் , உன்னதம் தரும் உண்மை மனிதர்களாக .....
இன்றும் உழைப்பை மட்டும் தந்து விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார் ...
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10