புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
366 Posts - 49%
heezulia
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
25 Posts - 3%
prajai
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_m10சமச்சீர் வளர்ச்சி எங்கே... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் வளர்ச்சி எங்கே...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 10:15 am

நம் நாட்டில் தொடர்ச்சியாக பல ஊழல்கள் பற்றிய செய்திகளும், பின் பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, லோக்பால் என அடுக்கடுக்கான பிரச்னைகளும் போராட்டங்களும் நடந்ததனால்மிக முக்கியமான பிரச்னை ஒன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது எனலாம்.அது நம் நாட்டின் பொருளாதாரவளர்ச்சியின் உண்மையான நிலை என்ன என்பது பற்றிய விவரங்கள்.
இன்றைய இந்தியாவின் முக்கியமான அம்சம், மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. பொருளாதார முன்னேற்றமும், தாராளமயமாக்கல் கொள்கையும்நம் நாட்டில் நடுத்தர மக்களைச் செழிப்பானவர்களாக்கிவிட்டது. அவர்களின் பார்வை எல்லாம் ஜி.டி.பி. எனப்படும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டை நோக்கியே உள்ளது.
ஜி.டி.பி. அதிகமாக இருந்தால் நம் நாடு நன்றாக வளர்ந்து, உலகின் வசதியான ஒரு நாடாக மிளிர்ந்து விடும் என நம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். 2003-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் அமைந்துள்ள "கோல்டுமேன் சேக்ஸ்' எனும் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா, சைனா ஆகிய நான்கு நாடுகளையும் "பிரிக்ஸ்' என கூட்டுப் பெயரிட்டு, இந்நாடுகள் முன்னேற்றப் பாதையில் பயணித்து 2050-இல் உலகின் மிகவும் முன்னேறிய நாடுகளாகிவிடும்என்ற ஒரு கணிப்பை வெளியிட்டது.
அதை அப்படியே நம்பிய நம் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் அன்று முதல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பி.யைத் தங்களது தாரக மந்திரமாகப் பின்பற்றி வளர்ச்சிக் கனவுகளில் மிதக்கின்றனர்.
இந்த நம்பிக்கை எவ்வளவு தவறானது என்பதை அமார்த்ய சென், ஜீன் ட்ரீசே போன்ற தலைசிறந்த பொருளாதார மேதைகள் சுட்டிக்காட்டுகின்றனர்.""உலகின் சரித்திரத்தில் ஒரு பொருளாதாரம் மிக வேகமாகவளர்ந்தாலும் அந்நாட்டின் எல்லா மக்களையும் வளர்ச்சி சென்றடையாது என்பதற்கு சமீபத்திய இந்தியப் பொருளாதார வளர்ச்சியே உதாரணம்'' எனக் கூறுகிறார்கள் இந்த இரு மேதைகளும்.
அதாவது 1980 முதல் கடந்த 32 ஆண்டுகளாக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பி. சராசரி ஆறு சதவிகிதம் வளர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் நமது மனித வளர்ச்சிக் குறியீடு 1980-இல் படுபாதாளத்தில் 134-வது வரிசையிலும், 2011-இல் அதே இடத்திலும் இருந்து வருகிறது.
1980-இல் நம் நாட்டின் 80 சதவிகித மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர்கள் வருமானத்திற்குக்கீழ் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.இன்றைய நிலைமையில் நம் மக்களில் 75 சதவிகிதம் மக்கள் இதே ஏழ்மை நிலைமையில் தொடர்கிறார்கள்எனும் பரிதாபகரமான பொருளாதார உண்மை நமது வளர்ச்சிக் கணிப்பை உறுத்துகிறது.
இதே காலகட்டத்தில் தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளன.
கிராமப்புறங்களில், படிப்பறிவில்லாத ஏழை மக்கள் பலரும் கல்வியிற் சிறந்த நடுத்தர வர்க்கத்தினராக உயர்வுபெற்று செழுமையான வாழ்க்கைத் தரத்தை எட்டியுள்ளார்கள் எனும் கணிப்பு இந்த நான்கு நாடுகளிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆனால், நமது பொருளாதார வளர்ச்சி நமது நாட்டின் எல்லா பகுதிகளையும் எல்லா மக்களையும் சென்றடையவில்லைஎனும் கசப்பான உண்மை வெளியாகியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, சராசரி மனிதனின் வாழும் வயது, பெண்கள் கல்வி, குழந்தைகளின், கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதம், குழந்தைகளின் கல்வி விகிதாசாரம் போன்ற வளர்ச்சிக் குறியீடுகளை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை,பூடான் ஆகிய ஆறு நாடுகளுக்கும் கணக்கெடுக்கப்பட்டதில் 1980-இல் இந்தியா முதலிடத்தில் இருந்தது. ஆனால், இன்றைய நிலைமையில் நம் நாடு ஆறாவது, அதாவது கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளைவிட அதிக அளவில் முன்னேறியிருந்த போதிலும், அந்தப் பொருளாதாரவளர்ச்சி நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் ஊடுருவிச் சென்று ஏழை மக்களையும், பெண்களையும் முன்னேற்றவில்லை என்பது மிகத் தெளிவாகப் புலப்படும் ஓர் உண்மை.
நமது ராணுவ பலத்தால் பாகிஸ்தானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது வங்கதேசம் எனும் ஏழை நாடு. பொருளாதார வளர்ச்சியில் நம்மில் பாதியளவு வளர்ச்சியே அங்கே உண்டு. ஆனால், அந்தக் குறைவான வளர்ச்சியும் அந்நாட்டின் ஏழை மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எல்லோருக்கும் சம அளவில் சென்றடையும் நிலைமை அங்கு நிலவுகிறது. எனவேதான் மேலே கூறப்பட்ட வளர்ச்சிக் குறியீடுகளில் நம்மைவிட வங்காள தேசம் முன்னிலையில் உள்ளது எனலாம்.
சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக வறுமையில் உழன்ற நமது கிராமப்புற மக்களின் போஷாக்கற்ற குழந்தைகள் நம் நாட்டின் மொத்தக் குழந்தைகளில் 44 சதவிகிதம் பேர். உலகிலேயே அதிகமான வறுமை காணப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் குழந்தைகளில் 25 சதவிகிதம் குழந்தைகளே இதுபோல் போஷாக்கற்றவர்களாக இருக்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் நம்மைத் தலைகுனிய வைத்துள்ளது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் குறியீடு அதிகமாக இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லைஎன்பதுதான் உண்மையான நிலைமை!
இதுபோன்ற நிலைமை இருந்தபோதிலும்"கோல்ட்மேன் சேக்ஸ்' போன்ற வெளிநாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு, நம் நாட்டை ஒரு "வளர்ந்து வரும்பொருளாதாரமாக'க் குறிப்பிட்டதில் ஓர் உள்நோக்கம் உண்டு. பொருளாதார வளர்ச்சி, மக்களின் நடுத்தர வர்க்கத்தினரை அடைந்து நிறைய இளைஞர்கள் உயர் கல்விபயில்வார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் பெரும் முதலீடுகளைச் செய்தால் அந்நிறுவனங்களில்பணியாற்ற அவர்களுக்குப் படித்த, திறமையான இளைஞர்கள்தேவைப்படுகிறார்கள்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 10:42 am

அவர்கள் பெறும் சம்பளத்தை நாகரிகமான வாழ்க்கை வசதிகளுக்குச் செலவிடும்போது, நவீன குடியிருப்புகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், டி.வி. கம்ப்யூட்டர், நவீன உணவு விடுதிகள், பெரிய விற்பனைக்கூடங்கள் என மேலை நாட்டு அம்சங்கள் இங்கேயும் உருவாகும். இதுபோன்ற வியாபாரங்களை ஊக்குவித்து பயன் பெறும் நிறுவனமே இந்த "கோல்ட்மேன் சேக்ஸ்'!
எனவே இவர்களின் விளம்பரப்படுத்தப்பட்ட கணிப்பின் உள்நோக்கம் பிற நாட்டு முதலீட்டாளர்களை இங்கே கொண்டு வந்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்பதே!
இந்த விளம்பரத்தில் மயங்கிப் போவது மேல்தட்டு தனவந்தர்களும் நடுத்தட்டு மக்களுமாக இருக்கும்போது, வறுமையில் உழலுவது அடித்தட்டு இந்தியர்களே. இதுபோன்ற விளம்பரத்தில் மயங்கிய வாஜ்பாய் அரசாங்கம் "மிளிரும் இந்தியா' எனும் கோஷத்தை முழங்கியது. பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் இந்த விளம்பரத்தை நம்பி நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக உள்ளது எனப் பேசி வருகிறார்கள்.
இதில் மறைக்கப்பட்ட உண்மைகள் சில. முதலாவதாக, ஜி.டி.பி. எனும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு கூறும் வளர்ச்சி நமது நாட்டின் எல்லா உற்பத்திகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதாகும். அதாவது,பொருளாதாரத்தில் பொருள்கள்மற்றும் சேவைகள் எவ்வளவு உற்பத்தியாகின்றன எனும் அளவு அதனால் ஏற்படும் லாபம்அல்லது பலன் எல்லா மக்களுக்கும் போய்ச் சேருகிறதா என்பதை ஜி.டி.பி. எனும் குறியீடு உணர்த்துவதில்லை.
இரண்டாவதாக, வளர்ச்சியின் பலன் ஒரு நாட்டின் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க தரமான கல்வி, நல்ல சுகாதாரம் மற்றும் அதிக சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஆகியன உருவாக வேண்டும். நமது நாட்டில் தொடக்கப் பள்ளிகளின் கல்வித்தரம் படுபாதாளத்தில் உள்ளது. சுகாதாரத்தில் தரமான மருத்துவமனைகள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உருவாக்கப்படுவது பேச்சளவில் இருக்கிறதேயன்றி எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கிராமப்புறங்களில் தரமான குடிநீர் கிடையாது. கழிவுநீர் அகற்றுதல், குப்பைகளைக் கூட்டி அழிப்பது போன்ற நடவடிக்கைகள் கிடையாது. அதனால் உருவாகும் காலரா, டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் சர்வசாதாரணம் என்ற யதார்த்த நிலை தொடருகிறது.
மூன்றாவதாக, வேலை வாய்ப்பு பெருகுவதிலும் பிற நாடுகளைப்போல் நம் நாட்டில் பலதரப்பட்ட மக்களுக்கும் வேலைகள் கிடைக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி அமையவில்லை. நம்மைப்போன்ற கிராமப்புற ஏழ்மை நிறைந்த நாடுகளாகத் தொடங்கிய கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளில் வளர்ச்சி காரணமாக வேலைவாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் உருவாகின.
இந்தியாவில் உயர் கல்வியிலும், தரமான தொழிற்கல்விகளிலும் வளர்ச்சியடைந்து நிறைய பட்டதாரிகளும், டிப்ளமா படித்தவர்களும் உருவாகி மென்பொருள் துறை, மருந்துகள் தயாரிப்பு, தொழில்களுக்கு முட்டுக்கொடுக்கும் "கால்-சென்டர்கள்' எனும் பின்புறத் தொழில்கள் பலவும் உருவாகின. இவற்றால் அன்னியச் செலாவணியின் வரவு கூடுமே அல்லாமல் நிறைய இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது.
உதாரணமாக, 20 ஆண்டுகளாக வளர்ந்துவிட்ட "ஐ.டி.' எனப்படும் மென்பொருள் துறையில் 90 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் 1 கோடியே 30 லட்சம் பேர் உருவாகிறார்கள்! எனவே, நமது பொருளாதார வளர்ச்சி எல்லா மக்களின் பொருளாதார உயர்வுக்கும் வழிவகுக்கவில்லை என்ற உண்மை உறுதியாகிறது.
இதே நிலைமை இன்னமும் தொடரும் என்றால் மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி உருவாகி நமது அடிப்படை ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும். வழக்கமாக, ஜனநாயகம் உருவாகிபொருளாதார வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினர் பலன் பெற்று வளர்ந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
தங்கள் நாட்டின் ஏழை கிராமப்புற மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற முழக்கத்துடன் பொதுவாழ்வில் ஈடுபட்டு பொருளாதார வளர்ச்சி எல்லா தரப்பினருக்கும் கிடைக்க வழி செய்வார்கள். எனவே, வறுமை ஒழிந்து பரவலான சுபிட்சம் உருவாகும்.
ஆனால், நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார வளர்ச்சியின்முழுப் பலனையும் பெற்று சொகுசான வாழ்க்கையை அனுபவித்து, பின் பொது வாழ்க்கையில் இறங்கி அரசியல் செய்து பதவிகளைப் பிடித்த பின், தாங்களும் மேல்தட்டுவாசிகள்போல கோடிகளைச் சுருட்ட ஆரம்பிக்கிறார்கள். ஊழல்தான் இதற்கான கருவி. எனவே 20 சதவிகித மேல்தட்டும் நடுத்தர வர்க்கமும் ஒருபுறம். 60 சதவிகித கீழ்த்தட்டு மக்கள் மறுபுறம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இதுஇப்படியே தொடர்ந்தால் கீழ்த்தட்டு ஏழை மக்களின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் காலாவதியாகி வன்முறை வெடிக்கும். விளைவுகள் வேறுவிதமாகப் போகும்.
இது தவிர்க்கப்பட்டு ஜனநாயகம் தழைத்து, நேர்மை உருவாகி எல்லா மக்களுக்கும் ஒரே விகிதத்தில் பொருளாதார வளர்ச்சியின் நன்மை சென்றடையுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அது நடக்காதோ என்ற பயம் நடுநிலையாளர்களுக்கு உருவாகியுள்ளதுதான் இன்றையநிலைமை!
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக