புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
68 Posts - 40%
heezulia
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
22 Posts - 3%
prajai
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 0%
manikavi
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_m10குவளை மலரைத் தேடும்  வண்டுகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவளை மலரைத் தேடும் வண்டுகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 21, 2013 11:53 am

சங்க இலக்கிய அகப்பாட்டுகள் திணைதுறைகளோடு அமைந்த பாடல்கள். அவற்றில் வரும் தலைவி உயர்ந்த பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவள். ஆனால், அவற்றில் வரும் தலைவனை அப்படிச் சொல்ல இயலாது. அவன் வீரமும் ஈரமும் ஊக்கமும் நிறைந்தவன் என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவன் அல்லன். அவன் கால்கள் பரத்தையர் சேரியை நோக்கி நடக்கின்றன.

மருதத்திணைப் பாடல்களில் தலைவன் பரத்தையோடு கொள்ளும் உறவே தலைவியின் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது. தலைவனின் அச்செயலால் மனம் வாடித் துன்புறும் தலைவி, அவன் மீது மனவேறுபாடு கொள்கிறாள். அவன் பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பி வந்து தன்னை அணுகும்போது விலகி நிற்கிறாள். அவள் ஊடலைத் தோழியோ பிறரோ தணிவிக்க, அவள் மனம் இளகி அவனை ஏற்றுக்கொள்கிறாள். தானே தணிந்து ஏற்றுக்கொள்வதும் உண்டு.

தலைவனின் தவறான ஒழுக்கத்தைத் தோழியும் சிலபொழுது தலைவியும் சுட்டிக் காட்டுவர். அப்படிக் காட்டும்போதும் அவர்கள் சொற்களில் கண்ணியம் குடியிருக்கும். அவர்கள் அவனது பிழையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் அழகே அழகு.

அகப்பாடல்களில் காணப்படும் இந்த உத்தியை "உள்ளுறை உவமம்' என்பர். பாட்டில் சொல்ல நினைக்கும் கருத்தினை அதற்குரிய உவமைகளைக் கூறிப் பொருள்களைப் (உவமேயத்தை) படிப்பவர் அறிந்து அமைத்துக் கொள்ளும்படி உள்ளே வைத்துப் பாடுவது "உள்ளுறை உவமம்' (தொல்.அகத். நூ.51) எனப்படும்.

தலைவன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி முதலியோர் இப்படிக் குறிப்பாகப் பேசுவதற்குரியவர்கள். பெரும்பாலும் தோழியும் தலைவியுமே இப்படி உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதாகக் காணப்படுகிறது.

தலைவன் பரத்தையரோடு இன்பம் நுகர்ந்து திரும்புகிறான். அந்தத் தரமற்ற செயலைத் தோழி மருதநிலத்தில் இருக்கும் தாமரை, குவளை, வண்டு ஆகியவற்றைக் கொண்டு குறிப்பாகத் தெரிவிக்கிறாள். பேச்சு ஏதோ வண்டு ஒன்றின் செயலைப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், அது தலைவனின் அடாத செயலை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பேச்சாகும்.

ஓர் அழகான தாமரை மலர். அது மிகுந்த தேனினைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அந்தச் செழுமலரில் தேன் உண்ணுதற்குரிய வண்டு அதனை விடுத்துக் குவளை மலரை நாடிச் செல்கிறது. அதுவோ வெறிகொண்ட சுரும்புகள் வேட்கையோடு படிந்து தேனை உண்டு சென்ற மலர். அதில் சிறிதளவு தேனே எஞ்சி இருக்கிறது. அந்தச் சிறிதளவு தேனை விரும்பியும் அலைகிறதே வண்டு. என்னே அறியாமை! என்கிறாள் தோழி.

வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடும் தன்முகத்துச் செவ்வி உடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.


இதில் வளமான தாமரை தலைவியையும், அது தேன் நிறைந்து ஆடிக்கொண்டிருப்பது அவள் மிகுந்த இன்பத்தை வழங்கக் காத்துக் கொண்டிருப்பதையும், தாமரையைப் பிரிந்த வண்டு தலைவியைப் பிரிந்த தலைவனையும், வெறிகொண்ட சுரும்புகள் காமம்மிக்க விடலைகளையும், சுரும்புகளால் மேயப்பட்ட குவளை காமுகர்களால் நுகரப்பட்ட பரத்தையையும், குவளை மலரில் உள்ள சிறிதளவு தேன் பரத்தை தரும் சிறிதளவு இன்பத்தையும் குறிக்கும் உவமைகளாக உள்ளன.

"செவ்வி உடையது ஓர் வண் தாமரை'' என்பது தலைவி அழகும் இனிமையும் நிறைந்தவள் என்பதையும், ""குறைபடுதேன்'' என்பது சிறிதளவு கிடைக்கும் இன்பம் என்பதனோடு, குறைவை ஏற்படுத்தும் இன்பம் என்பதனையும் சுட்டும் வகையில் அமைந்துள்ளன. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் குற்றமாகக் கருதப்படவில்லை என்றாலும் குறையாகக் கருதப்பட்டது.

தலைவன் தவற்றினை நயமாகச் சுட்டும் இப்பாட்டு உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் உரையில் தரப்பட்டுள்ளது. இப்பாட்டைப் பாடியவர் யார் என்பது தெரியவில்லை. எத்தனையோ சங்கப் பாட்டுகளை மேற்கோள் காட்டும் இளம்பூரணர், உள்ளுறை உவமத்திற்கு அவற்றில் ஒன்றினை எடுத்துக்காட்டாமல் இந்த வெண்பாவைக் காட்டியிருப்பதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.

முனைவர் தெ. ஞானசுந்தரம் நன்றி தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக