புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_m10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10 
5 Posts - 63%
heezulia
காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_m10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_m10காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய(அவல‌) நிலை..!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 1:47 am

எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிக பட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம். அங்குள்ள காவல் நிலை யம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வரு மானம் ஈட்டித்தரும் துறைகளி ல் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்! நம்புங்கள், பத்திரப்பதிவுத்துறை, விற்ப னை வரித்துறைகளைவிட காவல்துறையில் ‘மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை…?
-
தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர்காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி. எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர் கள்… பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்தும் லஞ்சமும் கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?
-
ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்… போலீஸாரைப் பொறுத்த வரை பொன்முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடை முறை களில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர்.பதிவுதான். அதில் இருந் தே தொடங்குகிறது வசூல் வேட்டை.காவல் நிலையத்தில் ஒரு வர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வே ண்டும். புகாரின் தன்மையைப்பொறுத்து அன்றைய தினமேஎஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.
-
ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரி ல் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கி றார் கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த்தரப்பு … இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்க ளுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவு செய்யப்படாம லேயே போகும். ஒருவேளை போலீஸ் வற் புறுத்தி யும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற் கெல்லாம் அசரவே மாட்டார்கள்.
-
எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத் தவர்மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். ‘ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர். இந்த எஃப். ஐ.ஆரை எப்படியும் வளைக்கலா ம். அது நிலையத்தின் அனுபவசா லிக்குக் கைவந்த கலை. உதாரண மாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506(1)ல் பதிவு செய்தால் ஸ்டேஷனில் இரு ந்து கையை வீசிக் கொண்டு வீட்டு க்குச் சென்று விடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினா லே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.
-
கைதுக்கும் காசு!
ப திந்த எஃப்.ஐ.ஆர்.மீது குற்றம்சாட்டப்பட் டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யா மல் இருக்கவும் பணத்தைத் தண்ணீரா கச் செல வழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரி டம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச்சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண் ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும்பணம் வேண் டும்.
-
ரெக்கவரி ரீல்!
மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் – ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இர ண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால்,செம லம்ப் வருமானம். திருடுபோன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்பு த்துலக்கி மீட்கும் கடமை ஆற்றும் போலீஸா ருக்கு ஒவ்வொரு வழக்கு ம் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய் விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போடமாட்டார்கள்.ஆனால், உடனடியாக வியர்க் கவிறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார் கள்.
-
எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போ டுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, ‘சிறப்பு விசாரணை’மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண் மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை, தான் கைவரிசை காட்டிய இட ங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல்நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித்தர வே ண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லை யில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக் கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.
-
ஆனால், உண்மையில் என்ன நடக்கிற து? திருடன் நகையை விற்ற நபர்களி டம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பா ர்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்று திரட்டினால், 200 பவுனுக்குக் குறையா மல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரை க் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 1:56 am

”அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப்பார்த்தா ரொ ம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணு க்குக்கல்யாணம்கிறீங்க…
நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அம வுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங் களுக்குச் சரிக் கட்டிடலாம்” என்பார் கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களை யோ ஆயிரங்களையோ பெற்றுக்கொண்டு… கட்டக்கடைசியா கத் தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30பவுன் திருடு போனதாகப் பதிவுசெய்து… அதையும் வெற்றிகர மாக மீட்டுக்கொடுத்ததாக பத்திரிகை யாளர்களை அழைத்துப் பேட்டி கொடு ப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, ‘இது அனை த்தும் 100 சதவிகிதம் உண்மை தான்!’ என்றுஆமோதித்தார்கள். அட… ஆண்டவா!
-
ஏன் இந்தக் கொள்ளை?
காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத்துக்கு மட்டுமே காவலர்க ள் இப்படி வசூல் வேட்டை நடத்துவ து இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளி க்க இதைத்தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கி றார்கள்.
-
விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இரு க்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொ றுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவு க்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே. குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல் லுதல் போன்றபோக்கு வரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டு மேஅரசின் அளவு கோல்.
-
விழிபிதுங்கும் கூட்டநெரிசலில் நகரப்பேருந்துகளில் அக்யூஸ் டை அழைத்துச்செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடை நி லைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.
இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்து விடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ.. மோப்பம் பிடிக்க வோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக் குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் ‘மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.
-
காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படி யெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர்கள் இப்படி வாய் ப்புகிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட் டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செல வுகளெல்லாம் போலீ ஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவி கிதம்கூட இல்லை.
-
காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல்பணியை தங்கள் உயிர் மூச்சாகநினைத்துச் செயல்படுப வர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர்அதிகாரிகளுக்கு மட்டுமே, அது வும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும்.மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீ ஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக் குப் புரிந்திருக்கும்.
-
போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக் கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத் துக்கு மிகச்சொற்ப நேரத்தை ஒதுக்கி க்கொள்வார்கள். காக்கிச் சட்டை யின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்… அதற்கு மேல் கிடைக்கும் வருமானத் துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.
-
நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார், ஆனந்தவிகடன்.
-
விதை2விருட்சம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 21, 2013 9:51 am

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!... காவலர்கள் குடும்பங்கள் தீரா சாபத்திற்கு ஆளாவது தான் ஒரே வழி புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 21, 2013 2:23 pm

இப்படி பொதுவாக காவல் துறையின் மீதே குறை சொல்வது ஏற்புடையதா எனத் தெரியவில்லை எனக்கு ..............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக