புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
37 Posts - 37%
heezulia
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
manikavi
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mruthun
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_m10அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:49 am

First topic message reminder :


அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Images?q=tbn:ANd9GcQyIWxKFeE6QSI2xXVhgJYBo8c-Z86fDi1ZDbjd5IUALrNZNYkGeA
இது என்னுடைய 12,000மாவது பதிவு நண்பர்களே ! நான் இந்த கட்டுரையை சர்வோதயா நாள் அன்றே எழுத வேண்டும் என்று இருந்தேன். சர்வோதயா நாள் என்றால் என்ன வென்று தெரியாதவர்களும் இங்கு இருக்கலாம். அவர்களுக்காக நான் இதை விளக்க கடமைப்படிட்டிருக்கிறேன். அதாவது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் மரணத்தை தழுவிய அந்த துக்கமான நாளை தான் நாம் சர்வோதயா நாள் என்று அழைக்கிறோம். அது ஜனவரி 30ம் தேதி.

முன்பெல்லாம் நான் சிறுமியாக இருந்த போது ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு, எங்கள் பள்ளி இல் ஒரு மணி அடிக்கும் நாங்க எல்லோரும் எழுந்து அந்த தேசத்தந்தைக்கு மௌன அஞ்சலி செலுத்துவோம். மறுபடி 11.02 க்கு ஒரு மணி அடிக்கும் அப்போது எங்கள் மௌனத்தை கலைப்போம். பள்ளிகளில் மட்டும் அல்ல அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவ மனைகளிலும் இந்த மௌன அஞ்சலி யை எல்லோரும் பின் பற்றினார்கள். 1970 இல் என் அம்மா என் கடைசி தம்பிகளை ஜனவரி 30ம் தேதி காலை 7 மணிக்கு ஒரு ஆண் குழந்தை அடுத்து 7.20 மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று பெற்றிருந்தார்கள்.ஆம் எங்க அம்மாக்கு இரட்டை பிள்ளைகள் பிறந்தார்கள்.புன்னகை அன்று 11 மணி க்கு மணியடித்ததும், அங்கிருந்த செவிலி எங்க அம்மாவையும் மணி அடித்ததும் எழுந்து நிற்க சொன்னார்களாம். "காந்தி எவ்வளவோ கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினார் ; அதற்கு முன் உன்னுடைய பிரசவித்த வலி ரொம்ப சின்னது, 2 நிமிஷம் நிற்பதால் உன் உடம்புக்கு ஒன்றும் ஆகாது எழுந்திரு" என்றளாம். அம்மா சொல்வார். {அது போல இப்ப யாரும் சொல்வாளா தெரியலை சோகம் } அப்படி இருந்த அந்த நல்ல வழக்கம் எப்ப எப்படி நின்று போனது என்று தெரியலை. சோகம்

எனக்கு நல்லா நினைவில் இருக்கு , எங்க கிருஷ்ணா 7 வது வரை இந்தியாவில் தான் படித்தான் , அது வரை அந்த பழக்கம் இருந்தது. நான் அவனை எப்போதும் அகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 அன்று கண்டிப்பாக கொடியேற்றும் விழாவுக்கு அனுப்பிவிடுவேன். நான் பள்ளி சென்ற காலத்தில் கூட எங்க அம்மா எங்கள் அனைவரையும் ( நங்கள் 5 பேர் பிள்ளைகள்) அனுப்பிவிடுவார்கள். எனக்கும் அதே பழக்கம். ஆட்டோ டிரைவர் லீவு கேட்டால் கூட நான் அனுமதிக்க மாட்டேன். காத்திருந்து கிருஷ்ணாவை அழைத்துவர செய்வேன்.புன்னகை அதன் பிறகு நாங்கள் சௌதி சென்று விட்டோம். அங்கும் இந்தியன் எம்பசி ஸ்கூல் இல் இந்த வழக்கம் இருந்தது. நாங்கள் மீண்டும் கிருஷ்ணா 12 வது முடித்ததும் இந்தியா வந்தோம். முதல் வருடம் அவன் B .E . சென்று கொண்டிருந்தான், அந்த வருடம் ஜனவரி 30 அன்று எங்க வீட்டின் அருகிலேயே 2 பள்ளிகளிருந்ததால், கண்டிப்பாக அவர்கள் 11 மணிக்கு ஒரு ஸ்பெஷல் மணி அடிப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ........சோகம் இல்லை சரி என்று நான் 2 நிமிடம் மௌனமாக அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு எங்கள் வீடுகளை 'மெஇண்டென்' செய்யும் மாமி இடம் இது பற்றி விசாரித்தேன். மாமி சிரிக்காத குறைதான் .....சோகம் " என்ன சுமதி எந்த உலகத்தில் இருக்க?, அதெல்லாம் இப்ப யார் செய்யரா?" என்றாளே பார்க்கணும். எனக்கு ரொம்ப வருத்தமாக போச்சு. சர்வோதயா நாள் என்றால் என்ன என்று கூட இந்த காலத்து பசங்களுக்கு தெரியாது என்கிறாள். சாயங்காலம் கிருஷ் வந்ததும் அவனும் சொல்கிறான், " அம்மா சௌதி லையே நாங்க ப்ரே பண்ணுவோம் இங்க ஒன்னும் இல்லமா, கேட்டா பசங்க சிரிக்கறாங்க" என்கிறான். நானும் என் அனுபவத்தை சொன்னேன். எங்கள் இருவருக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அன்று. பிறகு யார் யாரிடமோ கேட்டும் எப்ப அந்த வழக்கம் நின்று போனது என்று தெரியலை. சோகம்

எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு நம் தேச தந்தை மற்றும் தியாகிகளைப்பற்றி சொல்லித்தரா? எதற்குமே நேரம் இல்லாமல் அலைகிறார்களே..... எதற்கு? பிள்ளைகளுக்கு ஆகஸ்ட் 15 மட்டும் ஜனவரி 26 பள்ளி எதற்கு விடுமுறை என்று கூட தெரிவதில்லை.
சுதந்திர தினம் எது குடியரசு தினம் எது என்று கூட தெரியாது. அன்று பள்ளி விடுமுறை, டிவி பார்க்கலாம். அல்லது 4 குத்தாட்டம் ( அது கூட தேசிய பாடல்கள் அல்ல ) பழகிவிட்டு மேடையில் ஆடிட்டு வரலாம் என்று மட்டுமே தெரிகிறது.

ஒருநாள் சன் டிவி இல் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் பார்த்தேன் ; சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அது. அதன் அமைப்பாளர் ஒரு குழந்தை யை கேட்கிறார் 500 ருபாய் தாளில் , கண்ணாடி போட்டிருப்பரே அவர் பெயர் என்ன ? என்று, அதற்கு அந்த குழந்தை சொல்கிறது அது "பவர் ஸ்டார்' என்று. அதைக்கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். ஒருவருக்கு கூட ஒரு குற்ற உணர்வு இல்லவே இல்லை எனக்கு அவர்களை அப்படியே சுடனும் போல இருந்தது. என்னால் முடிந்தது சேனல் ஐ மாற்றுவது தான். என்ன ஒரு பொறுப்பு அற்ற ஜனங்கள் . கண்டிப்பாக அது பெற்றோர்கள் சொல்லித்தந்தது தான். அந்த குழந்தை தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாஇல்லை. ஏதோ ஒரு பொறம்போக்கு (மன்னிக்கணும்) பேரை சொல்கிறதே என்று எனக்கு ரொம்ப வெறுப்பாக இருந்தது.

நீங்கள் சமீப கால தினசரிகளில் படித்திருக்கலாம்;

ஒரு பள்ளி இன் +1 மாணவர்கள் 6ம் வகுப்பு மாணவர்களை அடித்து , குடிப்பதற்காக பணம் கேட்டார்களாம்.அவர்கள் அப்படி கேடட போதே குடித்திருந்தார்களாம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இன்னும் ஒன்று. + 1 மாணவர்கள் இருவர் அங்கிருந்த பியூன் னுடன் சேர்ந்து பள்ளி இன் பெஞ்சை விற்று விட்டு குடித்தார்களாம்.

மற்றும் ஒரு செய்தி 4 வது படிக்கும் மாணவி இடம் + 1 மாணவர் சில்மிஷம் என்ன கொடுமை சார் இது

இது போல பல சொல்லலாம். இவர்களின் பெற்றோர் இவர்களை கவனிப்பதை விடுத்து என்ன செய்கிறார்கள் என்பது மிலியன் டாலர் கேள்வி. கோபம்

நம் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் 2020 இல் நம் நாடு வல்லரசாகும் என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார், அந்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை இல் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அவர்கள் சாதிப்பார்கள் என்று தான் சொன்னார். இன்றைய பெற்றோர்களுக்கு அந்த பொறுப்பு இருப்பதாக வே தெரியலை சோகம் மேலே சொன்ன இளைஞர்கள் 2020 இல் என்ன மாதிரி இருப்பார்கள் ? இவர்களை நம்பியா நம நாடு இருக்கு ? பயம் பயம் பயம்

இது போல பொறுப்பு அற்ற பிள்ளைகள் ஒரு புறம்; வெறும் குத்தாட்டத்திலும், தமாஷ் என்கிற பெயரில் இதைப்போல பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தங்கள் குழந்தைகளை தயார் படுத்தும் பொறுப்பு இல்லா பெற்றோர் ஒருபுறம் . (எல்லா பெற்றோர்களையும் நான் குறை சொல்லவில்லை. இவ்வாறு செய்பவர்களை மட்டும் தான் சொல்கிறேன்.) நம நாட்டின் எதிர் காலம் ??????????????????????????

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு அவர்கள் பார்த்து பின்பற்ற நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் , எனவே நாம் நம் தலைமுறை தலைவர்களைப்பற்றி தான் சொல்லணும். அந்த காலத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்தை பெற்று த்தந்தர்கள் என்று சொல்லணும்.

வெளி நாடுகளில் "பெட் டைம் ஸ்டோரி' என்கிறது ரொம்ப பிரபலம். அது போல நாமும் பழகனும். சின்ன சின்ன கதைகளாக சொல்லணும். சும்மா நேரம் இல்லை என்று சொலக்கூடாது. நாம் கதை சொல்ல எவ்வளவு பேர் இருக்கா? காந்தி, நேரு, வல்லபபாய் பட்டேல், திலகர், திருப்பூர் குமரன், வாஞ்சி நாதன் என பட்டியல் நீளுமே !

மேலும் நாங்க சின்ன வர்களாக இருந்த போது எங்க விட்டுக்கு 'சர்வோதயா மாமி' என்று ஒருவர் வருவார். வெகு வருஷங்கள் நாங்க அவர் எங்க உறவினர் என்றே நினைத்திருந்தோம் புன்னகை காலை ஒரு பத்துமணி வாக்கில் சனிக்கிழமைகளில் வருவார் . பொதுவாக மாதம் இருமுறை வருவார். வரும் போது கைகுத்தல் அவல், ஊதுபத்தி, ரொம்ப பளப்பு இல்லாத சோப்பு கட்டிகள், பனை வெல்லம் என்று பல பொருட்கள் கொண்டுவருவார். எங்கள் வீட்டிலேயே அம்மா மற்றும் பாட்டி யுடன் பேசி விட்டு கொண்டு வந்த பொருட்களை தருவார். சில சமயம் எங்களுடன் சாப்பிடுவார் அல்லது அவர் எடுத்து வந்துள்ள டப்பாவிலிருந்து சாப்பிடுவார். பிறகு எங்களுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வார். நாங்கள் அதற்காகவே காத்திருப்போம். கதைகள் முடிந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு எடுப்பார் பிறகு சென்றுவிடுவார். காபி டீ குடிக்க மாட்டார் . மோர் தான் குடிப்பார். ஆனால் இப்போது அது போல வருகிறார்களா தெரியலை.
அதற்கு பதில் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வோதயா டே இன் போது கடைகளில் தள்ளுபடி விலை இல் பொருட்கள் தருகிறார்கள் அல்லது 'மேளா' ஏற்ப்பாடு செய்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதைப்போன்ற 'காதி' பொருட்களை எவ்வளவு பேர் வாங்கறா, அதன் பலன்களை குழந்தைகளுக்கு சொல்லித்தரா தெரியலை.

இதையெல்லாம் நான் இங்கு கொட்டுவதன் நோக்கமே, குறைந்த பக்ஷம் இதைப்படிக்கும் உறவுகளாவது, தங்கள் சந்ததி இனருக்கு நம் முன் தலை முறை வாழ் பெரியவர்கள் மற்றும் தலைவர்களின் அருமை பெருமைகளை சொல்லி வளருங்கோ, இந்த அபத்த டிவி நிகழ்ச்சிகளை பார்க்காமலும் அதில் பங்கு பெறாமலும் இருங்கோ என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளத்தான் புன்னகை

டிவி காராளை கேட்டால் மக்கள் பார்ப்பதால் தான் நாங்கள் இப்படி நிகழ்ச்சிகள் தருகிறோம் என்பார்கள். நாம் பார்க்காமல் தவிர்த்தாலே சில நிகழ்ச்சிகள் நின்றுவிடும். அதற்கு உதவுங்கோ. :வணக்கம்: அன்பு மலர்

தாய் மொழிப்பற்று மற்றும் தேசப்பற்று ரொம்ப முக்கியம் நமக்கு. நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கா அவர்களுக்கு பொறுப்பு இரண்டு மடங்குஆகிறது. காந்தி இன் கொள்கைகளை பசங்களுக்கு சொல்லுங்கோ , ரொம்ப சிம்பிள் தான் புன்னகை முதலில் 'மன்னிப்பு' கேட்க (சாரி சொல்ல ) பழக்கணும். அடுத்தது 'நன்றி' சொல்ல பழக்கனும். முளைத்தது முதலே எல்லாத்துக்கும் 'ஈகோ' தப்பு செய்தால் 'மன்னிப்பு' கேட்டுத்தான் ஆகணும் என்று சொல்லி பழக்கனும். அடுத்தது பெரியவாளை மதிக்க கத்து தரனும்.

"ஒழுக்கம் தான் அதன் அடிப்படையே. "ஸெல்ப் டிசிப்ளின்" சுய ஒழுக்கம் அது தான் இப்போ ரொம்ப ரொம்ப தேவை புன்னகை

சர்வோதயம் என்பது மகாத்மா காந்தி கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதயச் சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.

1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.

காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.



சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், "வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.

இவையெல்லாம் நாம் செய்தித்தாள்களில் காந்தி ஜெயந்தி அன்று அல்லது சர்வோதய நாள் அன்று படிப்போம் அவ்வளவுதான்.
ஆனால் இனி கொஞ்சம் பின்பற்ற பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:32 am

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Jcd5lI82Q1eeEVZF6YsT+download

இந்தியாவின் தேச தந்தையான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாளே சர்வோதய தினம். இந்த நாள் இந்தியாவில் தியாகிகள் தினமாகவும் நடைமுறையில் அனுசரிக்கப்படுகிறது.

அடிப்படைத் தத்துவங்கள்..!

சுதேசி என்கிற ஸ்வதேஷி, சுய ஆளுமை என்கிற ஸ்வராஜ், எல்லோருக்கும் நன்மை என்கிற சர்வோதயா, ஆத்ம வலிமை என்ற சத்யாகிரகம் இவையே அண்ணல் காந்திஜியின் அஹிம்சைக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவங்கள்.

மலர்த் தூவலுடன் நின்று விடாமல், இன்றையச் சூழலில் காந்தியப் பாதையின் அவசியத்தையும், பயன்படுத்திடும் புதிய வழி முறைகளையும் சிந்தித்துச் செயல்பட்டால் இந்தியாவின் சுய ஆளுமை நிலைக்கும்.

ஜனவரி 30 சர்வோதய தினம்.

தியாக சீலர்களுக்கெல்லாம் தலைவரான தியாகேசன் நம் தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகள் அமரத்துவம் அடைந்த தினம்.

கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை புதுடெல்லி பிர்லா மாளிகையின் வெளித் தோட்டத்துப் புல் வெளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரமாகி விட்டதே என்று அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த காந்திஜீயை நமஸ்கரிக்கும் பாவனையாகக் குனிந்து எழுந்த நாதுராம் கோட்சே என்ற மராட்டிய இளைஞன் - மும்பையைச் சேர்ந்தவன், முன்னரே திட்டப்படி ஒளித்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் (ரிவால்வர்)
காந்தி அடிகளின் மார்பை நோக்கி 3 முறை ஒரே நிமிடத்தில் சுட்டான்.

'ஹே! ராம்!' என்ற கடைசி வார்த்தை..!

'ஹே! ராம்!' என்ற கடைசி வார்த்தையுடன் காந்திஜி தன்னுடன் கைத் தாங்கலாக வந்த பேத்திகளின் கைகளில் சாய்ந்தார். பலர் சேர்ந்து மாளிகையின் உள்ளே அவரைத் தூக்கிச் சென்றனர். மிகச் சரியாக மாலை 5 மணி, 17 நிமிடத்துக்கு அண்ணார் உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

உலகம் துக்கத்தில் ஆழ்ந்தது. காந்தி அடிகளின் விருப்பப்படியே அவரின் மரண முடிவு ஏற்பட்டது.

குத்தீட்டி ஒரு புற‌த்தில் குத்த‌ வேண்டும்
கோடாறி ஒரு புற‌த்தைப் பிள‌க்க‌ வேண்டும்
ர‌த்த‌ம் வ‌ர‌த் த‌டியால் ர‌ண‌முண்டாக்கி
நாற்புற‌‌மும் ப‌ல‌ர் உதைத்து ந‌லிய‌த்திட்ட‌
அத்த‌னையும் நான் பொறுத்து அகிம்சை காத்து
அனைவ‌ரையும் அதைப்போல‌ ந‌ட‌க்கச் சொல்லி
ஒத்து முக‌ம் ம‌ல‌ர்ந்து உத‌ட்டில் சிரிப்பினோடும்
உயிர் துற‌ந்தால் அதுவே என் உய‌ர்ந்த‌ ஆசை

என்று 'உலகம் வாழ' வாழ்ந்த காந்தி அடிகளைப் பற்றி நாமக்கல் கவிஞர் பாடி யுள்ளார். அப்படியேதான் அண்ணலின் பூத உடல் மறைந்து புகழுடம்பு எய்தியது.

'மிக நல்லவராக வாழ்வது எவ்வளவு பெரிய ஆபத்து என்று புலனாகிறது' என்று ஒரு உலக மேதையும், '2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதன் காட்டு மிராண்டியாகத்தான் இருக்கிறான்' என்று மற்றொரு மேதையும்,
காந்தி அடிகளுக்கு நேர்ந்த முடிவைப் பற்றி மனம் நொந்து சொன்னார்கள்.

திறந்த புத்தகம்..!

அண்ணலின் முடிவு சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு வழி காட்டி. தன்னைச் சீர்திருத்திக் கொள்ள, நல்ல மனிதனாகச் சிறந்தோங்க, அண்ணலின் 79 ஆண்டு (1869 முதல் 1948) கால வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

அண்ணல் காந்தியடிகள் 'சத்திய சோதனை' என்ற தலைப்பில் தன் சுய சரிதம் எழுதினார். உலக மொழிகள் அனைத்திலும் இந்தப் புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டுப் பல பத்து லட்சம் பிரதிகள் விற்பனை இருக்கின்றன.

உலகம் முழுக்க முக்கியத்துவம் பெற்ற இந்த சர்வோதய தினத்தில் அண்ணல் காந்தியடிகளின் ஆத்ம சக்தி நம்மை வழி நடத்துமாக...!

‘காந்தி ஆசிரமம்’ அ.கிருஷ்ண‌ன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 10:42 am

அருமையான செய்திகள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 30, 2015 12:21 pm

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Jan 30, 2015 12:28 pm

அருமையான செய்திகள் அம்மா..

நன்றி...
நம் இளைய தலைமுறையினருக்கு சுய ஒழுக்கம் மிக மிக முக்கியம்..அதற்கு பெற்றோர்கள் முக்கியமாக இத்தகைய மகான்களின் அருமைகளை உணர்ந்திருக்க வேண்டும்...

பெற்றோர்களும் ஆசிரியர்களுமே இளைய தலைமுறையினரின் வழிகாட்டுதல்கள்...ஆகவே நம் குழந்தைகளை நாம் சிற்றந்த மனிதனாக வளர்க்க உறுதி கோல வேண்டும்...

வெறும் படிப்பு மற்றும் பணம் சம்பாதிக்க என்று இல்லாமல் தேசப் பற்று , நாட்டு மக்களின் மீது பற்று ஆகியவற்றை தோன்ற செய்ய வேண்டும்.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jan 30, 2015 2:55 pm

அருமை அம்மா....

உங்களுடைய அனுமதி இல்லாமல் விப்ரோ யம்மர் பகுதியில் பதிவிட்டேன் உங்களுடைய இரண்டாவது பதிவை



அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Mஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Aஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Dஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Hஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 U



அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 2:57 pm

Cant understand Madhu..please explain...sending this from phone:)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jan 30, 2015 3:01 pm

krishnaamma wrote:Cant understand Madhu..please explain...sending this from phone:)
மேற்கோள் செய்த பதிவு: 1117849i have posted your second post in Wipro Yammer page
இந்தியாவின் தேச தந்தையான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாளே சர்வோதய தினம். இந்த நாள் இந்தியாவில் தியாகிகள் தினமாகவும் நடைமுறையில் அனுசரிக்கப்படுகிறது



அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Mஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Aஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Dஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 Hஅவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 U



அவசியம் படியுங்கோ - சர்வோதயா தினம் ! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 3:04 pm

Ho, no problem Madhu:)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக