புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 9:57 pm

First topic message reminder :

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது

சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.

ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.

இனி விளையாட்டுக்குப் போவோம்.

வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?

விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?

சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?

(தொடரும்)



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 27, 2013 10:49 am

இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.
ஆடு இறந்து விட்டதா அழுகை [/quote]

உயிர்ப்பலி கொடுக்கும் இடத்தில் 'சிவபெருமான்' இருக்க மாட்டார் என்பது நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு சொல்பவை. அதற்கு மாற்றாக தக்கனின் வேள்வி நடந்ததால் அது அழிக்கப்பட்டது.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Mar 03, 2013 1:29 pm

நல்ல விளக்கம்! தொடருங்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 06, 2013 10:21 pm

வினா: அக்காலத்தில், அமரரெல்லாம் ஆரவாரம் செய்து கடலை கடைந்த போது, பாற்கடலில் உண்டாகிய நஞ்சை யுண்டானே உம்பெருமான்! அதற்குக் காரணம் என்ன? கனியிருப்பக் காய்கவர்தல்போல, அமுதத்தை உண்ணாது நஞ்சினை உண்டது பித்தர் செயல் அல்லவா; இது அறிவுடையார் செயலாதல் எவ்வாறு?

பதில்: அந்த நஞ்சை எம்மிறைவன் உண்டிலனாயின் நான்முகன் திருமால் முதலான தேவர்கள் எல்லாரும் அன்றே மடிந்திருப்பார்கள். அது பித்துச் செயலன்று தோழி! தேவரைக் காக்கும் பொருட்டுச் செய்த அருட்செயலாகும்.

தொடரும்


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Thu Mar 07, 2013 11:06 am

எங்கு தேடினாலும் கண்டுபிடித்து படிக்க கடினமான விடயங்களை
பகிர்வதற்கு மிக்க நன்றி.
திருசாழலின் விளக்கங்கள் மிக எளிமையாகவும் படிப்தற்கு ஆர்வமாகவும் உள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 07, 2013 11:47 am

திருச்சாழல் விளக்கம் அருமை .... அருமையான தொடர் பதிவை தந்தமைக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 26, 2013 11:13 pm

வினா: தென்திசை நோக்கி நடிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தான் பெண் பாகத்தை விரும்பினான், இவன் பெரும் காமப்பித்தனோ?

பதில்: தோழி! உலகத்தவர் போல மனைவியை உடையனாய் இருப்பவன் கடவுளாவனோ என்றுதானே நினைக்கிறாய்? கேள்!

இன்பம் இருவகைப்படும். ஒன்று இல்லற இன்பம். மற்றொன்று வீட்டின்பம். உயிர்கள் முதலில் உலக இன்பத்தைத் துய்த்து அதன்பின்னரே வீட்டின்பத்தை அடைதற்கு உரியன.

உலக இன்பத்தை அடையும் நிலையில் உள்ள உயிர்களுக்கு மனைவியை உடையவனாக (போக நிலை) காட்சி தருகிறான். அவ்வாறு இருத்தல் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே. இளஞ்சிறுவர்களை மகிழ்விக்க அவரொடு விளையாடும் பெற்றோரது செயல்போல நாடகமாக மேற்கொள்வதே அன்றி, உண்மையாக அல்ல.

பின்னர் பக்குவம் அடைந்த உயிர்களுக்கு ஏற்றார்போல் யோகநிலை உடையவனாகவும் காட்சி தருகிறான்.

உடல் செயல்பட உயிரின் துணை இன்றியமையாதது. அதுபோல, உயிர்கள் பக்குவம் அடைய இறைவனது துணை இன்றியமையாதது. அதனாலேயே, அவன் அவரவருக்கு ஏற்றவாறு இயைந்து நிற்கிறான். அதனால், சிலர்க்குப் போகியாகியும், சிலருக்கு யோகியாகியும் நிற்கிறான். இவ்வாறின்றி யோகியாகவே நின்றால், யோகத்திற்கு தகுதியில்லாத உயிர்கள் யோக நிலையை மேற்கொண்டு பயன்பெறமாட்டாது அழியும். புரிந்ததா பெண்ணே ?


(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 07, 2013 10:16 pm

வினா: தோற்றம் மறைவு இல்லாதவன் உன் கடவுள் எனச்சொல்கிறாய்! அப்படிப்பட்டவன் நாயை விடக் கீழ் நிலையில் உள்ள என்னைப் போன்ற மானிடப் பெண்ணிற்கு பேரின்பம் தருவானோ? தந்துள்ளானே! அப்படியானால் அவன் எப்படி மேன்மைமிக்க கடவுளாய் இருக்க முடியும்?

பதில்: மேன்மைமிக்கவன் எளியவனிடம் வரமாட்டான் என உலகத்தில் உள்ள மக்கள் நினைப்பார்கள். அதைப்போல தகுதி இல்லாத உனக்கும் வீடுபேற்றை அளித்துள்ளானே என்றுதானே கேட்கிறாய், தோழி! பரம்பொருளுக்கு மட்டுமே எளியவனுக்கும் அருளும் குணமுண்டு. அந்தப் பரம்பொருள்தான் நம்பெருமான்.

அவ்வாறு உனக்கு அவன் எதிர்வந்து பேரின்பம் அளித்தது அவன் உன் மீது வைத்த கருணையாலே என்பதை உணர்ந்துகொள். உனது முற்பிறவித் தவத்தால் உனக்கு வீடுபேறு எளிதிற்கிடைத்துள்ளது. அது, வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் எட்டாததொன்று என அறிந்து பெருமைகொள்.


(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 17, 2013 8:03 pm

வினா: தோழி... இதென்ன புதுவகை தவவேடம்! உன் இறைவன் நரம்பினையும் ஓட்டினையும் எலும்பினையும் தரித்தது மட்டுமல்லாமல் முழு எலும்புக்கூட்டினைத் தோளின் மேலே விரும்பி அணிந்துள்ளானே?

பதில்: சடையையும் அவனது ஆடையையும் பார்த்தால் தவக்கோலத்தில் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் நரம்போடு எலும்பையும் அணிதல் தவக்கோலம் போல இல்லையே என்றுதானே கேட்கிறாய் தோழி?

நம்பெருமானது வேடங்கள் அனைத்தும் பலப்பல உண்மைகளை நமக்கு உணர்த்துவதற்கா -கத்தான் படைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள் தோழி!

எல்லாவற்றையும் ஒடுக்குபவன் சிவபெருமான். எல்லாவற்றையும் என்பது படைக்கும் தொழிலைச் செய்யும் பிரமனையும் ஒடுக்குபவன் சிவபெருமான். அதேபோல் காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலையும் ஒடுக்குபவன் சிவபெருமான் என்பது பொருள்.

ஒவ்வொரு ஊழிக்கால தொடக்கத்திலும் திருமால் , பிரமன் போன்றவர்கள் சிவபெருமானால் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். திருமால், பிரமன் போன்றவர்கள் நம்மைப் போன்ற ஆன்மாக்களே. ஆனால் நம்மைவிட மேம்பட்ட, பக்குவப்பட்ட ஆன்மாக்கள். அவர்களின் பணிக்காலம் முடிந்தபின் அவர்களும் ஒடுக்கப் (அழிக்கப்) படுகிறார்கள். இதில் யாரும் தப்ப முடியாது.

சிவபெருமான் ஐந்து தொழில்களைச் செய்கிறார். அவை உயிர்களின் பொருட்டுச் செய்யும் பெருங்கருணைச் செயல்கள். அவை படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல் மற்றும் அருளல் என்பன ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணியாளர்கள். அவர்களும் அவர்களின் தொழில்களும்:

நான்முகன் (பிரம்மா) = படைத்தல் தொழில்,
திருமால் (விஷ்ணு) =  காக்கும் தொழில்,
உருத்திரன் = ஒடுக்குதல் (அழித்தல்) தொழில்,
மகேசுவரன் = மறைத்தல் தொழில்,
சதாசிவன் = அருளல் தொழில்.

உலகமெல்லாம் ஒடுங்கும் ஊழிக்கால முடிவிலே படைத்தல் காத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும் திருமாலும் சேர்ந்து ஒடுங்குவார்கள் என்பதை அறிவித்தற்பொருட்டு அவர்களது முதுகு எலும்பினைத் தோள் மேல் தாங்குகிறான்  என்று கூறப்பட்டது தோழி!


(தொடரும்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 17, 2013 8:45 pm

திருச்சாழல். பயனுடைய தொடர் பதிவு. அருமை. தொடர வாழ்த்துகள் சாமி அவர்களே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jan 17, 2014 7:22 pm

வினா: தோழியே, அவனுக்கு ஆடை காட்டில் வாழ்கின்ற புலியினது தோல், சாப்பாடு மண்டை ஓட்டில், தங்குமிடம் சுடுகாடு. இப்படி இருக்கும் ஒருவனிடம் யார் அன்பு செலுத்தி தொண்டராவார்கள்? சொல்!

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 2 Y2LPSVOzSoua0XWCJEev+shivan

பதில்: சிவபெருமானுக்கு ஆடை புலியினது தோல், சாப்பாடு மண்டை ஓட்டில், தங்குமிடம் சுடுகாடு. இப்படி இருக்கும் ஒருவனிடம் யார் அன்பு செலுத்துவார்கள் என்று கேட்கிறாய்?   தேவர்களான நான்முகனும், திருமாலும் இந்திரனும் அவனுடைய பரம்பரை தொண்டர்கள் தெரியுமா தோழி?

ஆடையைப் பற்றி சொன்னாய்! அது எப்படி வந்தது கேள். தாருகாவனத்து முனிவர்கள் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். அவர்கள் தேவர்களை வணங்கி புலியை சிவபெருமான் மேல் ஏவி விட்டனர். சிவபெருமான் புலியைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாக்கிக் கொண்டார். இதைக்கண்ட தேவர்களின் தலைவனான இந்திரன் சிவபெருமானுக்கு அடியாரானான்.

நான்முகனும் திருமாலும் மேருமலையில் இருக்கும்பொழுது முனிவர்கள் சிலர் முதன்மையானவரும், பிறப்பு இறப்பின்றி என்றுமே உள்ளவரும், உயிருக்குயிராய் உள்ளவருமாகிய கடவுள் யார் என்று கேட்டனர். நான்முகனும் திருமாலும் தாமே பரம்பொருள் என்று கூறிப் போர் புரிந்தனர்.

சிவபெருமான் சோதிவடிவாய்த் தோன்றியருளினார்.  அதையுணர்ந்த திருமால் அகந்தை நீங்கிப் பெருமானை வணங்கினார்.  

பிரமன் வணங்காது இகழ்ந்துரைத்தார். பெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கிப் பிரமனுடைய உச்சித் தலையைக் கிள்ளி ஏந்தச் செய்தார். பிரமனது கபாலமே சிவபெருமான் கையில் ஏந்தி நிற்பது. இதனால் பிரமன் எம்பெருமானுக்கு அடியாரானார்.

எல்லாவற்றையும் ஒடுக்குபவன் சிவபெருமான். எல்லாவற்றையும் என்பது படைக்கும் தொழிலைச் செய்யும் பிரமனையும், காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலையும் சேர்த்து என்பது பொருள். ஒடுக்கும் இடம் சுடுகாடு எனும் போது, அந்த இடத்திலும் அவன்தானே இருந்தாக வேண்டும்.

பயன் கருதி அன்பு செய்பவருக்கும், எதையும் எதிர்பாராமல் அன்பு கொள்பவர்க்கும் என இருபாலருக்கும் சிவபெருமான் அருள் செய்கின்றார். ஆகையால் இப்படிப்பட்டவனிடம் யார்தான் அன்பு செலுத்தி தொண்டராகமாட்டார்கள்?


(தொடரும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக