புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
59 Posts - 50%
heezulia
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
1 Post - 1%
Shivanya
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
13 Posts - 3%
prajai
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
9 Posts - 2%
jairam
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
4 Posts - 1%
Rutu
மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_m10மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 11:01 am

மணலால் சிவலிங்கம் அமைத்த மகன்; சிவபூசைக்கு வைத்திருந்த பாலை உதைத்துத் தள்ளிய தந்தை MMDKAmw5RfKg3gOBPq7d+sundeswarar

திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம்!

முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும் திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிட்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் சான்றோர்கள் மிகுந்து இருந்தார்கள்.
அவர்களுள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் சண்டேசுவர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த சண்டேசுவரர், ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த  ஈடுபாடு இவருக்கு உண்டானது.

அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர் சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் சண்டேசுவரர்!
ஒரு நாள் சண்டேசுவரர் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓரு சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, சண்டேசுவரர் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார். ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச் சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே !

பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு சண்டேசுவரர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் சண்டேசுவரரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.
சண்டேசுவரர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை பெரியவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அனுதினமும் சண்டேசுவரர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை நல்ல பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விடுவார். நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார். பசுக்கள் மேய முடியா‌த இடத்தில் கல்லையும், முள்ளையும் பொருட்படுத்தாமல் அவரே, புற்களைச் சுத்தபடுத்தி அவைகளுக்கு ஊட்டுவார். பெற்றோர்கள் தான் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் சண்டேசுவரர்.

ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார்  சண்டேசுவரர் ! மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு சேமித்துக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவர் ஆநிரைகளை அன்புடனும், ஆதரவுடனும், பொறுப்புடனும், பெருமகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். சண்டேசுவரரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் இருந்தன. அது மட்டுமின்றி முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன.

அதுமட்டுமல்ல, ஆநிரைகளான அவைகள் சண்டேசுவரரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் சண்டேசுவரர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். சில சமயங்களில் கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் சண்டேசுவரரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட சண்டேசுவரர் அப்பாலை வீணாக்காமல் பரமன் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என்று எண்‌ணலானார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அநத இடத்திலேயே கோயில் ஒன்றை அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார்.  மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உடம்பிலே பக்தி வெள்ளம் பெருகியது. அவர் சிந்தை மகிழ்ந்தார். அடுத்தாற்போல் பரமனுக்கு பூசையும், திருமஞ்சனமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். அர்ச்சனைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டு வந்தார். திருமஞ்சனம் செய்வதற்காகப் பாலைப் புதிய பாண்டங்களில் ‌சேமித்தார். அறம், பொருள், இன்பம் வீடு வேதம் ஓதி திருமஞ்சனம் செய்தார். மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார்.

சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று சண்டேசுவர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. இவர் லிங்கத்திற்கு திருமஞ்சனம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும் சேய்ஞ்ஞலூர் பரமனின் திருவடிகளை அடைந்தது. அரனார் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங் கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார்.

இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும் ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன. ஒருநாள் சண்டேசுவரர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது திருமஞ்சனம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே. இது அடுக்குமா என்று கேட்டான்.

அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! சண்டேசுவரர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான்.

மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன். மறுநாள் காலை சண்டேசுவர் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான்.  வழக்கம்போல் சண்டேசுவரர் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக் கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிட்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். சண்டேசுவரர் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் ! சண்டேசுவரர்,  எழுந்தருளல் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது.

உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான். சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் !
சண்டேசுவரருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை. பூசையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் சண்டேசுவரர் காதுகளில் விழுந்தால்தானே! சண்டேசுவரர் தந்தையின் இடையூறுகளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினான். எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டுபண்ணியது.

பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூசையில் மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குத்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளி தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரை இழந்தான். இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த சண்டேசுவரர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார்.

அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார். பக்தியால் உலகை மறந்திருந்த சண்டேசுவரர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் சண்டேசுவர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர்.

இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். சண்டேசுவரரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

எம்பெருமான் சண்டேசுவரருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள்.

சண்டேசுவர நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் உத்திரம் நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக