புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
61 Posts - 55%
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
61 Posts - 58%
heezulia
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_m10கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu 14 Feb 2013 - 22:38

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?
-
நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு - இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
-
‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.
நாகு என்பதில் உள்ள ‘நா’ வை‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்லவேண்டும் என்று எண்ணுவது தவறு.
-
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்றுஎழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு - இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.
-
குசுடுதுபுறு என்பவற்றில்ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?
முடியாது.
-
அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு - இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.
-
எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?
உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.
போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள்என்று கேள்விப்பட்டிருக்கிறோம்..எழுத்தில் போலியா?
ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.
-
‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் 'அ' 'இ' சேர்ந்துபோலியாகும். எப்படி? 'ஐவனம்' என்பதை 'அஇவனம்' என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)
'ஔவை' என்பதை 'அ உவை' என எழுதலாம்.
மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ' ஐயப்பன் ' 'அய்யப்பன்' )
ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்றுமாதிரியாக எழுதலாம்.
-
எ ழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?
தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள்என இரு பிரிவுகள் உண்டு.
-
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.
உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.
அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.
உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.
-
உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.
பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்
அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
-
பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:
அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.
-
தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?
திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை - நான், நாம்; முன்னிலை - நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.
-
ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?
உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.
கனி=பெயர்ச் சொல்
பழுத்தது=வினைச் சொல்
கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);
கனி நனி சுவைத்தது - இதில் 'நனி' என்பது உரிச்சொல்.
-
எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?
தவறுகள் பலவகை. சொற்பொருள்தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)
ஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)
முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’வரக் கூடாது)
ஒருமை பன்மை பிழைகள் - ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ))
ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது - (ஓர் கண்ணாடி- ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)
செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.
இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
-
ஆங்கில மொழியில் 'a', 'an' எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?
உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.
ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்
உயிர்மெய் எழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்
ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி
‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?
உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.
-
ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி
இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்
தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.
-
யூத்புல் விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 14 Feb 2013 - 23:04

Powenraj அவர்களின் இலக்கண அறிமுகம் பயனுள்ளது!

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 14 Feb 2013 - 23:07

நல்லா இருக்கு புன்னகை அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu 14 Feb 2013 - 23:29

சிறந்த பதிவு
இதே போன்று மேலும் தொடர்க
"அஃது" என்பது உயிர் முன்னேயும்
"அது" என்பது உயிர்மெய் முன்னேயும் வரும்



உங்கள் யாழ்பாவாணன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 14 Feb 2013 - 23:32

தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!


சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 14 Feb 2013 - 23:45

சாமி wrote:தமிழ் எழுத்துகளில் பெரியஎழுத்து , சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை ; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!


சூப்பருங்க
சூப்பருங்க

ஆனாலும் இன்னும் வெட்டிகிட்டு சாகறோமே - அதான் வருத்தம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 15 Feb 2013 - 0:19

நல்ல இலக்கண பதிவு நன்றி நன்றி நன்றி




கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Tகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Uகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Oகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Hகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Aகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Mகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் Eகொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 15 Feb 2013 - 8:23

அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக