புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
1 Post - 3%
viyasan
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அது ஒரு வரம் Poll_c10அது ஒரு வரம் Poll_m10அது ஒரு வரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது ஒரு வரம்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Tue Feb 12, 2013 10:02 am

அது ஒரு வரம்
(சிறுகதை)

திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு.

ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு ஏக்கம்… அவளையுமறியாமல் அவளுள்ளிருந்து எட்டிப் பார்த்தது.

“ச்சை..ஏன்தான் இந்த மதிய நேரத்துல மழை வந்து வாதிக்குதோ?” என்று வாய்விட்டே மழையைச் சபித்தாள்.

“ஏய்.ஏய்..சும்மா மழையைத் திட்டாதே…அது வந்ததினால்தான் நீ மாமா வீட்டுல வந்து மழைக்கு ஒதுங்க ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு....அப்படி ஒதுங்கினதாலதான் உன் மிலிட்டரிக்கார மாமன் மகன் உன்னை உள்ளார கூப்பிட ஒரு வாய்ப்பு அமைஞ்சுது” உள் மனம் மழைக்கு வக்காலத்து வாங்கிப் பேசியது.

“அது செரி..இப்படியே ஈரச் சேலையோட நின்னு யோசனை பண்ணிட்டிருந்தா அறிவு வராது சாவித்திரி…ஜலதோஷம்தான் வரும்” சிரித்தபடி சொன்ன மாமன் மகன் விஜயகுமாரை வெட்கத்துடன் பார்த்தாள்.

“அது வந்து..அத்தையும் மாமாவும் இருப்பாங்கன்னு நெனச்சுத்தான் இங்க வந்து ஒதுங்கினேன்” நடுங்கும் குரலில் சொன்னாள் அவள்.

“ஏன்..நான் தனியா இருந்தா வரமாட்டியா?..பயமா?…நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்?”என்றான் பெரிதாய்ச் சிரித்தவாறே.

மிலிட்டரிக்காரன் என்பதற்காக சிரிப்புக் கூடவா இப்படி முரட்டுத்தனமா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாவித்திரி “பயமெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் கழுத்தை அழகாய் ஒடித்தபடி.

“சரி..சரி..பேசிட்டே நிக்காதே…அந்த ரூமுக்குள்ளார போய் ஈரத்தைத் துடைச்சிட்டு அம்மாவோட சேலை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டாவது வா”

பலமாய் மறுத்தவள் அவன் முகம் வாடிப் போகக் கண்டு தயங்கித் தயங்கிச் சென்றாள்.

அடுத்த நான்காவது நிமிடத்தில் “படார்”என்ற இடியோசைக்கு பயந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு அரைகுறை ஆடையுடன் ஓடிவந்து தன் மாமன் மகனை இறுக்க கட்டிக் கொண்டாள்.

மனதில் பயத்தின் படபடப்பு அடங்க பத்து நிமிடத்திற்கும் மேலானது.

அது அடங்கியதும் உடலில் வேறொரு துடிப்பு தோன்றியது. இரும்புத் துhண் போன்ற அந்த ராணுவ வீரனின் இறுக்கம் அவளுள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, களமிறங்கும் ஆசை கண நேரத்தில் இருவரையும் சாய்த்தது.

வெளியெ மழை ஓய்ந்தது.

சுவரோரமாய் கண்கள் கலங்கியபடி நின்றிருந்த சாவித்திரியை நெருங்கிய விஜயகுமார் அவள் தோளைத் தொட்டுத் திருப்பி “கவலைப்படாதே சாவித்திரி…இந்த முறை நான் போயிட்டு மூணே மாசத்துல லீவ் போட்டுட்டு வர;றேன்…வந்ததும்..உடனே நிச்சயதார்த்தம்…கல்யாணம்தான்..சரியா?”

அண்ணாந்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தவள் பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் ‘சரி’என்கிற பாணியில் ஆட்டி விட்டு வெளியேறினாள்.

மறுநாள் மாலையே புறப்பட்டு மூன்றாவது நாள் டூட்டியில் ஜாய்ன் ஆன விஜயகுமார் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் போர் புரிய அனுப்பப் பட்டான்.
போர்க்களம் வரை அவனை துரத்திச் சென்ற விதி நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பட்டியலில் அவன் பெயரையும் இடம் பெறச் செய்து விட்டே ஓயந்தது.

செய்தியைக் கேட்டதும் இதயமே அறுந்து விழுந்தது போல் கதறினாள் சாவித்திரி. மகனை இழந்து தவிக்கும் அத்தையையும் மாமாவையும் பார்த்துப் பார்த்து துடித்தாள.; தனக்கு ஆறுதல் சொல்லவே நூறு பர் தேவை என்கிற நிலையிலிருந்தும் அந்த வயதான ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.

களம் வரை சென்று காவு வாங்கியும் ஓயாத விதி சாவித்திரியின் வயிற்றிலும் விளையாடத் துவங்கியது. இரண்டாவது மாத இறுதியில்தான் அவளுக்கே அந்த உண்மை புரிந்தது. “ஆண்டவா…இது என்ன சோதனை?..நான் என்ன செய்வேன்?..யார்கிட்ட சொல்லி அழுவேன்?” தனிமையில் அழுது தவித்தாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் அதை அவளால் மறைக்க முடியும்? அவள் தாய் சரஸ்வதிக்கு சந்தேகம் வரத் துவங்கியது. ஜாடை மாடையாகக் கேட்டவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

அழுதபடியே சொன்னாள். தன் தவறுக்காக தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.

செய்வதறியாது சிலையாய்ச் சமைந்து நின்றாள் சரஸ்வதி. மனம் மட்டும் “அடிப்பாவி மகளே..இப்படியொரு காரியத்தைப் பண்ணி குடும்ப மானத்தைக் குலைச்சிட்டியேடி” என்று மௌனமாய்க் குமுறியது.

கணவர் வந்ததும் அவரைத் தனியே அழைத்துச் சென்று கண்ணீருடன் சொன்னாள்.

அதிர்ந்து போனார் சாமிநாதன.; “என்ன…நீ சொல்றது நெஜமா?” நம்ப முடியாமல் கேட்டார்.

மனைவி உறுதியாய்ச் சொன்னபின் தலையில் கைகளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து மெல்லமாய்க் குலுங்கினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, விஜயகுமாரின் உடல் ராணுவ வேனில் வந்திறங்கியது.

அம்மாவும் அப்பாவும் அதைக் காண சென்றிருந்த நேரத்தில் தன்னைக் கவர்ந்த இரும்பு மனிதனை சவப்பெட்டியில் காணச் சகியாத சாவித்திரி யாருமில்லாத அந்தத் தனிமையை உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கில் தொங்க முயல,

எதற்கோ திரும்பி வந்த சரஸ்வதி அதைக் கண்டு கூச்சலிட, கூட்டம் கூடியது. அவசர அவசரமாக கதவு உடைக்கப்பட்டு, சாவித்திரி காப்பாற்றப் பட்டாள்.

“அடிப் பாவிப் பெண்ணே..ஏண்டி இப்படியொரு காரியத்தச் செய்யப் பார்த்தே?” பதறினாள் தாய்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சாமிநாதன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மகளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அம்மா..சாவித்திரி…கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் வாங்கிட்டோமேன்னு நீ கவலைப் படாதே சாவித்திரி…உன்னோட வயத்துல வளர்றது ஒரு உதவாக்கரையோட கருவல்ல…இந்த ஊருக்கே பெருமை சேர்த்த…இந்த ஊரே நெனச்சுப் பெருமைப் படற ஒரு உண்மை வீரனோட கரு…தாய் நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு உத்தமனோட கரு…இதைச் சுமக்கறது உனக்குக் கறை இல்லைம்மா…பெருமை..பெருமை.!...இதுக்காக யார் என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை…அந்த வீரனோட வாரிசை நீ பெத்துக்குடும்மா…நானே வளர்க்கறேன்…வளர்த்து இந்த நாட்டுக்கு மறுபடியும் இன்னொரு ராணுவ வீரனைக் குடுக்கறேன்…”ஆவேசமாய்…அதே வேளை அh;த்தமுடன் பேசிய அவரைப் பார்த்து ஊரே வியந்தது.

தன் வயிற்றுக் கர்ப்பத்தை அதுவரையில் கறையென்று நினைத்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கு அது ஒரு வரம் என்று அப்போதுதான் புரிந்தது.
(முற்றும்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக