புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அது ஒரு வரம்
Page 1 of 1 •
- mukildina@gmail.comபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010
அது ஒரு வரம்
(சிறுகதை)
திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு.
ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு ஏக்கம்… அவளையுமறியாமல் அவளுள்ளிருந்து எட்டிப் பார்த்தது.
“ச்சை..ஏன்தான் இந்த மதிய நேரத்துல மழை வந்து வாதிக்குதோ?” என்று வாய்விட்டே மழையைச் சபித்தாள்.
“ஏய்.ஏய்..சும்மா மழையைத் திட்டாதே…அது வந்ததினால்தான் நீ மாமா வீட்டுல வந்து மழைக்கு ஒதுங்க ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு....அப்படி ஒதுங்கினதாலதான் உன் மிலிட்டரிக்கார மாமன் மகன் உன்னை உள்ளார கூப்பிட ஒரு வாய்ப்பு அமைஞ்சுது” உள் மனம் மழைக்கு வக்காலத்து வாங்கிப் பேசியது.
“அது செரி..இப்படியே ஈரச் சேலையோட நின்னு யோசனை பண்ணிட்டிருந்தா அறிவு வராது சாவித்திரி…ஜலதோஷம்தான் வரும்” சிரித்தபடி சொன்ன மாமன் மகன் விஜயகுமாரை வெட்கத்துடன் பார்த்தாள்.
“அது வந்து..அத்தையும் மாமாவும் இருப்பாங்கன்னு நெனச்சுத்தான் இங்க வந்து ஒதுங்கினேன்” நடுங்கும் குரலில் சொன்னாள் அவள்.
“ஏன்..நான் தனியா இருந்தா வரமாட்டியா?..பயமா?…நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்?”என்றான் பெரிதாய்ச் சிரித்தவாறே.
மிலிட்டரிக்காரன் என்பதற்காக சிரிப்புக் கூடவா இப்படி முரட்டுத்தனமா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாவித்திரி “பயமெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் கழுத்தை அழகாய் ஒடித்தபடி.
“சரி..சரி..பேசிட்டே நிக்காதே…அந்த ரூமுக்குள்ளார போய் ஈரத்தைத் துடைச்சிட்டு அம்மாவோட சேலை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டாவது வா”
பலமாய் மறுத்தவள் அவன் முகம் வாடிப் போகக் கண்டு தயங்கித் தயங்கிச் சென்றாள்.
அடுத்த நான்காவது நிமிடத்தில் “படார்”என்ற இடியோசைக்கு பயந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு அரைகுறை ஆடையுடன் ஓடிவந்து தன் மாமன் மகனை இறுக்க கட்டிக் கொண்டாள்.
மனதில் பயத்தின் படபடப்பு அடங்க பத்து நிமிடத்திற்கும் மேலானது.
அது அடங்கியதும் உடலில் வேறொரு துடிப்பு தோன்றியது. இரும்புத் துhண் போன்ற அந்த ராணுவ வீரனின் இறுக்கம் அவளுள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, களமிறங்கும் ஆசை கண நேரத்தில் இருவரையும் சாய்த்தது.
வெளியெ மழை ஓய்ந்தது.
சுவரோரமாய் கண்கள் கலங்கியபடி நின்றிருந்த சாவித்திரியை நெருங்கிய விஜயகுமார் அவள் தோளைத் தொட்டுத் திருப்பி “கவலைப்படாதே சாவித்திரி…இந்த முறை நான் போயிட்டு மூணே மாசத்துல லீவ் போட்டுட்டு வர;றேன்…வந்ததும்..உடனே நிச்சயதார்த்தம்…கல்யாணம்தான்..சரியா?”
அண்ணாந்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தவள் பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் ‘சரி’என்கிற பாணியில் ஆட்டி விட்டு வெளியேறினாள்.
மறுநாள் மாலையே புறப்பட்டு மூன்றாவது நாள் டூட்டியில் ஜாய்ன் ஆன விஜயகுமார் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் போர் புரிய அனுப்பப் பட்டான்.
போர்க்களம் வரை அவனை துரத்திச் சென்ற விதி நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பட்டியலில் அவன் பெயரையும் இடம் பெறச் செய்து விட்டே ஓயந்தது.
செய்தியைக் கேட்டதும் இதயமே அறுந்து விழுந்தது போல் கதறினாள் சாவித்திரி. மகனை இழந்து தவிக்கும் அத்தையையும் மாமாவையும் பார்த்துப் பார்த்து துடித்தாள.; தனக்கு ஆறுதல் சொல்லவே நூறு பர் தேவை என்கிற நிலையிலிருந்தும் அந்த வயதான ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.
களம் வரை சென்று காவு வாங்கியும் ஓயாத விதி சாவித்திரியின் வயிற்றிலும் விளையாடத் துவங்கியது. இரண்டாவது மாத இறுதியில்தான் அவளுக்கே அந்த உண்மை புரிந்தது. “ஆண்டவா…இது என்ன சோதனை?..நான் என்ன செய்வேன்?..யார்கிட்ட சொல்லி அழுவேன்?” தனிமையில் அழுது தவித்தாள்.
எத்தனை நாட்களுக்குத்தான் அதை அவளால் மறைக்க முடியும்? அவள் தாய் சரஸ்வதிக்கு சந்தேகம் வரத் துவங்கியது. ஜாடை மாடையாகக் கேட்டவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.
அழுதபடியே சொன்னாள். தன் தவறுக்காக தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.
செய்வதறியாது சிலையாய்ச் சமைந்து நின்றாள் சரஸ்வதி. மனம் மட்டும் “அடிப்பாவி மகளே..இப்படியொரு காரியத்தைப் பண்ணி குடும்ப மானத்தைக் குலைச்சிட்டியேடி” என்று மௌனமாய்க் குமுறியது.
கணவர் வந்ததும் அவரைத் தனியே அழைத்துச் சென்று கண்ணீருடன் சொன்னாள்.
அதிர்ந்து போனார் சாமிநாதன.; “என்ன…நீ சொல்றது நெஜமா?” நம்ப முடியாமல் கேட்டார்.
மனைவி உறுதியாய்ச் சொன்னபின் தலையில் கைகளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து மெல்லமாய்க் குலுங்கினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, விஜயகுமாரின் உடல் ராணுவ வேனில் வந்திறங்கியது.
அம்மாவும் அப்பாவும் அதைக் காண சென்றிருந்த நேரத்தில் தன்னைக் கவர்ந்த இரும்பு மனிதனை சவப்பெட்டியில் காணச் சகியாத சாவித்திரி யாருமில்லாத அந்தத் தனிமையை உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கில் தொங்க முயல,
எதற்கோ திரும்பி வந்த சரஸ்வதி அதைக் கண்டு கூச்சலிட, கூட்டம் கூடியது. அவசர அவசரமாக கதவு உடைக்கப்பட்டு, சாவித்திரி காப்பாற்றப் பட்டாள்.
“அடிப் பாவிப் பெண்ணே..ஏண்டி இப்படியொரு காரியத்தச் செய்யப் பார்த்தே?” பதறினாள் தாய்.
விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சாமிநாதன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மகளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அம்மா..சாவித்திரி…கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் வாங்கிட்டோமேன்னு நீ கவலைப் படாதே சாவித்திரி…உன்னோட வயத்துல வளர்றது ஒரு உதவாக்கரையோட கருவல்ல…இந்த ஊருக்கே பெருமை சேர்த்த…இந்த ஊரே நெனச்சுப் பெருமைப் படற ஒரு உண்மை வீரனோட கரு…தாய் நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு உத்தமனோட கரு…இதைச் சுமக்கறது உனக்குக் கறை இல்லைம்மா…பெருமை..பெருமை.!...இதுக்காக யார் என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை…அந்த வீரனோட வாரிசை நீ பெத்துக்குடும்மா…நானே வளர்க்கறேன்…வளர்த்து இந்த நாட்டுக்கு மறுபடியும் இன்னொரு ராணுவ வீரனைக் குடுக்கறேன்…”ஆவேசமாய்…அதே வேளை அh;த்தமுடன் பேசிய அவரைப் பார்த்து ஊரே வியந்தது.
தன் வயிற்றுக் கர்ப்பத்தை அதுவரையில் கறையென்று நினைத்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கு அது ஒரு வரம் என்று அப்போதுதான் புரிந்தது.
(முற்றும்)
(சிறுகதை)
திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு.
ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு ஏக்கம்… அவளையுமறியாமல் அவளுள்ளிருந்து எட்டிப் பார்த்தது.
“ச்சை..ஏன்தான் இந்த மதிய நேரத்துல மழை வந்து வாதிக்குதோ?” என்று வாய்விட்டே மழையைச் சபித்தாள்.
“ஏய்.ஏய்..சும்மா மழையைத் திட்டாதே…அது வந்ததினால்தான் நீ மாமா வீட்டுல வந்து மழைக்கு ஒதுங்க ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு....அப்படி ஒதுங்கினதாலதான் உன் மிலிட்டரிக்கார மாமன் மகன் உன்னை உள்ளார கூப்பிட ஒரு வாய்ப்பு அமைஞ்சுது” உள் மனம் மழைக்கு வக்காலத்து வாங்கிப் பேசியது.
“அது செரி..இப்படியே ஈரச் சேலையோட நின்னு யோசனை பண்ணிட்டிருந்தா அறிவு வராது சாவித்திரி…ஜலதோஷம்தான் வரும்” சிரித்தபடி சொன்ன மாமன் மகன் விஜயகுமாரை வெட்கத்துடன் பார்த்தாள்.
“அது வந்து..அத்தையும் மாமாவும் இருப்பாங்கன்னு நெனச்சுத்தான் இங்க வந்து ஒதுங்கினேன்” நடுங்கும் குரலில் சொன்னாள் அவள்.
“ஏன்..நான் தனியா இருந்தா வரமாட்டியா?..பயமா?…நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்?”என்றான் பெரிதாய்ச் சிரித்தவாறே.
மிலிட்டரிக்காரன் என்பதற்காக சிரிப்புக் கூடவா இப்படி முரட்டுத்தனமா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாவித்திரி “பயமெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் கழுத்தை அழகாய் ஒடித்தபடி.
“சரி..சரி..பேசிட்டே நிக்காதே…அந்த ரூமுக்குள்ளார போய் ஈரத்தைத் துடைச்சிட்டு அம்மாவோட சேலை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டாவது வா”
பலமாய் மறுத்தவள் அவன் முகம் வாடிப் போகக் கண்டு தயங்கித் தயங்கிச் சென்றாள்.
அடுத்த நான்காவது நிமிடத்தில் “படார்”என்ற இடியோசைக்கு பயந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு அரைகுறை ஆடையுடன் ஓடிவந்து தன் மாமன் மகனை இறுக்க கட்டிக் கொண்டாள்.
மனதில் பயத்தின் படபடப்பு அடங்க பத்து நிமிடத்திற்கும் மேலானது.
அது அடங்கியதும் உடலில் வேறொரு துடிப்பு தோன்றியது. இரும்புத் துhண் போன்ற அந்த ராணுவ வீரனின் இறுக்கம் அவளுள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, களமிறங்கும் ஆசை கண நேரத்தில் இருவரையும் சாய்த்தது.
வெளியெ மழை ஓய்ந்தது.
சுவரோரமாய் கண்கள் கலங்கியபடி நின்றிருந்த சாவித்திரியை நெருங்கிய விஜயகுமார் அவள் தோளைத் தொட்டுத் திருப்பி “கவலைப்படாதே சாவித்திரி…இந்த முறை நான் போயிட்டு மூணே மாசத்துல லீவ் போட்டுட்டு வர;றேன்…வந்ததும்..உடனே நிச்சயதார்த்தம்…கல்யாணம்தான்..சரியா?”
அண்ணாந்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தவள் பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் ‘சரி’என்கிற பாணியில் ஆட்டி விட்டு வெளியேறினாள்.
மறுநாள் மாலையே புறப்பட்டு மூன்றாவது நாள் டூட்டியில் ஜாய்ன் ஆன விஜயகுமார் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் போர் புரிய அனுப்பப் பட்டான்.
போர்க்களம் வரை அவனை துரத்திச் சென்ற விதி நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பட்டியலில் அவன் பெயரையும் இடம் பெறச் செய்து விட்டே ஓயந்தது.
செய்தியைக் கேட்டதும் இதயமே அறுந்து விழுந்தது போல் கதறினாள் சாவித்திரி. மகனை இழந்து தவிக்கும் அத்தையையும் மாமாவையும் பார்த்துப் பார்த்து துடித்தாள.; தனக்கு ஆறுதல் சொல்லவே நூறு பர் தேவை என்கிற நிலையிலிருந்தும் அந்த வயதான ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.
களம் வரை சென்று காவு வாங்கியும் ஓயாத விதி சாவித்திரியின் வயிற்றிலும் விளையாடத் துவங்கியது. இரண்டாவது மாத இறுதியில்தான் அவளுக்கே அந்த உண்மை புரிந்தது. “ஆண்டவா…இது என்ன சோதனை?..நான் என்ன செய்வேன்?..யார்கிட்ட சொல்லி அழுவேன்?” தனிமையில் அழுது தவித்தாள்.
எத்தனை நாட்களுக்குத்தான் அதை அவளால் மறைக்க முடியும்? அவள் தாய் சரஸ்வதிக்கு சந்தேகம் வரத் துவங்கியது. ஜாடை மாடையாகக் கேட்டவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.
அழுதபடியே சொன்னாள். தன் தவறுக்காக தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.
செய்வதறியாது சிலையாய்ச் சமைந்து நின்றாள் சரஸ்வதி. மனம் மட்டும் “அடிப்பாவி மகளே..இப்படியொரு காரியத்தைப் பண்ணி குடும்ப மானத்தைக் குலைச்சிட்டியேடி” என்று மௌனமாய்க் குமுறியது.
கணவர் வந்ததும் அவரைத் தனியே அழைத்துச் சென்று கண்ணீருடன் சொன்னாள்.
அதிர்ந்து போனார் சாமிநாதன.; “என்ன…நீ சொல்றது நெஜமா?” நம்ப முடியாமல் கேட்டார்.
மனைவி உறுதியாய்ச் சொன்னபின் தலையில் கைகளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து மெல்லமாய்க் குலுங்கினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, விஜயகுமாரின் உடல் ராணுவ வேனில் வந்திறங்கியது.
அம்மாவும் அப்பாவும் அதைக் காண சென்றிருந்த நேரத்தில் தன்னைக் கவர்ந்த இரும்பு மனிதனை சவப்பெட்டியில் காணச் சகியாத சாவித்திரி யாருமில்லாத அந்தத் தனிமையை உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கில் தொங்க முயல,
எதற்கோ திரும்பி வந்த சரஸ்வதி அதைக் கண்டு கூச்சலிட, கூட்டம் கூடியது. அவசர அவசரமாக கதவு உடைக்கப்பட்டு, சாவித்திரி காப்பாற்றப் பட்டாள்.
“அடிப் பாவிப் பெண்ணே..ஏண்டி இப்படியொரு காரியத்தச் செய்யப் பார்த்தே?” பதறினாள் தாய்.
விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சாமிநாதன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மகளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அம்மா..சாவித்திரி…கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் வாங்கிட்டோமேன்னு நீ கவலைப் படாதே சாவித்திரி…உன்னோட வயத்துல வளர்றது ஒரு உதவாக்கரையோட கருவல்ல…இந்த ஊருக்கே பெருமை சேர்த்த…இந்த ஊரே நெனச்சுப் பெருமைப் படற ஒரு உண்மை வீரனோட கரு…தாய் நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு உத்தமனோட கரு…இதைச் சுமக்கறது உனக்குக் கறை இல்லைம்மா…பெருமை..பெருமை.!...இதுக்காக யார் என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை…அந்த வீரனோட வாரிசை நீ பெத்துக்குடும்மா…நானே வளர்க்கறேன்…வளர்த்து இந்த நாட்டுக்கு மறுபடியும் இன்னொரு ராணுவ வீரனைக் குடுக்கறேன்…”ஆவேசமாய்…அதே வேளை அh;த்தமுடன் பேசிய அவரைப் பார்த்து ஊரே வியந்தது.
தன் வயிற்றுக் கர்ப்பத்தை அதுவரையில் கறையென்று நினைத்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கு அது ஒரு வரம் என்று அப்போதுதான் புரிந்தது.
(முற்றும்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|