புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
40 Posts - 63%
heezulia
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
232 Posts - 42%
heezulia
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_m10அட்டைக்கத்தி ராஜாக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்டைக்கத்தி ராஜாக்கள்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Sat Feb 09, 2013 12:54 pm

அட்டைக்கத்தி ராஜாக்கள்
சிறுகதை

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதோ ஒரு முறை தெரியாத்தனமா நண்பர் ஒருவரின் வற்பறுத்தலுக்காகச் சென்று கவிதை என்ற பெயரில் சில கன்னாபின்னாக்களையும்…தத்துவம் என்ற பெயரில் சில தத்துப்பித்துக்களையும் கேட்டு….மனம் நொந்து….நெடுநாள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து…ஏதோ இப்போதுதான் கொஞ்சமாய்த் தேறி…பழைய நிலைமைக்கு வந்திருக்கேன்.

இந்த நேரத்தில் எனக்கு மாபெரும் சோதனை என் மகள் அஞ்சலி மூலமாக வந்தது.

'அப்பா…இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீங்க ப்ரீதானே?”

'ஏம்மா எதுக்குக் கேட்கறே?”

'அன்னிக்கு ஆர்.எஸ்.புரம் நகரத்தார் சங்க கட்டிடத்துல ஒரு இலக்கியக் கூட்டம் நடக்குதுப்பா… அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும்….நீங்களும் கூட வர்றீங்க”

எனக்கு பகீரென்றது. 'என்னது….இலக்கியக் கூட்டமா?…நானா?…அம்மா தாயே…என்னை ஆளை விடு…நம்மால் ஆகாது”

'அப்பா…நான் எப்படிப்பா தனியாப் போறது?”

'உங்கம்மாவைக் கூட்டிட்டுப் போ…”

'அது சரி…எனக்காவது ஓரளவுக்கு டவுன் பஸ் பழக்கமிருக்கு…அம்மாவுக்கு எந்த நெம்பர்…எங்க போகும்னே தெரியாது…அதைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்களே…” சிணுங்கிளாள் அஞ்சலி.

'அம்மா…வேண்டாம்மா…வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லு…செய்யறேன்…இலக்கியக் கூட்டம் மட்டும் வேண்டாம்மா..” கெஞ்சினேன் நான்.

அவள் பிடிவாதமும் என் மறுப்பும் கடுமையாக மோதியதில் அவள் பிடிவாதமே வெல்ல நான் பலியாடானேன்.

ஞாயிற்றுக் கிழமை.

ஓன்பது மணி நிகழ்ச்சிக்கு காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி டவுன் பஸ்ஸைப் பிடித்து ஒன்பதே காலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது அரங்கினுள் எண்ணி நாலே பேர்தான் இருந்தனர்;

'சார்…நிகழ்ச்சி…இருக்கல்ல?” சந்தேகப்பட்டு ஒருவரிடம் கேட்டேன்.

'இருக்கு…இருக்கு…எப்படியும்…பத்து….பத்தரைக்கு ஆரம்பிச்சிடுவாங்க”

இரண்டாம் வரிசையில் இருக்கை பிடித்து அமர்ந்தோம்.

கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் சேரத் துவங்கி பத்தரை மணி வாக்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் தறுவாயில் அரங்கின் முக்கால்வாசி நாற்காலிகள் நிரம்பியிருந்தன.

யார் யாரோ வந்து எதையெதையோ பேசிவிட்டுச் சென்றபின் சிறப்புப் பேச்சாளர் தன் உரையைத் துவக்கினார்.

'யாரும்மா இவரு?” கிசுகிசுப்பான குரலில் அஞ்சலியிடம் கேட்டேன்.

'என்னப்பா இப்படிக் கேட்டுட்டீங்க?….இவருதாம்பா 'ஆம்பூர் அனலேந்தி'….நல்ல இலக்கியவாதி….சாட்டையடிப் பேச்சாளர்…பத்திரிக்கைகளிலெல்லாம் கூட இவரு பேரு அடிக்கடி வருமே…”

எனக்கென்னவோ அப்படியொரு பெயரை இதுவரை கேட்டதாகவோ….படித்ததாகவோ சுத்தமாகவே ஞாபகத்திலில்லை. 'என்னத்தைப் பேசிக் கிழிச்சுடப் போறான் இவன்?' என்கிற அலட்சிய மனப்பான்மையோடிருந்த என்னை சற்று கவனிக்க வைத்தது அவரின் பேச்சு.

'ஈவ் டீஸிங்'” என்கிற பெண்களுக்கெதிரான சமூகக் கொடுமை பற்றியும்…அது சம்மந்தப்பட்ட பெண்களையும்…அவளது குடும்பத்தாரையும் உளரீதியாக எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பது பற்றியும்….அக்கொடுமையினால் உயிரிழந்த மாந்தர்களைப்பற்றியும்…அது போன்ற கொடுமைகளை இழைக்கும் இளைஞர்களை…ஆண் வர்க்கத்தினரை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பது பற்றியும் அந்த ஆம்பூர் அனலேந்தி பேச்சில் தெறித்த அனல் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. நான் மட்டுமல்ல…மொத்தக் கூட்டமும் அனலேந்தி என்ற பெயருக்குப் பொருத்தமானவர்தான் இவர் என்கிற கருத்தை தம் அதிர வைக்கும் கரவொலியால் தெரிவித்தது.

'நடப்புச் சமூகத்தில நம் கண்ணெதிரே நிகழும் இது போன்ற கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்….அப்படி ஏற்படாத பட்சத்தில் 'நான் கோழை” என்பதை பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில் தொங்க வேண்டும்…”என்று அவர் பேசிய போது எழுந்த கைதட்டல் அரங்கின் மேற்கூரையில் மோதி எதிரொலித்தது.

அஞ்சலி பெருமிதமாய்த் திரும்பி என்னைப் பார்க்க நான் புருவத்தை உயர்த்தி ஆமோதித்தேன்

கூட்டம் முடிந்து கிளம்பி, பேருந்து நிலையத்தை வந்தடையும் போது மாலை மூன்று மணி ஆகிவிட்டது.

எங்களுக்கான பஸ் புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்க ஓடிப் போய் ஏறிக் கொண்டோம்.

பஸ்ஸில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருக்க இருவருக்கும் இடம் கிடைத்து அமர்ந்தோம். குனிந்து பாக்கெட்டில் கை விட்டு சில்லரை எடுக்கும் போது 'சிவானந்தா காலனி ஒண்ணு குடுங்க….”

எங்கோ கேட்ட குரலாய்த் தெரிய நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு முன் இருக்கையில் ஆம்பூர் அனலேந்தி.

'ஓ..இவரும் இந்த பஸ்ஸில்தான் வருகிறாரா?”

பஸ் வடகோவை மேம்பாலம் நிறுத்தத்தில் நின்ற போது நான்கு ஜீன்ஸ் இளைஞர்கள் சத்தமாய்ப் பேசிச் சிரித்தபடியே பஸ்ஸில் ஏறினர்.

பஸ்ஸிற்குள் இப்போது சிகரெட் வாடை.

எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து சாய்ந்தபடி நின்று கொண்டு அவ்வப்போது அஞ்சலியை அவர்கள் பார்வையால் தீண்ட நான் முறைக்க ஆரம்பித்தேன்.

'மச்சி….இப்பெல்லாம்…மயிலுக…செக்யூரிட்டியோடவே வருதுகப்பா…” காதில் கடுக்கன் அணிந்தவன் சொல்ல,

'நீ ஏனப்பா அதக் கண்டுக்கறே?….நமக்கு மயிலுகதான் முக்கியம்…அத்த மட்டும் பாப்பியா…அத்த விட்டுட்டு…”

'மச்சி…இங்கொரு செவப்பு மயிலு…எப்படி செழிப்பாயிருக்கு கண்டுக்கினியா?”

அஞ்சலி சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

'செழிப்பிற்குக் காரணமான விவசாயி கூடவே வரானே”

நான் பற்களை 'நற…நற' வென்று கடித்தேன.;

'மச்சி…உனுக்கு செம்மயிலு பிடிக்குமா?..செம்மீனு பிடிக்குமா?”

என் நரம்புகள் முறுக்கேற 'ராஸ்கல்….ஓங்கி அறைஞ்சேன்னா…உம்மூஞ்சி…செம்மூஞ்சி ஆய்டும்” ஆவேசமாய்க் கத்தினேன்.

பஸ்ஸிலிருந்த அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர;. ஆம்பூர் அனலேந்தி உட்பட.

ஆனால் யாரிடமும் எவ்வித ரீயாக்ஷனும் இல்லை. 'நமக்கென்ன?”என்கிற பாணியில் அவர்களனைவரும் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கையில் மூழ்கியது என்னை வியப்பிலாழ்த்தியது.

'மச்சி…விவசாயி கூவுறானே?”

'என்ன பண்ணச் சொல்றான்?…ஏர் உழுகச் சொல்லுறானா…இல்ல தண்ணி காட்டச் சொல்றானா?” தொங்கு மீசை இளைஞன் சொல்ல, மற்றவர்கள் 'ஹோ”வென்று கோரஸாய்ச் சிரித்தனர்.

எனக்கு அவமானமாகவும்…ஆத்திரமாகவும் இருந்தது.

'ஈவ் டீஸிங்” கைப் பற்றிப் பொறி பறக்கப் பேசிய ஆம்பூர் அனலேந்திக்கு பின்னால் நடக்கும் கூத்து நன்றாகவே தெரியும்…தெரிந்தும் அமைதியாய்…காது கேளாதவராய் அமர்ந்திருந்தார்.

'அடப்பாவி…மேடைல அந்த முழங்கு முழங்கினானே….இங்க கண் எதிரே நடக்குது…தெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானே…அப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?..பேச்சு வேறு…செயல் வேறு…என்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?”

இப்போது என் கோபம் அந்த இளைஞர்கள் மீதிருந்து அந்த போலி இலக்கியவாதியின் மேல் தாவியது. 'விடக் கூடாது இவனை” என்கிற பாணியில் முன் இருக்கையில் இருந்த ஆம்பூர் அனலேந்தியின் தோள்களைத் தட்டினேன்.

திடீரென்று கண்களை மூடித் துhங்குவது போல் அவர் பாசாங்கு செய்ய,

'த்துh..நீயெல்லாம் ஒரு மனுசனா…அட்டைக்கத்தி ராசா…”

மனசுக்குள் திட்டி விட்டு அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பி 'என்ன தம்பிகளா…ஈவ் டீஸிங்கா?….இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?”

'அய்யா பெரியவரே..நீங்க பாட்டுக்கு தண்டனைன்னு சொல்லி…'எம் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்'னு மட்டும் சொல்லிடாதீங்க…நாங்க நாலு பேரும் பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்டுவோம்…” என்று காதில் கடுக்கன் போட்டவன் சொல்ல,

மற்றவர்களின சிரிப்பு உச்சத்திற்குப் போனது. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.

அடுத்த பஸ் நிறுத்தத்தில் அந்த ஆம்பூர் அனலேந்தி எழுந்து அவசரமாய் அவசரமாய் இறங்க எட்டிப் பார்த்தேன். அது அவர் இறங்க வேண்டிய நிறுத்தமே அல்ல. அப்படியானால் ஏன் இறங்கணும்?..

'கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் இல்லாதவர்கள் 'நான் கோழை”என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில் தொங்க வேண்டும்”

அவரின் அனல் பேச்சு என் காதுகளில் ஒலிக்க,

மொத்த எச்சிலையும் ஒன்று திரட்டி ஜன்னல் வழியே 'சொத்” தென்று துப்பினேன்.

அதையும் பார்த்து விட்டு, பாராதது போல் சென்றார் ஆம்பூர் அனலேந்தி.


(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்.






Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 09, 2013 1:28 pm

அடப்பாவி…மேடைல அந்த முழங்கு முழங்கினானே….இங்க கண் எதிரே நடக்குது…தெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானே…அப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?..பேச்சு வேறு…செயல் வேறு…என்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?”

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




அட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Tஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Oஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Mஅட்டைக்கத்தி ராஜாக்கள் Eஅட்டைக்கத்தி ராஜாக்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 09, 2013 1:29 pm

சூப்பர் கதை முகில்.

அட்டைகத்திகள் தான் நம் நாட்டில் அதிகம். எனக்கு இது வரை இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை - நிகழ்ந்தால் தான் தெரியும் நானும் அட்டை கத்தியா என!!!




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 09, 2013 3:39 pm

நல்ல கதை. இனியவன் சொன்ன மாதிரி அட்டை கத்திகள் தான் அதிகம் நம்ம நாட்டில் .



அட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Dஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Yஅட்டைக்கத்தி ராஜாக்கள் Aஅட்டைக்கத்தி ராஜாக்கள் Sஅட்டைக்கத்தி ராஜாக்கள் Uஅட்டைக்கத்தி ராஜாக்கள் Dஅட்டைக்கத்தி ராஜாக்கள் Hஅட்டைக்கத்தி ராஜாக்கள் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 09, 2013 6:29 pm

யினியவன் wrote:சூப்பர் கதை முகில்.அட்டைகத்திகள் தான் நம் நாட்டில் அதிகம். எனக்கு இது வரை இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை - நிகழ்ந்தால் தான் தெரியும் நானும் அட்டை கத்தியா என!!!
சினிமாவில் மட்டுமே சூப்பர் ஹீரோவை பார்க்க முடியும் அண்ணே , நிஜத்தில் அனைத்து சாமான்ய மனிதர்களும் அட்டை கத்திகள் தான் , வேறென்ன செய்ய சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 09, 2013 7:19 pm

ஊருக்கு தான் உபதேசம் வெளிவேட காரர்கள்.!
நல்ல கதை.! பகிர்விற்கு நன்றி.!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக