புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
1 Post - 1%
bala_t
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்: பயணம்: நாவல்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 08, 2013 6:09 am

First topic message reminder :

பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...[/color]

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.

ரமணி
01/09/2012

*** *** ***



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 18, 2013 7:06 am

ந்த மர நிழல்களில் அமர்ந்து அவர்கள் தம் இலக்கிய ஈடுபாடுகளைப் பரிமாறிக்கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தன.

"எனக்கென்னவோ மாடியில் ’ஸ்டடி’யில் பட்டிக்கிறதைவிட தோட்டத்தில் உட்கார்ந்து படிப்பது வசதியாகவும் ரம்யமாகவும் இருக்கு."

"எனக்கும் இதுபோன்ற சூழலில் படிக்கப் பிடிக்கும் கௌசி. முக்கியமா கவிதைகள்."

"Let nature be your teacher."

"ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்திலகூட இதுமாதிரி ஒரு கவிதை வருது."

"அப்புறம் ராஜா, எனக்கு English Prosody-பத்தி அவ்வளவாத் தெரியாது. சொல்லித் தருவியா?"

"With pleasure. எப்போ ஆரம்பிக்கலாம்?"

"இப்பவே!"

இலக்கியம் முதல் வருடம் சேர்ந்த புதிதில் ஆங்கில யாப்பிலக்கணத்தில் ஆர்வம்கொண்டு அதைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளப் புத்தகங்கள் கிடைக்காமல் ஒவ்வொரு Encyclopaedia-வாகத் தேடிக் கடைசியில் Pears Encyclopaedia-வில் கண்டுபிடித்து அதை முழுமூச்சாக உடனே படித்து வரிவிடாமல் குறிப்பெடுத்துக் கொண்டு மனனம் செய்தது நினைவுக்கு வரக் கேட்டான்.

"எங்கேர்ந்து ஆரம்பிக்க?"

"Begin from the beginning."

"நான் Pears Encyclopaedia-வில் படித்துப் புரிஞ்சிண்ட மாதிரியே உனக்கும் சொல்லித் தரேன். நம்ம தமிழ் யாப்பிலக்கணத்தில அசை சீர் அடிலாம் ஹைஸ்கூல் இலக்கணத்தில் படிச்சேல்ல? அதுமாதிரி இங்க்லிஷ்லேயும் உண்டு. நான் சொல்றதை நல்லா கவனி The express left Manchester at seven. இந்த வாக்கியத்தை ஒரு தடவை சொல்லு பார்க்கலாம்."

சொன்னாள்.

[ராஜாவும் கௌசல்யாவும் ஆங்கில இலக்கிய மாணவர்களாதலால் கொஞ்சம் விரிவாக அவன் உரையாடித் தன் டயரியில் பதிந்த ’லெக்சர்’ இங்குச் சுருக்கமாக அவர்கள் உரையாடலில் தரப்படுகிறது, வாசகர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தால்.
For more details, check links such as the following:
PROSODY
About Poetry: English Prosody and Literary Terms
Prosody Guide
http://linksredirect.com/?pub_id=2492CL574&url=http%3A//homepage.ntu.edu.tw/%7Ekarchung/prosody.htm
--ரமணி]

"என்ன தெரியறது? ஆங்கில வார்த்தைகளோட உட்பிரிவுக்கு syllable-னு பேர். இது உனக்குத் தெரியும். ஒரு வார்த்தைல ஒண்ணோ ரெண்டோ மூணோ அதுக்கும் மேலையோ syllables இருக்கலாம். இப்ப நாம் சொன்ன வாக்கியத்தில The, express, Manchester இந்த மூணு சொற்களில் முறையே ஒண்ணு, ரெண்டு, மூணு syllable இருக்கறதை முதலில் கவனிக்கணும். அப்புறம் அந்த வாக்கியத்தைச் சொல்லும்போது சில syllables அழுத்தம் கொடுத்தும் மிச்சமுள்ளதை அழுத்தம் கொடுக்காமலும் சொல்லறோம். இந்த வாக்கியத்தை scan பண்ணிப் பார்த்தா இப்படி வரும்."

அவள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் காட்டினான்:
The express left Manchester at seven.
The- exp/ress- left/ Man/ches-ter at- seven-.


"நான் எழுதினதில ஒவ்வொரு syllable-ம் stressed-ஆ அல்லது unstressed-ஆன்னு காட்டறதுக்கு a dash for unstressed and a slash for stressed syllables அந்த syllableமுடியற இடத்தில போட்டிருக்கேன். எந்த மொழியிலேயும் எழுதும்போது வார்த்தைகளை இடம்விட்டு எழுதினாலும் பேசும்போது வார்த்தைகளைச் சேர்த்து சில அசைகளில் அழுத்தம் கொடுத்தும் சிலவற்றில் கொடுக்காமலும் பேசறோம் இல்லையா? இப்போ இந்த வாக்கியங்களைப் படி."

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.


"Robert Frost என்றாள்."

"அந்த உரைநடை வாக்கியத்துக்கும் இந்தக் கவிதை அடிகளுக்கும் என்ன வித்தியாசம்? கவிதையின் முதல் அடியை அலகிட்டுப் பார்த்தாத் தெரியும்".

The- woods/ are- love/ly-, dark/ and- deep/.

"எல்லா வரிகள்லயும் ஓசையில் தாழ்ந்த ஓர் அசையும் உயர்ந்த ஓர் அசையும் மாறிமாறி வரது."

"வெரி குட். இதுதான் ஆங்கிலக் கவிதையோட அடிப்படை உருவம். அசைகள் சேர்ந்து வருவது சீர்--meter. ஒரு dash ஒரு slash சேர்ந்துவரும் சீருக்கு iamb என்று பெயர். இதே மாதிரி மத்த ஈரசை, அப்புறம் மூவசைச் சீர்கள்க்குப் பெயர்களும் pattern-களும் உண்டு."

கௌசல்யா ஆர்வத்துடன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தாள்.

-/ dash slash = iamb eg: upon, arise
/- slash dash = trochee eg: virtue, further
--/ dash dash slash = anapest or anapaest eg: intervene
/-- slash dash dash = dactyl eg: tenderly
//- slash slash dash = spondee eg: 'slow moon' in 'The slow moon climbs'


"தமிழ்ல ஈரசை, மூவசைச் சீரடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில iambic, trochaic, anapaestic, dactylic and spondaic meterனு சொல்லறது. எப்படி குறளடினா ரெண்டு சீர், அதோட ஒவ்வொரு சீர் சேர்த்து சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில ரெண்டு சீருள்ளது dimeter, then trimeter, tetrameter, pentameter, hexameterனு ஆறு சீரடி வரைக்கும் சொல்றது."

"ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு."

"அப்புறம் குறளியில், சிந்தியல், அளவியல், விருத்தம்னு நாம் அடிகளின் எண்ணிக்கையை வெச்சு சொல்றமாதிரி ஆங்கிலத்தில tercet for a group of three lines, quatrain for four, sestet for six, septet for seven and octave for eight lines. நாம மேலே பார்த்த Robert Frost poem stanza-ல, ஒவ்வொரு அடியும் iambic tetrameter, and every stanza is a quatrain. என்ன, புரியுதா?"

"நல்லா. எனக்கு நம்ம தமிழ் எதுகை மோனை, இயைபு போல ஆங்கிலக் கவிதைல வரும் alliteration, assonance, rhyme பத்தி ஓரளவு தெரியும். இருந்தாலும் நீ சொல்லு, refresh பண்ணிக்கறேன்."

"மெய்யெழுத்து, அதாவது consonants, ஒன்றி வந்தா alliteration. உதாரணம் Peter Piper picked a peck of pickled peppers. இந்த வரி என்ன metre தெரியுமா?"

விரல்களால் எண்ணிக்கொண்டு கொஞ்சம் யோசித்தாள். "I got it! Trochaic hexameter."

"Brilliant! Samuel Taylor Coleridge's poem 'The Rime of the Ancient Mariner' has a beautiful example of alliteration."
The fair breeze blew, the white foam flew,
The furrow followed free;


"லவ்லி! கடல்ல போறமாதிரியே இருக்கில்ல?"

"Too much of alliterations can get artificial.. அதனாலதான் apt alliteration's artful aid-னு சொல்வாங்க."

"Always avoid aweful alliterations-னு நானும் எங்கேயோ படிச்ச்ருக்கேன்."

"மெய்யொலிகள் மாதிரி உயிரொலிகளுக்கு assonanceனு பெயர். உதாரணம் அலெக்ஸாண்டர் போப். இதில வர O sounds கவனி. அதுதான் assonance."
Since my old friend is grown so great,

"alliteration, assonance அடிகளுக்கிடையிலும் வரலாம். அப்புறம் rhyme எல்லோர்க்கும் தெரிஞ்சதுதான். Rhyme-லதான் பெரும்பாலான English classical poetry-யே இருக்கு."

"Rhyme-ல விதங்கள் இருக்கில்ல?"

"சொல்றேன். cat--mat is single pure rhyme; silly--billy double pure; mystery--history--triple pure; love--move eye rhyme; breath-deaf near rhyme. bent--firmament wrenched rhyme ஒரே அடிக்குள்ள வந்தா leonine rhyme: For the moon never beams without bringing me dreams (Edgar Allan Poe)."

"ஒரு syllable-ல rhyme இருந்தாலே கணக்கு போல."

"Rhyme schemes-ஐ வெச்சு பாவகைகளே இருக்கு. Couplets-ங்கர ரெண்டு அடிகள்ல ஒண்ணுக்கொண்ணு rhyme வரணும். நாலடி quartrain can have 'abab' or 'aabb' or 'abba' பதினாலு லைன் sonnets of Shakespeare, Milton, இந்த வடிவத்தில ஒரு நிர்ணயித்த rhyme scheme இருக்கு."

"Metre-ஐ மட்டும் வெச்சிண்டு rhyme இல்லாம எழுதினா அது blank verse இல்ல?"

"ஆமாம்."

"இது போதும் எனக்கு. இனிமே நான் படிக்கற ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் அலகிட்டுப் பார்க்கப் போறேன். அப்புறம் நானே எழுத முயற்சி செய்யப்போறேன்."

"உனக்கு எதுதான் முடியாது, கௌசல்யா? ஆல் தெ பெஸ்ட்."

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 19, 2013 7:13 am

ங்கில யாப்பிலக்கணம் படித்ததும் அவர்களுக்குத் தாம் படிக்கும் ஒவ்வொரு கவிதை வரியையும் பிரித்துப் பார்க்கத் தோன்றியது. இந்த வகையில் டென்னிஸனுடய கவிதைகளின் சந்த நலன்களும் வார்த்தை ஓவியங்களும் அதிசயிக்க வைத்தன. ஷேக்ஸ்பியர், கீட்ஸ், பைரன், ஷெல்லி கவிதைகளில் உத்திகளும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து உவகையூட்டின. பொதுவாக எளிமையாக, நேரடியாக எழுதும் வேர்ட்ஸ்வர்த் கவிதைகளில் கூட இந்த உத்திகள் பயன்பட்டது வியப்பளித்தது.

கௌசல்யாவின் கவிதை ஆர்வம் அவளையே கவிதைகள் இயற்றத் தூண்ட, ஒருநாள் அவள் வெட்கத்துடன் தான் யாத்த முதல் வரிகளை அவனிடம் கொடுத்து அவன் கருத்தைக் கேட்டாள்.

Rhythm and rhyme, short and long,
All that takes to write a song,
Jolly well it means to me a lot!
And there my pen, it goes about!

Round and round I go in thought
And my pen is forced to come to halt.
More I think, the more I care
At what you taught me, what you are.
Numerous ways to write a heart!


"முதல் முயற்சியிலேயே இவ்வளவு தூரம் உனக்குக் கவிதை எழுத வந்தது க்ரேட்! ஆனால் ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. புதுசா கவிதை முனையறபோது இவ்வளவு variations வரக்கூடாது. கூடுமான வரைக்கும் metre-ஐ விடக்கூடாது. அதுலதான் ஒரு கவிஞனோட திறமை இருக்கு. Variations இருந்தா அதுக்கு ஒரு நோக்கம் இருக்கணும். A very good effort, anyway. இதையே திரும்பத் திரும்பத் திருத்தாம வேற எழுத முயற்சி செய்."

"இந்தக் கவிதைல ஒண்ணு கவனிச்சயா?"

"என் பெயர் தானே? ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்தைக் கோர்த்தா RAJA RAMAN-னு வரது. உன் கவிதைலயும் என்னைப் பத்தி நெனச்சது எனக்கு சந்தோஷமா இருக்கு", என்று அவள் கன்னத்தைத் தட்டினான்.

"உனக்குக் கவிதை எழுத வருமா ராஜா? நீ ஏதாவது எழுதியிருக்கயா?"

"முயற்சியும் ஆர்வமும் இருந்தால் யாருக்கு வேணும்னாலும் எது வேணும்னாலும் கூடும் கௌசி. என் கருத்து என்ன தெரியுமா? ஒரு கவிஞன் பிறப்பதில்லை, உருவாகிறான்."

"எனக்காக இப்பவே ஒரு ரெண்டு லைன் கவிதை எழுதி ட்ரை பண்ணறயா?" என்று அவனைப் புன்சிரிப்புடன் ஆர்வமாகப் பார்த்தாள்.

"வொய் நாட்?" என்று கொஞ்ச நேரம் யோசித்துக் காகிதத்தில் கிறுக்கி அவளிடம் கொடுத்தான்.

Jasmines, lilies, roses and lotus flowers
They can't excel your smile!
They last only for hours
Yours has a life of eternal style.


"நான் என் கவிதையை முடிக்க மூணு நாளாச்சு. நீ எப்படி இவ்ளோ சீக்கிரம் எழுதினே ராஜா?" என்று மலைத்துப் போனாள். "The best compliment I have received."

"’வலிமையான உணர்வுகளின் இயற்கையான வடிகால்தான் கவிதை*’, அப்படின்னு வேர்ட்ஸ்வர்த் சொல்லியிருக்கார். I was overwhelmed by your smile."

[*"...poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquillity:..."--William Wordsworth, in his 'Preface to Lyrical Ballads']

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 20, 2013 7:01 am

பயணம்: நாவல்
ரமணி

21

மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 38


ங்கில யாப்பிலக்கண நெறிகளைப் பின்பற்றித் தமிழில் ஒரு புதிய யாப்பிலக்கணம் படைக்க முயன்று அவர்கள் பல நாட்கள் விவாதித்துத் தங்கள் புதுக்கவிதை இலக்கணத்தின் சீர்களை உருவாக்கிப் பெயரிட்டபோது, அவை ஏற்கனவே பாரதியார் பாடல்களிலும் கண்ணதாசன் திரைப்பாடல்களிலும் ராகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

கண்/ணன்- என்/னும் மன்/னன்- பே/ரைச்- சொல்/லச்- சொல்/ல-
கல்/லும்- முள்/ளும்- பூ/வாய்- மா/றும்- மெல்/ல- மெல்/ல-.


பாரதியார் அநேகமாகத் தன் ஒவ்வொரு கவிதையிலும் அவர்களுடைய புதிய சீர்களுக்கும் அடிகளுக்கும் இயைபுகளுக்கும் உதாரணங்கள் தந்து அவர்கள் வேலையை எளிதாக்கினார்.

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வா/ழிய- செந்/தமிழ்-! வாழ்/க- நற்-றமி/ழர்-!
வா/ழிய- பா/ரத- மணித்/திரு- நா/டு-!


பாரதியின் ’பாஞ்சாலி சபதம், சூதாட்டச் சருக்க’த்தின் ஆரம்ப வரிகளில் அவர்கள் ஒரு புதிய ஐந்தசைச் சீரைக் கண்டுபிடித்து அதற்கு ’பகடைக்காயொலிச்சீர்’ என்று பெயரிட்டார்கள்.

மாயச் சூதினுக்கே -- ஐயன் மன மிணங்கி விட்டான்;
தாய முருட்டலானார் -- அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்;

மா/யச்- சூ-தினுக்-கே/ -- ஐயன்/ மன மிணங்-கிவிட்-டான்/;
தா/ய- முருட்-டலா-னார்/ -- அங்/கே- சகு-னிஆர்ப்-பரித்-தான்/;


ப்புறம் அந்த ’ப்ரைவேட் சிலபஸ்’.

அவனும் கௌசியும் தம் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடத் தயாரித்தது. மாதம் ஒரு ஆங்கில நாவலும், இரண்டு தமிழ் நாவல்களும், ஒவ்வொரு ஞாயிறும் காலைவேளையில் தமிழ் ஆங்கிலக் கவிதைகளும், விடுமுறை நாட்களில் இவையெல்லாம் இன்னும் அதிகமாகவும் அவர்கள் படித்தறிய முனைந்து, ஒருவருக்கொருவர் வினா-விடைத் தேர்வுகள் வைத்துக்கொண்டு, நூலகங்களுக்குப் படையெடுத்து, புத்தகங்களை ஒருவருக்கொருவர் இரவல் கொடுத்து வாங்கிக் கொண்டபோது கௌசல்யா குறிப்பிட்டாள்:

"அந்தக் காலத்தில் தலைவனும் தலைவியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்ள உயிரினங்களையும் இயற்கைப் பொருட்களையும் தூது விடுவார்கள். தமயந்தி அன்னத்தைத் தூதுவிட்டாள். துஷ்யந்தன் மேகத்தை. இந்தக் காலத்தில நாம் புத்தகங்களைத் தூது விட்டுக்கறோம்."

பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகும் சிறுகதை, தொடர்கதைகளைப் படித்து வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் விமரிசனங்களை ஒப்பிட்டுக்கொண்டது ஏதோ நேற்று நடந்தது போலிருந்தது.

"இப்போ எழுதற ஆசிரியர்கள்ல என் ஃபேவரிட் சுஜாதா. உனக்கு?"

"நான் தமிழ்த் தொடர்கதைகள் அதிகம் படிப்பதில்லை கௌசி, சுஜாதாவும் இந்துமதியும் தவிர. நல்லபெருமாளோட ’போராட்டங்கள்’ எனக்குப் பிடிச்சது. அதேபோல் நா.பா.வோட ’சத்திய வெள்ளம்’. மற்ற ஆசிரியர்களை--மெய்ன்னா கல்கியைப்--படிக்காததால ஃபேவரிட்னு யாரையும் குறிப்பிட முடியாது. ஆனால் எனக்கு சுஜாதாவும் இந்துமதியும் பிடிக்கும். போன தலைமுறை எழுத்தாளர்கள்ல சூடாமணியோட சிறுகதைகள் பிடிக்கும். அசோகமித்திரன், ஜானகிராமன், ல.ச.ரா.லாம் இனிமேல்தான் படிக்கணும்."

"நான் நிறையத் தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பேன். எல்லோரையும்விட சுஜாதாவின் துணிச்சலான வார்த்தை அமைப்பும், விஷய ஞானமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

"எனக்கும் சுஜாதாவை அந்த விதத்தில் பிடிக்கும். அவரே சொல்லியிருக்கற மாதிரி அவருடைய நாவல்களைவிட சிறுகதைகள் டாப். ’பார்வை, நகரம், இளநீர்’, அவர் கல்கியில் எழுதின விஞ்ஞானக் கதைகள்."

"அவர் நாவல்களில் எனக்குப் பிடிச்சது ’ப்ரியா, சொர்க்கத் தீவு, 24 ரூபாய்த் தீவு’."

"சுஜாதாவோட நாவல்களில் கதையம்சம் அவ்வளவு சிறப்பா இருக்காது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமா, ’24 ரூபாத் தீவு, அப்சரா’. அவர் நாவல்களின் உயிர் பாத்திரப் படைப்புதான். அப்புறம் அந்த யுனீக் ஸ்டைல். ஆனால் அந்த ’சொர்க்கத் தீவு’ ஆல்டஸ் ஹக்ஸ்லியோட Brave New World நாவலை ஞாபகப் படுத்தறதும் அல்லாம நிறைய ஒற்றுமைகளும் இருக்கு."

"நான் Brave New World படித்ததில்லை."

"படிச்சுப் பார், தெரியும்."

இப்போது டைரியில் இதையெல்லாம் படிக்கும்போது ’கரையெல்லாம் ஷெண்பகப்பூ’வை நினைத்துக் கொண்டான். இப்போது கேட்டால் கௌசி நிச்சயம் அதுதான் அவளுடைய ஃபேவரிட் என்று சொல்லுவாள்.

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் சொன்னான்: "சுஜாதா இதுவரை சமூக நாவல்கள் எழுதலை இல்ல? அவரே ஒரு சமயத்தில் தனக்கு சமூக நாவல்கள் எழுத வராதுன்னு சொன்ன ஞாபகம்."

"சமூக நாவல்களைப் பொறுத்தவரை இந்துமதிக்கு ஒரு தனி அந்தஸ்து உண்டு. அவருடைய மாஸ்டர்பீஸ் அந்த ’தரையில் இறங்கும் விமானங்கள்’தான்னு சொல்லுவேன்."

"என்ன ப்ரசன்டேஷன், பாத்திரங்கள், இல்லே? இப்ப நினைக்கும்போது அந்தக் கதையில் ஒரு மாற்றம் செய்திருக்கலாம்னு தோணுது, கௌசி. அந்தப் பையன் பேரென்ன, விசுதானே? அந்த விசுவும் அவன் அண்ணியும் ரொம்ப ரெசோர்ஸ்ஃபுல் பாத்திரங்கள். ஒரே மாதிரி எண்ணங்கள், உணர்வுகள், பார்வைகள். ஆசிரியர் அவர்கள் ரெண்டுபேரையும் இணைச்சிருக்கலாம்."

"ஐ டோன்ட் அக்ரி வித் யு. அந்த அண்ணி ஒரு ட்யூட்டிஃபுல் வய்ஃப். அவளால எந்த சந்தர்ப்பத்திலயும் தன் கணவனைப் பிரியமுடியாது. அப்படிப் பிரிஞ்சா கதையின் முடிவு ஒரு நிறைவைத் தராது."

"ஒய் நாட்? கணவனும் மனைவியும் இரு துருவங்களா இருந்துண்டு என்ன வாழ்க்கை?"

"அந்த நாவல்ல ஆசிரியரோட தீமே வேற ராஜா. தி என்டயர் ஸ்டோரி இஸ் ஸ்பன் அரௌன்ட் விஸ்வம்."

"நீ சொல்றது சரிதான். ஆனாலும் எனக்கு அந்த எண்ணம் இருந்தது, ரைட் வென் ஐ ரெட் த நாவல்."

அவனுக்கு ’வளையும் நேர்கோடுகள்’ ஞாபகம் வந்தது. ஒருவேளை கௌசல்யா இப்போது அவன் கருத்தை ஆதரிக்கலாம்.

மாமியும் கௌசல்யாவும் பூஜையை முடிப்பதற்குள் அவன் செய்தித் தாள்களையும் பத்திரிகைகளையும் மேய்ந்துவிட்டு, சரியாக மணி எட்டரைக்கெல்லாம் மணி அய்யரின் கைவண்ணத்தில் மலர்ந்த இட்டலிகளை மிளகாய்ப் பொடியுடனும் தேங்காய்ச் சட்டினியுடனும் ஒருகை பார்த்துவிட்டு, அந்த சூட்டைத் தணிக்க சில்லென்று புதிய சாத்துக்குடிச் சாறு அல்லது டாங்கோ உடனடி ஆரஞ்சுப் பொடிச்சாறோ சாப்பிட்டுவிட்டு, அவன் மாமாவின் ஸ்கூட்டரில் கௌசல்யாவைக் கல்லூரியில் இறக்கிவிட்டுத் தன் கல்லூரிக்குச் செல்லும்போது பெருமையாக இருக்கும்.

மதிய உணவு இடைவெளியில் அவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று நிறைவாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி செல்வார்கள்.

மாலை கல்லூரி எப்போது முடியும் என்று இருக்கும். கடைசி மணி அடித்ததும் விடுவிடு என்று நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை மாற்றிக்கொண்டு அவன் ஸ்கூட்டரில் அவள் கல்லூரியை அடையும்போது அவள் வாசலில் காத்திருப்பாள்.

"கௌசி, வசந்தி எங்கே?"

"தோழியுடன் ஹாஸ்டலுக்குப் போயிட்டா. அவங்களுக்கு அஞ்சரை மணிக்குள்ள டிஃபன் எடுத்துக்காட்டா தீர்ந்து போயிடும்."

"சரி, உட்கார். நாளைக்குப் பாத்துக்கலாம்."

கல்லூரி முடிந்து புற்றீசல்கள்போல் வெளிப்படும் பெண்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டே செல்ல, சிலரைப் பார்த்து கௌசல்யா கையசைக்க, அவர்கள் அந்த வண்ணமலர்க் கூட்டத்தில் மிதந்துசென்று வீட்டை அடையும்போது மாமி முகத்தில் மகிழ்ச்சி சுடர்விட இவர்களை எதிர்பார்த்திருக்க மணி ஐந்தடிக்கும்.

டிஃபன், காஃபி சாப்பிட்டுவிட்டு அடுத்த அரை மணியில் மொட்டை மாடியில் உள்ள அறையில் டேபிள் டென்னிஸ். கௌசல்யா சிரத்தையாக, ஸ்போர்ட்ஸ் உடையில் கையில் விலையுயர்ந்த ’டீடி ராக்கெட்’டுடன் வருவாள்.

அந்த ’பெஸ்ட் அஃப் ஃபைவ்’ போட்டியில் எப்போதும் அவனுக்கே வெற்றி.

"உன்னை மாதிரி எனக்கு ஸ்பின்லாம் வரமாட்டேங்கறது ராஜா!"

"பழக்கம்தான் கௌசி."

"நான்கூட சீரியஸா டேபிள் டென்னிஸ் பழகப் போறேன்."

"அவசியம் இல்லை கௌசி. இந்த அளவு போதும். அப்படிப் பாத்தா நீ என்னைவிட செஸ் நல்லா ஆடறயே? உனக்கு எவ்வளவோ பயனுள்ள வேறுவகையான ஈடுபாடுகள் இருக்கும்போது, இந்த விளையாட்டைப் போய் மும்முரமா கத்துக்க வேண்டியதில்லை. இல்லைனா உன் ஆர்வங்கள் சிதறிப்போய் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது."

"வசந்திகூட இதையேதான் சொல்லுவா. அவளும் என்னளவுக்கு டீடி ஆடறா."

"நான்தான் அவளுடன் இங்க ஆடியிருக்கேனே? அவள் உன்னைவிடக் கொஞ்சம் பெட்டராவே ஆடறா."

இருட்டத் தொடங்கியதும் சிறிது நேரம் கேஸட்கள் கேட்டுவிட்டு, இருவரும் ’ஸ்டடி’யில் அமர்ந்து ஒருவருக்கொருவர் அனாவசியமாகப் பேசாமல் அவரவர் பாடங்களை ஆழ்ந்து படித்துவிட்டு, எட்டரை மணி வாக்கில் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஒன்பது முதல் பத்துவரை படித்துவிட்டு, தத்தம் அறைகளுக்குச் சென்று கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு, இன்டர்காமில் பரஸ்பரம் ’குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்’ சொல்லிக்கொண்டு உறங்கச் செல்வார்கள்.

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 21, 2013 7:35 am

ருநாள் மத்தியானம் கல்லூரியில் இருந்து சீக்கிரம் வந்தவன் மாமியுடன் பேசிக்கொண்டிருந்த போது தற்செயலாக நினைத்துக்கொண்டு அவர்களுடன் அப்பா-அம்மாவின் மனத்தாங்கல் பற்றிக் கேட்டான்.

"அது ஒண்ணும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இல்லைப்பா. எங்களுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தி உங்க அம்மாவழித் தாத்தா, உங்க பாட்டி காலமாகி ரெண்டு வருஷம் கழிச்சு குடும்பத்தில சொத்து பிரிக்கும்போது உங்கம்மாவுக்கு நகைகள் தவிர வேற ஒண்ணும் பணமாக் கொடுக்கலைன்னு உங்கப்பா கொஞ்சநாள் கோவமா இருந்தாராம். அது அப்புறம் சரியாயிடுத்து. உண்மையான மனஸ்தாபம் அதுக்கப்புறம்தான் ஆரம்பிச்சது."

"எனக்கு விவரம் தெரியாது மாமி. என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்கோ."

ஒரு நெடிய பெருமூச்சுடன் மாமி தொடர்ந்தாள்.

"வேற ஒண்ணும் இல்லைப்பா. என்னை உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தியே தெரியும். ஆனால் நாங்க வடமா, நீங்க ப்ருஹத்சரணம். இந்த உட்பிரிவுக்குள்ள அந்தக் காலத்தில வேற வழி இல்லைனான்னாதான் கல்யாணம் பண்ணிவெப்பா. போறாக் குறைக்கு எங்க கல்யாணம் நிச்சயமானதும் கொஞ்ச நாள்ல உங்க தாத்தா---அதான் என் வருங்கால மாமனார்---தவறிப்போய்ட்டார். அவர் பாவம் வயசாகித் தள்ளாமைல எல்லாரும் என்னிக்கோ ஒருநாள் போறாப்பலதான் போனார். அவருக்கே தான் இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்போம்னு தோணிட்டதால, தன் கடைசி காலத்தில, இருக்கற நெலம் புலம் எல்லாம் கணக்கெடுத்து பாகம் பிரிக்க ஏற்பாடு பண்ணிட்டார். உங்க மாமா, உங்க தாத்தாக்கு ரெண்டு பொண்ணுக்கப்புறம் பிறந்த ஒரே பிள்ளைங்கறதால அவருக்குத்தான் மேஜர் ஷேர். அது மத்த அக்கா தங்கை, வீட்டு மாப்பிள்ளைகளுக் கெல்லாம் பிடிக்கலை. உங்க மாமா வேற உங்கப்பாவைவிடப் பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவரோன்னோ, சின்னப் பையனுக்கு இவ்வளவு சொத்தான்னு பொறாமையோ என்னவோ.

"இதைத் தவிர, உங்க மாமா அவா அவருக்குப் பார்த்து வெச்சிருந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது, தனக்குப் பிடிச்ச பொண்ணைத்தான் (அதாவது என்னை) பண்ணிப்பேன்னுட்டார். அதனால இவா எல்லோரும் சேர்ந்து---உங்கப்பா மூத்த மாப்பிள்ளையோன்னோ, அவர்தான் அங்க லீடர்---உங்க தாத்தா தவறிப் போனதுக்கும் எங்க கல்யாண நிச்சயத்துக்கும் முடிப்போட்டு, நான் அதிர்ஷ்டம் கெட்டவள், அதுவும் இல்லாம வேற ஜாதி, அதனால உங்க மாமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லிப் பார்த்தா. மாமா கேக்கலை. நான் விரும்பி நிச்சயம் பண்ண பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், அவள் வேற ஜாதிங்கறது மஹா தப்பு, அதுவும் பிராம்மண ஜாதிதான்னு ஒத்தக்கால்ல நின்னுட்டார். கல்யாணமும் கொஞ்சநாள் தாமசமா நடந்தது.

"கல்யாணமாகிக் கொஞ்சநாள் புக்காத்தில---அதான் ஒங்காம்---நாங்க இருக்கவேண்டி வந்தது. மாமா அப்போ பக்கத்து ஊர்ல வேலையாய் இருந்தார். உங்கப்பாம்மாக்கும் பிள்ளை குட்டி கிடையாது. அதுவேற அவா மனசை அரிச்சிண்டிருந்தது..."

"மாமா என்ன வேலைல இருந்தார்?"

"முதல்ல தாலுகா ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தார். அதை விட்டுட்டு கொஞ்சநாள் ஒரு கம்பெனில சேல்ஸ்மேன் வேலைல சேர்ந்தார். அப்புறம் இந்த மெடிகல் ரெப் வேலைல ஒருவழியா செட்டில் ஆனார்."

ழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டு மாமி தொடர்ந்தாள்.

"புக்காத்துல உங்கம்மாவும் அப்பாவும் என்னைப் பாடாப் படுத்தி வெச்சுட்டா. நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம், சமைச்சா கேக்கவே வேணாம். உங்க பாட்டி இருந்திருந்தா இப்படில்லாம் செஞ்சிருக்கமாட்டா... பாடாப் படுத்திட்டான்னா என்ன? சாப்பாடு தண்ணிக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் நான் ஏதோ வேண்டாதவள் மாதிரி இவா என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கவே பிடிக்காமல் நடந்துண்ட விதமும், எதுக்கெடுத்தாலும் தப்புக் கண்டுபிடிச்சிண்டு, மாமாட்ட சத்தம் போட்டுண்டு...

"நானும் முதல்ல இதெல்லாம் சஹஜம், அவா ஸ்வபாவமே அப்படித்தான்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்திண்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல இப்படிக்கூட அக்கா-தம்பிக்குள்ள த்வேஷம் பாராட்டுவாளான்னு வெறுப்பாய்டுத்து. மாமாவும் அமைதியா, பொறுமையா இருந்தார். அவருக்கும் ஒரு நல்ல வேலை மனசுக்குப் பிடிச்சமாதிரி அமையலை. அவருக்கு விவசாயம் பண்றது பிடிக்காததால இருந்த நெலத்தை எல்லாம் வித்துட்டார். கடைசில ஒருநாள் இவா ஆர்பாட்டம் அதிகமாக, அக்காவோட சண்டைபோட்டு அமர்க்களமாகி, உங்கப்பா ’கெட் அவுட்’னு கத்த எழுந்து வந்தவர்தான். இன்னிவரைக்கும் பெரியக்கா வீட்டுப் பக்கம் தலைவெச்சுப் படுக்கலை."

"ஆனால் நான் சின்ன வயசுல கௌசல்யாவைப் பார்த்திருக்கேனே? எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

"அதான் அதுல வேடிக்கை. உனக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு கௌசல்யா பிறந்த உடனே உங்கம்மா மனசு மாறினாப்போல இருந்தது. அவளை உன்னை மாதிரியே மூணாங் க்ளாஸ்ல ஸ்கூல்ல சேர்த்தபோது, முதல் வருஷ லீவுல ஒரு வாரம் வரவழைத்துச் சீராட்டினா. என்ன இருந்தாலும் அத்தை இல்லையா, மனசு கேட்கலை! அவாளுக்கு வேற ரொம்ப நாள் குழந்தை இல்லாம எவ்வளவோ தவமிருந்து நீ பிறந்தே..."

"அப்ப மாமா வரல்லையா?"

"நான் மட்டும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுக் கௌசல்யாவைக் கூட்டிண்டு வந்துட்டேன்."

"அப்போ அப்பாம்மா எப்படி இருந்தா?"

"அப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் நாங்க போனதும் திரும்பப் பேச்சுவார்த்தை இல்லை. நான் எழுதின நாலஞ்சு கடுதாசிக்கும் பதில் இல்லை."

"அதுக்கப்புறம் இத்தனை வருஷம் கழிஞ்சுமா சரியாகலை?"

"என்னவோப்பா. உங்கப்பாவும் பிடிவாதக்காரர் மாமாவும் பிடிவாதக்காரர். நாள்போக நாள்போக நான் இவர்ட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், ’அவா அந்தக் காலத்து மனுஷா, கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பா, நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்’னு, கேக்கமாட்டேங்கறார். ’நாளைக்கே ராஜாவுக்குக் கௌசல்யாவைக் கொடுக்க வேண்டியிருந்தா என்ன பண்ணுவேள்’னுகூட கேட்டேன். அதுக்கு அவர், ’அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வந்தாப் பாத்துக்கலாம். முதல்ல அவாளுக்கு எதிரா லைஃப்ல உயர்ந்து காட்டணும்’னு சொன்னார். இப்ப என்னடான்னா நாங்க பெரிய பணக்காராளாய்ட்டோம், அவாளை மதிக்கறதில்லைனு உங்கப்பாம்மா கட்சி. உன்னோட சித்தி, அதான் வசந்தியோட அம்மா காமு-அக்கா, அவா குடும்பத்தோடல்லாம் நாங்க சுமுகமா இல்லையா?

இப்பவாவது இவர் விட்டுக்கொடுப்பார்னு பார்த்தா அதுவும் நடக்கலை. உங்கம்மாவும்---சொந்தத் தம்பின்னுகூடப் பார்க்காம அப்படி என்ன விரோதமோ? பாவம், நீ ரொம்ப நல்ல பையன். உனக்கும் கௌசல்யாவைப் பிடிச்சிருக்கு, அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. பழசெல்லாம் மறந்துட்டு எல்லாரும் ஒண்ணு சேரலாம்னா ஒவ்வொருத்தரும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்கறா. நான்தான் எல்லோருக்கும் நடுவுல கிடந்து அல்லாடறேன்."

"கௌசல்யா என்னை விரும்பறதைப் பத்தி நீங்களும் மாமாவும் என்ன நினைக்கறேள்?"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அதை ரொம்ப வரவேற்கரேன்பா. அதுதான் நேச்சுரல், விரும்பத்தக்கதும் கூட. மாமாவுக்கும் உன்னைப் பத்தி சந்தோஷம்தான். உன்னைவிட பெட்டர் மேட்ச் கௌசல்யாவுக்குக் கிடைகாதுன்னு அவருக்குத் தெரியாமல் இல்லை. தவிர, அவருக்குக் கௌசல்யாகிட்ட அளவுகடந்த பாசம். அவளுக்காக அவர் என்ன வேணும்னாலும் செய்வார். மொத்தத்துல உங்கப்பா மனசு வெச்சா நடக்கும்."

"எனக்கு இதுவரைக்கும் இந்த விவரங்கள்லாம் தெரியாது மாமி. நான் இந்த லீவுல அப்பாகிட்ட பக்குவமா பேசிப் பார்க்கிறேன்."

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 23, 2013 7:23 am

பயணம்: நாவல்
ரமணி

22

அச்சமில்லை அமுங்குதல் இல்லை,
நடுங்குத லில்லை நாணுத லில்லை.
பாவ மில்லை பதுங்குத லில்லை;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 24


ந்த வருடக் கோடை விடுமுறையின் போது அப்பாவிடம் பக்குவமாகக் கௌசல்யாவைப் பற்றிக் கூறி அவர் மனசை மாற்றி சம்மதம் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலில் அவன் பல்வேறு வழிகளை யோசித்துத் தன்னைத் தயார்ப்படித்திக்கொண்டு ஒரு முடிவுக்கு வருவதற்குள் முதல் வாரமே ஒருநாள் மத்யானம் சாப்பிடும்போது அம்மா திடீரென்று விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டாள்.

"என்னப்பா, ரா..ஜா..! மாமா மாமி எல்லாரும் சௌக்யமா இருக்காளா? மாமா பொண்ணு கௌசல்யா பார்க்க ரொம்ப அழஹா இருக்காளாமே?"

"..."

"அவளை ஸ்கூட்டர்ல எல்லாம் ஏத்திண்டு போறயாமே?"

அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் அவன் நிமிர்ந்து பார்க்க, அம்மா தொடர்ந்தாள்.

"என்ன அப்படி ஆச்சரியமா பார்க்கற? நீ கடுதாசி எழுதாட்டத் தெரியாதா? இப்ப என்ன, ஹாஸ்டல்லதான் இருக்கயா, அல்லது காலி பண்ணிண்டு அவாத்திலேயே கெஸ்டா போய்ட்டயா?"

வசந்தியின் மேல் கோபம் வந்தது.

"ஏம்மா இந்த மாதிரியெல்லாம் பேசறே? நானும் வசந்தியும் மாமாவாத்துக்குப் போறதைப்பத்தி நான்தான் ஒரு லெட்டல்ர்ல எழுதியிருந்தேனே? நீங்கதான் அந்த லெட்டர்க்குப் பதில் போட்டபோது அவாளப் பத்தி ஒண்ணுமே கேக்கலை. அப்புறம் என்ன இருக்கு நான் எழுத? மாமா ஒரு வாரம் டூர் போனபோது என்னை வீட்டுக்கு வந்து துணையா இருக்கச் சொன்னார். அந்த நாலஞ்சு நாள் அவர் ஸ்கூட்டரை எடுத்துண்டு காலேஜ் போனேன். போற வழியில கௌசல்யாவை அவள் காலேஜ்ல ட்ராப் பண்ணினேன். இதுல என்ன தப்பு?"

"இன்னைக்கு மாமா டூர் போறபோது உன்னைத் துணைக்கு இருக்க்ச் சொல்வார். நாளைக்கு அவா எல்லாரும் எங்கேயாவது போனால் வீட்டைப் பார்த்துக்கச் சொல்வார். நீ என்ன வாச்மேனா?"

"உன்னுடைய கற்பனைக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லைம்மா. ஒண்ணுமட்டும் சொல்வேன். மாமா நீ நினைக்கற மாதிரி இல்லை. அவர் ரொம்ப நல்லவர்."

"அட, அப்படியா? என்னோட தம்பியைப் பத்தி நீ கொஞ்சநாள் பழக்கத்தில தெரிஞ்சுண்டது இத்தனை வருஷமா எனக்குத் தெரியாமல் போய்ட்டது பத்தியா? (அப்பாவைப் பார்த்தபடியே) மாமா ரொம்ப நல்லவர், அக்கா அத்திம்பேரை மதிப்பவர்னா அப்பாட்ட மன்னிப்புக் கேட்டுண்டு சுமுகமா வந்துண்டு போயிண்டு இருக்க வேண்டியதுதானே?"

அவனால் இந்தக் கேள்விக்கு பதில்சொல்ல முடியவில்லை. மாமா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அம்மாவின் கருத்தில் அடிபட்டவனாய் நிமிர்ந்து அம்மாவின் கண்களை நேருக்குநேர் பார்த்தபோது வார்த்தைகள் வைராக்கியத்துடன் வெளிவந்தன.

"எனக்கு உங்க மனஸ்தாபத்தைப் பற்றிய முழு விவரமும் தெரியும்மா."

அப்பாவைப் பார்த்தபோது அவர் சலனமில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"மாமி சொல்லியிருப்பா, கண்ணும் காதும் வெச்சு! என்ன சொன்னா அவ?"

"மாமி கண்ணும் காதும் வெச்சு சொல்லுவான்னா முன்னாடியே நீங்க என்கிட்ட விவரம் சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஏன் ஏதோ சொத்து விஷயம்னு மூடி மறைச்சீங்க?"

அவன் கேள்வியின் உஷ்ணம் அவனையே தாக்க அம்மாவின் பதிலில் கோபத்தை எதிர்பார்த்து ஏமாந்தான்.

"சொல்லவேண்டியது அவசியமில்லைனுதான் சொல்லலை."

"மாமா மாமியைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டார், அதுவும் மாமி வடமான்னு தெரிஞ்சும்கூட; இதுதானே உங்க விரோதத்துக்குக் காரணம்?"

அம்மா பதில் பேசாமல் அவன் தட்டில் ரசத்தை வார்த்தாள். அப்பா மோர்சாதம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் முதல்முதலாகப் பேசினார்.

"இந்தாப்பா, முதல்ல சாப்பிடு. அப்புறம் கூடத்தில் உட்காந்து பேசலாம்."

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 24, 2013 7:48 am

டுத்த அரைமணியில் அம்மாவும் சாப்பிட்டுவிட்டுக் கூடத்துக்கு வந்துவிட, அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு புளிபோட்டுத் தேய்த்துப் பளபளவென்று மிளிரும் தன் பித்தளை வெற்றிலைச் செல்லத்தைத் திறக்க, அவன் அப்பாவுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, நன்றாக யோசித்து, தைரியத்தை வரவழத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 32


என்று டைரியில் பாரதியார் அவனுக்கு உதவியிருந்தார்.

"நான் கேக்கறதைக் கொஞ்சம் புரிஞ்சுண்டு, பாரபட்சமில்லாமல் எனக்கு பதில் சொல்லுங்கோப்பா, என்ன? மாமாவும் மாமியும் அந்தக் காலத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிண்டாங்க. மாமி வேற சப்கேஸ்ட். அவா கல்யாணம் நிச்சமாகிக் கொஞ்சநாள்ல தாத்தா தவறிட்டார். அதை நீங்க எல்லாரும் ஏதோ அபசகுனமா நினைச்சு வீட்டுக்கு வந்த நாட்டுப்பொண்ணு துரதிர்ஷ்டம் பிடிச்சவள்னு முடிவுகட்டினீங்க. ஓகே, அதெல்லாம் உங்க சென்டிமென்ட்ஸ். எனக்கு அந்தக் காலத்து நிலவரம் பத்தித் தெரியாது. அதைப் பத்திக் கமென்ட் பண்ண எனக்கு அருகதை இல்லை...

"என்னோட கேள்வி, அதுக்காக கௌசல்யா என்ன பாவம் பண்ணினாங்கறதுதான்."

அப்பா தனக்கே உரிய அமைதியான ’அன்டர்டோன்’இல் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்தபடியே கேட்டார்.

"நீ ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கறே? அவளைப் பத்தி அவள் பெற்றோர்க்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன வந்தது?"

"நான் எதிர்த்துப் பேசறதா நினைச்சுக்காதீங்கப்பா. நான் ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கவோ அக்கறை கொள்ளவோ கூடாது?"

"எல்லாக் குடும்பத்தைலையும் சொந்தத்தில பொண்ணுன்னு இருக்கத்தான் செய்வா. அதுக்காக எல்லோரும் அத்தை பொண்ணையோ அல்லது மாமா பொண்ணையோவா கல்யாணம் பண்னிக்கறா?"

"அது வேற விஷயம்பா. சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கும்போது, அதுவும் அவள் ரொம்ப நல்லவளா, படிச்சவளா, பண்புள்ளவளா இருக்கறபோது, ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினக்கக்கூடாது?"

அம்மா இடைமறித்தாள்.

"உனக்கு இன்னும் இருபது வயசுகூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

அவன் நினைவில் அனுவும், ஜெயந்தியும், மாலதியும், கௌசல்யாவும் தோன்றி மறைய, அம்மாவின் பாமரத்தனமான கணிப்பு அவன் முகத்தில் ஒரு ஏளனம் கலந்த புன்னகையை வரவழைத்தது.

"எனக்கொண்ணும் அவசரம் இல்லைம்மா. நான் எம்.ஏ. முடிச்சு ஒரு நல்ல காலேஜ்ல வேலைக்கு சேர்ந்தபின்தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஒரு விவாதத்துக்காக கேக்கறேன். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு முடிவுபண்ணி, யாரோ முன்பின் தெரியாத ஒரு பொண்ணைப் பார்த்து என் தலைல கட்டறதைவிட, நமக்கு நல்லாத் தெரிஞ்ச பொண்ணைப் பார்த்து, சமயம் வரும்போது பண்ணிவெக்கறது எவ்வளவோ நல்லது இல்லையா?"

அப்பா தொடர்ந்தபோது அவன் வார்த்தைகளில் காயம்பட்டிருப்பது தெரிந்தது.

"நாங்க அப்படியொண்ணும் அவசரப்பட்டு உனக்குப் பொருத்தம் இல்லாம சோடையா ஒரு பொண்ணைப் பார்த்துப் பண்ணிக்கோன்னு சொல்லிடமாட்டோம். கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர். உனக்கு இப்பத் தெரியாது. நாளைக்கு நீயும் நாலஞ்சு குழந்தைகளுக்குத் தகப்பனாகி அவாளுக்கு கல்யாணம் பண்ணிவெக்க அலைவே பாரு, அப்பத் தெரியும். வரன் பாக்கறது என்ன விளையாட்டுன்னு நெனச்சயா?"

"எனக்கு உங்க வரன் பார்க்கற திறமைல கொஞ்சம்கூட சந்தேகம் இல்லைப்பா. இருந்தாலும் நான் கௌசல்யாவை விரும்பறேன்."

"அவளோட மேக்கப் அழகுலயும் விதவிதமான மாடர்ன் ட்ரெஸ்லயும் மயங்கிட்ட போலிருக்கு. அல்லது மாமி ஏதாவது சொக்குப்பொடி போட்டாளா?"

"கௌசல்யா நீ நினைக்கற மாதிரி சாதாரணமானவ இல்லைம்மா! அவள் மாடர்னா இருக்கலாம். அதுக்காக அடக்கமா இல்லைனு சொல்லமுடியாது."

"என்ன இருந்தாலும் அவா பெரிய பணக்காரக் குடும்பம். வேளைக்கு ஒரு டிரஸ் போட்டுப்பா. தினம் ஒரு சினிமா பார்ப்பா. ஸ்டைலா டைனிங் டேபிள்ல சமையற்காரர் பரிமாற சாப்பிடுவா. அவளுக்கு இந்த கிராமமும் கட்டுப்பெட்டியா இருக்கற அத்தையும் ஒத்துவருமா? நாம நம்ம அந்தஸ்துக்குத் தகுந்தாப்பல அடக்க ஒடுக்கமா, தெய்வ பக்தியோடு இருக்கற, ஆத்துக் காரியம்லாம் சவரணையாச் செய்யற பொண்ணைத்தானே பார்க்கமுடியும்?"

"கௌசல்யாவைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம நீ பேசறம்மா. அவள் எவ்வளுக்கெவ்வளவு மாடர்னா இருக்காளோ, அவ்வளவுக்கவ்வளவு அடக்கமாயும், கடவுள் பக்தியோடும், அனுசரணையாவும் இருப்பா. எனக்கு அது நிச்சயாத் தெரியும். அதனாலதான் எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, புரியுதா?"

வெற்றிலைச் சக்கயைத் துப்பிவிட்டு வந்து அப்பா மென்மையாகச் சொன்னார்.

"அவசரப்படாதே ராஜா. எந்த விஷயத்திலயும் நிதானமா யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வரணும். கௌசல்யாவை நீ விரும்பறதில தப்பு இல்லை. ஆனால் உண்மையிலேயே உனக்கு அவளைப் பிடிச்சிருக்கான்னு பொறுத்திருந்து பார். இந்த வயசில அப்படித்தான் இருக்கும். இன்னிக்கு ஒருத்தரைப் பிடிக்கும். அவாளை நாளைக்கே பிடிக்காமப் போய்டும். காரணமா, அதைவிட உசந்தவாளா வேற ஒருத்தர் தெரியலாம். அல்லது ஒரே சமயத்தில ரெண்டு மூணுபேர் உகந்தவாளாத் தெரியலாம். இதெல்லாம் ஒரு passing phase. எல்லா விஷயங்களையும் தீர யோஜனை பண்ணித்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும், வர..ணும். தவிர, நம்ப குடும்ப கௌரவம், அந்தஸ்து, இதெல்லாம் பார்க்க வேண்டாமா? எல்லாத்தையும் உதறிட்டுப் போக நாம என்ன சந்நியாசிகளா?"

அப்பாவின் சொற்களில் அசந்துபோனான். அவர் இதுபோல ’ரெண்டு மூணுபேர் உகந்தவளா’--இப்படியெல்லாம் பேசணும்னா அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். வசந்தி. அவள் அம்மாவிடம் ஏதாவது சொல்லி அம்மாமூலம் அப்பாவுக்கு ந்யூஸ் போயிருக்கலாம் அல்லது---அப்பாதான் தான் ஒண்ணும் வலிய கருத்து சொல்றதில்லையே தவிர சுத்தி நடப்பதைக் கூர்ந்து கவனிச்சு வெச்சுப்பாரே, அதனால---அப்பாவே யூகிச்சிருக்கலாம். அவனுக்கு சற்றுமுன் வசந்தியின்மேல் வந்த கோபம் இப்போது குழப்பமாக மாறியது.

"இதுல என்ன குடும்ப கௌரவம் பாதிக்கப்படுதுன்னு புரியலைப்பா. இருபத்திநாலு வருஷமா மனசில வெச்சுக்கற அளவுக்கு அந்த விவகாரம் அப்படியொண்ணும் பெரிசாத் தெரியலை."

"உன் மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும். அப்பதான் நாம மேலே போகமுடியும்."

"நீங்களும் கொஞ்சம் மனசு மாறி விட்டுக்கொடுத்துப் போலாம்பா. என்ன இருந்தாலும் மாமா உங்களைவிட எவ்ளோ சின்னவர்!"

"அதனாலதான் சொல்றேன். அன்னைக்கு வீட்டைவிட்டு வெளியேறினவன் இன்னி வரைக்கும் சுமுகமா இல்லையே?"

"மாமாவைக் கேட்டா ’உங்கப்பாதான் இன்னும் எல்லாத்தையும் மனசில வெச்சிண்டு இருக்கார்’னு சொல்றார். மாமியோ ’உங்கப்பாவும் மாமாவும் தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்னு ஒத்தக்கால்ல நிக்கறா, நடுவுல நான் கிடந்து அல்லாடறேன்’கறா."

"வேறென்ன சொன்னா மாமி? அந்தக் காலத்தில நான் ஒரு மாமியாருக்கு மேல அவளைக் கொடுமைப் படுத்தினதா இல்லாததும் பொல்லாததும் சேர்த்துச் சொல்லியிருப்பாளே? அவளுக்காவது நான் நாத்தனார்தான். நாளைக்கு இந்தாத்துக்குக் கௌசல்யா மாட்டுப்பொண்ணா வந்தா, நான் நெஜமாவே மாமியார் ஆய்டுவேன். அப்ப எவ்வளவுதான் அவளை நல்லா வெச்சிண்டாலும் ஏதாவது சாக்கு கண்டுபிடிச்சு, கொடுமைப் படுத்தறான்னுதான் சொல்லுவா. அதுதாண்டா உலகம்."

"உங்களோட தகராறுக்காக நான் கௌசல்யாவைப் பார்க்கக்கூடாது அவளோட பேசக்கூடாது, அப்படித்தானே?"

"நான் ஏண்டாப்பா குறுக்க நிக்கறேன்? நன்னாப் போய்ப் பாரு, பேசு. அதான் ஏற்கனவே மயங்கியாச்சே? தடால்னு கீழே விழாம இருந்தா சரிதான்."

"அம்மா நீ பேசறது காரணமில்லாத பேச்சு. அல்லது ஒரு விஷயத்தை முழுக்கப் புரிஞ்சுக்காம, இல்லை புரிஞ்சுக்க மாட்டென்னு அடம்பிடிக்கற மாதிரி பேசறே. நான் கௌசல்யாவை விரும்பறதில என்ன தப்பு சொல்லும்மா? அவளை மட்டும் கணக்கில எடுத்துண்டு சொல்லு."

"எனக்குத்தான் அவளைப் பத்தி முழுக்கத் தெரியாதுன்னு நீயே சொல்லிட்டயே?"

"நிச்சயமா. நீ அவளை சின்ன வயசில பார்த்ததுதானே? அப்புறம் மத்த விஷயம்லாம் வசந்தி சொல்லக் கேட்டதுதானே?"

அப்பா குறுக்கிட்டார். "இந்த விஷயத்தில உங்க மாமா என்ன சொல்றான்னு தெரியுமா?"

"மாமா ஒண்ணும் எதிர்ப்புத் தெரிவிக்கலைப்பா. தவிர, அவருக்கு கௌசல்யான்னா உயிர். அவளுக்காக மாமா என்ன வேணும்னாலும் செய்வார்."

"அந்த மாதிரி நாம கமிட் பண்ணிக்க முடியாது. கௌசல்யா உன்னை விரும்பறான்னா நீயும் பதிலுக்கு அவளை விரும்பணும்னு ஒண்ணும் சட்டமில்லை. உங்க மாமாவும் கௌசல்யாவுக்காக, ஏதோ அவள் கேட்கற விளையாட்டு பொம்மை மாதிரி உன்னை வாங்கிடலாம்னு நெனச்சான்னா அதுக்கு நான் உடன்பட மாட்டேன். உன்னை மருமானா, மாப்பிள்ளையா மதிச்சு அவன் ஏத்துக்கணும்."

"நீங்க நினக்கற மாதிரி இது அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லைப்பா. மாமா என்கிட்ட ரொம்ப அன்பா, மரியாதையாதான் பழகறார். அடுத்த தடவை பார்க்கறப்ப நான் அவரை சுடச்சுட நேரடியாகவே கேட்டுடறேன். நிச்சயம் அவருக்கு நீங்க நினக்கற மாதிரி எண்ணம் இருக்காது."

"சரித்திரக் கதைகள்ல வர தூதுவன் மாதிரி நீ அங்கேயும் இங்கேயும் போய்ட்டுவரப் போறே, அவ்வளவுதான். வேற ஒண்ணும் உருப்படியா நடக்கப் போறதில்லை. எனக்கு உங்க மாமாவைத் தெரியாதா? இல்லை அவள் தர்ம பத்தினியைத்தான் தெரியாதா?" என்றாள் அம்மா அபிநயத்துடன்.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 25, 2013 6:23 am

பயணம்: நாவல்
ரமணி

23

போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே... --உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!
---மஹாகவி பாரதியார், கண்ணம்மாவின் காதல் 2


கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறந்தவுடன் அவன் ஒரு சனிக்கிழமை வசந்தியைப் பார்க்கப் போனபோது ஓர் அதிசயம் காத்திருந்தது.

வழக்கம்போல் ப்யூனிடம் சொல்லி அனுப்பிவிட்டு பார்வையாளர்கள் பெஞ்ச்சில் அமர்ந்து சுவாரஸ்யமாக ’ஃப்லிம் ஃபேர்’ பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், "என்ன ராஜா, அவ்ளோ இன்டரஸ்டிங்காப் படிக்கறே?" என்ற குரல்கேட்டு நிமிர்ந்தபோது வசந்தி அருகில் ஜெயந்தி நின்றிருந்தாள்!

அவனைக் கண்டதும் வெட்கத்துடன் புன்னகைத்து, "குட் ஈவனிங்" என்றாள்.

முன்பு பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் உயரமாக, ஒல்லியாகப் பாவாடை தாவணி அணிந்துகொண்டு கொஞ்சம் நீளமான இரட்டைப் பின்னல்களுடன் நின்றாள். வழக்கம்போல் ஒரு பின்னல் முன்னால் வந்துவிழும் என்று பார்த்தால்---காணோம்! முகத்தில் கொஞ்சம் இளமையின் மாற்றம் தெரிய, அந்தச் சிவப்புக்கல் ஒற்றை மூக்குத்தி இப்போதும் பளபளக்க, கண்கள் துருதுரு என்று அலைய, குரலில் கொஞ்சம் மெருகேறியிருக்க, கால்களின் கட்டை விரல்கள் செய்வதறியாது பின்னிக்கொள்ள, அவனது நந்தவனத்தில் மறுபடியும் மலர்க் கண்காட்சி!

"ஹல்லோ மிஸ் ஜெயந்தி! எங்கே இந்தப் பக்கம்? அப்பா ஏதோ திண்டுக்கல் காலேஜ்ல சேர்க்கப் போறதாச் சொன்னார்?"

"எங்க இருந்தாலும் ஹாஸ்டல்லதான் இருக்கணும். இங்கேயாவது வசந்தி இருக்காங்க."

"நான் இந்த ஒரு வருஷம்தானே இருப்பேன்?"

(அதுக்கப்புறம் நான் இருப்பேன், பார்த்துக்கறேன்.) "பி.யு.ஸி.ல என்ன க்ரூப்?"

"எம்.பி.ஸி.தான் எடுத்திருக்கேன். எனக்கு கெமிஸ்ட்ரினா பிடிக்கும்."

"ம்ஹூம். அப்புறம்? எப்படி இருக்கு காலேஜ் லைஃப், ஹாஸ்டல் லைஃப்?"

"ஃபைன். முதல்ல எல்லா சப்ஜக்ட்டும் இங்க்லிஷ்ல சொல்லித்தறதும் எல்லோரும் இங்க்லிஷ் பேசறதும் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. இப்ப சரியாயிடுத்து."

"எங்களுக்கெல்லாம் கூட கொஞ்சநாள் இந்தக் கஷ்டம் இருந்தது. நாமெல்லாம் ஹைஸ்கூல்ல தமிழ் மீடியம் தானே?"

கொஞ்சம் தயங்கிக் கேட்டாள். "நீங்களும் இங்க்லிஷ் ஃபைனல் இயரா?"

"ஆமாம். நான், வசந்தி, கௌசல்யா எல்லோரும் இங்க்லிஷ்தான்."

"ராஜா, நாங்க கொஞ்சம் ஷாப்பிங் போகப் போறோம். கௌசிக்குத் தலைவலின்னு சீக்கிரமே வீட்டுக்குப் போயிட்டா. நீ என்ன செய்யப் போறே, எங்களோட வரையா?"

"வித் ப்ளஷர். ஜெயந்திக்குக் கௌசல்யாவை அறிமுகப் படுத்தினாயா?"

"ஓ! இவளுக்கும் மாமா மாமிதான் லோகல் கார்டியன். இப்பதான் முதல்முதலா அவங்க வீட்டுக்குப் போகப் போறா."

ஜெயந்தியுடன் ஷாப்பிங் போகப் பிடித்திருந்தது. மூவரும் கல்லூரி கேன்டீனில் காப்பி சாப்பிட்டுவிட்டுப் பேசியபடியே காலாற மெயின் கார்ட் கேட் பக்கம் வந்தனர்.

"இன்னமும் தமிழ்வாணன் நாவல்கள் படிக்கிறாயா, ஜெயந்கி?"

"எப்பவானும் படிக்கறதுண்டு. அநேகமா எல்லா நாவலும் படிச்சாச்சு", என்று கன்னம் சிவந்தாள்.

"அப்புறம்? இந்த ஊரில் எல்லா இடமும் பார்த்தாச்சா?"

"என்னைக் காலேஜ்ல சேர்க்க அப்பா அம்மா வந்திருந்தபோது மலைக்கோட்டை, சமயபுரம், திருவானைக்கா, ஶ்ரீரங்கம் போனோம். மற்ற இடங்கள் இனிமேல்தான் பார்க்கணும்."

அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கித் தனக்கு வேண்டிய ’பிளாஸ்டிக் பக்கெட், ப்ளாஸ்டிக் மக், டூத் பேஸ்ட், டூத் ப்ரஷ், ரிப்பன்’, வளையல்கள் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டாள். சாரதாஸில் நுழைந்து தனக்கு நாலைந்து தாவணிகள் எடுத்துக்கொண்டு, "உங்களுக்குப் பிடிச்சிருக்கா, வசந்தி?" என்று கேட்டு அவனை ஓரக் கண்ணால் பார்த்தபோது மெல்லத் தலையாட்டினான்.

எல்லாப் பொருள்களையும் அவள் அந்த ’ப்ளாஸ்டிக்’ வாளியில் வைத்துத் தூக்கி வந்தபோது அவன் எவ்வளவோ உதவ முற்பட்டும் மறுத்துவிட்டாள்.

மறுநாள் அவர்கள் கௌசல்யா வீட்டுக்குப் போனபோது அந்த முதல் சந்திப்பிலேயே ஜெயந்தியைக் கௌசல்யாவுக்கும் மாமிக்கும் பிடித்துப்போனது.

"என்னையெல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம், ஜெயந்தி. நாமெல்லோரும் இப்ப தோழிகள் ஆய்ட்டதால என்னைக் கௌசின்னே கூப்பிடு."

"உங்க வீடு ஃபன்டாஸ்டிக், கௌசி. இங்கேயே இருந்திடலாம் போலிருக்கு."

"இருந்திடேன், எனக்கும் சந்தோஷமா இருக்கும். நாளைக்கே உங்க அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட்டுடு."

(தொடரும்)


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:36 pm

அருமையிருக்கு

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 27, 2013 7:27 am

வனால் கௌசல்யாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கௌசல்யாவாகத் தோன்றினாள். இப்படிக்கூட வெள்ளை உள்ளத்துடன் மனதில் பட்டதை சட்டென்று வெளியிட்டு, அந்த உடனடிப் பேச்சிலும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து உதிர்த்து, கலைடாஸ்கோப்பின் வண்ணக் கோலங்கள் போன்ற அழகழகான முக பாவங்களில் எப்போதும் சிரித்துக்கொண்டு ஒரு பெண்ணால் இருக்க முடிவது வியப்பாக இருந்தது. கோபமோ வருத்தமோ பட்ட சந்தர்ப்பங்கள் அவள் வாழ்க்கையில் அதிகம் இருந்திருக்காது, அந்த வகையில் அவள் அதிர்ஷ்டசாலி என்று தோன்றியது.

"ஜெயந்தியை பற்றி நீ என்ன நினைக்கறே, ராஜா?"

"எ வெரி நைஸ் கேர்ள், இல்ல?"

"நான் உன்னுடைய கருத்தைக் கேட்டேன்."

"எஸ், எ நைஸ் கேர்ள். அழகானவள், நல்லவள். புத்திசாலி. வெரி ஆக்டிவ். இனிமையாப் பேசறா."

"உனக்கு அவளை முன்பே தெரியுமாமே?"

"தெரியும்னா பார்த்திருக்கேன். ஒரே ஊர்தானே? வசந்தியோட தோழிவேறு. எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

வசந்தி எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறாள் போலிருக்கிறது. அனுவைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாளோ?

வினாடிகள் மௌனமாக நழுவ, திடீரென்று கேட்டாள்: "ஜெயந்தி உனக்கு நல்ல மேட்ச், இல்லை?"

சட்டென்று நிமிர்ந்தான். அவள் கண்களில் தெரிந்தது குறும்பா, கேலியா அல்லது சோகமா என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

"ஏன் இப்படிக் கேட்கிறே கௌசி? டஸ் இட் மீன் எனிதிங்?"

"இல்லை, நீ அவளை விரும்பறதா வசந்தி நினைக்கறா."

"அப்படி-யா? ஆமாம் நான் அவளை நினைத்துப் பார்த்தேன், உன்னை சந்திப்பதற்கு முன். இப்பவும் அவள் ஒரு friend. Let's not have any confusion there."

ற்றொரு சந்தர்ப்பத்தில் கௌசல்யாவோடு இதே மாதிரி மெல்லிய பிணக்கம் ஏற்பட்டது.

"ராஜா, அனு இப்ப எங்க படிக்கறா?"

"எந்த அனு?"

"அனுராதா. உன் பால்ய சிநேகிதி."

"வசந்தி சொன்னாளா?"

"எனக்கு வேற எப்படித் தெரியும்?"

வசந்தியின் மீது கோபம் வந்தது.

"என்ன சொன்னா, கௌசி?"

"நீயும் அனுவும் வசந்தியும் சின்ன வயசில இணைபிரியா நண்பர்களாம். அனு உன்மேல உயிரா இருந்தாளாம். அதே மாதிரி நீயும் அவள்மேல உயிரா இருந்தாயாம். அப்புறம் ஒருநாள் அவள் உன்னிடம் சொல்லிக்காம எங்கேயோ படிக்கப் போனதும் உனக்கு ரொம்ப ஏமாற்றமாய்ட்டதாம். யு ஸ்டில் மிஸ் ஹர், இல்ல?"

"இதபார் கௌசி, உனக்கு நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

"சொல்லு. ஐம் ஆல் இயர்ஸ்."

"ஒவ்வொரு ஆணும் தன் இளமைப் பருவத்தில் இருந்தே ஒரு பெண்ணைப் பற்றி நினக்கத் தொடங்கிவிடுகிறான். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும். உனக்கு உன் பள்ளிப் பருவத்தில் யாரும் தோழர்கள் இருந்தது இல்லையா, அவர்களுடன் நீ மனம்விட்டுப் பழகினது இல்லையா?"

"இல்லைனு சொல்லமுடியாது."

"அப்புறம்? நீ இப்ப அவர்களைப் பிரிந்து வருந்தறேன்னு நான் சொல்லலாமா?"

"நோ. ஐ டோன்ட் மிஸ் எனி ஆஃப் தெம். இதெல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில தோன்றி மறையும் அன்பு, ராஜா."

"சரியாச் சொன்னே. அந்த வகையில்தான் நான் அனுவை விரும்பினேன். காதலிச்சேன்னுகூட சொல்லலாம். ஆனால் அவள் என்னை அதேபோல் விரும்பினாளான்னு கேட்டாத் தெரியாது."

"So, you loved her and are now pining for her."

"கதைகள்ல வர்ற மாதிரி இதை அவ்ளோ சுலபமா சொல்லிவிட முடியாது, கௌசி. இன்னும் கொஞ்சம் விளக்கமா நான் உனக்குச் சொன்னா இதை நீ சரியான கோணத்தில் புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்."

"சொல்லு."

"உன்னைப் பொறுத்தவரைக்கும் உங்க பெற்றோரோட குறிக்கோள் என்ன? உன்னை அருமையா வளர்த்து நல்லாப் படிக்கவைத்து ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கணும், இல்லையா? அதுபோல என்னைப் பற்றியும் என்னோட பெற்றோர் நினைப்பார்கள் இல்லையா?"

கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு கண்களில் கனல் தெரிய அவள் தலையாட்டியபோது மிக அழகாகத் தோன்றினாள். கோபத்தில் மேலும் விளங்கித் தெரியும் அவள் அழகை இப்போதுதான் பார்க்கிறான்.

"சரி. இப்ப ஒரு படி மேலே போ. உனக்கே அந்த குறிக்கோள் இருந்ததுன்னா? என்ன செய்வே? உன்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திக்கும் ஆண்களை எடைபோட்டு அவர்களில் யாராவது உனக்குப் பொருத்தமான்னு நினைச்சுப் பார்க்கமாட்டே? ஒரு முடிவுக்கு வர அவர்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க ஆசைப்படமாட்டே? அவர்களோட பழகிப் பார்த்தால் அது முடியும்னா அந்த வழியில் முயற்சி செய்யமாட்டே?"

"Thought provoking."

"என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த எய்ம் எப்படியோ எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே இருந்தது கௌசி. சொன்னா உனக்குப் புரியுமோ என்னவோ? அனுவை முதன்முதலா நான் அந்த எலிமென்டரி ஸ்கூல் க்ளாஸ்க்ல பார்த்த உடனே என் மனசில என்ன தோணியது தெரியுமா? ’கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்’னு~ அவ்ளோ அழகா இருந்தா அவ!"

"சுவாரஸ்யமா இருக்கு. கொஞ்சம் அசாதாரணமாயும் தெரியுது."

"Therefore, I began to adore her", என்று தொடங்கி அனுவைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவன் அனுபவங்கள் எல்லாவற்றையும் அவளிடம் விவரித்தான், அந்தக் கடிதம் தவிர. அடுத்து ஜெயந்தியைப் பற்றியும் மாலதியைப் பற்றியும் சொன்னான். அத்துடன் அவனுடைய குடும்பப் பின்னணி பற்றியும் விளக்கினான். மாலதியைப் பற்றிச் சொன்னபோது "தெரியும்" என்றாள்.

"அவள்ட்ட நான் கேட்டபோது வசந்தியைத் தெரியாதுன்னு சொன்னாளே?"

"மாலதி B section. A section நானும் வசந்தியும். அந்த சமயத்தில் எங்களுக்குள் அறிமுகம் இல்லை."

"BhAskar loves her sincerely."

"நல்ல பொண்ணு. யார் வம்புக்கும் போகமாட்டா. First in the class. மொத்தமே அவளுக்கு எங்களை மாதிரி அக்கறையாப் படிக்கற நாலைந்து தோழிகள்தான். தன் தோழிகள்கிட்ட உயிராப் பழகுவா. போலித்தனம் கிடையாது. BhAskar would be lucky if he gets her."

அவன்தன் மனம்திறந்த
வார்த்தைகளின் வெள்ளப் பெருக்கில்
அவள்விழிகளின் கோபக்கனல் அழிந்து
அவர்களிடையே மௌனம் திரையாக விழுந்தது.

சிலநிமிடங்களில் அவளொரு தீர்மானத்துடன்
அந்த மௌனத்தை விலக்கி
உண்மையை எதிர்கொண்டபோது
அவர்களிடையே தூரம் அதிகமாகிவிட்டது தெரிந்தது.


"கல்யாணம் சம்பந்தப்பட்ட உன்னுடைய கணிப்பில் நான் எந்த இடத்தில் இருக்கேன், ராஜா?"
தயங்கினான்.

எவ்வளவு எளிதாகக் கேட்டுவிட்டாள்!
அவள்தன் மனதில் காதல் என்று
நினைத்துப் போற்றி வந்தது
அவனைப் பொறுத்தவரை வெறும் தேடல்,

அதுவும் அந்தத் தேடல்
அவளுடன் முடிந்துவிடும் என்ற
உத்திரவாதம் இல்லை
என்னும் உண்மையை

அவனுக்கு முன்னரேஅவள்
இனம் கண்டுகொண்டது புரிந்துபோக,
அவளுக்கு முன்தான் மிகவும்
சின்னவனாகி விட்டதை உணர்ந்தான்.


முன்பு ஒருமுறை அவளைப் பற்றி நினைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது.
நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

"Come on, RAjA! Let's face it! நீ இதுவரைக்கும் சந்தித்து உனக்கு மனைவியாகத் தகுந்தவள்னு நினைச்சுப் பார்த்த பெண்களை வரிசைப் படுத்தச் சொன்னா, முதலில் அனு. அப்புறம் ஜெயந்தி, மாலதி. இப்போது நான். Anu is out of question now. மாலதியை நீ பாஸ்கருக்கு விட்டுக்கொடுக்கத் தயார். மீதி ஜெயந்தியும் நானும். So we have a fifty-fifty chance? That's not bad. கல்யாணம் என்பது இப்போதெல்லாம் ஆண்களின் சுயம்வரம் தானே?"

"நீ என்னை சரியாப் புரிஞ்சுக்கலை கௌசி. இதுவரை என்னுடைய காதல் ஒருதலைக் காதலாகவே இருந்து வந்திருக்கு கௌசி. மறுமுனையில் நான் அன்பை, நேசத்தை எதிர்பார்க்கலைதான். இப்பத்தான் முதல்முறையா I am at the receiving end. ஒருவேளை எனக்கு அந்தத் தகுதி இல்லையோ என்னவோ?"

சட்டென்று எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
"God, I love you RAjA! நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்."

அவன் தோள்களில் அவள் கண்ணீர் சுட்டது.

அவளது நீண்ட, மென்மையான விரல்களை வருடியபடியே சொன்னான். "எனக்கு இப்போதும் ஏதோ ஒரு பயம்தான் கௌசி. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராக் காதலிக்கறோம். ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றிபெறும்னு தெரியலை."

"ஏன், யார் நமக்குக் குறுக்கே இருக்கா?"

"உங்கப்பா, எங்கப்பா?"

"எங்கப்பா எனக்காக எதுவும் செய்வார்."

"போன சம்மர்ல நான் எங்க அப்பா அம்மாட்ட உனக்காக நிறைய வாதாடினேன். எங்கப்பாட்ட நான் அதுவரைக்கும் அதுமாதிரி பேசினதில்லை. அவர் என்ன சொல்றார் தெரியுமா? நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல அவருக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதுக்கு முன்னால உங்க மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும்னு தீர்மானமா சொல்லிட்டார்."

"உண்மையைச் சொல்லப் போனா எங்கப்பாவும் பிடிவாதக்காரர் தான். யாரவது ஒருபக்கம் விட்டுக்கொடுத்தாத் தேவலாம்."

"அப்புறம் அப்பா சொன்னதில் ஒரு பாயின்ட் இருக்கு கௌசி. நீ விரும்பறதால என்னை அவரோட மாப்பிள்ளையா ஏத்துக்கறதா மாமா நினைச்சார்னா அது சரியில்லை. அவர் என்னை எனக்காக ஏத்துக்கணும்."

"நிச்சயமா."

"நீயும் நானும் இணைவதில் நம் குடும்பங்கள் இன்னமும் பிரிஞ்சிரக் கூடாது கௌசி."

"கரெக்டா சொன்னே. நீயோ நானோ குடும்பத்தை விட்டுத் தனியா வாழ முடியாது. கூடாது."

"நான் உங்கப்பாட்ட பேசிப் பார்க்கறேன் கௌசி."

*** *** ***


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 29, 2013 6:38 am

பயணம்: நாவல்
ரமணி

24

கண்ணும் கருத்தும் எனக்கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனை கள்*எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?
---மஹாகவி பாரதியார், யோகசித்தி 1


ஜெயந்தியுடன் நிறையப் பேசவேண்டும், பேசி அவள் விருப்பு வெறுப்புகளை, ஆசைகளை, திறமைகளை, எதிர்காலத் திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவன் ஆசைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவன் அவளைப் பார்க்க நேரிட்டபோதும் சந்திக்க நேரிட்டபோதும் வசந்தியோ கௌசல்யாவோ எப்போதும் கூடவே இருந்ததனால் அவனால் சம்பிரதாயமாகப் பேசிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று.

எத்தனை சந்தர்பங்கள்!

தொடர்த்ச்சியாகப் பல வாரங்கள் கௌசல்யாவின் வீட்டில் சந்தித்தபோது அவள் என்னதான் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தாலும் அவனுடன் தான் ஒரு ஜூனியர் மாணவி என்கிற உணர்வோடுதான் பழகுவதாகத் தோன்றியது.

வந்த புதிதில் வசந்தியும் கௌசியும் அவளுக்குத் தீவிரமாக டேபிள் டென்னிஸ் பயிற்சி அளித்து, கொஞ்ச நாளில் நான்கு பேரும் ’டபிள்ஸ்’ விளையாடத் தொடங்கியபோது, எப்போதும் ஜெயந்தி அவனுடைய பார்ட்னராக அவர்களால் ஒருமனதாக அனுப்பப்பட்டாள்.

"வசந்தி, ராஜா டீ.டில எக்ஸ்பர்ட். அதனால் அவனுக்கு ஜெயந்திதான் பார்ட்னர், என்ன?"

ஜெயந்தி மெல்லிய புன்முறுவலுடன் விழிகளில் வெட்கத்தைத் தவழவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்வதை ரசித்தவாறே அவன் அவளை வரவேற்று சொல்லிக்கொடுத்து விளையாடி ஒவ்வொரு முறையும் தோற்றாலும் அதிலும் ஒரு மகிழ்ச்சி தலைதூக்கும்.

"சாரி சார், என்னால் இதுக்கு மேல ஆட முடியலை!"

"கவலைப் படாதே, வி வில் மேக் இட். ஒரு சின்ன வேண்டுகோள்."

என்ன என்ற பார்வை.

"நீ என்னை சார்னு கூப்பிடறதை ஜீரணிக்க முடியலை. நான் என்ன அவ்வளவு வயசானவனாத் தெரியறேனா?"

"ஓ நோ!..." கண்கள் தாழக் கன்னங்களில் குறுகுறுப்பு.

"அப்புறம்? நான் உன் நண்பன் ஜெயந்தி. யு தோன்ட் மைன்ட், ஐ ஹோப்?"

மெல்லிய திடுக்கிடலில் தலையாட்டல்.

"லுக், உனக்குக் கௌசல்யாவும் வசந்தியும் எவ்வளவுதூரம் நண்பர்களோ, அந்த மாதிரி என்னையும் உன் நண்பனா நினைச்சுக்கோ. நான்வந்து, வசந்தியைவிடச் சின்னவன், கௌசியைவிடப் பெரியவன். என்னை ராஜான்னே நீ கூப்பிடலாம், சரியா?"

மறுபடியும் கன்னங்கள் குறுகுறுக்க, விழிகள் வெட்கத்துடன் நோக்க, மெல்லிய குரலில் "சரி" என்றாள்.

"சரி ராஜான்னு சொல்லு!"

"...சரி ராஜா!"

"அதுதான் நல்லது. நாளைக்குப் பார், நாமதான் ஜெயிக்கறோம்."

சொல்லிவைத்தவாறே மறுநாள் அவர்கள் முழுமூச்சுடன் விளையாடி வசந்தி-கௌசல்யா ஜோடியை ஒரு ஐந்து நிரல் ஆட்டத்தில் வென்றுவிட, அதன்பின் ஜெயந்தி அவனுடன் ஆடிய ஒற்றையர் ஆட்டங்களில் அவள் திறமை விரைவில் வளர்ந்து, தொடர்ச்சியாக அவர்கள் வசந்தி-கௌசியை வெல்ல, அந்த ஜோடி பிரிக்கப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஜெயந்தி அனைவருடனும் சேர்ந்து ஜனரஞ்சகமான ஹிந்தி, தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்பதிலும், சமீபத்திய நல்ல படங்களைப் பார்ப்பதிலும், தோட்டத்தை வலம் வருவதிலும், ஓவியங்களை ரசிப்பதிலும், மற்ற மகளிர் நுண்கலைகளிலும் ஆர்வம் காட்டியபோது அவளுடைய சுவைகளை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது.

இலக்கியத்தில் அவளுக்கு அவன் எதிர்பார்த்த அளவு ஆர்வம் இல்லை. தனக்கு அவ்வளவு தூரம் கவிதை கட்டுரைகளில் ஈடுபாடு கிடையாது என்றும், ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் வழக்கம் உண்டு என்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டபோது கூறினாள்.

"என்ன தமிழ்வாணன் நாவல்களா?"

விழிகளில் நாணம் வழியப் பொய்க்கோபம் காட்டினாள். வசந்தி அந்த சப்ஜெக்டைத் தொடர அவன் உதட்டைக் கடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

"என்ன நீ அடிக்கடி அவள்ட்ட தமிழ்வாணன் நாவல்களான்னு கேக்கறே? வாட்’ஸ் ஆல் திஸ் அபௌட்?"

அவன் குறும்புடன் "அவளையே கேளேன்", என்றான்.

"என்னடி ஜெயந்தி? என்ன விஷயம்?"

"எதா இருந்தாலும் சொல்லிடு", என்றாள் கௌசல்யா. "ஐ ஸ்மெல் சம்திங் ஃபிஷ்ஷி."

ஜெயந்தி தயக்கத்துடன் அந்த நூலகச் சந்திப்பைப் பற்றிக் கூறியதும், வசந்தியும் கௌசல்யாவும் அவனை வியப்புடன் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பளிச்சிட்டன.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்தான் கௌசல்யா அவனிடம் ஜெயந்தியைப் பற்றியும் அனுவைப் பற்றியும் விவரங்கள் கேட்டு அவனை மலைக்கவைத்தாள்.

ஜெயந்தியுடன் ஏற்பட்ட இந்த அரைகுறைத் தோழமையின் காரணமாக அவள் அவன் மனதையும் நினைவுகளையும் நீண்ட நாள் ஆக்கிரமித்துக் கொள்ள, அவளைப் பார்க்க நேரிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் ஒரு தேனீயின் கவனத்துடன் சேகரித்து தனது டைரியில் தொகுத்திருக்க, இப்போது படிக்கும்போது இனித்தது.

ஒருநாள் காலை அவனும் வசந்தியும் ப்ரின்ஸிபால் அறைக்குமுன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவள் திடீரென்று மாடிப்படிகளில் தோன்றி அவனது அந்தநேர வருகைக்கு வியப்புக் காட்டி, "குட் மார்னிங்!" என்று தன் தோழிகளுக்குமுன் சொன்னபோது பெருமையாக இருந்தது.

ஒரு வார நாளில் அவன் வசந்தியைப் பார்க்கப் போயிருந்தபோது மழை பிடித்துக்கொள்ள, ஜெயந்தி தன் அறைக்கு ஓடி அவள் குடையை எடுத்துவந்து இரவல் கொடுத்ததும், அவன் மறுநாள் மாலை ஹாஸ்டலுக்கு வந்து அவளுக்குச் சொல்லி அனுப்பிக் காத்திருந்து (வசந்தி கல்லூரியில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்துக்குப் போயிருந்தாள்), அவள் வந்ததும் நன்றிகூறிக் குடையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவளுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

விடுமுறை நாட்களில் அவனும் வசந்தியும் ஜெயந்தியும் ஒன்றாக ஊருக்குப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவன் பேருந்தில் அவர்களுக்கு நடுவில் உட்கார நினைத்து முடியாமல் போனபோது, கோபம் மெலிதாத் தலைதூக்கி வசந்தியை மானசீகமாகக் கடிந்துகொள்ள வைத்தது.

விடுமுறை நாட்களில் ஊரில் அவன் வழக்கம்போல் தினமும் மாலை ஜெயந்தியின் அப்பாவைக் கோவிலில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அவள் ஒன்றும் தெரியாதவள் போல எதிர் வரிசையில் நின்றுகொண்டு அடிக்கடி ஓரக் கண்ணால் அவர்களைப் பார்த்தபோது அந்த feined innocence---அவன் டைரியின் பிரயோகம்---அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக