புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
68 Posts - 41%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
319 Posts - 50%
heezulia
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_m10ரமணியின் கதைகள்: பயணம்: நாவல் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கதைகள்: பயணம்: நாவல்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 08, 2013 6:09 am

First topic message reminder :

பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...[/color]

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.

ரமணி
01/09/2012

*** *** ***



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 08, 2013 6:53 am

பயணம்: நாவல்
ரமணி

15

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? -- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
---மஹாகவி பாரதியார், ஆத்ம ஜெயம்


சையுடன் ஊதும்போது பாதியில் வெடித்துவிட்ட பலூன் போன்ற அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து அவளைப் பலமுறை பார்க்க நேரிட்டபோது அவனால் பேசமுடியவில்லை. அல்லது முயலவில்லை.

அவளது கண்கள் ஓரிரு முறை அவன்மீது நிலைத்தபோது கூட, அவற்றில் மூன்றாம் பிறைச் சந்திரன்போல் மெல்லிய கீற்றாகப் புன்னகையும் தோழமையும் எட்டிப் பார்த்தபோது கூட அவன் புன்னகை செய்யவில்லை.

கண்கள் மட்டும் பிடிவாதமாக அவள் பக்கம் பார்த்திருக்க, மனம் அவள் அழகின் பிரதிபலிப்பில் லேசாகிப் பிரகாசமாகத் தோன்ற, கூடவே திடீரென்று யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச் சின்னச் சின்ன கற்களை எறிய ஏற்பட்ட எண்ண அலைகள் மனதைக் குழப்பி அலைக்கழிக்க...

’இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’

’அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி.’

’நீங்க யாருன்னு தெரியலையே?’

’எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும்னு சொல்லுவா?’
’நீ நினைக்கிற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது.’

’வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன்.’
’அப்படியா? என்ன சொன்னா?’
’என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை.’

’எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.’

’"ஜெயந்தி, இந்த முருகன்...’

வ்வொரு முறையும் ரேடியோவில் மனசுக்குப் பிடித்த இனிமையான பாட்டைக் கேட்கும்போது யாரோ திடீரென்று நடுவில் அணைத்துவிடுவது போலிருந்தது.

’கொடியசைந்ததும்... காற்றுவந்ததா?...’

’ஏம்மா, இந்த டப்பா சங்கீதத்தைவிட்டா ஒண்ணுமே தெரியாதா உங்களுக்கு? அறுவது நாழியும் ரேடியோ பக்கத்திலேயே உக்காந்துண்டு... விளக்கு வைக்கிற நேரத்தில வேற பாட்டு கிடைக்கலையா? அதான் மத்த நேரம் பூராவும் கேக்கறேளே?’

’மலர் மலர்ந்த்---’

"சரி பெரியப்பா நான் அப்புறம் கேட்டுக்கறேன்."

ஏன்பா, அவளுக்குப் பிடிச்ச பாட்டுன்னா கேட்டுட்டுப் போறா. நாம நினைக்கற நேரத்தில நல்ல பாட்டுப் போடுவானா? இதுலெல்லாம் நீங்க ஏன் தலையிடறேள்?--என்று மனதுக்குள்தான் சொல்லமுடிந்தது.

ஒவ்வொரு முறையும் யாரோ அவனைப்
பின்தொடர்வது போலிருந்தது.

எப்போதும் இரண்டு கண்கள் அவனைப்
பார்த்துக் கொண்டிருப் பதாகப் பட்டது.

அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாத
அப்பாவின் சலனமற்ற கண்கள்.

அல்லது கலவரம் நிறைந்த
அம்மாவின் கண்கள்.

’ஏண்டா இந்த மாதிரிலாம் செய்யறே?
ஒழுங்காப் படிச்சு முன்னுக்கு வர்ற
வழியைப் பார்ர்க்க வேண்டாமா?’

அல்லது ஆர்வமும் வியப்பும் அனுதாபமும்
தோன்றப் பார்க்கும் வசந்தியின் கண்கள்.


எல்லோருடைய பார்வையும் பரீட்சை ஹாலில் வலம்வரும் மேற்பார்வையாளர்களின் ’எனக்கொன்றும் சம்பந்தமில்லை’ என்னும் பார்வையாக இருந்தது.

பக்க்த்தில் நின்று, நிதானித்து,
அவன் பேனாவின் ஓட்டத்தையே பார்த்துக்கொண்டு,
சமயத்தில் பேனா தடுமாறி நிற்கும்போதோ,
நத்தையைப்போல் நகரும்போதோ,

அல்லது திடுமெனக் கீழே விழுந்துவிடும்போதோ கூட
ஒன்றுமே சொல்லாமல், ஒரு சின்ன ’க்ளு’கூடக் கொடுக்காமல்,

அல்லது பரீட்சை முடிந்த பிறகாவது
’நீ இப்படி செய்திருக்கலாம்’ என்று
ஆலோசனை கூறாமல்,

அவன் மற்ற பரீட்சைகளையாவது
நல்லபடியாகச் செய்யட்டுமே என்ற
அக்கறை இல்லாமல்,
முகத்தைச் சிலைபோல வைத்துக்கொண்டு...


கூடவே சுஜாதாவின் ’கொலையுதிர் காலம்’ நாவலில் வருவதுபோல் அந்த உரையாடல்கள் எப்போதும் எங்கிருந்தோ கேட்டன.

"இந்தக் காலத்துல கன்னாபின்னான்னு கதை எழுத ஆரம்பிச்சுட்டா. கதிர்ல புஷ்பா தங்கதுரை, விகடன்ல குமாரி பிரேமலதா, குமுதத்தில் வழக்கம்போல் ஒரு சாண்டில்யன்... போறாக்குறைக்கு சுஜாதாவோட படையெடுப்பு, ஜெயராஜோட அப்பட்டமான படங்கள்... வரவர கலைமகள் கல்கி தவிர ஒரு புஸ்தகத்தைக் கையால் தொடமுடியலை."

"ஆமாக்கா. இதுபோதாதுன்னு சினிமா வேற. இந்தக் காலத்துப் பசங்ககிட்ட இதப் படிக்காதே அதப் பார்க்காதேன்னு சொல்லவா முடியும்?"

"அதுவேற எனக்கு பயம் காமு. நாம என்ன வாச்மேன் உத்தியோகமா பாக்கமுடியும்? எனக்கென்னவோ இவா ரெண்டுபேரையும் நினைச்சா கவலைதான். ஊர்விட்டு ஊர்போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுகள். பாத்துக்கறத்துக்கும் ஆளில்லை. என்னமோம்மா, நல்லா படிச்சுக் கரையேறணும்."

"எங்க பார்த்தாலும் கண்டகண்ட சினிமாப் படங்கள். அதுக்கு ஆயிரம் போஸ்டர். கோயம்புத்தூர்ல போறாக்குறைக்கு மலையாள சினிமா வேற. காதல் காதல்னு ஆபாசத்தைத்தான் திணிக்கறாங்க."

"காதலாவது கத்திரிக்காயாவது? நா இந்த சினிமாப் பக்கமே தலைவெச்சு படுக்கறதில்ல. உங்க அத்திம்பேர்க்கும் இதெல்லாம் கட்டோட பிடிக்காது."

அவனும் வசந்தியும் காற்றாட மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று முடிவுசெய்து அவன் கேட்டான்.

"வசந்தி, நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே?"

"எந்த அனு?"

திடுக்கிட்டான். "என்ன வசந்தி இப்படிக் கேக்கறே? நம்மளோட ஆறாவது வரைக்கும் படிச்சாளே அந்த அனுதான்."

"இல்லை, என்னோட காலேஜ்ல ஒரு அனுராதா படிக்கறா. அவளை நினைச்சிண்டுட்டேன்."

"எனக்கு வேற எந்த அனுவைத் தெரியும்?"

"அதானே?"

"நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே, சொல்லேன்?"

"அவதான் இப்ப இங்க இல்லையே? மதுரைலைன்னா ஏதோ ஒரு காலேஜ்ல படிக்கறா?"

"தெரியும், சொல்லேன்?"

’தெரியும்’ என்ற வார்த்தை வாய்தவறி விழுந்துவிட்டது, வசந்தியின் முகத்தில் தெரிந்தது. சற்றே புருவங்களை வளைத்து அவள், "எதுக்கு இப்ப திடீர்னு அனு?" என்றாள்.

பெருமூச்சுவிட்டான். "சரி, ஜெயந்தியைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"

"ஜெயந்தி?... ஓ அவளா! நல்ல சூட்டிக்கையான பொண்ணு. நன்னாப் படிப்பா. என்ன இப்ப திடீர்னு பெண்களைப் பத்தின ஆராய்ச்சி?"

"சும்மாதான். ஏதோ தோணித்து, கேட்டேன். நீ இதைப்பத்தி யார்கிட்டயும் பிரஸ்தாபிக்க வேண்டாம்."

"நான் ஏன் பிரஸ்தாபிக்கறேன்? But one thing. This is the time to study."

இவர்கள் யாரும் கொஞ்சம்கூடப் பிடிகொடுத்துப் பேசமாட்டார்கள் என்று புலப்பட்டது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். இந்த மாதிரி விஷயங்களில் அவருக்கு அக்கறையே கிடையாது.

தேடிச் சோறு நிதந் தின்று -- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னெனுறுநினைத் தாயோ?
---மஹாகவி பாரதியார், யோக சித்தி, வரம்கேட்டல் 4


என்று வசந்தியை நோக்கி மானசீகமாகக் கூறிவிட்டுக் காலரை சரிசெய்துகொண்டான்.

அவனும் பாஸ்கரும் அறையில் பாரதியை உரக்கப் பாராயணம் செய்தது நினைவுக்கு வந்தது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம், சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை, காதலின் புகழ் 49


பாரதியின் வரிகளில் ஆறுதல் அடைந்தவன், பாஸ்கரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான்.

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 09, 2013 8:38 am

ருநாள் மாலை தமிழ்ப் பரீட்சை முடிந்ததும் அவனும் பாஸ்கரும் சத்திரம் பஸ் நிறுத்தம் தாண்டிக் காவிரிப் பாலம் நோக்கி நடைபோட்டபோது தற்செயலாகத் திரும்பிப் பார்த்ததில் அப்போதுதான் வந்துநின்ற ஒன்றாம் நம்பர் பஸ்ஸில் மாலதி தன் தோழிகளுடன் நுழைவது தெரிந்தது.

"ராஜா, கவனிச்சேல்ல? கம் ஆன், இப்ப இருக்கற ட்ராஃபிக்ல இந்த பஸ் சிந்தாமணி ஸ்டாப்க்கு வர கொறஞ்சது மூணு நிமிஷமாகும். இப்ப திரும்பி சத்திரம் ஸ்டாப்புக்கு ஓடறதுக்குள்ள பஸ்ஸைக் கிளப்பிடுவான். So, hurry, this is the race of our life!"

இடம்வலம் சாலைநடைபாதை பாகுபாடுகளின்றி மக்களும்மாக்களும்வாகனங்களும் நீக்கமற நிறைந்து ஒரு குழம்பிய குட்டையாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்கள் தம் தலையை வானில் வைத்துக்கொண்டு ஒரு நாயின் உத்வேகத்துடன் நீந்திக் கடந்து மூச்சிரைக்க விரைந்து, கால் விரல்களிலும் கணுக்காலிலும் வலி ஊசிகள் பின்னிக்கொள்ள, அண்ணா சிலைக்கு அருகில் அந்த பஸ் அவர்களை முந்திவிட, அவர்கள் மேலும் ’தம்’ பிடித்து சாலையைக் கண்டபடி கடந்து போக்குவரத்துக் காவலரின் விசிலையும் வசவுகளையும் புறக்கணித்து, சிந்தாமணித் திருப்ப நிறுத்தத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்ட பஸ்ஸைக் கடைசி நிமிஷத்தில் பற்றிப் படிகளில் தொற்றிக்கொண்டார்கள்.

அவர்கள் அதிர்ஷ்டம் பஸ்ஸில் கூட்டமில்லை. உட்கார இடம் கிடைத்தது. அதுவும் அந்த மகளிர் கூட்டத்தின் பக்கம், எதிரில்.

"மால் நீ அந்த சாயும் நெய்தலும் அநோடேஷன் எழுதினியா?"

"ஓ. பெரியபுராணம்."

"அய்யய்யோ இல்லை! புறநாறூறு."

"கிடையாது பெரியபுராணம்தான். ’சாயும் நெய்தலும் ஓம்புமின் | ஆய்வளை கூட்டு அறிவை’. இதான் ஃபுல் கொட்டேஷன்."

"பெரியபுராணம்தான்!" என்று கோரஸ் ஒலிக்க அவள் இரண்டாம் வருட மாணவிதான் என்று உறுதியாயிற்று.

"உன்னோட முயற்சிகள் எந்த அளவில் இருக்கு பாஸ்கர்?"

"அவள் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டேன்! செகன்ட் இயர்ங்கறது இன்னும் வசதி. என்னைவிட, சாரி, நம்மைவிட மூத்தவளா இருக்க சான்ஸ் இல்லை. அதே வயசுங்கறது இந்தக் காலத்தில பரவாயில்லை. மற்றபடி உடல் உள்ளம் பெர்சனாலிட்டி விஷயங்கள் பரம திருப்தி. அந்த ’ஸ்பார்க் ஃப்ரம் ஹெவன்’ மட்டும் விழுந்ததுன்னா சிலாக்கியமா இருக்கும். நீயோ நானோ, ஒன் அஃப் அஸ் மஸ்ட் கெட் ஹர்."

"நான் ஏற்கனவே உனக்கு ’கிரீன் ஸிக்னல்’ கொடுத்திட்டேன் பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 10, 2013 7:16 am

பயணம்: நாவல்
ரமணி

16

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
---மஹாகவி பாரதியார், புதுமைப் பெண் 7


ரு பசுவின் அவசரத்துடன் கண்கள் டைரியில் மேய்ந்தும் பின் மனம் மேய்ந்ததை நிதானமாக எண்ணங்களாகப் பகுத்து அசைபோட்டும் அவன் தன் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, கண்கள் மறுபடியும் எழுத்துகளின் புல்வெளியை நாட, கௌசல்யா தோன்றினாள்.

கல்லூரியில் சேர்ந்தபின் அவன் பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் வசந்தியின் கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்த்துவருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் எப்போதும் சைக்கிள்மேல் பவனி வரும் அந்தப் பியூனிடம் சொல்லியனுப்பிவிட்டுப் பார்வையாளர்கள் பெஞ்ச்சில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வசந்தி தன் அறையிலிருந்து வெளிப்போந்து மாடிப்படிகளில் இறங்கி ஹாஸ்டல் கட்டட வாசலைக் கடந்து அவனை நோக்கி வந்தாள். கூடவே ஒரு தோழி.

கொஞ்ச தூரம் வசந்தி வந்ததும் தோழி கையசைத்து விடைபெற்றுக்கொள்வாள், வசந்தி மட்டும் அவனை நோக்கி வருவாள் என்று வழக்கம்போல் எதிர்பார்த்து இருந்தவனுக்கு ஆச்சரியும் காத்திருந்தது.

சந்தியுடன் வந்தவளைக் கண்கள் அளவெடுத்தன. மெல்லிய ஃப்ரேமுடன் கூடிய வெயில் கண்ணாடிகளுக்குள் விழிகள் கருவண்டுகளாகக் குறுகுறுத்தன. ஃப்ரேம் நடுவிலிருந்து ஓடிய எடுப்பான நாசி ஷர்மிளாவை நினைவுபடுத்தியது. கொஞ்சம் நீளவடிவம் கொண்ட முகத்தில் காலைப் பனிமூட்டம் போல் மெல்லிய பவுடர் திரையிட்டு முகத்தின் சந்தன நிறத்தைச் சற்றே மங்கச் செய்தது. அப்போதுதான் ஷாம்பு போட்டுக் குளித்தாற்போல் புதிதாகக் காணப்பட்டு, வில்லென வளைந்த hair band-டைத் தாண்டி அருவியாகக் கொட்டும் கூந்தலை நீண்ட கைகளின் நீளமான விரல்கள் அனாயாசமாக ஒதுக்கிவிட, ஒரு ’க்ளோஸப்’ புன்னகையுடன் அவள் பேசினாள்.

"ஹலோ, குட் ஈவனிங்! நீங்க ராஜா இல்லை? என்னைத் தெரியறதா?"

"குட் ஈவனிங். ஐ’ம் சாரி, எனக்கு ஞாபகம் இல்லை."

"நேச்சுரல் தானே! சின்ன வயசில பார்த்தது."

"என்ன ராஜா, இவள் யாருன்னு ஞாபகம் இல்லை? கௌசல்யா."

"நீ ஏன் சொன்னே வசந்தி? ராஜாவாக் கண்டுபிடிக்கறானான்னு பாக்க நினைச்சேன்."

"கௌசல்யா? ஐ ஸீ, நாராயணன் மாமாவோட டாட்டரா நீங்க! ரொம்ப வருஷம் கழிச்சுப் பாக்கறோம். வாட் சர்ப்ரைசிங் சேஞ்ஜ்!"

"என்ன சேஞ்ஜ், சொல்லுங்கோ?"

"சின்ன வயசில பாத்தபோது நீங்க குட்டையா, ஒல்லியா இருந்தீங்க."

"நௌ தி அதர் வே இல்ல? ஆனால் நான் வசந்தி மாதிரி குண்டு இல்ல, இல்லையா?"

"எனக்கொண்ணும் வித்தியாசம் தெரியலை. பட்தென் வசந்தி நிச்சயமா குண்டு இல்லை."

"ஓகே, அக்ரீட். ஆனால் நான் அவ்ளோ அழகா, அடக்க-ஒடுக்கமா இருக்கற மாதிரி என்னைப் பார்த்தா தெரியலை இல்ல? ஐ லுக் மாடர்ன்."

"அன்ட் ப்ரெட்டி."

கலகலவென்று சிரித்தாள்.

"வெல், சின்ன வயசில பார்த்ததுக்கு இப்போ நீங்க எப்படி இருக்கேள்னு சொல்லட்டுமா?"

"யு ஆர் வெல்கம் டு ஸே எனிதிங்."

"நீங்களும் அப்போ குட்டையா, ஒல்லியாதான் இருந்தீங்க. இப்போ பார்க்கும்போது நம்பத்தான் முடியலை."

"வொய்?"

"யு லுக் ஸோ டால் அன்ட் வெல்-பில்ட். அன்ட் சார்மிங் டூ!" என்று கண்ணடித்தாள்.

அனுவை நினைத்துக்கொண்டான். அநேகமாக இப்போது அவன் அவளைவிட உயரமாகி இருக்கக்கூடும். மதுரையில் படிக்கிறாளாமே? அவளுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

"என்ன பலமான யோசனை?"

"ஒண்ணுமில்லை. நானே இவ்வளவு உயரமா வருவேன்னு நினக்கலை."

"ஆல் இன் த கேம். ஊர்ல எப்படி, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"சௌக்யம்."

"இப்பவும் அதே ஊர், வீடுதானே?"

"அதேதான். வேறெங்க போறது?"

"உங்க தெருவுல ஒரு கோவில் இருக்கில்ல? ம், பிள்ளையார் கோவில்!"

"ஆமாம்."

"சின்ன வயசில---மூணாவது படிக்கும்போதுன்னு நினைக்கறேன்---நாமெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து பாண்டி விளையாடி யிருக்கோம், லீவு நாள்ல. உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லை போல. தவிர, நான் கொஞ்ச நாள்தானே உங்காத்தில இருந்தேன்."

"கொஞ்சம் ஞாபகம் இருக்கு மிஸ் கௌசல்யா."

"ஒரு சின்ன வேண்டுகோள்."

"என்ன?"

"இந்த மிஸ், நீங்க-வாங்கல்லாம் வேண்டாமே? ப்ளீஸ்."

"ரைட். உங்களுக்கும் அதேதான்."

"மறுபடியும் பார்த்தாயா, வசந்தி? ராஜா, சொல்றதைக் கேளுங்கோ, கட் தட் க்ராப்."

"நீங்க மட்டுமென்ன?"

"இதுக்கு முடிவே இல்லை!" என்று சிரித்தபடி செல்லமாக அவன் தோளில் கைவைத்துத் தள்ளினாள். அவ்வழியே போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு பெண்கள் திரும்பிப் பார்த்தனர். நல்லவேளை, அருகில் வேறு பார்வையாளர்கள் இல்லை.

"யு கால் மி ஜஸ்ட் கௌசல்யா, ஆர் கௌசி ஃபர் ஷார்ட்."

"அன்ட் யு கால் மி ராஜா. நாட் ஜஸ்ட் ரா ஆர் ஜா!"

"போதும் ரொம்ப அறுக்காதீங்கோ" என்றாள் வசந்தி.

"வசந்தி, இவள் இங்க எப்படி திடீர்னு? மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இல்ல இருக்கா? கௌசல்யா, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"நல்லா இருக்கா. நாங்க இப்போ திருச்சி வந்தாச்சு."

"அப்பா என்ன பண்றார் இப்போ? அந்தக் காலத்தில மாமா வேலை விட்டு வேலை தாவிண்டே இருப்பார்னு அப்பா சொல்லக் கேள்வி."

"ஒரு வழியா ஃபார்மஸி லைன்ல செட்டிலாய்ட்டார். இப்ப அவர் சீனிய மெடிகல் ரெப். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில ஏரியா மானேஜர் ஆய்டுவார்."

"நல்ல ப்ரொஃபஷன். இப்ப சொல்லு வசந்தி, இவளை எங்கே பார்த்தே?"

"ஒரு வாரத்துக்கு முன்னால காலேஜ் முடிஞ்சு நான் ஹாஸ்டலப் பாத்துப் போனப்ப, ’ஹாய் வசந்தி’ன்னு பின்னால யாரோ கூப்பிடறது கேட்டது. திரும்பிப் பார்த்தா இவள் தடதடன்னு ஓடிவந்தாள். எனக்கும் முதல்ல அடையாளம் தெரியலை. அடையாளம் தெரியலைன்னா முகஜாடைலாம் மறந்து போல! மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இருக்காளே, இவள்கூட அங்கதானே படிச்சிண்டிருந்தாள், திடீர்னு எப்படி இங்கே வந்துசேர்ந்தானு ஒண்ணுமே புரியலை."

"நான் பி.யு. மெட்ராஸ்லதான் படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இங்க மாத்தலாச்சு. ஸொ ஐ’ம் ஹியர்!" என்று தோள்களை உயர்த்தினாள்.

அவள் அணிந்திருந்த பாலியஸ்டர் ஷர்ட் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொஞ்சம் சுருங்கியது. விரல்களை அதன் விளிம்பில் ஓடவிட்டு சரிசெய்துகொண்டாள்.

"வசந்தி உங்க காலேஜ்ல சாரிதான் உடுத்தணும்னு ஒரு ரூல் இருக்கில்ல?"

"அப்படின்னு ஒண்ணுமில்ல. திங்கட்கிழமை மட்டும் வெள்ளை சாரி யுனிஃபார்ம் கட்டாயம். மத்தபடி எந்த உடையிலும் வரலாம். சில பேர் பெல்-பாட்டம் பேன்ட் ஷர்ட், நிறைய பேர் சல்வார் கமீஸ்ல வரா. ஆனால் இந்த மினி மிடி வகையறா கூடாது. கௌசி சாரிலகூட அழகா இருப்பா."

"அப்புறம்? கௌசல்யா என்ன மேஜர்? கெமிஸ்ட்ரி, பாட்டனி, இல்ல பிகாம்?"

"அதெல்லாம் எனக்கு ஒத்துவராத சப்ஜேக்ட்ஸ். நானும் இங்லீஷ் லிட்ரேச்சர்."

"சரிதான். ஒரு இலக்கியப் படையே இருக்கு. நான், வசந்தி, கௌசல்யா, பாஸ்கர்..." மாலதி, ஒருவேளை அனுவும்கூட.

"யார் பாஸ்கர்?"

"என் அத்யந்த சினேகிதன். வெரி மாடர்ன், லைக் யு. வெரி ஸ்மார்ட் அன்ட் ஷார்ப்."

"வாவ் வாவ்! பாக்கணுமே?"

"நீ எங்க காலேஜ்க்கு வரமுடியுமா?"

"அவரை இங்கே கூட்டி வரது?"

"வேற வினையே வேண்டாம்!"

பற்கள் பளிச்சிட ஜலதரங்கம் இசைத்தாள்.

"வசந்தி, என்ன பேசாம இருக்கே? இந்த ரியூனியனை நாம ஸெலிபரேட் பண்ணனும்னு முன்னடியே உன்கிட்ட சொன்னேன் இல்ல?"

"பண்ணிட்டாப் போறது. எங்க போகலாம்?"

"வேற எங்க நாம போக முடியும்? நம்ம காலேஜ் கேன்டீன்தான்."

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 11, 2013 8:35 am

கேன்டீனில் வேண்டுமென்றே இவன் பக்கத்தில் நாற்காலியை ஓசையுடன் இழுத்துப் போட்டுக்கொண்டாள், சுற்றிலும் சந்தேகக் கண்களை சட்டை செய்யாமல்.

"அய்யர், என்ன ஸ்வீட் இன்னிக்கு?"

"பாஸந்தி."

"இன்னிக்குன்னு கேட்டேன்."

"பாஸந்தி இன்னைக்குப் போட்டதுதாம்மா. இங்கதான் டெய்லி ஒரு ஸ்வீட் போடறோமே?"

"பொய் சொல்றார்", என்று கிசுகிசுத்தாள். "சரி, மூணு பாஸந்தி."

"கௌசி, இன்னிக்கு வறுத்த முந்திரி, கவனிச்சயா? ராஜாவுக்கு அதிர்ஷ்டம்தான்."

"ஆமாம். அய்யர், அடுத்து மூணு ப்ளேட் ஃப்ரைட் காஶ்யூஸ். ராஜா, டிஃபன் ஏதாவது சாப்பிட்டயா, அல்லது அதையும் இங்கேயே வெச்சுக்கலாமா?"

"இப்பத்தான் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்டேன். நோ, தாங்க்ஸ்."

பாஸந்தியும் வறுத்த முந்திரிகளும் வந்தன. "அய்யர், கடைசியா காஃபி, எவர்சில்வர் டபரா செட்ல."

"அப்புறம்? எப்படி இருக்கு கௌசல்யா காலேஜ் லைஃப்? மெட்ராஸ்ல படிச்சவளுக்கு இந்த ஊர் கொஞ்சம் கிராமத்தனமா இருக்கும்."

"நாட் அட் ஆல். நான் கொஞ்சம் முற்போக்கா டிரெஸ் பண்றதைப் பார்த்து நிறையப் பேர்---சில பெண்கள் கூட--கொஞ்சம் ’அவுட்லாண்டிஷ்’னு நினைக்கறாங்க. இப்படித்தான் ஒருநாள் தெப்பக்குளம் பக்கம் ஒரு கிருதா---பெரிய சார்ல்ஸ் ப்ரான்ஸன்னு நினைப்பு---’ஹாய் பேபி, கம் வித் மி’ன்னான். நான் உடனே என் செருப்பைக் கழற்றிக் காட்டி, ’லுக், நேத்துதான் பர்மா பஸார்ல வாங்கினேன். ஃபாரின் சரக்கு. நல்லா மெத்துனு இருக்கும்!’னு சொன்னேன். அவ்வளவுதான், கூட்டத்தில அவன் போன இடம் தெரியலை."

தோள்களை உயர்த்திவிட்டுத் தொடர்ந்தாள்.

"எதுக்கு சொல்றேன்னா, நான் பார்க்க மாடர்னாத் தெரியலாம். ஆனால் நானும் வசந்தி மாதிரிதான். ஸாஃப்ட் அன்ட் மாடஸ்ட். என்ன கொஞ்சம் வாயடிப்பேன். விகல்பம் இல்லாம எல்லோரோடையும் சோஷலா பழகுவேன்."

"தட்’ஸ் நைஸ். பாஸந்திகூட உன்னைமாதிரி ஸ்வீட்டா இருக்கு."

"பாஸந்தி ஸ்வீட்டாத்தான் இருக்கும். நல்லா இருக்கா சொல்லு."

"ரியலி குட்."

"அய்யர், கேட்டீங்களா?"

"என்னம்மா?"

"உங்க கடை பாஸந்தி ரொம்ப நல்லா இருக்காம். சார் சொல்றார்."

கல்லாவில் இருந்த அய்யர் அவனைப் பார்க்க, "சார் யார் தெரியுமா? எங்க அத்தை பையன்" என்றாள்.

"இவள் இப்படித்தான் எல்லோரோடையும் வாயடிப்பாள். ஷ், கௌசி! உன் ராமாயணத்தை எல்லாம் வெளில வெச்சுக்கலாம். அய்யர், சீக்கிரம் காஃபி கொண்டாங்கோ."

அய்யர் காஃபி கொண்டு வந்ததும் அவன் அவர் கையில் பத்து ரூபாய்த்தாள் ஒன்றைத் திணித்தான்.

"என்ன தைரியம்? எங்க காலேஜ்க்கு வந்து எங்களுக்கே ட்ரீட் கொடுக்கறயா? அய்யர், எப்படி நீங்க அந்த நோட்டை வாங்கலாம்?"

"பரவாயில்லை அய்யர். பாக்கி சில்லறையை நீங்களே வெச்சிக்கோங்கோ", என்று எழுந்தான்.

"கமான், கௌசல்யா! நேரமாச்சு. எனக்கு இன்னும் அரை மணியில ஹாஸ்டல்ல இருக்கணும்."

"ராஜா, நீ பெரிய ஆள்தான். நான்தானே ஸெலிபரேட் பண்றதாச் சொன்னேன்."

"நோ, நான்தான் முதலில். அடுத்து நீ."

"அப்படியா?" என்று அரைமனதாகத் தலையாட்டிவிட்டு, நடுவிரலைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்துக் கொஞ்சம் யோசித்தாள்.

"ரைட், நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே? உனக்கும் வசந்திக்கும் எங்காத்துல டின்னர். நான் இப்பவே வார்டன்ட்ட சொல்லி வசந்தியை அழைச்சிட்டுப் போறேன். நாங்கதான் அவளுக்கு லோகல் கார்டியன்னு ஏற்கனவே பேர், விலாசம்லாம் தந்து அனுமதி வாங்கியாச்சு. கார்த்தால சரியா பதினொரு மணிக்கு டின்னர். ஒம்பது ஒம்பதரைக்கெல்லாம் வந்திரு, என்ன? அப்பாகூட உன்னைப் பார்க்கணும்னார். அவர் போனவாரம் முழுக்க ஈரோடு டூர் போய்ட்டதால உன்னைக் காலேஜ்ல வந்து பார்க்க நெனைச்சும் முடியல."

"அதனாலென்ன? நாளைக்கு நான்தான் ஆத்துக்கே வரேனே."

"அப்ப சரியா கார்த்தால லேடஸ்ட் பை ஒம்பதரை மணி. மறந்துடாதே. தூங்கிடாதே!"

"ஓகே, பை! பை வசந்தி! நாளைக்குப் பார்க்கலாம்."

"பை ராஜா!" என்று பெண்கள் இருவரும் கோரஸ் பாட, கௌசல்யா, "நான் ஒரு முட்டாள்!" என்றாள்.

நின்றான். "எஸ்?"

"என்ன எஸ்? எங்க வீடு தெரியுமா உனக்கு? தில்லை நகர் மூன்றாவது கிராஸ் நம்பர் பதினஞ்சு. வாசல்ல அப்பா பேர் போட்ட போர்டும் ’நாய் ஜாக்கிரதை’ போர்டும் இருக்கும்."

"ஆல்ரைட். நாளைக் காலை பார்க்கலாம்."

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 12, 2013 7:21 am

பயணம்: நாவல்
ரமணி

17

பெண்கள் அறிவை வளர்த்தால் -- வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.
---மஹாகவி பாரதியார், முரசு 10


றுநாள். காலை சரியாக ஒன்பதரை மணிக்கு அவன் அவள் வீட்டு கேட்டைத் திறக்க முயன்றபோது ஒரு வெள்ளைப் பாமரேனியன் ஆக்ரோஷக் குரலில் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

நாயின் குரல் கேட்டு மாடி ஜன்னலில் ஓர் முகம் தோன்றி, சில விநாடிகளில் விரைந்த காலடி ஓசைகளும், "ஸ்காம்ப்! கீ கொயட்" அதட்டலும் தொடர்ந்து, "ஹலோ ராஜா! குட் மார்னிங்! பங்ச்சுவல் டு த மினிட்" என்ற குரலும் கேட்டன.

வெள்ளை மாக்ஸியின் அலைஅலையான மடிப்புகளும், பூவேலைகளும், கைகளில் பெல்ஸும் ராஜ் கபூரின் ’பாபி’யை நினைவூட்ட, ஷாம்பூவில் தோய்ந்து குளித்த கூந்தல் அலைபாய, நெற்றியில் செயற்கைத் திலகம் மினுமினுக்க, ஃபாரின் ஸ்ப்ரேயின் சுகந்தம் தென்றலாகச் சூழ்ந்துகொள்ள, கௌசல்யா ஓடிவந்து கதவைத் திறந்து அவனை வரவேற்றது ஒரு கணம் மூச்சைப் பறித்துக்கொள்ளும் காட்சியாக இருந்தது.

ஹாலில் வசந்தி சோபாவில் சாய்ந்துகொண்டு ’குமுதம்’ பார்த்துக்கொண்டிருந்தாள். "வா ராஜா" என்றாள்.

மாமா மாமியின் சுவடுகூடக் காணோம்.

"அப்பா இல்லை?"

"குளிச்சிண்டிருக்கார். அம்மா சித்த முன்னாடி எதிர்வீட்டு வரைக்கும் போய்ட்றேன்னு போனா. நான் போய் கூப்பிடவா?"

"வேண்டாம், வரட்டும்."

"ஃபீல் அட் ஹோம் ராஜா! வீட்டைப் பார்க்கறையா?"

"அப்பா வரட்டுமே?"

"சரி உக்காந்துக்கோ. இதோ வரேன்."

திரும்பி வந்தபோது ஒரு ட்ரேயில் மூன்று கோப்பைகளில் காப்பியும் ஒரு சின்ன எவர்சில்வர் தட்டில் கேக்கும் கொண்டுவந்தாள்.

"என்ன விசேஷம் கேக் எல்லாம்?"

"சொல்ல மறந்துட்டேன் ராஜா. இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்."

"என்ன கௌசல்யா? முன்னாடி ஒரு வார்த்தை சொல்றதில்லை?"

"ஐயோ நான் நேத்து நெஜமாவே மறந்துட்டேன்! என்னோட நட்சத்திரம் அடுத்த வாரம் வருது. ஆங்கிலத் தேதிப்படி இன்னிக்கு."

"விளையாடாதே கௌசல்யா. உனக்கு நேத்து ஞாபகம் இல்லைனு என்னை நம்பச் சொல்றியா? ஒரு வேளை ஃபர்ஸ்ட் டைம் என்னைப் பார்த்ததால சொல்லலியா? கமான், நான் ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்."

"ப்ராமிஸ் ராஜா! நேத்து உன்னைப் பார்த்த சந்தோஷத்துல மறந்தே போய்ட்டேன். வீட்டுக்குப் போறச்ச ஞாபகம் வந்து வசந்திகிட்ட சொன்னேன். ’வசந்தி ராஜாகிட்ட சொல்ல மறந்துட்டேன். தப்பா நினைச்சுக்கப் போறான்’னு. வசந்தி சொன்னா, ’டோன்ட் வொர்ரி, கார்த்தால சர்ப்ரைஸா சொல்லிக்கலாம்’னு. மத்தப்படி நான் நெஜமாவே மறந்துட்டேன்."

கண்களை உயர்த்தி, தலையை ஆட்டியபடி அவள் பேசிய விதம் ’நிறம் மாறாத பூக்கள்’ ரத்தியை நினைவூட்டியது.

விஜய், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது! நா பொய் சொல்லலை விஜய்... நெஜமாவே எனக்கு ஸ்விம்மிங் தெரியாது!

கௌசல்யா அவன் மௌனத்தைக் கலைத்தாள். "ராஜா, உனக்கு நமஸ்காரம்---"

"நோ!"

"நான் உன்னையும் வசந்தியையும் விட கிட்டத்தட்ட ஒரு வயசு சின்னவ! வசந்திக்குக் கூடப் பண்ணினேன்" என்று அவன் தடுத்ததையும் மீறி நமஸ்கரித்தாள்.

"என்ன கௌசல்யா? நான் ஒண்ணும் அவ்வளவு பெரியவன் இல்லை. தவிர, எனக்கு இந்த சென்டிமென்ட்லாம் பிடிக்காது."

"இது ஒண்ணும் சென்டிமென்டல் இல்லை. நான் மனப்பூர்வமான அக்கறையோடதான் உனக்கு நமஸ்காரம் பண்ணினேன்."

"எனக்கொண்ணும் சந்தேகமில்லை. இருந்தாலும்... எனிவே, பெஸ்ட் விஷஸ் ஃபர் திஸ் அன்ட் எவெர் ஸோ மெனி பர்த்டேஸ்!" என்று கேக்கில் ஒரு துண்டு எடுத்து ஊட்டிவிட்டான். "சொல்லியிருந்தா ஒரு கிஃப்ட் வாங்கி வந்திருப்பேன். பரவாயில்லை. என்னோட நினைவா இந்த வில்ஸன் கோரோநெட் பால்பென் உனக்குத் தரேன்."

"தாங்க் யு. ஐ வுட் லவ் தட் கிஃப்ட். நேத்திக்கே எனக்கு அந்தப் பேனா மேலே ஒரு கண்!"

"சரிதான். வசந்தி, நீ என்ன பரிசு கொடுத்தே?"

"ஆர்தர் ஹெய்லியோட ’ஏர்போர்ட்’."

"அது இன்னும் மெட்ராஸ்லயே விற்ப்னைக்கு வரல்ல போலிருக்கே? குமுதத்தில ரெவ்யு வந்தது."

"யார் சொன்னா? மெட்ராஸ் ஹிக்கின்பாதம்ஸ்ல கிடைக்குது. என் தோழி ஒருத்தி வாங்கி வந்தா."

அவன் மௌனத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்தாள். "நானே இன்னும் படிக்கலை ராஜா. என்கிட்ட இருந்தா என்ன கௌசிகிட்ட இருந்தா என்னன்னு ப்ரசென்ட் பண்ணிட்டேன்."

"கார்த்தால அம்மாவும் நானும் வசந்தியும் மலைக்கோவிலுக்குப் போயிட்டு வந்தோம். அடுத்த வாரம் என்னோட நட்சத்திரம் வரும்போது போய் அர்ச்சனை பண்ணுவோம். அப்ப நீயும் வா ராஜா, என்ன?"

காப்பி கோப்பைகளை உள்ளே வைத்துவிட்டு வந்து சொன்னாள். "ராஜா, அப்பா இப்பதான் குளியலை முடிச்சிண்டு பூஜை அறைக்குள்ளே போயிருக்கார். சந்தி ஜபம் பண்ணி வெளியில் வர அரை மணியாகும். அதுவரை வா, வீட்டைச் சுத்திப் பார்க்கலாம். வசந்தி, நீயும் வா."

"நான்தான் நேத்திக்கே பாத்தாச்சே!"

"பரவாயில்லை வாயேன்."

ந்த வீடு மிகச் சுத்தமாக, கவர்ச்சியாக, அவளைப் போலவே மாடர்னாக இருந்தது. சுவர்களில் தகுந்த மென்னிறங்களில் டெகோ-லம் மின்னியது. தரையில் வெள்ளை மொஸைக் எதிரொளிப்பில் உருவங்களும் நிழல்களும் கூடின. பிரிந்தன.

டிராயிங் ரூம் சுவர்களை ஒன்றிரண்டு ’பத்திக்’ ஓவியங்களும், ஓலை, கோரை கேன்வாஸ், மரம் முதலியவற்றில் தீட்டப்பட்ட ஓவியங்களும் அலங்கரித்தன.

"இந்த பெயின்டிங்லாம் என்ன விலை இருக்கும்னு நினைக்கறே, ராஜா?"

"எனக்கு ஓவியம் பத்தி அதிகம் தெரியாது கௌசல்யா. பாஸ்கர் கரெக்டா சொல்லுவான்."

"சும்மா தோராயமா சொல்லேன்!"

"ஒவ்வொரு படமும் முப்பது நாப்பது ரூவா இருக்கலாம்."

மியூசிகல் காலிங் பெல் போல ’க்ளிங்’ என்றாள்.

"சாரி, ரொம்பக் குறைவா சொல்லிட்டேனா?"

"எல்லாம் நான் பெயின்ட் பண்ணினது."

"நெஜமாவா!"

"ப்ராமிஸ்! வேணும்னா இப்பவே பெயின்ட் பண்ணிக் காட்டவா?"

"நேத்து என்னையும் இப்படித்தான் ஏமாத்திட்டா."

அந்த இயற்கைக் காட்சிகளும், விதம்விதமாகப் பெண்களின் ஓவியங்களும், தலைகால் புரியாத ஒன்றிரண்டு ’மாடர்ன் ஆர்ட்’களும் அசரவைத்தன.

"ஒரு எக்ஸிபிஷன் நடத்தலாம் போலிருக்கே கௌசல்யா?"

"இன்னும் சிலது மாடியில அப்பா ரூம்லலயும் என்னோட ரூம்லயும் இருக்கு."

ஒவ்வொரு அறையிலும் ஃபர்னிச்சர் அளவாகக் கலையழகுடன் போடப்பட்டிருந்தன. அங்கங்கே புதிய மலர்கள் பிளாஸ்டிக், சைனா, பித்ரி ’வாஸ்’களில் உற்சாகக் கொத்துகளாக மலர்ந்திருந்தன.

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Mar 13, 2013 6:44 am

டிராயிங் ரூமில் இருந்து ஹாலுக்கு வர இரண்டு வாசல்கள். ஹாலுக்கு வந்ததும், "இதுதான் எங்க லிவிங் ரூம்", என்றாள்.

அந்த ஹால் அவன் வகுப்பறைகளைவிடப் பெரிதாக, ஒரு பணக்காரக் கல்யாண மண்டபத்தில் ஹால் போல உயரமான கூரையுடன் சுற்றிலும் தெரியும் மாடி அறைகளுடன் அழகிய ஃப்ரென்ச் ஜன்னல்களுடன் காணப்பட்டது. வலப்புறம் சுவரில் ஒன்றிரண்டு புகைப்படங்களும், பெயின்ட்டிங்களும், ஓர் அழகிய வெளிநாட்டுக் கடிகாரமும் இருந்தன. டிராயிங் ரூம் கதவு நிலையருகில் கார்பெட் விரித்த மாடிப்படிகள் அடக்கமாகத் தெரிந்தன. மணி பத்தடிக்க, கடிகாரத்தின் குயில் பத்துமுறை இனிமையாகக் கூவியது.

இடப்புறச் சுவரை இரண்டு ஃப்ரென்ச் ஜன்னல்கள் மெல்லிய திரைகளுடன் அலங்கரித்தன. விலக்கப்பட்டிருந்த திரைகளின் வழியே காம்பௌன்ட் சுவரும் அதற்கு மேல் எட்டிப்பார்த்துத் தலையாட்டும் போகன்வில்லாவும் தெரிந்தன.

ஹால் நடுவில் உத்திரத்தில் இருந்து அழகிய, பெரிய, சரவிளக்கு ஒன்று தொங்கியது. அதன் கண்ணாடி மணிகள் காற்றில் சிலிர்த்தன.

சரவிளக்கின் இருபுறமும் நான்கு கூரை விசிறிகளும், ரிஃப்ளெக்டர் மூடிகளுக்குள் மறைந்திருக்கும் குழல் விளக்குகளும் அணிவகுத்து இருந்தன. தவிர அங்கங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்குகள் சுவரில் பொருத்தப்பட்டு இருந்தன.

கூரை விசிறிகளின் கீழ் எதிரும் புதிருமாக இரண்டு பெரிய, இரண்டு சின்ன சோபா செட்கள் போடப்பட்டு நடுவில் நீளமான, ஸன்மைகா வேய்ந்த டீப்பாய் அடியில் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் ஒழுங்காக அடுக்கியிருந்தன. சோபாக்களை இணைத்த வட்ட முக்காலிகளில் பூஜாடிகளும் ஆஷ்ட்ரேக்களும் ஒரு மேஜைக் காலண்டரும் இருந்தன.

இடப்புறச் சுவரில் ஜன்னல்களுக்கு நடுவில் இருந்த பகுதியில் ஒரு பெரிய ’ஷோகேஸ்’ தன்னுள் கொலுவீற்றிருந்த பொம்மைகளையும் கலைப் பொருட்களையும் புகைப்படங்களையும் கொண்டு அந்தக் குடும்பத்தின் நுண்கலைச் சுவைகளுக்குக் கட்டியம் கூறின.

ஹாலின் பின்புறம் சமையல் கட்டுக்குச் செல்லும் கதவு நிலையை அடுத்து நடுவில் ஒரு சிறிய டைனிங் டேபிளும் சுவர் ஓரத்தில் ஒரு ஜோடி சோபா செட்டும் விரைவு உணவுக்காகவும், விருந்தினர்களுக்கு வசதியாகவும் போடப்பட்டிருந்தன.

டிராயிங் ரூம் செல்லும் கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட சுவரில் தேக்குமர ஷெல்ஃகள் வரியிட்டிருக்க, நடுவில் ஒரு ஃபிலிப்ஸ் மேஜர் ரேடியோ வீற்றிருந்தது. மற்றொரு பகுதியில் ஒரு அகாய் ’ஸ்டீரியோ ரெகார்ட் ப்ளேயர்’உம் அருகில் ஒரு நேஷனல் பானசானிக் ’கேஸட் ரிகார்டர்’உம் அவற்றின் கீழிருந்த ஷோகேஸ்களில் ரெகார்ட்களையும் எண்ணற்ற கேஸட்களையும் கொண்டு சுவரில் பதிந்த ஸ்டீரியோ பெட்டிகளில் சங்கீத அலைகளை ஒரு விசையின் சொடுக்கில் வெளியிடத் தயாராக வைத்திருந்தன. ஓரத்தில் சிவப்பு டெலிஃபோன். அருகில் இன்டர்காம். சுவர்களில் அழகிய ’லாம்ப்ஷேட்’கள். ’கன்ஸீல்ட் வயரிங்.’

"என்னென்ன ரெகார்ட்ஸ், கேஸட்ஸ் இருக்கு, கௌசல்யா?"

"எல்லாம்."

"எல்லாம்னா?"

"அம்மாவுக்குக் கர்நாடக சங்கீதம். அப்பா எல்லாம் கேட்பார். எனக்கு ஹிந்தி, தமிழ், ஆங்கிலத் திரையிசைப் பாடல்கள். எல்லாம் ரெகார்ட்ஸ் வாங்க கட்டுப்படி யாகாதுங்கறதால பெரும்பாலும் கேஸட்கள்தான். அதுவும் ரேடியோவிலிருந்து நானே ரெகார்ட் பண்ணினது. அப்புறம் கொஞ்சம் பக்தி பாடல்கள், தமிழ் நகைச்சுவை உரையாடல்கள், இதுமாதிரி."

"நானும் கௌசியும் நேத்து ராத்திரி ரொம்பநேரம் தமிழ், ஹிந்தி பாட்டு கேட்டோம். நைஸ் ரெகார்டிங்."

"நான்கூட இன்னிக்குக் கேக்கணுமே?"

"கேட்டாப் போறது."

’லிவிங் ரூம்’ஐ அடுத்து சமையலறையும் ’டைனிங் ஹால்’உம் எதிர் எதிராக இருந்தன. சமையல் அறையில் பொருட்கள் மிக ஒழுங்காக, வசதியாக, நாகரிகமாக ஸன்மைகா வேய்ந்த ஷெல்ஃப்களில் அடுக்கப் பட்டிருந்தன. மிக்ஸி, கிரைன்டர், ஒரு மூலையில் சுவரோரம் இன்டர்காம். மேடையில் காஸ் அடுப்பு விர்ரிக்க, ஒருவர் மும்முரமாக சமையல் செய்துகொண்டிருந்தார்.

"We have a very good cook in மணி அய்யர். தஞ்சாவூக்காரர். அய்யர், சாப்பாடு ரெடியா?"

"அநேகமா முடிஞ்சமாரிதாம்மா."

சாப்பாட்டு அறையில் இரண்டு மேஜைகள் ஒன்றாக இணைந்து ’ஃபார்மிகா டாப்’ பளபளக்க, சுற்றிலும் எட்டு நாற்காலிகள். அறை ஓரத்தில் ஒரு வோல்டாஸ் ஓபல் ’ஃப்ரிஜ்’ அடக்கமாக நின்றிருந்தது.

கிச்சனை அடுத்து ஒரு சின்ன தாழ்வாரமும் அதன் நடுவில் துளசி மாடமும், அப்பால் ’பாத்ரூம்’களுக்கு வழியும் தோட்டமும், கடைசியில் பின்பக்க காம்பௌன்ட் சுவரும் தெரிந்தன.

மறுபடியும் ஹாலுக்கு வந்தார்கள்.

"அப்பா மாடில இருக்காரா?"

"ஆமாம். பூஜை அறை மாடில இருக்கு. பொதுவா எல்லார் வீட்லயும் பூஜை அறை கீழ்த் தளத்தில்தான் இருக்கும். கேட்டா, ’கடவுள் மேலதான் இருக்கணும்’பார்."

"அதுவும் சரிதான்."

டிராயிங் அறைக்கு நேர்மேலே இருந்த பூஜை அறையிலிருந்து ஊதுவத்திப் புகையின் மணம் வந்தது. தொடர்ந்து மெலிதாக மணிச்சத்தம் கேட்டது.

மாடியில் இருந்து பார்க்கும்போது ஹால் ஒரு சினிமா செட் போலப் பளபளத்தது.

பூஜை அறையினை ஒட்டி ஒரு ’ஃபேமலி ரூம்’உம், அவற்றின் முன் ஓடிய செவ்வக வடிவ நடைவழியில் இடப்புறம் நான்கு அறைகளும் வலப்புறம் மூன்று அறைகளும் கதவுகளாகத் தெரிந்தன.

"இடது பக்கம் முதல் அறை என்னோடது. அடுத்தது அம்மாவோடது. அப்புறம் அப்பா. அந்தக் கடைசி அறையும் அதுக்கு எதிர்த்தாப்பல இருக்கும் அறையும் விருந்தினர் வந்தால் தங்க. இந்தப் பக்கம் முதல் அறை அப்பாம்மா பெட்ரூம். நடுவில் ஸ்டடி."

அவள் தன் அறையின் கைப்பிடியைத் திருக உள்ளே நுழைந்தார்கள்.

நுழைந்ததும் அந்த ’ஸ்ப்ரே’யின் மணம் வந்தது. கௌசல்யாவின் அறை அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சுத்தமாக, ஒழுங்காக இருந்தது.

வலப்புறம் படிக்க ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள். மேஜையின் இன்டர்காம். சுவரில் பதிந்த ஷெல்ஃப்களில் புத்தகங்கள். ’ஷேக்ஸ்பியரின் கம்ப்ளீட் வொர்க்ஸ், ஜேன் ஆஸ்டின் நாவல்கள், யேட்ஸ் கவிதைகள்...’ அடுத்த ஷெல்ஃபில் பழுப்பு நிறக் காகிதத்தில் சீராக உறை போடப்பட்ட நோட்டுப் புத்தகங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

கௌசல்யாவின் கையெழுத்து நளினமாக, நேர்த்தியாக, அடித்தலே இல்லாமல் அச்சுக்கோர்த்தாற்போல் இருந்தது.

அறையின் இடப்புறம் ஒரு இரும்பு சாய்வு நாற்காலி அருகில் சுவரின் கீழ்ப்பகுதியில் புத்தகங்கள் கண்ணாடி கேஸில்.

அறையின் நடுவில் ஒரு திரை. அதற்கப்பால் ஸ்டீல் கட்டில் ஃபோம் மெத்தை. அருகில் ஒரு அலங்கரிப்பு மேஜை, துணிமணி அலமாரிகள்.

"எதுக்கு நடுவில ஸ்க்ரீன்?"

"ஒரு ப்ரைவஸிக்காகத்தான். தவிர, எனக்குப் படிக்கும்போது படுக்கை கண்ல பட்டா கொஞ்ச நேரம் படுத்துண்டே படிக்கலாமேன்னு தோணும். அப்படியே தூக்கம் வந்திடும். இதைத் தவிர்க்கவே திரை. எப்படி இருக்கு என் ரூம்?"

"எக்ஸலன்ட். இதெல்லாமும் நீ பெயின்ட் பண்ணினதா?"

சுவரில் மாட்டியிருந்த சித்திரங்கள் கீழே பார்த்தவற்றை விட அழகாகவும் உயர்தரத்திலும் இருந்தன.

வெண்ணிலா காய்ந்திருக்க நிலவொளியில் பளபளக்கும் ஒரு ’ப்ரைவேட் ரன்வே’. அதில் ’டேக் ஆஃப்’ பண்ணத் தயாராக இருக்கும் ஒரு விமானம்.

அம்மா பார்த்திருக்கக் குனிந்து தன் ஷூலேஸைத் தானே கட்டிக்கொள்ளும் வெள்ளக்காரக் குழந்தை.

ஆடுகள் அங்கும் இங்கும் ஓடக் கையில் துறட்டியுடன் அவற்றை ஒன்றுசேர்க்க முற்படும் கோவணாண்டிச் சிறுவன். அந்த லான்ட்ஸ்கேப் இயற்கையாக இருந்தது.

"என்ன ரேஞ்ச் ஆஃப் சப்ஜக்ட்ஸ், ஸிம்ப்ளி பியூட்டிஃபுல், இல்ல?" என்றாள் வசந்தி.

"யு ஆர் கிரேட், கௌசல்யா?"

"நோ ஸச் திங். சில பேருக்குப் பாட வரும். சில பேருக்குக் கவிதை எழுத வரும். எனக்கு பெயின்ட் பண்ண வரும், அவ்வளவுதான்."

ஸ்டடியில் நுழைந்ததும் அந்த நான்கு சுவர்களில் பதிந்த உயரமான புத்தக அலமாரிகளும், நடுவில் நீளமான மேஜையும், டைப்ரைட்டரும், ’கார்ட்-இன்டெக்ஸ்’ இழுப்பறைகளும் ஒரு மினி லைப்ரரியை அந்து உருவாக்கியிருந்தன.

புத்தகங்கள் அவன் கல்லூரி நூலகத்தில் உள்ளதுபோல் ’ட்யூவி டெஸிமல்’ எண்ணமைப்பில் எண்ணிடப்பட்டு உரிப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், தமிழ் இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், பொழுதுபோக்கு, குழந்தைகள் பகுதி, இதர உரிப்பொருள்கள்.

ஆங்கில நாவல் வரிசையில் முதலில் ஜேன் ஆஸ்டின்.

"தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பியா?"

"நிறைய. கல்கிமுதல் சுஜாதாவரை முக்கியமான நாவல்கள், கதைகள் படிச்சிருக்கேன்."

பார்த்தான். ஐநூறு புத்தகங்களுக்குக் குறையாது! அவளை அதிசயமாகப் பார்த்தபோது, "என்னோட வாழ்க்கையை ஓவியம், இலக்கியத்துக்கு அர்ப்பணிக்கப் போறேன்", என்றாள்.

"எ லாஃடி ஆம்பிஷன், கௌசி."

"யு ஆர் கொய்ட் அன் இன்ஸ்பிரேஷன், கௌசல்யா."

"ரெண்டு பேரும் என்னை ஓவராப் புகழறீங்க. நான் எதுவுமே இன்னும் ஸீரியஸா ஆரம்பிக்கலையே? ரைட் தென், மணி பத்தரையாச்சு. வாங்க போகலாம். அப்பா கீழே காத்திருப்பார்."

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Mar 14, 2013 6:32 am

பயணம்: நாவல்
ரமணி

18

மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
---மஹாகவி பாரதியார், மஹாசக்திக்கு விண்ணப்பம் 1


"லோ ராஜா! எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப வருஷமாச்சு!"

கீழே இறங்கியதும் மாமா அவனை அன்புடன் கட்டிக்கொண்டார்.

"நல்லா இருக்கேன் மாமா! நீங்க எல்லாரும் சௌக்யம்தானே?"

அந்த உறவின் மனித உருவை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். மாமா நல்ல நிறமாக, பணக்கார தோரணையுடன், சுருள் முடிகளுடன், ’பியர்’ஆல் செழித்த கன்னக் கதுப்புகளுடன், இலேசாகச் சிவந்த கண்களுடன், அவனைவிடக் குள்ளமாக நின்றார். அவர் அவனைக் கட்டிக்கொண்டபோது மெல்லிய சிகரெட் நெடி அடித்தது.

அவரைப் பார்த்தபோது அப்போதுதான் பூஜையை முடித்துவிட்டு வந்தவராகத் தெரியவில்லை. நெற்றியில் விபூதியின் வரிகளை அறவே காணோம். பேன்ட், ஷர்ட் அணிந்துகொண்டு வெளியில் கிளம்பத் தயாராகிவிட்டவர்போல் காணப்பட்டார்.

கேட்க வாயெடுத்தபோது, "நான் பூஜை பண்ணினதையே சந்தேகிக்கத் தோண்றது, இல்லே? Work while you work, pray while you pray, and eat while you eat! I have dressed up for dinner!" என்றார்.

"அப்பா காரியங்களை எல்லாம் இங்க்லிஷ் பாணிலதான் செய்வார். முடிஞ்சவரை நாங்களும் அவரை ஃபாலோ பண்றோம். இப்ப டின்னர் முடிஞ்சதும் பாரேன், பழையபடி ரிலாக்ஸ்டா வேஷ்டிக்கு மாறிடுவார்."

அவனுக்கு மாமாவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.

"மாமியும் உங்களை மாதிரி வேளைக்கு ஒரு டிரெஸ் பண்ணுவாங்களா?"

"அவள் கிடக்கறா, நாட்டுப்புறம்", என்றார் ஈஸியாக. அந்த சமயம் பார்த்து மாமி வந்துவிட, "லக்ஷ்மீ, யார் வந்திருக்கா பாரேன்!"

"அட, ராஜாவா! வாப்பா, சௌக்யமா? இப்பவான்னும் மாமாவாத்துக்கு வழி தெரிஞ்சுதா? கௌசல்யா சொன்னா நீ இந்த ஊர்லதான் படிக்கறதா. உக்காந்துக்கோ வசந்தி, ஏன் நிக்கறே? அம்மா அப்பா சௌக்யமா?"

"எல்லோரும் நல்லார்க்கா, மாமி. உங்களைப் பத்தி அடிக்கடி நினைச்சுப்பா. எனக்கு நீங்க இந்த ஊருக்கு வந்துட்டது பத்தித் தெரியாது. நேத்துதான் காலேஜ்ல கௌசல்யாவைப் பார்த்தபோது சொன்னா."

"எங்களுக்கும் போன வாரம்தான் நீயும் வசந்தியும் இந்த ஊர்ல படிக்கறது பத்தித் தெரியும். வந்து பார்க்கலாம்னா மாமா ஒரு வாரமா ஊர்ல இல்லை. ஈரோடு டூர் போயிட்டார்."

"சொன்னா, கௌசல்யா சொன்னா."

மாமி கொஞ்சம் பருமனாக, ஆறு கெஜம் பட்டுப் புடவையில், மூக்கிலும் காதுகளிலும் வைரம் மின்ன, ஒரு கையில் தங்க வளையல்கள் ஒலிக்க---மற்றதில் லேடீஸ் வாட்ச்---விரல்களில் தங்க மோதிரங்கள் பளிச்சிட, கொஞ்சம் வயதுதெரியும் முகத்தில் பவுடர் திரையிட்டிருக்க, இதழ்களில் வெற்றிலைச் சிவப்பு மீதமிருக்க, பழமையும் புதுமையும் கலந்து நின்றாள்.

"எல்லாரும் இப்படி சோபாவில் உக்காந்து பேசிண்டிருங்கோ. இதோ வந்துடறேன்", என்று மெட்டி ஒலிக்க உள்ளே சென்றாள்.

மாமாவின் கம்பெனியைப் பற்றிக் கேட்டான்.

"இந்தியால இருக்கற நாலஞ்ச் லீடிங் ஃபார்மஸ்யூடிகல் கம்பெனில எங்க கம்பெனியும் ஒண்ணு. ஃபாரின் கொலாபரேஷன். பாம்பேல ஹெட் ஆஃபிஸ். Our products cover a wide range of health applications. சாதாரண ஜலதோஷத்லேர்ந்து டி.பி., அல்சர் மாதிரி சிக்கலான வியாதி வரைக்கும் மருந்துகள் தயாரிச்சிருக்கோம்னா பார்த்துக்கோயேன்."

"நீங்க எத்தனை வருஷமா இருக்கேள் இந்தக் கம்பெனில?"

ஒரு புன்னகையுடன் கௌசல்யாவைப் பார்த்தார்.

"அப்பா இந்தக் கம்பெனிக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேலாய்ட்டது."

இதற்குள் மாமியும் வந்துவிட, அவன் கேள்வியில் துணுக்குற்றாள்.

"என்ன அப்படிக் கேட்டுட்டே? எங்களுக்குக் கல்யாணம் ஆன நாள்லேர்ந்து மாமா மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் வேலைலதான் இருக்கார்."

"அதுக்கில்லை மாமி, அந்தக் காலத்தில மாமா ’இந்த வேலை பிடிக்கலை அந்த வேலை பிடிக்கலை’ன்னு ஒவ்வொரு வேலையா மாத்திண்டே இருப்பார்னு அப்பா சொல்லுவா. அதான் கேட்டேன்."

"உங்கப்பாவுக்கு என்னைப் பத்தி ஏதாவது சொல்லலைன்னா தூக்கம் வராது. அந்த நாள்ல எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். கொஞ்சநாள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. உங்கம்மா கூட எங்களை சரியா ட்ரீட் பண்ணலை..."

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் மாமா தொடர்ந்தார். "என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பழசெல்லாம் மறந்துட்டேன். அவா இன்னும் மனசில வெச்சுண்டிருக்காளோ என்னவோ?"

வசந்தி முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருக்க,. கௌசல்யா தன் தந்தையை அன்புடன் கடிந்துகொண்டாள்.

"ராஜாவையும் வசந்தியையும் டின்னர்க்கு இன்வைட் பண்ணிட்டு ஏன்பா ஆறிப்போன பழங்கதையெல்லாம் கிளறிண்டு? நாமதான்---"

"அதுக்கில்லைம்மா, அவனுக்கும் நம்ம தரப்பு விஷயம் தெரியணுமோன்னோ? எல்லாரும் என்னைத் தப்பாப் புரிஞ்சுண்ட மாதிரி அவனும் நினைச்சிடப்படாது இல்லையா?"

"எல்லாம் அவனுக்கும் தெரிஞ்சிருக்கும் பா. நீங்க இப்ப விடுங்கோ இந்த விஷயத்த?"

அன்றைய தேதிவரை அவனுக்கு அந்தக் காலத்தில் அப்பாவுக்கும் மாமாவுக்கும் இடையில் இருந்த மனஸ்தாபம் பற்றிய விவரங்கள் தெரியாது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். எந்த விஷயத்தையும் சுலபமாக வெளியில் சொல்லமாட்டார். அம்மாவுக்கும் மாமாவின் மீது கோபம் அல்லது வருத்தம் அதிகமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தூண்டித் துளைத்து கேட்டபோதுகூட ஏதோ சொத்து சம்பந்தமான விஷயம் என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அம்மாவிடைருந்து அறிய முடியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அப்பா அம்மாவுக்கு மாமாவையும் அவர் குடும்பத்தையும் பிடிக்கவில்லை. சொந்தத் தம்பி என்றுகூடப் பார்க்காமல் பகைமை பாராட்டும் அளவுக்கு அப்படி என்ன விஷயம் என்பது புதிராக இருந்தது.

ரியாகப் பதினொரு மணிக்கு சமையற்காரர் டின்னர் அறிவிக்க அவர்கள் கலைந்து மீன்டும் டைனிங் ஹாலில் சந்தித்தார்கள். எல்லோரும் மடியில் நாப்கின் விரித்துக்கொண்டு ஆவி பறக்கும் தக்காளி சூப் கவர்ந்திழுக்க, கண்ணுக்குத் தெரியாத ராட்டினத்தின் இடைவிடாத சுழற்சியில் ஸ்பூன் கொண்டு சூப் இறைக்கத் தலைப்பட, மாமா மட்டும் அனைவரையும் மாறிமாறிப் பார்த்தபடி தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அளந்த பிரதாபங்கள் அலைஅலையாய் நினைவில் தோன்றி மறைந்தன.

மாமாவின் ’ஸேல்ஸ்மன்ஷிப்’ அவரது வார்த்தைகளில் தெரிந்தது. அந்த வார்த்தைகள் எழுதிய ஓவியத்தில் அவரும் அவர் குடும்பத்தாரும் தன்னிகரற்றுத் தோன்றினார்கள்.

எல்லா ’மெடிகல் ரெப்’களும் ’பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்’ என்று அடிக்கடி வேலையை நீத்து இரண்டொரு வருடத்தில் வேறு கம்பெனிகளை நாடித் தஞ்சம் புக, மாமா மட்டும் பல வருஷங்கள் ஒரே கம்பெனியில் தொடர்ந்து, சம்பளத்தில் ஏணிப்படிகளில் ஏறி, கம்பெனி தந்த ’ஸேல்ஸ்மன் கமிஷன்’களில் இரண்டு மூன்று படிகளை ஒரே சமயத்தில் தாண்டி, மற்ற பிற ’இன்ஸென்டிவ்’களில் ’போல்வால்ட்’ தாவி இன்று ஒரு ’சீனியர் ரெப்’ஆக நின்றார்.

மறுபடியும் மாமா பல வருடங்கள் திட்டமிட்டு தன் வருமானத்தில் சேமிப்பு, மூதாதையர் மற்றும் மாமியின் சொத்து இவற்றின் சங்கமத்தில் தன் கனவுகள் எல்லாம் நனவாக அழகிய, பெரியதொரு பங்களாவைக் கட்டி அதை ’டெகோ-ல’த்தாலும் ’மொஸைக்’காலும் இழைத்து, அழகிய ’மாடர்ன் ஃபர்னிச்சர்’ மற்றும் மின் சாதனங்களால் அலங்கரித்து, ஊரிலேயே பெரிய ’ஹோம் லைப்ரரி’யில் கலைமகளைக் குடியேற்றி, நண்பர்கள் வியந்து பாராட்டப் பெருமிதத்துடன் ’வீட்டைக் கட்டிப் பார்த்துவிட்டேன் அடுத்தது கல்யாணத்தையும் பண்ணிப் பார்த்துவிடுகிறேன் (கௌசல்யாவுக்கு)’ என்று நின்றார்.

அடுத்தபடியாக அவர் குனிந்த தலை நிமிராமல் நாட்டுப்புறத்தின் மொத்த உருவமாக இருந்த மாமியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, நாகரிகப்படுத்தி, அவள் விரும்பிய கலைகளில் ஊக்குவித்து, மங்கிப்போயிருந்த அவள் சங்கீத ரசனைகளைப் புதுப்பித்து மெருகேற்றி, கேட்கவும் பாடவும் வசதிகள் செய்துகொடுத்து, அவள் அடுப்படி வேலைகளைச் சுளுவாக்கி மறக்கச்செய்து, மாதர் சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தி, மொத்தத்தில் பெர்னார்ட் ஷாவின் பூக்காரி* Eliza Doolittle போன்று இருந்த தன் மனைவியின் பரிணாம வளர்ச்சியில் கடைசிவரை பங்குகொண்டு ப்ரொஃபஸர் ஹிக்கின்ஸாக நின்றார், ஒரு வித்தியாசத்துடன். அந்தப் ப்ரொஃபஸர்போல் இவர் மனமுடைந்து Let a woman in your life... என்று பாடவில்லை.

[Eliza Doolittle ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Pygmalion நாடகத்தில் வரும் ஒரு பூக்காரி. இந்த நாடகம் My Fair Lady என்ற திரைப்படமாக்கப் பட்டது. பூக்காரியை நாகரிகப்படுத்தி அவளை மணந்துகொள்ளும் பேராசிரியர் ஹிக்கின்ஸ் பின்னர் அவர்களுக்குள் வந்த சச்சரவால் அவள் அவரைக் கைவிட்டுச் செல்லும்போது திரைப்படத்தில் ஹிக்கின்ஸ் பாடும் பாடலில் வரும் வரி Let a woman in your life...
My Fair Lady (1964) - IMDb
* I'm an Ordinary Man Lyrics | from "My Fair Lady" --ரமணி]

கடைசியாக அவர் கௌசல்யா எனும் ஒரே மகவைப் பெற்றெடுத்து அவளை ஓர் இளவரசிபோல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துப் படிக்கவைத்து, நாகரிகத்தின் சோப்புக்குமிழ் நிறங்களில் மயங்கவைத்து, அவளை ஒரு ’ஸ்பாயில்ட் கிட்’ ஆக்க முயற்சிசெய்து---ஆனால் அவள்தான் அதற்குக் கொஞ்சமும் மசிவதாகத் தெரியவில்லை---செல்வத்தின் ’எஸ்கலேட்டர்’இல் ஏற்றிவைத்து, கல்யாண ’ஷாப்பிங் சென்டர்’இல் அவளை ஒரு கனவுக்கன்னியாக உலவவிட்டுப் புண்ணியம் தேடிக்கொண்டவராக நின்றார்.

மாமாவின் தம்பட்டம் செவிகளை நிறைக்க அவனுக்கு அந்த டின்னரின் சுவையும், மணி அய்யரின் அன்பான உபசரிப்பும், கௌசல்யாவின் கனிவான கவனிப்பும் எடுபடாமல் போக, அவனும் வசந்தியும் ஒப்புக்காகச் சொல்லவேண்டிய தாயிற்று:

"Thanks for a sumptuous, delicious dinner கௌசல்யா!

கொஞ்ச நேரம் மனதுக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்களைக் கேட்டுவிட்டு, திடீரென்று முடிவுசெய்து அவர்கள் மூவரும் அருணா டாக்கீஸில் அப்போது ஓடிக்கொண்டிருந்த ’உபஹார்’ ஹிந்தித் திரைப்படம் பார்க்கச் சென்றபோது வழியில் கௌசல்யா கேட்டாள்.

"அப்பா உங்க ரெண்டு பேரையும் ரொம்ப போர் அடிச்சுட்டார் இல்லே? அவர் எப்போதுமே அப்படித்தான். Ego-centric you can say. ஆனால் அவருக்கு அம்மா மேலையும் என்மேலையும் அளவுகடந்த பாசம், ராஜா. எனக்காக எது வேன்ணும்னாலும் செய்வார்."

"புரியறது கௌசல்யா. இதெல்லாம் நான் ஒரு குறையா நினைக்கல. உங்க அந்தஸ்தைப் பார்க்கும்போது மாமா நிச்சயம் பெரிய ஆள்தான்."

"என்னது திடீர்னு மாமாவுக்கு ஐஸ் வெக்கறே? ஓகோ, புரியறது, புரியறது..."

"டோன்ட் பி ஸில்லி, கௌசல்யா. நான் ஒண்ணும்---"

"சும்மா விளையாட்டுக்குச் சொன்னாக்கூட கோவிச்சுக்கற பத்தியா? வசந்தி, ராஜா பெரிய கோவக்காரனா இருப்பான் போலிருக்கே?", என்று அவன் தோள்கள் மீது கைகளைப் பின்னிக்கொண்டாள்.

அவனுக்கு அனுவின் ஞாபகம் வந்தது.

பஹார்’ ஜெயாபாதுரியின் நடிப்பில் அவர்கள் உருகிப் போனாற்கள். எந்த நடிகையும் தன் முதல் படத்தில் இவ்வளவு அழகாக, மாறுதலாக, அதிசயிக்கத் தக்கபடி நடித்திருக்க முடியாது என்று தோன்றியது. ’சமாப்தி’யில் தாகூர் சித்தரித்திருந்த மீனுவை அப்படியே தனது பாத்திரத்துடன் ஒன்றிவிட்ட நடிப்பினால் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள்.

பருவமடைந்து ஒன்றுமே தெரியாமல் கள்ளங்கபடமற்ற குழந்தை போல, சிறுவர் சிறுமியருடன் சேர்ந்துகொண்டு, மாந்தோப்பில் அலைந்து மாங்காய் அடித்து மடிநிறைய சுமந்துகொண்டு, எதெற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டு, பெற்றோர்கள் பின் ஓடி ஒளிந்துகோண்டு, கைகளை நீட்டி அபிநயித்துக்கொண்டு, தன்னுடைய திருமணத்தின்போது கூட மனத்தளவில் குழந்தையாக, அது தனக்கொன்றும் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சியாக நினைத்துக்கொண்டு, பின்னர் மண வாழ்க்கயின் புதுமையும், பிரிவும், அந்நியத்தன்மையும் தாங்க முடியாத சுமைகளாகிவிட, அவளது மென்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்டு மெல்ல அவள் மனதைப் பக்குவப்படுத்த முயலும் கணவனாக, கனவானாக ஸ்வரூப் தத் வந்து, வண்ண வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் பாடும் அந்தப் பாட்டின் இனிமையில் அவர்கள் வாயடத்துப் போனார்கள்.

மைன் எக் ராஜா ஹூம்
தூ எக் ராணி ஹோ ஓ ஓ ஓ!
மைன் எக் ராஜா ஹூம்
ப்ரேம் நகர்கி யே எக் சுந்தர்
ப்ரேம் கஹானி ஹோ!
[http://lyricsandme.com/lyrics_song_M...Raja_Hoon.htm]

பாட்டின் முதல்வரி காதில் விழுந்ததும் கௌசல்யா வசந்திக்குத் தெரியாமல் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த அவனை விலாவில் இடித்தாள். திரும்பிப் பார்த்தபோது அவள் கண்கள் அவன் கண்களை சந்திக்கமுடியாமல் தாழ, குறும்பும் நாணமும் போட்டிபோடும் அந்த முகத்தின் அந்திவானச் சிவப்பில் இளம்பிறைக் கீற்றாக மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது அந்த இருளிலும் தெளிவாகத் தெரிந்தது.

தீடீரென்று மனம் பிரகாசமாக, கண்கள் திரையிலிருந்து விலகி அவள் மீது நிலைக்க, தியேட்டர் ஹாலில் நிலவிய மௌனத்தில் துல்யமாக ஒலிக்கும் மொஹம்மத் ரஃபியின் குரலும் லக்ஷ்மி-பியாரியின் இசையும் தேய்ந்து மறைய,

மனத்தின் ஆழத்தில் இருந்து
அலையடிக்கும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு

டால்ஃபின்களாக எழுந்த
எண்ணங்களின் லயிப்பில்,
உணர்வுகளின் நன்றியில்,
கண்டுபிடிப்புகளின் சிலிர்ப்பில்,

வானத்தில் தெளித்த நீர்த்துளிப் படலங்களின்
வானவில் நிறங்கள் தோற்றுவித்த வியப்பில்
அவன் கௌசல்யாவைக் காதலிப்பதை உணர்ந்தான்.


நன்றியுடன் விரல்கள் அவர்களுக்கு நடுவில் இருந்த கைப்பிடியில் படர்ந்து அவள் விரல்களுடன் இணந்தபோது மனதில் ஒரு வைராக்கியமும் உறுதியும் பிறந்தன.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 15, 2013 7:02 am

பயணம்: நாவல்
ரமணி

19

சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
சஞ்சல மாகு தடீ;
---மஹாகவி பாரதியார், கண்ணம்மா என் குழந்தை 6


தன்பின் ஒவ்வொரு வாரமும் கௌசல்யாவைப் பார்க்கத் தோன்றியது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைத்தது.

வசந்தியைப் பார்க்கப் போனபோது கண்கள் கௌசல்யாவைத் தேடின. அவள் வந்தபோது கண்கள் குன்றிலிட்ட விளக்காயின. வராத நாட்களில் குடத்திலிட்ட விளக்காயின.

தவறாது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் வீட்டுக்கு அழைத்தபோது மறுக்கத் தோன்றவில்லை. வாரம் தவறாமல் மாமா வீட்டில் சாப்பிட்டால் ஏதாவது நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற எண்ணம் உதித்தபோது ஞாயிறு மாலை நேரங்களில் அவளை வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ள வைத்தது.

நேரம் போவதே தெரியாமல் கௌசல்யாவுடன் பேசிக்கொண்டிருக்கத் தோன்றியது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவள் கருத்துகளை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது. எல்லா விஷயங்களையும் கொஞ்சமாவது அவள் அறிந்து வைத்திருந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சமயத்தில் மலைக்க வைத்தது.

மாமாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய சாமர்த்தியமான பேச்சை கவனமாகக் கேட்கத் தோன்றியது. கௌசல்யா அவனுடன் நெருங்கிப் பழகுவதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

வெளியில் அவர் ஒன்றும் சொல்லாவிட்டாலும் மனதில் ஏதேனும் வைத்துக்கொள்வாரோ என்று சந்தேகமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் அவன் பெற்றோரைப் பற்றிய விசாரிப்பைக் குறைத்துக்கொண்டு விட்டதை உணர்ந்தபோது கோபம் கலந்த கவலை தலைதூக்கியது.

ஒருமுறை அவன் தன் ஊருக்குப் போய்விட்டு வந்து மாமா வீட்டுக்குப் போனபோது அவர்கள் ஒன்றுமே கேட்காமல் இருந்தது வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்படிக்கூட நெருங்கிய உறவினர்களால் இருக்கமுடியுமா என்று புதிராக இருந்தது.

பாஸ்கரைக் கௌசல்யாவுக்கு அறிமுகப் படுத்திவைக்கத் தயக்கமாக இருந்தது!

அவள் ஒவ்வொரு வாரமும் அவனைப் பற்றிக் கேட்கும்போது ஏதாவது காரணம் கூறி அந்த அறிமுகத்தை முடிந்தவரை ஒத்திப் போடத் தோன்றியது.

அவள் பாஸ்கரைப் பற்றி வினவியபோதெல்லாம் உள்ளுக்குள் முகம் மாறி ’இவளுக்கு என்ன முன்பின் தெரியாதவனைப் பற்றி அக்கறை?’ என்ற எண்ணம் எழுந்து சாமர்த்தியமாக மனதை மறைத்து முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.

கொஞ்சநாளில் அவன் தன் பகுத்தறிவின் இயக்கத்தில் உண்மைகளையும் எல்லைகளையும் சரிவரப் புரிந்துகொண்டு தன் எண்ணங்களை சமன்செய்து சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து பாஸ்கரை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது கொஞ்சம் தர்மசங்கடமாகி விட்டது!

"ராஜா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கான். ரொம்ப நாளா உங்களை மீட் பண்ணனும்னு நினைச்சேன். இப்பதான் சந்தர்ப்பம் வாய்த்தது."

"இஸ் தாட் ஸோ? ஐ’ம் வெரி க்ளாட். ராஜா இதுவரை என்னிடம் உங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. அவனுக்கு ஒரு மாமா இருக்கார், அதுவும் உள்ளூரிலேயே இருக்கார், அவருக்கு இப்படி ஒரு அழகான பொண்ணு இருக்காங்கன்னே எனக்குத் தெரியாது!"

முதல் சந்திப்பிலேயே கௌசல்யாவுக்கும் வசந்திக்கும் பாஸ்கரை மிகவும் பிடித்துப்போனது கண்கூடாகத் தெரிந்தது. பொதுவாக எல்லோரிடமும் கொஞ்சம் ஒதுக்கமாக இருக்கும் வசந்திகூட பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் சாதுர்யமான பேச்சாலும் கவரப்பட்டு அவனிடம் தாராளமாகப் பேசினாள். கௌசல்யாவோ அந்த முதல் சந்திப்பிலேயே பாஸ்கருடன் நீண்டநாள் பழகியவள்போல் சிரித்தும், ’கமென்ட்’ அடித்துக்கொண்டும், கண்களும் கைகளும் அபிநயிக்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

விடைபெற்று அவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும் பாஸ்கர் அவன் கைகளைக் குலுக்கினான்.

"கங்க்ராட்ஸ் அன்ட் பெஸ்ட் விஷஸ், ராஜா! உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டக்காரன். கௌசல்யா வில் பி அன் ஐடியல் மாட்ச் ஃபர் யு."

மறுநாள் கௌசல்யாவைத் தனியே சந்திக்க முடிந்தபோது கோபித்துக் கொண்டாள்.

"லுக் ராஜா, பாஸ்கரை எனக்கு இவ்வளவு தாமதமா அறிமுகம் செய்துவைத்ததில உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன். அதே சமயத்தில யு ஹாவ் அன்டர்-எஸ்டிமேட்டட் மி. எனக்கு சோஷலாகப் பழகப் பிடிக்கும், யு நோ தட். And BhASkar is a good friend of all of us. Let's not have any confusion there."

தைகளில் போல் அல்லாமல் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் அவர்கள் காதல் மலர்ந்து, வளர்ந்த விதத்தை இப்போது டைரியில் படிக்கும்போது விரல்கள் அவள் சம்பந்தப்பட்ட பக்கங்களைப் புரட்டிக் காட்ட மனம் அதை விரித்து ஒத்திகை பார்த்து மகிழ்ந்தது.

ஒருநாள் இருவரும் மத்தியான நிசப்தத்தில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய ’மூவ்’ ஒன்றைச் சற்று அவசரமாகச் செய்துவிட்டு அவள் பதிலுக்கு யோசித்தபோது கண்கள் அவளையே பார்த்திருக்க மனம் வியந்தது.

இவ்வளவு தூரம் நான் இவளிடம் மனசைப் பறிகொடுத்ததற்கு என்ன காரணம்? இவளுடைய அழகா? நீண்ட சந்தன விரல்கள் வழவழப்பான கன்னத்தில் அழகாகப் பதிந்திருக்க, இமைகள் சிறகடிக்க ஒரே செடியிலேயே மலர் விட்டு மலர் தாவும் பட்டாம்பூச்சி போன்ற விழிகள் செஸ் போர்டின் நிலவரத்தை முன்பின்னாகவும் பக்கவாட்டிலும் நகர்ந்து கணிக்க... எவ்வளவு அழகாக இருக்கிறாள்! நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

அல்லது இவள் அறிவா? ஆங்கில, தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம்! அவள் நூலகத்தில் எத்தனை புத்தகங்கள்! இதுபோக எத்தனை நுண்கலைகள் தெரிந்தவள்! இதுமாதிர் எல்லாத் துறைகளிலும் விஷய ஞானம் உள்ளவளாக இருக்கும் இவளுக்கு என்னவிட---இதை நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது---பாஸ்கர் இன்னும் பொருத்தமோ? ஒருவேளை என்னுடைய இந்த முயற்சியில் நான் தோற்றுப் போனால் பாஸ்கர்தான் எனக்கு வாரிசு.

அல்லது கலகலவென்று பழகும் இவள் சுபாவமா? அல்லது இவளுடன் பழகி இவளைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள உதவிய சந்தர்ப்பங்களா? எப்படி இருந்தாலும் இவள் இல்லாமல் நான் இருப்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அனுவிடமிருந்து என் கடிதத்துக்கு பதில் வந்தவுடன் நான் ஒரு முடிவுக்கு வர இயலும்.

"Hey, you are losing your queen!" என்றாள் கௌசல்யா, அவன் முகத்துக்கு முன்னால் கையை மேலும் கீழும் அசைத்து. "Or else, if it is a queen sacrifice, it's the silliest I have seen!"

அந்த ’க்வீன்’ பதத்தில் திடுக்கிட்டான். கண்கள் செஸ் போர்டில் இறங்கத் தலையை இடம்வலமாக அசைத்தான். ஒரு பள்ளிச் சிறுவன் நினைத்துப் பார்த்திருக்க முடியாத ’மூவ்’. அடுத்த இரண்டு ’மூவ்’களின் கட்டாயத்தில் அவள் குதிரையால் ’செக்’ சொல்லி ராணியைக் காவு வாங்கிவிட முடியும்.

"பரவாயில்லை, வேற மூவ் பண்ணு."

"சாரி, கௌசி. ஏதோ ஞாபகம்."

"தெரியும்."

என்ன என்பதுபோல் பார்த்தபோது ஓர் அழகிய புன்னகையை மிதக்கவிட்டாள்.

The smile that launched a thousand ships! என்றது டைரி.

"நீ என்னைப் பத்தித்தான் நினைச்சிண்டிருந்தாய் இல்லையா?"

(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 16, 2013 6:52 am

ற்றொரு நாள். அவனும் பாஸ்கரும் கௌசல்யா வசந்தியுடன் சுற்றுலா போனபோது நடந்தது. மரங்கள் அடர்ந்த வனாந்தரப் பகுதியில் சற்று மேடான இடத்தில் புல்தரையில் அவர்கள் உட்கார்ந்துகொண்டு பாஸ்கரின் கிடாரில் மெய்மறந்தபின் கேக், சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு நெஸ் காஃபியைச் சுவைத்தபடியியே எதிரில் இருந்த சுனையில் மிதக்கும் அசைவற்ற வாத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தே சூரியன் மறந்துகொண்டிருக்க, மேகங்கள் அற்ற நீல வானப் பெருந்திரையின் பின்னணியில் மரக்கூட்டங்கள் பசுமை நிழல்களாகத் தெரிந்தன.

தீடீரென்று பாஸ்கர் முழங்கையைத் தலையில் முட்டுக்கொடுத்து புல்தரையில் படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டு சின்னச் சின்ன பருக்கைக் கற்களைச் சுனையில் எறிந்து வாத்துக்களுக்கு உயிரூட்டினான். கௌசல்யாவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள். தண்ணீரில் எழுந்த சிற்றலைகளில் வாத்துக்கள் கலைந்து அப்பால் செல்ல, கௌசல்யா அவனைச் சீண்டினாள்.

"ஒரு சிகரெட் கம்பெனி விளம்பரம் மாதிரி இருக்கு. ராஜா, நீ ஏன் புகை பிடிப்பதில்லை?"

"எனக்குப் பிடிக்காது கௌசி."

"இல்லை, இப்ப நீ இருக்கற ஸ்டைல்ல ஜம்முனு ஒரு வில்ஸ் பாக்கெட்டைப் பிரிச்சு அதிலேர்ந்து ஒரு சிகரெட் செலக்ட் பண்ணி, நான் அதை லைட்டரின் க்ளிக்கில் ஏற்ற, உதடுகளுக்கு நடுவில் பொருத்திப் புகையை ஆனந்தமா உள்ளிழுத்து இதமா வெளியவிட்டா க்ளாஸா இருக்கும்! ரிலாக்ஸ்!... க்ளிக்! ஒரு ஃபோட்டோ, அவ்வளவுதான். நாளையில் இருந்து நீ ஒரு பெரிய மாடல்!"

"யு புட் இட் ஸோ நைஸ்லி", என்றான் பாஸ்கர்.

"ஸ்டில் யு வொன்ட் லைக் ஸ்மோக்கிங்?"

"என்ன பேச்சு இது கௌசி? போற போக்கைப் பாத்தா நீயே அவனை ஸ்மோக் பண்ண வெச்சுடுவே போலிருக்கே?"

"ஸ்மோக்கிங், ட்ரிங்க்கிங் இதெல்லாம் ஒருத்தரோட பர்சனல் விஷயங்கள் வசந்தி. அளவோட இருக்கறவரைக்கும் இதெல்லாம் வைஸஸ்னு நான் நினைக்கல. எங்கப்பாகூட அடிக்கடி ஸ்மோக் பண்ணுவார், எப்பவானும் குடிப்பார், அவர் வேலைசேர்ந்த பழக்கங்கள் அப்படி. அதுக்காக அவர் கெட்டவர்னு சொல்லமுடியுமா?"

"ஒத்துக்கறேன். அதுக்காக இந்தப் பழக்கங்கள் கொஞ்சங்கூட இல்லாதவங்களை நாமே தூண்டிவிடறது எவ்ளோதூரம் சரின்னு நினைச்சுப் பார்க்கணும், இல்லையா?"

"கௌசல்யா ஒரு ஜோக்காக சொல்லியிருக்கலாம் இல்லையா வசந்தி?" என்றான் பாஸ்கர்.

"இல்லை. நான் ராஜாவோட வில்பவரை டெஸ்ட் பண்ணினேன். எனக்குத் தெரியாதா அவனோட வில்பவர் வில்ஸ் பவரைவிட வலிமையானதுன்னு?"

"சிகரெட் புகைக்க வில்பவர் தேவையில்லை கௌசி. சிகரெட் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவோ, அறவே ஒழிக்கவோ நினைச்சா, நினைச்சதை செயல்படுத்த வில்பவர் வேணும்."

"வில்பவர்னு சொன்னதும் எனக்கு ஒரு வழக்கம் ஞாபகம் வருது", என்றான் பாஸ்கர். "உனக்குத் தெரியுமா ராஜா?"

"கேள்விப் பட்டிருக்கேன், சொல்லு."

"உங்களுக்கு?"

தலைகள் மறுத்தன.

"கல்லூரி ஹாஸ்டல் மாணவர்கள்கிட்ட இருக்கறதா சொல்லப்படும் வழக்கம். ஒருவிதமான ராகிங்னுகூடச் சொல்லலாம். என்ன செய்வாங்க, புதுசா சேர்ந்த ரெண்டு மாணவர்களை எதிரும்புதிருமாக நிற்கவைத்து, ’உங்க வில்பவர்க்கு ஒரு டெஸ்ட்’னு சொல்லி, ரெண்டு பேரையும் கண்ணை மூடிண்டு கைகளால பெடல் பண்ற மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் படாம சுத்தணும்; சுத்திண்டே வாய்விட்டு ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு மாத்திமாத்தி எண்ணனும்னு சொல்வாங்க. நடுவில நிறுத்தக் கூடாது, எக்காரணம் கொண்டும் கண்ணைத் திறக்கக் கூடாது. மீறினா ஆளுக்கு பத்து ரூபாய் ஃபைன்.

"இந்தப் புதுப் பையன்கள் ரெண்டு பேரும் மும்முரமா பெடல் பண்ற போது சுத்தி இருக்கறவங்க சத்தம் போடாம நழுவிப் போய் டிஃபன் காப்பி சாப்பிட்டு பீடா போட்டுண்டு பதினஞ்சு இருவது நிமஷம் கழிச்சு வருவாங்க. வரும்போது ஒரு மாணவர் பட்டாளத்தையே கூட்டிண்டு வருவாங்க. பார்த்தா, இந்த ரெண்டு பேரும் பேக்கூ மாதிரி கண்ணை மூடி பெடல் பண்ணிண்டு, நம்பர்ஸ் எண்ணிண்டு! கடைசியா ஒருவழியா ரெண்டு பேரையும் கண்ணைத் திறக்கச் சொன்னா, எதிர்ல ஒரு பெரிய கும்பல், கைதட்டல், எக்காளச் சிரிப்பு! எப்படி இருக்கும் ரெண்டு பேர்க்கும்? இந்த எக்ஸ்பெரிமென்ட்ல ஒரு பையனுக்குப் பைத்தியமே பிடிச்சுடுத்தாம். இன்னொருத்தன் தற்கொலையே பண்ணிக்கொண்டானாம்!"

கௌசல்யாவின் சிரிப்பு மரங்களியே எதிரொலிக்க, வசந்தி, "ஐயோ பாவம்!" என்றாள்.

*** *** ***
(தொடரும்)


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 17, 2013 7:36 am

பயணம்: நாவல்
ரமணி

20

கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் படவேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே -- நன்றாயிளந்
தென்றல் அவரவேணும்.
---மஹாகவி பாரதியார், காணி நிலம் 2


ருமுறை மாமா ஒரு வாரம் டூர் போனபோது அவனைக் கட்டாயப் படுத்தி மாமிக்கும் கௌசல்யாவுக்கும் துணையாக அவர் வீட்டில் தங்கச் சொன்னபோது, கௌசல்யாவுடன் மனம்விட்டுப் பேச, பழக வாய்ப்புக் கிடத்தது.

அந்த நாட்கள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத, முக்கியமான நாட்களாகி டைரியில் நிறைய இடம் பிடித்துக்கொண்டன.

அந்தப் புதிய பங்களாவில் ’கெஸ்ட் ரூம்’இல் தங்கும் முதல் நபர் என்பதே ஒரு பெருமையாக இருந்தது. கௌசல்யாவின் அறை போலவே அந்த அறை மிகவும் வசதியாக இருந்தது. படுத்துக்கொள்ள ஃபோம் மெத்தையும் தலையணகளும், வசதியாக சாய்ந்துகொள்ள ’ஸ்டீல் ஈஸிசேர்’உம், எழுதப் படிக்க அழகிய மேசையும்---மேசைமேல் ’இன்டர்காம்’---அலமாரியில் அவனுக்குப் பிடித்த புத்தகங்களும், ஜன்னல் வழியாகப் பார்த்தால் தோட்டத்தில் கொள்ளை கொள்ளையாகப் பூக்களின் அழகும், தென்னை ஓலைகளில் அமர்ந்து ஊஞ்சலாடும் காக்கைகளும், கிரீச்சிடும் அணில்களும், விர்ரெனப் பறக்கும் குருவிகளும்...

மாமியும் கௌசல்யாவும் அவனுக்காகவே பார்த்துப் பார்த்து எல்லா வசதிகளும் செய்துகொடுத்த மாதிரி இருந்தது.

அவர்கள் அன்பை வியந்துகொண்டு எழுந்தபோது ’இன்டர்காம்’ ஒலித்தது.

"குட் மார்னிங், ராஜா! கௌசி ஹியர். எழுந்தாச்சா? நல்லாத் தூங்கினாயா?"

"ஹாய் கௌசி! குட் மார்னிங்! எங்கேர்ந்து பேசறே?"

"சமையலறை. பெட் காஃபியா இல்லை பல் தேய்ச்சிட்டு வரயா?"

"அஞ்சு நிமிஷத்தில வரேன். மணி ஆறுதான் ஆறது, அதுக்குள்ள எழுந்தாச்சா?"

"எழுந்து, காஃபி சாப்ட்டு, குளிச்சாச்சு."

"என்ன விசேஷம்?"

"ஒண்ணுமில்லை. தினமும், அம்மாவும் நானும் காலைல சீக்கரமே குளிச்சிடுவோம். அப்பதான் புத்துணர்ச்சியா இருக்கும்."

"Incredible of a college girl!"

"Not at all!" என்று வைத்துவிட்டாள்.

ந்து நிமிடத்தில் அவன் அறைக்கதவு மெல்லத் தட்டப்பட்டது. திறந்தபோது நெற்றியில் குங்குமம் துலங்க, மஞ்சள் மணக்க, தலையில் துண்டு முடிந்திருக்க, ஈரம் தோய்ந்த ஒன்றிரண்டு கேசக் குழல்கள் நெற்றியிலும் கன்னத்திலும் விளிம்பு கட்ட, பாவாடை தாவணி அவள் அழகை இரட்டிப்பாக்க, கையில் காஃபி ட்ரேயுடன் கௌசல்யா நின்றிருந்தாள்.

"என்ன மலைச்சுப் போயிட்ட?"

"வசந்தியை நான் இதுபோலப் பார்த்திருக்கேன். ஆனால் நீ? உன்னைப் பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு, கௌசல்யா."

"வசனம்லாம் அப்புறம். காஃபி ஆறிடப் போறது."

டீப்பாயில் ட்ரேயை நளினமாக வைத்துவிட்டு தாவணியைக் கொஞ்சம் சரிசெய்துகொண்டு அவன் எதிரில் ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, காப்பிக் குடுவையில் இருந்து காப்பியைக் கோப்பியில் ஊற்றினாள். கோப்பை நிறைந்ததும் அதன் அடியில் இருந்த பீங்கான் தட்டை மெல்ல உயர்த்தி அவனிடம் நீட்டும்போது ஆவி பறக்கும் காஃபியின் மணம் மூக்கைத் துளைத்தது.

அவன் விரல்கள் ’ஸாஸர்’இல் பதிந்தபோது சொன்னாள்: "Take care NOT to touch me. நான் இன்னைக்கு மடி."

"என்ன விசேஷம் கௌசி?"

"இன்னிக்கு என்ன கிழமை?"

"ஓ, வெள்ளிக் கிழமை."

"வெள்ளியும் செவ்வாயும் அம்மாவும் நானும் இப்படித்தான் இருப்போம். இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்வாமி அறைல இருப்போம். சாப்பிடு, ஆறிடப் போறது."

"உனக்கு?"

"ஓவர்."

"என்னோட கொஞ்சம் சாப்பிடேன் கௌசி."

"ஓகே", என்று மற்றொரு கோப்பையில் பாதி நிறைத்துக் கொண்டாள்.

"ராஜா, உனக்குத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கப் பிடிக்குமா?"

"நிறைய."

அனுவின் ஞாபகம் வந்தது.

’நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!’
அப்புறம் அந்தக் கடிதம்!
’நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.’
யு ஆர் க்ரூயல் அனு!

"அடிக்கடி என்ன யோசனை, ராஜா?"

சொல்லிவிடலாமா? வேண்டாம்.

"ஒண்ணுமில்லை கௌசி. சின்ன வயசில நானும் வசந்தியும் தினமும் ஒரு தடவை கார்த்தால தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்போம். அது நினைவுக்கு வந்தது."

கௌசல்யா போனதும் அவனும் பத்து நிமிடத்தில் குளித்துவிட்டுப் படியிறங்கி கூடத்துக்கு வந்தபோது சிவானந்த விஜயலக்ஷ்மியில் ’கனக தாரா’ டேப்பில் ஒலித்துக் கொண்டிருந்தது. துண்டால் ஈரத் தலையை முடிந்துகொண்டு, நெற்றியில் குங்குமம் துலங்க, காலைப் பொழுதின் முதல் சூரியஒளிக் கற்றைகளில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் நகைகள் மினுக்க, மாமி அவனைப் பார்த்துப் புன்னகத்தாள்.

"நான் போய்ப் பூப்பறிச்சிண்டு வரேம்மா", கௌசல்யா கிளம்பப் பின்தொடர்ந்தான்.

டிக்கடி பார்த்ததாக இருந்தாலும் அந்தத் தோட்டம் எப்போதும் புதிதாக, அழகாக, அடக்கமாக இருந்தது. பூச்செடிகள் வீட்டின் பக்கங்களில் இருக்க, காய்கறித் தோட்டம் வீட்டின் பின்னால் இருந்தது.

வாசலிலும் பக்கங்களிலும் குரோட்டன்ஸ் போகன்வில்லாச் செடிகள்
நெடுநெடுவென வளர்ந்து கலர்கலரான இலைகளையும்
பூக்களையும் சுமந்து நிற்க, சரக்கொன்றை மரம் நெடுக
இளங்காலை வானம் மலர்ந்திருந்தது.

நடுநடுவே ரோஜாச் செடிகள் பரந்து
ஆரோக்கியமாக வளர்ந்து நிறையப் பூத்து
வரிசை வரிசையாகப் பழுப்பு முட்களையும்
இளம்பச்சை முட்களையும் அவற்றை உள்ளடக்கிய

பச்சை, பழுப்பு இலைகளையும் தாங்கி,
அந்த இலைகளுக்கு நடுவில் தலைநீட்டும் பச்சை,
பச்சை பிளந்து ரோஸ், முழுவதும் ரோஸ் மொக்குகள்
மலரும் நாட்களை எதிர்பார்த்து வளர்ந்திருக்க,

அன்று மலரும் அதிர்ஷ்டம் பெற்ற மொக்குகள்
மலரத் தொடங்கி மெல்ல இதழ் விரிக்க,
அடியில் காப்பிப்பொடிச் சக்கைத் துகள்களில்
எறும்புகள் மொய்க்க நின்றன.

மயில் மாணிக்கக் கொடிகள்
பக்கச் சுவர்களில் தொடங்கி, கயிறுகளில் படர்ந்து,
ரத்தச் சிவப்புப் பூக்களை
வாரி யிறைத்துக்கொண்டு மலையேற,

நந்தியாவட்டைச் செடிகளில்
பனிபெய்து நிலத்திருக்க,

பந்தலில் படர்ந்த நித்திய மல்லிக் கொடிகளின்
முன்னைய இரவு மலர்கள் இப்போதும் மணம் வீசின.

இன்னும் உள்ளே தள்ளி
குண்டுமல்லிப் பூக்கள் பரவலாக
மலர்ந்து மணம்பரப்ப,

செம்பருத்திச் செடிகள்,
பிடிவாதத்துடன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு
எடுத்ததைத் தரமாட்டேன் என்று
அடம்பிடிக்கும் குழந்தையைப் போல்
தன்னுள் ஆச்சரியப் பூக்களை ஒளித்து வைத்திருக்க

கௌசல்யா அவனுடன் பேசியபடியே
ஒவ்வொரும் பூவாகப் பறித்துக்
குடலையில் சேர்த்தபோது
அவளே ஓர் ஆச்சரிய மலராகத் தெரிந்தாள். பேசும் மலர்!

காய்கறித் தோட்டத்தில் நீண்ட பாத்திகளில்
வெண்டைச் செடிகள்
ஆங்காங்கே காய்கள் வளர
மென்மஞ்சளில் வெல்வெட் விழிக்கப் பூத்திருந்தன.
கத்திரிச் செடிப் பூக்கள் மென்நீலத்தில் ரகசியம் பேசின.

குட்டை குட்டையான கொத்தவரங்காய்ச் செடிகள்
பூத்ததே தெரியாமல் ரோஸ்வண்ண முறுவலில்
பொம்மைப் போர்வீரர்கள் போலக்
காய்வாட்கள் ஏந்தி நின்றன.

மிளகாய்ச் செடிகள் கடுகெனப் பூத்துக்
கண்ணைப் பறிக்கும் பசுமையில்
காய்களத் தாங்கி நின்றன.

ஓரத்தில் கொத்தமல்லிச் செடிகள் பசுங் காளான்களாக்
கூட்டம் கூட்டமாக வளர்ந்திருந்தன.

உயரமாக வளர்ந்து பரவியிருந்த
முருங்கை மரக்கிளைகளில் அணிகள்
ஒன்றையொன்று துரத்தி
ஓடிப் பிடித்து விளையாடி
பூக்களைச் சிலிர்த்தன.
சில பூக்களைக் கொத்தாகச் சேர்த்து
சிலந்தியொன்று வலையின் இழையில் தொங்கவிட் டிருந்தது.

வாழை மரங்கள் அப்போதுதான் உட்கொண்ட
நீரின் வெண்நுரை அடியில் படிந்திருக்க,
கற்றை கற்றையாக வளர்ந்து,
பெரிய பெரிய இலைகளில்
காற்றைத் தோண்ட முயன்று,

இன்னும் சில மரங்கள் குருத்துகளையும்
பாதிவிரிந்த இலைகளின் நுனியில் நீர்த்துளிகளையும்
தாங்கியந்த நீர்த்துளிகளில் எங்கிருந்தோ ஊடுருவித்
தாக்கும் கதிர்களை நிறங்களாகப் பிரதிபலித்து,
புரியாத மொழிகளில் பேசின.

அண்ணாந்து பார்த்தபோது சில மரங்களில்
வாழைத் தார்கள் நுனியில் பூவினைத்
தாங்கி வணங்கித் தழைந்திருந்தன.

தென்னை மரங்களில் காக்கைகள் உட்கார்ந்து ஊஞ்சலாடி
மூக்கைத் தேய்த்து ஒலி எழுப்பி
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு பறக்க,

தூரத்தே இலைச் சருகுகளை
ஓசைப் படுத்திக்கொண்டு அணில்கள்
வாலைக் குழைத்தபடி எதையோ தேடின.

மாடி ஜன்னல் விளிம்புகளிலும்,
வெயில் மறைப்புக்களிலும், இன்னும்
சட்டென்று கண்ணில் படாத இடங்களிலும்

சிட்டுக் குருவிகளும் குண்டுக் குருவிகளும்
அமர்ந்துகொண்டு அங்கும் இங்கும்
தலையைத் திருப்பிச் சளசளவென்று பேசின.

தத்தித் தத்தி நடந்து
தரையில் மூக்கை உராய்ந்தன.
திடீரென்று உணர்ந்த ஆபத்துகளில்
விர்ரிட்டுப் பறந்தன.

சில செடிகளுக்கு அடியில் தேங்கியிருந்த தண்ணீரில்
சிறகுகளை அடித்துக்கொண்டு நீராடின.


கௌசல்யாவின் பூக்குடலை நிறைந்ததும் அவர்கள் உள்ளே சென்றபோது அவன், ’நீயும் வேணும்னா எங்களோட பூஜைல உக்காரு’ என்ற மாமியின் அழைப்பை நாசூக்காக நிராகரித்துவிட்டு கூடத்தில் உட்கார்ந்துகொண்டு ’ஹிண்டு’ பேப்பரை மேயத் தொடங்கியபோது மணி ஏழடித்தது.

(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக