புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
101 Posts - 52%
heezulia
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
16 Posts - 3%
prajai
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 1%
jairam
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_m10அரசும் ஆம் ஆத்மிகளும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசும் ஆம் ஆத்மிகளும்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 05, 2013 2:31 pm

ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன், சாமானியன் என்று அர்த்தம். ஆமாம் சாமிகளை ஆம் ஆத்மி என்று அழைப்பது தவறு. செல்வாக்கு, சொல்வாக்கு இல்லாத சராசரி மக்களுக்காக பாடுபடும் கட்சி காங்கிரஸ். அப்படி அந்த கட்சி 1947ல் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது. திடுமென்று அந்த பட்டத்தை ஒரு ஆள் லபக்கி விட்டார். அரவிந்த் கேஜ்ரிவால். அவசரமாக ‘ஆம் ஆத்மி பார்ட்டி’ என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்து அறிவித்தார். ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் அன்னாஹசாரே அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.
-
ஒரு கையில் செல்போனும் மற்றதில் வாட்டர் பாட்டிலுமாக டெல்லி மைதானங்களை நிரப்பி ஆம் ஆத்மிகள் லோக்பால் கோஷம் எழுப்பியது வரலாறு. அடுத்ததாக பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக திரண்டனர். சாமானியர்கள் விழித்துக் கொண்டனர்; இனி இந்த நாடு பிழைத்துக் கொள்ளும் என்று நாமெல்லாம் ரிமோட்டில் சேனலை மாற்றும் வேளையில் ‘இவர்கள் ஆம் ஆத்மிக்களே அல்ல’ என்று ஒரு குரல் கேட்கிறது. அதன் சொந்தக்காரர் அமர்த்யா சென்.
-
‘இந்தியாவை நகர்த்துவது எது, நிறுத்துவது எது’ என்ற தலைப்பில் அமர்த்யாவுடன் ஷர்மிளா தாகுர் உரையாடும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது. வடக்கு மின் கட்டமைப்பில் நேர்ந்த தடையால் 60 கோடி மக்கள் இருட்டில் மூழ்கினர் என்ற சமீபத்திய செய்தியை மறுவாசிப்பு செய்த அமர்த்யா, ‘இவர்களில் 20 கோடி பேர் மின் இணைப்பு இல்லாமல் நிரந்தர இருட்டில் வாழ்வது எத்தனை பேருக்கு தெரியும்’ என்று கேட்டார்.
-
டீசல், எரிவாயு விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் அவற்றின் நேரடி பயனாளிகளான நடுத்தர மேல்தட்டு மக்களுக்காக நடத்தப்படுகிறதே தவிர காஸ் ஸ்டவ் இல்லாத ஏழைகளை , பேருந்திலும் ரயிலிலும் கசங்கி பயணிக்கும் அடித்தட்டு மக்களை , மனதில் கொண்டு அல்ல என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இறக்குமதி செய்யப்படும் தங்கம், வைரம் மீது பெயரளவில் ஒரு வரி விதிக்க அரசு முனைந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. உடனேஅரசு அந்த முயற்சியை கைவிட்டது.
-
ஏழை குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்துக்காக தேவைப்படும் நிதியைவிட இந்த வரியால் அரசுக்கு இரண்டு மடங்கு வருமானம் கிடைத்திருக்கும் என்று ஒரு ஒப்பீடு செய்த அமர்த்யா, ‘தங்கம் வைரம் வாங்குவோர் சங்கம் வைத்து கோஷமிடுகின்றனர். ஊட்டச்சத்து இல்லாமல் நோஞ்சான்களாக வளரும் குழந்தைகளின் குரல் அரசுக்கு கேட்குமா’ என்று மனதில் குத்துகிறார்.
-
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதும், அவர்கள் மவுன விரதத்தை கைவிட்டு வீதிக்கு வந்து போராடுவதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அவர்கள் வெற்றி கண்டாலும் அதன் மூலம் இந்தியா முன்னேறிய நாடாக மாறுமா என்ற கேள்வியை நமது சிந்தனையில் விதைக்கிறார் நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா.
-
செல்வந்தர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களை ஏழைகளாக கருதும் நடுத்தர மக்கள் ஆம் ஆத்மிக்களாக சித்தரிக்கப்படுவது பொருத்தமாக இல்லை. இரண்டு வேளை உணவுக்கு வழியில்லாத கணிசமான ஏழைகளை வைத்துக் கொண்டு நாடு வளர்ச்சி அடைவது சாத்தியமல்ல என்று நம்மை உணர வைக்கிறார் அவர். தனிநபர் சராசரி வருமானம் அதிகரித்து வந்தாலும் ஆரம்பக் கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி, மேம்பட்ட சுற்றுச் சூழல் போன்ற சமூக குறியீடுகளில் நமது நாடு கீழ்நோக்கி போகும் விசித்திரத்துக்கு காரணம் தொலைநோக்கு இல்லாத அரசின் திட்டங்கள்.
-
உதாரணமாக, மருத்துவ சேவையில் அரசுக்கு பங்கில்லை என இதுவரை ஒதுங்கி நின்ற அமெரிக்காவே அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சை வசதிகள் கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பு என்ற மன மாற்றத்தைஎட்டியுள்ள நிலையில் இந்திய அரசு பொது மருத்துவத்தை முற்றிலுமாக தனியார் கையில் தள்ளிவிடும் ஆபத்தான முடிவுக்கு வந்திருப்பதை அமர்த்யா கடுமையாக விமர்சிக்கிறார்.
-
அரசை மட்டுமல்ல. கட்சிகள், மகளிர் அமைப்புகள் போன்றவையும் அடிப்படையான பிரச்னைகளை கவனிக்காமல் மேலோட்டமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக அவர் கவலைப்படுகிறார். பங்களாதேஷில் மகளிர் அமைப்புகள் உரிமை சலுகை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தாமல் பெண்களின் உடல் நலம் குறித்த பிரச்னைகளிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருவதால் குழந்தைகள் நலனும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரமும் வியப்பளிக்கும் வகையில் முன்னேறி இருப்பதை அமர்த்யா விவரிக்கிறார்.
-
இந்தியாவில் சரி பாதி வீடுகளில் கழிப்பறை இல்லை. பக்கத்தில் உள்ள பங்களாதேஷ் நம்மைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடு என்ற போதிலும் அங்குள்ள வீடுகளில் 9 சதவீதம்தான் கழிப்பறை இல்லாதவை என்பதை பார்க்கும்போது இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பது புரிகிறது.
இந்தியாவில் செல்வந்தர்களும் அவர்களின்பெயரிலான சொத்து மதிப்பும் அண்டை நாடுகள் பொறாமைப்படும் அளவில் அதிகரித்தாலும் இங்கு ஏழ்மை மறைவதற்கான அறிகுறிகளை காணோம். இன்றுள்ள நமது முன்னுரிமைகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்து இடம் மாற்றினால்தான் உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகும்.
-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக