புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
251 Posts - 52%
heezulia
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
150 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
18 Posts - 4%
prajai
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
2 Posts - 0%
Barushree
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10கொன்றை வேந்தன் வெண்பா Poll_m10கொன்றை வேந்தன் வெண்பா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொன்றை வேந்தன் வெண்பா


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 03, 2013 11:27 pm

"கொன்றை வேந்தன்' தொடர்களை ஈற்றடியாக வைத்து "கொன்றை வேந்தன் வெண்பா' என்ற நூல் ஒன்று பாடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், உலகபுரம் என்ற ஊரில் வாழ்ந்தவர் சிவமலை. அவருடைய தந்தையார் முத்தித் திருமலை. முத்தித் திருமலை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் தங்கை பார்வதியின் கணவர். செல்வம் மிக்க குடும்பம். சிவமலையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வெள்ளோடு காசிலிங்கப் புலவர் இயற்றிய நூலே "கொன்றை வேந்தன் வெண்பா'.

இந்நூலின் ஏட்டுச் சுவடியைக் கண்டறிந்து பெற்றவர் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர். ம.ப.பெரியசாமித் தூரன் குழுவினர் நடத்திய "காலச்சக்கரம்' இதழில் தெய்வசிகாமணிக் கவுண்டர் இந்நூலைப் பற்றி எழுதி, சில பாடல்களையும் அச்சிட்டுள்ளார். தெய்வசிகாமணிக் கவுண்டரின் ஏட்டுச்சுவடி இப்போது கோவை, பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் பாதுகாப்பில் உள்ளது. வேறு சுவடியும் கிடைத்துள்ளது. சுவடிகளில் 90 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஓரிரண்டைக் காண்போம்.

கீழோர் ஆயினும் தாழ உரை

பாண்டவர்கள் சார்பில் துரியோதனனிடம் கண்ணன் தூது சென்றான். தூதனாகச் சென்ற கண்ணன் நாடு கேட்டு மறுக்கப்பட்ட நிலையில், பாண்டவர்க்கு ஐந்து ஊர்களாவது கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்நிகழ்ச்சி இக்கொன்றை வேந்தன் வெண்பாவில் கூறப்படுகிறது.

"நீண்டசட கோபன் நிருபன் சுயோதனன்பால்
பாண்டவர்க்குத் தூதுரைத்த பண்புபார் - ஆண்டவச்சீர்
தேகா வெள்ளோடைச் சிவமலைபூ பாகீழோர்
ஆகிலும் தாழ உரை''

ஒத்த இடத்தில் நித்திரை கொள்

ஒளவையார் வாழ்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை இக்கொன்றை வேந்தன் தொடருக்கு எடுத்துக் காட்டுகிறார்.

ஒருமுறை ஒளவையார் தன் பயணத்தின்போது ஒரு பழைய சத்திரத்தில் தங்கினார். பாழடைந்த அந்தச் சத்திரத்தில் இருந்த பேய் ஒன்று ஒளவையாரைப் பயமுறுத்தியது. ஆனால், ஒளவையார் அப்பேயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை.

""ஏ பேயே! என்னைப் பயப்படுத்தி விரட்ட வேண்டாம். ஒரு வெண்பாவை இரண்டு முறை படித்தால் மனனம் செய்ய இயலாதவனையும், கண்கள் ஓலைச் சுவடியைப் பார்த்துக் கொண்டிருக்க, கையால் எழுத இயலாதவனையும் பெற்றவள் ஒரு பாவிப்பெண். அவள் இவர்களைப் பிறர் நகைக்கப் பெற்றாள். அவர்களை விரட்டு போ'' என்று துணிச்சலாகக் கூறினார் என்பர்.

"வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானை - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளென்று
எற்றோமற் றெற்றோமற் றெற்று''

என்பது ஒளவையார் பாடிய வெண்பா.

"எற்றோமற் றென்றே இயம்பும் பழமொழிபார்
குற்றமகல் சாத்தந்தை கோத்திரனே - வெற்றி
சிவத்தார் வெள்ளோடைச் சிவமலைபூ பாவொத்
தவிடத்தில் நித்திரை கொள்''

என்பது கொன்றை வேந்தன் வெண்பா.

19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த வெள்ளோட்டுப் புலவர் காசிலிங்கம் பாரதம், திருக்குறள், இராமாயணம், ஒளவையார் பாடல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தார் என்பதை இதிலுள்ள வெண்பாக்கள் மூலம் அறிய முடிகிறது.

நன்றி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக