புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
11 Posts - 33%
heezulia
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
6 Posts - 18%
i6appar
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
1 Post - 3%
Jenila
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
88 Posts - 35%
i6appar
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
சுவரொட்டி மனிதர்கள் Poll_c10சுவரொட்டி மனிதர்கள் Poll_m10சுவரொட்டி மனிதர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவரொட்டி மனிதர்கள்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Fri Feb 01, 2013 1:39 pm

சுவரொட்டி மனிதர்கள்
(சிறுகதை)

இரவு 10.00 மணி.

வழக்கம் போல அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் கூடியிருக்க மூன்று அடுப்புகளில் பசை தயாராகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடுப்பாகச் சென்று பசையின் பதத்தைச் சோதித்துக் கொண்டிருந்த சிவனாண்டியின் மனதிற்குள் தங்கை காமாட்சியின் அழுகை முகம் வந்து வந்து போனது. அதன் காரணமாய் அவனிடத்திலும் வழக்கமான கலகலப்பு காணாமல் போயிருந்தது.

அன்று இரவுக்குள் ஒட்டி முடிக்கப்பட வேண்டிய போஸ்டர்கள் ஒரு புறம் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, காண்டிராக்டர் செல்வம் யார் யாருக்கு….எந்தத் தெரு….என்ன போஸ்டர் என்பது குறித்த விபரங்களை உத்தரவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்.

'அண்ணே…பசை ரெடி எல்லோரும் அவங்கவங்க பக்கெட்டை எடுத்திட்டு வாங்க…” சிவனாண்டி குரல் கொடுக்க, தங்களுக்கான விபரங்களைத் தெரிந்து கொணடவர்கள் பக்கெட்டுடன் அவனை நோக்கிச் சென்றனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் திசைக்கொருவராய்ப் பறந்து விட அந்த இடம் வெறிச்சோடியது.

'சரி…சிவனாண்டி….நானும் பொறப்படறேன்…நீயும் கௌம்பு…போகும் போது மறக்காம அடுப்புக்களை அணைத்து விட்டுப் போ..” சொல்லியபடியே காண்டிராக்டர் செல்வம் தன் புல்லட்டில் ஏறி அமர அது படபடத்துக் கிளம்பியது.

மீதமாகிப் போன பசையை ஒரு பக்கெட்டில் ஊற்றி தன் சைக்கிளின் ஹேண்டில் பாரில் தொங்க விட்டவன் அடுப்புக்களை மீண்டுமொரு முறை கூர்;ந்து பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி மிதித்தான்.

'ஹூம்…ஒரே தங்கச்சி நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டுத்தான் கவருமெண்டு வேலைல இருக்கறவனுக்குக் குடுத்தேன்…அவன் இப்படிப் பணத்தாசை பிடிச்சவனா இருப்பான்னு கொஞ்சம் கூட நெனச்சுப் பார்க்கலை…”

'த…ம்….பீ”

யாரோ அழைப்பது போல குரல் கேட்க காலை ஊன்றி நின்று திரும்பிப் பார்த்தான். ஒல்லியான முகத்தில் அடர;த்தியான குறுந்தாடியோடு நின்று கொண்டிருந்த அந்த நபர் இவனை நோக்கி நடந்து வந்து சிநேகிதமாய்ச் சிரிக்க,

'என்னையா கூப்பிட்டீங்க?” கேட்டான்.

அந்த நபர; மேலும் கீழுமாய்த் தலையாட்டி விட்டு பார்வையை நாலாப்புறமும் ஒட்டியவாறே 'போஸ்டர் ஒட்டுற ஆளுங்கெல்லாம் போய்டடாங்களா?”

'ஓ..அப்பவே கௌம்பியாச்சே…ஏன் உங்களுக்கு ஏதாவது போஸ்டர் ஒட்டணுமா?”

'ம்ம்ம்…..” சில விநாடிகள் யோசித்தவர் 'ஆமாம்” என்றார்.

'அடடே…காண்டிராக்டர் கூட இப்பத்தான் போனார்…கொஞ்சம் முந்தி வந்திருந்தீங்கன்னா இன்னிக்கே ஒட்டியிருக்கலாம்…இனி நாளைக்குத்தான் ஆவும்”

;இங்க மொத்தம் எத்தினி பேர் போஸ்டர் ஒட்டுறாங்க?”

'ம்ம்ம்…எட்டு பேர் என்னையும் சேர்த்து…ஆனா இன்னிக்கு போஸ்டர் குறைவு..அதனால எனக்கு வேலை இல்லாமப் போச்சு”

'சரி….வேலை நான் தர்றேன்…செய்யறியா?”

'அய்யய்ய…அப்படியெல்லாம் ஒட்டக் கூடாது!...காண்டிராக்டர் மூலம்தான் வரணும்”

'பச்…த பாருப்பா….இது கொஞ்சம் விவகாரமான போஸ்டர்;….காண்டிராக்டர் மூலமாவெல்லாம் வர முடியாது…நீ ஒட்டறேன்னு சொல்லு…ஒரு பெரிய அமௌண்ட் வெட்டறேன்”

'என்னது…வெவகாரமான போஸ்டரா?…பலான படமா?”

'இல்லை”

'அப்புறம்?” அப்பாவியாய்க் கேட்ட சிவனாண்டியைப் பார்த்து முறுவலித்த அந்த நபர்,

'எங்க இயக்கத்தோட வாசகங்கள் கொண்ட போஸ்டர்…நாளைக்குக் காலைல நகரையே பரபரப்பாக்கி….காவல் துறையைக் கலவரமாக்கி….யார் அடிச்சது?…யார் ஒட்டினது? ன்னு எல்லோரையும் தலையைப் பிய்ச்சுக்க வைக்கற போஸ்டர்..” சொல்லும் போதே அந்த நபரின் கண்களில் ஒரு வெறி தாண்டவமாடியது.

'நீ…நீங்க…தீவிர வாதியா?” சிவனாண்டியின் குரல் நடுங்கியது.

'அப்படின்னு காவல் துறையும்…கவர;ன்மெண்ட்டும்தான் சொல்லுது…ஆனா..எங்களைப் பொறுத்தவரை நாங்க தீவிரவாதிங்க இல்லை…இந்த நாட்டை…இந்த சமுதாயத்தைத் திருத்தறவாதிங்க”

'அய்யா..சாமி…ஆளை விடுப்பா…” என்று கை கூப்பி விட்டுத் திரும்பிய சிவனாண்டியை அந்த நபர் சொன்ன அடுத்த வார்த்தை இழுத்து நிறுத்தியது.

'வேணும்னா பத்தாயிரம் வாங்கிக்கப்பா…”

மதியம் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சி சிவனாண்டியின் மனத்திரையில் ரீப்ளே ஆனது.

'த பாருய்யா…இருபத்தஞ்சாயிரத்தோட உன் தங்கச்சிய அனுப்பினா அனுப்பு…இல்லையா…இங்கியே வெச்சுக்க” கவருமெண்டு மாப்பிள்ளை கறராய்ச் சொல்ல,

'மாசம் பூராவும் போஸ்டர் ஒட்டினாலும் எனக்கு அஞ்சாயிரத்துக்கு மேல வராது…நான் எப்படி மாப்பிள்ளை திடீர்னு இருபத்தஞ்சாயிரம்…”

'அதைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது… எனக்குத் தேவை இருபத்தஞ்சாயிரம் பணம் ..ரெடியானதும் சொல்லியனுப்பு..நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” சொல்லி விட்டுப் பறந்தது கவருமெண்டு காகம்.

'என்னப்பா யோசிக்கறே?…பத்தாயிரம் போதலைன்னா கேளு…கூட தாரேன்”

தான் செய்வது சரியா?…தவறா?…என்று யோசிக்கக் கூட தோணாதவனாய் 'ஒரு இருபத்தியஞ்சு…தேறுமா?” கேட்டே விட்டான்.

சிறிதும் யோசிக்காமல் தன் கையிலிருந்த பையைத் திறந்து பணக்கட்டுகளை எடுத்து சிவனாண்டியின் முகத்தருகே அந்த நபர் நீட்ட 'படக்” கென வாங்கிக் கொண்டான்.

'போஸ்டரைக் குடு சார்”

அந்த நபர் தான் கொண்டு வந்திருந்த பெரிய பண்டலை அவனிடம் தந்து 'இதுல மொத்தம் ஐநூறு இருக்கு…அத்தனையையும் ஒட்டிடு”

'சரி சார்”

'ஏமாத்திடலாம்னு மட்டும் நெனைக்காதே….நாங்க நம்பிக்கை துரோகிகளை விட்டு வைப்பதில்லை”

'அதே மாதிரிதான் இந்த சிவனாண்டியும்…கை நீட்டிக் காசு வாங்கிட்டா ஏமாத்தறதில்லை”

மறுநாள் காலை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தில் அனல் பறந்தது. கமிஷனர் காரசாரமாய்க் கத்திக் கொண்டிருந்தார்.

----

இருபந்தைந்தாயிரம் ரூபாயைத் தன் தங்கையிடம் கொடுத்து விட்டு மாப்பிள்ளைக்கு போன் செய்து கொண்டிருந்தான் சிவனாண்டி.

'ஓ..அப்படியா?…மொத்தப் பணமும் ரெடியாயிடுச்சா?…ஓ.கே…ஓ.கே…நாளைக்கே வந்து என் கண்மணியை அழைச்சிட்டு வந்திடறேன்” போனிலேயே இளித்தது அந்த கவருமெண்டு காகம்.

-----

'யோவ்…நீதான்யா சுக்ரவார்பேட்டை போஸ்டர் காண்டிராக்டர்,” இன்ஸ்பெக்டர் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்க,

காண்டிராக்டர் செல்வம் 'ஆ..மா…ம் சா…ர்..” நடுங்கியபடியே சொன்னார்.

'அப்படின்னா உனக்குத் தெரியாம எப்படிய்யா அங்க அந்தப் போஸ்டர் வந்தது?”

'தெரியலையே சார்”

'தெரியாதுடா…உன்னைய ஸ்டேஷன்ல வெச்சு விசாரிக்கற மாதிரி விசாரிச்சா தானா தெரிய வரும்” சொல்லியபடியே அவனுடைய சட்டைக் காலரைப் பற்றி ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்றார் இன்ஸ்பெக்டர்.

கதறியது காண்டிராக்டர் செல்வத்தின் குடும்பம்

-----
இரவு 11.00 மணி.

'அண்ணே...யாரோ கதவைத் தட்டுற சத்தம் கேட்குது” தங்கை காமாட்சி சொல்ல,

எழுந்து சென்று கதவைத் திறந்த சிவனாண்டி அதிர்ந்தான்.

போலீஸ்!

சட்டென்று தாவி அவன் தலை முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்துச் சென்றது.

-----

'சொல்லுடா…யாரு குடுத்தது அந்தப் போஸ்டரை?”

தரையில் அமர;ந்திருந்த சிவனாண்டி பதிலேதும் பேசாது மௌனமாய் அண்ணாந்து பார்த்தான்.

அவனின் அந்த அலட்சியம் இன்ஸ்பெக்டரின் கோபத்தைத் தூண்டி விட அவரின் இடது கால் அவன் முகத்தை அசுர வேகத்தில் தாக்கி விட்டுத் திரும்பியது.

கன்னத்தில் ஷூவின் அடி அச்சு அப்பிக் கொள்ள, வாயோரத்தில் புளித்த ரத்தத்தைத் தொட்டுப் பார்த்து விட்டு 'சார் சத்தியமாலுமே சொல்றேன் சார்…அவன் யாருன்னே எனக்குத் தெரியாது சார்”

சற்றும் எதிர்பாராத நேரத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளின் லத்தி சட்டையில்லாத அவன் வெற்று முதுகில் முரசறைய ரத்தக் கோடுகள் அவனை வரிக்குதிரையாக்கின.

தொடர்ந்து உதைகளையும், அடிகளையும் சரமாரியாக வழங்கி விட்டு, அவனைத் தூக்கி லாக்கப்பின் மூலையில் எறிந்தது காவலர் குழாம்.

தாங்க முடியாத வலிகளோடு, தூங்க முடியாத அவஸ்தைகளோடு, அன்றிரவு முழுவதும் முனகியபடியே கிடந்தான் சிவனாண்டி.

-----

மறுநாள் காலை பதினோரு மணிவாக்கில், போலீஸ் ஜீப்பில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவனாண்டிக்கு அதிகபட்ச வலி மற்றும ரணங்களின் காரணமாய் காயச்சல் கண்டிருந்தது. வெயிலைக்கூட நிமிர;ந்து பார்க்கத் திராணியில்லாதவனாய் ஜீப்பின் பின்புற இருக்கையில் சுருண்டு கிடந்தான்.

'இந்தப் பயலென்ன சுத்த சோதாப்பயலா இருக்கான்…ஒரு நாள் வைத்தியத்திலேயே இப்படித் துவண்டு போயிட்டான்” 402 சொல்ல,

'பயலுக்கு இதெல்லாம் புதுசு போலிருக்கு”

”இன்னும் நாலு தாங்கு தாங்கியிருந்தா செத்திருப்பான்”

ஜீப் டவுன்ஹால் சிக்னலில் நிற்க மெல்லத் தலையைத் துhக்கி வெளியில் பார்த்தான் சிவனாண்டி.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் ஜன்னலில் தங்கை காமாட்சியும் அவள் கணவனும் ஜாலியாய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சியை கண்டதும் பூரித்துப் போனான்.

போலீஸ் அடிகளின் ரணம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

வலியால் விளைந்த காய்ச்சல் செடி தானாகவே கருகிப் போனது.

துவண்டு கிடந்தவன் துள்ளியெழுந்து 'ஹா…ஹா…ஹா” என்று வாய் விட்டுச் சந்தோஷமாய்ச் சிரிக்க,

'அடக் கெரகமே…தலையில் எக்கச்சக்கமாய் அடிக்கப் போய் மறை கழண்டுடுது போலிருக்கே” 402 அங்கலாயக்க,

'கிரீன் சிக்னல் விழுந்திடுச்சு…வண்டிய நகர்த்துங்க சார்” உற்சாகமாய்க் கூவினான் சிவனாண்டி.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்






avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Feb 01, 2013 1:55 pm

சூப்பருங்க

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Feb 01, 2013 2:58 pm

வலியிலும் சந்தோசம் அருமை



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சுவரொட்டி மனிதர்கள் Mgr
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 7:34 pm

எத்தனை அண்ணமார்கள் இப்படி நாட்டிலோ? எவ்வளவு பணத்தாசை பித்தங்கள் மண்ணிலோ?

கதை மிக அருமை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 8:14 pm

சூப்பருங்க நன்றி மகிழ்ச்சி




சுவரொட்டி மனிதர்கள் Mசுவரொட்டி மனிதர்கள் Uசுவரொட்டி மனிதர்கள் Tசுவரொட்டி மனிதர்கள் Hசுவரொட்டி மனிதர்கள் Uசுவரொட்டி மனிதர்கள் Mசுவரொட்டி மனிதர்கள் Oசுவரொட்டி மனிதர்கள் Hசுவரொட்டி மனிதர்கள் Aசுவரொட்டி மனிதர்கள் Mசுவரொட்டி மனிதர்கள் Eசுவரொட்டி மனிதர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக