புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_m10ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 1:55 pm

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Ellaiy10
அகிலம் முழுவதும் அம்மன் ஆலயங்கள் பல இருந்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ள ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


களைப்படைந்த மன்னன்

தொண்ட மண்டல பகுதியை ஆட்சி செய்த விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயருக்கு சிறப்பிடம் உண்டு. ஒருமுறை கிருஷ்ணதேவராயர் படைகள், பரிவாரங்கள் இன்றி தனியாக ஒரு நாயை மட்டும் துணையாக கொண்டு காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். வேட்டையாடுவதில் அதிக ஆர்வத்தைக் கொண்ட கிருஷ்ணதேவராயருக்கு காட்டில் நேரம் போனதே தெரியவில்லை. வெகுநேரம் ஆகிவிட்ட சூழ்நிலையில் மன்னருக்கு அதிக தாகம் எடுத்தது. பல இடங்களில் நீர்நிலைகளைத் தேடிப் பார்த்து சோர்ந்து விட்ட அவர், ஒரு மரத்தின் அடியில் களைப்பாக அமர்ந்து விட்டார். அவருடன் சென்ற நாய், தனது மன்னனின் நிலைகண்டு, எங்காவது நீர்நிலை தென்படுகிறதா என்று தேடியது. வெகு தூரம் சென்ற அந்த நாய் ஓரிடத்தில் நீர்நிலையை கண்டது. பின்னர் அந்த நீரில் தனது உடலை நனைத்துக் கொண்டு மன்னன் இருந்த இடத்திற்கு விரைந்தது.

தடாகத்தில் அம்மன் சிலை


ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Ellaiy11
அம்மன் வெளிப்பட்ட தடாகம்
அங்கு தாகத்தின் களைப்பால் கண்ணயர்ந்து போய் இருந்த மன்னனின் முன்பாக தனது உடலை சிலிர்த்தது. அதில் இருந்து தெறித்த நீர் முகத்தில் பட்டு மன்னன் கண் திறந்தான். விழித்தெழுந்த மன்னர் தனது வள்ர்ப்பு நாய், நீர் தடாகம் உள்ளதை கண்டறிந்து வந்திருப்பதை புரிந்து கொண்டு எழுந்தார். நாயானது, குரைத்தபடியே நீர் தடாகத்தை நோக்கி ஓடியது. தடாகத்தை அடைந்ததும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் நீரை பருக முயன்றார்.

அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சைப்பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை அவர் பார்த்துக் கொண்டிருந்த வினாடி, நீர் தடாகத்தில் இருந்து ஊற்று தண்ணீர் போல் நீர் மேல்நோக்கி வெளியேறியது. அந்த ஆச்சரியம் மன்னருக்கு விலகும் முன்பாக கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று பேரிரைச்சலுடன் மேலெழுந்து வருவதைக் கண்டார்.

ஊற்றுக்காடு எல்லையம்மன்

இதற்கிடையில் வேட்டைக்கு சென்ற மன்னர் வர காலதாமதம் ஏற்பட்டதால், சேவகர்கள் அனைவரும் காட்டிற்கு மன்னனை தேடி வந்தனர். அவர்களும் நீர் தடாகம் இருக்கும் பகுதிக்கு வந்து ஆச்சரியத்தை கண்டனர். அம்மன் சிலையை வெளியே கொண்டுவரும்படி சேவகர்களுக்கு, மன்னன் உத்தரவிட்டான். இரும்புவலை தயார் செய்து சிலை வெளியே கொண்டுவரப்பட்டது. சிலையை வெளிக்கொண்டு வந்ததும் மன்னன் தனது உடலை தரையில் சாய்த்து அம்மனை வழிபட்டான். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் நல்வாழ்வு பெறும் வகையில் அந்த பகுதியிலேயே பெரிய ஆலயத்தை கட்டி அம்மனை அங்கு பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தான். அம்மன் சிலை காட்டு எல்லைப்பகுதி ஊற்றுநீர் தடாகத்தில் கிடைத்ததால், அம்மனுக்கு ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று பெயரிடப்பட்டது. தற்போது ஊற்றுக்காடு மருவி ஊத்துக்காடு என்றாகி விட்டது.

கூம்பு வடிவில் பலிபீடம்

மன்னன் மெய்க்காப்பாள்ர் ஒருவரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், தன்னை ஊரின் கிழக்கு பகுதியில் வைத்து வழிபடும்படி கூறினார். அதன்படியே எல்லையம்மன் கோவிலை ஊரின் கிழக்கு பகுதியில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்த சிறிது நேரத்தில் எல்லையம்மனின் உக்கிர பார்வையால், அந்த பகுதி பற்றி எரிந்தது. இதனால் ஊர் மக்கள் பயந்து போயினர். அப்போது பூசாரியின் அறிவுரைப்படி அம்மனின் திருவுருவசிலை நுழைவு வாயிலை பார்த்தபடி நேர் எதிராக வைக்காமல், சற்று விலகியபடி வைக்கப்பட்டது. பின்னர் அம்மனை சாந்தப்படுத்தும் பூஜைகள் செய்து சாந்த ரூபிணியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அம்மனின் திருக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள்ளே நுழைந்ததும் நான்கு கால் மண்டபத்தை காணலாம். தொடர்ந்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை அமைந்துள்ளது. மற்ற திருக்கோவில்களில் பலிபீடம் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமாக கூம்பு வடிவில் அமைந்துள்ளது. இதனால் ஊருக்குள் துர்தேவதைகள், பேய் பிசாசுகள் அண்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

பக்தர்களுக்கு பல நலன்களை வழங்கி வரும் எல்லையம்மன் நான்கு கரங்களுடன் அருளாசி புரிகிறார். இடது மேல் கையில் சூலமும், வலது மேல் கையில் உடுக்கையும், மற்ற இருகைகளிலும் அபயம் மற்றும் வரதத்துடன் ஒரு காலை மடித்து மற்றொரு காலை மகிஷன் தலை மீது வைத்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாள் சிலையும் அமைந்துள்ளது.

கருவறையின் வெளிப்புறத்தில் வராகி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி துர்க்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் காலபைரவர் சன்னிதி, நவக்கிரக சன்னிதிகளும், சிவன் பார்வதி, விநாயகர் சன்னிதிகள் வடமேற்கு திசையிலும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறுகிறது. சித்திரை மூல நட்சத்திரம் அன்று அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அந்த நாளை பக்தர்கள் 10 நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடிவருகின்றனர். இந்த நாளில் பைரவ குளத்து நீரால் அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படும். 10 நாள் உற்சவத்தின் ஒரு நிகழ்ச்சியே தெப்ப உற்சவம். இந்த உற்சவத்தின் போது அம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து திருக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும் சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூர விழா, கார்த்திகை தீபம், தைப்பூசம், நவராத்திரி விழாக்களும் சிறப்புற நடைபெறும்.

உப்பில்லாத வெண் பொங்கல் அம்மனுக்கு பிரசாதமாக படைக்கப்படுகிறது. தினமும் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவிலில் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. கோவிலில் 109 சிற்பங்கள் அடங்கிய 5 நிலை ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. கோபுர உச்சியில் உள்ள பிரதான கலசங்களில் ஒன்று தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி



ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 1:56 pm

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Ellaiy12

திருமணம் கைகூடவும், தீராத வியாதி தீரவும், தொழில் வள்ர்ச்சி மேம்படவும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் கோவில் திருக்குள்த்தில் நீராடி வேப்பிலையை உடலில் சார்த்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வரும் பக்தர்களால் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் கோவில் திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கோவில் அருகில் உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டியும், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஈர உடையுடன் உடலில் மஞ்சள் நீரை தெளித்துக் கொண்டும் கோவில் அருகே உள்ள ஆகாஷ தேவதையை வணங்கினால் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.




ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Thu Jan 31, 2013 2:17 pm

பர்ர்க்க கிடைத்தது பகிர்வுக்கு நன்றி :வணக்கம்:

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 31, 2013 2:33 pm

கண்டிப்பாக இந்த கோயிலை சென்று தரிசிக்க வேண்டும் போல் இருக்கிறதுப்பா சிவா.. உத்தரமேரூர் அம்மாவின் ஊர்..அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் 47
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 4:14 pm

சிறப்பான பின்புலம்.......... நன்றி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 31, 2013 5:55 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக