புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊமை உறவுகள்
Page 1 of 1 •
- mukildina@gmail.comபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010
ஊமை உறவுகள்
(சிறுகதை)
மாலை 6.30.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நான் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போது பக்கத்து வீட்டு பத்மநாபன் என்னை நிறுத்தினார்.
'ஹலோ மிஸ்டர் சதாசிவம்…ஒரு நிமிஷம்”
நின்றேன்.
என்னை நெருங்கி வந்தவர் 'உங்களோட சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும்…உங்க பிரதரும் வந்திருந்தாங்க”
'ஓ…அப்படியா?..எப்ப…எத்தனை மணிக்கு,” அசுவாரஸியமாய்க் கேட்டேன்.
'ம்ம்…அஞ்சு மணியிருக்கும்….பட்..அவங்க யாருக்குமே முகமும்…பேச்சும் சரியாகவே இல்லை…ஒரு மாதிரி…கோபமா இருந்த மாதிரித் தெரியுது….ஏன் மிஸ்டர் சதாசிவம்…ஏதாச்சும் பிரச்சினையா?”
நான் பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்க,
'இட்ஸ் ஓ.கே.…அது உங்க குடும்ப விவகாரம்…ஸாரி…ஸாரி…” சொல்லியபடியே அவர் நகர நான் பூட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
எனக்குத் தெரியும் அவர்கள் வருவார்கள்…அதுவும் கடுங்கோபத்தோடு வருவார்கள்! என்று ஏனென்றால் நேற்றைக்கு முன் தினம் நான் அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்த என் திருமண பத்திரிக்கை அவர்களை நிச்சயம் ஆத்திரமூட்டியிருக்கும்…பட்…அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை…என் மனத்திற்கு சரி என்று பட்டதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
இரவு எட்டு மணி வாக்கில் காலிங் பெல் ஓசையெழுப்ப சென்று கதவைத் திறந்தேன்.
என் இரண்டு தங்கைகளும் ஒரே தம்பியும் உள்ளே நுழைந்தார்கள்.
வந்ததும் வராததுமாய் மூத்தவள் அழ ஆரம்பித்தாள். இளையவள் அவளுக்கு ஆறுதல் கூறும் விதத்தில் என்னைத் தாக்கினாள்.
'அக்கா..நீ அழாதேக்கா…நான் இருக்கேனக்கா உனக்கு…யாரோ ஒருத்தர் உன்னைய மறந்து ஒதுக்கிட்டதால நீ தனிமரமாய்டுவியா,….அப்படி ஆக விட்டுடுவேனா நான்?…கூடப் பிறந்த பிறப்பையெல்லாம் துhக்கி வீச நானென்ன கல் நெஞ்சுக்காரியா?”
பார்த்துக் கொண்டிருந்த என் தம்பி பிரசாத் என் அருகில் வந்தான். 'பாருண்ணே…உன்னோட சகோதரிகள் எப்படித் துடிக்கறாங்கன்னு பாருண்ணே……ஏண்ணா இப்படியொரு காரியம் பண்ணினே?…உண்மை உறவுகள்…உடன் பிறப்புக்கள் நாங்க உயிரோட இருக்கையில் உன்னோட கல்யாண பத்திரிக்கையில் எவளோட பேரையோ போட்டு 'மணமகனின் மூத்த தங்கை”ன்னு போட்டிருக்கே…அதே மாதிரி வேற யாரோவோட பேரைப் போட்டு 'மணமகனின் இளைய தங்கை”ன்னு போட்டிருககே…போதாக்கொறைக்கு எவனோ ஆல்பர்ட்டா…ஆப்ரஹாமா…அவனோட பேரைப் போட்டு 'மணமகனின் தம்பி”ன்னு போட்டிருக்கே…என்னாச்சு உனக்கு?…நாங்கெல்லாம் என்ன செத்தா போயிட்டோம்?…உசுரோடதானே இருக்கோம்?…இப்படி ஒரேயடியா தூக்கி எறியற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்…சொல்லுண்ணே ”
என் தோளைத் தொட்டு ஆவேசமாய் அவன் உலுக்க 'விருட்”டெனத் திரும்பி அவர்கள் மூவரையும் எரித்து விடுவது போல் பார்த்தேன்.
'டேய்…பிரசாத்…நீங்கெல்லாம் எந்தத் தப்பும் பண்ணலைடா…மொத்தத் தப்பும் என்னோடதுதாண்டா……ஆமாம்…என்னோட முதல் தப்பு…ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணத்தை முடிச்சதுக்கப்புறம்தான் என்னோட கல்யாணத்தைப் பற்றியே நினைப்பேன்னு ஒரு வெட்டி வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன் பாரு…அதாண்டா என்னோட முதல் தப்பு…'
அழுது கொண்டிருந்த மூத்த தங்கை தன்னுடைய பம்மாத்து அழுகையை நிறுத்தி விட்டு என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அதே மாதிரி…நீ உன் கூட வேலை பார்க்கற ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு வந்து 'அண்ணே…அவ வீட்டுல உடனே கல்யாணம் பண்ணணும்கறாங்க!…உங்க அண்ணனுக்கு முடிஞ்சப்புறம்தான் உனக்குன்னா அது வரைக்கும் எங்களால காத்திட்டிருக்க முடியாது…எங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறோம்!ன்னு சொல்றாங்கண்ணே….என்னால அவ இல்லாம உசுரோடவே இருக்க முடியாது” ன்னு கதறினியே….அப்ப உன் மேல இரக்கப்பட்டு…'சரிடா…என் கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்…மொதல்ல உன் கல்யாணத்தை முடிக்கலாம்” ன்னு சொல்லி உங்க ரெண்டு பேரோட காதலையம் ஜெயிக்க வெச்சேன் பாரு!…அதாண்டா..அதாண்டா..என்னோட ரெண்டாவது தப்பு”
'அதுக்காக இப்படியா செய்வாங்க?” சின்னத்தங்கை சமயம் பார்த்து நுழைந்தாள்.
'அய்யோ…அதுக்காக இப்படிச் செய்யலை…அதுக்குப் பிறகு நீங்கெல்லாம் நடந்துக்கிட்டீங்க பாரு…அந்த முறைக்காகத்தான் இது”
;
'எப்படி நடந்துக்கிட்டோம்?” வெகு சாதாரணமாகக் கேட்டான் பிரசாத்.
'ஏண்டா…மூத்தவனான நான்…என்னோட கல்யாணத்தைக் கூட தள்ளிப் போட்டுட்டு…அதுக்காக வெச்சிருந்த பணத்தை வெச்சு உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்….உன்னோட காதலுக்காக என்னோட இளமையை…என்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்சேன்…பதிலுக்கு நீ என்னடா செஞ்சே?…அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணின கையோட பெங்களுருக்குப் போய் செட்டிலாவன்தான்…இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கலை…'அட..நமக்காகத்தானே அண்ணன் தன்னோட கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு…மூத்தவரான அவருக்கு ஏற்கனவே வயசு மீறிப் போயிடுச்சு…அதனால நாம்தான் அவருக்கு ஒரு கல்யாணம் நடக்க ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்”னு நெனச்சியாடா நீ?..அன்னிக்குப் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போனவன்…நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்கியே…இடையில் ஒரு தடவ இந்த அண்ணன் உசுரோட இருக்காரா?…இல்லையா?…ன்னு…வந்து பார்க்கத் தோணலையாடா உனக்கு?..அட..ஒரு போன் கால்?…ச்சை…நன்றி கெட்ட ஜென்மம்”
அவன் வாயடைத்துப் போய் நிற்க சகோதரிகள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்தனர்.
'அதனால..?..அதனால உறவு…பாசம்…சொந்தம்…பந்தம் எதுவும் இல்லைன்னு ஆய்டுமா?”
'ச்சே!….உறவையும்…பாசத்தையும் பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க…உங்க ரெண்டு பேருக்குமே அந்தத் தகுதி இல்லை.”
'அப்படி என்ன தகுதி இல்லாமப் போச்சு எங்களுக்கு?”
'உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாணத்தைப் பத்தியே நினைப்பேன்”கற ஒரு வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் நான் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன்…அதே மாதிரி முடிச்சேன்…நீங்களும் கல்யாணம் முடிஞ்ச கையோடு போனவங்கதான்…அதுக்கப்புறம் ஒரே தடவை…அதுவும் அம்மா செத்துப் போனப்ப வந்தீங்க…போனீங்க……அத்தோட சரி…'அண்ணனும் தம்பியும் அம்மா இல்லாம எப்படி இருப்பானுக?…எங்க சாப்பிடுவானுக?…அவனுகளுக்கு யாரு சமைச்சுப் போடுவாங்க?”ன்னு ஒரு நாளாவது நெனச்சுப் பார்த்திருப்பீங்களாடி?…நமக்காகத்தானே அரைக் கெழவனாகற வரைக்கும் பிரம்மச்சாரியா வாழ்ந்தாரு…அதனால அவருக்கொரு கல்யாணத்தை நாம..நம்ம புருஷனுகளோட சேர்ந்து ஏற்பாடு செய்வோம்னு ஏண்டி தோணலை உங்களுக்கு?”
'அது…வந்து…நாங்க…எங்க வீட்டுக்காரர்…” மூத்த தங்கை திக்கித் திணறி சமாளிக்க முயல,
'ஒரு அண்ணனா…அப்பா ஸ்தானத்துல இருந்து நான் செஞ்ச என்னோட கடமைகளுக்கு உங்க கிட்டயிருந்து பிரதியுபகாரத்தை நான் எதிர்பார்க்க கூடாதுதான்…ஆனா நான் எதிர்பார்த்தது காசு பணத்தையோ….சொத்து சுகத்தையோ அல்ல….அன்பு…பாசம்…பரிவு….இதைத்தான்!…ப்ச்…ஏமாத்திட்டீங்க…ஆனா ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கிறவங்க…எந்தவிதத்திலும் எனக்கு உறவு இல்லாதவங்க…நாப்பத்தாறு வயசாகியும் பிரம்மச்சாரியா…தனிக்கட்டையா கஷ்டப்படற என் மேல் இரக்கப்பட்டு…எனக்கொரு வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும்கற நல்லெண்ணத்துல தாங்களே களமிறங்கி…எனக்காக விளம்பரம் குடுத்து….வந்த வரன்களை ஆராயந்து…அதுல ஒண்ணை தோ;ந்தெடுத்து…பேசி…முடிச்சு…முகூர்த்தத்துக்கு கோயில் ஏற்பாடு பண்ணி….ரிசப்ஷனுக்கு ஹால் புக் பண்ணி…” முடிக்க இயலாமல் என் குரல் தழுதழுத்தது.
'எங்களுக்கும் தெரிவிச்சிருந்தா நாங்களும் வந்து…” இளைய தங்கை ஏதோ சொல்ல வர,
'வந்து?…என்ன பண்ணியிருப்பீங்க?…'எங்க ரெண்டு பேருக்கும் பட்டுப் பொடவை எடுத்துக் குடு….மாப்பிள்ளைகளுக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை வேணும்…கொழந்தைக்கு துணி மணி எடு”…ன்னு ஆரம்பிச்சு…குட்டையைக் குழப்பி…இவங்க கூடவெல்லாம் சண்டை போட்டுட்டு…கல்யாணத்தை நிறுத்திட்டுப் போயிருப்பீங்க…”
அவள் மௌனியானாள்.
'என் பத்திரிக்கைல 'மூத்த தங்கை விஜயா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் தன்னோட செலவுல எனக்காக விளம்பரம் குடுத்த எங்க ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்…'இளைய தங்கை சவிதா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் எனக்காக பொண்ணு வீட்டுக்காரங்களைச் சந்திச்சுப் பேசி..தேதி குறிச்ச எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரெட்டர்!.அப்புறம்…'தம்பி சுகுமார்”ன்னு போட்டிருக்கேனே,…அவன்தான் முகூர்த்த ஏற்பாடு…ரிசப்ஷன் ஏற்பாடெல்லாம்…செலவு கூட அவனோடதுதான்…இப்பச் சொல்லுங்க…இவங்கெல்லாம் எனக்கு உறவா?…இல்லை நீங்கெல்லாம் உறவா?”
உண்மை உறவுகள் ஊமையாய் நின்றன.
'அதனால…எதையும் மனசுல வெச்சுக்காம கல்யாணத்துக்கு குடும்ப சகிதம் வந்திட்டுப் போங்க”
சில நிமிட அமைதிக்குப்பின் அவர்கள் மூவரும் கோரஸாய் 'நாங்க அந்த மூணு பேரையும் நேர்ல பார்ககணும்” என்று கேட்க,
'அய்யய்யோ…எதுக்கு அவங்க கூட சண்டை போடவா?” துள்ளினேன் நான்.
'இல்லை….”
'பிறகு,”
'கையெடுத்துக் கும்பிட…” சொல்லிவிட்டுக் கண் கலங்கிய அவர்களை தோளோடு அணைத்துக் கொண்டேன்.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்.
(சிறுகதை)
மாலை 6.30.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நான் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போது பக்கத்து வீட்டு பத்மநாபன் என்னை நிறுத்தினார்.
'ஹலோ மிஸ்டர் சதாசிவம்…ஒரு நிமிஷம்”
நின்றேன்.
என்னை நெருங்கி வந்தவர் 'உங்களோட சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும்…உங்க பிரதரும் வந்திருந்தாங்க”
'ஓ…அப்படியா?..எப்ப…எத்தனை மணிக்கு,” அசுவாரஸியமாய்க் கேட்டேன்.
'ம்ம்…அஞ்சு மணியிருக்கும்….பட்..அவங்க யாருக்குமே முகமும்…பேச்சும் சரியாகவே இல்லை…ஒரு மாதிரி…கோபமா இருந்த மாதிரித் தெரியுது….ஏன் மிஸ்டர் சதாசிவம்…ஏதாச்சும் பிரச்சினையா?”
நான் பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்க,
'இட்ஸ் ஓ.கே.…அது உங்க குடும்ப விவகாரம்…ஸாரி…ஸாரி…” சொல்லியபடியே அவர் நகர நான் பூட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
எனக்குத் தெரியும் அவர்கள் வருவார்கள்…அதுவும் கடுங்கோபத்தோடு வருவார்கள்! என்று ஏனென்றால் நேற்றைக்கு முன் தினம் நான் அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்த என் திருமண பத்திரிக்கை அவர்களை நிச்சயம் ஆத்திரமூட்டியிருக்கும்…பட்…அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை…என் மனத்திற்கு சரி என்று பட்டதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
இரவு எட்டு மணி வாக்கில் காலிங் பெல் ஓசையெழுப்ப சென்று கதவைத் திறந்தேன்.
என் இரண்டு தங்கைகளும் ஒரே தம்பியும் உள்ளே நுழைந்தார்கள்.
வந்ததும் வராததுமாய் மூத்தவள் அழ ஆரம்பித்தாள். இளையவள் அவளுக்கு ஆறுதல் கூறும் விதத்தில் என்னைத் தாக்கினாள்.
'அக்கா..நீ அழாதேக்கா…நான் இருக்கேனக்கா உனக்கு…யாரோ ஒருத்தர் உன்னைய மறந்து ஒதுக்கிட்டதால நீ தனிமரமாய்டுவியா,….அப்படி ஆக விட்டுடுவேனா நான்?…கூடப் பிறந்த பிறப்பையெல்லாம் துhக்கி வீச நானென்ன கல் நெஞ்சுக்காரியா?”
பார்த்துக் கொண்டிருந்த என் தம்பி பிரசாத் என் அருகில் வந்தான். 'பாருண்ணே…உன்னோட சகோதரிகள் எப்படித் துடிக்கறாங்கன்னு பாருண்ணே……ஏண்ணா இப்படியொரு காரியம் பண்ணினே?…உண்மை உறவுகள்…உடன் பிறப்புக்கள் நாங்க உயிரோட இருக்கையில் உன்னோட கல்யாண பத்திரிக்கையில் எவளோட பேரையோ போட்டு 'மணமகனின் மூத்த தங்கை”ன்னு போட்டிருக்கே…அதே மாதிரி வேற யாரோவோட பேரைப் போட்டு 'மணமகனின் இளைய தங்கை”ன்னு போட்டிருககே…போதாக்கொறைக்கு எவனோ ஆல்பர்ட்டா…ஆப்ரஹாமா…அவனோட பேரைப் போட்டு 'மணமகனின் தம்பி”ன்னு போட்டிருக்கே…என்னாச்சு உனக்கு?…நாங்கெல்லாம் என்ன செத்தா போயிட்டோம்?…உசுரோடதானே இருக்கோம்?…இப்படி ஒரேயடியா தூக்கி எறியற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்…சொல்லுண்ணே ”
என் தோளைத் தொட்டு ஆவேசமாய் அவன் உலுக்க 'விருட்”டெனத் திரும்பி அவர்கள் மூவரையும் எரித்து விடுவது போல் பார்த்தேன்.
'டேய்…பிரசாத்…நீங்கெல்லாம் எந்தத் தப்பும் பண்ணலைடா…மொத்தத் தப்பும் என்னோடதுதாண்டா……ஆமாம்…என்னோட முதல் தப்பு…ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணத்தை முடிச்சதுக்கப்புறம்தான் என்னோட கல்யாணத்தைப் பற்றியே நினைப்பேன்னு ஒரு வெட்டி வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன் பாரு…அதாண்டா என்னோட முதல் தப்பு…'
அழுது கொண்டிருந்த மூத்த தங்கை தன்னுடைய பம்மாத்து அழுகையை நிறுத்தி விட்டு என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அதே மாதிரி…நீ உன் கூட வேலை பார்க்கற ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு வந்து 'அண்ணே…அவ வீட்டுல உடனே கல்யாணம் பண்ணணும்கறாங்க!…உங்க அண்ணனுக்கு முடிஞ்சப்புறம்தான் உனக்குன்னா அது வரைக்கும் எங்களால காத்திட்டிருக்க முடியாது…எங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறோம்!ன்னு சொல்றாங்கண்ணே….என்னால அவ இல்லாம உசுரோடவே இருக்க முடியாது” ன்னு கதறினியே….அப்ப உன் மேல இரக்கப்பட்டு…'சரிடா…என் கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்…மொதல்ல உன் கல்யாணத்தை முடிக்கலாம்” ன்னு சொல்லி உங்க ரெண்டு பேரோட காதலையம் ஜெயிக்க வெச்சேன் பாரு!…அதாண்டா..அதாண்டா..என்னோட ரெண்டாவது தப்பு”
'அதுக்காக இப்படியா செய்வாங்க?” சின்னத்தங்கை சமயம் பார்த்து நுழைந்தாள்.
'அய்யோ…அதுக்காக இப்படிச் செய்யலை…அதுக்குப் பிறகு நீங்கெல்லாம் நடந்துக்கிட்டீங்க பாரு…அந்த முறைக்காகத்தான் இது”
;
'எப்படி நடந்துக்கிட்டோம்?” வெகு சாதாரணமாகக் கேட்டான் பிரசாத்.
'ஏண்டா…மூத்தவனான நான்…என்னோட கல்யாணத்தைக் கூட தள்ளிப் போட்டுட்டு…அதுக்காக வெச்சிருந்த பணத்தை வெச்சு உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்….உன்னோட காதலுக்காக என்னோட இளமையை…என்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்சேன்…பதிலுக்கு நீ என்னடா செஞ்சே?…அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணின கையோட பெங்களுருக்குப் போய் செட்டிலாவன்தான்…இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கலை…'அட..நமக்காகத்தானே அண்ணன் தன்னோட கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு…மூத்தவரான அவருக்கு ஏற்கனவே வயசு மீறிப் போயிடுச்சு…அதனால நாம்தான் அவருக்கு ஒரு கல்யாணம் நடக்க ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்”னு நெனச்சியாடா நீ?..அன்னிக்குப் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போனவன்…நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்கியே…இடையில் ஒரு தடவ இந்த அண்ணன் உசுரோட இருக்காரா?…இல்லையா?…ன்னு…வந்து பார்க்கத் தோணலையாடா உனக்கு?..அட..ஒரு போன் கால்?…ச்சை…நன்றி கெட்ட ஜென்மம்”
அவன் வாயடைத்துப் போய் நிற்க சகோதரிகள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்தனர்.
'அதனால..?..அதனால உறவு…பாசம்…சொந்தம்…பந்தம் எதுவும் இல்லைன்னு ஆய்டுமா?”
'ச்சே!….உறவையும்…பாசத்தையும் பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க…உங்க ரெண்டு பேருக்குமே அந்தத் தகுதி இல்லை.”
'அப்படி என்ன தகுதி இல்லாமப் போச்சு எங்களுக்கு?”
'உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாணத்தைப் பத்தியே நினைப்பேன்”கற ஒரு வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் நான் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன்…அதே மாதிரி முடிச்சேன்…நீங்களும் கல்யாணம் முடிஞ்ச கையோடு போனவங்கதான்…அதுக்கப்புறம் ஒரே தடவை…அதுவும் அம்மா செத்துப் போனப்ப வந்தீங்க…போனீங்க……அத்தோட சரி…'அண்ணனும் தம்பியும் அம்மா இல்லாம எப்படி இருப்பானுக?…எங்க சாப்பிடுவானுக?…அவனுகளுக்கு யாரு சமைச்சுப் போடுவாங்க?”ன்னு ஒரு நாளாவது நெனச்சுப் பார்த்திருப்பீங்களாடி?…நமக்காகத்தானே அரைக் கெழவனாகற வரைக்கும் பிரம்மச்சாரியா வாழ்ந்தாரு…அதனால அவருக்கொரு கல்யாணத்தை நாம..நம்ம புருஷனுகளோட சேர்ந்து ஏற்பாடு செய்வோம்னு ஏண்டி தோணலை உங்களுக்கு?”
'அது…வந்து…நாங்க…எங்க வீட்டுக்காரர்…” மூத்த தங்கை திக்கித் திணறி சமாளிக்க முயல,
'ஒரு அண்ணனா…அப்பா ஸ்தானத்துல இருந்து நான் செஞ்ச என்னோட கடமைகளுக்கு உங்க கிட்டயிருந்து பிரதியுபகாரத்தை நான் எதிர்பார்க்க கூடாதுதான்…ஆனா நான் எதிர்பார்த்தது காசு பணத்தையோ….சொத்து சுகத்தையோ அல்ல….அன்பு…பாசம்…பரிவு….இதைத்தான்!…ப்ச்…ஏமாத்திட்டீங்க…ஆனா ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கிறவங்க…எந்தவிதத்திலும் எனக்கு உறவு இல்லாதவங்க…நாப்பத்தாறு வயசாகியும் பிரம்மச்சாரியா…தனிக்கட்டையா கஷ்டப்படற என் மேல் இரக்கப்பட்டு…எனக்கொரு வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும்கற நல்லெண்ணத்துல தாங்களே களமிறங்கி…எனக்காக விளம்பரம் குடுத்து….வந்த வரன்களை ஆராயந்து…அதுல ஒண்ணை தோ;ந்தெடுத்து…பேசி…முடிச்சு…முகூர்த்தத்துக்கு கோயில் ஏற்பாடு பண்ணி….ரிசப்ஷனுக்கு ஹால் புக் பண்ணி…” முடிக்க இயலாமல் என் குரல் தழுதழுத்தது.
'எங்களுக்கும் தெரிவிச்சிருந்தா நாங்களும் வந்து…” இளைய தங்கை ஏதோ சொல்ல வர,
'வந்து?…என்ன பண்ணியிருப்பீங்க?…'எங்க ரெண்டு பேருக்கும் பட்டுப் பொடவை எடுத்துக் குடு….மாப்பிள்ளைகளுக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை வேணும்…கொழந்தைக்கு துணி மணி எடு”…ன்னு ஆரம்பிச்சு…குட்டையைக் குழப்பி…இவங்க கூடவெல்லாம் சண்டை போட்டுட்டு…கல்யாணத்தை நிறுத்திட்டுப் போயிருப்பீங்க…”
அவள் மௌனியானாள்.
'என் பத்திரிக்கைல 'மூத்த தங்கை விஜயா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் தன்னோட செலவுல எனக்காக விளம்பரம் குடுத்த எங்க ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்…'இளைய தங்கை சவிதா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் எனக்காக பொண்ணு வீட்டுக்காரங்களைச் சந்திச்சுப் பேசி..தேதி குறிச்ச எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரெட்டர்!.அப்புறம்…'தம்பி சுகுமார்”ன்னு போட்டிருக்கேனே,…அவன்தான் முகூர்த்த ஏற்பாடு…ரிசப்ஷன் ஏற்பாடெல்லாம்…செலவு கூட அவனோடதுதான்…இப்பச் சொல்லுங்க…இவங்கெல்லாம் எனக்கு உறவா?…இல்லை நீங்கெல்லாம் உறவா?”
உண்மை உறவுகள் ஊமையாய் நின்றன.
'அதனால…எதையும் மனசுல வெச்சுக்காம கல்யாணத்துக்கு குடும்ப சகிதம் வந்திட்டுப் போங்க”
சில நிமிட அமைதிக்குப்பின் அவர்கள் மூவரும் கோரஸாய் 'நாங்க அந்த மூணு பேரையும் நேர்ல பார்ககணும்” என்று கேட்க,
'அய்யய்யோ…எதுக்கு அவங்க கூட சண்டை போடவா?” துள்ளினேன் நான்.
'இல்லை….”
'பிறகு,”
'கையெடுத்துக் கும்பிட…” சொல்லிவிட்டுக் கண் கலங்கிய அவர்களை தோளோடு அணைத்துக் கொண்டேன்.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்.
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
உறவுகளுக்கு பணம் மட்டும்தான் தேவை......உண்மை....உண்மை....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கதை அருமை.தலைப்பு அதைவிட அருமை
நல்ல கதை ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையான கதை
அகன்யா
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆறிலிருந்து அறுபது வரையிலிருந்து சிறிது மாறுபட்ட, இக்காலத்தை பிரதிபலிக்கும் நல்ல கதை. பகிர்வுக்கு நன்றிகள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|