புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
32 Posts - 42%
heezulia
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
2 Posts - 3%
prajai
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
1 Post - 1%
jothi64
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
398 Posts - 49%
heezulia
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
26 Posts - 3%
prajai
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வின் நிறைவு எங்கே?


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 3:35 pm

வாழ்வின் நிறைவு எங்கே?


இந்த உலகத்தில் பிறந்து... வளர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவர் உடலும் மாபெரும் பொக்கிஷங்கள், நாம் உயிர் வாழவும், வாழந்த பின்பு அடுத்தவர்களுக்காக விட்டுச்செல்லவும் விலைமதிப்பற்ற உறுப்புகள் ஒவ்வொரு மனிதனின் உடம்பிற்குள்ளும் குவிந்திருக்கின்றன. அந்த அற்புதத்தை புரிந்துகொள்ளும்போது அதிசயித்து போகிறோம்.

தாயின் கருப்பைக்குள் இடம் பிடித்த மூன்று மாதத்திற்குள்ளே புதிய உடலுக்கு தேவையான அத்தனை உறுப்புகளும் படைக்கப்பட்டுவிடுகின்றன. பிறந்த பின்பு வளர்ச்சி மட்டும்தான். புதிதாக எந்த உறுப்பும் தோன்றுவதில்லை.

உறுப்புகள், உடலை இயக்குகின்றன. வாழும் காலம் வரை அவனது உறுப்புகளின் செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குள்ளே செய்யப்பட்டிருக்கும் மாற்று ஏற்பாடாக சில இரண்டாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று பாதிக்கப்பட்டாலும் இன்னொன்று இயங்கி, அவனை தற்காத்துக்கொள்ளும். எல்லா உறுப்புகளுக்கும் நல்லபடியாக செயல்பட்டாலும் முதுமையானால் மரணம் நிகழ்ந்துவிடும். இது தவிர்க்க முடியாத, தள்ளிவைக்க முடியாத இயற்கையின் நியதி!

ஆனால் உறுப்புகள் எல்லாம் சிறப்பாக இயங்கும் நிலையில், முதுமை வரும் முன்பே விபத்து, பேரதிர்ச்சி போன்றவைகளால் மூளைச்சாவு ஏற்படுவதுண்டு. முழுமையான கோமாநிலை, வலியை உணரமுடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருப்பது போன்றவைகளை மூளைச்சாவு என்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த சிகிச்சை கொடுத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. செயற்கை சுவாசத்தால் அவர் உயிரை மணிக் கணக்கிலோ சில நாள் கணக்கிலோதான் பிடித்துவைக்க முடியும்.

‘அவர் உயிர் அவ்வளவுதான்’ என்கிற போது, பலருக்கும் ஒரு தவிப்பு உரு வாகும். ‘மூளைச் சாவால் அவர் உயிர் முடிந்து போகும் போது, அவரு க்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான உறுப்புகளையும் சாகடித்து மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரை யாக்கத்தான் வேண்டுமோ? இல்லை!

இயற்கை அதற்கும் சிறப்பான ஏற்பாட்டை உடலில் உருவாக்கி இருக்கிறது. ஒருவர் இறப்பது உறுதியாகி மூளைச் சாவில் இருக்கும்போது அவரிடம் நல்ல நிலையில் இருக்கும் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி வாழ்வளிக்கலாம். ஒரு உயிர் பிரியும் போது இறக்கும் தருவாயில் உள்ள சில உயிர்களை அதனால் காப்பாற்ற முடியும்.

அப்படி எந்தெந்த உறுப்புகளை பயன்படுத்தலாம்? இதயம் ஒன்று இதய வால்வுகள் நான்கு, நுரையீரல் இரண்டு, கல்லீரல் ஒன்று, பான்கிரியாஸ் ஒன்று கிட்னி இரண்டு, கண் இரண்டு.... போன்றவைகளை எல்லாம் மனிதன் மற்றவர்களுக்கு வழங்கலாம். அதில் கண்களில் மட்டும் இரத்த ஓட்டம் போன்ற எதுவும் இல்லாததால் இறந்த 6 மணி நேரம் வரை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற உறுப் புகளை மனிதன் மூளைச்சாவு என்ற நிலையில் இருக்கும் போது செயற்கை சுவாச நிலையிலே எடுக்க வேண்டும். சருமம், எலும்புகள், தசையை இழுக்கும் நரம்புகளையும் ஒரு உடலில் இருந்து எடுத்து இன்னும் சில உடல்களுக்கு பயன்படுத்தலாம். ஆக மனித உறுப்புகளில் பல மரணிப்பதில்லை. மற்றவர்களின் உடலில் வாழும் தன்மை கொண்டது. அதனால் இனி ஒருபோதும், ‘மரம் விழுந்தால் விறகாகும். மனிதன் இறந்தால் என்ன பலன்?’ என்று கேட்காதீர்கள்.

ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்பதை டாக்டர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? டெதஸ்கோப்பை வைத்து பார்த்தால், இதய துடிப்பு நின்று போயிருக்கும். கையால் நாடித் துடிப்பை உணர்ந்தால் அதில் துடிப்பு இருக்காது மூச்சும் முடிவுக்கு வந்திருக்கும். அவரின் கண்ணைத் திறந்து கருவிழி மையப் பகுதியில் டார்ச் லைட்டால் அடித்தால், உயிர் இருந்தால் அது கூச்சத்தில் அசையும், பெரிதாகி, அசைவற்று போயிருந்தால் அவர் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள்.

மூளைச்சாவு ஏற்பட்டிருப்ப வர்கள் படிப்படியாக முழு மையான மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பார். அப்போது இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்டமும் இருந்துகொண்டிருக்கும். நாடித் துடிப்பும் இருக்கும். கிட்னியும் இயங்கிக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் செயற்கை சுவாச நிலையிலே இயங்கும். செயற்கை சுவாச கருவியை அகற்றியதும், அதிக பட்சம் 15 நிமிடத்திற்குள் அவர் இறந்து போய்விடுவார். அத்தனை உறுப்புகளும் செயலிழந்து போகும்.

ஒருவர் மூளைச் சாவு அடைந்திருப்பதை டாக்டர்கள் குழு பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து முடிவு செய்கிறது. பின்பு உறவினர்களுக்கு கவுன்சலிங் செய்வார்கள். ‘இனியும் காத்திருப்பதில் எந்த பலனும் இல்லை’ என்பதை அவர்கள் உணர்ந்த பின்பு, உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வருகிறார்கள்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை பெற்றாலும் மரணத்திடம் மண்டியிடத் தான் வேண்டும். மரணம் தோல்வி அல்ல, வாழ்க்கையின் நிறைவு.

மனிதர்கள் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும். சிலருடைய மரணத்துக்கு பிறகுதான் அவர்கள் ஏதற்காக பிறந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல. தற்காலிக பயணிகளாக இங்கே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடல் எங்கிருந்து வந்தது என்று தெரிகிறது. ஆனால் உயிர் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புரியவே இல்லை.

புகழ், பெருமை, பணம் என்று எவ்வளவோ சம்பாதிக்கிறோம். அத்தனையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மரணமடைகிறோம். பிறப்பின் இரகசியம் போன்றதுதான், இறப்பின் இரகசியமும் உடல் போகும் இடம் தெரிகிறது. உயிர் பிரிந்து போகும் இடம் புரியவதில்லை.

மனிதனாகப் பிறப்பெடுத்து இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கு செய்யும் மிகப்பெரிய கைமாறு தானம் செய்வது!

சம்பாதித்த பொருளால் செய்யும் தானங்களை விட உயர்ந்தது. வாழ்ந்த உடலால் செய்யும் ‘உறுப்புகள் தானம்’. இதுவே உயிரான தானம்!

குடும்பத்திற்காக பொன். பொருளை விட்டுச் செல்லும் மனிதர் மரணத்திற்கு பின்பு வீட்டில் மாலை போட்ட போட்டோ ஆகிறார். வெளியே அலங்கார கல்லறை ஆகிறார். சமூகத்தில் நான்கு நாட்களுக்கு பேச்சாகிறார். அவ்வளவுதான்! அவரே சக மனிதனுக்காக உடல் உறுப்புகளை கொடுத்துச் சென்றால் பிரியும் உயிருக்கு பெருமை சேர்க்கிறார். காலத்தால் வாழ்கிறார். அவரது ஆன்மா உயர்வடைகிறது... ஆனந்தம் அடைகிறது....!




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக