புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_m10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10 
30 Posts - 88%
heezulia
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_m10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_m10தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 17, 2009 12:44 pm

http://www.meenagam.org/?p=13529
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா?


எழுதியவர்கனி on October 16, 2009
பிரிவு: செய்திகள்



தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Dmkதமிழக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? என்ற தலைப்பில்
இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை
முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் இன்னும் 15
நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று
சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக தமிழக முதல்வர்
கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் இன்றே (வியாழக்கிழமை)
தொடங்கும் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர்
கூறியிருக்கின்றார்.

அத்துடன், எஞ்சியிருப்பவர்களை
படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்துள்ளதாகவும்,
இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர்
கூறியிருக்கின்றார்.முன்னதாக, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்திய
மத்திய அரசினை நேரில் சந்தித்து இலங்கைக்கு குழுவொன்றை அனுப்பி வைக்க
வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது, சிறீலங்கா ஜனாதிபதி
மகிந்த ராஜபச்சவே குழு ஒன்றை அனுப்பி, இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து
கொள்ளுமாறு தனக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் தான்
செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும், அதன்
பிறகு தி.மு.க, கொங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள்
டில்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்ததாகத்
தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, மகிந்த ராஜபக்சவின் கடிதத்துக்கு
இணங்கவே ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்
கொண்டதாகவும். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து தன்னை
சந்தித்தார். இருவரும் பேசி, 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை
அனுப்ப முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில், தி.மு.க.,
கொங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளின் சார்பில் அந்தக்
கட்சிகளின் செலவிலேயே அந்தக் குழுவை அனுப்புவதென்று தீர்மானித்து அதற்கு
சிறீலங்கா அரசின் ஒப்புதலைப் பெற்று பத்தாம் திகதியன்று அந்தக் குழு
இலங்கை சென்றது என்றும் கூறினார்.

வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் படும்
அவலத்தை அறிந்து, தமிழக அரசே இலங்கைக்கு குழுவொன்றை அனுப்பி நிலைமைகளை
நேரில் அறிந்துகொள்வதற்கு முயற்சிப்பதாக கருதப்பட்டது. அவ்வாறான ஒரு
தோற்றத்துடனுமே தமிழக – மத்திய அரசு பிரதிநிதிகளுக்கு இடையிலான
சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், மகிந்த அரசு
கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே குழுவினர் அனுப்பப்பட்டதாக தமிழக முதல்வர்
தற்போது தெரிவித்துள்ள கருத்தானது, பெரும் அதிர்ச்சியையும்
சந்தேககங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பல்வேறு சர்வதேச நாடுகளும்,
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக்கொண்டபோதும் வன்னி
இராணுவச்சிறை முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு பல்வேறு
சாக்குப்போக்குகளைச் சொல்லி மறுத்தவரும் சிறீலங்கா அரசு, தமிழக நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பயணத்திற்கு செவிமடுத்து அங்கிருக்கும் மக்களில் 58
ஆயிரம் பேரை விடுவிப்பதாகச் சொல்லியிருப்பதானது தமிழக அரசியல் தலைவர்களை
ஏமாற்றுவதற்காகவா அல்லது எல்லலோரும் சேர்ந்து நடத்தும் ஒரு திட்டமிட்ட
நாடகமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அம் முகாமைப் பார்வையிட்டு திரும்பிய
ஐ.நா. பொதுச் செயலர் உட்பட உலகின் பல நாடுகளில் மனித உரிமைவாhதிகளும்
தங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளியிட்டு வரும் நிலையில், நாடு
திரும்பியதன் பின்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கிரஸ்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, இங்குள்ள ஊடகங்கள்
சொல்வதுபோல் அங்குள்ள முகாம்கள் மோசமாக இல்லை. மக்கள் அவர்களை தங்களின்
இடங்களுக்கு அனுப்பச் சொல்லியே கேட்கின்றனர்.

பெரிதாகக் குறையொன்றும் இல்லை. அவர்களை
அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேலைகள் நடைபெறுகிறது என்று கூறி அந்த
மக்களின் அவலத்தை மறைத்து பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியிருக்கின்றார்.சிறீலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்
வரிச்சலுகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நடத்திய பயணம் இதுவென கூறப்படுகின்றது.

அகதிகள் தொடர்பாக சிறீலங்காவிற்கு நல்ல
பெயரை ஏற்படுத்தினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச்சலுகையை
பெறமுடியும் என்பதனாலேயே இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்
தகவல்கள் வெளிவருகின்றன. எனினும், அடுத்து வரும் 15 நாட்களுக்குள் 58
ஆயிரம் மக்களை சிறீலங்கா அரசு மீளக் குடியேற்றுவது என்பது சாத்தியப்படாத
ஒரு விடயம் எனத் தெரிவிக்கும் அரசியல் அவதானிகள், இது தமிழக அரசினை
ஏமாற்றும் அவர்களை கோமாளிகளாக்கும் சிறீலங்கா அரசின் ஓர் உத்தரவாதம் என்று
குறிப்பிடுகின்றனர்.

வன்னியில் கடுமையான போர்
இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை அடுத்து
தமிழக அரசியல் தலைவர்களை சிறீலங்காவின் அப்போதைய இராணுவத் தளபதி சரத்
பொன்சேகா கோமாளிகள் என்று வர்ணித்திருந்தார். தற்போது உண்மையாகவே தமிழக
அரசியல் தலைவர்களை சிறீலங்கா கோமாளிகளாக ஆக்கப்போகின்றதா என்பது இன்னும்
14 நாட்களில் தெரியவந்துவிடும் எனவும் அந்த அரசியல் அவதானிகள்
சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி – ஈழமுரசு

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 12:46 pm

இந்த கேப்மாரிகள் தமிழர்களைதான் கோமாளி ஆக்குகின்றனர்...!



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 17, 2009 12:48 pm

ஆக்கப்படவில்லை, கோமாளிகள்தான்
ஏற்கனவே பொன்சேக்கா சொல்லிவிட்டானே அக்கா, அவன் சொன்னது 100% உண்மைதான்.



தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 17, 2009 12:52 pm

kirupairajah wrote:ஆக்கப்படவில்லை, கோமாளிகள்தான்
ஏற்கனவே பொன்சேக்கா சொல்லிவிட்டானே அக்கா, அவன் சொன்னது 100% உண்மைதான்.

மிக சரி கிருபை , அவன் அப்படி சொன்னபோது எனக்கும் கூட கோபம் வந்தது , ஆனால் பிறகு தான் தெரிந்தது அது முற்றிலும் உண்மை என்று

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 17, 2009 12:54 pm

எமது காலம், எங்களை பார்த்து, பயப்பட்டவனுகள் எல்லாம், இப்ப ஏளனமாக பார்கிறார்கள்.



தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 17, 2009 12:56 pm

kirupairajah wrote:எமது காலம், எங்களை பார்த்து, பயப்பட்டவனுகள் எல்லாம், இப்ப ஏளனமாக பார்கிறார்கள்.

ஆமாம் , இது நமக்கு போதாத காலம் தான் , ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே யாருக்குமே நிரந்தரம் இல்லை தானே , நமக்கும் அந்த காலம் பதில் சொல்லிதானே ஆகவேண்டும் கிருபை

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 17, 2009 12:57 pm

வாழ்க்கை சக்கரம் விரைவில் மாறும் கிருபை
நம்பிக்கையுடன் இருப்போம்

மகிழ்ச்சியான ,அன்பான வாழ்க்கை விரைவில் பிறக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? 154550

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 17, 2009 12:59 pm

ஆம், அதுக்குத்தானே நாமும் காத்துக்கொண்டிருக்கிறோம் ராஜா.



தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 17, 2009 12:59 pm

வணக்கம்
வீரமற்று விழவில்லை, துரோகத்தால் வீழ்த்தப் பட்டோம்

வேதனையுடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 17, 2009 1:00 pm

உண்மைதான் அக்கா.



தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக ஆக்கப்படுவார்களா? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக