புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
21 Posts - 70%
heezulia
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
1 Post - 3%
viyasan
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
213 Posts - 42%
heezulia
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்பென்றால் அம்மா!!! Poll_c10அன்பென்றால் அம்மா!!! Poll_m10அன்பென்றால் அம்மா!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பென்றால் அம்மா!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 21, 2013 9:46 pm

அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும் ஒரு விவரனத்துள் அடைக்க இயலாத ஒரே விஷயம் உன் அன்புதான் அம்மா .
-
என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான் . ஒ அவள் " கன்னி " என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் !!!
-
பால்யத்தில் நான் எழுந்திரிக்கும் காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும் , அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும் .
-
நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில், என்னை விளையாட்டாய் கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ” என்று சொல்லுவாய் . கோபத்துடன் வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய் இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் .
-
பண்டிகை காலங்களில் அடுப்பும் , வாணலியுமாய் இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான் செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய் மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான் கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!!
-
நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு ? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும் போது, அருகிலுள்ள யாரிடமாவது அங்கலாய்த்து கொண்டிருப்பாய் . முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!
-
வேலைக்கென்று வெளி உலகம் வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால் உனக்கோ நானே உலகமாகிப் போனேன் . நான் எப்போதாவது மனதளவில் கஷ்டப்படும் போது அது உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது . உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில் . அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும் .
-
நான் அம்மா என்று சொல்வதை வைத்தே என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர் போல . பிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய் .
-
உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும் இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.
-
ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை நனைத்து விட்டு இயல்பாய் இருந்து விடுவாய் , நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா . சுருக்கமாகச் சொன்னால்
தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள் .
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!
-
நன்றி-மெல்லியல் முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 21, 2013 10:18 pm

ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

அருமை அருமை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி நன்றி





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 11:15 am

பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும் ஒரு விவரனத்துள் அடைக்க இயலாத ஒரே விஷயம் உன் அன்புதான் அம்மா .
நன்றி அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?இதில் தாழ் என்ற வார்த்தையே தேவையில்லை....அன்னையின் அன்பு அவளின் மூச்சு இருக்கும் வரையும் சூரியனின் ஒளி போல பொங்கிக்கிக்கொண்டே இருக்கும்...,சூரியனுக்கு கதவும் இல்லை தாழும் இல்லை.,


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 11:15 am

krishnaamma wrote:ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

அருமை அருமை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி நன்றி


படிக்கும் போதே சிலிர்க்கிறது..., சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 11:29 am

வேலைக்கென்று வெளி உலகம் வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால் உனக்கோ நானே உலகமாகிப் போனேன் . நான் எப்போதாவது மனதளவில் கஷ்டப்படும் போது அது உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது . உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில் . அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும் .

ஆமோதித்தல்
உண்மை..,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 22, 2013 11:31 am

அன்னையின் அன்பை சொல்லும் நல்ல பகிர்வு




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 11:32 am

நல்ல பதிவு சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 11:44 am

இத்தனை அழகாய் இனிமையாய் ஒரு சப்தம் நம் வாழ்க்கையில் திரும்ப திரும்ப உச்சரிக்கிறோம் என்றால் அது அம்மா தான்....

அம்மாவைப்பற்றி சொல்ல ஆமாம் ஒரு பக்கம் போறாது கண்டிப்பாக....

அம்மாவின் அன்பை நாம் சேமித்து நாம் நமக்கு பிறந்த குழந்தையிடம் அந்த அன்பை அப்படியே பகிர்கிறோம்....

குழந்தைகள் வளர்ந்து தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்தப்பின் அந்த அம்மாவைப்பற்றி கொஞ்சமே கொஞ்சம் அவரின் தியாகம் நினைத்தால் இன்று முதியோர் இல்லங்கள் பெருகாது.....

மனதை நெகிழவைத்த பகிர்வுக்கு அன்புநன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பென்றால் அம்மா!!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக