புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
92 Posts - 61%
heezulia
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
19 Posts - 3%
prajai
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பாவம் செய்தோமோ!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 17, 2013 11:21 pm

போகிப் பண்டிகையின்போது பலராலும் குறிப்பிடப்படும்சொற்றொடர்: பழையன கழிதலும் புதியன புகுதலும். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, புதிய துணை வேந்தராக டாக்டர் டி.சாந்தாராம் பொறுப்பேற்ற 30 நாள்களிலேயே, தை பிறந்தவுடன், புதியன கழிதலும், பழையன புகுதலுமாகமுடிந்துள்ளது.
:-
மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தேர்விலும் (எழுத்துத்தேர்வு இரு தாள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வு) குறைந்தது 50% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று முந்தைய துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கொண்டுவந்த நடைமுறையைக் கைவிட்டு, பழையநடைமுறைக்கே திரும்புவது என்று புதிய துணைவேந்தர் முடிவெடுத்து அறிவித்துள்ளார். இது மருத்துவ மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
:-
எழுத்துத் தேர்வில் 40% கட்டாயம் என்றும், ஆனால் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்களின் மொத்த சராசரியில் 50% இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
எழுத்துத் தேர்வுக்கு 40% மதிப்பெண் கட்டாயம் என்பதை ஏன் செய்முறைத் தேர்வுக்கும் அறிவிக்கவில்லை? காரணம், எழுத்துத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதுதான் விடை. ஆனால், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் கூடுதலாக மதிப்பெண் போட்டுக் கொடுக்க வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவர் மொத்த சராசரி 50% பெற செய்முறைத் தேர்வு துணைபுரியும்.
:-
இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு 270 வேலைநாள்கள் என்பதை 240ஆக பழையபடி குறைத்துவிட்டார். மாணவர்களின் வருகைப்பதிவு 90% கட்டாயம் என்பதையும் சற்று தளர்த்தி 85% ஆக குறைத்துள்ளார். 30 வேலைநாள்களைக் குறைப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது ஒருபக்கம் இருக்க, கற்பித்தல் பணியில் உள்ள மருத்துவப் பேராசிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
:-
மருத்துவக் கல்வியில் மிக இன்றியமையாத் தேவை, "பிரேக்சிஸ்டம்' எனப்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. மதிப்பெண்களைக் குறைப்பதல்ல.
ஒரு மாணவர் முதலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த வகுப்பிலேயே தொடர வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக அவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அவர்கள் படிக்கவும் மறுதேர்வு எழுதவும் அடுத்த சில நாள்களிலேயே ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியம். அத்துடன் மற்ற தொழில்நுட்பக் கல்வி நடைமுறையைப்போல, அடுத்த பருவத் தேர்வில் அந்த"அரியர்ஸை' எழுதித் தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தலாம்.
:-
இது ஒன்றைத் தவிர, ஒவ்வொரு தேர்விலும் கட்டாய மதிப்பெண் 50 என்பதை மீண்டும் மொத்த சராசரி மதிப்பெண் 50% என்று மாற்றுவதோ, கட்டாய எழுத்துத் தேர்வுக்குக் கட்டாய மதிப்பெண் 40% என்றுகுறைப்பதோ, மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருமே தவிர, வருங்காலத் தமிழக மக்களுக்கு நன்மை சேர்க்காது.
:-
மருத்துவ மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதிற்கொண்டு அறிவிக்கப்படும் இத்தகைய மாற்றங்கள், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகப் பெருகியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பேருதவியாக அமையும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் அல்லது ஏற்கெனவே மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர்களின் பிள்ளைகள். இவர்களைக் கரை சேர்ப்பதற்கு இத்தகைய நெளிவு சுளிவுகள் உதவக்கூடும்.
:-
பொதுஒதுக்கீடு, இடஒதுக்கீடு எதுவான போதிலும், பிளஸ் 2 தேர்வின் முதன்மைப் பாடங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது மதிப்பெண் 98% எடுக்க முடிகின்ற மாணவர்களால்தான்கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. அப்படியிருக்கும்போது, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவுடன் மதிப்பெண் 50% பெறுவதே பெரும்பாடாக மாறிவிடுகிறது என்றால், அதற்கு என்ன காரணம்?
:-
எழுத்துத் தேர்வில் 200க்கு 190க்கு மேல் பெறும் மாணவர்களை தமிழகத்தின் சிறந்த மாணவர்கள் என்றுதான் கருதியாக வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர்களால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50% மதிப்பெண் பெற முடியவில்லை என்றால், பிரச்னை கல்விமுறையில்தான்என்பது தெளிவு.
:-
இந்த மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறைப் பயிற்று முறையில் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சுயமான அறிவுப்புலன் இல்லை என்று பொருள். அதனால்தான் அவர்களுக்கு 50% மதிப்பெண்கள்கூட கடினமாக இருக்கிறது.
:-
மருத்துவக் கல்லூரி மாணவர்சேர்க்கைக்கு முன்புபோலவே, மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தி, நுழைவுத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில்"கட்-ஆஃப்' அறிவிப்பதுதான், தமிழ்நாட்டில் நாளைய மருத்துவர்கள் திறமையானவர்களாக இருக்க வழிசெய்வதாக அமையும்.
:-
அப்படி இல்லாத நிலையில், பிளஸ் 2 தேர்வில் வெறும் கிளிப்பிள்ளைகளை 200க்கு 200 மதிப்பெண் பெறச் செய்து, மருத்துவக் கல்லூரியில் அவர்களைச் சேர்த்துக்கொண்ட பின்னர், பல்கலைக்கழக கெளரவத்தைக் காப்பாற்ற "எப்படியாவது' தேர்ச்சி அளிக்கும் இப்போதைய மாறிய நடைமுறை, தரமற்ற இளம் மருத்துவர்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கத்தான் உதவும்.
வெளிநாடுகளில் இப்போதெல்லாம் இந்திய மருத்துவர்கள் என்றாலே சோதனைக்கு உட்படுத்தி திறமையைப் பரிசோதித்த பிறகுதான் உயர் கல்விக்கோ வேலைக்கோ எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி நமக்குக் கிடையாதே! நமது மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கிவிடும் மருத்துவர்களிடம் சிகிச்சைபெறுவதைத் தவிர நமக்கு வேறுஎன்ன வழி...
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக