புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பாவம் செய்தோமோ!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 9:51 am

போகிப் பண்டிகையின்போது பலராலும் குறிப்பிடப்படும்சொற்றொடர்: பழையன கழிதலும் புதியன புகுதலும். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, புதிய துணை வேந்தராக டாக்டர் டி.சாந்தாராம் பொறுப்பேற்ற 30 நாள்களிலேயே, தை பிறந்தவுடன், புதியன கழிதலும், பழையன புகுதலுமாகமுடிந்துள்ளது.
:-
மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தேர்விலும் (எழுத்துத்தேர்வு இரு தாள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வு) குறைந்தது 50% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று முந்தைய துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கொண்டுவந்த நடைமுறையைக் கைவிட்டு, பழையநடைமுறைக்கே திரும்புவது என்று புதிய துணைவேந்தர் முடிவெடுத்து அறிவித்துள்ளார். இது மருத்துவ மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
:-
எழுத்துத் தேர்வில் 40% கட்டாயம் என்றும், ஆனால் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்களின் மொத்த சராசரியில் 50% இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
எழுத்துத் தேர்வுக்கு 40% மதிப்பெண் கட்டாயம் என்பதை ஏன் செய்முறைத் தேர்வுக்கும் அறிவிக்கவில்லை? காரணம், எழுத்துத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதுதான் விடை. ஆனால், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் கூடுதலாக மதிப்பெண் போட்டுக் கொடுக்க வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவர் மொத்த சராசரி 50% பெற செய்முறைத் தேர்வு துணைபுரியும்.
:-
இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு 270 வேலைநாள்கள் என்பதை 240ஆக பழையபடி குறைத்துவிட்டார். மாணவர்களின் வருகைப்பதிவு 90% கட்டாயம் என்பதையும் சற்று தளர்த்தி 85% ஆக குறைத்துள்ளார். 30 வேலைநாள்களைக் குறைப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது ஒருபக்கம் இருக்க, கற்பித்தல் பணியில் உள்ள மருத்துவப் பேராசிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
:-
மருத்துவக் கல்வியில் மிக இன்றியமையாத் தேவை, "பிரேக்சிஸ்டம்' எனப்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. மதிப்பெண்களைக் குறைப்பதல்ல.
ஒரு மாணவர் முதலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த வகுப்பிலேயே தொடர வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக அவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அவர்கள் படிக்கவும் மறுதேர்வு எழுதவும் அடுத்த சில நாள்களிலேயே ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியம். அத்துடன் மற்ற தொழில்நுட்பக் கல்வி நடைமுறையைப்போல, அடுத்த பருவத் தேர்வில் அந்த"அரியர்ஸை' எழுதித் தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தலாம்.
:-
இது ஒன்றைத் தவிர, ஒவ்வொரு தேர்விலும் கட்டாய மதிப்பெண் 50 என்பதை மீண்டும் மொத்த சராசரி மதிப்பெண் 50% என்று மாற்றுவதோ, கட்டாய எழுத்துத் தேர்வுக்குக் கட்டாய மதிப்பெண் 40% என்றுகுறைப்பதோ, மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருமே தவிர, வருங்காலத் தமிழக மக்களுக்கு நன்மை சேர்க்காது.
:-
மருத்துவ மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதிற்கொண்டு அறிவிக்கப்படும் இத்தகைய மாற்றங்கள், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகப் பெருகியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பேருதவியாக அமையும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் அல்லது ஏற்கெனவே மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர்களின் பிள்ளைகள். இவர்களைக் கரை சேர்ப்பதற்கு இத்தகைய நெளிவு சுளிவுகள் உதவக்கூடும்.
:-
பொதுஒதுக்கீடு, இடஒதுக்கீடு எதுவான போதிலும், பிளஸ் 2 தேர்வின் முதன்மைப் பாடங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது மதிப்பெண் 98% எடுக்க முடிகின்ற மாணவர்களால்தான்கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. அப்படியிருக்கும்போது, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவுடன் மதிப்பெண் 50% பெறுவதே பெரும்பாடாக மாறிவிடுகிறது என்றால், அதற்கு என்ன காரணம்?
:-
எழுத்துத் தேர்வில் 200க்கு 190க்கு மேல் பெறும் மாணவர்களை தமிழகத்தின் சிறந்த மாணவர்கள் என்றுதான் கருதியாக வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர்களால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50% மதிப்பெண் பெற முடியவில்லை என்றால், பிரச்னை கல்விமுறையில்தான்என்பது தெளிவு.
:-
இந்த மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறைப் பயிற்று முறையில் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சுயமான அறிவுப்புலன் இல்லை என்று பொருள். அதனால்தான் அவர்களுக்கு 50% மதிப்பெண்கள்கூட கடினமாக இருக்கிறது.
:-
மருத்துவக் கல்லூரி மாணவர்சேர்க்கைக்கு முன்புபோலவே, மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தி, நுழைவுத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில்"கட்-ஆஃப்' அறிவிப்பதுதான், தமிழ்நாட்டில் நாளைய மருத்துவர்கள் திறமையானவர்களாக இருக்க வழிசெய்வதாக அமையும்.
:-
அப்படி இல்லாத நிலையில், பிளஸ் 2 தேர்வில் வெறும் கிளிப்பிள்ளைகளை 200க்கு 200 மதிப்பெண் பெறச் செய்து, மருத்துவக் கல்லூரியில் அவர்களைச் சேர்த்துக்கொண்ட பின்னர், பல்கலைக்கழக கெளரவத்தைக் காப்பாற்ற "எப்படியாவது' தேர்ச்சி அளிக்கும் இப்போதைய மாறிய நடைமுறை, தரமற்ற இளம் மருத்துவர்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கத்தான் உதவும்.
வெளிநாடுகளில் இப்போதெல்லாம் இந்திய மருத்துவர்கள் என்றாலே சோதனைக்கு உட்படுத்தி திறமையைப் பரிசோதித்த பிறகுதான் உயர் கல்விக்கோ வேலைக்கோ எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி நமக்குக் கிடையாதே! நமது மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கிவிடும் மருத்துவர்களிடம் சிகிச்சைபெறுவதைத் தவிர நமக்கு வேறுஎன்ன வழி...
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக