புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
77 Posts - 36%
i6appar
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
2 Posts - 1%
prajai
மழையே துணை! Poll_c10மழையே துணை! Poll_m10மழையே துணை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே துணை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 17, 2013 9:02 am

இந்தியாவில் அதிக உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு "கிருஷி கர்மன்' விருது வழங்கப்படுகிறது. கடந்த இருநாள்களுக்கு முன்பு நடைபெற்ற இதற்கான விழாவில் 18 மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளில் முதன்மை பெற்று, பரிசுகள் பெற்றன. இதில் தமிழ்நாட்டுக்கும் பரிசு கிடைத்தது என்று மகிழ்ச்சி கொள்ளலாம். அதே நேரத்தில் பெருமை கொள்ள முடியாது.
:-
இந்த விருதுகள் 2011-12-ஆம் ஆண்டு ஒரு மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
:-
முதல் பிரிவு ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலங்களுக்கானது. இதில் மத்தியப் பிரதேசம் 190 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய சாதனை அளவைக் காட்டிலும் 18.91% அதிகம். அடுத்ததாக பஞ்சாப் மாநிலம் 283 லட்சம் டன் உற்பத்தி செய்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 1.74% மட்டுமே. மூன்றாவதாக ராஜஸ்தான். இம்மாநிலம் 189 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய அதிகபட்ச உற்பத்தியைக் காட்டிலும் 0.70% மட்டுமே சாதனை புரிந்துள்ளது.
:-
உணவு தானிய உற்பத்தி அளவு 100 லட்சம் டன்னுக்கும் குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழக அரசுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.அதாவது 96.4 லட்சம் டன் உணவுதானிய உற்பத்தி செய்துள்ளோம். முந்தைய ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச சாதனை அளவாக 2006-07-ஆம் ஆண்டில் 82.63 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டால், நாம் 2011-12-ஆம் ஆண்டில் 16.67%அதிக உற்பத்தி செய்துள்ளோம். இதற்காக நாம்நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளலாம்.
:-
இந்த விருதுகள், அந்தந்த மாநிலம் அதனதன் சாதனையை விஞ்சிய அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன என்றாலும், முதல் பிரிவில் உள்ள மாநிலங்களின் மொத்த உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள ஒன்றுமில்லை என்பது தெரியும். உற்பத்தியில் நம்மைவிட ஒரு கோடி டன் அதிகமாக இருக்கிறார்கள்.
:-
நெல் உற்பத்தியில்கூட, பிகார் மாநிலம்தான் அதிக உற்பத்தி செய்து பரிசு பெற்றது. 2011-12 ஆண்டில் 72 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 28.8% அதிக உற்பத்தி செய்துள்ளது. நாம் பிகாரைவிட அதிகமாக நெல் உற்பத்தி செய்தாலும், உற்பத்தியில் சாதனை செய்யவில்லை என்பதற்கு அடிப்படைக் காரணம், காவிரி நீர் பிரச்னை மட்டுமே. தேவையான பாசன நீர், தேவைப்படும் காலத்தில் கிடைக்கவில்லை என்பதாலேயே, பலர் நெற்பயிரைச் சாகுபடி செய்யவில்லை.
:-
தமிழகம் 96.4 லட்சம் டன் மட்டும்தான் உணவு தானியம் உற்பத்தி செய்ய முடிந்தது என்றால், அதற்குக் காரணம், போதிய நீர் இல்லாததால் தமிழக விவசாயிகள் எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கும், கரும்பு போன்ற பணப்பயிர் சாகுபடிக்கும் அதிகமாக மாறிவிட்டார்கள் என்பதுதான்.
:-
தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைத் தராமல் தானே வேளாண்மை செய்யும் கர்நாடக மாநிலம் உணவு தானிய உற்பத்தியிலோ, நெல் உற்பத்தியிலோ சாதனை எதையும் செய்யவில்லை. இதற்குக் காரணம், காவிரி நீர் பயன்பாட்டில் நெல்சாகுபடி செய்யும் வயல்களில் ஒரு ஏக்கருக்கு உற்பத்தியாகும் நெல் அளவு, தமிழ்நாட்டை ஒப்பிடும்போதுமிகவும் குறைவு. கர்நாடகம் அதிக நீரைப் பயன்படுத்தி, ஏக்கருக்கு குறைவான நெல் உற்பத்தியைத்தான் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்திக்கான மண்வளம், சாகுபடி பரப்பு இருந்தபோதிலும், சாகுபடி செய்யாததாலும், மாற்றுப்பயிர்களுக்கு மாறியதாலும், நெல் உற்பத்தியில் சாதனை நிகழ்த்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
:-
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்ற நம்பிக்கை இல்லை. காவிரி கண்காணிப்பு ஆணையமும் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் நாம் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய மாற்று நடைமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.
:-
இனி யாரை நம்பியும் பயன் இல்லை என்பதால், மழை நீருக்கும் கிணற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரவும், ஏரிகளை முழுமையாகப் பயன்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மழைநீரைத் துளியும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்துக்கு தமிழகம் வந்துள்ளது. நெல் சாகுபடியிலும்கூட நீர்மேலாண்மை இல்லை என்றும், அதிக நீரை வீணடிக்கிறோம் என்றோம் தமிழக விவசாயிகள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.
:-
கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியபயிர்கள் தமிழகத்தில் மிக அதிகமாக விளைந்த காலமும் உண்டு. ஆனால் இவற்றுக்குச் சந்தை இல்லை என்ற காரணத்தாலும், தமிழர்கள் இந்த சிறுதானிய உணவுகளைக் கைவிட்டு, முழுக்க முழுக்க அரிசி உணவுக்கு மாறியதாலும் இவற்றின் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. இனி இத்தகைய குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களுக்கும் மானாவாரி பயிர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதுடன், அதன் சந்தையை அதிகரிக்க நம்உணவுப் பழக்கத்தில் கம்பு, சோளம், கேழ்வரகுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் அவசியமாகிறது.
:-
தமிழகத்தின் உணவு தானிய உற்பத்திக்கு மழைநீர் மட்டுமே உதவும். அண்டை மாநிலங்களோ மத்திய அரசோ நிச்சயம் உதவி செய்யப்போவதில்லை. மழை பெய்யாமல் போகும் காலங்களும் உண்டுதான்...இருப்பினும், மழை பொய்த்தாலும் மனிதர்களைப்போல பொய்ப்பதில்லை.
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக